![]() |
|
இந்திய சகோதரர்களுக்கு,,,, - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: இந்திய சகோதரர்களுக்கு,,,, (/showthread.php?tid=1604) |
- puthiravan - 01-07-2006 மதன், எனது கருத்துக்களில் திருத்தம் தேவை என்று பரிந்துரைத்ததற்கும், எனது உணர்வுகளுக்கு மதிப்பளித்து முழுவதையும் அப்படியே நீக்கி விடாமல் ஆலோசனை தந்தற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒரு ஆக்க பூர்வமான கருத்தாடலில் கலக்கும் வரை... - Thala - 01-07-2006 Mathan Wrote:டக் குறிப்பிட்டது போல தட்ஸ் தமிழ் கருத்துகளம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நாம் விமர்சிப்பதை தவிர்க்கலாம். மதனுடையது போண்றதுதான் எனது கருத்தும்... வேறு இணையத்தளங்கள் எண்டு நாங்கள் போய் அவர்களின் மனவுளைச்சலுக்கு ஆளாவான் ஏன்... அது அவர்கள் உள்வீட்டு விவகாரம். அங்குள்ள களத்தினர் என்ன விரும்புகிறார்களோ அவர்கள் அதைச் செய்யட்டும் இதில் நாங்கள் தலைப் போட வேண்டாம்... - rajathiraja - 01-07-2006 திரு புதியவன் !! அந்த முகவிரியில் பல இந்திய நாட்டு குழ்ந்தைகள் தொடர்பு கொண்டு அப்துல் கலாமின் பதில் கூட பெற்றிக்கிறார்கள். அப்துல் கலாமே நேர்டியாக தகவலை பார்பது கடினம் தான். ஆனால் அவரின் கவனத்தை இலங்கை தமிழர் மீது திருப்ப இது உபயாகபடலாமே - Aaruran - 01-07-2006 தற்ஸ்தமிழ்.காம் மட்டுறுத்தினர்கள் என்றவொன்றில்லாததால் எதையும் எழுதக் கூடிய பேச்சுச் சுதந்திரம் அங்குண்டு. புதிதாக அதிலும் யாழ். களத்திலிருந்து அங்கு வருபவர்களுக்கு அத்தகைய பேச்சுச் சுதந்திரத்தைச் சீரணிப்பதென்பது மிகவும் கடினமான விடயம் தான். அந்தக் களத்தின் சிறப்பென்னவென்றால் நாங்கள் என்ன தான் அளவுக்கு மீறிய வகையில் ஆளுக்காள் வாக்குவாதப் பட்டாலும் கூட, அங்கு யாரிடமும் யாருக்கும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு கிடையாது. நாங்கள் எந்த விடயத்தையும் விவாதித்து வெல்லுகிற நோக்கத்தில் தான் ஓவ்வொருவருக்கொருவர் தாக்கிக் கொள்கிறோமே தவிர உண்மையான வெறுப்பு ஒருவரிடமும் கிடையாது. இங்குள்ள போன்றில்லாமல் அங்கு பல்வேறு மாற்றுக் கருத்துள்ளவர்களும் நண்பர்களாகவுள்ளோம். உதாரணமாக நான் ஈழவிடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்துப் பிராமணர்களை எதிர்த்தும் வாதாடுவேன், ஓரு சிலர் ஈழத்தமிழர்களை ஆதரித்தாலும் விடுதலைப் புலிகளை விரும்பாமல் இருப்பார்கள். இவ்வளவு இருதுருவங்களாகக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும், நான் அந்தத் தளத்தில் வருவதை நிறுத்தப் போகிறேன் என்றதும் என்னைப் போகாமல் தடுக்க செய்திகளையும், தனிப்பட்ட மடல்களையும் அனுப்பியவர்களில் அதிகமானவர்கள் பிராமணர்களும், விடுதலைப் புலிகளை எதிர்த்து என்னுடன் வாதாடிய கபிலவஸ்துவும் தான். நாங்கள் சும்மா மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிக்கிறோமே தவிர ஒருவரையொருவர் வெறுப்பதில்லை. உதாரணமாக திருச்சி என்ற பிராமணரும் நானும் ஒரு களப்பிரிவில் ஒருவரையொருவர் தாக்கிவிட்டு, அடுத்த களப்பிரிவில் எப்பொழுது நான் இந்தியாவுக்கு வருகிறேன் என்பதைப் பேசிக் கொள்வோம். அங்கு நாங்களும் ஒரு குடும்பம் மாதிரித் தான். ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஓரே மாதிரியோ அல்லது ஒரே கொள்கையுடையவர்களாகவோ இருப்பதில்லை. புதிதாக வருபவர்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுபவர்களைக் கூட்டம் சேர்ந்து தாக்குவதும் இங்குள்ள வழக்கம். அப்படியெல்லாம் அங்கில்லை. தற்ஸ்தமிழ்.காமும் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களும் பேச்சுச் சுதந்திரத்தை மதிப்பவர்கள். இங்கு கேட்பது போல் எதற்கெடுத்தாலும் அண்ணே அவரை தடை செய்யுங்கோ, இவரைக் கட் பண்ணுங்கோ என்ற குரலையெல்லாம் கேட்க முடியாது. அதனால் தற்ஸ்தமிழ்.காம் இந்தக் களத்தை விடச் சிறந்ததென்று நான் சொல்ல வரவில்லை. வித்தியாசமானது, சுதந்திரமானது. - தூயவன் - 01-07-2006 Aaruran Wrote:தற்ஸ்தமிழ்.காம் மட்டுறுத்தினர்கள் என்றவொன்றில்லாததால் எதையும் எழுதக் கூடிய பேச்சுச் சுதந்திரம் அங்குண்டு. புதிதாக அதிலும் யாழ். களத்திலிருந்து அங்கு வருபவர்களுக்கு அத்தகைய பேச்சுச் சுதந்திரத்தைச் சீரணிப்பதென்பது மிகவும் கடினமான விடயம் தான். அந்தக் களத்தின் சிறப்பென்னவென்றால் நாங்கள் என்ன தான் அளவுக்கு மீறிய வகையில் ஆளுக்காள் வாக்குவாதப் பட்டாலும் கூட, அங்கு யாரிடமும் யாருக்கும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு கிடையாது. நாங்கள் எந்த விடயத்தையும் விவாதித்து வெல்லுகிற நோக்கத்தில் தான் ஓவ்வொருவருக்கொருவர் தாக்கிக் கொள்கிறோமே தவிர உண்மையான வெறுப்பு ஒருவரிடமும் கிடையாது. இங்குள்ள போன்றில்லாமல் அங்கு பல்வேறு மாற்றுக் கருத்துள்ளவர்களும் நண்பர்களாகவுள்ளோம்.இருக்கலாம் அரூரன். உங்களின் கருத்துக்களைப் படித்திருக்கின்றேன். ஆனால் ஈழவிடுதலைப் போராட்டத்தை பற்றி வாதாடிவிட்டுப் போகின்ற விடயமாக நாம் கொள்ளவில்லை. அது எம் மக்களின் வாழ்க்கைப் பிரச்சனை. உயிரோடு போராடும் எம் சமூகம் அது. உங்களைப் போகவேண்டாம் என்று தடுத்தது நல்ல எண்ணத்திலாக இருக்கலாம். ஆனால் வார்த்தைகளால் கூட எம் தலைவனையோ, போராளிகளையோ, மக்களையோ பற்றி கீழ்தரமாகப் பேச இடமளிக்க நாம் விரும்பவில்லை. - தூயவன் - 01-07-2006 puthiravan Wrote:வசிசுதா, "லக்கிலூக் என்பவர் தான் புதிரவன் என்ர பெயரில் வந்திருக்கிரார்" எண்டு நினைத்து உங்கள் கருத்தை தந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் இன்று தான் முதன் முறையாக என்னை அறிமுகம் செய்து கொண்டு எனக்கு சரி எண்டும் கள் விதி முறைகளுக்குமுட்பட்ட கருத்தை தெருவித்தேன். என்னப்பா வந்தவுடனேயே கோபம் வந்துட்டுதா!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- தூயவன் - 01-07-2006 Aaruran Wrote:புதிதாக வருபவர்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுபவர்களைக் கூட்டம் சேர்ந்து தாக்குவதும் இங்குள்ள வழக்கம். அப்படியெல்லாம் அங்கில்லை. தற்ஸ்தமிழ்.காமும் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களும் பேச்சுச் சுதந்திரத்தை மதிப்பவர்கள். இங்கு கேட்பது போல் எதற்கெடுத்தாலும் அண்ணே அவரை தடை செய்யுங்கோ, இவரைக் கட் பண்ணுங்கோ என்ற குரலையெல்லாம் கேட்க முடியாது. அதனால் தற்ஸ்தமிழ்.காம் இந்தக் களத்தை விடச் சிறந்ததென்று நான் சொல்ல வரவில்லை. வித்தியாசமானது, சுதந்திரமானது. இங்கே கூட்டம் சேர்த்து தாக்குவதில்லை. ஒவ்வொருவருக்கும் உள்ள உணர்ச்சிகளையே பிரதிபலிக்கின்றனர். மேலும் சந்தேகக் கண் கொண்டு யாரையும் பார்ப்பதில்லை. அது லக்கிலுக்குவிற்கு கிடைத்த வரவேற்பிலிருந்து அவர் புரிந்திருப்பார். மேலும் அங்குள்ள சுதந்திரம் எவ்வாறான அசிங்கமான வார்த்தைகளை அங்கே உலாவவிட்டது என்பதும் தெரியும். ஆக யாழ் ஒரு விதம். அது ஒரு விதம். இரண்டையும் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துக. ஒவ்வொருவரும் தத்தமது வழிகளில் செல்லுவோம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 01-07-2006 Thuyavan wrote: என்னப்பா வந்தவுடனேயே கோபம் வந்துட்டுதா!! [b]அவர் கோபப் படவில்லை. விளக்கத்தை தானே எழுதியுள்ளார். இதே போல ஒரு இந்தியச் சகோதரன் ஒரு யாழ் கள எமது உறவொன்றை நீர் இன்னார் தானே என வேறு ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் நிர்வாகம் விழுந்தடித்து அந்தக் கருத்தை நீக்கியிருக்கும் - தூயவன் - 01-07-2006 Vasampu Wrote:Thuyavan wrote: ஏன் கலெறிங் எல்லாம் கொடுத்து வெருட்டுகின்றியள்? அது சரி எதுக்கெடுத்தாலும் நிர்வாகத்தை வசை பாடவேண்டும் என்று ஏதும் நேர்த்தி வைச்சிங்களோ நைனா? தமிழினியக்காவும், யாழினியும் ஒன்று என்று விவாதம் போனது மறந்துவிட்டியளா? மேலும் கீழே வசிசுதா மன்னிப்பு கேட்டிருப்பதைக் காணவில்லையோ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 01-07-2006 எனக்கு நடந்தவையெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. வசிசுதா தவறைச் சுட்டிக் காட்டிய பின்னும் நீர் என்ன ஜால்ராவா?? எனக்கு எவரையும் வசைபாட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் தவறை யார் செய்தாலும் தவறுதான். அதை முதலில் புரிந்து கொள்ளும். - தூயவன் - 01-07-2006 Vasampu Wrote:எனக்கு நடந்தவையெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. வசிசுதா தவறைச் சுட்டிக் காட்டிய பின்னும் நீர் என்ன ஜால்ராவா?? எனக்கு எவரையும் வசைபாட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் தவறை யார் செய்தாலும் தவறுதான். அதை முதலில் புரிந்து கொள்ளும். ஜல்ராவா யாருக்கு? நான் புதிரவனிடம் கோபம் வந்துட்டுதா என்று கேட்டதற்கு உங்களுக்கு ஏன் கோபம் வருகின்றது. :roll: நல்ல நக்கீரர் பரம்பரை? இப்ப யாரை குற்றவாளி கண்டுள்ளீர்கள். யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றம் என்று சொல்லுவதற்கு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 01-07-2006 தூயவன் முதலில் வந்தவர்களை பண்பாக வரவேற்கத் தெரியாவிட்டாலும் அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதை உள்வாங்கக் கற்றுக் கொள்ளும். முடிந்தால் அவர்களின் கருத்துக்களுக்கு பதில் எழுதப் பாரும். அதை விடுத்து அவர்கள் எழுதும் கருத்துக்களுக்கு நக்கலும் நையாண்டிமாக எழுதுவதைத் தவிர்க்கப் பாரும். முடிந்தால் இந்த ஆண்டிலாவது உம்மை மாற்றப் பாரும் - தூயவன் - 01-07-2006 Vasampu Wrote:தூயவன் நிச்சயமாக. நீங்கள்.............. அதுவும் நம்ம வசம்பு சொன்னாப்பிறகு மறுப்பேனோ? அது சரி. அவர்கள் என்ன சொல்லவருகின்றார்கள்? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuloth - 01-07-2006 பாலகுமார் அண்ணா சொல்வது புலிகளினதும் தமிழ்மக்களினதும் கருத்து. அவர் எப்போதும் இந்தியாவை நண்பனாகவே வைத்துக் கருத்துக்கள் சொல்வார்.எம்மைப் பிரிப்பது தேசத்தின் பெயர்கள்தான். ஆனால் நாம் தமிழர்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை. வாழ்க தமிழ்...வழர்க ஒற்றுமை - vasisutha - 01-07-2006 puthiravan Wrote:"லக்கிலூக் என்பவர் தான் புதிரவன் என்ர பெயரில் வந்திருக்கிரார்" எண்டு நினைத்து உங்கள் கருத்தை தந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் இன்று தான் முதன் முறையாக என்னை அறிமுகம் செய்து கொண்டு எனக்கு சரி எண்டும் கள் விதி முறைகளுக்குமுட்பட்ட கருத்தை தெருவித்தேன். ஆமா புதுசா இணைஞ்சிருக்கிறீங்கள்.. இந்தக் களத்துக்கு நீங்கள் புத்தம் புதியவர் என்று வந்தவுடனே நீங்கள் வைத்த கருத்திலேயே தெரியுதே......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- yarlpaadi - 01-07-2006 <b>வணக்கம் உறவுகளே களத்தில் எல்லோரும் நட்புணர்வுடன், புரிந்துணர்வுடன் கருத்தாட இத்தலைப்பு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன். அத்தோடு ஒவ்வொரு இணையத்தளமும் தத்தமக்கென சிறப்பியல்புகளை கொண்டிருக்கும், அது அவர்களது இலக்குகளை, நோக்கங்களை பொறுத்தது.யாழ்களம் தவிர்ந்த வெறு தளங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என நாம் விவாதிப்பது நல்லதல்ல என நினைக்கிறேன். இத்தலைப்பு தொடங்கிய விடயம் நல்ல பலனை கொடுத்திருக்கிறது போல படுகிறது. அதை பொறுத்திருந்து பார்ப்போம்.</b> <b>தலைப்பில் சுட்டிகாட்டிய விடயம் திசைமாறி வேறேங்கோ பயணிக்க தொடங்குவது போல் இருப்பதால் இத்தலைப்பு தற்காலிகமாக மூடப்படுகிறது.</b> |