![]() |
|
இணையத்தில் குறும்படங்கள் பற்றி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: இணையத்தில் குறும்படங்கள் பற்றி (/showthread.php?tid=8302) |
- AJeevan - 09-12-2003 <b>நிழல்பட(புகைப்பட) கலஞரின் அனுமதியின்றி சில புகைப்படங்களை வெளியிட்ட லேக்ஹவுஸ் நிறுவனம் அக் கலைஞருக்கு 10லட்சம் ரூபா நஸ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு.</b> <img src='http://www.yarl.com/forum/files/1983.jpeg' border='0' alt='user posted image'> இலங்கையின் புகழ் பெற்ற புகைப்பட கலைஞரான சந்திரகுப்த அமரசிங்க 1983ம் ஆண்டு கறுப்பு ஜுலை கால கலவர சமயத்தில் எடுத்த புகைப்படங்களை 1997ம் ஆண்டு ராவய எனும் இடதுசாரி பத்திரிகையில் வெளியிட்டிருந்தார். இவற்றை 1999ம் ஆண்டு அவரது அனுமதியின்றி மறுபிரதி செய்த லேக்ஹவுஸ் நிறுவனம் தமது தினமின மற்றும் Daily News பத்திரைகைகளில் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நஸ்ட ஈடாக 10லட்சம் ரூபாவை வழங்க உத்தரவிட்டது. அவர் இது தொடர்பாக பேசும் போது எண்ணற்ற கலைஞர்களது படைப்புகள் அவர்களது பெயர்கள் குறிப்பிடப் படாமலே சில ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன என்றும், இது ஒரு மாபெரும் பகற் கொள்ளை என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக ஒரு சிலர் மிகவும் சிரமப்பட்டுத் தேடிக் கொள்ளும் அல்லது தயாரித்து அனுப்பும் செய்திகள் மற்றும் படைப்புகள் சில ஊடகங்கள் அவற்றில் உள்ளவர்களது பெயர்களில் வெளியிட்டு சம்பந்தமே இல்லாத இவர்கள் புகழ் தேடிக் கொள்கிறார்கள் என்றும் தமது விசனத்தை தெரிவித்தார். இப்படியான நடவடிக்கைளுக்கு மௌனம் சாதிக்காது போராடியதால் கிடைத்த தமது வெற்றி ஏனைய கலைஞர்களுக்கு <b>விழிப்பு</b> உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடுகிறார். Thanks:BBC & REUTERS - Manithaasan - 09-12-2003 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> எண்ணற்ற கலைஞர்களது படைப்புகள் அவர்களது பெயர்கள் குறிப்பிடப் படாமலே சில ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன என்றும்இ இது ஒரு மாபெரும் பகற் கொள்ளை என்றும் குறிப்பிட்டார். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அஜீவன் இந்தக் களத்தில் இருந்துகூட படைப்பாளருக்குத்தெரியாமல் ஆக்கங்கள் திருடப்பட்டு வீரகேசரிவரை போயிருந்ததே - AJeevan - 09-13-2003 Manithaasan Wrote:Quote:எண்ணற்ற கலைஞர்களது படைப்புகள் அவர்களது பெயர்கள் குறிப்பிடப் படாமலே சில ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன என்றும்இ இது ஒரு மாபெரும் பகற் கொள்ளை என்றும் குறிப்பிட்டார்.அஜீவன் மணிதாசன் அவர்களே, அப்படி நடந்திருந்தால், நான் எழுதியுள்ள செய்தியோடு வீரகேசரிக்கு உண்மையான ஆக்க விபரங்களுடன் எழுதுங்கள். விழிக்க வேண்டிவர்களாவது விழித்துக் கொள்வார்கள். வழக்கு தொடுக்க நினைத்தால் உங்கள் நாட்டு ஊடகவியலாளர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தோ அல்லது அவர்களது உரிமைக் குழுவிடம் தக்க சான்றுகளை சமர்ப்பித்தோ நீதி கேட்கலாம். இதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதில்லை.இதற்காக மொழி பெயர்ப்பாளர்களை நீதி மன்றம் ஒழுங்கு செய்வதோடு,அதற்கான செலவுகளை தவறுக்கு பொறுப்பானவரிடமிருந்தே அறவிடுகிறது. காரணம் சுவிசில் இருந்து வெளிவரும் துருக்கிய வாரப் பத்திரிகைக்கு , சுவிசில் வாழும் துருக்கிய நாட்டு நிருபர் கொடுத்த செய்திகளை தமது செய்தியாக மொழி பெயர்த்து வெளியிட்ட ஒரு சுவிசின் பத்திரிகைக்கு சுவிசின் ஊடகவியலாளர் நீதிமன்றம் 1998ம் ஆண்டு Sfr.25ஆயிரம் பிராங் நஸ்ட ஈடாக வழங்கியிருக்கிறது. அத்துடன் அச் செய்தியை களவாடி எழுதிய ஊடகவியலாளருக்கு இரண்டு வருடங்கள் வரை எந்த ஒரு ஊடகத்திலும் எழுதக் கூடாது எனவும் தடை விதித்துள்ளது. Thanks: Swiss News Association - Manithaasan - 09-13-2003 நன்றி அஜீவன் வீரகேசரிக்கு ஏற்கனவே நானும், சோழியானும் எழுதிவிட்டோம். - veera - 09-14-2003 படைப்பாளிகளின் பெயர்கள் தெரியாமல் மழுங்கடிக்கப்படுவது பாரிய குற்றமாகும்.எனினும் எப்படியாவது தமது ஆக்கங்கள் வருகிறதே என்ற எண்ணத்தால் சில வேளைகளில் படைப்பாளிகள் சட்டத்தை நாடுவதில்லை.கையில் ஆதாரங்கள் இருக்குமாயின் திரு அஜீவன் அவர்கள் சொன்னது போன்று சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது மற்றைய ஊடகங்களுக்கும் ஒரு பாடமாக அமையும். அது மாத்திரமன்றி சிலருடைய ஆக்கங்களைத் திருடி தமது என்று கூறி வாசிப்பவர்களையும் நான் கேட்டுள்ளேன்.இரு வேறு சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன். ஒரு தடவை யாழ் இணையத்தில் ஒரு வரால் எழுதப்பட்டிருந்த கவிதையை முழுமையாக வானொலியொன்றின் கவிதை நிகழ்ச்சியில் தொலைபேசி அழைப்புூடாக ஒருவர் வாசித்தார்.அப்போது அங்கிருந்த அறிவிப்பாளர் இது உங்களுடைய சொந்தக் கவிதையா என்று கேட்டதற்கு ஆம் என்று வாய் கூசாமல் பதில் அளித்துவிட்டுச் சென்றார். அதே நேரம் இன்னுமொரு வானொலிக் கவிதை நிகழ்ச்சியில் சுவஸில் பலரும் அறிந்த ஒரு நல்ல கவிஞரே வந்து ஒரு நம்நாட்டுக் கவிதைப்படைப்பாளியின் கவிதையை அது இன்னாரால் எழுதப்பட்டதுதான் என்னுடைய மனதைக் கவர்ந்தது என்று கூறி கவிதையை வாசித்துச்சென்றார். எனவே மற்றவர்களது ஆக்கங்களைப் பெற்றுக்கொள்பவர்கள் அது யாருடையது என்பதைக் கட்டாயம் சொல்லவேண்டும்.இல்லாவிட்டால் படைப்பாளிகள் பாதிக்கப்படுவது தொடரத்தான் செய்யும். - Guest - 09-14-2003 Manithaasan Wrote:நன்றி அஜீவன் எழுதியது பிரச்சனையல்ல .பதில் வந்ததா? மணிதாசன்????? - Manithaasan - 09-14-2003 மின்னஞ்சலில் தனித்தனியாக பதில்கேட்டு எழுதினோம். இதுவரை பதில் வரவில்லை.. - sOliyAn - 09-14-2003 ஆமா :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - veera - 09-15-2003 <b>Manithaasan</b>, Quote:மின்னஞ்சலில் தனித்தனியாக பதில்கேட்டு எழுதினோம். இதுவரை பதில் வரவில்லை.. வருத்தத்திற்குரிய விடயங்கள் இவை! - sun - 09-19-2003 <b> </b> - Ilango - 09-19-2003 களத்துக்கு பொருத்தமற்றதும் மற்றவரை தூற்றும் எண்ணங்கொண்டு மட்டும் எழுதப்பட்ட விடயமாக இருப்பதனாலும் முற்றிலும் அகற்றப்பட்டு எழுதிய sun க்கு அனுப்பட்டதுடன் ஒரு எச்சரிக்கையும் வழங்கபடுகிறது |