![]() |
|
என் இமைகள் மூடவில்லை........ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் இமைகள் மூடவில்லை........ (/showthread.php?tid=7346) |
- Eelavan - 03-16-2004 என்ன நண்பரே எது வேண்டும்? - Mathan - 03-16-2004 எனக்கு ஒரு எட்டு அடியில் பண்டித தமிழில் இல்லாமல் ஒரு கவிதை தந்தால் போதும் - Eelavan - 03-18-2004 நல்லது நண்பனே எனக்கு புதுக் கவிதை மரபுக் கவிதை இரண்டுமே பிடிக்கும் மரபுக் கவிதையை பண்டிதத் தமிழ் என்று வெறுமனே ஒதுக்கி விடாதீர்கள் புதுக் கவிதைக்கு நிகராக ஏன் அதற்கு மேலான சுவை மரபுக் கவிதையில் உண்டு முக்கியமாக எனக்குப் பிடித்தது வெண்பா அதன் இலக்கண இலக்கியங்களை களத்தில் விரிவாக எழுத ஆசை எனக்கிருக்கும் புலமையோ சிறு துரும்பு நேரமோ அதனிலும் குறைவு எனவே இவற்றை நிவர்த்தி செய்து கொண்டுவிரைவில் அனைவருக்கும் விளங்கும் வகை அவற்றைத் தருகின்றேன் கவிதை கேட்டாய், கொடுக்கலாம்.. ஆனால், தலைப்பு? யோசிப்போம். மனது... அசை போட, ஒத்துவராத எழுத்துகளை கை... கிழித்துப் போட்டது, இயற்கை... ஊகூம். காதல்.... நிறைய எழுதியாயிற்று. மனிதர்... ம்ம். ஏன்? மனதில் தோன்றியவை... இதையே தலைப்பாக்கினால். ஆகா!!! தலைப்புக் கிடைத்துவிட்டது. எழுதிவிடுவோம்,! பேனாவை எடுத்தால்.. ஒன்று உறைத்தது!!! மனம் தான் கசங்கிக் கிடக்கிறதே.... தலைப்பு வராமல், நான்!! கசக்கிப் போட்ட காகிதத் தாள்கள் போல!!! - shanmuhi - 03-18-2004 கசங்கிய மனம் மேலும் கசங்காமல்... அருமை கவி காண ஆவலுடன் காத்திருக்கும் - sWEEtmICHe - 03-18-2004 SHANMUHI Wrote:கசங்கிய மனம் மேலும்
- sWEEtmICHe - 06-23-2004 .. நேரம் கிடைகவில்லை கவிதை அனுப்ப மன்னிகவும்..விரைவில் வரும்..... கவலை வேண்டாம் நண்பர்களை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 06-23-2004 நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்.. கவிதை ஆறுதலாக எழுதலாம்! - kuruvikal - 06-23-2004 என்ன சோழியான் அண்ணா ஆறுதல் சொல்லுறீங்க.... அப்படி என்னதான் நடந்தது அவருக்கு.... :roll: (யாழ் கள உறுப்பினர் சுவீற் மிச்சின் மனவேதனை அறியாது வழமைபோல் வருகிறார் என்று எண்ணி வைத்த கருத்தில் அவரின் துக்கமான மனநிலை அறியக் கிடைத்ததை இட்டு இதில் உள்ள தகவல் திருத்தம் செய்யப்படுகிறது...) - sOliyAn - 06-23-2004 ஏதோ கேள்விப்பட்டேன்... ஆறுதல் கூறவேண்டும்போல இருந்திச்சா? அதுதான்! http://www.geetham.net/forums/viewtopic.ph...p=104707#104707 - kuruvikal - 06-23-2004 ஓ அப்படியா சங்கதி... மன்னிக்க வேண்டும் மிச் இந்த விடயம் எங்களுக்குத் தெரியாது... உங்கள் மனம் நோகும் படியாக ஏதாவது எழுதியிருந்தால்.... அத்தோடு உங்கள் துக்கத்தை நாமும் பகிர்ந்து கொண்டு உங்கள் தாயாரின் ஆத்ம திருப்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...! நீங்கள் உங்கள் தாயாரின் மேல் அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தீர்கள் என்பதும் சிறுவயதிலேயே உங்கள் தந்தையை இழந்து நீங்கள் தவித்த போது உங்களை எல்லாம் அன்போடும் பாசத்தோடும் நேசத்தோடும் வளர்த்தெடுத்து பாதுக்காத்த அந்தக் கோட்டை தகர்ந்ததை இட்டும் இப்போதும் அதே தாயின் பாசத்திற்காகவும் நேசத்திற்காகவும் எவ்வளவு துடிதுடிப்பீர்கள் என்றும் எண்ணும் போது நாமே வேதனையால் துடிக்கின்றோம் நீங்கள் எவ்வளவு வேதனையை உணர்வீர்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது.... உங்கள் வேதனையை ஆற்ற வார்த்தைகளோ வழிகளோ எமக்குக் கிடையாது... எல்லாவற்றிற்கும் எம்மை ஆளும் சக்தியான இறைவனை மண்றாடி.... அந்த இறைவனே உங்களுக்குத் தாயும் தந்தையுமாகி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் எல்லோருக்கும் வேதனையற்ற மனநிறைவுள்ள வாழ்வை வழங்குமாறு இரந்து வேண்டிக்கொள்கின்றோம்....! - Paranee - 06-23-2004 சோகச்சுமையை இறக்கிவைக்க தளம் வந்த சோதரிக்கு உமது சுமையை நாமும் சுமக்கின்றோம் கவலையை மறந்து கண்ணீர் களைந்து என்றும் என்றென்றும் மனதை திடப்படுத்தி வாழப்பழகிக்கொள்ளுங்கள் - sWEEtmICHe - 06-23-2004 மிகவும் நன்றி ......
- kavithan - 06-24-2004 கண்ணீரே வாழ்க்கையா சகோதரியே உனக்கு மனம் நோகும்படி யான் ஏதாவது எழுதியிருந்தால் மன்னித்தருள்வாயாக. உனக்கு அன்பும் ஆறுதலும் அளிக்க யாழ் கருத்துக்களம் உண்டு ஓடோடி வருவாயாக - kavithan - 06-24-2004 வெல்லத்தமிழிச்சியே, உங்கள் அன்னைக்காய் என் அன்னையர்தினக் கவிதையை சமர்ப்பிக்கின்றேன் <b>எங்கள் அம்மா</b> அடிப்பவளும் அவளே ! அணைப்பவளும் அவளே ! அகம் எங்கும் நிறைந்திருப்பவளும் அவளே ! அவள்தான் எங்கள் அம்மா. தாலாட்டுப் பாடி தாய்ப்பாலில் எமக்கு, அன்பையும், அறிவையும் கலந்து தந்தவளும் அவளே ! அவள் தான் எங்கள் அம்மா. அன்போடு எம்மை அழகாக வளர்த்து அறிவாக வளர்த்து அகிலம் போற்றிட அகமகிழ்பவழும் அவளே ! அவள் தான் எங்கள் அம்மா . அண்ணன்..தம்பி.. அக்கா...தங்கை அப்பா.. என்ற உறவுகளுக் கெல்லாம் அணையா விளக்காய் மிளிர்பவளும் அவளே ! அவள் தான் எங்கள் அம்மா . அறுபதுகோடி நன்றிகள் சொன்னாலும் அவளின் அன்புக்கு அல்லது ஆண்டு முழுவதும் அவள் எமக்காக உழைப்பதற்கு அது இணையாகுமா ஆனாலும் அவளுக்காகா ஒரு தினம் அதுதான் அன்னையர் தினம் . கவிதன் 07/05/2004 http://sooriyan.com/index.php?option=conte...d=392&Itemid=31 - kavithan - 06-24-2004 மன்னிக்க வேணும் எனக்கு படம் போடத்தெரியாது என்ன, சரியா. - sWEEtmICHe - 06-24-2004 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->வெல்லத்தமிழிச்சியே, உங்கள் அன்னைக்காய் என் அன்னையர்தினக் கவிதையை சமர்ப்பிக்கின்றேன் <b>எங்கள் அம்மா</b> <img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_amma...a.jpg' border='0' alt='user posted image'> அடிப்பவளும் அவளே ! அணைப்பவளும் அவளே ! அகம் எங்கும் நிறைந்திருப்பவளும் அவளே ! அவள்தான் எங்கள் அம்மா. தாலாட்டுப் பாடி தாய்ப்பாலில் எமக்கு, அன்பையும், அறிவையும் கலந்து தந்தவளும் அவளே ! அவள் தான் எங்கள் அம்மா. அன்போடு எம்மை அழகாக வளர்த்து அறிவாக வளர்த்து அகிலம் போற்றிட அகமகிழ்பவழும் அவளே ! அவள் தான் எங்கள் அம்மா . அண்ணன்..தம்பி.. அக்கா...தங்கை அப்பா.. என்ற உறவுகளுக் கெல்லாம் அணையா விளக்காய் மிளிர்பவளும் அவளே ! அவள் தான் எங்கள் அம்மா . அறுபதுகோடி நன்றிகள் சொன்னாலும் அவளின் அன்புக்கு அல்லது ஆண்டு முழுவதும் அவள் எமக்காக உழைப்பதற்கு அது இணையாகுமா ஆனாலும் அவளுக்காகா ஒரு தினம் அதுதான் அன்னையர் தினம் . கவிதன் 07/05/2004 http://sooriyan.com/index.php?option=content&task=view&id=392&Itemid=31<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - sWEEtmICHe - 06-24-2004 பரணீ....அண்ணா.... ![]() .... நன்றி நண்பர்கலை...., தாங்க முடியவில்லை இந்த சின்ன பட்டாம்பூச்சிக்கு என்ன செய்ய
- shanmuhi - 06-24-2004 கவலை வேண்டாம் சகோதரி... இந்த பட்டாம்பூச்சிக்கு க்கு ஆறுதல் சொல்ல யாழ்களம் இருக்கின்றது. உங்கள் தாயாரின் ஆத்ம திருப்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். - tamilini - 06-24-2004 மன்னிக்க வேண்டும் இது எனக்கு தெரியாது ககோதரி. உங்கள் அன்னையின் ஆத்தமா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். உங்கள் துயரம் எத்தகையது என எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது வருந்தாதிpர்கள் சகோதரி. உங்கள் இழOப்பு இடுகட்ட முடியாதது தான். காலம் உங்கள் துன்பத்திக்கு முடிவு கட்டும். - sWEEtmICHe - 06-30-2004 குருவிகல் Wrote:ஓ அப்படியா சங்கதி... மன்னிக்க வேண்டும் மிச் இந்த விடயம் எங்களுக்குத் தெரியாது... உங்கள் மனம் நோகும் படியாக ஏதாவது எழுதியிருந்தால்.... மன துயரம் நண்பர்களே உங்களால் சிரு ஆறுதல் ......கிடைக்கிறது .. நன்றி யாழ் நண்பர்களே.....
|