Yarl Forum
'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23)
+--- Thread: 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' (/showthread.php?tid=7453)

Pages: 1 2 3 4


- Mathivathanan - 02-28-2004

[quote=kuruvikal]பிரமதாசாவையே தூண்டி விட்டதே ஜே ஆர் தானே....?! இது பற்றி நெடுமாறன் எழுதிய ஒரு நூலை பாடசாலைக் காலத்தில் படித்த போது அறிந்தோம்...அதில் பல வெளிநாட்டுத் தலைகளின் பெயர்களும் இடம்பெற்று இருந்தது....தம்பர்....!
தான் வெளிப்படையாக செய்ய முடியாததை ஏன் பிரமதாசாவைக் கொண்டு செய்துவித்திருக்க முடியாது....அவருக்கு பிரேமாதாசாவை இந்திய எதிர்ப்பாளர் என்று காட்டி அரசியலில் தன் வாரிசுகளை முன்னிலைப்படுத்தும் தந்திரமும் அதற்குள் இருந்திருக்கலாம் இல்லையா....???! ஆனால் இறுதியில் பிரேமதாஸ எல்லோரையும் ஏமாற்ற...பிறகு அவரை....யாரோ முழுதுமாக மறைத்தும் விட்டனர்....! ஏனப்பு.. கூடிக்..குலாவி தோழமை கொண்டாடிப்போட்டு கொலைசெய்தார்கள் எண்டு வெளிப்படையாச் சொன்னால் என்ன குறைஞ்சுபோவீரோ
Idea :!: :?:


- kuruvikal - 02-28-2004

பின்னால் இருந்து குத்த நினைப்போரை என்ன அநீதிக்கு அடிபணிபவர்களை ஒழிந்திருந்தும் அழிக்கலாம்.... நீதி வாழ... இப்படிச் சொல்லுது கம்பர் இராமாயனம்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea :!:


- Mathivathanan - 02-28-2004

kuruvikal Wrote:பின்னால் இருந்து குத்த நினைப்போரை என்ன அநீதிக்கு அடிபணிபவர்களை ஒழிந்திருந்தும் அழிக்கலாம்.... நீதி வாழ... இப்படிச் சொல்லுது கம்பர் இராமாயனம்...!
அதுதான் நீங்கள் முரசு கொட்டுற வீரமாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- thampu - 03-01-2004

Eelavan Wrote:....
இவற்றினை விட ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்து நிகழ்வுகளை மையப்படுத்தி பாமினி செல்லத்துரை என்னும் அவுஸ்திரேலியவிலுள்ள இலங்கைப் பெண்மணி எழுதிய சிதறிய சித்தார்த்தன் என்னும் நாவல் வாசிக்கப்பெற்றேன் நூலில் தகவல் கனம் குறைவு எனினும் பரவாயில்ல.

அந்த புத்தகம் இன்னும் நான் படிக்கவில்லை
பயனுள்ள அந்த தகவலுக்கு மிக்க நன்றிகள் ஈழவன்.


அடுத்து...........
'முறிந்த பனை' பற்றி மீள நினைப்பது கால நதியோராம் நாம் தவிர்க்கக்கூடாது என்பதைவிட தவிர்க்கமுடியாததும். இது ஈழ போராட்டத்தை ஆவணமயப்படுத்த முயன்ற முதல் புத்தகம். யாழ் பல்கலைக்கழக பின்ணணியை கொண்ட நால்வர் அதன் ஆசிரியர் பீடத்தில் இருந்து இலங்கை வரலாற்றுப் பின்புலத்தில் ஈழ போராட்டதின் நாடி பிடித்து பார்த்தது வெறும் கலாநிதி பட்டம் எடுப்பதற்கு அல்ல. இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை புலிகளின் பிரச்சார வலைவினையம் வெளிக்கொண்டுவர தட்டுத்தடுமாறி போயிருந்த காலம் - முறிந்த பனை அவற்றை ஒரளவு முழுமையாகவும் இம்மியளவு மிகைப்படுத்தாமலும் பதிவு செய்தது.

ஆனால் புத்தகத்தின் நீண்ட அத்தியாயங்கள் ஈழ போராட்டத்தின் ஆணி வேர்வரை தேடிப்பிடித்து அலசி எடுக்கிறது. புலிகள் மட்டுமல்ல மற்றைய ஈழ போராட்ட அமைப்புகளும் அவர்களால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டன.

மக்கள் தமது குரலை இழந்து வருவது குறித்து தீவிர கரிசனை கொள்ளும் அவர்களின் புத்தகம் வெளிவந்து சில மாதங்களுக்குள் ஆசிரியர் குழுவில் ஒருவரான ராஜினி திரனகம தனது வீட்டிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு சயிக்கிலில் செல்லும் போது வழமைபோல் இனம்தெரியாத இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.

இங்கிலாந்தில் வைத்தியத்துறை மேற்படிப்பை முடித்த கையுடன் தனது மண்ணில் கால் பதித்து அந்த மண்ணின் மாணவர்களுக்கு கல்வி போதிக்கபோன ராஜினி யாழ் சமூகத்தை இவ்வாறுதான் இனம் காட்டினார் மாட்டின் லூதகிங் போல

<img src='http://www.angelfire.com/ab7/thampu/martin.GIF' border='0' alt='user posted image'>
<b>
கொடியவர்களின் ஈனச் செயலுக்காக அல்ல, நல்லவர்களின் கொடூரமான மௌனத்திற்காகத்தான் நாங்கள் இந்த தலைமுறையில் வருந்தவேண்டி இருக்கிறது.</b>


- Eelavan - 03-01-2004

அது மட்டுமல்ல
ரஜனி அவர்கள் கூறிவந்த ஒரு வாக்கியம் "எனது உயிர் பறிக்கப் படுமாயிருந்தால் அது இந்த மண்ணின் தாயொருத்திக்குப் பிறந்தவனால் அன்றி அந்நியரால் அல்ல"
இதுவே கடைசியில் உண்மையானது தான் வருத்தத்திற்குரிய விடயம் இவரது கொலை கூட ஈழப் போராட்டம் பற்றிய நூல்கள் பெருமளவில் வெளிவராமலிருப்பதற்கு காரணமாக இருக்கலாம்


- yarl - 03-01-2004

முறிந்த பனையின் தரத்தை பின்னர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்னும் பெயரில் ஒனறுகஇகு பின்னால் ஒன்றாக புலிளுக்கு எதிராக அறிக்கை விட்டு தம்மை தானே தமிழ மக்கள் மத்தியில் தாழ்த்திக்கொண்டனர்.


- sOliyAn - 03-01-2004

அதோடு ஐரோப்பிய நாடுகளிலும் உட்கொலைகளால் தமக்குள்ளேயே அழிந்துபோன இயக்க மிச்சங்களும் ரஜணி திராணகமவுக்கு நீலிக் கண்ணீர்விட்டு, அவரை தங்களிலொருவராகக் காட்டிக்கொண்டனர்.


- Eelavan - 03-02-2004

அவர்கள் கண்ணீர் சிந்தியது ரஜனியை தங்களிலொருவராக காட்டுவதற்காக இல்லை கொலை செய்தது ஒரு தமிழ்க் குழு என்று அனைவருக்கும் தெரியும் அந்தச் சந்தேகம் தம்மீது விழுந்து விடக்கூடாது என்று போட்டி போட்டுக்க் கொண்டு அனுதாபம் தெரிவித்தனர்


- sOliyAn - 03-02-2004

அப்படியல்ல... இங்கு அப்போது நிகழ்ந்த இலக்கியச் சந்திப்புகளில் அவர்களுக்குப் பேச வேறு எதுவும் கிடைக்கவில்லை... என்ன செய்வது? பேசிய வாய்களுக்கு பேச ஏதாவது தேவைதானே?! இதிலே என்ன விசேசம் என்றால்... தாம் சார்ந்த குழுக்களுள் இடம்பெற்ற 'டம்மிங்'குகளில் அநியாயமாகப் பலியான எத்தனையோ ஆயிரம் இளைஞர்களை அவர்கள் மறந்த 'மனிதாபிமானம்' இருக்கிறதே! உண்மையிலேயே 'மனிதம்' உணர்ந்தவர்கள்தான்.. :oops:


- Mathan - 03-03-2004

[quote=Eelavan]அவர்கள் கண்ணீர் சிந்தியது ரஜனியை தங்களிலொருவராக காட்டுவதற்காக இல்லை [b]கொலை செய்தது ஒரு தமிழ்க் குழு என்று அனைவருக்கும் தெரியும்

எது அந்த தமிழ்க்குழு ?


- Mathan - 03-03-2004

sOliyAn Wrote:அப்படியல்ல... இங்கு அப்போது நிகழ்ந்த இலக்கியச் சந்திப்புகளில் அவர்களுக்குப் பேச வேறு எதுவும் கிடைக்கவில்லை... என்ன செய்வது? பேசிய வாய்களுக்கு பேச ஏதாவது தேவைதானே?! இதிலே என்ன விசேசம் என்றால்... தாம் சார்ந்த குழுக்களுள் இடம்பெற்ற 'டம்மிங்'குகளில் அநியாயமாகப் பலியான எத்தனையோ ஆயிரம் இளைஞர்களை அவர்கள் மறந்த 'மனிதாபிமானம்' இருக்கிறதே! உண்மையிலேயே 'மனிதம்' உணர்ந்தவர்கள்தான்.. :oops:

இந்த டம்மிங் இல்லாத தமிழ் இயக்கமே இல்லை. மனிதம் அப்படி ஒன்று எந்த தமிழ் இயக்கத்திடம் இருக்கின்றது?


- nalayiny - 03-03-2004

அது தானே. சரியான கேள்வி.


- thampu - 03-03-2004

BBC Wrote:
sOliyAn Wrote:அப்படியல்ல... இங்கு அப்போது நிகழ்ந்த இலக்கியச் சந்திப்புகளில் அவர்களுக்குப் பேச வேறு எதுவும் கிடைக்கவில்லை... என்ன செய்வது? பேசிய வாய்களுக்கு பேச ஏதாவது தேவைதானே?! இதிலே என்ன விசேசம் என்றால்... தாம் சார்ந்த குழுக்களுள் இடம்பெற்ற 'டம்மிங்'குகளில் அநியாயமாகப் பலியான எத்தனையோ ஆயிரம் இளைஞர்களை அவர்கள் மறந்த 'மனிதாபிமானம்' இருக்கிறதே! உண்மையிலேயே 'மனிதம்'
உணர்ந்தவர்கள்தான்.. :oops:

இந்த டம்மிங் இல்லாத தமிழ் இயக்கமே இல்லை. மனிதம் அப்படி ஒன்று எந்த தமிழ் இயக்கத்திடம் இருக்கின்றது?


nalayini Wrote:[அது தானே. சரியான கேள்வி.

பிபிசியின் எடுகோளும் நளாயினியின் தொடுப்பும் என்னைப்பொறுத்தவகையில் சரியானது என்பேன்.................ஆம் நூறு வீதம் சரியானது என்பேன்............

எந்தவொரு போராட்ட அமைப்பின் அரசியலையோ அதன் அடிச்சுவடுகளையோ பின்பற்றிய முன் அனுபவம் எனக்கு இல்லை. இனியும் தேவை இல்லை என்றே முழுமனதுடன் நம்புகின்றேன்.


- இராவணன் - 03-03-2004

வணக்கம் தம்பு.
உங்கள் கருத்து நீக்கப் படுவதோடு உங்களுக்கு ஒரு எச்சரிக்கையும் வழங்கப் படுகிறது.
உங்கள் கருத்துக்கள் வன்முறையை தூண்டுமாறு இருந்ததால் நீக்கப்பட்டுள்ளது.


- pepsi - 03-03-2004

நா எழுதினது எங்க போச்சு? Confusedhock:


- Mathivathanan - 03-03-2004

இராவணன் Wrote:வணக்கம் தம்பு.
உங்கள் கருத்து நீக்கப் படுவதோடு உங்களுக்கு ஒரு எச்சரிக்கையும் வழங்கப் படுகிறது.
உங்கள் கருத்துக்கள் வன்முறையை தூண்டுமாறு இருந்ததால் நீக்கப்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டுற பலகருத்து களம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கு..
***** <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- thampu - 03-03-2004

இராவணன் Wrote:வணக்கம் தம்பு.
உங்கள் கருத்து நீக்கப் படுவதோடு உங்களுக்கு ஒரு எச்சரிக்கையும் வழங்கப் படுகிறது.
உங்கள் கருத்துக்கள் வன்முறையை தூண்டுமாறு இருந்ததால் நீக்கப்பட்டுள்ளது.

<b>களமட்டுனர் இராவணன் அறிவது
எனது கருத்துகள் வன்முறை தூண்டுமாறு இருந்ததால் நீக்கியுள்ளீர்கள்......
மொத்தப்பெரிய உபகாரம் உங்களுக்கும் உங்களது அரசியல் அறிவுக்கும்.....</b>


- இராவணன் - 03-03-2004

மன்னிக்கவும் உங்கள் பிரச்சாரத்துக்கு இந்த களத்தினை அனுமதிக்க மாட்டோம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->