![]() |
|
மணிமேகலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: மணிமேகலை (/showthread.php?tid=3582) |
- Rasikai - 08-26-2005 Vishnu Wrote:தற்சமயம் கைவசம் கொஞ்சம் பிரச்சினைகளும் உள்ளன.. என்ன பிரச்சினைகள் சொல்லுங்கள் முடிந்தால் உதவுகிறேன் :roll: - Vishnu - 08-26-2005 Rasikai Wrote:Vishnu Wrote:தற்சமயம் கைவசம் கொஞ்சம் பிரச்சினைகளும் உள்ளன.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்கள் பிரச்சினைகள் எனது பிரச்சினைகள் என்று சொல்லுவீர்கள் என்பதற்காக சொன்னேன். இருப்பினும் நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இலங்கையில் இருக்கும் போது இப்படியான புத்தகங்கள் சில நானும் படித்து இருக்கிறேன். உங்களிடம் இருக்கும் மணிமேகலை.. சுருக்கமான புத்தகமா.. அல்லது விரிவாக.. அனைத்து பகுதிகளும்.. உள்ள புத்தகமா?? - Rasikai - 08-26-2005 Vishnu Wrote:இலங்கையில் இருக்கும் போது இப்படியான புத்தகங்கள் சில நானும் படித்து இருக்கிறேன். உங்களிடம் இருக்கும் மணிமேகலை.. சுருக்கமான புத்தகமா.. அல்லது விரிவாக.. அனைத்து பகுதிகளும்.. உள்ள புத்தகமா?? நான் தற்போது வாசித்த புத்தகம் பாடலுடன் விளக்கம் உள்ள புத்தகம் வாசிகசாலையில் பெற்றேன். சுருக்கமும் இல்லை . விரிவும் இல்லை. - Vishnu - 08-26-2005 Rasikai Wrote:நான் தற்போது வாசித்த புத்தகம் பாடலுடன் விளக்கம் உள்ள புத்தகம் வாசிகசாலையில் பெற்றேன். சுருக்கமும் இல்லை . விரிவும் இல்லை. நன்றிகள் உங்கள் தகவலுக்கு.... தமிழ் பக்கத்தில் தேவை இல்லாத அலட்டலைகுறைப்பது நன்று. விடைபெறுகிறேன்... மேலும் உங்களது ஆக்கத்தை தாருங்கள். - Mathan - 08-27-2005 பழைய கதைகள் படிக்க எனக்கு நல்ல விருப்பம். ஆனால் இங்கு அவற்றை படிக்க வாய்ப்புகள் குறைவு. அந்த நிலையில் கதையை தட்டச்சு செய்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள். சலிக்காமல் கதையை தொடர்ந்து தாருங்கள். மீண்டும் நன்றி ரசிகை. - Rasikai - 08-27-2005 Mathan Wrote:பழைய கதைகள் படிக்க எனக்கு நல்ல விருப்பம். ஆனால் இங்கு அவற்றை படிக்க வாய்ப்புகள் குறைவு. அந்த நிலையில் கதையை தட்டச்சு செய்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள். நல்லது மதன் மணிமேகலை கதை முடிந்துவிட்டது. நேரம் கிடைத்தால் வேறு கதை தருகிறேன். - Rasikai - 08-30-2005 எதை விட்டுவிட வேண்டுமோ, எதற்காக அவஸ்தைப் பட வேண்டுமோ, அதிலேயே மனத்தைச் செலுத்துகின்றவர் கரண சுகத்தைத் தேடுகின்றவர் ஆவர். தன் சொந்த நலனை விட்டுவிட்டு பிறர் நலனைக் கண்டு பொறாமை படுகின்றவர் ஆவர். பிரியமுள்ளவரிடம் நெருக்கம் கூடாது. அதே போன்று விருப்பமில்லாதவரிடமும் நெருக்கம் கூடாது. பிரியமுள்ளவரைக் காண்பதும், பிரியமில்லாதவரைக் காண்பதும் வேதனை தருவதாகும். ஆகவே எதன் மீதும் அன்பு செலுத்த வேண்டாம்; ஏனெனில் பிரியமுள்ளவர்களிடமிருந்து பிரிவது வேதனை தரும். பிரியமில்லாதவரிடம் அன்பில்லை, அதனால் வேதனைதான் மிஞ்சும். அளவிட முடியாத அன்பிலிருந்துதான் வேதனை பிறக்கிறது. அங்கிருந்துதான் பயமும் பிறக்கிறது. பந்தத்திலிருந்து விடுபட்டவனுக்கு வேதனை இல்லை. பயமும் இல்லை. பிரியத்திலிருந்து பிறப்பதுதான் வேதனை; அன்பிலிருந்து பிறப்பதுதான் பயம்; இதிலிருந்து விடுபட்டவனுக்கு வேதனையும் பயமும் கிடையாது. பந்தப் பிடிப்பிலிருந்து வேதனை பிறக்கிறது. அதிலிருந்து பயமும் பிறக்கிறது. பந்தப் பிடிப்பிலிருந்து விடுபட்டவனுக்கு வேதனையும் பயமும் இல்லை. பேராசையிலிருந்து வேதனை பிறக்கிறது. பேராசையிலிருந்து பயம் பிறக்கிறது. பேராசையிலிருந்து முற்றிலும் விடுபட்டவனுக்கு வேதனை இல்லை, பயமும் இல்லை. எதையும் துல்லியமாகப் பார்க்கவும், நற்குணங்களுடன் நல் வாழ்க்கையையும், சத்தியத்தையும் உணர்ந்தவர்தான், எதை நிறைவேற்ற வேண்டுமோ, அதை நிறைவேற்றும் ஆற்றல் மிக்கவர். அவரை மக்கள் அன்புடன் ஏற்றுக் கொள்வார்கள். சிற்றின்பத்தில் சிக்கிக் கொள்ளாதவரும் தியானத்தின் பலனை அறிந்து அதிலே நிலைத்திருப்பவரும், விவரிக்க முடியாத "நிர்வாணத்தை" சதா எண்ணிக் கொண்டிருப்பவரும் யாரோ, அவரே சன்யாசியின் மூன்றாவது கட்டத்தை அடைந்தவராவார். நல்ல காரியங்களைச் செய்து இப்பிறவியை விட்டு அடுத்த பிறவிக்குச் செல்பவரை, அவர் முற்பிறவியில் செய்த நல்ல காரியங்களே அவரது சுற்றத்தாரைப் போல் வரவேற்கும். - Rasikai - 08-30-2005 ஒருவர் கோபத்தை கைவிட வேண்டும். தற்பெருமையை விட்டு விடவேண்டும். தற்புகழ்ச்சியை விட்டு விடவேண்டும். அப்படிப்பட்ட ஆசையற்றவனின உடலையும் மனத்தையும் துன்பம் பீடிக்காது. சாரதியானவன் தான் ஓட்டும் இரதத்தை எப்படிக் கடடுப்படுத்துகிறானோ அப்படித்தான் வெகுண்டெழும் கோபத்தை அடக்க வேண்டும். அப்படிப்பட்டவரே திறமையான சாரதி. மற்றவர் பெயரளவில்தான் சாரதி. கோபத்தை அன்பினாலும், தீயதை நன்மையாலும் வெற்றி காணமுடியும்; அதேபோல் கருமியை ஈகையாலும், பொய்யரை மெய்யினாலும் வெற்றி கொள்ள முடியாது. சத்தியத்தைப் பேசு; கோபத்திற்கு அடிமை ஆகாதே; கேட்டால் உன் பொருளில் சிறிது கூட கொடுக்கலாம்; இம்மூன்று தன்மையாலும் ஒருவர் தெய்வம் இருக்கும் இடத்தை அடைய முடியும். துறவிகள் மற்றவர்களுக்குத் தீமை செய்யார். பிற உடலைத் துன்புறுத்த மாட்டார். இறவாத நிலைக்குச் செல்வார். அவர் என்றும் வேதனை கொள்ள மாட்டார். இரவு பகலாக யாரொருவர் விழிப்புடன், ஒழுங்குடன் இருக்கிறாரோ, அவர் "நிர்வாணத்திற்கு" உரியவர். அவர்களிடமுள்ள அழுக்குகளும், குறைபாடுகளும் மறைந்து போய்விடும். இது நேற்று இன்று அல்ல, தொன்றுதொட்டே உள்ளது. சும்மா இருப்பவர்களை அவர்கள் குறை கூறுவார்கள். அதிகம் பேசுபவர்களை குறை கூறுவார்கள். மிதமாக பேசுபவர்களையும் குறை கூறுவார்கள். அவர்கள் குறை கூறாதவர்கள் யாருமில்லை. முற்றிலுமாகப் போற்றப்படுபவரும், முற்றிலுமாகத் தூற்றப்படுபவர்களும், எப்போதும் இருந்ததுமில்லை இனி இருக்கப் போவதுமில்லை. இரவு பகலாய் நெறி தவறாத அறிவாளிகள், அனைத்தையும் அறிந்த குணவானை, அறிஞர்கள் போற்றும்போது, யார்தான் அந்தப் புடம் போட்ட பொற்காசை குறை கூற முடியும்? ஆண்டவரே அவரைப் போற்றுவார். அவரைப் பிரம்மனும் போற்றுவாரே! அருவருக்கத்தக்க வார்த்தைகளைச் சொல்லாது ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். தவறான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்துவதைக் களைய வேண்டும். அத்துடன் தூய்மை மிகுந்த வார்த்தைகளைப் பேசப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிஞர்கள் உடலைக் கட்டுப்படுத்துவர். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவர். மனத்தைக் கட்டுப்படுத்துவர். அவர்கள் உண்மையாகவே கட்டுப்படுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள். புத்தர். - sathiri - 08-30-2005 நான் நினைக்கிறன் சிங்களவர் கும்பிடுற புத்தரும் உந்த வசனங்களை சொன்ன புத்தரும் வேறைவேறை ஆக்கள் எண்டு பிள்ளை ரசிகா நீர் என்ன நினைக்கிறீர் - Thala - 08-30-2005 sathiri Wrote:நான் நினைக்கிறன் சிங்களவர் கும்பிடுற புத்தரும் உந்த வசனங்களை சொன்ன புத்தரும் வேறைவேறை ஆக்கள் எண்டு பிள்ளை ரசிகா நீர் என்ன நினைக்கிறீர் சாத்திரி !.... நான் நினைக்கிறன். (மகததில் இருந்து,) இப்ப ஒரிசா, அருணாசல் பிரதேசத்தில புத்தர் பாளி மொழீல சொன்னது உவைக்கு சிங்களத்தில விளங்கேல்லை... எதோ விளங்கின மட்டும் குப்பை கொட்டீனம்.... - RaMa - 08-31-2005 நன்றி ரசிகை. முன்பு படித்த ஞாபகம். ஆனால் ஒரே நேரத்தில் அலுப்புத் தட்டமால் வாசிக்க மிக மிக சுருக்கமாக தந்துள்ளீர்கள். - Rasikai - 08-31-2005 Thala Wrote:sathiri Wrote:நான் நினைக்கிறன் சிங்களவர் கும்பிடுற புத்தரும் உந்த வசனங்களை சொன்ன புத்தரும் வேறைவேறை ஆக்கள் எண்டு பிள்ளை ரசிகா நீர் என்ன நினைக்கிறீர் எனக்கும் அந்த சந்தேகம் தான் சாத்திரி!!! சிலவேளைகளில் தல சொன்னமாரி பாளி மொழியில இருக்கிறதை சிங்கள மொழிக்கு மாத்தும் போது பிழையா விளங்கிட்டினமோ யாரு கண்டா? :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-31-2005 Mathana Wrote:நன்றி ரசிகை. முன்பு படித்த ஞாபகம். ஆனால் ஒரே நேரத்தில் அலுப்புத் தட்டமால் வாசிக்க மிக மிக சுருக்கமாக தந்துள்ளீர்கள்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 08-31-2005 நன்றி, ரசிகை. உங்கள் பணி தொடரட்டும். - Mathan - 09-02-2005 ம் புத்தரின் போதனைகள் நன்றாக இருக்கின்றதும், ஆனா அதை யாரும் கடைபிடிப்பது சாத்தியமா என்று தான் தெரியலை. அனைவரும் நிச்சயம் இதில் ஏதாவது ஒன்றையாவது கடைபிடிக்காமல் இருப்போம், தகவலுக்கு நன்றி ரசிகை, - kuruvikal - 09-02-2005 <b>அறிஞர்கள் உடலைக் கட்டுப்படுத்துவர். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவர். மனத்தைக் கட்டுப்படுத்துவர். அவர்கள் உண்மையாகவே கட்டுப்படுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள்.</b> <b>ஒருவர் கோபத்தை கைவிட வேண்டும். தற்பெருமையை விட்டு விடவேண்டும். தற்புகழ்ச்சியை விட்டு விடவேண்டும். அப்படிப்பட்ட ஆசையற்றவனின உடலையும் மனத்தையும் துன்பம் பீடிக்காது.</b> இவை மிகவும் நிதர்சனமானவை...எல்லோருக்கும் பொதுவானவை..! புத்தன் அநுபவித்துச் சொல்லியும் புத்தியில் ஏறாதவர்களாய்..புத்தன் வழியில் நிற்கின்றனர் பலர்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 09-02-2005 அதில் பல போதனைக்களும் எல்லோருக்கும் பொதுவானவை என்று தான் நினைக்கின்றேன். ஆனால் இவற்றை பின்பற்றுவது உண்மையிலேயே கடினம் என்பதுடன் பின்பற்றுபவர்களும் வெகு குறைவு. நாம் இவற்றை பின்பற்றுகின்றோம் என்று வாதத்திற்காக சொல்லலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி செய்வதில்லை என்பதுதான் நிஜம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 09-02-2005 அதில் சிலது துறவிகளுக்கானது என்று நினைக்கிறம்.. மக்களுக்கானதாக இல்லை..! வாழும் சாதாரண மனிதருக்குள் அன்பு, பிரியம் அவசியம்....இல்லை வாழ்க்கையை விரும்பி விரும்பியபடி வாழ முயலாயினம்..! ஒரு இடத்தில் கோபத்தை அன்பால் தீர்க்கலாம் எனும் புத்தன்...அடுத்த இடத்தில் பிரியத்தைக் கண்டும் பயப்பிடுகிறான்...! மன உடல் அடக்கம் உள்ளவன் ஏன் பிரியத்துக்கு அஞ்சுகிறான்..??! பிரியமில்லாமல் எப்படி ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு அன்பு போய்ச்சேரும்..கோவத்தை சாந்தப்படுத்த முடியும்...??! பிரியமே அன்பில் இருந்துதானே எழுகிறது...!
- Mathan - 09-02-2005 ம் சிலது துறவிகளுக்கானது தான் அதனால் தான் பல என்றூ எழுதினேன், முழுவதும் என்று எழுதவில்லை. அதுதவிர ஒரு மனிதபிறவியாய் புத்தரால் கூட இவற்றை முழுமையாக கடைப்பிடிக்க முடியாது தான். - வெண்ணிலா - 09-05-2005 [quote]பிரியமுள்ளவரிடம் நெருக்கம் கூடாது. அதே போன்று விருப்பமில்லாதவரிடமும் நெருக்கம் கூடாது. பிரியமுள்ளவரைக் காண்பதும், பிரியமில்லாதவரைக் காண்பதும் வேதனை தருவதாகும். ஆகவே எதன் மீதும் அன்பு செலுத்த வேண்டாம்; ஏனெனில் பிரியமுள்ளவர்களிடமிருந்து பிரிவது வேதனை தரும் நிச்சயமாக யார் மீதும் பிரியம் வைத்துவிட்டு பிரிவது என்பது எவ்வளவு வேதனையானது என்பது தெரியுமா? கொடுமையிலும் கொடுமை பிரிவு என்பது.
|