![]() |
|
என் நாட்குறிப்பில்கிறுக்கியது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் நாட்குறிப்பில்கிறுக்கியது (/showthread.php?tid=7839) |
- aathipan - 11-17-2003 <img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/kajol9.jpg' border='0' alt='user posted image'> மூன்று நாட்கள் உன்னைப்பார்க்கவில்லை. எனக்கு நானே விலங்கிட்டுக்கொண்டேன். கொஞ்சம் வெற்றிதான் உள்மனம் மட்டும் உன்னைப்பார்க்கவேண்டும் என்று அடிக்கடி விண்ணப்பிக்கும் என் மனசாட்சியிடம் இருந்து தொடர்ந்து நிராகரிப்புத்தான் ஒருநாள் அது கோபங்கொண்டு "உனக்கு மனசாட்சியே இல்லையா" என்று கண்ணீர்விட்டது 'சரி ' கொஞ்சம் உருகியது மனசாட்சி சைக்கிளை எடுத்துக்கொண்டு மீண்டும் உன்வீட்டருகில் வலம் வந்தேன் உன் தரிசனம் கிடைக்கவில்லை... "நேரம் ஆகிவிட்டது" என் மனசாட்சி நச்சரித்தது திரும்பி விட்டேன்... பெரிதாக ஏதோ கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டேன் என்ற பெயர்தான் உள்ளே எப்பொதும் உன் நினைவுதான் படிப்பில் என்மனம் செல்லவில்லை. பார்க்கும் பெண்கள் எல்லாம் நீயாக தெரிந்தார்கள் ஒடிச்சென்று முகம் பார்த்தால் அது யாரோ என்று உறைத்தது... வெள்ளிக்கிழமைவரை நான் மூச்சைப்பிடித்துக்கொண்டேன்... இதுவரை எந்த ஒரு நாளையும் இந்த அளவு எதிர்பார்த்து ஏங்கித்தவித்ததுகிடையாது இந்த வெள்ளிக்கிழமைக்காக கழியும் ஒவ்வொரு நொடிகளை எண்ணிக்கொண்டேன்.. உன்பார்வவைக்காக என் மனம் கெஞ்சி அழுதது... இதோ வெள்ளிக்கிழமைவந்துவிடும் நானே என்னைத் தேற்றிக்கொண்டேன்.. பாதியிலேயே என் மனசாட்சிபோட்ட தீர்மானம் எல்லாம் காற்றில் பறந்தது... வியாழன் மாலையில் நீவரும் பாதையில் காத்திருந்தேன்... - aathipan - 11-17-2003 <img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/kajol246.jpg' border='0' alt='user posted image'> நேரம் ஆகிக்கொண்டே இருந்தது இருள் சூழஆரம்பித்துவிட்டது.. தெருவில் ஆட்கள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்ந்துவிட்டது.. போகும் ஓரிரண்டு பேரும் என்னை கேள்வியோடுபார்த்தார்கள்... இன்னும் எத்தனைநேரம் காத்திருப்பது?... நீ வருவாய்என்றால் காத்திருப்பது ஒன்றும் கஸ்டமில்லை தூரத்தில் இரண்டுபிள்ளைகள் சைக்கிளில் வருவது தெரிந்தது.... அதில் ஒன்று நீதான் உள்மனம் சொன்னது... வலது புறம் வந்த பிள்ளை இடதுபுறம் இருந்த குறுகிய ஒழுங்கையில் சென்றுவிட நீ மட்டும் நேராய் வந்தாய்.. ".............." உன்பெயர்சொல்லி அழைத்தேன்.... தினமும் உன் பெயரை மனதுக்குள் மட்டும் உச்சரித்துபழகியிருந்தேன்... இன்றுதான் வாய்ப்புவாய்த்து உன் பெயர்சொல்லி அழைக்க உன் பெயர்கேட்டு திடுக்கிட்டுவிட்டாய். வெடவெடத்துப்போய் நின்றுவிட்டாய்... "நான்தான் ..............." "ஐயோ என்ன செய்யுறீங்கள் இங்கே" கோபம் தெறித்தது வார்த்தைகளில். உனக்கில்லாத உரிமையா? "உங்களைப்பார்க்கத்தான் வந்தன்" "ஐயோ என்னால இங்கு நின்று கதைக்க முடியாது. கோயிலுக்குத்தானே வரச்சொன்னனான்" "மன்னிச்சுக்கொள்ளுங்கோ ..................... " "சரி நேரம் போச்சு நான் போறன். அம்மா ஏசுவா" ஆனாலும் நீ அங்கு தான் நின்றிருந்தாய். நான் விடைகொடுக்க காத்திருந்தாய் "போகிறேன் என்று சொல்லாதுங்கோ பொயிற்றுவாறன் என்று சொல்லுங்கோ" விடைகொடுத்தேன்... நீ புன்னகைப்பது தெரிந்தது. விடைபெற்றுக்கொண்டாய். அன்று கொஞ்சம் நிம்மதி கொஞ்சம் சுவாசித்துக்கொண்டேன் - aathipan - 11-19-2003 <img src='http://www.winindia.com/entertain/film_bio/gallery/kajol/big/kajol_big10.jpg' border='0' alt='user posted image'> இரவுகள் என்னைக் கொஞ்சம் மன்னித்துவிட்டன.. காலையில் மீண்டும் புது வேகம்... மனசெல்லாம் குதூகளிப்பு.. அடிக்கடி நேரம் பார்த்து ஏற்றாற்போல் இயங்கிக்கொண்டிருந்தேன்... எட்டு மணிக்கு அங்குஇருந்தாக வேண்டும் ஏழு இருபதிற்கே வீட்டிலிருந்து புறப்பட வேண்டும்... எனக்குள் நேர அட்டவணை ஏற்கனவே தயாராகிவிட்டது.... யாரும் இடையில் புகுந்து குழப்பம் செய்துவிடக்கூடாது... இடையிடையே முருகனை துணைக்கு அழைத்தேன்... அம்மாவுக்கு ஏதோ சந்தேகம்... விசித்திரமாகப்பார்த்தாள். என்றுமில்லாது நான் சைக்கிளைத் துடைத்தது கண்டு புன்னகை செய்தாள்... "வெள்ளிக்கிழமை விடிந்தால்போதும் உனக்கு பக்தி..." ஏதோ சொல்லவந்து பாதியில் நிறுத்திக்கொண்டாள்.... அவள் போகும் வாரை காத்திருந்து கண்ணாடிபார்த்து தலைவாரிக்கொண்டேன்... இருக்கின்ற சேட்களில் எனக்குப்பிடித்தஒன்றைப் போட்டுக்கொண்டு... தெருவில் இறங்கினேன்.. என்னை எதுவும் கேட்காமலே என் சைக்கிள் உன் வீட்டுத்தெருவில் பயணித்தது... தூரத்தில் கோவில்மேற்கு வீதியில் நீ சென்றுகொண்டிருந்தாய்.. உனக்குமுன்பாக வந்து கற்புூரம் விற்கும் பாட்டியருகில் காத்திருந்தேன்... நீ சிறிதாக புன்னகை செய்தாய் என்னைக்கண்ட மகிழ்ச்சி உன் முகத்தில் தெரிந்தது... ஆனால் எதுவும் பேசவில்லை... அதுதான் கண்கள்பேசுகின்றனவே என்று நினைத்திருப்பாயோ? கொஞ்சம் இடைவெளிவிட்டு பின்தொடர்ந்தேன்... நீ கண்களை மூடி பிரார்த்திக்கும் போதுமட்டும் நான் உன் முன்வந்து உன்னை பிரார்த்தித்துக்கொள்வேன்..... எதுவும் தெரியாததுபோல் நீ வந்தாலும் உனக்குள் கொஞ்சம் கோபம் உன்முகத்தில் தெரிந்தது.... வைரவர்கோயில் வாசலில் நான் உன்னைப்பார்த்துப் பிரார்த்தித்தபோது நீ கோபங்கொண்டு... கையில் இருந்த செம்பருத்திப்புூவை என் முகத்தில் வீசியடித்தாய்.. அன்றுதான் முதன் முதல் உன்கோபம் பார்த்தேன்.. அழகாகத்தான் இருந்தாய்.. - aathipan - 11-19-2003 <img src='http://www.gsentertainment.com/movies/pktdk/images/cast_kajol.jpg' border='0' alt='user posted image'> முதன் முதல் உன்கோபம் பார்த்தேன்.. அழகாகத்தான் இருந்தாய்... நீயும் கொஞ்சம் நெருங்கிவிட்டாய் இல்லையேல் எப்படி கோபம் வரும்.. படிக்கட்டு வந்தும் நீ மௌனம்விரதம் "ஏன் பேசக்கூடாதா?" "என்ன பேசவேண்டும் நான்?" வேண்டுமென்றே கேள்விகேட்டு என்னை வம்புக்கழைத்தாய்.... "நிறைய இருக்கிறது. எங்கள்... இல்லை இல்லை உஙகளது எதிர்காலம் என்னுடைய எதிர்காலம்..." "என்ன எதிர்காலம்" விதண்டாவாதம் பண்ணினாய் "சரி கொஞ்சம் சிரியுங்கள் சந்தோசமாக இருக்கலாம்" சமாதானத்திற்கு அழைத்தேன்... வாயைக்கோணலாக்கி சிரித்தாய்... "உங்கள் ஊர் வவுனியாதானே" சிரித்தபடி சொன்னேன் "அப்படியெனடா நீங்கள் மாங்குளமா?" நீயும் சிரித்தபடிகேட்டாய் "பொல்லாத வாய்க்காறி" மனதுக்குள் சொன்னது உனக்கு கேட்டுவிட்டது கோபத்தில் மறுபக்கம் திரும்பிக்கொண்டாய் எத்தனை தடவை உன் பெயர் சொல்லியும் நீ திரும்பவே இல்லை "கோபமா" உன்னிடத்தில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. " மன்னிச்சுக்கொள்ளுங்கோ ..............." கைகளை இறுகப்பற்றிகெஞ்சினேன் அன்றுதான் முதல் முதல் உன்கைபிடித்தேன். சில்லென்றுவாழைத்தண்டுபோல. மென்மையான அந்தக் கைகளை இறுக ஆனால் உனக்கு வலிக்காது பிடித்துக்கொண்டேன். ஒரு கையால் உன் கன்னம் தொட்டுதிருப்பினேன் உன்கன்னங்களில் கண்ணீர் கலங்கிப்போனேன் - aathipan - 11-20-2003 <img src='http://bollywoodpalace.tripod.com//sitebuildercontent/sitebuilderpictures/kajol2.jpg' border='0' alt='user posted image'> உன்கன்னங்களில் கண்ணீர் கலங்கிப்போனேன் "ஏன் அழுகிறீங்கள்?" நீ பதில் சொல்லவில்லை.. ஆனால் நான் உணர்ந்தேன். பெண்கள் மனது என்பது மலர்களைப்போல. மென்மை.. மென்மை.. மென்மை.. உணர்ச்சிகள் அங்கு அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கும் சின்னதாய் ஒரு கல்லும் அலையை ஏற்படுத்துவதுபோன்று சின்ன சம்பவம்கூட அவர்கள் அமைதியைக்குலைத்துவிடும் கவலையா மகிழ்ச்சியா கண்ணீர்தான் அவர்கள் வெளிப்பாடு... உன் பூமனதை இனி புண்செய்வதில்லை முடிவு செய்துகொண்டேன் இரண்டு நிமிடம்தான் நீயே கண்ணீரைத்துடைத்து என்னை ஏறிட்டாய்.... உன் கண்களில் ஏதோ ஏதோ வார்த்தைகள் புதைந்து கிடந்தது.. பார்வைகளுக்கென்றே ஒரு அகராதி இருந்திருந்தால் என்ன சொல்ல விளைகிறாய் அறிந்திருப்பேன்... புன்னுறுவல் செய்தாய்... இப்போது கண்ணீர் விட்டகண்களில் சின்னதாய்ப் பிரகாசம்.. ஆவலாக எதையோ கைப்பையிலிருந்துவெளி எடுத்தாய் பிரித்தபோது அதில் இரண்டு லட்டுக்கள் எத்தனை அன்பு உனக்கு என் அன்னையின் அன்பை உன்னிடம் கண்டேன் - aathipan - 11-20-2003 <img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/lightson_kajol1.jpg' border='0' alt='user posted image'> அன்று தூக்கம் தொலைந்தது என் கண்களுக்குள்ளே நீ பார்த்தபார்வை ஏதோ அவை சொல்லவிளைந்தனவே? உனக்குள்ளும் காதல் ஊமையாய் இருக்கிறதோ? நான் படும் வேதனைகள் உன்னையும் வாட்டுகின்றதா...? - aathipan - 11-20-2003 <img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/b_shahrukh-kajol.jpg' border='0' alt='user posted image'> விடிந்தபோது என்விழியில் உன்விம்பம் எங்கு நோக்கிலும் நீ உன் பேச்சு.. உன் சிரிப்பு... 'எப்போது உன்முகம் பார்பேன்?' கெஞ்சியது என்மனம்... 'நேற்றுத்தானே பார்த்தாய் இன்றே எப்படி..?' 'எதைப்பற்றியும் கவலையில்லை... உன்னைப்பார்க்கவேண்டும்' எனக்குள்ளே சண்டை மனதுக்கும் மனசாட்சிக்கும்.. மனசாட்சி தோற்றுப்போனது... பல்விளக்கவில்லை... முகம் கழுவவில்லை... கலைந்த தலைவாரவில்லை.. கையில் கிடைத்த சேட்டைமாட்டி வெளியேவந்துவிட்டேன ஏழு மணிக்கு நீ அரசடிவீதிக்கு படிக்கவருவாய் பார்த்துவிடலாம்.. பார்த்தே ஆகவேண்டும்... செய்தித்தாள் ஒன்றைவாங்கிக்கொண்டு தபால்பெட்டி அருகில் நின்றுகொண்டேன்.. உன்தோழிகள் குளாம் சென்றது நீ அதில் இல்லை.... என்னாயிற்று உனக்கு?.. எனமனது படபடத்தது.... கவலை வந்துஒட்டிக்கொண்டது.. வீடுவந்துவிட்டேன் எதோ கேட்ட தம்பியிடம் எரிந்துவீழுந்தேன்... ஒருநாள் இரண்டுநாள் மூன்றுநாள் நான்குநாள் பொறுமை காத்தேன் நாட்கள் எல்லாம் வருடங்களானது எப்போது... ஒவ்வொரு மணித்துளியும் நரகத்தில் கழித்தேன் ஒருவாறு என்வாழ்வில் வெள்ளிவந்தது... என்னைப்பார்ததுதான் உன்விழியில் என்ன ஒளி குழந்தைபோல் ஓடிவந்தாய் என்னருகில்... உன்கையை இறுகப்பிடித்துக்கொண்டேன் விட்டுவிட்டால் என்னுயிர் போய்விடலாம் கைகளுக்கூடே மின்சாரம் இதயம் மீண்டும் இயங்கத்தொடங்கியது "........ உன்னைப்பார்க்காமல் ஒரு நொடி கூட என்னால்இருக்கமுடியவில்லை... உன்னோடுதான் என்வாழ்வு அமையவேண்டும்..." "ஏற்றுக்கொள்வாயா?" நீ என் கைகளை இறுகபிடித்துக்கொண்டாய்.. உன் கண்களில் இரண்டுதுளி கண்ணீர் ஏதோ சொல்லவந்தாய் வார்த்தைகள் வெளியேவரவில்லை கனிவாகப்பார்த்தாய் பின் என் கைகளை எடுத்து யாரும் பார்க்காதபோது முத்தமிட்டாய்.. - nalayiny - 11-20-2003 நல்லதொரு கதை வடிவில் கவிதை போகிறது. கடைசியாக தந்த தொடரின் மிகுதி எப்போ வாசிக்கலாம் என்ற ஒரு ஆர்வத்தை தந்துள்ளது. பாராட்டுக்கள் ஆதி. - aathipan - 11-21-2003 நன்றி சகோதரி உங்கள் பாராட்டை எனக்குக்கிடைத்த விருதாகக்கொள்கிறேன் - aathipan - 11-21-2003 <img src='http://bollywoodpalace.tripod.com//sitebuildercontent/sitebuilderpictures/kajol12.jpg' border='0' alt='user posted image'> உன் மனதில் மகிழ்ச்சி வெட்க்கம் ஒராயிரம் உணர்ச்சிகள் ஒன்றாய்... - aathipan - 11-22-2003 <img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/KAJOL31.jpg' border='0' alt='user posted image'> அன்று முடிவுசெய்தோம் வாரத்தில் நான்கு தடவை பாhப்பது என்று அந்த நான்குநாட்கள் மட்டும்சுவாசிக்கும் ஒரு புது ஜீவராசியாய் நான் வலம் வந்தேன் நூலகம் கோவில் இந்த இரண்டிலும் தான் எமது சந்திப்புத்தொடாந்தது.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணர்ச்சி - aathipan - 11-22-2003 <img src='http://news.bbc.co.uk/olmedia/180000/images/_183765_tank_300.jpg' border='0' alt='user posted image'> அன்று மீண்டும் நாட்டில் வன்முறை வெடித்தது இந்திய இராணுவம் ஏற்படுத்திச்சென்ற கறைகள் ஆறும் முன்பே மீண்டும் ஒரு போர் இலங்கை இராணுவத்தின் அராஜகம் ஆரம்பித்துவிட்டிருந்தது... - aathipan - 11-22-2003 <img src='http://www.dellxp.net/eastislands/properties/49th/gate_small.jpg' border='0' alt='user posted image'> உன்னைப்பார்ப்பது தடைப்பட்டுப்போனது முதலுதவிப்படையினருடன் நானும் இணைந்து காயம்பட்ட சகோதரர்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்... ஒருநாள் இரவு கொஞ்சம் நேரம்கிடைத்தது ஓடி வந்தேன் எப்படியும் பார்த்துவிடுவது என்று உன் வீடு புூட்டிக்கிடந்தது.... நீஙகள் இடம்பெயர்ந்துவிட்டதாக சொன்னார்கள் ... - aathipan - 11-22-2003 <img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/kajol2.jpg' border='0' alt='user posted image'> உன் வீடு புூட்டிக்கிடந்தது.... நீஙகள் இடம்பெயர்ந்துவிட்டதாக சொன்னார்கள் எங்கு சென்றாய் என்று தெரியவில்லை... மனம் நொடிந்து பொனது... எதுவும் செய்யப்பிடிக்கவில்லை வீட்டிலே முடங்கிக்கிடந்தேன்... நாட்கள் செல்லச்செல்ல போர் வலுப்பெற்றது... நாங்களும் இடம்பெயர்ந்தோம் ஒருநாள் அப்பா என்னையும் என் தம்பியையும் இந்தியாவிற்க்கு போக ஏற்பாடுசெய்துவிட்டுவந்திருந்தார் அம்மா போய்விடும்படி கெஞ்சினாள்.... இந்தியா வந்து என் படிப்பைத்தொடர்ந்தேன் இலங்கையில் இருந்த இரண்டொரு நன்பர்களுக்கும் உன்விபரம் தெரியவில்லை... உன் முகவரிக்கு நான் போட்ட கடிதங்கள் எதுவும் பதில்கொண்டுவரவில்லை... இன்று நீ எங்கே இருக்கின்றாயென்று எனக்குத்தெரியாது... பதின்மூன்றுவருடங்கள் பறந்தோடிவிட்டன.. மனதில் உன்முகம் கொஞ்சம் மங்கலாகிப்போய்விட்டதுண்மை... எப்போதாவது தனிமையில் உன்னைநினைப்பேன்.. அப்போது மட்டும் இதயம் கனத்துப்போய்விடும்... அப்போழுதுதெல்லாம் ஆண்டவனைவேண்டிக்கொள்வேன் நீ மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்னை மறந்துவிட்டிருக்கவேண்டும் முற்றும் - nalayiny - 11-23-2003 இதைத்தான் சொல்லுவது காதல் என்றுமே தோற்பதில்லை. உண்மை அன்புக்காதல் என்பது இத்தகைய தன்மை வாய்ந்ததே...! பாராட்டுக்கள். நினைவுகளும் நிகழ்வுகளும் மட்டுமே ஒரு உண்மைக்காதல் சுமந்து நிக்கிறதோ என்று கூட இன்னொரு கோணமாக புதிதாக இக்கவிதைகளுக் கூடாக என்னை முதன் முதல் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். <img src='http://a80.g.akamai.net/f/80/71/6h/www.ftd.com/pics/products/A15-CS_2.jpg' border='0' alt='user posted image'> - nalayiny - 11-23-2003 nalayiny Wrote:இதைத்தான் சொல்லுவது காதல் என்றுமே தோற்பதில்லை. உண்மை அன்புக்காதல் என்பது இத்தகைய தன்மை வாய்ந்ததே...! பாராட்டுக்கள். - kuruvikal - 11-24-2003 உண்மைக் காதல் பொய்க்காதல்...இப்படி தங்களுக்கேற்ற பெயர்களில இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவர்.....???! எல்லாம் செப்படி வித்தை....என்றோ முடிந்த காரியம்.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- aathipan - 11-24-2003 எங்கள் செல்லப்பாவின் வாக்கியங்கள் அல்லவா நீங்கள் சொன்னவை. எல்லாம் முடிந்த கதை - aathipan - 11-24-2003 அன்பின் சகோதரி நளாயினி, நீங்கள் எவ்வளவு பெரிய கவிஞர் என் கிறுக்கல்களுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறீhகள். உண்மையில் என் எழுத்துக்கள் தகுதியானவைகளா ?தெரியவில்லை. ஏதோ என் மனதில் வந்ததை கிறுக்கி வைத்தேன். பலர் அந்த உணர்ச்சிகளை புரிந்துகொள்ளவில்லை. காதல் என்றால் அவர்கள் மனதில் வேறு ஏதோ வருகிறது. எனது எண்ணத்தில் களங்கம் இல்லை. இது உண்மை. யார் சரி யார் தவறு தெரியவில்லை. எனக்கு என் காதல் தெய்வீகமாகத்தான் தெரிகிறது. நான் காதல் உணர்வுகளை நேசிக்கிறேன். சுவாசிக்கிறேன். வணங்குகிறேன்.மதிக்கிறேன். உங்கள் கவிதைகளிலும் காதல் மதிக்கப்படுவதாய் உணர்கிறேன். உங்கள் கவிதைகள் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. இன்னும் நான் எழுதுகிறேன். அதற்கு தூண்டுதலாய் இருந்த உஙகள் எழுத்துக்களுக்கு நன்றி. என் கவிதைகளை விமர்சித்த நேசித்த அனைவருக்கும் நன்றி. - kuruvikal - 11-24-2003 'எல்லாம் செப்படி வித்தை....என்றோ முடிந்த காரியம்.....!' ஈழத்துச் சித்தர் செல்லப்பா சுவாமிகள் நல்லூர் வீதிகளிலே சொன்னதுதான்.....! பற்றற்றது போல் இருந்தாலும் பலதும் சொல்லும் வார்த்தைகள்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|