![]() |
|
கணனிப்பிரச்சினைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: கணனிப்பிரச்சினைகள் (/showthread.php?tid=8406) |
- Mathivathanan - 02-10-2004 ganesh Wrote:திரும்பவும் இதே பிரச்சனை எப்படி தீர்வுசெய்யலாம்உந்தக் கொம்பியூட்டர் ஹாட்வயர் ட்றைவர் எல்லாம் இருக்குதோ சரி பார்த்துப்போட்டு ஹாட்டிஸ்க்க போமற்பண்ணி திரும்ப ட்றைவருகளைப்போட்டு இன்ரநெற்றிலைநேரா மக்கிறோசொப்ற்றுக்க போய் சேவிஸ்பக்.. பச்சப் பைல் எல்லாத்தையும் டவுண்லோட் பண்ணி மிச்சத்துக்கு ஒரு நல்ல வைரஸ் ஸ்கானர் ஒண்டும் போடுங்கோ.. சிரமமாயிருந்தால்.. எறிஞ்சுபோட்டு உங்கை றோட்டிலை பென்ரியம்2-3 எறிஞ்சிருப்பாங்கள்.. தூக்கிக்கொண்டுபோய்.. வின்டோ98 போடுங்கோ.. பிரச்சனை இன்ஸ்ரன்லி சோல்வ்ட்.. வைரஸ் அதுக்குள்ளை வரவே பயப்பிடும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ganesh - 02-10-2004 நன்றி உங்கள் பதிலுக்கு நீங்கள் செய்த மாதிரி சகலதும் செய்துவிட்டேன் ஆனால் திரும்பவும் அதேநிலை என்னுடைய கணனிஎன்றால் எறிந்துவிடலாம் அதன்விலை 100 ஈரோக்கள் மட்டுமே ஆனால் அவரின் கணனியோ 1400 ஈரோ எப்படி எறியலாம்? 100 ஈரோக்கு வாங்கியகணனி எந்தபிரச்சனையும் கொடுக்கவில்லை நான் உபயோகிப்பது 98 சொன்னதற்காக வைரசை அனுப்பிவிடாதீர்கள் நன்றி நோர்வேயில் - ganesh - 02-10-2004 பிளாசர் என்ற வைரசுஎன்று நினைக்கிறேன் நோர்வேயில் - Mathivathanan - 02-10-2004 ganesh Wrote:நன்றி உங்கள் பதிலுக்கு நீங்கள்திரும்பவும் ஹாட்டிஸ்கை போமற்பண்ணி.. திரும்ப எல்லா ட்றைவருகளையும் போட்டு உங்கள் இன்ரநெற் தொடர்பை ஏற்படுத்தி மக்கிறோசொப்ற் போய் சேவிஸ்பக்.. பச் பைலுகள் டவுன்லோட்பண்ணி.. உள்ள ஓட்டைகள் பலதையும் அடைத்துவிட்டு பின்னர் அவரது இணைப்பை கொடுங்கள்.. மேலும் நீங்கள் பயப்படத்தேவையில்லை.. [quote=Mathivathanan]வின்டோ98 போடுங்கோ.. பிரச்சனை இன்ஸ்ரன்லி சோல்வ்ட்.. வைரஸ் அதுக்குள்ளை வரவே பயப்பிடும்.. NTFS இலிருந்து FAT32 விற்கு மாற்றத்தெரியுமா..? - vasisutha - 02-11-2004 Mathivathanan Wrote:சிரமமாயிருந்தால்.. எறிஞ்சுபோட்டு உங்கை றோட்டிலை பென்ரியம்2-3 எறிஞ்சிருப்பாங்கள்.. தூக்கிக்கொண்டுபோய்.. வின்டோ98 போடுங்கோ.. பிரச்சனை இன்ஸ்ரன்லி சோல்வ்ட்.. வைரஸ் அதுக்குள்ளை வரவே பயப்பிடும்..இப்பத்தான் விளங்கினது, தாத்தா எங்க கணணி எடுக்கிறவர் என்று. 8) (எங்கே என்று சொன்னால் நானும் வாறேன்) - adipadda_tamilan - 02-11-2004 கனேஷ் உங்களது பிரச்சினை என்ன என்று தெரியாமல் பதில் எழுதுவது கஷ்டம். நான் முன்பு கூறியபடி என்ன error message என்டு ஆங்கிலத்தி எழுதினால் பதில் சொலுவது ஈசியாக இருக்கும். - ganesh - 02-11-2004 இங்கும் பல தகவல்கள் உண்டு முயற்சி செய்து பார்க்கிறேன் http://antivirus.pagina.nl - ganesh - 02-11-2004 இணையத்தில் இருக்கும்பொழுது வைரஸ் வந்து இணையத்தின் தொடர்பை துண்டிக்கின்றது adipadda_tamilan Wrote:கனேஷ் - ganesh - 02-11-2004 BLASTER ? - adipadda_tamilan - 02-11-2004 கனேஷ் இந்த இன்ணையத்திற்கு சென்று W32.Blaster.Worm - download பண்ணவும். எப்படி இன்ஷ்ரோல் பன்ன வேண்டும் என்பதும் அங்கு தெளிவாக விளங்கப்படுத்தியிருக்கிறது. http://securityresponse.symantec.com/avcen...moval.tool.html - vasisutha - 02-18-2004 file களை அழிக்கும் போது ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அல்லவா? அப்படி வராமல் செய்வது எப்படி என்று தெரியுமா? :?: - vasisutha - 02-18-2004 எனது Microsoft Worksஇல் word processor documentஐ திறக்கும் போது கீழே உள்ள எச்சரிக்கை குறிப்பு தோன்றுகிறது. அத்துடன் தொடர்ந்து எதையும் செய்ய முடியாது உள்ளது. ஏற்கனவே save செய்து வைத்துள்ள file திறக்கும் போதும் இதே நிலைதான். என்ன காரணம்? :? காரணம்? - Mathivathanan - 02-18-2004 vasisutha Wrote:எனது Microsoft Worksஇல் word processor documentஐ திறக்கும் போது கீழே உள்ள எச்சரிக்கை குறிப்பு தோன்றுகிறது. அத்துடன் தொடர்ந்து எதையும் செய்ய முடியாது உள்ளது. ஏற்கனவே save செய்து வைத்துள்ள file திறக்கும் போதும் இதே நிலைதான். என்ன காரணம்? :?Possible faulty memory..
- anpagam - 02-19-2004 கிறுக்குப் பிடிச்சவர்கள் கூட இங்கு நன்நா கதைக்கிறார்கள் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நல்லா ஆராயுகிறார்கள் எல்லாம் சுயநலம்தானே இங்க எப்படி அந்த கொழுப்பு போயிற்று..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பிரியோசனமான தகவல்கள்...நன்றிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
- vasisutha - 02-20-2004 [size=13]தொலைந்து போன பைலை(File) எப்படி பெறலாம்? File தொட்டியில் இருக்கும். ஆனால் பைல்களை நாம் வைத்த இடத்தை மறந்து போய்விடுகிறோம். வைக்கும் போது ஞாபகமாக வைத்துவிட்டு பின் எங்கு வைத்தோம் என அறியாமல் இருக்கிறோம். இதனை தேடிப் பெற கம்ப்யூட்டரில் வழிகள் உள்ளன. முதலில் Start என எக்ஸ்டென்ஷன் கொண்ட அனைத்து பைல்களும் தெரியவரும். ஆனால் பைல் எக்ஸ்டென்ஷன் தெரியவில்லை என்றால் கவலைப் பட வேண்டாம். பெயரில் ஓரளவு தெரிந்தாலும் அதனை டைப் செய்து தேடலாம். File கண்களை காக்க காக்க! - vasisutha - 02-26-2004 கணணியில் பணியாற்றுகிற பலருக்கு <span style='color:#ad0000'>Carpal Tunnel Syndrome நோயால் பலர் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, கண்வலி எனப் பலவகை பாதுகாப்புகளுக்கு கணணி பயனாளர்கள் ஆளாகின்றனர். இவற்றுள் கண் வலியால் பலர் அவதியுறுகிறார் கள். கண் உலர்ந்து போதல், சோர் வடைதல், மங்குதல், தெளிவில்லா மல் தெரிதல் போன்ற பலவற்றை கணணி பயனாளர்கள் சந்திக் கின்றனர். அடிக்கடி கண்களை நாம் சிமிட்டுகிறோம். இது கண்களுக்கு நல்லது. ஆனால் கணணி பயனாளர்கள் அடிக்கடி கண்களை சிமிட்டுவதில்லை. மொனிட்டரையே(moniter) உற்று பார்த்துக்கொண் டிருப்பதால் சிமிட்டாமல் இருந்துவிடு கிறார்கள். இதனால் கண்களில் உள்ள கண்ணீர் ஆவியாகிவிடுகிறது. ஈரம் இல்லாததால் கண்உலர்ந்து விடுகிறது. கண்களை இங்கும் அங்கும் சுழல விட வேண்டும். நாம் அப்படியும், இப்படியும் தலையைத்திருப்புவதால் கண்களும் சுழலுகின்றன. கண்களில் உள்ள தசைகள் இதனால் நின்றாக உள்ளன. ஆனால் கணணி பயனாளர்கள் மொனிட்டரையே உற்றுப்பார்த்துக் கொண்டு வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் கண்களில் உள்ள தசைகள் இறுகுகின்றன. எழுத்துக்கள் நன்றாகத் தெரியா விட்டால், அல்லது பொடி எழுத்துக்களில் தெரிந்தால் கண்களை இறுக்கிக்கொண்டு பார்க்கிறோம். இந்த பழக்கம் கண்களுக்கு கெடுதலைத்தான் விளைவிக்கின்றன. எனவே உங்கள் கண்களைப்பாதுகாக்க நீங்கள் விரும்பினால், சில பயிற்சி களையும், தற்காப்பு நடவடிக்கை களையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அவை என்னவென்று பாருங்கள்: அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள். கண்களை மூடுங்கள். கண்களை வட்டம் போடுவது போன்று சுழற்றுங்கள். பிறகு எதிர் திசையில் கண்களை சுழற்றி மற்றொரு வட்டம் போடுங்கள். 20 நிமிடத்திற்கு ஒருமுறை இந்த கண் பயிற்சியை கொடுங்கள். கணணியை விட்டு எழுந்து ஜன்னலுக்கு வெளியே பாருங்கள்; அல்லது உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு துரத்தில் உள்ள பொருளைப் பாருங்கள். பிறகு உங்களுக்கு அண்மையில் உள்ள மற்றொரு பொருளைப் பாருங்கள். இந்த பயிற்சியை பலதடவைகள் குறைந்தது 15 நிமிடத்திற்கு ஒரு முறை செய்யுங்கள். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை எழுந்து சிறுநடை போடுங்கள். 5நிமிடம் இப்படி நடப்பதால் கண்களும் பாதுகாக்கப்படும். முதுகு வலி கழுத்து வலி போன்ற தொல்லைகள் ஏற்படாது. உயரத்தை மாற்றிக்கொள்ளும்படியான நாற்காலியை வாங்குங்கள். குனிந்து பார்க்கும்படி மொனிட்டரின் மேல் விளிம்பு இருக்கவேண்டும். இந்த அளவிற்கு நாற்காலியின் உயரத்தை மாற்றுங்கள். எக்காரணத்தைக்கொண்டும் கண் லெவலை விட மொனிட்டரின் உயரம் அதிகமாக வரக்கூடாது. உங்களை விட்டு இரண்டு அடி தள்ளி மொனிட்டர் இருக்க வேண்டும். மொனிட்டரின் மேலே புறவெளிச்சம் படக்கூடாது. அது போல் உங்கள் கண்களிலும் நேரடியாக வெளிச்சம் விழக்கூடாது. கதவு, ஜன்னல் அருகே கணணியை வைக்க வேண்டிய அவசியம் எழுந்தால் திரைச்சீலைகளை பயன்படுத்துங்கள். இதனால் வெளியில் இருந்து வருகிற வெளிச்சத்தை தடுத்துவிடலாம். மொனிட்டரில் அதிகப்பிர காசத்தை வைக்க கூடாது. எனவே பிரைட்னஸ் (Brightness) கொண்ட்ரோல் பயன்படுத்தி நியாயமான பிரகாசம் கிடைக்கும்படி செய்யுங்கள். Desktopபில்,Documentsகளில் wall paper பின்னணிப்படம் போன்றவை இல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே எதையாவது கொண்டுவர விரும்பினால், பின்னணியின் நிறத்திற்கும், எழுத்துகளின் நிறத்திற்கும் கொன்ட்ராஸ்ட் (Controst) வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மொனிட்டரின் கொன்ட்ராஸ்ட் controlலை பயன்படுத்திக்கொள்ளுங்கள். Fan மெஷினில் இருந்து வருகிற காற்றும் கண்களில் விழக்கூடாது. கண்களை விரைவில் இவை உலரவைத்து விடுவதால்தான், இவை நேரடியாக கண்களில் படக்கூடாது எனக்கூறுகிறோம். அன்ட்டி ஸ்டேட்டிக் (Anti Static) திரையை வாங்கி மொனிட்டரின் முன் தொங்க விடவேண்டும். இதனால் மொனிட்டரில் இருந்து வெளிப்படுகிற கதிர்வீச்சில் இருந்து தப்பலாம். நியாயமான அளவில் அறையில் வெளிச்சம் இருக்கவேண்டும். கூடுதல் வெளிச்சம் கண்களுக்கு கெடுதல். குறைவான வெளிச்சம் கண்களுக்கு கெடுதல்தான். </span> - Paranee - 02-26-2004 எல்லாம் சரி வசி முதுகுவலிதான் முக்கிய பிரச்சினை உடைந்துவிட்டதோ என்றுகூட சந்தேகம். . கண் கெட்டு கண்ணாடி அணிக என்று கணனி கண்டுபிடித்தவரே சொல்லாமல் சொல்லிச்சென்றுவிட்டார். அதனால் அதை மறந்துவிடவேண்டியதுதான். கணனி சம்பந்தமான வேலைசெய்யும் அனைவரும் கட்டாயம் கண்ணாடி அணிந்திருப்பார்கள் - vasisutha - 02-26-2004 நீங்களும் கண்ணாடியா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->முதுகுவலிக்கு காரணம் நீங்கள் பாவிக்கும் நாற்காலியாகவும் இருக்கலாம். உங்களுக்கேற்றவாறு கூட்டிக் குறைக்கும் வசதியுள்ள நாற்காலி நல்லது. மருத்துவ ரீதியாக எனக்குத் தெரிந்த ஓரே வழி நல்ல சுடுநீரில் குளிப்பதே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- nalayiny - 02-26-2004 முதுகுவலிக்கு பல காரணங்கள் உண்டு. 1) இருக்கை சரியில்லாதது.( குhனி இருத்தல் ஒருபக்கமே பாரத்தைக்கொடுத்து இருத்தல்.) இவற்றால் வரலாம். தொடர்ந்து கதிரையில் இருந்து வேலை செய்பவர்கள் இடைக்கிடை எழுந்து குனிந்தவாறு முழங்கால் மடியாமல் கால் விரல்களை தொடல். 2) படுக்கை சரியில்லை அல்லது தலையணை சரியில்லை.( ஒரே பக்கமாக படுத்தாலும் முதுகுவலிவரும். 3) உடல் எடை அதிகரிப்பதனால் தசை நார்கள் இழுப்பதனால் முள்ளந்தண்டு தசைநார்களின் இழுப்பகிற்கு ஏற்ப வழைய ஆரம்பிப்பதனாலும் முதுகுவலி வர சந்தற்பம் அதிகம் உள்ளது. 4) காலணி சரியில்லாது இருந்தாலும் முதுகு வலிழ ஏற்படும்.( பாதத்திற்கு மென்மையான பாத அணியை அணிதல் நன்று. 5) சுடு நீரில் குளிப்பது தமற்காலிக வலிமறைவே அன்றி நிரந்தர வலிநிவாரணி அல்ல. 6) குளிர் நாரியையே உடனடியாக தாக்கும் இதனால் குளிரில் இருந்த பாதுகாக்க நலஇல உடை அணிதல் முக்கியமாகிறது. குளிர் அதிகம் படுவதனாலும் நாரி நோ ஏற்படுகிறது. - nalayiny - 02-26-2004 நெற்றியில் ஒரு பொட்டிட்டு கணணிமுன் உக்கார்ந்து பாருங்கள் இந்த தொல்லைகள் இராது.சகல உணர்நரம்புகள் நெற்றில் கூடுவதால் இத்தகைய சோர்வுகளிற்கு ஆளாகிறோம் .பொட்டிடல் ஓர் தடையாகவும் பாதுகாப்பாகவும் அமைகிறது.( முடிந்தால் செய்து பாற்து விட்டு கூறுங்கள் பதிலை. |