![]() |
|
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? (/showthread.php?tid=4285) |
- aswini2005 - 06-01-2005 நிதர்சன் உங்களால் இன்னும் சரியான தீர்வையைச் சொல்ல முடியவில்லை. வெறும் சாட்டுகளை மட்டுமே சொல்லிவிடும் புரியாமையுடன் எனது நேரத்தை விரயமாக்குகிறேன் என்றே தோன்றுகிறது. ஆனாலும் சில கருத்துக்களைக் கூறி உங்கள் கருத்துக்கான எனது கருத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் எனக்கருதுகிறேன். கனடாவில் பெண்களின் நடைமுறையென நீங்கள் கருதும் ஆதாரங்களை எங்களுக்கும் தாருங்கள். அதை நாங்களும் புரிந்து கொள்கிறோம். ஆனால் நான் குறிப்பிட்ட கனடா நிலவரம் வேறு. அதை இப்பகுதியில் எழுத விரும்பவில்லை. இங்கு பிரிவுகளை நாங்கள் ஆதரித்து அதை ஊக்குவிக்கவில்லை. இதைப்புரிந்து கொள்ளாதது உங்கள் தவறே. தவறுகளுக்கான தீர்வை இல்லாத இடத்து பிரிந்து போதல் அல்லது தனித்து வாழ்தலைவிட வேறுவழியில்ல என்பதையே சுட்டுகிறோம். பார்வைக்கோளாறு இன்னும் வரவில்லை வருகின்ற போது தெரிவிக்கிறேன். அதற்கான மருத்துவ ஆலோசனையை அனுப்புங்கள். வேலைக்குப்போகும் பெண்களுக்கு இரட்டைச்சுமை என்பதை யார் புரிந்து கொள்கிறீர்கள் ? பிள்ளைப்பராமரிப்பு தந்தை தாய் இருவருக்கும் உரியது. இதில் பெண்தான் அதை கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் வாதிடுவது உங்கள் ஆதிக்கத்தையே நிலைநாட்டும் பண்பை வெளிப்படுத்துகிறது. இருவரும் வேலைக்குப்போய் வரும்போது சமையல் முதல் அனைத்தும் இருவருக்கும் பங்கிடப்பட்டே செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பெண்ணாலும் சரி ஆணாலும் சரி குடும்பத்தில் மகிழ்வை அனுபவிக்க முடியும். பிள்ளைப்பராமரிப்பகங்களில் பிள்ளைகளை விடும்வரையும் தந்தையர்கள் நீங்களென்ன சந்திரமண்டலத்திலா வேலைபுரிகிறீர்கள் ? கணவனிடம் கண்டிப்பான உத்தரவிடும் மனைவிகளுக்கும் அந்தக்கணவர்களுக்கும் உங்கள் மேலான கருத்துக்களைக்கூறி புரிதலை ஏற்படுத்துங்களேன். ஏன் அது முடியவில்லை உங்களால் ? எத்தனை மனைவிகள் உழைத்தும் தன்குடும்பத்திற்கு ஒரு சதம் அனுப்புவதற்கே ஆயிரம் நொட்டு நொடிப்பு கேட்டு செய்யும் நிலையில் எத்தனையோ பெண்கள். இதுவெல்லாம் ஒட்டுமொத்த ஆண்களின் பெண்களின் தவறாக புரிந்து கொள்ளும் உங்கள் புரிதலை எப்படி புரிவிப்பது உங்களுக்கு. குறிப்பிட்ட மனிதர்களுக்கிடையிலான சச்சரவை எப்படி ஒரு பக்கத்தில் மட்டும் சாய்த்துவிட்டு தப்பிவிடுகிறீர்கள் ? பெற்றவர்களுக்கு பிள்ளை காசு அனுப்பவேணும். அவர்கள் வாழ. ஆனால் பிள்ளையையே சாகும் அளவுக்கு காசுகறக்கும் பெற்றவர்களின் காசுப்பேய்க்குணத்தை எங்கே உரைப்பது. இப்படியான பெற்றவர்கள் பலரால் எத்தனையோ குடும்பங்கள் அன்றாடச் செலவுகளுக்கே அல்லாடும் நிலமையிருக்கிறது. உங்கள் கோடிடுகைகளையும் ஒப்பீடுகளையும் எதிர்பார்கிறேன் ஆதாரங்களுடன். அது இன்னும் பல தீர்வையைத்தரலாம். சட்டம் கொடுத்த சலுகையால் ஆண்கள் தாடியுமஇ தண்ணியுமாகத் திரிவதாய் சொன்னீர்கள். ஏன் அந்த ஆண்களுக்கு தன்னை ஆழும் வல்லமையில்லாத இயலாமையை ஏற்றுக்கொள்ள முடியாத சாட்டே இந்த தண்ணி தாடியெல்லாம். உங்களுக்கெல்லாம் காதில் தோற்றால் ää கலியாணத்தில் தோற்றால் ää காசுஇல்லாவிட்டால் தாடியும் தண்ணியும் தான் தீர்வை. அப்போ உங்களுக்கே உங்கள் மேல் நம்பிக்கையில்லை. - kuruvikal - 06-01-2005 நிதர்சன் கிட்டத்தட்ட மனிதம் இறந்துவிட்ட உலகில் நியாயத்துக்கு இடமில்லை...பிள்ளையையே பாரமாகக் கருதும் பெற்றோரும்.....வயது முதிர்ந்த பெற்றோரின் தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பும் ஆணிடம் இருந்து விடுதலை தேடும் சுயநல பெண் மனித விலங்குகளும்..அயலவன் மீது மனிதாபிமானத்துக்குப் பதில் ஏதோதோ தேடும் மனித மிருகங்களும்...செல்போனுக்கும் காருக்கும் பணத்துக்கும் நாயாய் சுத்தும் பெண் பேய்களும் வாழும் இந்த உலகில் உங்கள் கருத்து எடுபடாது...! கருத்தடை....கருக்கலைப்பு சாதனங்களையும்...எயிட்ஸ் தடுப்பு சாதனங்களையும்...ஒரு 5 வருடத்துக்கு தடை செய்துவிட்டுப் பாருங்கள்...உலகின் கதியை...???! ஆண்களிலும் தப்புச் செய்யுறவங்க இல்லை என்றில்லை...ஆண்கள் பலர் தப்புச் செய்ய பெண்களே தூண்டுதலாக அமைகின்றனர்... இதுதான் இன்றைய உலகின் யதார்த்தம்....! புரிஞ்சு கொண்டவர் சிலரே (பெண்களிலும் ஆண்களிலும்) இன்னும் மனிதத்துடன் வாழ்கின்றனர்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aswini2005 - 06-01-2005 பிள்ளையை பாரமாக இங்கு யாரும் கருதவில்லை. ஆனால் உங்களால் கருத்துக்களை ஜீரணிக்க முடியாத இயலாமையை வெளிப்படுத்தும் உங்கள் திரிபுபடுத்தலே தற்போதும் நடக்கிறது. அயலவனிடம் எதையோ தேடியும் இங்கு யாரும் இல்லை. அந்த அயலவனாக தாங்கள் இருந்து அது கிடைக்காததன் எரிவுதான் இந்தக்கரிப்போ தெரியவில்லை. உங்கள் கத்தரிக்காய் கரையும் செல்போனையும் ஏதாவது சவங்களுக்குச் சமர்ப்பணமாக்குங்கள். மனிதவாழ்விற்கு இவையல்ல ஆதாரம். நீங்களஇ கண்ட பெண்பேய்களுக்குள்தான் உங்கள் அம்மாவும் அக்காவும் தங்கையும் அடக்கமாக. அவர்களையும் பேயாக்கிவிடுங்கள் தப்பித்து விடுவீர்கள். எல்லாவிதமான தடைகளையும் போட்டுவிடுங்கள் 5இல்லை 50ஆண்டுகளுக்கு ஆனால் தவறுகின்ற போது அதில் சமபங்கு உங்களுக்கும் தான். இல்லை உங்களைத் தூண்டும் காரணி பெண்ணென்று சொல்லியே உங்கள் தூண்டல்களுக்கான பாவத்தை மட்டும் பெண்ணில் போட்டுவிடுங்கள். அப்பதான் சமத்துவ சமூகத்தை உங்கள் ஆணாதிக்க உலகால் நிலைநிறுத்த முடியும். புரியாமை அறியாமைகளுடன் இணையம் வரையும் உங்கள் போன்ற ஆதிக்கர்களுடனும் நியாயத்தை புரிவிக்க யாரும் வேலையில்லாத் திண்டாட்டங்களல்ல. ஆண்கள் தப்புசெய்ய மட்டுமே பிறந்தவர்கள். தூண்டும் விலங்காக பெண் இருக்கிறாள் என்றால் உங்கள் தூண்டும் சக்திக்குள் மனிதமா இருக்கிறது ? அங்கு அதிபாரிய மிருகமே இருக்கிறது. அதைப்புரிந்து கொள்ளாமல் தூண்டுது துள்ளுது என்றால் என்ன செய்வது ? நாயாய் சுத்தும் பெண்கள் என்றால் அந்த நாயைச்சுற்றி வரும் நாய்களை என்ன செய்யலாம் ? தன்னை நம்பாத தன்னால் சுயமாக இயங்க முடியாதவர்களே இப்படி துள்ளுவதும் தங்கள் தவறை மறைக்க இப்படியெல்லாம் தாளம் போடுவதும்.
- kuruvikal - 06-01-2005 அறியாமைக்கு பதில் எழுதும் அறியாமையை என்னென்பது...! நியாயங்கள் இருப்பதால் தான் அதை மறைக்கப் பதில் எழுதுகிறார்கள் சிலர்...! அவர்களின் வாதத்தில் தெளிவில்லை என்பது மேலே உள்ள கருத்தை வாசித்தாலே புரியும்...! பிள்ளைகள் பாரமென்று கருக்கலைக்க வரும் பெண்கள் இல்லையா...??! பிள்ளைகள் பாரம் என்று தெருவில தூக்கிப் போடும் பெண்கள் இல்லையா...??! பிள்ளைகள் பாரம் என்று விவாகரத்துப் பெற்று சொந்தக் கணவனிடம் தள்ளிவிட்டுப் போய் வேறொருவருடன் வாழும் பெண்கள் இல்லையா...???! குடியும் கூத்தும் என்று பிள்ளைகளை கொஸ்ரலில் தள்ளிவிட்டு திரியும் பெண்கள் இல்லையா...??! கார் காசு சொத்துக்காக டேற்றிங் போகும் பெண்கள் இல்லையா...காதலிக்கும் பெண்கள் இல்லையா...???! பள்ளியில் படிக்கும் காலத்தில் பணக்காரனுடன் சுத்தி தினமும் ஓசியில திண்ணும் பெண்கள் இல்லையா...மேடம் கண் முன்னால நடக்கிறத இல்லை என்று சொல்லும் நீங்கள்...பூமியிலா செவ்வாயிலா இருக்கிறீர்கள்...அல்லது ஏலியனா நீங்கள்...! அம்மாவும் அக்காவும் தங்கையும் தப்புச் செய்திருந்தால் தக்க தண்டனை அவர்களுக்கும் தான்... அதே போல் அப்பாவும் நானும் அண்ணாவும் தம்பியும் தப்புச் செய்திருந்தாலும் தண்டனை அதுதான்...! அங்கு வேறுபாட்டுக்கு இடமில்லை...! தப்புச் செய்திருந்தால் நாங்களும் பேய்கள் தான்...! பெண்கள் தூண்டுதல் வேண்டித்தான் தான் பசன் என்று அநாகரிகமாக உலா வருகின்றனர்..இதைப் பெண்களோ ஒத்துக்கொள்ளும் போது நீங்கள் யார் இல்லை என்ற...!!! பெண்கள் மற்றவர்களைக் கவர விரும்பாவிடில் எதற்கு வாய்ப் பூச்சு முகப்பூச்சு உடற் பூச்சு தலைக்கு டை என்று பூச்சுக்களோடு வேசமும் கையுமாய் அலைகின்றனர்...???! நாய்க்குப் பின்னால் நாய்தான் வருமே தவிர மனிதன் வரான்...! நாய்களுக்குப் பின் அற்பம் குருவிகள் கூட இல்லை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இப்ப புரியுதா இயலாமையை மறைக்க அநியாயத்துக்கு நியாயம் கற்பிக்க யார் கருத்துப் பகர்கின்றனர் என்று...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 06-01-2005 அடங்கு பிள்ளை அடங்கு................. இப்ப ஒரு உதாரணத்துக்கு புருஷன் செட்டப் ஒண்டை வச்சிருந்தால் மனுசிக்காரி கண்டு பிடித்து விடுவாள் இது மனுசிக்காரியின் கெட்டித்தனம் எண்டு நினையாதைங்கோ... ஆம்பிளை ஒரு ஓட்டவாய் களவு செய்தாலும் மூடி மறைக்கத் தெரியாது...ஆன பெம்பிளை தவறு செய்ய நினைச்சாள் எண்டால் பக்கத்து பாயிலை புருஷன் இருந்தாலும் பயப்பிட மாட்டாள் அப்பிடி ஒரு நெஞ்சளுத்தம் துணிவு அவைக்கு இருக்கு எனதனுபவத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் ஒருவர் எந்தவகை கெட்ட பழக்கவழக்கங்களும் இல்லாமல் பணத்தை மட்டுமே குறியாக இருந்து காசை ஊரிலிருக்கும் மனைவிக்கு அனுப்பினார்; அவ அந்த காசோடு இன்னோரு ஆளுடன் கம்பி நீட்டி விட்டா. அந்த ஆணுக்காக அனுதாபப்பட மாட்டீர்களா? அப்படிபட்ட பெண்களும் எங்கள் சமூகத்தில் தானே இருக்கிறார்கள் நீங்கள் யுரோப்பில் நல்ல ஒரு குடும்ப வாழ்க்கை அமையப்பெற்ற நிலையில் கருத்துக்கள் எழுதுவது சுலபம் இப்படியான சம்பவங்களை நேரடியாக பாத்த ஆண்கள் தங்கள் குடும்பம் . மனைவி என கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் அடக்கி வைச்சிருக்கிறது என கூறுவீர்கள் ஏனெலில் சில ஆண்களுக்கு இந்த சமூகத்தை விட அவர்களின் குடும்பங்கள் தான் முக்கியம் ஆன படியால் அவர்களையும் குறை கூற முடியாது. - Niththila - 06-01-2005 kuruvikal Wrote:Niththila Wrote:இங்கு வைக்கப்பட்ட குருவி அண்ணாவின் கருத்துகள் பல யதார்த்தமற்றவையாக இருக்குது. குருவி அண்ணா நீங்கள் சொல்லுற சட்டம் எனக்குத் தெரியாது. நான் அறிந்தவரையில எந்த நாட்டு சட்டமும் பெண் என்பதற்காக ஜீவனாம்சம் வழங்கிறதாக தெரியேல்லையே. ஜீவனாம்சத்தின் அடிப்படை கூடிய வருமானம் உள்ளவர் (அது ஆணாயினும் சரி பெண்ணானாலும் சரி) குறைந்த வருமானம் உள்ளவருக்கு வாழ்க்கைப் படி வழங்க வேண்டும். பிள்ளைகள் இருக்கும் சந்தர்ப்ப்த்தில் அவர்களை வளர்க்கும் பொறுப்பை பெண்கள் விரும்பக் காரணம் பிள்ளைகளை அவர்கள்தான் அதுவரை காலமும் பூரணமாக கவனித்து வளர்த்து இருப்பினம் (வேலைக்கு போனாலும் சரி போகேல்லை எண்டாலும் சரி பிள்ளாஇகளை வளர்க்கும் பொறுப்பு எல்லாக் குடும்பத்திலும் பெண்கள் மீதுதான்) விவாகரதின் போது இதனால்தான் பெண்கள் பிள்ளை பராமரிப்பை ஏற்றுக்கொள்வார்கள். அதை விட பணத்துக்காத் தான் பிள்ளை பராமரிப்பை எடுப்பதாக தயவு செய்து சொல்ல வேண்டாம். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் விதிவிலக்குகள் வழமை ஆகாது ( exceotiona are ot rule) :wink:
- kuruvikal - 06-02-2005 எங்கள் கருத்துக்களை நாமறிந்த கடந்த கால வழங்குகளில் பெரும்பான்மையாக வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் வைத்தோம்...! பெண்களுக்கு வருமானம் அதிகமா இருப்பினும் அவர்களிடமிருந்து ஆண்களுக்கு விவாகரத்து நஸ்டஈடு வழங்கப்பட்டதற்கான எந்த நடைமுறையும் காணவில்லை.... அதேபோல் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பெண்கள் பராமரிப்புச் செலவீடு செலுத்தியதாகவும் அறியவில்லை..! அறியக் கிடைக்கவும் இல்லை...! விதிவிலக்குகளான ஆண்களை வைத்து அடிமைத்தனம் உரைக்கும் போது விதிவிலக்குகளை கவனத்தில் எடுக்கத்தானே வேண்டும் நித்திலாத் தங்கையே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kirubans - 06-02-2005 MUGATHTHAR Wrote:அடங்கு பிள்ளை அடங்கு................. இப்படி சிற்சில உதாரணங்களைக்காட்டி ஒட்டுமொத்தமாக பெண்களை இழிவுபடுத்த வேண்டாம், அத்துடன் இந்த உதாரணத்திலுள்ள ஆணின்மீது காட்டும் பரிதாபத்தை வைத்து, மொத்த அடக்கியாளும் ஆண் வர்க்கத்தையே பரிதாபக் கண்ணோடு பாருங்கள் என்று கூறவும் வேண்டாம். உங்களது முதல் வசனமே, நீங்கள் எத்தகையவர் என்பதைக் காட்டுகின்றது. பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராய ஒரு பெண் முன்வந்தால் அதப் பற்றி ஆரோக்கியமாக விவாதம் புரியாமல் அடக்கியாள முயல்கிறீர்கள் என்று தெரிகின்றது. இதையே ஒரு மேடையில் உங்கள் முன் நேருக்கு நேர் பேசினால், உங்கள் வாயை முந்தி உங்கள் கைதான் பேசும் என்றும் புரிகின்றது. பிராமணியச் சிந்தனையை ஈழத்தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகின்றது. எனினும் அதை நம்பமுடியாது. ஏனெனில் ஈழத்தமிழரின், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களின் பேச்சையும், நடப்புக்களையும் பார்த்தால் அவர்கள் பிராமணியத்தை இன்னொருமுறையில் வளர்க்க முற்படுகிறார்கள் என்பது தெளிவு. எவராவது நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும், தாங்கள் * பெண்களை அடக்கியாள விரும்பவில்லை என்று * பெண்ணின் கருத்தை சிறிய/பெரிய விடயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு ஏற்கின்றூம் என்று * மனைவியை, சகோதரியைப் பார்த்து "நீ சும்மா இரு. உனக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்லுவதில்லையென * யாராவது ஒரு தமிழனைச் சந்த்திதால் "ஊரில் எவ்விடம்" என்று தொடங்கி, அவரின் வீடு எங்கு இருக்கின்றது என்று அறிந்து அவர் எந்த சாதியாக இருக்கக்கூடும் என்று ஊகிப்பதில்லயென இப்படிப் பலவற்றை அடுக்கலாம். தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கின்றோம் என்று வாயார சொல்லும் பலர், உள்ளூற இப்படிதான் வாழ்கின்றார்கள். இவர்கள் தமிழீழ போராட்டம் சிங்களவனிடமிருந்து விடுதலை பெற மட்டும்தான் என்று கருதுபவர்கள். போராட்டத்தின் மூலம் சாதி அடக்குமுறையை, பிரதேச அடக்குமுறையை, பெண் அடக்குமுறையை இல்லாமலாக்க இவர்கள் மனதார விரும்புவதில்லை. - aswini2005 - 06-02-2005 MUGATHTHAR Wrote:அடங்கு பிள்ளை அடங்கு.................முகத்தார் நீங்கள் கூறும் அந்தக்கம்பி நீட்டலின் பின்னால் நின்றதும் ஒரு ஆண்தானே. அங்கு தவறு என்பது இருபக்கமும் இல்லையா ? அதற்காக அந்தச்செயலை ஊக்கும் ஊக்கிகளாக நான் கருத்தெழுதவில்லை. நீங்கள் குறிப்பிடுவது போல பெண்கள் தரப்பிலும் நிறையவே நீங்கள் சொன்னதைவிட ஆயிரமாயிரம் கதைகள் சொல்ல இருக்கிறது.(இங்கு பெண்கள் தரப்பு என்பது பெண்களது அவலங்களை குறிப்பிடுகிறேன் ஐயா) இங்கு நாம் இப்படியான விடயங்களை மட்டும் கவனமெடுத்து கருத்தெழுதி முரண்பாடுகளை வளர்ப்பதல்ல நோக்கம். அதைப்புரிந்து கொள்ளுங்கள். தீர்வுகள் இன்னும் பெண்ணுக்கு திணிப்புளாகவே இருக்கிறது. மேற்கூறிய உங்கள் வாதப்படி இந்தத் திணிப்புக்களையும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் என்பது புரிகிறது. தன்மனைவி மீது குடும்பம்மீது நம்பிக்கையில்லாமல் எச்சரிக்கை என்ற பெயரில் செய்யும் அடக்குமுறையை குடும்பம் மீதான அக்கறை கவனம் என்றால் இது என்னய்யா முகத்தார் சிறைக்கூடமா நடாத்துகிறீர்கள் ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஒவ்வொருவருக்கும் தனது குடும்பம்தான் முக்கியம் தன்குடும்பத்தை நல்லபடியாக கவனிக்கும் ஆணாலும் பெண்ணாலும்தான் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும். இல்லை சமுகத்தைவிட என் குடும்பம்தான் முக்கியம் என்பது தன்னையும் தன்குடும்பத்தையும் ஏமாற்றுதலுக்குச் சமானம்.
- kuruvikal - 06-02-2005 kirubans Wrote:[quote=MUGATHTHAR]அடங்கு பிள்ளை அடங்கு................. இப்படி சிற்சில உதாரணங்களைக்காட்டி ஒட்டுமொத்தமாக பெண்களை இழிவுபடுத்த வேண்டாம், அத்துடன் இந்த உதாரணத்திலுள்ள ஆணின்மீது காட்டும் பரிதாபத்தை வைத்து, மொத்த அடக்கியாளும் ஆண் வர்க்கத்தையே பரிதாபக் கண்ணோடு பாருங்கள் என்று கூறவும் வேண்டாம். உங்களது முதல் வசனமே, நீங்கள் எத்தகையவர் என்பதைக் காட்டுகின்றது. பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராய ஒரு பெண் முன்வந்தால் அதப் பற்றி ஆரோக்கியமாக விவாதம் புரியாமல் அடக்கியாள முயல்கிறீர்கள் என்று தெரிகின்றது. இதையே ஒரு மேடையில் உங்கள் முன் நேருக்கு நேர் பேசினால், உங்கள் வாயை முந்தி உங்கள் கைதான் பேசும் என்றும் புரிகின்றது. பிராமணியச் சிந்தனையை ஈழத்தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகின்றது. எனினும் அதை நம்பமுடியாது. ஏனெனில் ஈழத்தமிழரின், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களின் பேச்சையும், நடப்புக்களையும் பார்த்தால் அவர்கள் பிராமணியத்தை இன்னொருமுறையில் வளர்க்க முற்படுகிறார்கள் என்பது தெளிவு. எவராவது நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும், தாங்கள் * பெண்களை அடக்கியாள விரும்பவில்லை என்று * பெண்ணின் கருத்தை சிறிய/பெரிய விடயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு ஏற்கின்றூம் என்று * மனைவியை, சகோதரியைப் பார்த்து "நீ சும்மா இரு. உனக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்லுவதில்லையென * <b>யாராவது ஒரு தமிழனைச் சந்த்திதால் "ஊரில் எவ்விடம்" என்று தொடங்கி, அவரின் வீடு எங்கு இருக்கின்றது என்று அறிந்து அவர் எந்த சாதியாக இருக்கக்கூடும் என்று ஊகிப்பதில்லயென இப்படிப் பலவற்றை அடுக்கலாம்.</b> தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கின்றோம் என்று வாயார சொல்லும் பலர், உள்ளூற இப்படிதான் வாழ்கின்றார்கள். இவர்கள் தமிழீழ போராட்டம் சிங்களவனிடமிருந்து விடுதலை பெற மட்டும்தான் என்று கருதுபவர்கள். போராட்டத்தின் மூலம் சாதி அடக்குமுறையை, பிரதேச அடக்குமுறையை, பெண் அடக்குமுறையை சாதிதான் இல்லையென்றாச்சே..பிறகேன் அதை நீங்கள் இன்னும் காவுகிறீர்கள்... யார் கேக்கினமோ இல்லையோ... கருணா போல தேவைக்கு பிரதேசவாதம் சாதியம் பேச நீங்கள் தயார் என்பது போல இருக்கு உங்கள் உதாரணங்கள்...! மேலே கருத்தெழுதிய எவரும் உச்சரிக்காத பிராமணியத்தை (சாதிய அடையாளம்) சாதியை உச்சரித்து...அதை எதிர்விமர்சனம் என்ற போர்வையில் தொடர்வதில் நீங்கள் முதன்மையானவர் போலும்... கில்லாடியளப்பா...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aswini2005 - 06-02-2005 kirubans Wrote:[நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி வஞ்சனை கொள்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி பாரதியின் இந்த வரிகள்தான் கிருபன் இங்கு நடைமுறையில் இருக்கிறது. தேசம் விடிவேண்டும் நாங்கள் தேசியத்தின் ஆதாரங்கள் என்றெல்லாம் புலம்பும் பலரது நடைமுறை இதுவாகத்தானிருக்கிறது. ஒரு தேசம் என்பதற்குள் சாதி ää சமயம் ää பெண் அடக்குமுறையைலெ;லாம் இருக்கிறது என்பதை இவர்கள் புரியாது அல்ல புரிந்தும் புரியாமல் நடிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தேசம் தேசியம் தனிச்சொற்களே அன்றி இலட்சியம் இல்லை. இப்படி அன்று எங்கள் தலைவனும் இருந்திருந்தால் இன்று ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியின் மாற்றங்கள் ää தலைநிமிர்வுகள் ஆனந்தசங்கரியின் அரசியலாகத்தான் இருந்திருக்கும். ஆனால் காலம் எங்களுக்குத்தந்த கடவுளின் காலத்தில் அவரை நேசிக்கின்றோம் எனச்சொல்லும் பலரது விடுதலை உணர்வு வெறும்வாய்ச் சொல்லாக இருப்பது வேதனையே அன்றி வேறில்லை..... பிராமணியம் பற்றி எழுவோர் பேசுவோர் கூட பிராமணியத்தை புலம்பெயர் பரப்பிலும் பரப்பிக்கொண்டும் பயன்படுத்திக் கொண்டும்தான் இருக்கிறார்கள். - kuruvikal - 06-02-2005 aswini2005 Wrote:kirubans Wrote:தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கின்றோம் என்று வாயார சொல்லும் பலர், உள்ளூற இப்படிதான் வாழ்கின்றார்கள். இவர்கள் தமிழீழ போராட்டம் சிங்களவனிடமிருந்து விடுதலை பெற மட்டும்தான் என்று கருதுபவர்கள். போராட்டத்தின் மூலம் சாதி அடக்குமுறையை, பிரதேச அடக்குமுறையை, பெண் அடக்குமுறையை இல்லாமலாக்க இவர்கள் மனதார விரும்புவதில்லை. ஏன் பாரதியைக் கூப்பிடுகிறீர்கள்...அவனும் பிராமணியன் தானே....! பிராமணியத்தை எதிர்ப்பவர்கள் ஏன் பிராமணியை அழைக்கின்றீர்கள்...! கூப்பாட்டுக்கு உதவிக்கா...! இவர்கள் மட்டும் தேசிய தேசியம் காப்பவர்கள்...அதுதான் புலத்தில் பெண்ணடிமைத்தனம் பேசிப் பொழுது கழிக்கின்றனர் போலும்....! புலத்தில் பேச எதுவுமில்லை...செயற்படுத்த யாருமில்லை...என்ற நிலைதான் இருக்கிறது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- poonai_kuddy - 06-02-2005 kuruvikal Wrote:kirubans Wrote:[quote=MUGATHTHAR]அடங்கு பிள்ளை அடங்கு................. அதென்னண்ணா சாதி இல்லையெண்டாச்சு? யார் சொன்னது? கனவு கண்டனீங்களோ? சிவேளை நீங்கள் அலி யனோ? செவ்வாய்க் கிரகத்தில இருக்கிறீங்களோ? சனிக்கிரகத்தில இருக்கிறீங்களோ? சாதியள் இல்லையெண்டு சொல்லுறீங்களண்ணா? எதிர்விமர்சனமா? அடக்கடவுளே. அண்ணா விமர்சனமெண்டால் என்னெண்டு தெரியுமா? அதுக்குள்ள எதுக்கிப்ப எதிர்விமர்சனமெண்டு கிருபனண்ணாக்கு சொல்லுறீங்கள். உங்கட கருத்தில ஒத்தவராமல் ஒருவர் தன்ர கருத்த வச்சால் அதுக்குப்பேர் எதிர்க்கருத்தண்ணா. ஓமோமண்ணா உங்களப் பொறுத்தவரைக்கும் எல்லாமே இல்லையெண்டாச்சுதே. சாதியள் இல்ல மதச்சண்டைகளில்ல சீதனங்களில்ல சில்லறைகளில்ல தானே. நான் நினைக்கிறன் நீங்கள் எங்களோ செவ்வாயிலயோ சனியிலதான் இருக்கிறீங்கள் போல.
- poonai_kuddy - 06-02-2005 kuruvikal Wrote:aswini2005 Wrote:kirubans Wrote:தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கின்றோம் என்று வாயார சொல்லும் பலர், உள்ளூற இப்படிதான் வாழ்கின்றார்கள். இவர்கள் தமிழீழ போராட்டம் சிங்களவனிடமிருந்து விடுதலை பெற மட்டும்தான் என்று கருதுபவர்கள். போராட்டத்தின் மூலம் சாதி அடக்குமுறையை, பிரதேச அடக்குமுறையை, பெண் அடக்குமுறையை இல்லாமலாக்க இவர்கள் மனதார விரும்புவதில்லை. அதுசரி நீங்கள் என்ன சாதியண்ணா? அவையாவது பறவாயில்ல பொழுதுபோகாட்டித்தான் பெண்ணடிமைத்தனம் பேசுவினம். நீங்கள் கனவிலகூட மலரோட காதலெண்டு புசத்துறீங்களாமண்ணா? உண்மையே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - poonai_kuddy - 06-02-2005 kuruvikal Wrote:எங்கள் கருத்துக்களை நாமறிந்த கடந்த கால வழங்குகளில் பெரும்பான்மையாக வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் வைத்தோம்...! பெண்களுக்கு வருமானம் அதிகமா இருப்பினும் அவர்களிடமிருந்து ஆண்களுக்கு விவாகரத்து நஸ்டஈடு வழங்கப்பட்டதற்கான எந்த நடைமுறையும் காணவில்லை.... அதேபோல் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பெண்கள் பராமரிப்புச் செலவீடு செலுத்தியதாகவும் அறியவில்லை..! அறியக் கிடைக்கவும் இல்லை...! சட்டமென்னெண்டு தெரியாமல் கருத்த வச்சுப்போட்டு இப்ப மழுப்புறார். சரி சரி என்ன செய்யிறதண்ணா. இதெல்லாம் நடக்கிறதுதுதானனே. சமுதயாத்தின்ர நிலை தெரியாமல் இவர எங்கயோ ஒதுக்கி வச்சிருக்கினம் போல. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- poonai_kuddy - 06-02-2005 kuruvikal Wrote:சரி பூனைக்குட்டி தமிழர் என்றால் யார் என்று தெரியுமோ...இல்லை...அது விளங்காம மேல போறது அவசியமில்லை...அதுதான்...! குரவியண்ணா நான் கெட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லேல. தமிழர் எண்டால் யார் எண்டு விளக்கஞ் சொல்லுங்கோவன் அண்ணா. தமிழர் எண்டால் யாரு சும்மா இந்தச் சண்டைகள் எதுக்கு அதெல்லாத்தையும் விளக்கமா சொல்லுங்கோவன். என்ர கேள்விக்கு சரியான பதில் சொல்லாமல் நீங்கள் இனி கருத்தெழுதினால் வெக்கக்கேடண்ணா. மற்றாக்களின்ர கருத்தில இருந்து தப்பிக்கிறதுக்காண்டி சசும்மா கேள்வியள கேட்டு தப்பிக்கிறீங்களெண்டு எல்லாரும் சொல்லுவினம் உங்கள். என்ர கேள்விக்கு இனி பதில் சொல்லிட்டுதானண்ணா நீங்கள் மற்றத பற்றி கதைக்கோணும். இல்லாட்டி வேஸற் நீங்கள்.
- aswini2005 - 06-02-2005 Quote:குறுவியண்ணேய் பாரதி பிராமணியன் ஆனால் பிராமணியத்து சம்பிரதாயங்களை விட்டு வெளியேறி பரதேசியாகத் தனது தேசவிடுதலைக்கும் பெண்விடுதலைக்கும் குரல் கொடுத்தானே. அன்றைய காலத்தில் பாரதி பாட்டிலாவது குரல் கொடுத்தான் பெண்ணுக்கு காட்டில் உருவாக்கி களத்தில் பெண்களை இறக்கிய தலைவனை பாரதி கண்டிருந்தால் நிச்சயம் உலகப்பெண்ணுக்கே உய்வு கொடுத்திருக்கும் கவிஞனாகியிருப்பான். பாரதியின் கனவினை நனவாக்கிய எங்கள் தலைவனின் காலத்திலேதானே நீங்கள். ஆனால் பூவும் மணமும் காதலும் என்று புராணம் படிப்பதும் ஏமாறுவதும் பின் புலம்புவதையும் என்னவென்று சொல்ல ?"kuruvikal Wrote:ஏன் பாரதியைக் கூப்பிடுகிறீர்கள்...அவனும் பிராமணியன் தானே....! பிராமணியத்தை எதிர்ப்பவர்கள் ஏன் பிராமணியை அழைக்கின்றீர்கள்...! அப்போ நீங்களும் கள்வன்தானே. அத்தகைய கள்வனாகிய உங்களைத்தானே நாங்களும் இந்தக்களத்தில் வைத்து கருத்தாடுகிறோம். பெண்ணடிமை பேசிப்பேசித்தான் உங்களது பிடியிலிருந்து ஓரளவேனும் தப்பியிருக்கிறோம். பெண்பேசுவதையே பிடிக்காமல்தானே இத்தனை கத்தும் கத்துகிறீங்கள். - kuruvikal - 06-02-2005 aswini2005 Wrote:kuruvikal Wrote:ஏன் பாரதியைக் கூப்பிடுகிறீர்கள்...அவனும் பிராமணியன் தானே....! பிராமணியத்தை எதிர்ப்பவர்கள் ஏன் பிராமணியை அழைக்கின்றீர்கள்...! அ..உ...எண்டா களத்துக்குப் போயிடுங்கோ...நீங்க புலத்தில பதுங்கிடுங்கோ.. களத்தில நிக்கிற பெண்களைப் பற்றிக் கதைக்க உங்களுக்கோ எங்களுக்கோ அருகதையில்ல... உங்களைப் போல பதுங்கிக் கிடந்ததுகளை பாயும் புலியாக்கினது... ஒரு தலைமையின் திறமை... ஆளுமை.. நீங்க அறியாத பாவிக்க மறுத்த உங்கள் திறமைகளை உங்களுக்கே அடையாளம் காட்டினது அவன்...! அதைத்தான் நாங்களும் சொல்லுறம்... உங்களை யாரும் அடிமைப்படுத்தல்ல...நீங்களே உங்களை அடிமைபப்டுத்துவதாக எண்ணி அடங்கிக் கிடக்கின்றீர்கள்...! இது புரியாம புலம்புறத்துக்கு நாம் என்ன செய்ய முடியும்...அது உங்க வழமை...! பூவும் மணமும் காதலும் இல்லாமல் களத்திலும் ஆட்கலில்லை... புவியிலும் ஆட்கலில்லை...இதில் இருந்து தெரியுது..நீங்க யதார்த்தத்துக்கு அப்பால் நிக்கிறியள் எண்டது...முதலில யார்த்தத்துக்குள்ள வாங்க....அதுக்குப் பிறகு கருத்தாடலாம்..கனவில மிதந்து உளறாம....! :wink: - poonai_kuddy - 06-02-2005 என்னண்ணா நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லேல. சொல்லத் தெரியேலயோ. பிறகெதுக்கு உதுக்குள்ள கருத்தெழுதுறீங்கள். ஓமோம் வெளிநாட்டுக்கு ஓடிவந்த நீங்கள் மட்டும் போராட்டத்தபஇ பற்றி கதைக்கிறீங்கள். ஓம் தலைமை சும்மாவே செய்தது? பொம்பியளயும் சேத்தால் தான் அவர்களுக்கு சமூகத்தில நிகரான இடத்தை குடுத்தா தான் முன்னேற முடியும் எண்டுற உண்மைய விளங்கினதால தான் செய்தவராக்கும். உங்களுக்குத்தான் விளங்கேல இன்னும். அதுசரி தலைமை தன்ர மனுசிய மகள எப்பிடி வச்சிருக்கிறாரெண்டு ஆருக்கு தெரியும் :? அட அப்ப தமிழரையும் யாரும் அடிமைப்படுத்தேல அவைதான் தாங்கள் அடிமைப்பட்டு கிடக்கினம் என்னண்ணா? - kuruvikal - 06-02-2005 [quote=poonai_kuddy]என்னண்ணா நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லேல. சொல்லத் தெரியேலயோ. பிறகெதுக்கு உதுக்குள்ள கருத்தெழுதுறீங்கள். ஓமோம் வெளிநாட்டுக்கு ஓடிவந்த நீங்கள் மட்டும் போராட்டத்தபஇ பற்றி கதைக்கிறீங்கள். ஓம் தலைமை சும்மாவே செய்தது? பொம்பியளயும் சேத்தால் தான் அவர்களுக்கு சமூகத்தில நிகரான இடத்தை குடுத்தா தான் முன்னேற முடியும் எண்டுற உண்மைய விளங்கினதால தான் செய்தவராக்கும். உங்களுக்குத்தான் விளங்கேல இன்னும். அதுசரி தலைமை தன்ர மனுசிய மகள எப்பிடி வச்சிருக்கிறாரெண்டு ஆருக்கு தெரியும் போய் பாத்திட்டு வாறது... பூனைக்குட்டிக்கு புலிக்குட்டியால ஏதோ பாதிப்புப் போல... புலம்பிறதப் பார்த்தா அப்படித்தான் தெரியுது....பாவம் உதன் புலம்பலை குருவியே மதிக்காத போது....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|