![]() |
|
பெண்களும் சமூகமும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385) |
- veera - 06-20-2003 little ghost....! get the hell out of my way. who the hell do you think you are ? don't try to make you an absolute FOOL ! - Alai - 06-20-2003 [size=18] திசை மாறிய கருத்துக்கள் - sethu - 06-20-2003 தண்டவாளம் இல்லாமல் ஒரு வண்டவாளம் றோட்டிலை ஓடுது - Chandravathanaa - 06-20-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:சரி IQ என்பது ஒரு பிரச்சினை அல்லது தீர்வை அணுகும் முறையும் உள்ளார்ந்த கருத்துக்களை விரைவாக கிரகித்துக்கொள்ளும் தன்மையையும் குறிக்கும் என பொதுவாகக் கூறலாம் ஆண்களும் பெண்களும் மூளையைப் பாவிக்கும் விதத்தில் வித்தியாசமிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆண்களின் மூளை பெண்களின் மூளையை விட 130கிராம் நிறை கூடியது. ஆண்களிடம் பகுத்து ஆராயும் தன்மையும் மனதை ஒரு நிலைப்படுத்தும் தன்மையும் கூடுதலாக உள்ளன. இதே போலப் பெண்களிடம் நினைவாற்றல், அனுசரித்தல்... போன்ற தன்மைகள் கூடுதலாக உள்ளன. அதற்காக ஆண்கள் பெண்களை விட மேலானவர்கள் என்றோ பெண்கள் ஆண்களை விட மேலானவர்கள் என்றோ சொல்ல முடியாது. எப்படி ஒரு குழந்தை வளர்க்கப் படுகிறதோ, எப்படி ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வியும் அதையடுத்த வேலைக்கான கல்வியும் தொடர்கிறதோ, எப்படி ஒரு குழந்தையின் சுற்றாடல் அமைந்துள்ளதோ.. எப்படியான கூட்டாளிகள் ஒரு குழந்தைக்குக் கிடைக்கிறார்களோ.. அதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் அறிவும் நடத்தைகளும் செயற்பாடுகளும் தொடரும். இதன் அடிப்படையில்தான் ஆண் குழந்தையாயினும் சரி பெண் குழந்தையாயினும் சரி ஒரு குழந்தையின் கெட்டித்தனம் மிளிரும். இது நரம்பியல் விஞ்ஞான ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு. கெட்டிக்கார ஆண்களும் உள்ளார்கள். கெட்டிக்காரப் பெண்களும் உள்ளார்கள். அதே போல கெட்டித்தனமற்ற ஆண்களும் உள்ளார்கள். கெட்டித்தனமற்ற பெண்களும் உள்ளார்கள். - vaiyapuri - 06-20-2003 Quote:தண்டவாளம் இல்லாமல் ஒரு வண்டவாளம் றோட்டிலை ஓடுது<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Chandravathanaa - 06-20-2003 [quote=கணணிப்பித்தன்/Kanani]உண்மையைச் சொன்னால் ஆணிலைவாதம், குதர்க்கம், விதண்டாவாதம் என்கிறீர்கள் நான் எழுதியதில் இவை இருப்பதாக தெரியவில்லை ஆனால் ஆணாதிக்கம் வேண்டும் அது இல்லாமல் குடும்பத்தை கட்டுப்படுத்துவது கடினம்! ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் எதையும் செய்ய முடியும். பெண்களிடமுள்ள திறமைகள் இல்லாமல் ஆண்களின் பகுத்து ஆராயும் திறனை மட்டும் வைத்து எதுவும் செய்ய முடியாது. <span style='color:#a30000'> ஆண்களின் மூளைக்கு பகுத்து ஆராயும் தன்மை உண்டு என்ற ஒரே காரணத்துக்காக குடும்பத்தில் ஆணாதிக்கம் வேண்டும் என்று சொல்வது அபத்தம். இது பெண்களை அடக்க நினைக்கும் சுயநலத்தின் வெளிப்பாடு.</span> [size=18]குடும்பம் சீராக அமைய இருக்க வேண்டியது ஆணாதிக்கம் அல்ல. அன்பின் ஆதிக்கம். - Chandravathanaa - 06-20-2003 ஒரு கேள்வி கணணிப்பித்தன். பகுத்து ஆராயும் தன்மையைத்தான் IQ என்று சொல்வதா..? - Kanani - 06-21-2003 IQ இன் சரியான வரைவிலக்கணம் என்ற ஒன்று சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது ஆரம்பத்தில் கணிதம் விஞ்ஞானம் சார்ந்ததாக அதை வரையறுத்தனர் ஆனால் பெரும்பாலான பெண்களின் ஆற்றல் மொழி கலை போன்றவற்றில் இருந்ததால் அதையும் இணைத்தே தற்போதய IQ வரையறுக்கப்படுகிறது. ஆணாதிக்கம் என்பது எல்லா உயிரினங்களிலும் பொதுவாக காணப்படும் ஒரு விடயம். ஆனால் மனிதனோ அவனுக்கே சிறப்பான ஆறாவது அறிவாகிய பகுத்தறிதிறனுடையவன். இதன்பொருட்டு தம் துணையை மதித்தல், சமத்துவம் பேணல் என்பன முக்கியமாக கருதப்படுகின்றன. இங்குதான் கீழைத்தேய (எமது கலாசாரம்) பெண் சமத்துவம் மேலைத்தேயவரினதிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஆண்கள் இவ்வாறு செய்கிறார்கள் அதற்கு சமனாக பெண்களும் இவ்வாறு செய்தால் என்ன என்பது மேலைத்தேய பாணி.....இது இயற்கையின் படைப்பிற்கு எதிராக புதிய மாற்றங்களை எதிர்பார்க்கும் ஒரு முயற்சி......இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முழுமையாக வெற்றியளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது....... இயற்கையோடு ஒன்றிவாழும் எம்கலாசாரத்தில் நாம் பெண்களின் தனித்துவமான திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் திறமையை வளர்த்து, உச்ச பயன் பெறுகிறோம். ஆனால் அதே நேரத்தில் ஆணாதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்து அதன் மூலம் பெண்கள்மீது வன்முறையையும் அடக்குமுறையையும் பிரயோகித்தல் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. முற்காலத்தில் மூட நம்பிக்கைகள் மூலமும் ஆண்களின் சுய நலத்திற்காகவும் ஆணாதிக்க துஷ்பிரயோகம் மூலம் பெண்களை ஒடுக்கினர். ஆனால் இருபாலாரினதும் திறமைகளை அறிந்து செயலாற்றவேண்டிய காலகட்டம் இது. இந்தத் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல்கொடுக்க முனைந்து மேற்கத்தேய பாணியில் பெண்களைத் துாண்டிவிடல், ஆணுடன் போட்டி போட வைத்தல், ஆண்பிள்ளையைப்போல் பெண்பிள்ளையை வளர்த்தல் என்பன ஆரோக்கியமான நிகழ்வுகளாகத் எனக்குத் தெரியவில்லை. இது ஆண் பெண் பகையை மேலும் அதிகரிக்கும் என்றே கருதுகிறேன். பொதுவாக தன் துணையை மதித்தல், சமத்துவம் பேணல் என்பன ஓரளவு கற்றவரிடையே தாராளமாகக் காணலாம். அதாவது இங்கு பெண்களின் இயல்பையும் அவர்களின் நடத்தைக் கோலங்களையும் தெளிவாகப் புரிந்து, நிதானமான விவாதங்கள், புரிந்துணர்வு நடவடிக்கைகள் மூலம் இந்த மதிப்பும் சமத்துவமும் பேணப்படுகிறது. பெண்களிடம் பொதுவாக போட்டி பொறாமை என்பன ஆண்களை விட அதிகாமகக் காணப்படும். இதனால் ஏற்படும் சர்ச்சைகளைத் தவிர்க்க ஆணாதிக்கத்தை தக்க முறையில் பிரயோகிக்க வேண்டியது அவசியம். ஒரு ஆணின் மூளை ஒரு விடயத்தில் குவிக்கப்பட்டு அதில் சிறப்பாக தொழிற்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் பெண்ணின் மூளைக்கு பல விடயங்களில் கவனம் செலுத்தும் தன்மை இருக்கிறது. இது மனதின் நிலையற்ற தன்மைக்கும் தேவையற்ற ஆசைகளுக்கும் வழிவகுக்கும். இதைத் தவிர்க்கவும் ஆணாதிக்கம் அவசியம். பிரச்சினைகளற்ற சமத்துவமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஆணாதிக்கத்தின் துஷ்பிரயோகத்தை தவிர்ப்பதற்கும், ஆண் பெண் இருபாலாரினதும் தனித்துவமான திறமைகளை வளரத்து அதன் உச்ச பயனை சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும், சிறந்த வழி ஒரு நல்ல கல்வி முறையை நடைமுறைப்படுத்தலே ஆகும். அத்துடன் எமது கலாசாரத்திற்கேற்ப அதை வடிவமைக்க வேண்டியது அவசியம். மாறாக வேறொரு கலாசாரத்தைத் தழுவிய கல்வியமைப்பைப் பின்பற்றினால் அது எம்மவரிடையே ஆண் பெண் விடயத்தில் இடைவெளியை மேலும் அதிகரிப்பதோடு பல்வேறு பட்ட பிரச்சினைகளை உருவாக்கும். - kuruvikal - 06-21-2003 பித்தன் உங்கள் கருத்தில் பல நியாயங்கள் இருக்கின்றன என்பது உண்மை ஆனால் 'ஆணாதிக்கம்' என்ற பதப்பிரயோகம் தவறு போல் தென்படுகிறது...மனிதனில் ஆண்களூக்கு இயல்பாகவே தலைமைத்துவத்துக்கான உடல் உள வலிமைகளும் திறன்களூம் இயற்கையால் அளிக்கப்பட்டுள்ளது....அதை சமூகத் தலைமைத்துவத்தைக்காக்கவும் சமூகத்தை காக்கவும் பிரயோகித்தல் எப்படி ஆதிக்கமாக மாறமுடியும்..அப்படி என்றால் ஒரு நாட்டின் தலைவர் அல்லது ஒரு நிறுவனத்தின் தலைவர் என்ன ஆதிக்க சக்தியா? தவறுதானே...! அந்தவையில் பார்க்கும் போது ஆண்கள் தமக்கே உரித்தான தலைமைத்துவ வழி நடத்தலை மேற்கொள்வது ஆதிக்கமல்ல அது அவர்களின் சமூகக் கடமையே ஆகும்! ஆனால் ஆண்களில் சிலர் செய்யும் தவறான தலைமைத்துவப் பண்புப் பிரயோகமே பெண்கள் மீதான ஆண்கள் சிலரின் வன்முறைகளூக்கு வழி கோலுகின்றன! அதே போல் இன்று தலைமைத்துவ பண்பைக் கையில் எடுத்த பெண்களின் தவறான பிரயோகங்கள் ஆண்கள் மீதும் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் பல பாதிப்புக்களை உண்டு பண்ணி வருவது கண்கூடு..உதாரணம் சந்திரிக்கா சிறிமா வின்னி மண்டேலா முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் மார்க்கோஸ் மனைவி...இப்படிப்பல அரசியல் தொழில் துறைத்தலைவர்கள்! இவை எல்லாம் எதை உணர்த்துகின்றன என்றால் தலைமைத்துவ துஷ்பிரயோகமே ஆண்கள் மீது வேண்டாத பழிகள் விழக் காரணமாகும் என்பதையாகும்! இதை ஆண்களும் தவிர்த்துக் கொண்டால் சமூகத்தில் ஆண் பெண் சமூகவியல் வேறு பாடுகள் களையப்பட உறுதுணையாக இருக்கும்! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- sethu - 06-21-2003 அவரை பித்தனாக்கியாச்சோ? - Chandravathanaa - 06-21-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:ஒரு ஆணின் மூளை ஒரு விடயத்தில் குவிக்கப்பட்டு அதில் சிறப்பாக தொழிற்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் பெண்ணின் மூளைக்கு பல விடயங்களில் கவனம் செலுத்தும் தன்மை இருக்கிறது. . இதிலிருந்து என்ன தெரிகிறது கணணி ஒரு ஆணால் ஒரு சில வேலைகளில்தான் முழுக் கவனத்துடனும் ஈடு பட முடியும். ஆனால் ஒரு பெண் பல் வேறு துறைகளிலும் தன்னை ஈடு படுத்திக் கொள்வாள். ஆண்களிடம் இந்த ஆதிக்கத்தனம் என்ற ஒன்று இருந்த காரணத்தாலேயே அவர்கள் பெண்களின் திறமைகளை பேச்சால் செயலால் ஆதிக்கத்தால் அடக்கி விட்டு தாம்தான் வலியவர்கள் என்று வலியுறுத்தினார்கள். ஆண்களிடம் அந்த ஓரிரு திறமைகள் பெண்களை விடச் சற்றுக் கூடுதலாக இருக்கிறது என்பதை வைத்தே பெண்கள் சமூகத்தை மெதுமெதுவாக நசுக்கத் தொடங்கினார்கள். இந்த உண்மை நிலையைப் புரிந்து செயற் படத் தொடங்கிய இன்றைய பெண்களின் விழிப்புணர்வு இந்த ஆண்களுக்குள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அச்சம் உங்களையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது என்பதை உங்கள் கருத்துக்களின் மூலம் உணர முடிகிறது. - sethu - 06-21-2003 பகுத்து ஆராயும் தன்மை ஜ கியுh எண்டால் மிருகத்திற்கு ஜ கியுh இருக்கா? - ahimsan - 06-21-2003 தேவையான கேள்விதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Chandravathanaa - 06-21-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:பிரச்சினைகளற்ற சமத்துவமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஆணாதிக்கத்தின் துஷ்பிரயோகத்தை தவிர்ப்பதற்கும், ஆண் பெண் இருபாலாரினதும் தனித்துவமான திறமைகளை வளரத்து அதன் உச்ச பயனை சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும், சிறந்த வழி ஒரு நல்ல கல்வி முறையை நடைமுறைப்படுத்தலே ஆகும். . இது சரியானது. இதை விடுத்து ஆணாதிக்கம் இருந்தால்தான் குடும்பம் சிறக்கும் என்ற பொருள் படக் கருத்துக் கூறுவது மிகவும் தவறானது. - sethu - 06-21-2003 அகிம்சன் நல்ல உசாராகத்தான் நிக்குறியள் - ahimsan - 06-21-2003 சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிப்பதற்கும் சிந்திக்கவேண்டிய இடத்தில் சிந்திப்பதற்கும் ஒரு ........ தன்மை மனிதனிடத்தில் வேண்டுமென்றால்.......! - sethu - 06-21-2003 பேந்;தென்ன பகுத்தறவு வேண்டும் - ahimsan - 06-21-2003 புரிந்து கொண்டதோடு சரியா? இல்லை நடவடிக்கைகளிலும் பகுத்தறிவு இருக்குமா? அறிவதற்கு ஆவலாய் இருக்கின்றது. - sethu - 06-21-2003 எனக்கு தாங்கள் ஆசைப்படும் அனைத்தும் இருக்கு - vaiyapuri - 06-22-2003 :roll: :roll: :roll: :roll: :wink: :wink: |