![]() |
|
கைக்கூ கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கைக்கூ கவிதைகள் (/showthread.php?tid=7785) |
- aathipan - 09-28-2004 இரவெல்லாம் மழை விடிந்தபோது காணாமல் போயிருந்தது நெல்வயல் - aathipan - 09-28-2004 வீரம் பேசிய கோடரி தோத்துப்போனது வாழைந்தண்டிடம் - aathipan - 09-28-2004 கோவிலில் பக்திப்பாட்டு கூட்டம் சேர்க்கும் புூசாரி - aathipan - 09-28-2004 காவலுக்குவந்த பெண்காவலர்கள் கடைக்கண்ணால் ரசிக்கும் இளைஞர் கூட்டம் - aathipan - 09-28-2004 கட்ட மறந்த கைக்கடிகாரம் கையை உறுத்தியது அடிக்கடி - aathipan - 09-29-2004 தேங்கிநின்ற மழை நீர் குனிந்தவுன் முகம் பார்த்தேன் - aathipan - 09-30-2004 குளக்கரையில் குனிந்தபடி முகம் பார்க்கும் மரங்கள் - aathipan - 09-30-2004 பரம்பரை பரம்பரையாக நிலவைப்பிடிக்க முயற்சிக்கும் பனைமரங்கள் - aathipan - 09-30-2004 பிண ஊர்வலத்தில் தப்பித்துவீழ்ந்த ரோஜாபுூ தரையில் புரண்டு கெஞ்சும் 'மறுவாழ்வு கொடுங்கள்" - aathipan - 09-30-2004 பனைமரத்தில் சிக்கும் வரை நீ சிறிது நான் பெரிது சண்டைபோடும் காற்றாடிகள்... - aathipan - 10-01-2004 தாமரை இலையில் ஓடிவிளையாடும் நீர்துளிகள் தாம் உயர்ஜாதியென இறுமாப்புக்கொள்ளும் - aathipan - 10-02-2004 ரோஜாப்புூக்கள் தேன் எடுக்கும் பட்டாம்புூச்சி வெட்கிப்போயின வீரம்பேசிய முட்கள் - aathipan - 10-02-2004 புூ விற்கும் புூ புூ வைத்துவிட யாரும் இல்லை - aathipan - 10-02-2004 கறையான் புற்றுகள் பாம்பு ஒருநாள் வந்ததனால் நாகாத்தம்மன்கோவிலென பெயர்பெற்றது - aathipan - 10-02-2004 எனக்கும் குழந்தைபிறந்துவிட்டது இன்னும் அம்மா நிலவைப்பிடித்துதரவில்லை - aathipan - 10-02-2004 காற்றிலே மண் காதலி கண்ணைப்பார்த்தபடி காத்திருக்கும் காதலன் - aathipan - 10-03-2004 .. - aathipan - 10-03-2004 வெயிலுக்கு பிடித்த குடைக்குள் எப்போது மாட்டிய விண்மீன்கள் - aathipan - 10-06-2004 உன்னைப்பார்த்தபின் ஏதோ இடம் மாறிவிட்டது தேடிக்கொண்டு இருக்கிறேன்... - aathipan - 10-06-2004 வறண்ட புல்வெளியில் உறங்கிக்கொண்டிருக்கும் உயிர்கள் தண்ணீர் தெளித்து எழுப்புங்கள் |