Yarl Forum
கைக்கூ கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கைக்கூ கவிதைகள் (/showthread.php?tid=7785)

Pages: 1 2 3 4 5 6 7


- aathipan - 10-07-2004

மஞ்சள் கம்பளம் விரித்து
வசந்தகாலத்திற்கு வரவேற்பு

துணைதேடிக்கூவும் குயில்


- aathipan - 10-07-2004

தோட்டத்தில் மேயுது
பஞ்சடைத்த கன்றுக்குட்டி

அது அம்மா என்றழைத்து நாளாயிற்று


- aathipan - 10-07-2004

தண்ணீர் வற்றிய குளம்
கொக்குகள் "கட்வாக்" செய்கின்றன..


- aathipan - 10-07-2004

என்ன கவலை?
கள்ளுப்பானைகளுடன்
பனைமரங்கள்


- aathipan - 10-07-2004

"நாய்கள் ஜாக்கிரதை" அறிவிப்பு
நாய்களுக்கு ஏன் எச்சரிக்கை?


- வெண்ணிலா - 10-07-2004

<b>நான்கு
கண்கள்
மோதியதால்
ஏற்பட்ட விபத்து </b>
<b>காதல்</b>


- வெண்ணிலா - 10-07-2004

<b>சந்ததிக்காய்
கைச்சாத்திடப்படும்
பகிரங்க
ஒப்பந்தம்</b>

<b>திருமணம்</b>


- வெண்ணிலா - 10-07-2004

<b>தாம்பத்திய
தவத்தில்
கிடைத்த வரம்</b>
<b>குழந்தை</b>


- Sabesh - 10-30-2004

குடைக்குள் மழை -சினிமா
குடிசைக்குள் மழை
வாழ்க்கை!

கதவை தாழிட்டுப் படுக்கிறேன்
எப்படி வந்து நுழைகிறாய்
கனவில்!

வறுமையிலும்
வயிறு நிறைந்திருந்தது
கர்ப்பிணிப் பெண்!

கட்டில் ஆடாமல்
தொட்டில் ஆடியது...
சோதனைக்குழாய் குழந்தை...!

இதொண்டும் நான் எழுத இல்லை...தினகரன்.கொம்மில சுட்டது
-நன்றி: தினகரன்.கொம்-


- kavithan - 10-30-2004

Quote:இதொண்டும் நான் எழுத இல்லை...தினகரன்.கொம்மில சுட்டது
-நன்றி: தினகரன்.கொம்-

அட அப்படியா ரொம்ப நன்றி...


- Jaya - 11-18-2004

சொல்லைத்தேடி அகராதிக்குள் தொலைந்து போனவன்.

கவிஞனாகாமல்க்கலைந்த கனவான கனவான் ஒருவன்

குறுங்கவிதை
குரங்குவித்தை
அரங்கவிதி அற்ற
அரங்கவித்தை

Jaya <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Jaya - 11-22-2004

என வீடடுததகரககூரையில தாரைமழையின தாளம

மேகததின மிருதஙகததனியாவரததனம


Jaya


- Om_shanthi - 11-26-2004

பனித்துளிகள்
எப்படித் தூய்மைப்படுத்தப்படுகிறது
உலகின் தூசிகளை?


- kuruvikal - 11-26-2004

வரிப்புலி வீரம் வேகம் விவேகம்
வாங்கிய மைந்தன் வையகத்துள் விடிவெள்ளியாய் -
பிரபாகரன்...!


- kuruvikal - 11-26-2004

கூந்தலுக்குள் குடியிருந்து
ஜாடைகாட்டும் என்னவள் அழகு
மலர்...!


- Om_shanthi - 11-26-2004

பூச்சாண்டி பொம்மை
ன்நெல் வயலில்
எத்தனை விழிப்புணர்வற்று !!
எத்தனை உபயோகமாய் !!


- Om_shanthi - 11-26-2004

உதிர்ந்த இலை
கிளைக்குத் திரும்புகிறதோ?
வண்ணத்துப் பூச்சி.


- kuruvikal - 11-26-2004

சூனியமாய்ப் போனால்
உச்சரிக்கும் வார்த்தை
ஓம் சாந்தி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Om_shanthi - 11-26-2004

நீயாய்த்தான் விழி மலரவேண்டும்
நிலவொளியில் குளிக்கும்
நீள்வரி மலர்களைத் தரிசிக்க !


- Om_shanthi - 11-26-2004

இதைப் புரிந்து கொள்..
சூனியமே இருட்டு..
அந்த இருட்டில் சென்றால்தான்
ஒளியை தரிசிக்கலாம் !! 8)