![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- விதுரன் - 08-25-2004 AUSTRALASIAN FEDERATION OF TAMIL ASSOCIATIONS INC P O Box 215 Enfield NSW 2136 Email: tamand@ozemail.com.au 24th August 2004 International Secretariat : Reporters sans frontières 5, rue Geoffroy-Marie 75009 Paris - France Dear Sir, We are alarmed and dismayed that the main suspect in the murder of the journalist and BBC correspondent in Northern Sri Lanka Mr Mylvaganam Nimalarajan is about to be granted asylum in the United Kingdom. The suspected killer who goes under the aliases of Napoleon, Sebastian Ramesh and Poopal Raj was released on bail by Vavuniya Magistrate Mr Visanthan on 21st May 2003. He arrived in the UK on 3rd June 2004 travelling under the name of Romankumar Patrick de Silva on a forged Sri Lankan passport. Mr Nimalarajan was killed on 19 October 2000 when a group of armed men entered his home and having injured his father, mother and 11 year old nephew shot Mr Nimalarajan at close range. Mr Nimalarajan was well known and respected for his fearless reporting of events from Army occupied Jaffna Peninsula. His reporting of the General Election of 2000 where intimidation and thuggery were widely employed had earned him the enmity of the Eelam People’s Democratic Party (EPDP) which was implicated in the election violence. Mr Nimalarajan was also responsible for organising a protest march against the attack launched on the offices of Uthayan, an independent daily operating in the Jaffna Peninsula. Again, it was widely speculated that the EPDP was behind this attack launched on 31st August 1999. In a letter dated 21 March 2001, your General Secretary raised the issue with Prime Minister Tony Blair urging him to raise the issue with the visiting Sri Lankan President, Mrs Kumaratunge. In his letter to the British Prime Minister, Mr Robert Menard, the General Secretary of RSF had this to say: “On October 19, 2000 Mr Nimalarajan, correspondent for a number of Tamil media and the BBC World Service in Jaffna, north of the country, was killed at his home. Unknown assailants machine-gunned the room in which he was working and then threw in a grenade. The journalist was living in a zone "made safe" by the Sri Lankan Army. The family and colleagues suspect the EPDP, a Tamil militia that is now a member of the government coalition in Colombo and whose leader is a minister in the new cabinet of Chandrika Kumaratunga. The BBC journalist was known for his courageous reporting on the situation in the Jaffna peninsula, and in particular on the outrages committed by the EPDP, the ravages of war, human rights issues and corruption. RSF considers it important that any aid that might be forthcoming from Britain should be linked to an improvement in the human rights situation in Sir Lanka and in particular to a genuine effort on the part of the government to end the impunity enjoyed by the killers of Mylvaganam Nimalarajan. We appeal to you to intervene with the president to see that a full investigation can be held as soon as possible so that the journalist's killers can be identified.” Referring to the same incident BBC’s Colombo Correspondent Frances Harrison had this to say: “Reporters Without Borders who championed this case commented that it was now apparent the police were unable or unwilling to conduct an investigation and gather physical evidence……. Impunity is a word that's often used in Sri Lanka but it's still astonishing that despite the peace process, the change of government and the international attention given to this case - justice has not been done." We call upon Reporters sans frontières to continue their attempts by urging the UK Government to not grant asylum given the horrendous nature of the alleged crime. Yours sincerely Ana Pararajasingham Chairman Australasian Federation of Tamil Associations - விதுரன் - 08-25-2004 தமிழ் மக்களின் நெஞ்சங்களின் வடுவான <img src='http://www.erimalai.com/2002-jan/images/tamil-m.jpg' border='0' alt='user posted image'> சிங்களப் பேரினவாத சக்திகளின் இனவெறி தமிழ் மக்கள் மீதான குரோதமாக வெளிப்பட்ட குருதிக்கறை படிந்த வரலாற்றுச் சம்பவங்களுள், என்றும் அழிந்து போக முடியாத ஒன்றுதான் 1974ஆம் ஆண்டு தை மாதம் 10 திகதிப் படுகொலைகள். தமிழ் மொழியின் தன்னிகரற்ற தன்மை கண்டு பொருமிப் புகைந்த சிங்கள ஆட்சியாளரின் துவேசம் காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட இக் குரூர நிகழ்வு வீரத்தமிழரின் விடுதலையுணர்வு வெஞ்சினமாக வெளிப்படுவதற்கு வித்திட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று. அமிழ்திலுமினிய தமிழ்தனில் செம்மை காணச் சிறப்புடன் குவிந்த செந்தமிழர்கள் மத்தியில் வெறியின் வடிவமான வன்முறைப் பிரயோகம், ஒன்றல்ல ஒன்பது உயிர்களைக் குடித்து, ஏப்பம் விட்டது. தாய்மொழிப்பற்றில் திரளெனக் குவிந்த ஒரே குற்றம் தாங்கி, குதறப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த உத்தமர்கள் சிலைகளாகக் கூட நிலைத்து விடக்கூடாது என்று சிங்களம் செய்த சிதறடிப்புக்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவை. இன்றுடன் இருபத்தியேழு வருடங்கள் கடந்தாலும் ஈழத்தமிழ் மக்கள் மனங்களில் இரத்தம் கசிகின்ற ரணமாகிப் போய்விட்ட இக்கோரம் ஈழத்தமிழர் விடுதலைப் போரின் ஆழப்பதிந்த அத்திவாரக் கற்களில் ஒன்றாகி நின்று நிலைத்திருப்பது வரலாறு சொல்லும் உண்மை. பரந்துபட்ட உலகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தம் வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத நாட்களில் ஒன்றுதான் 10.01.1974 ஆகும். இந்த நாள் தமிழ் மக்களைவிட்டுக் கடந்து சென்ற 10ஆம் திகதி வியாழக்கிழமையோடு 27 வருடங்களாகின்றன. ஆயினும் அந்த நாளின் கொடிய நினைவானது இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத நெருப்பென எரியும் நினைவாக இருப்பதோடு இன்றைய விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்துவிட்டது. 1974 தை 10ஆம் நாள் அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வு கள் சிறீலங்கா ஆட்சியாளராலும் அதன் காவல்துறையினராலும் நன்கு திட்டமிட்டுக் குழப்பப்பட்டபோது, அப்பாவிப் பொதுமக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டமையும் தமிழ் மக்களின் மனங்களிலிருந்து நீக்கமுடியாததொரு நிகழ்வாகவே இருக்கின்றது. உலகத் தமிழாராட்சி மன்றமானது 1960களின் நடுப்பகுதியில் அருட் தந்தை தனிநாயகம் அடிகளின் பெருமுயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டு பின் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு முதலாவதாக 1966ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தின் ஆதரவுடன் அதன் தலைநகரான கோலாலம்புூரில் நடாத்தப்பட்டது. அதன்பின் இரண்டாவது மாநாடு இந்திய தமிழக அரசாங்கத்தின் ஆதரவுடன் 1968இல் நடாத்தப்பட்டது. மூன்றாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடானது பிரான்சின் தலைநகரான பாரிசில் பல்வேறு தமிழ் அமைப்புக்களினதும் அந்த நாட்டு அரசாங்கத்தினரதும் ஆதரவோடு 1971ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. 3வது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு பாரிசில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அடுத்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு இலங்கையில் அதுவும் தமிழ் மொழிபேசும் மக்கள் பரந்தளவில் வாழ்ந்துவரும் யாழ்ப்பாணத்திலேயே நடாத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் அனைத்துலக தமிழாராட்சி மன்றத்தினால் எடுக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் பொறுப்பையும் மேற்படி மன்றத்தின் இலங்கைக்கான கிளையிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கைக்கான கிளை தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை இங்கு செயற்படுத்தமுனைந்தபோது யாழ்ப்பாணத்தில், அன்றைய யாழ். நகர மேயரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமாக இருந்த அல்பிரட் துரையப்பா என்பவரூடாக அது பல எதிர்ப்புக்களையும் இடையுூறுகளையும் எதிர்நோக்கவேண்டியிருந்தது. அத்தோடு அக்காலகட்டத்தில் அதாவது 27 வருடத்திற்கு முன்பு நாட்டு பிரதமர் என்ற hPதியில் திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்கவே நடைபெறவிருந்த தமிழாராய்ச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கவேண்டும் என தமிழாராய்ச்சி மாநாட்டின் இலங்கைக்கான கிளைக்குள் இருந்த அரச சார்புள்ள சிலர் அழுத்தமாகக் குரல்கொடுத்தனர். அத்தோடு இந்தத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிறீலங்காவின் தலைநகரான கொழும்பிலேயே நடாத்தவேண்டுமென்றும் தீர்மானித்தனர். இவர்கள் இப்படித் தீர்மானிப்பதற்கு அன்று பல காரணங்கள் இருந்தன. திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்க தமிழ் மக்கள் மீது இன மொழி hPதியாகப் பாகுபாடுகள் காட்டி வந்ததோடு, பல்கலைக்கழக அனுமதிக்கு தரப்படுத்தல் போன்ற விடயங்களை மேற்கொண்டதும், வேறுபல அரசியல் பிரச்சினைகளை முன்னிட்டும், அவர் யாழ்ப்பாணம் வருவதில் பல சிக்கல்கள் இருந்தன. இதனால் தான், ஒருசாரார் திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்காவிற்காக கொழும்பிலேயே தமிழாராய்ச்சி மாநாட்டை நடாத்தவேண்டுமென முடிவெடுத்தபோது அதற்கு எதிர்மாறாக எழுந்த தமிழ் இளைஞர்கள் பலர் 'பாரிஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படியே அனைத்துலக தமிழாராட்சி மாநாடானது யாழ்ப்பாண மண்ணிலே நடாத்தப்படவேண்டும்' என ஒருமித்துக் குரல் கொடுத்தனர். இந்த விவகாரம் இரு பகுதியினருக்கும் இடையில் இழுபறி நிலையாய் இருந்தபோது, திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா என தமிழ் மக்கள் தமக்குள்ளே ஐயுறவு கொள்ளத்தொடங்கினர். மக்கள் மத்தியில் எழுந்த நம்பிக்கையீனத்தைக் கண்ணுற்ற மாநாட்டுப் பணியகத்தின் செயலாளர் அப்போது ஓர் அறிவித்தல் கொடுத்தார். '03.01.1974 தொடக்கம் தொடர்ந்த ஏழு நாட்களுக்கு அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு திட்டமிட்டபடியே யாழ்ப்பாணத்தில் நடைபெறும்' செய்தியைக் கேள்விப்பட்டதும், மக்கள் பதற்றம் நீங்கி பரவசத்துக்குள்ளானார்கள். செய்தியை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டார்கள். மாநாட்டுக்கு வருகை தரவிருக்கும் கல்விமான்கள், அறிஞர்கள், அயல்நாட்டு மக்களை வரவேற்பதற்காக மாநகர ஆணையாளரின் அறிவித்தலுக்கமைய யாழ்ப்பாண நகரைத் துப்பரவு செய்யத்தொடங்கினர். வீதிகள் தோறும் வாழைகள் நட்டு, தோரணங்கள் கட்டி மகிழ்ந்தனர். சப்பறங்கள், சிகரங்கள் எனச் சந்திக்குச் சந்தி அலங்கரித்துக்கொண்டார்கள். மின் கம்பங்களில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகளில் இருந்து நாதஸ்வர மேள தாள வாத்தியங்களும், தமிழ் மணக்கும் நல்லிசைப்பாடல்களும் ஒலித்துக்கொண்டிருந்தன. ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழி வாழ்வதற்காக தமது உழைப்பின் பெரும் பொழுதை மாநாட்டுக்காக செலவழித்திருந்தார்கள். நாட்கள் நகர நகர நகரமே களைகட்டத்தொடங்கியது. அயல் கிராமங்களிலிருந்து அலையலையாக மக்கள் வந்து குவிந்துகொண்டிருந்தார்கள். அனைவரது முகங்களிலும் மகிழ்வின் புூரிப்புப் பொலிந்திருக்க தமிழாராட்சி மாநாடு நடந்துகொண்டிருந்தது. இதேவேளை மாநாட்டின் இறுதி நாள் தமிழ் மக்களின் பண்பாட்டை, வலியுறுத்தும் வகையில் பல கிராமங்களிலிருந்து அலங்கார ஊர்திப் பவனிகள் யாழ் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. இவ வாறான ஓர் அணி பருத்தித்துறை வீதியுூடாக யாழ். நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, முத்திரைச் சந்தியில் வைத்து சிறீலங்கா காவல்துறையினரால் காரணமின்றி வழிமறிக்கப்பட்டு, மேற்கொண்டு செல்லவிடாது தடுக்கப்பட்டது. ஊர்வலத்தில் வந்த இளைஞர்களும் யுவதிகளும் ஆத்திரம் கொண்டு நடுவீதியில் சில மணித்தியாலங்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த, அதற்குப் பணிந்துபோன சிங்கள காவல்துறையினர் மேற்கொண்டு ஊர்வலம் செல்வதற்கு அனுமதித்தனர். தங்களைப் பெரும்பான்மை இனமெனக் கருதிக்கொண்டிருந்தவர்களால் ஒரு சிறுபான்மையினத்திற்கு முன்னால் தாம் தலைகுனிந்து போனதைத் தாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது. அத்தோடு, திட்டமிட்டபடி மாநாட்டைக் கொழும்பில் நடாத்தமுடியாதுபோன மனக் கொந்தளிப்பும், தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதான தோற்றப்பாடும் சிங்களக் காவல்துறையினரின் இதயங்களில் இனவாத வன்ம வெறியை தோற்றுவித்துவிட்டது. நடைபெறும் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டை அல்லோலகல்லோலப் படுத்துவதற்கான வழியை வகுத்தபின், அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமாகி நின்றார்கள் சிறீலங்கா காவல்துறையினர் இந்நிலையில் ஜனவரி 10ஆம் நாளில் ஊரே திரண்டுவந்து யாழ். நகரில் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி குழுமியிருந்து விழாவை ரசித்துக்கொண்டிருந்தது. அப்போது நேரம் இரவு எட்டுமணி, போக்குவரத்திற்குப் பொறுப்பான சிங்கள காவல்துறை அதிகாரி ஒருவர் காங்கேசந்துறை வீதி வழியாக யாழ். காவல் நிலையம் செல்வதற்கு, தனது மோட்டார் வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். இச்சமயம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகாமையில் வீதிகளில் மக்கள் நிறைந்திருந்ததினால் அவரால் மேற்கொண்டு செல்லமுடியவில்லை. மக்களுக்கும் வழியை விட்டுக்கொடுப்பதற்கு போதுமான இடைவெளி இருக்கவில்லை. திரும்பி வேறு பாதையால் செல்வதற்கு அவருடைய 'காக்கி உடுப்பின் கௌரவம்' இடங்கொடுக்கவில்லை. அவருள் எழுந்த ஆத்திரமும் காக்கிச் சட்டையின் அதிகாரமும் மக்களை நோக்கி வசைமாரி பொழிய வைத்தன. பதிலுக்கு மக்களும் எதிர்த்துக் கதைக்கத் தொடங்கவே, நிலமை கட்டுமீறிச் செல்வதை உணர்ந்த அவர், ஒருவாறாக தனது மோட்டார் வண்டியை மக்களிடையில் வலிந்துசெலுத்தியவாறு காவல் நிலையம் போய்ச் சேர்ந்தார். ஆனால் அடுத்து நிகழப்போகும் கொடிய விபாPதத்தை அறியாத நிலையில், ஆனந்த மனோநிலையில் அமர்ந்திருந்தார்கள் தமிழ் மக்கள். வேக்காளத்தோடும், வெஞ்சினத்தோடும் காவல் நிலையம் சென்றடைந்த அந்த சிங்கள காவல்துறை அதிகாரி, தனக்கு நேர்ந்த அவமானத்தை அங்கு நின்ற ஏனைய காவல்துறையினருக்கு எடுத்துரைத்தார். மறுவினாடி, பெருந்தொகையிலான சிங்கள காவல்துறையினர், யாழ். காவல்துறை அதிபர் சந்திரசேகர தலைமையில் கண்ணீர் புகைக்குண்டுகளோடும், துப்பாக்கிகளோடும், யாராவது எதிர்த்துத் தாக்கினால் அவர்களைச் சமாளிப்பதற்கென உலோகத் தடுப்புகளோடும் கூச்சலிட்டபடி ஆவேசத்துடன் மக்களி னுள் புகுந்தனர். கண்ணீர் புகைகள் எங்கும் வெடிக்கத் தொடங்கின. மக்கள் கூட்டம் சிதறியோடத் தொடங்கியது. பெற்றோரைத் தவறவிட்ட குழந்தைகளின் கதறல் எங்கும் எதிரொலித்தன. வீதிகளில் நிறுவப்பட்ட சிகரங்கள் தீப்பிடித்து எரிந்தன. சப்பறங்கள் யாவும் மண்ணில் சரிந்து வீழ்ந்தன. இவ வேளையில் சில சிங்கள காவல்துறையினர் மின்சாரக் கம்பங்களில் உள்ள கம்பிகளை குறிபார்த்துச் சுட்டனர். இப்படிச் சுட்டதில் மின்கம்பி ஒன்று அறுந்து வீழ்ந்ததில் அதன்மீது எதிர்பாராத விதமாக தங்கள் கால்களை வைத்த ஒன்பது அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழந்தார்கள். திட்டமிட்டபடியே சிங்களக் காவல்துறையினரால் அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு அன்றைய தினத்தில் குழப்பியடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் உயிர் தீத்த ஒன்பது தமிழ் மக்களின் நினைவாக முற்றவெளியில் ஓர் தூபி நிறுவப்பட்டபோதும் பின்னர் இது சிங்கள பொலிசாரால் அடித்து நொருக்கப்பட்டது. மீண்டும் அதேயிடத்தில் சிறிய அளவிலான ஒன்பது தூபிகள் நிறுவப்பட்டன. அப்படியே இத்தூபிகள் உடைப்பதும் பின் நிறுவுவதுமாக வரலாற்றில் பதியப்பட்டன. அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள காவல்துறையினர் நடாத்திய இனவாத காட்டுமிராண்டித் தனமான செயல் குறித்தும், உயிர் நீத்த ஒன்பது குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோரியும் தமிழ் மக்கள் அன்றைய ஆட்சிப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவிற்கு அடிக்கடி பல கோரிக்கைகள் விடுத்தபோதும் கடைசிவரை தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு சிறீமாவோ செவிசாய்க்காது மௌனம் காத்துக்கொண்டார். இச்சம்பவம் நிகழ்ந்ததில் இருந்து, இம்மாதம் 10ஆம் திகதியுடன் 27 வருடங்கள் கழிகின்றன. ஆயினும் அன்று சிறீலங்கா சிங்கள காவல் துறையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை மற்றும் குண்டாந்தடிப் பிரயோகங்களையும் முற்றவெளியில் கொல்லப்பட்ட அந்த ஒன்பது தமிழர்களையும் இன்றுவரை எந்தவொரு தமிழனும் மறந்திருக்கமாட்டான். ஏனெனில் இலகுவில் எவராலுமே மறக்கக்கூடிய சம்பவமல்ல அது. அலெக்ஸ் பரந்தாமன் http://www.erimalai.com/2002-jan/kadu_tamil.html - tamilini - 08-25-2004 தகவலுக்கு நன்றிகள் விதுரன்....! - sethu - 08-27-2004 http://www.nitharsanam.com/?art=70221 - sethu - 08-27-2004 http://www.nitharsanam.com/?art=70221 - sOliyAn - 08-27-2004 Quote:அன்று சிறீலங்கா சிங்கள காவல் துறையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை மற்றும் குண்டாந்தடிப் பிரயோகங்களையும் முற்றவெளியில் கொல்லப்பட்ட அந்த ஒன்பது தமிழர்களையும் இன்றுவரை எந்தவொரு தமிழனும் மறந்திருக்கமாட்டான். ஏனெனில் இலகுவில் எவராலுமே மறக்கக்கூடிய சம்பவமல்ல அது.<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_n18-rajhan.jpg' border='0' alt='user posted image'> - sethu - 08-27-2004 நெப்போலியன் கனடா அல்லது ஈரோப்பிய நாடு ஒன்றிற்கு தப்பி ஒடு முயற்சித்து வருகிறார் மிகவிரைவில் மேலதிக செய்திகள் வரும் தமிழ் ஊடகத்துறையினரின் உதவியை சர்வதேச பொலிசாரும் பிரித்தானிய உளவுத்துறையினரும் நாடி இருக்கின்றனர். பல தமிழ் ஊடகத்துறையினர் இந்த கொலையாளியை கைது செய்ய உதவி செயஇது வருகின்றனர். - sethu - 09-02-2004 நோர்வேயில் நிதி திரட்டல். இலங்கை இராணுவமே தமிழ் ஊடகவியலாளர்களைக் கொலை செய்து வருவதாகக் கூறிக் கொண்டு, புலி உறுப்பினர்கள் சிலரும் புலி ஆதரவாளர்களும் நோர்வேயில் நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சேதுராஜன் நடராஜன் என்னும் புலி உறுப்பினரே இதற்கு தலமை வகிப்பதாகவும், நோர்வேயிலுள்ள நோர்வே போஸ்ட் எனும் வங்கியுூடாகவே கொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ள வங்கி ஒன்றுக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டே புலிகள் தமது அமைப்புக்கு நிதி திரட்டி வருவதாக அறியமுடிகிறது. இது ஈ பீ டீ பீ யின் உத்தியோக இனையத்தளத்தில் 28-08-2004 வந்த செய்தி - sethu - 09-02-2004 இது ஒரு மறைமுக கொலை மிரட்டலாகவே தெரிகிறது இந்த பேர் உள்ள நபர் நோர்வேயில் கடந்த 2 மாதங்களாக இல்லை என தெரியவருகிறது கோழைத்தனமாக சிலர்மீது புலி முத்திரை குத்த சிலர் அரும்பாடுபடுகின்றார்கள். - sethu - 09-02-2004 http://www.nitharsanam.com/?art=70268 - sethu - 09-02-2004 http://www.nitharsanam.com/?art=70268 - sethu - 09-02-2004 புளொட் அமைப்பின் நோர்வே நாட்டு அமைப்பாளர் என தன்னை இனங்காட்டிக் கொள்ளும் ......தொழில் செய்துவரும் சி.ராஜன் கேட்டுக்கொன்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது இலங்கையில் இடம்பெற்றுவரும் சகோதர படுகொலைகளை நிறுத்த நோர்வே முன்வரவேண்டுமென வலியுறுத்தப்பட்டதுடன் ஜனநாயக வழிமுறைகள் பேணப்படுவதன் மூலமே உண்மையான சமாதானத்தை தோற்றுவிக்க முடியுமென்பதை விடுதலைப்புலிகளிடம் தான் தெரிவித்ததாக தெரிவிக்கும்படியும் சி.ராஜன் தெரிவித்துள்ளார். இவற்றை கேட்டு மிகவும் சோர்வடைந்த சோல்ஹெய்ம் இது குறித்து உரியவர்களிடம் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதேநேரம் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்துகளை நோர்வே தரப்பிற்கு இலங்கை து{துவர் இல்லம் கொடுத்துவந்தது. தற்போது சமாதான காலத்தில் சி.ராஜன் ஊடாக தமிழ் மக்களை இலங்கை து{துவர் இல்லம் காட்டிக்கொடுத்து வருகின்றது. <span style='color:red'> ........தணிக்கை</span> - sethu - 09-05-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - tamilini - 09-05-2004 நிறைய பேர் பாத்திருப்பினம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sethu - 09-07-2004 யாழ் களத்தில் மிக அன்பானமுறையில் கருத்துகளை தந்த றாயன் என்பவருடைய தாயார் இன்று இறைவன் அடி சேர்ந்தார் இலன்டனில் மருத்துவமனையில் தாமேதரம்பிள்ளை கமலாவதியாகிய றாயனின் தாயார் இறைவனடி சேர்ந்தார் உங்கள் கன்னீர் அஞ்சலியை தொலைபேசி ஊடாகவும் செலுத்தலாம் 00447751717097 அன்னாருடைய குடும்பத்திற்கு எனது கன்னீர் அஞ்சலிகள் - tholar - 09-07-2004 நண்பர் ராஜனின் தாயாரின் மறைவை முன்னிட்டு எமது அனுதாபங்கள். அவரின் துக்கத்தில் நாமும் பகிர்ந்துகொள்கிறோம். தோழர் - sethu - 09-07-2004 நண்பர் ராஜனின் தாயாரின் மறைவை முன்னிட்டு எமது அனுதாபங்கள். அவரின் துக்கத்தில் நாமும் பகிர்ந்துகொள்கிறோம்.அவருடைய தாயாரின் மரனச்சடங்கிற்கு போக முடியாததை இட்டு மனம் வருந்துகிறேன் காரனம் நான் தற்போது அதிக து{ரத்தில் நிக்கின்றேன். - sethu - 09-10-2004 இவை இனையத்தளம் ஒன்றில் வந்த தகவல்கள்???????? நீங்களும் நிதர்சனத்தின் செய்தியாளர்களாகுங்கள். ஜ புதன்கிழமைஇ 8 செப்ரெம்பர் 2004இ 07:31:29 மு.ப. ஸ ஜ யாழ். நிருபர் ஸ அண்மையில் தமிழ் இணையம் ஒன்றில் தொழிலாள வர்க்கத்தினருக்கு எதிராக நிதர்சனம் செய்தி பிரசுரித்ததாக விமர்சித்திருந்ததை நமது வாசகர்கள் அறிவர். அச்செய்தி தவறுதலாக எமது பிராந்திய செய்தி தரும் நிருபர் ஒருவரால் அனுப்பப்பட்ட செய்தி. செய்தியை குறித்த தமிழ் இணையத்தளம் கண்டிக்க முன்னரே (செய்தி பிரசுரமான 15 நிமிடத்தில தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. எனினும் நமது பிராந்திய செய்தி தரும் நிருபரின் தவறினைச் சுட்டிக்காட்டியதற்கு எமது நன்றி நமது இணையம் சாதியவர்க்க வேறுபாடுகளை ஊக்குவிக்கவோ , பிரித்துப்பார்க்கவோ ,பேதம்காட்டும் தளமோ அல்ல. பல நூறு பிராந்திய செய்தி தரும் நிருபர்கள் செய்திகளை நேர்மையுடனும் , உண்மையுடனும் தருகிறார்கள் அவற்றை நிதர்சனம் தளம் நிதர்சனம் ஆக்குகிறது. எனினும் யாராயிருப்பினும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதை நாம் வரவேற்கிறோம். வாசகர்களிடம் இருந்தும் செய்திகளை பெற்றுக்கொள்ள நிதர்சனம் விரும்புகிறது. நீங்களும் நிதர்சனத்தின் உலக தமிழ் செய்தியாளர்களாகுங்கள். எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள் கருத்துக்களை நிதர்சனம் வரவேற்கின்றது. விமர்சனங்களை வருவேற்கிறோம். தோழமையுடன் நிதர்சனம் நண்பர்கள்இ நண்பிகள் குழு nitharsanam@yahoo.co.uk http://www.nitharsanam.com/?art=70321 - sethu - 09-10-2004 சிறீலங்கா புலனாய்வுத்துறையின் நிதியில் டென்மார்கில் துரோக இணையத்தளம் ஜ வியாழக்கிழமைஇ 9 செப்ரெம்பர் 2004இ 05:04:28 மு.ப. ஸ ஜ டென்மார்க் சதர்சினி ஸ ´´எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகின்றார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்குசக்திகள் மீது, எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்´´ -தமிழீழ தேசியத் தலைவர் கூறியதற்கு அமைய நாம் கவனத்தில் எடுக்கவேன்டிய சில விடயங்கள் இருக்கிறது. சிறீலங்கா அரசாங்கம் தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அதேவேளை தமிழீழத் தேசியத்துக்கு எதிரான பல சதிவேலைகளில் ஈடுபட்டு வருவது மக்கள் அறிந்த விடயமே; அதன் ஒரு அங்கமாக புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் துரோகிகளை பாவித்து தமிழீழ தேசியத்திற்கு எதிராக தொலைக்காட்சி, வானொலிகள், பத்திரிகைகள், மற்றும் இணையத்தளங்களை நடாத்தி வருகின்றது. எமது உரிமைப் போராட்டத்தினைக் காட்டிக் கொடுத்து தமது தேவைகளைப் புூர்த்தி செய்து சுகபோகமாக வாழ்ந்தவர்களில் பலர்; இன்று இல்லாத போதிலும் இவர்களின் துரோகத்தால் ஏற்ப்பட்ட பாதிப்பை இன்றும் எமது இனம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் டென்மார்க்கிலும் தமிழீழத் தேசியவிடுதலைக்கும் தமிழீழத தேசியத்தலைமைக்கும் எதிரான திட்டமிட்ட பொய்பிரச்சாரங்களை மெற்கொள்ளும் துரோக இணையத்தளம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளமை எமக்கு மிகவும் அதிர்ச்;சியை தந்துள்ளது. இதை அறியாத சில இளைஞர்கள் இவ் இணையத்தளத்தால் உள்வாங்கப்பட்டு தமது பெற்ரோihயும் எமது கலை கலாச்சார பாரம்பரியங்களை கொச்சைப்படுத்த ஆரம்பித்து இப்பொழுது எமது தேசியத்தின் வரலாற்றையே மறுதலித்து சிறிலங்கா அரசு சொல்லும் தவறான வரலாற்றை ஏற்று தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான கருத்தியலை உருவாக்கி தங்களையே அறியாது சிறிலங்கா பௌத்த சிங்கள பேரினவாதிகளின் மேலாண்மைக்குள் சிக்குண்டு நிரந்தர அடிமைகளாக போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அன்பான தமிழீழ மக்களே விழிப்படையுங்கள்! · உங்கள் பிள்ளைகளுக்கு எமது வரலாற்றை கூறுங்கள்! · அவர்களை எமது இனம்மீதும,; எமது தலைமைமீதும் பற்றுள்ளவராக நெறிப்படுந்துங்கள்! · துரோக குடும்பத்தைச் சேர்ந்த இளந்தலைமுறையையும் இனம் கண்டு திருத்த முயலுங்கள்! அவர்களின் தலைமுறை செய்தபிழையை அவர்களும் தொடர்ந்து செய்ய நாம் அனுமதிக்கமுடியாது. · நாம் ஒரு தேசிய இனம் , எமக்கு எம்மை நாமே ஆளும் உரிமைவேண்டும் . · எமது ஏகபிரதிநிதிகள் தமிழீழவிடுதலைப்புலிகளே என்று சர்வதேசமெங்கும் உரத்துக்கூறுவோம் இது புலம்பெயர் தமிழீழமக்களின் வரலாற்றுக்கடமை. வாழ்க தமிழ் மலர்க தமிழீழம் டென்மார்க் வாழ் தமிழீழ மக்களின் விழிப்புணர்வுக்குழு nitharsanam@yahoo.co.uk - sethu - 09-10-2004 http://www.nitharsanam.com/?art=70325 |