Yarl Forum
பிரித்தானிய தகவல்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: பிரித்தானிய தகவல்கள் (/showthread.php?tid=5711)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- Mathan - 05-07-2005

அடப்பாவி கவிதன் நான் தேர்தலில் நின்ற மாதிரி சொல்றீங்க. ஏதோ நான் எனது கருத்தை சொன்னன்.


- Mathan - 05-07-2005

[quote=MEERA]இந்த தடவை இரண்டு தமிழ் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.
ஒருவர் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்டு 186 வாக்குகளையும் மற்றவர் GREENWICH & WOOLWICH பகுதியில் போட்டியிட்டு 61 வாக்குகளையும் பெற்றுள்ளர்.

[size=18]இதில் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்ட ரதி அழகரட்ணம் என்பவர் தனக்கு தமிழ் ஊடகங்கள் சந்தர்ப்பம் தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நீங்கள் சொல்லி தான் இப்படி ஒருவர் போட்டியிட்டதே தெரியும். தமிழ் ஊடகங்கள் வாய்ப்பு கொடுத்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் வாங்கு கேட்டு சென்ற மாதிரி தெரியவில்லையே? அது தவர தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார் என்றவுடன் அதை மட்டும் வைத்து அவருக்கு வாக்களிக்க முடியாதே? தற்போதைய நிலையில் ஒரு பெரிய கட்சியுடன் (தொழிற்கட்சி, கன்சவேர்டிவ், லிபரல்) இணைந்து செயற்படுவதே நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.


- MEERA - 05-07-2005

இல்லை மதன் நீங்கள் இப்போது ஏதாவது கட்சியில் சேர்ந்தவுடன் உங்களுக்கு முன்னுரிமை தரமாட்டார்கள். அடுத்து தமிழர்கள் ஓட்டு போட்டுத்தான் மற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது முட்டாள்தனம். ஏனெனில் ஒவ்வெரு தொகுதியிலும் ஆகக் குறைந்தது 15000 வோட்டுக்களை பெற வேண்டும். எனவே தமிழர்களால் மட்டும் ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்ய முடியாது. ஆனால் தமிழ் மக்களுடைய வோட்டு பலத்தை ஒற்றுமையை இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தமிழர் போட்டியிட்டு வெளிக் காட்டலாம்.


- kavithan - 05-07-2005

Mathan Wrote:அடப்பாவி கவிதன் நான் தேர்தலில் நின்ற மாதிரி சொல்றீங்க. ஏதோ நான் எனது கருத்தை சொன்னன்.

ம்ம் அப்படி இல்லை அண்டு அக்காட்டை கேட்டன் எங்கை மதன் அண்ணாவை காணலை அவ்வளவா என்று அப்ப தான் சொன்னா, தம்பி அவர் இப்ப தேர்தலில் பிசி கண்டுக்காதைங்கோ என்று. அது தான் இங்கை பார்த்தன் ஒரு வாழ்த்து சொல்வமே என்று உடனை வாழ்த்திட்டன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MEERA - 05-08-2005

என்ன மதன் சத்தத்தை காணவில்லை.......?


- Vasampu - 05-08-2005

அதைவிட இன்னொன்றையும் கவனீத்தீர்களா?? தேர்தல் முடிவுகள் வெளிவந்த மே 6 பிளேயரின் பிறந்ததினம். அவருக்கு பிறந்தநாள் பரிசாக மீண்டும் வெற்றி பெற்றிருக்கின்றார்.

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MEERA - 05-08-2005

பிளேயருக்கு அழுத்தம் கூடுகிறது. தொழிற் கட்சியில் உள்ள பலருக்கு அவரை தொடர்ந்தும் பிரதமராக அடுத்த 3 வருடங்களுக்கு வைத்திருக்க விருப்பமில்லை.


- Mathan - 05-08-2005

தற்போதைய சூழலில் பிளேயர் தனது மூன்றாவது பதவிக்காலம் முழுவதும் பதவியில் இருக்கபோவதாக அறிவித்துள்ளார். ஆனால் தொழிற்கட்சியில் பின்வரிசை எம்பிக்களால் அதிகரித்து வரும் அழுத்தம் காரணாமாக அவரால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் பதவி விலகவேண்டி வரலாம். இந்த தேர்தலில் தொழிற்கட்சியின் ஆதரவு 161 மெஜாரிட்டி ஆசனங்களில் இருந்து 67ஆக குறைந்தற்கு பிளேயரும் ஒரு முக்கிய காரணம். பல இடங்களிலும் பிரித்தானிய மக்கள் குறிப்பாக வெள்ளை இனத்தவர் ஒரு பொய்யருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டதை காணகூடியதாக இருந்தது. ஈராக் யுத்தத்தில் பிளேயர் பொய் கூறியதால் தான் தொழிற்கட்சியின் ஆதரவு குறைந்தது என்று தொழிற்கட்சி ஆதரவு பத்திரிகையாக டெய்லி மிரர் தவிர மற்ற பத்திரிகைகள் அனைத்தும் கருத்து கூறி உள்ளன. அடுத்தவருடம் உள்ளூராட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பிளேயர் பதவி விலகி அடுத்த நிலையில் உள்ள Gordon Brownக்கு அதிகாரத்தை அளிப்பது கட்சியை பலப்படுத்த உதவும்.


- MEERA - 05-08-2005

நிச்சயமாக இவர் தனது நாற்காலியை வெகுவிரைவில் விட்டுக் கொடுக்க வேண்டும்.......


- Mathan - 05-08-2005

<!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->இல்லை மதன் நீங்கள் இப்போது ஏதாவது கட்சியில் சேர்ந்தவுடன் உங்களுக்கு முன்னுரிமை தரமாட்டார்கள். அடுத்து தமிழர்கள் ஓட்டு போட்டுத்தான் மற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது முட்டாள்தனம். ஏனெனில் ஒவ்வெரு தொகுதியிலும் ஆகக் குறைந்தது 15000 வோட்டுக்களை பெற வேண்டும். எனவே தமிழர்களால் மட்டும் ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்ய முடியாது. ஆனால் தமிழ் மக்களுடைய வோட்டு பலத்தை ஒற்றுமையை இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தமிழர் போட்டியிட்டு வெளிக் காட்டலாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எந்த ஒரு கட்சியிலும் சேர்ந்தவுடன் முன்னுரிமை தர மாட்டார்கள் தான். ஆனால் அதற்காக தனியே சுயேச்சையாக நின்றால் கொஞ்ச ஓட்டுக்களே கிடைப்பதுடன் அதனால் எதனையும் சாதிக்க முடியாது. அதனால் தமிழர்கள் அந்தந்த பகுதி தேசிய கட்சிகளுடன் சேர்ந்து இயங்குவதே நல்லது என்று நினைக்கின்றேன். அவற்றுடன் இணைந்து தமிழர்கள் பணியாற்றி எதிர்காலத்தில் வேட்பாளராக கூட வரலாம் அப்படி வராமல் போனால் கூட தொகுதி எம்பிக்களுடன் இணக்கமாக வேலை செய்து நம்து தேவைகளை பிரைச்சனைகளை புரியவைக்கலாம்.


- MEERA - 05-08-2005

உங்களுக்கு தெரியுமா LEWISHAM பகுதியில் சின்னத்தம்பி என்பவர் 41 வருடங்களாக தொழிற் கட்சியுடன் இருந்து பல வேலைத்திட்டங்களை கட்சிக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெற்றிகரமாக செய்து முடித்தவர். ஆனால் அவருக்கு தொழிற்கட்சி முன்னுரிமை வழங்கவில்லை . பின்னர் அவர் கட்சி மறிய போது அந்த கட்சி LEWISHAM பகுதி நியமன MAYOR ஆக பதவியில் இருத்தியது. 41 வருட சேவையில் தொழிற்கட்சி அவருக்கு கொடுத்தது என்ன...?


- Mathan - 05-08-2005

சின்னத்தம்பி குறித்து அறிந்திருக்கின்றேன், அவர் எந்த கட்சிக்கு மாறினார் கிறீன் பார்டிக்கா? தொழிற்கட்சி அவருக்கு என்ன செய்திருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


- MEERA - 05-08-2005

அப்படித் தான் நினைக்கிறேன்.....
மற்ற கட்சியினர் கொடுத்த பதவியை இவர்கள் கொடுத்திருக்கலாம் தானே.....?


- Mathan - 05-08-2005

அவர் குறித்து கொஞ்சம் கேள்விபட்டிருக்கின்றேன் எது உண்மை எது பொய் தெரியாது. கிரீன் பார்ட்டி மூலம் லூசியம் பகுதி மேயரானார் என்று அறிந்தேன். அவர் அத்தனை வருடங்கள் சேவை செய்திருந்தால் நிச்சயம் பதவி கொடுத்திருக்கதான் வேண்டும். அந்த சமயத்தில் அவருக்கு மேல் இன்னும் சில பெரிய தலைகள் லூசியம் பகுதியில் இருந்தார்களோ தெரியவில்லை, அப்படி இருந்திருந்தால் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்திருக்காது. இன்னொரு கட்சியில் அந்த அளவிற்கு பிரபல்யமானவர்கள் இல்லாத நிலையில் யாராவது ஒரு பிரபல்யமானவர்கள் போய் சேர்ந்தால் உடன் பதவி கொடுப்பார்கள். இது அனைத்து இடத்திலும் நடப்பது தான்.

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியில் யாழ் மாவட்டத்தில் பெரிதாக யாரும் இல்லாத நிலையில் சேந்து கொஞ்ச காலத்திலேயே மகேஸ்வரன் எம்பியாகி அமைச்சராகவில்லையா?


- MEERA - 05-08-2005

இலங்கை அரசியலும் இங்கத்தய அரசியலும் ஒன்றா...?


- Mathan - 05-08-2005

இலங்கை அரசியலுடன் ஒரேயடியாக ஒப்பிடவில்லை, ஒரு உதாரணத்திற்கு அப்படி கிரீன் பார்டியில் மக்கள் ஆதரவு பிரபல்யம் உள்ளவர்கள் இல்லாத நிலையில் அப்படி நடந்திருக்கலாம் என்று சொன்னேன். எப்போதும் பல பெரியதலைகளை ஒரு இடத்தில் இருந்தால் அனைவருக்கும் முக்கியத்துவம் கிடைக்காது, அதில் முக்கியத்துவம் கிடைக்காவர் தேவை உள்ள இன்னொரு இடத்திற்கு போனதும் உடன் அங்கீகாரம் கிடைக்கும் இது அனைத்து இடத்திலும் நடப்பது தான். பல நிறுவனங்களில் கூட பணியாற்றுபவர் இன்னொரு இடத்திற்கு போனவுடன் கூடிய சம்பளமும் பதவி உயர்வும் கிடைக்கிறதே அது போல இருக்கலாம் என்று சொன்னேன். இவர் கிரீன் கட்சியில் இணைந்து சிறிது காலத்தில் பதவி கொடுத்தார்கள் என்றால் அந்த கட்சியில் ஏற்கனவே இருந்து பதவி கிடைக்காமல் இவருக்கு கிடைத்தவுடன் விரக்தி அடைந்திருப்பார்கள் அல்லவா?

மேலும் அப்போது என்ன நடந்தது என்பதும் லூசியம் பகுதி நிலவரமும் எனக்கு முழுமையாக சரியாக தெரியாது. அவர் எங்கே இருக்கின்றார் என்று தெரிந்தால் தனிமடல் மூலம் சொல்லுங்கள் கேட்டு எழுதுகின்றேன்.


- MEERA - 05-08-2005

அவரை தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.


- MEERA - 05-08-2005

<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->இலங்கை அரசியலுடன் ஒரேயடியாக ஒப்பிடவில்லை, ஒரு உதாரணத்திற்கு அப்படி கிரீன் பார்டியில் மக்கள் ஆதரவு பிரபல்யம் உள்ளவர்கள் இல்லாத நிலையில் அப்படி நடந்திருக்கலாம் என்று சொன்னேன். எப்போதும் பல பெரியதலைகளை ஒரு இடத்தில் இருந்தால் அனைவருக்கும் முக்கியத்துவம் கிடைக்காது, அதில் முக்கியத்துவம் கிடைக்காவர் தேவை உள்ள இன்னொரு இடத்திற்கு போனதும் உடன் அங்கீகாரம் கிடைக்கும் இது அனைத்து இடத்திலும் நடப்பது தான். பல நிறுவனங்களில் கூட பணியாற்றுபவர் இன்னொரு இடத்திற்கு போனவுடன் கூடிய சம்பளமும் பதவி உயர்வும் கிடைக்கிறதே அது போல இருக்கலாம் என்று சொன்னேன். இவர் கிரீன் கட்சியில் இணைந்து சிறிது காலத்தில் பதவி கொடுத்தார்கள் என்றால் அந்த கட்சியில் ஏற்கனவே இருந்து பதவி கிடைக்காமல் இவருக்கு கிடைத்தவுடன் விரக்தி அடைந்திருப்பார்கள் அல்லவா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதற்கு தான் நாங்கள் மற்ற கட்சியில் சேர்வதிலும் பார்க்க சுதந்திரமாக செயற்படலாம். நாட்கள் எடுக்கும் தான் ஆனால் எமது அடுத்த தலை முறையினராவது தமது கால்களில் நிற்பார்கள்....


- Mathan - 05-08-2005

இந்த முறையில் கொஞ்ச ஓட்டுகள் கிடைக்கும் தேர்தலில் போட்டியிட்டார் என்ற பெயர் தேர்தல் முடிந்த பின் கிடைக்கும் அது தவிர என்ன கிடைக்கும்.

அது தவிர இதில் நானும் நீங்களும் இன்னும் சிலரும் சேர்ந்து பணியாற்றுகின்றோம் என்று வைத்துகொள்ளுங்கள். அதில் ஒருவருக்கு முக்கியத்துவம் இல்லை என்றவுடன் தனியாக போய் இன்னொன்றை ஆரம்பிப்பார். புல சூழ்நிலையில் தற்போதைய நிலையில் தொழிற்கட்சி சிறந்தது என்பது என் கருத்து.


- MEERA - 05-08-2005

இல்லை மதன் நாம் நமக்கு என்று தனியாகவிருப்பதில் தவறேதும் இல்லை என்று நினைக்கின்றேன்...?