![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- Thala - 02-09-2006 ஆகா...! மாட்டினது நான் இல்லை நீங்கள் தான்...! இணையம் சீரளிக்கவில்லை மனிதன் தான் சீரளிக்கிறான் என்கிறீர்கள். அதுக்கு இணையத்தை இயக்குவதால் எண்று காரணமும் சொல்லும் நீங்கள். இணையத்தால் எப்படி நன்மை அடையலாம்...??? இணையத்தை இயக்கும் மனிதர்களால்தானே நன்மை அடக்கிறார்கள்.......! நன்மை அடைவதுக்கு மனிதர்கள் தானே காரணம்...! இணையத்தால் அப்போ என்னதான் செய்யமுடியும் என்கிறார்கள் உங்கள் அணியினர்.... இணையம் என்பது ஆக்கும் பொறுள் எண்று வாதிட்டுவதானால் இணையம் எண்று சொல்லாமல் ஆக்கிய மனிதன் எண்று ஆரம்பியுங்கள் பொருத்தமாக இருக்கும்.... விதண்டாவாதம் தத்துவம் எல்லாம் பேசிக்காலத்தை போக்காமல் நிதர்சனத்துக்கு வாங்கள்....! <b>புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?</b> இந்த தலைபை நீக்கிவிட்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தை <b>ஆக்கிய மனிதனால்</b> நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? எண்று மாற்றுங்கள் உங்கள் வாதத்துக்குப் தக்கவாறு பொருத்தமாக இருக்கும்... அதுக்கு பதில் அளிக்க எமதணி தயாராக இருக்கிறது...! - Thala - 02-09-2006 varnan Wrote:சீரழிகிறார்கள் - ஒரு சிலர் - தீமையான முறையில் அதை இயக்க போய்-! அதற்கு - அந்த ஒரு சிலரே பொறுப்பு என்று அர்த்தப்படுத்துகிறார்கள் எங்கள் - அணியினர்! எது புலம் பெயர் இளையோர் நன்மை அடகிறார்கள் எண்ற காரணத்துக்காகவா....????? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தலைப்பை விடுத்து பொதுவாக பேசுவதானால் எங்களால் புள்ளிவிபரத்தோடு இணைய சீரளிவுகளை பட்டியல் இட முடியுமே... ! உதாரணத்துக்கு ஒண்று... போன வருடக்கடைசிவரை 60 கோடி ஸ்றேலிங்க் பவுண்ஸ் ID திருட்டு மூலம் இணையத்தால் களவாடப்பட்டிருக்கிறது...! அதவிட EBEY வளியாக 70% மான திருட்டுப் பொருட்கள் விற்பனையாகிண்றன... இதன் சாதகத்தன்மை காரணமாக , இலத்தித்ரனியல், வாகன உதிருப்பாகங்களின், திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாக ஸ்கொட்லான் யாட் பேச்சாளர் சொன்னது... , இவை எல்லாம் சொல்ல நாங்கள் வரவில்லை காரணம் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் பேசும் சீரளிவு நிலைக்கு நாங்கள் போக விரும்பவில்லை, உங்களையும் சீரளியாமல் கட்டுப்பாடாய் இருக்க வேண்டு கிறோம்..... - வர்ணன் - 02-09-2006 [b]தல சொன்னது: வாங்கையா..! அது சரி இணையத்தால நன்மையாகத்தான் செய்யத்தெரியுமாம்...! தீமை எண்றால். அது தனிமனித தவறாமில்ல.....! அரவேக்காட்டுத்தன மாய் சொல்ல இணையம்தான் சரியான இடம்... இதுக்கு வக்காலத்து வேறயா..???? இணையம் தானாக இயங்கவில்லை இயக்குவதும் மனிதன் நீங்கள் தானே அப்பிடி ஆரம்பிச்சீங்க தல :wink: ] ஒரு தலைப்பின் கீழ் வாதம் வைச்சதால் - அவர் தனிமனித - என்று அர்த்தப்படுத்தியது - இளையோர் என்பதில் அடங்குகின்ற தனிநபர்- :roll: நீங்கள்தானே அதை மனிதன் என்ற சொல்லுக்குள் இழுத்துக் கொண்டு போனீங்க :roll: - அதுக்கு பதில் சொல்லபோய் - எங்கேயோ போய் நிக்கிறம். :? சரி தல ஓவர் ரென்சனில நிக்கிற மாதிரி தெரியுது - எதுக்கும் இண்டைக்கு போட்டு நாளைக்கு வாறன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மற்றும்படி தலைப்பை பற்றி ஒண்டும் கதைச்சிடாதீங்க செல்வமுத்து ஆசிரியர் உண்டு இல்லயென்று பண்ணிடுவார் :wink: - Thala - 02-09-2006 varnan Wrote:[b]தல சொன்னது: மேலே நான் குறிப்பிட்ட விடயம் உங்கள் அணி ரசிகை சொன்னது தான் எனது கருத்து இல்லை... - வர்ணன் - 02-09-2006 <b>மேற்கோள்: எது புலம் பெயர் இளையோர் நன்மை அடகிறார்கள் எண்ற காரணத்துக்காகவா....????? </b> ஆஹா புரிஞ்சிடுச்சு- இன்னிக்கு என்னை ஒரு வழி பண்ணணும் எண்டுதான் வந்திருக்கிங்க போல :wink: நான் சொல்ல வந்தது - நன்மையென்று கண்டதினால் -உலகம் இன்னும் விட்டுவச்சு இருக்கிற இணய வசதியை- புலம்பெயர்ந்த இளையோரும் பாவிப்பதால்- நன்மை அடைகின்றனர் என்ற அர்த்ததில் - ! நீங்கள் கேக்கிறது(லொல்லு பண்ணுறது) - புலம்பெயர்ந்து வந்த எமது இளையோர்கள் நன்மயடைவதால் - உலகம் விட்டுவச்சிருக்கா?- எண்டு -உலகத்தில யாரும் இப்பிடி ஒரு கேள்விய கேப்பாங்களா- நல்லவா இருக்கு? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எதுக்கும் வீட்டைசுத்தி 4 தரம் ஓடினால்தான் இந்த தலைச்சுத்து நிக்கும் போல கிடக்கு எனக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 02-09-2006 சரி.. மனிதனாகத்தான் இருக்கட்டுமே.. இப்ப என்னாங்கிறேன்.. இணையம் மனிதனின் சிருஷ்டிதானே.. கண்ட கண்ட மனுசரை எல்லாம் வீட்டுக்கை கொண்டு வாறது இந்த இணையம்தானே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- narathar - 02-09-2006 சோழியன் இணயத்தில கண்ட கண்ட மனிசரை நீங்க கூப்பிட்டாத் தான் வருவினம், நீங்க கூப்பிடாட்டி அவை ஏன் வருகினம். நீங்கள் மவுசை அமத்தினாத் தான் அவை வருவினம், இங்கே பயன் பெறுவதும்,சீரழிவதும் உங்கள் கையில் என்பதுவே எமது வாதம்.தல மனிதன் இணயத்தை உருவாக்கியது அதனால் பயன் பெற ,இல்லை நான் சீரழியப் போறன் எண்டா அது உங்கட விருப்பம். நாம் இங்கே தீர்மானமாகச் சொல்லவது இணயம் என்ற தொழில் நுட்பமானது உயர்வடைய விரும்புவோரை உயர்வடயச் செய்யும், சக்தி வாய்ந்தது என்பதுவே. நன்மை அடய விரும்புவோரின் செயற்படும் திறனை அது பல்மடங்காக்கிறது என்பதுவே. மேலும் தல நீங்கள் இணயப் பாவனை தடை செய்யப் பட்டுள்ளதாகக் கூறி உள்ள தகவல் பிழயானது என்பதயே சுட்டிக் காட்டி உள்ளேன்.மேலும் கண்காணிக்கும் செயலிகள் சிறுவர்களை வழி நடத்த அவர்கள் உபயோகிக்கும் கணணிகள் சேவர்களில் ஏற்றப் பட்டுள்ளன,இதுவே நடைமுறை இதனையே நான் எழுதி உள்ளேன்.எழுதியவற்றை மீண்டும் வாசிச்சுப் பாக்கவும்.சிறுவர்கள் வழி நடத்தப் பட வேண்டியவர்கள், அவர்களுக்கான பாதுகாப்பு நிஜ உலகிலும்,இணய உலகிலும் பெரியவர்களாலேயே கொடுக்கப் படுகிறது.இதனை நடை முறைப் படுத்த தொழில் நுட்ப ரீதியான ஏற்பாடுகள் இணயத்தில் உண்டு. இணயத்தை மனிதர் சீரழித்தாலும் தவறாகப் பயன் படுத்தினாலும் அதனை வழி நடத்த கட்டுப் படுத்த முறமைகள் இணயத்தில் உண்டு.முற்று முழுதாக சிறுவர்களோ அன்றி இளயவர்களோ இணயப் பாவனைக்கு தடை செய்யப் படாததற்கான காரணம் அதன் கற்றலுக்கான, நமைக்கான பயன்பாடுகள் மறுதலிக்க முடியாதவை என்பதாலேயே.அதனாலெயே இங்கிலாந்தில் அரசாங்கம் இணயத்தை கற்றல் செயற்பாடுகளுக்கான ஒரு முக்கியமான தொழில் நுட்பமாக கருதி ஆரம்பப் பாடசாலைகள் தோறும் அதற்கான வசதிகளை வழங்கி வருகிறது. - narathar - 02-09-2006 தல தந்த இணப்பிற்கு நன்றி,என்ன நீங்க தந்த இணைப்ப நீங்க வாசிச்சிருந்தா, அந்த இணைப்பைத் தந்திருக்க மாட்டியள் எண்டு நினக்கிறன்...இங்க அதன் அறிமுகப் பந்தியப் போடுறன் வாசிச்சுப் பாருங்க. Whatever your age, the Internet is a great place to hang out. It’s not only fun, but it lets you keep in touch with friends and family and provides an enormous amount of information. There are lots of great educational sites as well as places to keep up with your favorite hobbies, music, sports, and much more. If you’re a teen, we probably don’t need to sell you on the benefits of the Internet. Many of you know far more than your parents or even teachers about the wonders of cyberspace. If you’re a parent, talk to your children about “the Net” and — if you need to learn more — see if they can help you. Either way, it’s important for teens and parents to share knowledge. You have something to learn from each other — if not about the Internet, then about life in general, how to make good decisions, and how to look at information critically. - sOliyAn - 02-09-2006 நாரதரே! தங்களுடைய கருத்தின்படி பார்த்தால் மனிதன் எந்த ஒரு காரணியாலுமேயே சீரழிய முடியாதே! 'நண்பர்களை நாடுவதால் கெடுகிறான்.. சினிமாவைப் பார்ப்பதால் கெடுகிறான்.. இவ்வாறு ஒரு மனிதன் கெடுவதோஇ சீரழிவதோ அவனது கையில்தானே இருக்கிறது... இது இவ்வாறு இருக்க.. பிறகேன் மனிதனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.. உதாரணமாக திரைப்படங்களுக்கு வயதெல்லையைப் போடவேண்டும்.. அது திரைப்படம்தானே என்று மனிதனுக்கு தெரியாதா? அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால்தானே சில கட்டுப்பாடுகளை போடுகிறார்கள்.. உங்கள் பார்வையில் புறக்காரணிகளால் மனிதன் சீரழியவில்லை.. தன்னால்தான் சீரழிகிறான் என்றால்இ இதை திருப்பிப்போட்டால் பெறும் நன்மைகளுக்கும் பொருந்தும்தானே.. ஆகஇ உங்கள் கருத்துப்படி இந்த விவாதமே அர்த்தமில்லாதது ஆகிறது அல்லவா?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 02-09-2006 sOliyAn Wrote:நாரதரே! தங்களுடைய கருத்தின்படி பார்த்தால் மனிதன் எந்த ஒரு காரணியாலுமேயே சீரழிய முடியாதே! உண்மைதான் அண்ணா...ஆனால் நன்மையையே இனங்காணத் தெரியாத சிந்தனை ஓட்டத்தில் மனிதர்கள் இருக்கும் போது எப்படி..."நன்மை" மனிதனைச் சென்றடையும்..! இப்போ ஒரு கொலைஞனுக்கு அவனின் பார்வையில் அது நன்மை...கொல்லப்பட்டவனின் சார்பில் தீமை...! இணையத்தை உருவாக்கினதும் மனிதன் தான்..ஆனால் அது கட்டுப்பாடுகளை மீறி சிலருக்கு "தவறான நன்மைகளை" அளிக்கும் போது அது சமூகத்தில் பெரும்பானவருக்கு தீமையாகி விடுகிறது. உதாரணத்துக்கு ஒரு பள்ளி மாணவன் தனக்குரிய மென்பொருள் உருவாக்கும் அறிவை வளர்க்க ஒரு கணணி சைரஸை உருவாக்கிறான் என்று வையுங்கள்..அவனைப் பொறுத்தவரை அது சாதனை..ஆனால் அதுவே வலையில் பயணித்து கணணிகளை தரவுகளை சேதப்படுத்தும் போது அது தீமை என்றுதான் கணிப்பிடப்படுகிறது..! எனவே பெறப்படும் விளைவின் தாக்கம் என்பதன் அடிப்படையிலேயே நன்மை தீமை உணரப்படுகிறது..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 02-09-2006 sOliyAn Wrote:நாரதரே! தங்களுடைய கருத்தின்படி பார்த்தால் மனிதன் எந்த ஒரு காரணியாலுமேயே சீரழிய முடியாதே! ஆ அதைத் தானே திருப்பத் திருப்பச் சொல்லிக் கொண்டிருகிறம். மனிதருக்கு கட்டுப் பாடுகளை விதிப்பது யார்?அதுவும் மனிதர் தானே?சட்டங்கள் இயற்றுவது யார்?கட்டு பாடுகளை சமூக நியதிகளை ,பாதுகாப்பை உருவாக்குவது யார்?மனிதர் தானே? ஆகவே சிறுவர் ,இளயவர் சீரழிவோம் என்று அறியாது செயற்பட விழையும் மனிதரைக் கட்டுப் படுத்த கட்டுப் பாடுகளை உருவாக்குவதும் மனிதனே.ஆகவே எமது கேள்வி இவ்வாறான கட்டுப் பாடுகளை உருவாக்க இணயத் தொழில் நுட்பத்தில் வசதிகள் இருக்கும் இடத்து அவற்றைப் பயன் படுத்தி இணயப் பாவனையை பயன் உள்ளது ஆக்கலாமே? என்பதுவே.இங்கே அதனை நிராகரித்து ,இணயம் என்னும் ஒரு சடப் பொருள் எம்மைக் கட்டுப் படுத்துகிறது என்று அதனை காரணி ஆக்கி வாதிட வேண்டாம் என்பது தானே எமது வாதம். அவ்வாறு மனிதர்களால் ஏற்படும் சீரழிப்புக்கள் மனிதர்களால் அகற்றப் பட மிகுதியாய் இருப்பவை பயன்கள் மட்டுமே அன்றி வேறென்ன?இதற்கெல்லாம் ஒரு விவாதம் இனியும் தேவயா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 02-09-2006 <b>எங்க பூனைக்குட்டியைக் காணல? பூனைக்குட்டி எப்ப உங்கட கருத்தை வைப்பீர்கள்?> இன்று வைத்தீர்கள் என்றால் உதவியாக இருக்கும். நன்றி</b> - poonai_kuddy - 02-09-2006 ஓ வைக்கிறன் வைக்கிறன்................ இப்பதான் நீங்க எழுதினத வாசிச்சனான்........... இண்டைக்கு வைக்கிறன் அக்கா..... முக்கியமான வேலையொண்டு இருக்கு அத செய்திட்டு எழுதுறன் அக்கா - Rasikai - 02-09-2006 poonai_kuddy Wrote:ஓ வைக்கிறன் வைக்கிறன்................ இப்பதான் நீங்க எழுதினத வாசிச்சனான்........... இண்டைக்கு வைக்கிறன் அக்கா..... முக்கியமான வேலையொண்டு இருக்கு அத செய்திட்டு எழுதுறன் அக்கா நன்றி பூனைக்குட்டி - Thala - 02-10-2006 [quote=narathar]மேலும் தல நீங்கள் இணயப் பாவனை தடை செய்யப் பட்டுள்ளதாகக் கூறி உள்ள தகவல் பிழயானது என்பதயே சுட்டிக் காட்டி உள்ளேன்.<b>மேலும் கண்காணிக்கும் செயலிகள் சிறுவர்களை வழி நடத்த அவர்கள் உபயோகிக்கும் கணணிகள் சேவர்களில் ஏற்றப் பட்டுள்ளன,இதுவே நடைமுறை இதனையே நான் எழுதி உள்ளேன்.எழுதியவற்றை மீண்டும் வாசிச்சுப் பாக்கவும்.சிறுவர்கள் வழி நடத்தப் பட வேண்டியவர்கள், அவர்களுக்கான பாதுகாப்பு நிஜ உலகிலும்,இணய உலகிலும் பெரியவர்களாலேயே கொடுக்கப் படுகிறது.இதனை நடை முறைப் படுத்த தொழில் நுட்ப ரீதியான ஏற்பாடுகள் இணயத்தில் உண்டு</b> நீங்கள் சொல்வதுதான் நான் சொன்னதும்... சிறுவர் இணையத்தால் சீரளிய மாட்டார்கள் இணையம் நன்மையானது எண்றால் எதற்க்காக கண்காணிப்பு செயலி, எதற்க்கு வளிநடத்தல்கள்...??????????????? மாணவர்களிடம் கணிதபாடப் புத்தகத்தை எப்படி கையில் கொடுத்து படிக்க விடுகிறார்களோ அப்படி விட வேண்டியதுதனே..! ஏன் செய்வதில்லை...??????? :roll: :roll: :roll: - sOliyAn - 02-10-2006 நாரதரே! கட்டுப்பாடுகளை கேட்கும் நிலையிலா மனிதர் வாழ்கிறார்கள்.. கட்டுப்பாடுகளைக் கண்டதும் அதை தகர்த்து, அதனுள் என்ன இருப்பது என அறிய முயல்வதுதானே பெரும்பாலான மனிதர்களது இயல்பு.. அதுவும் தமிழ் இணையங்களைப் பொறுத்தளவில் கட்டுப்பாடுகள் எங்கே உள்ளன.. அதை உருவாக்க வேண்டும் என எந்த கணனி வித்தகர் நினைக்கிறார்.. அவருக்கு வருமானம் வந்தால் சிலவேளை நினைக்கலாம்.. சிகரட் விளம்பரத்தில் புகைத்தல் தீங்கு எனக் குறிப்பிட்டார்கள்.. தற்போது பெட்டிகளிலும் அதன் பாதிப்புகளைக் குறிப்பிடுகிறார்கள்.. குறிப்பிட்டுக்கொண்டே புதிய புதிய வகைச் சிகரட்டுகளை அறிமுகப்படுத்துகிறார்கள் அதற்காக..எவனாவது சிகரட் புகைக்காமலிருக்கிறானா என்றால்.. கேள்விக்குறியே.. இங்கேயும் நடைமுறையில் சிகரட்தான் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிறது என்கிறோமே தவிர.. மனிதன் சிகரட்டால் கேட்டை அடைகிறான் என்று கூறுவதில்லையே.. இப்படி நுணுகஇகுக் காட்டியாக பிழை பிடிக்க முற்பட்டால் பலவற்றில் பிழை பிடிக்கலாம். இப்பட்டி மன்றத்தின் நோக்கம் எதை நோக்கியது என்பதை பகுத்தறிந்தால்.. இப்படியான கருத்துகளுக்கு இடமேற்படாது எனக் கருதுகிறேன்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- poonai_kuddy - 02-10-2006 என்ர கருத்த வச்சிட்டன் அக்கா..........கூட எழுதினாத்தான் அடுத்தமுறை பட்டிமன்றத்தில கடைசியா கதைக்கலாம் எண்டுறதால கொஞ்சம் கூட எழுதிட்டன்.......தப்பெண்டா மன்னிச்சுக்கொள்ளுங்கோ.......................... மற்றது நான் பள்ளியில இருந்தும் வேலையிடத்தில இருந்தும் தான் களத்துக்கு பவாறதால கிடைக்கிற நேரத்தில வாசிக்கிறதுகளுக்கு அவசர அவசரமா பதில எழுதிட்டு போயிடுவன்........ ரைப் பண்ணுற வேகத்துக்கு கீபோர்ட் ஒத்துவாறேல........... அதால வேணுமெண்டு பிழை விடுறேல.........டன் அண்ணா அண்டைக்கு என்னை உணர்வுள்ள களத்துக்கு போகச் சொல்லிட்டார்......அதான் ரோசம் வந்திட்டு நமக்கு இப்பிடியும் தமிழ் எழுதத் தெரியுமெண்டு காட்டத்தான் நம்மட அந்த கட்டுரையில முடிஞ்சளவு தூய எழுத்துத் தமிழில எழுதினான்.......அதுவும் தப்பெண்டா மன்னிச்சிருங்கோ.......எப்பிடியும் பேச்சுத்தமிழில தான் நமக்கு ஈசியா வேகமா எழுதலாம்......நிறைய பிரெஞ்சு வார்த்தையளுக்கு தமிழ் தெரியாம இருந்திச்சு......கடைசியா துசி தான் உதவி செஞ்சார்.........சோ..... நம்மட வேலை முடிஞ்சுது......இனி மிச்சத்த தலைவரண்ணா பார்த்துக்கொள்ளுங்கோ..............குட் நைட்.................... - sOliyAn - 02-10-2006 முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன் புhனைக்குட்டி அவர்களே! ஏற்கெனவே தாங்கள் எழுதிய கருத்துகளை வைத்து தங்களை சாதாரணமாக எடைபோட்டதற்கு. எடுத்துக் கொண்ட விடயம்.. அதை வரையறுத்த விதம்.. ஆரம்பித்த முறை.. அடுத்தடுத்து கருத்துகளை முன்வைத்த பாங்கு.. முடித்த பாங்கு.. எல்லாவற்றிலுமே பிரமிக்க வைத்துவிட்டீர்கள். உண்மையிலேயே ஒரு அணித்தலைவரது பணியை தாங்கள் மிக இலாவகமாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். தங்களுடைய எழுத்தாற்றல் பல்துறையிலும் வியாபித்து.. பலவற்றை தமிழுக்கு தரவேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- மேகநாதன் - 02-10-2006 "நீட்டி முழங்குவது" வாதம் என்றால் ....????? எதிரணியின் சிலர் வாதங்களையும், தொகுப்புரை(?)யையும் பார்க்கும் போது, பள்ளி நாள்களில் "புள்ளி" அதிகம் வாங்க சிலர் "நீட்டி நீட்டி" எழுதி, "சுத்தி சுத்தி ....கொல்லைக்குள்ள.." என்ற "வங்குரோத்து" நிலை தான் நினைப்புக்கு வருகிறது.... ஆனால் ஆசிரியர் என்ற பதவிநிலைகளால் "பாரபட்சம்" காட்டிய அத் தகையானவர்களாக, இங்கு கள நடுவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது எதிர்பார்ப்பு... - வியாசன் - 02-10-2006 பொறாமை ஐயா பொறாமை பூனைக்குட்டியின் கருத்தை பார்த்ததில் எல்லோருக்கும் பொறாமை. அதுதான் முன்னவர் ஒப்பாரி வைத்துள்ளார். ஐந்தறிவுள்ள பூனை இப்படி கருத்துக்களை வைக்கிறதெண்ட பொறாமை. மேகநாதன் அண்ணா நீங்கள் வைத்த கருத்துக்களை வெட்டிபேசவேண்டியது பட்டிமன்ற மரபு. அதைத்தான் நண்பர் பூனைக்குட்டியும் செய்தார். அதற்காக பள்ளி புள்ளி என்ற வார்த்தைகளை பாவித்தால் பெரிய அறிஞர்கள் ஆகிவிடமுடியாது. பு-னைக்குட்டியின் கருத்துக்களில் இருக்கின்ற தாற்பரியத்தை மட்டும் பாருங்கள்.வாழ்த்தாதுவிடினும் தூற்றாமல் இருங்கள். பூனை உங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதைான். வாழ்த்துக்கள். |