Yarl Forum
லண்டன் அதிர்கிறது ! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: லண்டன் அதிர்கிறது ! (/showthread.php?tid=3960)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- AJeevan - 07-08-2005

<span style='font-size:25pt;line-height:100%'>நாங்கள் பிரித்தானியர்கள்
என்ற கோசம் உருவாக
இத்தாக்குதல் காரணமாகி இருக்கிறது.</span>


- Mathan - 07-08-2005

நாரதர் அமெரிக்காவில் செப் 11 தாக்குதல்கள் நடைபெற்று பல வருடங்களாகிவிட்டது. அதன் பாதிப்புக்கள் மக்கள் மனதை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன. அதனால் அங்கு யுத்தத்திற்கு ஆதரவு குறைய கூடும். இங்கு அப்படியல்ல. அமெரிக்கா மீதான தாக்குதலை தொடர்ந்து அவர்கள் மேல் அனுதாபம் கொண்டிருந்த பிரிட்டிஷ் மக்கள் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய போதும் அவர்களுடன் பிரிட்டிஷ் படைகள் இணைந்த போதும் ஓரளவு ஆதரிக்க செய்தனர். ஆனால் தொடர்ந்து ஈராக் மீது போர் தொடர்ந்த போது செப் 11 தாக்குதல்களால் பாதிக்கப்படாத இந்நாட்டு மக்களிடன் ஏன் நாம் ஈராக்கியில் யுத்தம் புரியவேண்டும்? ஏன் நமது பிள்ளைகள் அங்கு உயிர் துறக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதுவே யுத்தத்திற்கு எதிரான எதிர்ப்பாகவும் மாறியது.

ஆனால் இப்போது நேற்றய தாக்குதலில் பிரிட்டிஷ் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதன் வலியை வேதனையை கண்கூடாக கண்டு அனுபவிக்கின்றார்கள். இது அவர்களுக்கு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களின் பிண்னணி மேல் ஒரு வெறுப்புணர்வையும் ஆத்திரத்தையுமே ஏற்படுத்தியிருக்கின்றது. அது காரண காரணிகளை ஆராயாமல் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் யுத்தம் போன்றவற்றை ஆதரிக்க செய்வதுடன் அதனை செய்யும் பிளேயரின் கரங்களை பலப்படுத்தும்.

உதாரணத்திற்கு ஒரு வீட்டில் அப்பா பக்கத்து வீட்டுகாரருடன் வீண் சண்டைக்கு போகும் போது மற்றய குடும்ப உறுப்பினர்கள் ஏன் வீண்சண்டை வேண்டாம் என்று அப்பாவை கண்டிப்பார்கள். அதன் பின்பு பக்கத்து வீட்டுக்காரர் வீட்டிற்கு வந்து அந்த வீட்டின் கடைக்குட்டியை ஆத்திரத்தில் அடி அடி என்று அடித்துவிட்டால் இப்போது வீட்டின் மற்றய உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்? அப்பா சண்டைக்கு போனதால் தான் இது வந்தது என்று ஆற அமர இருந்து அலசி ஆராய்ந்து நியாய அநியாயம் பேசுவார்களா அல்லது பக்கத்துவீட்டுகாரன் வீணாக கடைக்குட்டியை அடித்துவிட்டான் என்று ஆத்திரம் கொள்வார்களா? அந்த வீட்டில் அப்பா செய்தது நிச்சயம் அநியாயம் தான் தான் அதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் பக்கத்து வீட்டு காரர் வீட்டிற்கு வந்து ஏதுமறியாத தம்பியை அடித்தவுடன் எப்படி மனப்போக்கு மாறுகிறது பாருங்கள்?


- narathar - 07-08-2005

Mathan Wrote:நாரதர் அமெரிக்காவில் செப் 11 தாக்குதல்கள் நடைபெற்று பல வருடங்களாகிவிட்டது. அதன் பாதிப்புக்கள் மக்கள் மனதை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன. அதனால் அங்கு யுத்தத்திற்கு ஆதரவு குறைய கூடும். இங்கு அப்படியல்ல. அமெரிக்கா மீதான தாக்குதலை தொடர்ந்து அவர்கள் மேல் அனுதாபம் கொண்டிருந்த பிரிட்டிஷ் மக்கள் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய போதும் அவர்களுடன் பிரிட்டிஷ் படைகள் இணைந்த போதும் ஓரளவு ஆதரிக்க செய்தனர். ஆனால் தொடர்ந்து ஈராக் மீது போர் தொடர்ந்த போது செப் 11 தாக்குதல்களால் பாதிக்கப்படாத இந்நாட்டு மக்களிடன் ஏன் நாம் ஈராக்கியில் யுத்தம் புரியவேண்டும்? ஏன் நமது பிள்ளைகள் அங்கு உயிர் துறக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதுவே யுத்தத்திற்கு எதிரான எதிர்ப்பாகவும் மாறியது.

ஆனால் இப்போது நேற்றய தாக்குதலில் பிரிட்டிஷ் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதன் வலியை வேதனையை கண்கூடாக கண்டு அனுபவிக்கின்றார்கள். இது அவர்களுக்கு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களின் பிண்னணி மேல் ஒரு வெறுப்புணர்வையும் ஆத்திரத்தையுமே ஏற்படுத்தியிருக்கின்றது. அது காரண காரணிகளை ஆராயாமல் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் யுத்தம் போன்றவற்றை ஆதரிக்க செய்வதுடன் அதனை செய்யும் பிளேயரின் கரங்களை பலப்படுத்தும்.

உதாரணத்திற்கு ஒரு வீட்டில் அப்பா பக்கத்து வீட்டுகாரருடன் வீண் சண்டைக்கு போகும் போது மற்றய குடும்ப உறுப்பினர்கள் ஏன் வீண்சண்டை வேண்டாம் என்று அப்பாவை கண்டிப்பார்கள். அதன் பின்பு பக்கத்து வீட்டுக்காரர் வீட்டிற்கு வந்து அந்த வீட்டின் கடைக்குட்டியை ஆத்திரத்தில் அடி அடி என்று அடித்துவிட்டால் இப்போது வீட்டின் மற்றய உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்? அப்பா சண்டைக்கு போனதால் தான் இது வந்தது என்று ஆற அமர இருந்து அலசி ஆராய்ந்து நியாய அநியாயம் பேசுவார்களா அல்லது பக்கத்துவீட்டுகாரன் வீணாக கடைக்குட்டியை அடித்துவிட்டான் என்று ஆத்திரம் கொள்வார்களா? அந்த வீட்டில் அப்பா செய்தது நிச்சயம் அநியாயம் தான் தான் அதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் பக்கத்து வீட்டு காரர் வீட்டிற்கு வந்து ஏதுமறியாத தம்பியை அடித்தவுடன் எப்படி மனப்போக்கு மாறுகிறது பாருங்கள்?

The political impact of London bombs

http://news.bbc.co.uk/1/hi/uk_politics/4660185.stm

The truth, of course, is that no leader can ever guarantee security measures will be enough to stop an attack. That is the nature of terrorism.


The arguments over identity cards and detention without trial will take on a new urgency as ministers consider any new measures to take in the wake of the attacks.

There will also, needless to say, be questions over whether the war on Iraq made attacks on the UK more or less likely.

But the history of such terror attacks in the UK suggests that, in the short term at least, people are more likely to unite behind the government.

<b>All these doubts and fears will be raised in the future.</b> For now politicians are united with a common determination not to yield or indeed, over-react, to the bombings.


- Mathan - 07-08-2005

[quote=narathar][b]But the history of such terror attacks in the UK suggests that, in the short term at least

நாரதன் நீங்கள் இணைத்த செய்தியில் மேலே இருந்த வரியையும் ஊன்றி கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.


- narathar - 07-08-2005

ஷன் ,
இத் தாக்குதலுக்கு பின்னால் உள்ள அரசியலுக்கு அப்பால் , நான் இதைத் தவிர்பது இப்பொளுது எழுத நேரமின்மையே,2 ஆம் உலக யுத்தத்தையும் இப்போது நடைபெறும் சீர்மையற்ற யுத்தத்தையும் ஒப்பிடுவது சரியாகாது.இரன்டும் அரசியற் பின்னணியிலும் ,உபாய ரீதியிலும் வேறு வேறானவை.
இப்போது நடப்பது ஒர் வல்லாதிக்க கூட்டமைவுக்கும் ,பரந்துபட்ட ஆக்கிரமிக்கப்பட்ட,அடக்கப்பட்ட தேசிய வாதிகளிற்கிடையில் ஆனது ஆகும்.ஒரு சீர்மையற்ற யுத்ததில் எதிரி கண்ணுக்குத் தெரிவதில்லை.
நாடுகளுக்கிடையே ஆன யுத்தங்களில் எதிரி நாட்டின் ஆக்கிரமுப்புக் கெதிராகவே மக்கள் ஒருமுகப் படுகின்றனர்.
அனால் இங்கு பிருத்தானிய அரசு ஒரு ஆக்கிரமிப்பாளராகவே இனக்காணப்படுகிறது. இவ் ஆக்கிரமிபிற்கு எதிரான சமச் சீரற்ற யுத்ததின் எதிர் விளைவே இக் குன்டுவெடிப்பு.


- MUGATHTHAR - 07-08-2005

நீங்க எல்லோரும் பிரித்தானியா நாட்டிலிருந்து கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் நான் பில்லாடனின் பிறந்த நாட்டிலிருந்து இங்குள்ளவர்களுடன் கதைத்ததில் (சவுதி அரேபியர்கள்) இந்த தாக்குதல் டோனி பிளேயருக்கு சரியான அடியெனக் கூறுகிறார்கள்.. நான் சொன்னேன் ஈராக்கில் எல்லாம் உங்களின் இனமக்கள்தானே தற்கொலை குண்டுதாக்குதலால் இறக்கிறார்கள் உங்கள் இனத்துக்குள்ளேயே சியாட் முஸ்லீம் மக்களை அல் கொய்டா அமைப்பு கொல்லுகிறதே..என்று.....அவர்களின் இந்த நடவடிக்கைகள் ஒருபோராட்டம் அல்ல பயங்கரவாதமென யாருக்கும் தெரியும் அமெரிக்காவிற்கு ஆதரவான எல்லா நாடுகளிலும் இப்படியான தாக்குதல்கள் நடக்குமாம் சென்ற கிழமை அல்-கொய்டாவின் குழுத்தலைவரொருவர் சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார் அண்மையில் இங்கும் வேலையில்லாத இளைஞர்கள் இந்த அமைப்பில் சேருகிறர்கள் என்ற காரணத்தால் அரச நிறுவனங்களில் சவுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைகள் வழங்கப்படுகின்றன..ஆனால் இங்குள்ள மக்களின் மனநிலை அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவே உள்ளது அதுக்கு எடுத்துக் காட்டாக மன்னராட்சி நடக்கும் இந்நாட்டில் முதல்முதலாக இந்த வருடம் சிறு தேர்தல் (மேஜர்) மக்கள் வோட்டுபோட்டு நடைபெற்றது. மன்னராட்சி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பதற்காக மன்னர் தேர்தல் முறையை படிப்படியாக அறிமுகப்படுத்தி இளைஞர்களின் மனதைமாற்றமுற்பட்டிருக்கிறார்.. இதன் பலன்கள் பில்லாடனிலேயே தங்கியிருக்கிறது


- sinnappu - 07-08-2005

[quote=கறுணா]டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

இந்தக் கோணல் லண்டன் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன். நிலைமை மோசமடையும் பட்சத்தில் அல்-கொய்டா மீது இராணுவ நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். விரைவில் தூள்கிங் "முஸ்தபா" மூலம் அறிக்கை விட இருக்கிறேன். ....... புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......... கக்கா வருகிறது! பேந்து வாறன் ......

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


குறுக்காலை போவானின்ட வாய்க்கை குண்டு வெடிக்குதில்லையே :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

ஓய் வீணாபோனவன் உந்த பெரிய படத்தை மாத்தப்பு மொனிட்டரை தாண்டி படம் வந்து விழுது
:evil: :evil: :evil: :evil:


- ஈழத்துளி - 07-08-2005

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இப்படியானதொரு குண்டுவெடிப்பு இலண்டனில் நிகழ்ந்திருக்கிறது என்றால் அத்தகைய ஒரு குண்டுவெடிப்பை நிகழ்த்த தூண்டிய காரணி என்ன என்பதை பிரித்தானிய மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

அரசியல்வாதிகள் பொய்களைக் கூறியே ஈராக் மீது போர்தொடுத்தனர் அதன் விளைவே இந்த இலண்டன் குண்டுவெடிப்பு

இந்தக் குண்டுவெடிப்பின் விளைவாக பிரித்தானிய மக்கள் இலண்டன்வாழ் முஸ்லீம்களை சந்தேகக்கண்ணோடு பார்க்கத்தொடங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக தங்கள் நிலையை முஸ்லீம் சமுகம் விளக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது

இது அல் கய்டா வின் தாக்குதலாக இருக்கமுடியாது ஆனால் அல் கய்டாவின் விசுவாசிகள் அல்லது அதன் கொள்கைகளால் உந்தப்பட்ட வேறு குழுக்கலாலேயே நடத்தப்பட்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள் அதுவும் பிரித்தானியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களாலேயே நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். தான் பிறந்து வளர்ந்த நாட்டையே தாக்கத் துணியுமளவுக்கு அவர்களை தூண்டிய காரணி என்ன?

இவ்வளவுகாலமும் நடக்காத ஒன்று இப்பொழுது நிகழ்ந்திருக்கிறது இதற்காக அமெரிக்காவுடன் சேர்ந்து பயங்கரவாதத்தை அழிப்போம் என கங்கணங்கட்டுவது பிரச்சினையை சுமுகமான வழியில் தீர்க்க வழிவகுக்காது

பயங்கரவாதத்தை யுத்தத்தால் வெல்லமுடியும் என்பது யுத்தத்தை நாட்டிற்குள்ளே கொண்டுவரவே வழிவகுத்துள்ளது


- Danklas - 07-09-2005

CNN தான் பாவம் இரவு பகலா அழுதுகொண்டு இருக்குது.. ஆனாலும் பாருங்க ஈராக்கில ஒவ்வொரு நாளும் சரசரி 20,30 எண்டு போகிறதுகள் கடந்த லண்டன் வெடிப்போட கொஞ்சம் அடங்கிட்டுது.. அதுவரைக்கும் கொஞ்சம் சந்தோசம்.. லண்டன் மக்கள் தான் மக்களா?? ஈராக்கியரும் மக்கள்தானே.. இருந்தாலும் இறந்த லண்டன் வாழ் மக்களுக்கு மன வருத்ததை தெரிவித்துக்கொள்கிறோம்..


- adithadi - 07-09-2005

தென் ஆசியாவை சுனாமி தாக்கியபோது மிகவும் கருனை நெஞ்சம்படைத்த பிரித்தானியர்கள் இவ் பூமியிலேயே அதிகம் தானம் கொடுத்தவர்கள் இவர்கள்தான். எம் இனத்தவர்கள் மத்தியதரை நாடுகளில் வேலை பார்க்கும்போது நாய்களை போல் நடத்தப்பட்டோம்.
மதத்தின்பேரால் நடத்தப்படும் பயங்கரவாததிற்கு அடிஉதை கொடுத்து நசுக்கப்பட வேண்டும்.


- Vasampu - 07-09-2005

உண்மையில் அல்கய்தா போன்ற அமைப்புக்களை தங்கள் சுயநலங்களுக்காக வளர்த்து விட்டவர்கள் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தான். விதைத்த வினையை இன்று அறுவடை செய்கின்றார்கள். அதற்காக நடாத்தப்பட்ட தாக்குதல்களை நான் சரி என்று சொல்லவரவில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் உலக சண்டித்தனத்தை நிறுத்தினால் பல அழிவுகள் தடுக்கப்படுமல்லவா!!!!


- stalin - 07-09-2005

லண்டனில் குண்டுவெடிப்பு பிறகு ஏற்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள இணைய தளம்

www.timesonline.co.uk/londonbombs


- AJeevan - 07-09-2005

<b><span style='color:red'>Sri Lankan missing
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050708101650pict-5.jpg' border='0' alt='user posted image'>

Sanuja Barada Sangari who worked in the Royal Mail office in London had taken a train to work from Harlsdan, a suburb in the greater London area.
Speaking to Tamil service of the BBC her mother Ruth Rupawathi said "we have contacted many telephone help lines but we are yet to receive any information"

Rupawathi further said that they have visited all most all the hospitals in London in search of her daughter.

There have been 49 confirmed fatalities in the bomb attacks on tube trains and a bus - and concerns remain for a further 25 missing people.
London -After the blast

Meanwhile the Sri lanka High Commission in London has established a helpline to assist Sri Lankans who need to ascertain the safety of any family members in London.

The help line telephone numbers are
[b]00 44 2072621841
and 00 44 2072620875.</b>
The High commissioner in London Kshenuka Seneaviratne speaking to Sandeshaya said that she is in close contact with the British Foreign Office and said it would take a few more days to get a complete list of victims.
So far no victims have been formally identified - and police warn that the process, due to begin on Saturday, could take weeks to complete.</span>

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...09_sanuja.shtml

[quote][size=18]ஹால்ஸ்டன் பகுதியில் வசிக்கும் <b>சணுஜா வரதசங்கரி </b>(26) யைக் காணவில்லை என பெற்றோர் தேடி வருகின்றனர். இவர் கிங்குரொஸ் பகுதி ரோயல்மெயிலில் வேலை செய்யப் போனதாகவும் சணுஜா பற்றிய விபரங்கள் தெரியாமல் பெற்றோர் தேடிவருகின்றனர்.

அராலியைச் சேர்ந்த <b>பிரவீன்</b>, சென்ட் தோமஸ் வைத்தியசாலையில் இருந்து வெளியாகியிருக்கிறார்.

பலர் பற்றிய தகவல்கள் தெரியாமல் இருக்கிறது..............


- Thala - 07-09-2005

Quote:Sanuja Barada Sangari who worked in the Royal Mail office in London

Royal Mail ல எந்த office எண்டு எதாவது தெரியுமா. அனேகமாக paddington (w1) அது சரியா இல்லை வேறா தெரிந்தால் சொல்லுங்கள்..


- AJeevan - 07-09-2005

Thala Wrote:
Quote:Sanuja Barada Sangari who worked in the Royal Mail office in London

Royal Mail ல எந்த office எண்டு எதாவது தெரியுமா. அனேகமாக paddington (w1) அது சரியா இல்லை வேறா தெரிந்தால் சொல்லுங்கள்..




<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41285000/jpg/_41285043_kingxposter203.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:23pt;line-height:100%'><b>லண்டன் குண்டு வெடிப்பில் காணாமல் போன இலங்கைத் தமிழ்ப் பெண்</b>

காணாமல் போனவர் படங்கள்
கடந்த வியாழக் கிழமை லண்டன் சுரங்க ரயில்களிலும், பஸ் வண்டியொன்றிலும் நடந்த குண்டுத் தாக்குதலை அடுத்து தமிழ் பெண் ஒருவரைக் காணவில்லை.

காணமால் போயுள்ள 26 வயதான சயனுஜாவின் தாயார் ரூத் ரூபவதி பரதசங்கரி அவர்கள் தனது மகளைத் தேடித் தான் பல மருத்துவ மனைகள், அவசர உதவிப் பிரிவுகளுடன் பேசியதாகவும், எவரிடமிருந்தும் உதவிகரமான தகவல்கள் எவையும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்.

சம்பவம் நடந்த நேரம் அப்பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த தன் மகள் \"ஒரு வேளை அந்த பாழாய்ப் போன தற்கொலைக் குண்டுதாரி இருந்த பஸ்ஸிற்குள் ஏறினாரோ தெரியாது\" என்று அழுதபடி தமிழோசைக்கு தந்த பேட்டியில் கூறினார் யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்தத் தாய்.</span>

[size=18]தமிழோசையில் அவரது தாயாரது பேட்டியைக் கேளுங்கள்:

http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil...tamil_worldnews


- Thala - 07-09-2005

அவர் Royal mail ன் கிளை நிறுவனம் postoffice ல வேலை செய்வதாக தாயார் சொல்கின்றார் old street என்னும் இடத்தில்.

(நானும் royal mail லில தான் வேல செய்யுறன் ஆனால் prosersing office ல king croes க்கு பக்கத்திலதான்)

நன்றி அண்ணா....


- SUNDHAL - 07-10-2005

லண்டன் தொடர் குண்டு வெடிப்பில் இரட்டை மாடி பஸ் ஒன்றும் வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் பஸ் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உயிர் பிழைத்ததும் ஓடிவிடாமல் காயமடைந்தவர்களுக்கு உதவியும், உயிரிழந்தவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டார்.

லண்டன் சுரங்க ரயில்பாதை உட்பட 4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. மக்களின் முக்கிய போக்குவரத்து தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இரட்டை மாடி பஸ் ஒன்றும் அடக்கம். பஸ்சில் நடந்த குண்டு வெடிப்பில் அதில் பயணம் செய்தவர்களில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர். அதிர்ஷ்டவசமாக பஸ் டிரைவர் உயிர் தப்பினார். உயிர் பிழைத்ததும் தப்பித்தோம் என்று ஓடி விடாமல் மனித நேயத்துடன் அவர் பணியாற்றியுள்ளார்.

இது குறித்த செய்தி பஸ் கம்பெனியின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

49 வயதாகும் அந்த டிரைவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. டிரைவர் கூறியதாக வெப்சைட்டில் வெளியிடப் பட்ட தகவல்கள் வருமாறு:

சுரங்க ரயில் பாதைகளில் குண்டு வெடிப்பு நடந்ததால் பஸ் வழித்தடம் மாற்றி விடப்பட்டது. பஸ் சென்று கொண்டு இருக்கும் போது முதலில் பயங்கர சப்தம் கேட்டது. அப்போதுதான் பஸ்சில் குண்டு வெடித்து ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதை அறிந் தேன். அனைத்தும் என்பின் னால் நடந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முயன்றேன். குண்டுவெடிப்பில் ஏராளமானோர் காயமடைந்தனர். என்னைச் சுற்றிலும் பலர் இறந்து கிடந்தனர். முதலில் நான் எப்படி உயிர் பிழைத்தேன் என எண்ணினேன்.

போலீசார் என்னை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர். அடுத்து தாக்குதல் ஏதும் நடக்கமால் இருக்க நடவடிக்கையில் இறங்கி இருந்தனர். காயமடைந்தவர்களுக்கு உதவியும், பலியானவர்களை மீட்கும் நடவடிக்கையி<லும் ஈடுபட்டேன். இத்தகைய ஆபத்திற்குப் பின்பும் எனது வேலையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. நானும், லண்டனின் மற்ற டிரைவர்களும் தொடர்ந்து வேலையில் ஈடுபடுவோம். இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம். எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டோம். இவ்வாறு டிரைவர் கூறியதாக வெப்சைட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


- stalin - 07-12-2005

இன்று லணடன் குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஒருவரை கைது செய்துள்ளனர். மேற்கு ஜரோப்பாவில் நடந்த முதல் தற்கொலை தாக்குதல் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் .தாக்குதல சம்பவங்கள் பற்றி பொலிசார் முன்னேற்றகரமான முடிவுகளை இன்று எட்டியுள்ளனர்


- narathar - 07-12-2005

லீட்ஷ் என்னும் வட நகரத்தில் இன்று பொலிசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் பல தடயங்களை கண்டெடுத்துள்ளனர்.தாக்குதல் மேற்கொண்ட நான்கு இளஞ்ஞர்களும் இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள்.
ஒருவரின் பெற்றோர் அவரைக் காணவில்லை என்று பொலிசில் கொடுத்த முறைப்பாட்டில் இருந்தும் மற்றும் தாக்குதல் நடந்த பஸ்ஸில் இருந்து கிடைத்த தடயங்கள் மூலமே துப்புக் கிடைத்தது.
இச் சம்பவமானது ஆசிய/முஸ்லிம் இழஞ்ஞர்கள் எவ்வளவு தூரம் பிருத்தானிய சமூகத்திடம் இருந்து விலகி உள்ளனர் என்பதையும் மேலும் எத்தனை பேர் இவ்வாறு உள்ளனர் என பல கேள்விகளை உரிவாக்கிஉள்ளது.பிருத்தானியாவில் பிறந்து ,வளர்ந்து படித்துள்ள இவ் இளஞ்ஞரின் செயலை
வெறும் முஸ்லிம் அடிப்படைவாதம் என புறந்தள்ளி விட முடியாது.3 ஆண்டுகளிக்கு முதல் வட நகரங்களில் BNP போன்ற நிற வெறி அமைப்புக்களினால் உருவான கலவரங்களையும், இச் சம்பவங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டி உள்ளது.இவ் இளஞ்ஞர்கள் சாதாரண நடுத்தர குடும்பங்களில் இருந்து வருபவர்களாக இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.


- AJeevan - 07-12-2005

[size=16]<b>இலண்டன் குண்டுதாரிகள் நால்வருமே பலி எனச் சந்தேகம்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41279000/jpg/_41279593_bus_top.jpg' border='0' alt='user posted image'>

லண்டன் மாநகரில் கடந்த வியாழக்கிழமை நடந்த நான்கு வெடிகுண்டுத் தாக்குதல்களில் குண்டு வைத்தவர்கள் என்று கருதப்படும் நால்வருமே அந்தக் குண்டுத் தாக்குதல்களில் பலியாகிவிட்டார்கள் என்று தாம் கருதுவதாக இங்கே பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுரங்க ரயில்களில் நடந்த மூன்று வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் மூவரும் தற்கொலைக் குண்டுதாரிகள் என்றும் தாம் சந்தேகப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை டாவிஸ்டொக் சதுக்க பேருந்து குண்டுத் தாக்குதலில் பலியான இந்தக் குண்டை வைத்தவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்தாரா என்பது பற்றி நிச்சயமாகத் தெரியவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன

BBC

லண்டன் குண்டுவெடிப்பு கூடுதல் செய்திகள் ஆங்கிலத்தில்...
http://www.blogomonster.com/ajeevan/