![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- vasisutha - 03-04-2004 செய்திகளை உடனுக்குடன் தரும் பிபிஸிக்கு நன்றி - sivajini - 03-04-2004 கொப்பிக்கு ஒரு கோப்பி கொடுங்க - Mathan - 03-04-2004 நன்றி - உலகசந்தை - sivajini - 03-04-2004 கருணா பாவம் அனைத்தும் அவருடைய பனிஸ்மன் காலத்தைத்தான் கூட்டப்போது. சும்மா இருந்த மனிமனை ஊடகங்கள் படுத்துறபாடு. அம்மானின் கையில் அம்புட்டா கதை மிலேனியம் சிட்டியாகத்தான் இருக்கும். - kuruvikal - 03-04-2004 BBC Wrote:'Tamil Tiger splits spark crisis' sivajini Wrote:B B C யால் யாழ் களத்தில் செய்தி திரிவு படுத்தப்பட்டுள்ளது வேதனை தருகிறது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் எங்கிருக்கோ அங்குதான் உயர்சியும் முன்னேற்றமும் இருக்கும்....! யாழ்களத்தில கட்டுப்பாடு குறைஞ்சு போச்சுது...BBC நீங்கள் போட்ட BBC செய்தியில் ஏன் முக்கியமான மேல் துண்டை எடுத்தீர்கள் அல்லது ஏன் பிந்திய அதே BBC குச் சொந்தமான செய்தியைப் போடாது விட்டீர்கள்...! விளக்கம் சொல்வீர்களா....???! :twisted: :evil: :roll: - sivajini - 03-04-2004 அதைத்தான் நான் முதல் சுட்டிக்காட்டினேன். - sivajini - 03-04-2004 vasisutha Wrote:செய்திகளை உடனுக்குடன் தரும் பிபிஸிக்கு நன்றிNo Thanks to Him - Mathan - 03-04-2004 kuruvikal Wrote:BBC Wrote:'Tamil Tiger splits spark crisis' குருவி, எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை. நான் எதை திருத்தம் செய்ததாக சொல்றீங்க? நான் படிக்கும் போது BBCயில் இருந்த அதே செய்தியை போட்டேன். பின்பு வந்த செய்தியை தான் சிவாஜினி போட்டிருக்கார். தமிழ் நெட்டின் வந்த மறுப்பு செய்தியை கூட போட்டிருக்கிறேனே. நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் குருவி? - Rajan - 03-04-2004 பிபிசி நிங்கள் போட்டது நானும் கேள்விபட்டேன் 4மணிக்கு என்னும் ??????இருக்குறது உண்மையை குடுப்போம்6மணித்தியாலம் பொறுப்போம் - Eelavan - 03-04-2004 BBC Wrote:நண்பரே B.B.C ஒவ்வொருவர் கருத்திலோ கூற்றிலோ தங்களுக்குப் பிடித்ததை மட்டும் சிவப்பு எழுத்தில் அடையாளப்படுத்தி அதனை நோக்கி அல்லது அதனை மையமாக வைத்து வாதைடுவது உங்கள் கலைEelavan Wrote:நல்லது B.B.C மீண்டும் நான் அம்பாறை மாவட்ட அரசியல் பற்றிய எனது கருத்துக்களை இங்கு சேர்த்தல் தேவையில்லை அவை இன்னும் களத்திலேயே உள்ளன பாருங்கள் நான் அப்போது சொன்னது தனி ஒரு கட்சியான மு.கா. வின் குரலை முஸ்லிம்களின் ஒட்டுமொத்த குரலாக கூறமுடியாது என்று இந்தக் கருத்தில் கூட ரவூப் மு.கா.வின் கோட்டையான அம்பாறையில் இப்படியான கருத்தைச் சொன்னதால் அவர் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை கருத்தைப் பிரதிபலித்திருப்பார் என்றுதான் சொன்னேனே ஒழிய அதுதான் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் குரல் என்றோ அல்லது அப்படிச் சொன்னதற்காக அவர் புலிகளின் பக்கம் சார்ந்துவிட்டதாகவோ அவரது கூற்றை ஆதரிப்பதாகவோ சொல்லவில்லை எனக்கு அரசியல் பிடிக்கும் B.B.C அரசியல் வாதிகளைப் பிடிப்பதில்லை அப்படி எமக்கு சார்பான கருத்துகளை மட்டும் மிகைப்படுத்தி இங்கு எழுதுவதை விட ஏதாவது கட்சியில் சேர்ந்து அவர்களுக்கு வால் அல்லது குடை பிடிக்கலாம் இது எனது தாழ்மையான கருத்து அப்படியென்று பார்த்தால் சந்திரிகா ஏன் கதிர்காமர் கூட அண்மையில் புலிகளைப் பாராட்டினார்கள் அடடா அவர்களல்லவா தமிழினப் பற்றாளர்கள் - Mathan - 03-04-2004 Eelavan Wrote:நண்பரே B.B.C ஒவ்வொருவர் கருத்திலோ கூற்றிலோ தங்களுக்குப் பிடித்ததை மட்டும் சிவப்பு எழுத்தில் அடையாளப்படுத்தி அதனை நோக்கி அல்லது அதனை மையமாக வைத்து வாதைடுவது உங்கள் கலை எனக்கு பிடித்தை மட்டும் சிவப்பு எழுத்தில் போட வில்லை. உங்கள் எழுத்தில் உள்ள முரண்பாட்டைதான் சுட்டிகாட்டி இருக்கின்றேன், - Paranee - 03-04-2004 எல்லாம் கதிர்காமரின் ஆட்டம்தான் தொடர்பாடல் இப்ப அவர் பக்கம்தானே அதுதூன் ஈடாடுது எல்லாம் - kuruvikal - 03-04-2004 BBC நீங்கள் போட்ட BBC செய்தி நிறுவனத்தின் செய்தி முன்னரும் சிவாஜினி போட்ட செய்தி பின்னரும் வந்திருக்க சந்தர்ப்பம் இருந்ததால் தான் எமது கருத்தில் 'அல்லது' என்ற பதம் பாவிக்கப்பட்டிருந்தது....! இப்போ அதுவல்ல பிரச்சனை...பிளவு குறித்து BBC போட்ட முதல் செய்தியை வெளியிட நீங்கள் காட்டிய ஆர்வத்தை ஏன் பிந்தயதைப் போடக் காட்டவில்லை...?! தமிழ் நெற் மறுப்புத் தெரிவிப்பதற்கும் அதே செய்தி BBC இல் வருவதற்கும் இடையில் வேறுபாடு உண்டு....அப்படி இல்லை என்று நீங்கள் கருதியிருந்தால் பிளவு பற்றி AP போட்ட செய்தியோடு நிறுத்தாமல் ஏன் BBC செய்தியையும் கொண்டு வந்தீர்கள்.....?! எனவே நீங்கள் எதை வலுயுறுத்திக் கூற முற்படுகிறீகளோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு மிகுதிச் செய்திகளை மறைக்கவா முற்பட்டிருக்கிறீர்கள்...??! காரணம் செய்தியின் தன்மை பற்றி நாங்களும் சிவாஜினியும் கருத்துக் கூறிய போது அதைக் கவனத்தில் கொள்ளாது உங்கள் நிலைப்பாட்டுக்கு ஏதுவான செய்திகளைப் போடவும் பின்னர் உங்கள் செய்திகள் குறித்து பலமாக கேள்விக் கணைகள் வந்தவுடன் தான் நீங்கள் செய்தியின் நம்பகத் தன்மை பற்றி தேட வெளிக்கிட்டு இவ் நிகழ்வுகள் தொடர்பான மற்றைய செய்திகளையும் வெளியிட்டுள்ளீர்கள்...! அதுதான் உங்கள் மீது ஒரு சந்தேகம் வரக் காரணம்...அது நியாயமாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்....சந்தேகம் வர நடந்தது உங்கள் தவறே.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
- kuruvikal - 03-04-2004 இயக்கத்தில் பிளவா?: மறுக்கின்றனர் விடுதலைப் புலிகள் கொழும்பு: விடுதலைப்புலிகள் இயக்கதில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த அமைப்பின் கிழக்குப் பகுதி தளபதியான கருணா என்ற முரளிதரன் தனியே செயல்பட ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால், இதை புலிகள் இயக்கம் மறுத்துள்ளது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மனின் உத்தரவால் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடந்த திங்கள்கிழமை இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் கருணா அதிருப்தியுடன் இருப்பதாகவும், இதனால் தான் அவர் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதாகவும் போலீஸ்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், பிரபாகரனின் தலைமையில், அவரது கட்டுப்பாட்டின் கீழ் கருணா இயங்கி வருவதாக புலிகள் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. இயக்கத்தில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை என்று கருணாவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக புலிகளுக்கு நெருக்கமான இன்டர்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும், தங்களை தனிப் பிரிவாகக் கருதும்படியும், இனி தங்களிடமே அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் எனவும் நார்வே அமைதிக் குழுவினரிடம் கருணா தனது தூதர் மூலம் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் நாட்டின் வட பகுதியில் உள்ள தனது ஆதரவுப் படைகளை கிழக்குப் பகுதிக்குக் கொண்டு வர ராணுவத்தின் உதவியை கருணா கோரியுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். புலிகள் அமைப்பில் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் கருணா. இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் முன்பு மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் கருணாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாவின் இந்த அறிவிப்பையடுத்து, நார்வே தூதுக்குழு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் அவசர ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர், அமைதிக் கண்காணிப்புக் குழு அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் புலிகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதையடுத்து நார்வே குழுவினர் டிரான்ட் புருஹாவ்டே தலைமையில் கிழிநொச்சிக்கு விரைந்துள்ளனர். அங்கு புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுடன் அவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். இது குறித்து அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அரசியல் செய்தித் தொடர்பாளரான மங்கல சமரவீரா கூறுகையில், புலிகள் இயக்கத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அது பெரிய அளவிலான பிளவு இல்லை. இதனால் அமைதி முயற்சிகளுக்கு பிரச்சனை வராது. புலிகள் இயக்க என்று நம்புகிறோம் என்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் செய்தித் தொடர்பாளரான ஜி.எல். பெரிஸ் கூறுகையில், புலிகள் இயக்கத்தின் உள் விஷயங்கள் குறித்து கருத்து ஏதும் கூற முடியாது. இது சிறிய விவகாரம் தான். இதனால் போர் நிறுத்த ஒப்பந்ததுக்கு எந்த பிரச்சனையும் வராது. மேற்கொண்டு இந்த விவகாரம் குறித்து தேவையில்லாமல் பேசுவது சரியல்ல என்றார். thatstamil.com - kuruvikal - 03-04-2004 மட்டக்களப்புப் பிரச்சனை தற்காலிகமான ஒன்று என்றும் மிக விரைவில் தேவையான மாற்றங்கள் வரும் என்றும் சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடனான கலந்துரையாடலின் போது தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்...இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கெளசலியனும் மற்றும் புலித்தேவனும் கலந்து கொண்டுள்ளார்கள்...! இதற்கிடையில் புலிகள் இயக்கத்தலைவருடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மத்திய குழுவுடன் இணைந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேஷ்,அப்பிரதேச அரசியல் பொறுப்பாளர் கெளசலியன் மற்றும் சிரேஷ்ட தளபதிகள் மேற்கொண்டு வருவதாகவும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாக புலிகளின் இணையத்தளத்தை மேற்கோள் காட்டி தமிழ் நெற் செய்தி வெளியிட்டுள்ளது....! (Tamilnet news in tamil) இதன் பிரகாரம் மட்டக்களப்பில் ஏதோ பிரச்சனை உள்ளதென்பதையும் அது தற்காலிகமானது என்பதையும் அது மிகவிரைவில மாற்றங்கள் வாயிலாக தீர்க்கப்பட்டுவிடும் என்பதையும் புலிகள் ஒத்துக் கொண்டுள்ளனர்....!(-Our view) <img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/TCSLMMMeet.jpg' border='0' alt='user posted image'> Batticaloa crisis temporary - Thamilchelvan [TamilNet, March 04, 2004 09:56 GMT] Head of the Sri Lanka Monitoring Mission (SLMM) Major General (retd.) Trond Furuhovde and his deputy Hagrup Haughland met Head of the LTTE Political Wing, S.P.Thamilchelvan in Kilinochchi Thursday morning, LTTE peace secretariat website said. LTTE Batticaloa district Head of the Political Wing, Kousalyan, and Director of LTTE Peace Secretariat Puleedevan also participated in the discussions. Thamilchelvan told the SLMM delegation that the "crisis is only a temporary one and a resolution will be reached soon," according to the LTTE site. Thamilchelvan also told the SLMM delegation that Batticaloa-Amparai Special commander Ramesh, Batticaloa district Political Head, Kausalyan, Senior commanders are discussing matters with the LTTE Leader Pirapaharan and members of the LTTE Central Committee. (Tamilnet) :evil: :!:
- Mathivathanan - 03-04-2004 பிரச்சனை இருக்கெண்டு சொல்லுறதும் நீங்கள்தான்.. இல்லையெண்டு சொல்லுறதும் நீங்கள்தான்.. நீங்கள் எதிர்பார்க்கிற செய்தி வெளியிலை வராட்டில் கத்திறது குற்றம் சாட்டிறது வழக்கமாப்போச்சுது.. நீங்களே முடிச்சுப்போட்டு முடிக்கிறியள்.. இனியென்ன முடிந்த முடிவுதானே.. என்னுடைய பார்வையிலை இது ஒரு நாடகம்மாதிரித் தெரியிது.. ஏதொ மூடிமறைப்புக்கு குழி தோண்டியிருக்கிது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 03-04-2004 கிழக்கில் மட்டக்களப்பில் இருந்து வெளியாகும் பத்திரிகையான தமிழ் அலைக்கு புலிகளின் மட்டக்களப்பு அப்பாறைத் தளபதியான கருணாவின் பேச்சாளர் தகவல் தருகையில் தாம் எல்லோரும் தேசிய தலைவரின் கட்டளையின் கீழும் கருணாவின் வழிகாட்டுதலின் கீழுமே செயற்படுவதாகவும்...எவரும் புலிகளின் இருந்து வெளியேறவோ அல்லது தனித்தியங்கவோ இல்லை என்றும் தெரிவித்துள்ளதுடன் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் புலிகளில் பிளவு என்பது மக்களை குழப்பவும் பீதியடையச் செய்யவும் திட்டமிட்ட வகையில் வெளியிடப்படும் செய்திகள் என்றும் கூறுகியுள்ளதாக தமிழ் நெற் செய்தி தருகிறது....! ------------------------------- Batticaloa LTTE reiterates stand [TamilNet, March 04, 2004 09:32 GMT] "We are functioning with commitment to our cause under the command of our national leader Veluppillai Pirapaharan and the guidance of commander Col. Karuna" a senior official of the LTTE in Batticaloa was quoted as saying in Thursday's edition of the Thamil Alai, a regional daily published from Kokkaddicholai, a large village controlled by the Tigers 15 kilometres southwest of Batticaloa town. "We did not take any decision to leave the LTTE and operate separately", the official told Thamil Alai. "Rumours of the LTTE breaking up have been spread systematicaly to cause panic and fear among the people", LTTE sources close to Col. Karuna told Thamil Alai. (Tamilnet) - Mathan - 03-04-2004 kuruvikal Wrote:BBC நீங்கள் போட்ட BBC செய்தி நிறுவனத்தின் செய்தி முன்னரும் சிவாஜினி போட்ட செய்தி பின்னரும் வந்திருக்க சந்தர்ப்பம் இருந்ததால் தான் எமது கருத்தில் 'அல்லது' என்ற பதம் பாவிக்கப்பட்டிருந்தது....! குருவி, நான் போட்ட செய்தி (பிளவு செய்தி) முதலிலும் சிவாஜினி போட்ட செய்தி (புலிகளின் மறுப்பு செய்தி) இரண்டாவதாகவும் BBC செய்தி நிறுவனம் வெளியிட்டது. எப்போதும் ஒரு பிரைச்சனை பத்திய செய்திதான் முதலில் வரும் மறுப்பு செய்தி முதலில் வராது. நான் அவர்களுடைய தளத்தை (BBC நிறுவனத்தின்) பார்க்கும்போது இருந்த பிளவு செய்தியை போட்டேன். பின்னர் நான் மீண்டும் அவர்களுடைய தளத்தை பார்பதற்க்கு முன்பு மறுப்பு செய்தியை சிவாஜினி இந்த களத்தில் போட்டிருந்தார். இப்போது புரியும் என நினைக்கிறேன். kuruvikal Wrote:இப்போ அதுவல்ல பிரச்சனை...பிளவு குறித்து BBC போட்ட முதல் செய்தியை வெளியிட நீங்கள் காட்டிய ஆர்வத்தை ஏன் பிந்தயதைப் போடக் காட்டவில்லை...?! தமிழ் நெற் மறுப்புத் தெரிவிப்பதற்கும் அதே செய்தி BBC இல் வருவதற்கும் இடையில் வேறுபாடு உண்டு....அப்படி இல்லை என்று நீங்கள் கருதியிருந்தால் பிளவு பற்றி AP போட்ட செய்தியோடு நிறுத்தாமல் ஏன் BBC செய்தியையும் கொண்டு வந்தீர்கள்.....?! இந்த பிரைச்சனை பற்றி எனது கண்ணில் பட்ட செய்திகளை எல்லாம் இங்கு போட்டிருக்கிறேன். ஏற்கனவே சொன்னமாதி சிவாஜினி அந்த செய்தியை போட்டதால் அதை மீண்டும் போடவில்லை. இதில் என் குற்றம் எதுவும் இல்லை. kuruvikal Wrote:எனவே நீங்கள் எதை வலுயுறுத்திக் கூற முற்படுகிறீகளோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு மிகுதிச் செய்திகளை மறைக்கவா முற்பட்டிருக்கிறீர்கள்...??! காரணம் செய்தியின் தன்மை பற்றி நாங்களும் சிவாஜினியும் கருத்துக் கூறிய போது அதைக் கவனத்தில் கொள்ளாது உங்கள் நிலைப்பாட்டுக்கு ஏதுவான செய்திகளைப் போடவும் பின்னர் உங்கள் செய்திகள் குறித்து பலமாக கேள்விக் கணைகள் வந்தவுடன் தான் நீங்கள் செய்தியின் நம்பகத் தன்மை பற்றி தேட வெளிக்கிட்டு இவ் நிகழ்வுகள் தொடர்பான மற்றைய செய்திகளையும் வெளியிட்டுள்ளீர்கள்...! அதுதான் உங்கள் மீது ஒரு சந்தேகம் வரக் காரணம்...அது நியாயமாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்....சந்தேகம் வர நடந்தது உங்கள் தவறே.....! செய்திகள் மூலம் நான் எதையும் வலியுறுத்தி கூறவோ இல்லை மறைக்கவோ முயலவில்லை. செய்திகளை அந்த நிறுவனங்களின் பெயரை போட்டு அப்படியே போடுகின்றேன். எனது கருத்துகளை தனியாக போடுகின்றேன். இதில் நான் தவறு ஏதும் செய்ததாக தெரியவில்லை. 1) பத்திரிகையாளனும் இல்லை 2) செய்திவழங்கும் தொழிலை செய்யவில்லை. 3) இந்த களத்தை நடத்துவனும் இல்லை. மற்றவர்களை போல் நானும் ஒரு சாதாரண யாழ் கள் வாசகன். எனக்கு நேரம் கிடைக்கும்போது யாழ் களத்தை பார்க்கின்றேன், விசயங்களை பகிர்ந்து கொள்கின்றேன், எனது கருத்தை எழுதுகின்றேன். அவ்வளவு தான். இன்றைக்கு நான் எழுதலாம், நாளை எழுதாமல் விடலாம், சில நாட்கள் கழித்து மீண்டும் எழுதலாம் எதுவுமே எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை பொறுத்தது. அப்படி எனக்கு நேரம் கிடைக்கும்போது கண்ணில் செய்திகளையும் போட்டு வருகின்றேன். இதை நான், நீங்கள், சிவாஜினி இல்லை மற்ற யாழ் நண்பர்கள் யாரும் செய்யலாம். இதில் நீங்கள் குற்றம் சாட்ட எதுவுமே இல்லை. நீங்கள் நான் சில செய்திகளை போடவில்லை என்று நினைத்தால் நீங்கள் அதை போடுங்கள் ஏற்கனவே போட்டும் இருக்கின்றீர்கள். என்னை பொறுத்தவரை நான் எதையும் மறைக்காமல் கண்ணில் படும் செய்திகளை போட்டுள்ளேன். நான் இயன்றவரை எல்லா கேள்விகள் விமர்சனங்களுக்கு பதில் அளித்தே வந்திருக்கின்றேன். தெரியாவிடில் தெரியாது என்றும் தவறாக இருந்தால் மன்னிப்பும் கேட்டிருக்கின்றேன். ஒரு சிலரை போல பதில் அளிக்காமல் நழுவுவதும் இல்லை. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வதும் இல்லை. குருவி, நான் சொல்லிய விளக்கம் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நான் இயன்றவரை தொடர்ந்து எழுதுவேன். படிப்பவர்கள் தீர்மானியுங்கள். சரி பிழைகளை சுட்டிகாட்டுங்கள். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமே இல்லை கடவுள் உட்பட. - Mathan - 03-04-2004 <img src='http://www.thinakural.com/2004/March/04/sanakeyan.jpg' border='0' alt='user posted image'> நன்றி - தினக்குரல் - Mathan - 03-04-2004 Sri Lanka's monitors meet rebels By Frances Harrison BBC correspondent in Colombo <b>The head of Sri Lanka's ceasefire monitors has met Tamil Tiger rebels.</b> This comes after reports of problems between the rebels' leader and a senior rebel commander in eastern Sri Lanka. A pro-rebel website and a Tiger newspaper in the east have denied any split - the rebel leadership has yet to make any comment on the reports. But if this does develop into a split within the Tamil Tigers, it would be the most serious crisis the organisation has faced in a decade. <b>'Direct orders'</b> On the pro-rebel website Tamilnet, a spokesman for the eastern commander, Colonel Karuna, was quoted as saying there was no split with the Tamil Tiger leader, Velupillai Prabhakaran. "We will be functioning directly under the command of our leader" the spokesman said. And a rebel newspaper in the east also denied Colonel Karuna had broken away from the main body of the Tamil Tigers. But Colonel Karuna himself has remained silent. Politicians in Colombo are unwilling to say much, although there was an emergency meeting on Wednesday night at the prime minister's house with Norwegian diplomats. The prime minister's representative, G L Peiris, said he did not want to comment on the situation, but added that he felt there was no threat to the ceasefire with the rebels. A spokesman for the president's party said these were rumblings and rumblings only in the east and they did not want to comment on the internal affairs of the rebels. The head of the ceasefire monitoring mission, Major General Trond Furuhovde, flew to rebel headquarters in the north for a meeting on Thursday with the head of the Tigers' political wing. He refused to give details about the meeting, but said it was constructive. |