![]() |
|
என் நாட்குறிப்பில்கிறுக்கியது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் நாட்குறிப்பில்கிறுக்கியது (/showthread.php?tid=7839) |
- Paranee - 11-11-2003 போச்சுடா ! ஏன் ஆதிபன் நீங்களாவே வில்லங்கத்தை தலையில் போட்டுகொள்கின்றீர்கள். நான் உங்கள் கவிதைகளை ரசிக்கின்றேன். அவற்றில் உள்ள உண்மைகளை உள்ளத்தினுள்ளே பதுக்குகின்றேன். எனக்கும் அவை பொருந்துகின்றமையால். நான் சூத்தை என்பது காமக்காதலை உங்களது காதல்காதல் அல்லவா ! Quote:அன்பு நன்பா பரணி, - aathipan - 11-11-2003 <img src='http://www.thisisbradford.co.uk/escene/images/kajol.jpg' border='0' alt='user posted image'> உன்னுடன் பேச வேண்டும் என்பதற்காக இரவெல்லாம் வரிகளை தேடி வைப்பேன்.. உன்னைக்கண்டதும் வார்த்தைகள் எல்லாம் ஓடி ஒழிந்து கொள்ளும் ஊமையாகி திக்கித்திணறுவேன் ஆனால் உன்பார்வை ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் பேசும் குறும்பாக எதேதோ என்னிடம் கேள்விகள் கேட்கும் எதற்கும் என்னிடம் பதில் வந்ததில்லை... நான்தான் ஊமையாகிவிட்டிருப்பேனே...... - aathipan - 11-11-2003 <img src='http://www.bollywood2000.com/wallpapers/actresses/kajol/images/small/thumb7.jpg' border='0' alt='user posted image'> உன்பிறந்ததினம் இன்னும் நினைவிருக்கிறது..... அன்று கோவிலில் உனைப்பார்த்தேன் வெளிர் நீல நிறத்தில் ஆடையணிந்து சன்னிதியில் கண்மூடிநின்றிருந்தாய்... நீயே ஒரு தெய்வமாக எனக்குத்தெரிகிறாய் நீ என்ன அந்தத்தெய்வத்திடம் வேண்டிக்கொள்வாய் புதிராக இருந்தது எனக்கு. - AJeevan - 11-11-2003 aathipan Wrote:அன்பின்;;; அஜீவன் அன்பின் ஆதீபன், நட்பு,குடும்பம்.......................இப்படியான பாசங்கள் வேறு, நீதி,தர்மம்,விமர்சனங்கள் என்பது வேறு. நீங்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் இதுவே எனது நிலை. [b]<span style='font-size:22pt;line-height:100%'>சொல்லும் கருத்து நியாயமாக இருந்தால் ஒரு பரதேசியாக இருந்தாலும் ஏற்றுக் கொள். அநீதியாக இருந்தால் ஆண்டவன் ஆனாலும் எதிர்த்து நில். உன்னை ஒருவன் மதித்து அழைத்தால் அவன் வாழ்வது மர நிழலானாலும் போய் அவன் தரும் பழைய கஞ்சியானாலும் ருசி பார்த்து உண்டு,அந்த மனிதனுக்கு மதிப்பளி.</span> என்று 1971ல் நீதிக்காக போராடி இலங்கை அரசால் நட்ட நடு விதியில் வைத்து துகிலுரிக்கப்பட்டு என் கல்லுாரி வாசலிலேயே உயிரோடு டயர்களால் எரிக்கப்பட்டு கொல்லப்பட்ட என் ஆசான், கலாநிதி.திசாநாயக்க என்ற ஒரு மாமனிதர் என்னுள் விதைத்த கருத்து விதை ஒரு காலும் மாறாது. என் குடும்பம் ஆனாலும் என் கருத்தில் மாற்றமில்லை. இது என்னை நன்கு தெரிந்தவர்களுக்கு தெரியும். நேர்மையில்லாத கலைஞனும், அரசியல்வாதியும் ,சமூகசேவகனும்..............ஒன்றும் மேதைகளல்ல வெறும் பிணம்தான். aathipan Wrote:அன்பின்;;; அஜீவன்கிறுக்கல்கள்தான் பெரும் சாதனைகளை செய்திருக்கிறது. உங்களிடம் திரும்பவும் சொல்கிறேன் திறமை நிறையவே இருக்கிறது. 1.நீங்களே உங்களை அங்கிகரிக்கப்படாத கவி என்ற தாழ்வு மனப்பான்மையோடு கருதிக் கொள்கிறீர்கள். 2.யாழில் ஏற்றுக் கொள்வார்கள் என்று எழுதியதாகவும் கூறுகிறீர்கள். 3.யாருடைய புகழ்ச்சியை எதிர்பார்த்தும் நான் இங்கு கவிதை எழுத வில்லை.... யார் நனைநதார்கள் யார் நனைய வில்லை என்று எனக்கு கவலையும் இல்லை...... ஏட்டிக்கு போட்டியாய் கவிதைகள் வேண்டாம்...... நான் எதிர்பார்த்தது உண்மையாகிவிடப்போகிறது.... என்றும் எழுதுகிறீர்கள். இதிலிருந்து நான் காண்பது ஒன்றை மட்டுமே. உங்கள் கருத்துகள் மாறுவதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதும் எதிர்மறை (negative) ஆக உங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செய்கிறீர்கள் என்பதையுமே. இது உங்களுக்கு மட்டுமல்ல எவருக்கும் வெற்றி தராது. உதாரணமாக புலம் பெயர் நாடுகளில் வாழும் பெரும்பாலானவர்களில் வெற்றிக் கொடி கட்டிப் பறப்பவர்கள்.இலங்கையிலோ ஏனைய நாடுகளிலோ இருந்து வந்த படித்தவர்களல்ல. சர்வ சாதாரணமான படிப்பறிவு குன்றிய,அவரவர் நாடுகளில் தமது சமூகத்தாலேயே ஒதுக்கித் தள்ளப்பட்டவர்கள். இவர்களிடமிருந்தது கல்வியோ,வேறு தகதிகளோ அல்ல. சாதிக்க வேண்டுமென்ற நம்பிக்கையும்,விடா முயற்சியும். தங்களால் முடியாததை தங்கள் குழந்தைகளுக்காவது பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற துடிப்பும்தான்.இப்படிப் பட்டவர்களால்தான் தமிழ் புலம் பெயர் நாடுகளில் வாழ்கிறது. இதுவும் சாதனைதான். நீங்கள் நுழையும் போதே, உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்ற மனதோடுதான் வருகிறீர்கள். ஒருவனது மன எண்ணங்கள்தான் அவனை முன்னெடுத்துச் செல்கின்றது.இதெற்கெல்லாம் சிக்மன்ப்ரொட்டையா அழைத்து உபதேசம் செய்ய முடியும். உங்கள் படைப்பை நான் கேலி செய்யவில்லை.அதை ஏன் நீங்கள் எதிர்த்து எழுதாமல், உங்கள் கருத்தை அழித்து துாய வேசம் போட முனைந்தீர்கள். ஒருவனது படைப்புக்கு எதிர்கருத்து சொல்ல இன்னுமொருவனுக்கு உரிமையில்லை என்றால். உங்கள் படைப்பை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்,எங்களிடம் கொட்டாதீர்கள்.எங்களுக்கு வேறு வேலையிருக்கிறது. அதுமட்டுமல்ல நீங்கள் எந்தவொரு சினிமாவானாலும் சரி,அரசியலானாலும் சரி.........................உங்கள் LIGHTSON மூலமானாலும் சரி,உங்கள் விருப்புகளை, கருத்துகளை முன் வைக்காதீர்கள்.அதை படிக்க எமக்கு ஒன்றும் தலைவிதியில்லை. aathipan Wrote:இருந்தாலும் நம் நட்பு ஒடியவில்லை... தன் தவறை தவறென்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத எவரும் எனக்கு நண்பனாகவே முடியாது. நான் பொய் முகம் காட்டும் நண்பர்களை விட எதிரிகளை நேசிப்பவன். எனவே என் எழுத்துக்களால் உங்களை , நீங்களே மறுபரிசீலனை செய்து கொள்ள முடிந்தால் நீங்கள் எழுத்துலகில் நிலைப்பீர்கள்................. நீங்கள் விரும்பினால் மட்டும், உங்களை சென்னையில் சந்திப்பேன். <span style='font-size:25pt;line-height:100%'>உங்கள் ஆக்கங்கள் இனி என் கண்களுக்கு தெரியாது.</span> என்றென்றும் அன்புடன், அஜீவன் _______________________________________________________________________________________________________________________________________ [size=10]தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளாத,ஏனைய விமர்சனங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு மனிதனும் அறிவாளியல்ல. அஜீவன் - kuruvikal - 11-11-2003 Mr/s தமிழ்மறவன் என்பவ.... எதிலும் கொஞ்சம் நின்று நிதானிப்பது நல்லம்.....! எடுத்தேன் கவுத்தேன் என்று இல்லாமல் மற்றவர்களின் கருத்தின் தேவையையும் புரிந்துகொள்ள முயலுங்கள்....உலகில் நல்லதுக்கும் கெட்ட வேடம் போட்டிருக்கு.... கெட்டதுக்கும் நல்ல வேடம் போட்டிருக்கு...... வேடமே போடாததுகளும் இருக்கு....... எனவே....எதிலும் கொஞ்சம் நின்று நிதானிப்பது நல்லம்.....! கவிதையில் வருவதெல்லாம் அனுபவம் என்றால் நாம் என்ன நிலாவைத் தொட்டுத்தரிசித்தா உவமை எடுத்தோம்.....உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது...எமது வரிகளில் வருபவை அனுபவங்களைவிட அவதானங்களே...எது எப்படியோ...காதல் என்று சுயமிழந்து,காலம் இழந்து, மனிதம்,ஒழுக்கம் இழக்கும் எதனையும் நாம் உயிரே போகினும் அங்கீகரியோம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- AJeevan - 11-11-2003 <img src='http://www.yarl.com/forum/files/france.jpg' border='0' alt='user posted image'> foto : ajeevan பிரான்சுக்கு சென்ற போது என் கமரா கண்ணுக்குள் சிக்கிய காட்சிக்கு உங்கள் கற்பனைக் குதிரை என்ன சொல்கிறது என்று எழுதுங்கள்................ கமரா கவிதைகள் - AJeevan - 11-11-2003 :?: :?: :?: - aathipan - 11-11-2003 <img src='http://www.continuum-concept.org/images/sad_boy.jpg' border='0' alt='user posted image'> நன்பர்கள் எல்லாம் என்னைக்கேலியாகப் பார்த்தார்கள். நான் துணிவே இல்லாதவனாம்.... இனியும் காதலை மறைத்துவைப்பது பாவமாம் ஏதேதோ பேசிவிட்டார்கள்..... எனக்கு கொஞ்சம் மனவருத்தம்தான்.. யார் சொன்னது நான் பேசவில்லை என்று நான் எப்போதும் உன்னோடு பேசிக்கொண்டிருப்பது அவர்களுக்கு எப்படித்தெரியும்.... - aathipan - 11-11-2003 <img src='http://agrino.org/3dart/moon_43_sky.jpg' border='0' alt='user posted image'> வெள்ளிக்கிழமை என் காதலை சொல்லிவிட முடிவு செய்தேன் வியாழன் இரவே படபடப்பு ஆரம்பித்துவிட்டது.. சாப்பிடப்பிடிக்கவில்லை... பதினோராயிரம் தடவை எப்படிப்பேசுவது என்று பேசிப்பார்த்துக்கொண்டேன்...... இதயம் ஏனோ வேகமாக அடித்தது...... உடலின் வெப்பம் கொஞ்சம் ஏறிவிட்டிருந்தது... இத்தனை நாள் உன் நினைவுகளுடன் சுகமாகத்தூங்கியவன் ஏன் அன்று மட்டும் தூக்கமே தொலைந்து போனது?.... அடி மனதில் ஏதோ அரித்தெடுத்தது... எங்கே நீ என் காதலை நிராகரித்துவிடுவாயோ என்ற அச்சம். விடிய விடிய என் மனதுக்ககுள்ளே ஓராயிரம் போராட்டங்கள்.. ஒரே அவஸ்தை... நான் படும் அவஸ்தைகள் நீயும் அனுபவிக்க வேண்டுமா? காதல் என்றால் அவஸ்தைகள் தானோ? - aathipan - 11-11-2003 <img src='http://www.nd.edu/~stdntaff/tree.jpg' border='0' alt='user posted image'> காதல் விதையை எப்படி விதைத்தாயடி என்னுள்?.. ஒரேயொரு பார்வைபார்த்ததில் காதல் வந்திடுமோ?.... உன் அழகு என்னை ஒன்றும் செய்ததில்லையே?.. எனக்கும் உனக்கும் முன்ஜென்ம உறவோ?.... முட்டாள்தனம் இல்லையா இது? எதற்காக வந்தது காதல்? விடையே கிடைக்கவில்லை? - இளைஞன் - 11-12-2003 ஆகா ஆதிபன்! சின்னச் சின்னக் கவிதைகளால் களத்தில் சிறகடிக்கடிக்கிறீர்கள். செந்தமிழாய்க் காதலில் சீறித் தெறிக்கிறீர்கள்! தொடருங்கள்... Quote:எதற்காக வந்தது காதல்? அதுதான் காதல்! கேள்வியே இல்லாமல் தொடங்கி, விடையைத் தேடுவதுதான் காதல்! பாராட்டுக்கள்! - nalayiny - 11-12-2003 மனித உணர்வுகள் விசித்திரமானவை. அதிலும் காதல் உணர்வு சுமை நிறைந்த அனுபவமாகிறது. அனுபவித்தவர்களிற்கே அதன் தன்மைகள் புரியும். கவிதைகள் ஒவ்வொன்றும் பாராட்டுதலுக்குரியது. தொடருங்கள் உங்கள் கவிதையை. படிக்க காத்திருக்கிறோம். - aathipan - 11-12-2003 <img src='http://www.angel-images.bigstep.com/Images/Angel%20Child%20-%20Girl.jpg' border='0' alt='user posted image'> அது வானவெளி..... அங்கே நீயும் நானும்தான் கைகோர்த்து நடக்கிறோம்.. மனதெல்லாம் மகிழ்ச்சி வெள்ளை மேகங்களில் துள்ளிக்குதித்து விளையாடுகிறோம்.. இதுதான் சொர்க்கமாம்... நீ அருகில் இருந்தால் என் வாழ்வே சொர்க்கம்தானே... ஓடி ஓடி மின்னும்வெள்ளிகளைச்சேர்த்து உன்தலையில் புூவாய் சூட்டுகிறேன் ஐயோ கால்தவறிவிட்டதே.. கீழே அதளபாதளம்.. ஐயோ என்"..........." உன் பெயரை உச்சரித்தபடி கால்களை விசிறி அடிக்கிறேன்... அட ஓலைப்பாயில் தான் படுத்திருக்கிறேன்... அருகில் நீ இல்லை... கனவுதான்.... எதையோ இழந்த உணர்வு.... - anpagam - 11-13-2003 எல்லாம் சரி அந்ந (காதல்)அனுபவமே இல்லாதவர்கள் வெளிநாட்டில் வாழும் இளஞ்ஞர்கள் ஒரு தமிழ் காதலை எப்படி ஐயா அறிகிறது. (உறவுகள் ,தெரிந்தவர்களுக்குள் சரிவரும் ஆனால்...) காதலித்துப்பார்... காதலி... காதலுக்கு மரியாதை எண்டல்லாம் ஏதோ சொல்லுறீன்க... கவிதை கவிதையாக ரசித்து எழுதுகறீர்கள் வாசிக்க,ரசிக்க நல்லாத்தான் ஈக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனால் இதல்லாம் இங்கு நடக்கிற காரியமாய்யா... அங்கு சரி இங்கு வளியிலோ தெரிவிலோ ரெயினிலையோ கடையிலையோ... ஒரு பெண்ணை பார்தாலே ஒழுக்கம் குறைந்தவராக எல்லவோ இன்றைய சனம் (தமிழ்)பேசிக்கொள்ளுது. கேக்கணும் போல இருந்துது கேட்டுட்டன் அதுக்காக நம்மை போட்டு பிச்சுப்போடாதீன்க தயவு செய்து ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: 8)
- kuruvikal - 11-13-2003 தம்பி அன்பகம் அப்படிக் கேளப்பு அப்பதான் சில காதல் பித்துகளுக்கு புத்தி தெளியும்...சிலது தான் கெட்டது எண்டில்லாமல் ஊரையுமெல்லே கெடுக்க நினைக்குதுகள்...இப்ப இருக்கிறது...நடக்கிறது...ஓடுறது.... ஒன்றுமே காதல் இல்ல எல்லாம் வெளிவேசம்,பொழுதுபோக்கு,useless Entertainment....உங்க மேற்கில நடக்கிற கூத்தையும் தான் சொல்லுறம்...நீங்கள் நல்ல பிள்ளை வெளிப்படையாக் கேட்டுப்போட்டியள்.....அப்படிக் கேட்டுத் தெளிய வேண்டும்...இல்லாட்டி இப்படித்தான் படம் போட்டுப் பிசத்த வேண்டிவரும்.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- vasisutha - 11-13-2003 . கண்ணே இந்த கடிதம் உனக்காக.. பிடிக்காவிட்டால் கிழித்துப் போட்டு விடாதே.. உன் தங்கையிடம் கொடுத்து விடு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
காதல் செய் காதல் செய்... - aathipan - 11-13-2003 <img src='http://members.tripod.com/~angelsblueheaven/angels/angelskissing.gif' border='0' alt='user posted image'> காதல் ஒரு உன்னத உணர்வு.. அந்த உணர்வு உன்னிடத்திலும் என்னிடத்திலும் ஏன் ஒவ்வொரு ஜீவராசிகளிலும் ஆண்டவன் விதைத்துவிட்டிருக்கிறான்... காதல் இல்லை சாதல் என்று பாரதியே உனக்;கும் எனக்கும் அறிவுரை சொல்லி சென்றிருக்கிறான்.... காதல் தானாக வரவேண்டும் வராத காதலை வரவைக்கவேண்டாம் அது வேதனைகளைத்தான் வாங்கிவரும்.. காதல் உனது வாழ்விற்கு ஒரு உந்து சக்தி.. ஒரு பிடிப்பு... அது நிச்சயம் உன்னை வெற்றிக்;கு எடுத்துச்செல்லும்... ஆனால் காதல் வந்தது என்று கண்மூடி கனவில் வாழ்ந்துவிடாதே... மயக்கத்தில் உறங்கிவிடாதே... உன்வாழ்வில் வெற்றிக்கு வேண்டிய அத்தனையையும் நீ தொடர்ந்து செய்.. காதல் உன் கூடவந்தால் நீ முள்ளில் நடந்தாலும் வலிகளே இருக்காது... இன்றைய வாழ்வு வேகமான வாழ்வுதான்... இல்லை என்று சொல்லவில்லை. இதயங்கள் தானே இன்னும் உனனை இயங்கவைக்கின்றன... காதல் என்று வந்துவிட்டால் உறுதியாக நில் பாதியிலே காணாமல் போய்விடாதே.. வெற்றி என்றும் உனக்குத்தான்.. காதல் என்றும் தோற்றது இல்லை.. மனிதன்தான் அடிக்கடி தோற்றுப்போகிறான்.... காதல் என்றபோர்வையில் யாரையும் வற்புறுத்த நினைக்காதே... பின்னால் சென்றுவருவது காதலல்ல.. அந்த உறுவுக்கு வேறு பெயர்... அந்த வார்த்தையை நானே தணிககை செய்கின்றேன் காதல் தோற்றுவிட்டுது என்றால் உன்;வாழ்வே இருண்டுவிட்டாதாய் எண்ணிவிடாதே.... நீ பேகும் பாதை எப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறது... நீ நீயாக்கத்தான் எப்போதும் இருக்கிறாய்... காதல் ஒரு உணர்வுதான்... அதற்காக உன்னை நீ அழித்துக்கொள்ளாதே.. வாழ்வைத்தொடர் உறவுக்கள் நிறைய உனக்காக காத்திருக்கிறது... அங்கே உனக்காக ஒருத்தி இருக்கத்தான் போகிறாள்.... காதல் செய் காதல் செய்... - Paranee - 11-13-2003 kuruvikal Wrote:தம்பி அன்பகம் அப்படிக் கேளப்பு அப்பதான் சில காதல் பித்துகளுக்கு புத்தி தெளியும்...சிலது தான் கெட்டது எண்டில்லாமல் ஊரையுமெல்லே கெடுக்க நினைக்குதுகள்...இப்ப இருக்கிறது...நடக்கிறது...ஓடுறது.... ஒன்றுமே காதல் இல்ல எல்லாம் வெளிவேசம்,பொழுதுபோக்கு,useless Entertainment....உங்க மேற்கில நடக்கிற கூத்தையும் தான் சொல்லுறம்...நீங்கள் நல்ல பிள்ளை வெளிப்படையாக் கேட்டுப்போட்டியள்.....அப்படிக் கேட்டுத் தெளிய வேண்டும்...இல்லாட்டி இப்படித்தான் படம் போட்டுப் பிசத்த வேண்டிவரும்.....! இளைஞன் Wrote:ஆதிபன் ஆனந்தமாய் இருங்கள், - Paranee - 11-13-2003 தங்கை இல்லாவிட்டால் என்னதான் செய்வது வசிசுதா ! Quote:கண்ணே இந்த கடிதம் உனக்காக.. Re: காதல் செய் காதல் செய - kuruvikal - 11-13-2003 aathipan Wrote:<img src='http://members.tripod.com/~angelsblueheaven/angels/angelskissing.gif' border='0' alt='user posted image'> காதல் என்று கண்டதும் செப்பாமல்-இங்கு சற்றுத் தெளிந்தே தெளித்திருக்கின்றீர் பாராட்டுக்கள்....! நாம் காதலை வெறுக்கவில்லை காதல் கண்ணியமாக அதன் தன்மை இழக்காது என்றும் எம் தனித்துவம் காத்து எம்மையும் வாழ்வைத்து அதுவுமாய் வாழவேண்டும்! அதுதான் காதலுக்கு நாமளிக்கும் வசந்த மாளிகை....! |