![]() |
|
S Lanka gets radars from India - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50) +--- Thread: S Lanka gets radars from India (/showthread.php?tid=1736) |
இலங்கைக்கு 2 ராடர்களை வழங்கியது இந்தியா - adsharan - 12-29-2005 இலங்கைக்கு 2 ராடர்களை வழங்கியது இந்தியா யுத்தநிறுத்தத்தை தொடர கொழும்புக்கு அறிவுறுத்தல்? இந்திய சமஷ்டி பற்றி ஜனாதிபதி மகிந்தவுக்கு இன்று விளக்கமளிக்க ஏற்பாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் வேளையில் இந்தியா, இலங்கைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 இராணுவ ராடர்களை வழங்கியுள்ளது. தாழ்ந்த மட்டத்தில் செல்லும் போர் விமானங்களை கண்டறியக்கூடிய இந்த ராடர்கள் வழங்கப்பட்டிருக்கின்றமை உயிரழிவை ஏற்படுத்தாத இராணுவ உதவிகளை 5 வருடங்களின் பின்னர் புதுடில்லி கொழும்புக்கு வழங்க ஆரம்பித்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்த உடன்பாடு இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதிலும், கைமாற்றலை, பாதுகாப்பு அமைச்சு தகவல் தருநர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால் மேலதிக விபரங்களை அளிக்கவில்லையென சென்னையிலிருந்து வெளியாகும் `இந்து' ஆங்கில நாளேடு நேற்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளது. தமிழர் பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு காண்பதற்கு கொழும்பை ஊக்குவிக்காத இந்திய- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை நகல் வரைபின் அடிப்படையிலேயே ராடர் விநியோகம் இடம் பெற்றுள்ளதாக ஏனைய தகவல் தருநகர்கள் சுட்டிக்காட்டினர். அதேவேளை, வான் மார்க்க நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் பேராற்றலைப் பெறக்கூடிய சாத்தியப்பாட்டுக்கு எதிராக இலங்கையின் பாதுகாப்பை இது வலுப்படுத்துகின்றது. தற்போது, விடுதலைப் புலிகள் இரண்டு இலகுரக விமானங்களை வைத்துள்ளார்கள். அத்துடன் அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இரண்டு விமான ஓடு பாதைகளை அமைத்துள்ளதாக நம்பப்படுகின்றது. ஆனால், இந்த அளவிலான விமானங்களை ராடரால் கண்டறிய முடியாது என தகவல் தருநர்கள் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து 2000 இல் விரைவு ரோந்துப்படகுகள் உட்பட உயிரழிவை ஏற்படுத்தாத இராணுவத் தளபாடங்களை இந்தியா வழங்கியது. ஆனால், 1980 களின் இறுதிப் பகுதியில் இராணுவ தளபாட விநியோகங்களை நிறுத்தியதைத் தொடர்ந்து உயர் தொழில்நுட்ப விநியோகங்களை மேற்கொள்வதை அது பொதுவாக தவிர்த்து விட்டது. இராணுவத் தளபாடங்களை இலங்கை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதில் பாகிஸ்தான் ஆர்வம் காட்ட ஆரம்பித்த பின்னர் இந்தியா ராடர் விநியோகத்திற்கு இணங்கியது என்று தகவல் தருநர்கள் தெரிவித்தனர். தனது கரைகளுக்கு அண்மையில் பாகிஸ்தான் கண்காணிப்புக் கருவியை நிலைப்படுத்தும் எண்ணக்கருவை இந்தியா அசௌகரியமாக உணர்ந்ததனால் இந்தவருட ஆரம்பத்தில் கொழும்பிற்கு முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வார்சிங் வருகை தந்தபொழுது விநியோகத்தை முறைப்படியாக அறிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பாரத் எலக்ரோனிகஸ் நிறுவனம் ராடர்களை தயாரித்து இந்திய விமானப்படைக்கு இந்திரா ஐஐ ராடர்களை விநியோகிக்கின்றது. அதுதான் ராடர்களை கொழும்பிற்கு கையளித்துள்ளது. பாதுகாப்பு உடன்படிக்கை முதலில் வரையப்பட்ட பின்னர் இரண்டு வருடங்களாக முட்டுக்கட்டை நிலையில் இருக்கின்ற போதிலும், இரண்டு நாடுகளும் இராணுவ மட்டத்திலான தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளதுடன் இம்மாத முற்பகுதியில் முதன்முதலாக கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்தின. அண்டை நாடுகளின் கடற்படைகளுக்கான கூட்டுப் பயிற்சியை இந்தியா நடத்தும் பொழுது அடுத்த மாதம் இரண்டு கடற்படைகளும் சந்திக்கக் கூடும். இராணுவ தளபாட வழங்கல் ஏற்பாடுகள் மிக மெதுவாகவே இடம் பெற்றபோதிலும் பெரும்பாலான இலங்கை இராணுவ அதிகாரிகள் தமது தொழில் வாழ்க்கையில் ஏதாவதொரு காலகட்டத்தில் இந்தியாவில் பயிற்சிபெற்றவர்கள் என்பதனால் இருதரப்பு ஆயுதப்படைகளைச் சேர்ந்தோர் நெருங்கிய உறவால் மகிழ்ச்சியடைந்தனர் என்று தகவல் தருநர்கள் கூறினர். விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறைபாடுகள் இருந்தபோதிலும் அது தொடர்ந்து செயற்படுத்தப்படவேண்டும் என்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதிக்கு அந்நாடு தெரிவிக்கும். மகிந்த ராஜபக்ஷவின் வருகையானது இலங்கைப் படையினர் மீதான விடுதலைப் புலிகளின் அண்மைய தாக்குதல்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்பவற்றை இருதரப்பும் கலந்துரையாடும் சந்தர்ப்பத்தை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயன்றைய நிலக்கண்ணித் தாக்குதல் உட்பட கடந்த ஒரு மாதத்தில் விடுதலைப் புலிகள் 50 இற்கு மேற்பட்ட படையினரை கொன்றுள்ளதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் பாதுகாப்பு நிலைமை குறித்து மகிந்த ராஜபக்ஷ என்ன சொல்லப்போகின்றார் என பதைக்கேட்க இந்தியா விரும்பியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய சூழ்நிலையில் இந்தியா ஆற்றக் கூடிய பாத்திரம் குறித்த இலங்கை ஜனாதிபதியின் கருத்துத் தொடர்பிலும் ஆர்வம் காணப்படுகின்றது. அண்மையில் தாக்குதல்கள் இடம்பெற்ற போதிலும் மீண்டும் போர் எற்படாது என்று புதுடில்லி நம்புவதுடன் விடுதலைப் புலிகளின் வெளிப்படையான ஆத்திரமூட்டல்களிருந்தபோதிலும் இலங்கைப் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டை வெளிக்காட்டியுள்ளதை பாராட்டியுள்ளது. நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக " ஒற்றையாட்சி முறையின் கீழ் சாத்தியமான உயர்ந்த பட்ச அதிகாரப் பகிர்வு " என்று ஜனாதிபதி குறிப்பிடுவது என்ன என்ற விளக்கத்தை இந்தியா எதிர்பார்க்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதேவேளை, உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரியால் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியாவின் மத்திய மாநில உறவு மற்றும் அதிகாரப்பகிர்வு பற்றிய விளக்கமொன்று அளிக்கப்படும். http://www.thinakural.com/New%20web%20site...Important-1.htm - Luckyluke - 12-29-2005 இந்தியா இலங்கையில் போர் தொடர்வதை விரும்பவில்லை.... இது தான் இந்தியாவின் நிலை.... - rajathiraja - 12-29-2005 இது தொடர்பான செய்தியை நான் இனோரு thread l பதிவு செய்துள்லேன். - அருவி - 12-29-2005 Luckyluke Wrote:தாய் தமிழத்தில் இருப்பவர்களிடமும் ஈழ கலாச்சாரத்தின் பாதிப்பு உண்டு... ஈழத்தமிழர்கள் மீது அன்பும் உண்டு.... அதனால் தான் எம் தானைத் தலைவர் இந்திய இறையாண்மையை மீறி அமைதிப்படையை வரவேற்கச் செல்லவில்லை.... அவரது ஆட்சி கலைக்கப்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.... ஈழத்தமிழருக்காக பதவியை இழந்த வரலாறு எங்களுடையது... ஆனால் அந்தத் தலைவன் இந்த கருத்துக் களத்தில் அவமானப்படுத்தப் பட்டது கண்டு இரத்தக்கண்ணீர் வடிக்கிறது என் மனம்...... இந்தக்கருத்திற்கு அப்பவே நாம் ஆதாரம் கோரினோம் இன்னும் கிடைக்கலயே. அதைவிடுத்து மீண்டும் இது தேவையா??? :roll: :roll: அக்கால தமிழக இந்திய அரசியற் காரணங்கள் தான் வரவேற்கப்போகாததற்குக் காரணம் என்று சொல்கிறோம். :!: - rajathiraja - 12-29-2005 இல்லை திரு அருவி !!! திரு கருனானிதி அவர்கள் இந்திய ராணுவதை வறவேற்க செல்லவில்லை. இது தொடர்பாக எந்த அரசியில் காரணம் இல்லை. அந்த கால கட்த்தில் திரு கருனானிதி அவர்களை எதிர்து யாரும் அரசியில் செய்யவில்லை. ஜெயா அப்போது கத்து குட்டி அ.தி.மு.க இரண்டாக உடைந்து இருந்தது.காங்கிரஸ் தமிழ் நாட்டில் வழக்கம் போல் ஆதரவு இல்லாது இருந்தது. வேண்மானால் ஆங்லிலதில் உள்ள Jain Commison report yai Post செய்கிரேன். படித்து பாருங்கள். - Luckyluke - 12-29-2005 கலைஞர் எப்போதுமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர் தான்.... இது என் தாயின் மீது சத்தியம்.... - narathar - 12-29-2005 சரியப்பா எல்லாரும் ஆதரவு என்றால் எல்லாருமா ஒருங்கிணைந்து இப்போது இந்திய அரசாங்கம் மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கும் இராணுவ உதவியை நிறுத்தச் சொல்லுங்கள்.ஐரோப்பிய யூனியனிடம் புலிகளைத் தடை செய்யச் சொல்லிக் குடுக்கும் அழுத்தங்களை நிப்பாட்டச் சொல்லுங்கள். எல்லாருமா ஒருங்கிணைந்து ஆதரவு தாருங்கள். நாளை ஈழம் மலர்ந்தால் நீங்கள் எல்லாரும் தாராளமாக அங்கு வரலாம்.எமது இரண்டு நாடுகளுக்கிடயேயான தொழில் வாய்ப்பை, பொருளாதாரத்தைப் பெருக்கலாம்.இப்படி கன நல்ல விசயம் செய்யலாம்.அதை விட்டுட்டு பழய விடயங்களையே திருப்பி,திருப்பிக் கதைப் பதில் பயன் இல்லை. செயற்பாட்டு ரீதியாக ஒற்றுமைக்கான வழிகளைக் காணுங்கள். உங்கள் அரசியல் வாதிகளிடமும் பதிரிகைக் காரர் இடமும் இதற்கான அழுத்தங்களைச் செய்யுங்கள். சிங்களவர் எப்போதுமே இந்திய விரோதிகள் இது அவர்களின் சிங்களப் பதிரிகைகளை வாசித்தால் நன்றாகத் தெரியும்.அண்மயில் கூட ஒரு அமைச்சர் இந்தியாவை கறிவேப்பிலை பாவிப்பது போல் பாவித்து விட்டு எறிய வேணும் என்று சொல்லி இருந்தார்.அவர்கள் தங்கலுக்குச் சாதகமாக இந்தியாவைப் பாவிக்க விரும்புகின்றனர்.முன்னர் இந்தியப் பருப்பு வாங்கிய மக்களைச் சுட்டுத் தள்ளினர்.இவர்கள் தான் இன்று ராஜபக்ச அரசாங்கம் வர உறுதுணயாக நிற்கும் ஜேவிபி என்ற சிங்கள இனவாதக் கட்சியைச் சார்ந்தவர்கள். தமிழீழம் இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதுணயாக இருக்கும்.அத்தோடு தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு என்றும் ஆதரவாக இருக்கும். - Luckyluke - 12-29-2005 நாரதர் அவர்களே ! ஒரு விவரத்தை புரிந்து கொள்ளுங்கள்... புரிந்து கொள்ளுங்கள்.... புலிகள் பற்றிய எந்த ஒரு முடிவையும் இந்திய அரசாங்கம் எடுக்க முடியாது... சர்வதேச நாடுகளுக்கு அது பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.... இங்கிருக்கும் தமிழ் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் மட்டுமே இந்திய அரசு தலையிடும்..... - rajathiraja - 12-29-2005 அண்ணா எனக்கு சில கருத்துகள் சொல்ல ஆசை.ஆனால் அதை இங்கு இப்பொது சொல்ல விருப்பம் இல்லை.சில தெளிவு வேண்டும். அதான் பேச்சு வார்தயை உடனே ஆரம்பிக்க சொல்லி எமது பிரதம மந்திரி சொல்லி உள்ளாரே? - rajathiraja - 12-29-2005 அண்ணா !! காந்தி கொள்கை பேசுகிரான் என்று நினைக்க வேண்டாம். போர் போதும். பேச்சு வார்தையில் தீர்வு காணலாம் என்பது எனது எண்ணம். - aathipan - 12-29-2005 பொலிசார் கண்டிப்பாக நடக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பணப்பிசாசாக நடக்கிறார்கள் என்று சொல்லாலாம். ஒரு தடவை எனது நண்பர்கள்(இலங்கைத்தமிழர்கள் அல்ல) காரில் பெசன்ட் நகர் பீச்சில் ஒரு வழிப்பாதையில்; போய்விட்டார்கள். அதற்காக பொலிசார் அவர்களை அனைவரையும் கைது செய்து சட்டையைக்களற்றச்சொல்லி ஜட்டியுடன் நிக்கவைத்து விசாரித்தார்கள். பின் 5000 ரூபாய் இலஞ்சம் கேட்டார்கள். அந்தளவு தொகை இல்லை என்று கூறிய போது ஒருவனின் கழுத்தில் இருந்த சங்கிலியை அடைவு வைத்து பணத்தை தரச்சொன்னார்கள். நண்பர்கள் மறுக்கவே ஒரு ஆட்டோவில் அவனை ஏற்றி பக்கத்தில் உள்ள சேட்டுக்கடைக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி சங்கிலியை அடைவு வைத்து பணத்தை பெற்றுக்கோண்டு அவர்களை விடுதலை செய்தார்கள். - அருவி - 12-29-2005 rajathiraja Wrote:இல்லை திரு அருவி !!! திரு கருனானிதி அவர்கள் இந்திய ராணுவதை வறவேற்க செல்லவில்லை. இது தொடர்பாக எந்த அரசியில் காரணம் இல்லை. அந்த கால கட்த்தில் திரு கருனானிதி அவர்களை எதிர்து யாரும் அரசியில் செய்யவில்லை. ஜெயா அப்போது கத்து குட்டி அ.தி.மு.க இரண்டாக உடைந்து இருந்தது.காங்கிரஸ் தமிழ் நாட்டில் வழக்கம் போல் ஆதரவு இல்லாது இருந்தது. நல்ல காமடியாய் இருக்கிறது உங்கள் கருத்து. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- அருவி - 12-29-2005 aathipan Wrote:பொலிசார் கண்டிப்பாக நடக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பணப்பிசாசாக நடக்கிறார்கள் என்று சொல்லாலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஒரு நாட்டின் காவற்றுறை செய்யும் செயலா இது :roll: :roll: சிரிப்புத்தான் வருது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 12-29-2005 Thala Wrote:தூயவன் Wrote:ஒரு உதை தானா? சீ........ <!--emo& ஏன் புழல் காம் பக்கம் போய் இருந்தால் இன்னொன்று வாங்கி இருக்கலாமே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Luckyluke - 12-29-2005 லஞ்சம் எல்லா நாட்டிலும் இருக்கிறது.... எல்லா நாடுகளிலும் எட்டப்பர்களும், நன்றி மறந்தவர்களும் இருக்கிறார்கள்..... - rajathiraja - 12-29-2005 அவர்கள் குடித்து விட்டு வண்டி ஒட்டினார்களா? இந்த செயலை செய்தது உன்மையான தமிழ் நாட்டின் போலிசா? அல்லது போலியா? உங்கள் நண்பர் மேல் தவறு இல்லையென்ரால் அவர் உயர் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்,அதை அவர் ஏன் செய்ய வில்லை? இது போல குற்றம் எல்லம் கடுமையாக தண்டிக்கபடும்.உங்கள் இந்திய நண்பர் அதை ஏன் செய்யவில்லை?? - rajathiraja - 12-29-2005 இதில் என்ன காமெடி? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 12-29-2005 rajathiraja Wrote:அவர்கள் குடித்து விட்டு வண்டி ஒட்டினார்களா? இந்த செயலை செய்தது உன்மையான தமிழ் நாட்டின் போலிசா? அல்லது போலியா? உங்கள் நண்பர் மேல் தவறு இல்லையென்ரால் அவர் உயர் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்,அதை அவர் ஏன் செய்ய வில்லை? இது போல குற்றம் எல்லம் கடுமையாக தண்டிக்கபடும்.உங்கள் இந்திய நண்பர் அதை ஏன் செய்யவில்லை?? தமிழ்நாட்டில் போலிஸ் லஞ்சமே வாங்கியதில்லையா? மேலதிகாரியிடம் சொன்னால் அவர் அதிகமா கேட்பார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- rajathiraja - 12-29-2005 செய்த தப்பை மறைக்கதான் லங்சம் !!! செய்யாத குற்றத்துக்கு ஏன்? - Luckyluke - 12-29-2005 ராஜாதி ராஜா உங்கள் அறிவுக்கூர்மையை நினைத்து பெருமையடைகிறேன்...... |