Yarl Forum
கைக்கூ கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கைக்கூ கவிதைகள் (/showthread.php?tid=7785)

Pages: 1 2 3 4 5 6 7


- aathipan - 09-28-2004

இரவெல்லாம் மழை
விடிந்தபோது
காணாமல் போயிருந்தது
நெல்வயல்


- aathipan - 09-28-2004

வீரம் பேசிய கோடரி
தோத்துப்போனது
வாழைந்தண்டிடம்


- aathipan - 09-28-2004

கோவிலில்
பக்திப்பாட்டு

கூட்டம் சேர்க்கும்
புூசாரி


- aathipan - 09-28-2004

காவலுக்குவந்த
பெண்காவலர்கள்

கடைக்கண்ணால்
ரசிக்கும்
இளைஞர் கூட்டம்


- aathipan - 09-28-2004

கட்ட மறந்த கைக்கடிகாரம்
கையை உறுத்தியது அடிக்கடி


- aathipan - 09-29-2004

தேங்கிநின்ற மழை நீர்

குனிந்தவுன் முகம் பார்த்தேன்


- aathipan - 09-30-2004

குளக்கரையில் குனிந்தபடி
முகம் பார்க்கும் மரங்கள்


- aathipan - 09-30-2004

பரம்பரை பரம்பரையாக
நிலவைப்பிடிக்க முயற்சிக்கும் பனைமரங்கள்


- aathipan - 09-30-2004

பிண ஊர்வலத்தில்
தப்பித்துவீழ்ந்த
ரோஜாபுூ
தரையில் புரண்டு
கெஞ்சும்

'மறுவாழ்வு கொடுங்கள்"


- aathipan - 09-30-2004

பனைமரத்தில் சிக்கும் வரை
நீ சிறிது நான் பெரிது
சண்டைபோடும் காற்றாடிகள்...


- aathipan - 10-01-2004

தாமரை இலையில்
ஓடிவிளையாடும் நீர்துளிகள்

தாம் உயர்ஜாதியென
இறுமாப்புக்கொள்ளும்


- aathipan - 10-02-2004

ரோஜாப்புூக்கள்
தேன் எடுக்கும் பட்டாம்புூச்சி

வெட்கிப்போயின வீரம்பேசிய
முட்கள்


- aathipan - 10-02-2004

புூ விற்கும் புூ
புூ வைத்துவிட யாரும் இல்லை


- aathipan - 10-02-2004

கறையான் புற்றுகள்
பாம்பு ஒருநாள் வந்ததனால்
நாகாத்தம்மன்கோவிலென பெயர்பெற்றது


- aathipan - 10-02-2004

எனக்கும் குழந்தைபிறந்துவிட்டது
இன்னும் அம்மா நிலவைப்பிடித்துதரவில்லை


- aathipan - 10-02-2004

காற்றிலே மண்
காதலி கண்ணைப்பார்த்தபடி காத்திருக்கும் காதலன்


- aathipan - 10-03-2004

..


- aathipan - 10-03-2004

வெயிலுக்கு பிடித்த குடைக்குள்
எப்போது மாட்டிய விண்மீன்கள்


- aathipan - 10-06-2004

உன்னைப்பார்த்தபின்
ஏதோ இடம் மாறிவிட்டது
தேடிக்கொண்டு இருக்கிறேன்...


- aathipan - 10-06-2004

வறண்ட புல்வெளியில்
உறங்கிக்கொண்டிருக்கும் உயிர்கள்

தண்ணீர் தெளித்து எழுப்புங்கள்