Yarl Forum
தீபங்கள் பேசும்..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தீபங்கள் பேசும்..... (/showthread.php?tid=3057)

Pages: 1 2 3 4 5 6


- Muthukumaran - 10-12-2005

<b>பத்தாவது கவிதை</b>

<b>விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!</b>


- RaMa - 10-12-2005

முத்துக்குமாரன் 10வது கவிதையும் நல்லாயிருக்கு


- வெண்ணிலா - 10-12-2005

புன்னகையால் தாக்கிட்டாவா? நல்லாக இருக்கு மு குமரன்.


- அனிதா - 10-12-2005

[quote=Muthukumaran]<b>பத்தாவது கவிதை</b>

<b>விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!</b>

ஆகா.. நல்லாயிருக்கு கவிதை ..நல்லா எழுதுறீங்க குமரன் அண்ணா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Muthukumaran - 10-12-2005

நன்றி ரமா, வெண்ணிலா, அனிதா...

தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. எனது குடும்பத்திலிருப்பவர்கள் தவிர்த்து யாழில்தான் என்னை குமரன் என்று அழைக்கிறார்கள். பள்ளி கல்லூரி நண்பர்கள் எல்லாம் முத்து என்றே அழைப்பார்கள்... அப்பாவும் நானும் போகும் போது முத்து என்றழைக்க இருவரும் திரும்பி பார்த்தது நல்ல சுவையான நிகழ்ச்சி...

என்ன ஒரு வருத்தம்

படிக்கிறவர்கள் எல்லாம் அன்ணா என்று சொல்லி விடுகிறார்கள். :oops: :oops:

ஆனால் எனக்கு தங்கைகள் என்றால் கொள்ளைப்பிரியம். அதனால் அப்படி அழைப்பதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே....


- Muthukumaran - 10-13-2005

<b>பதினொன்றாவது கவிதை....</b>

<b>நகைக்கடை -
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்,
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்...,
</b>


- lollu Thamilichee - 10-13-2005

நன்றாய் இருக்கிறது
உங்கள் கவிதைகள்
வாழ்த்துக்கள்..!!

அப்போ தாலியை
யார் பார்ப்பது
அவசரமாய் ??

:oops: :oops: :oops:


- sabi - 10-13-2005

கவிதை எல்லாம் மிக நன்றாயிருக்கிறது முத்து அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 10-14-2005

[quote=Muthukumaran]<b>பதினொன்றாவது கவிதை....</b>

<b>நகைக்கடை -
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்,
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்...,
</b>

கவிகள் அருமை குமரன்...

[quote]அப்போ தாலியை
யார் பார்ப்பது
அவசரமாய் ?? [/quote]

அம்மாதான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்போ பணத்தை
யார் பார்ப்பது
அலுப்பாய்?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 10-14-2005

கவிதை நல்லாயிருக்கு குமரன் அண்ணா .. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Muthukumaran - 10-15-2005

நன்றி லொள்ளு தமிழச்சி, சபி, பிரியசகி, அனிதா


- Mathan - 10-16-2005

[quote=Muthukumaran]<b>பத்தாவது கவிதை</b>

<b>விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!</b>

நெருங்க விலகுவதும்
விலக நெருங்குவதும்
காதலியின் இயல்பு தான் முத்துகுமரன் :wink:

உங்களுடைய கவிதைகளை தொடர்ந்து தாருங்கள்.


- Muthukumaran - 10-16-2005

<b>பனிரண்டாவது கவிதை....</b>


<b>ஊடலால்
இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.
தூரத்தில் சிரித்த
சின்ன குழந்தையின் உதட்டில்
அனிச்சையாய் கூடின
நம் உயிர்கள்..</b>


- Vasampu - 10-16-2005

சின்னக் குழந்தையின் உதடுகள் சேர உங்கள் இடைவெளியும் குறைந்ததோ

:roll: :roll:


- Muthukumaran - 10-16-2005

Vasampu Wrote:சின்னக் குழந்தையின் உதடுகள் சேர உங்கள் இடைவெளியும் குறைந்ததோ

:roll: :roll:

இல்லை. நான் சொல்ல வந்தது அதுவல்ல. இன்னும் கொஞ்சம் அந்தக் காட்சியை கவனியுங்கள்....


- Vasampu - 10-16-2005

அந்த குழந்தைக்கு இருவரும் ஒரே நேரத்தில் பறக்கும் முத்தங்கள் வழங்கினீர்களா???


- Vishnu - 10-16-2005

நான் விளங்கி கொண்டது சரியோ பிழையோ தெரியல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்கள் கவிதைகள் பார்த்தேன் நண்பரே. அருமையான கவிதைகள்... மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.


- RaMa - 10-17-2005

குமரன் அண்ணா உங்கள் 11வது 12வது கவிதைகளும் சுப்பர். தொடர்ந்து எழுதுங்கள்


- Muthukumaran - 10-17-2005

Vasampu Wrote:அந்த குழந்தைக்கு இருவரும் ஒரே நேரத்தில் பறக்கும் முத்தங்கள் வழங்கினீர்களா???

இல்லை. காதலர்கள் சண்டை போட்டு பேசாமல் அமர்ந்திருந்த போது தூரத்தில் எச்சில் வடிய விளையாடிக்கொண்டிருக்கும் சின்னக் குழந்தையை ரசிக்கிறார்கள். இருவருக்கும் குழந்தைகள் என்றால் பிரியம். அந்தவகையில் தங்கள் கோபம் மறைந்து மறுபடியும் ராசியாகி விடுவதுதான் கவிதை....

காதல் கவிதைக்கு இது மாதிரி விளக்கம் சொல்வதே தவறு..
எப்படி பார்க்கிறீர்களோ அதே அளவிற்கு ரசிக்கலாம்...


- வெண்ணிலா - 10-17-2005

முத்துக்குமரன் தங்கள் கவிதையும் விளக்கமும் அருமை. நன்றி விளக்கத்துக்கு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->