Yarl Forum
சுட்ட கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


- sOliyAn - 03-23-2004

வீட்டை கழுவுறதுக்குக்கூட அந்தக் காலத்தில இருந்து இந்தக்காலம் வரை விளக்குமாறுதான்.. இவங்கள் ஒவ்வொரு சின்ன வேலைகளைக்கூட சுலபமாக செய்ய.. எவ்வளவு கருவிகளை சாதாரணமா செய்யுறாங்கள்.. அதுக்குக்கூட அங்கை ஒருத்தருக்கும் ஆர்வமில்லை.. ஏன்.. இந்த புட்டுக்கும் இடியப்பத்துக்கும்மேலை சாப்பாட்டிலகூட புதுசா கண்டுபிடிக்க வழியைக் காணேல்லை.. அதுக்கை பிளேனும் ரொக்கெற்றும்தான் கேக்குதோ?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 03-23-2004

அதுதான் சோழியான் அண்ணா.... வாய் மட்டும் இருக்கே நம்மாகள்ளட்ட அது எல்லாத்தையும் தங்களுக்கு என்று சொத்தமாக்காதோ.....! பிறகெதற்கு கண்டுபிடிப்பு....! யார் கண்டுபிடித்தாலும் நம்மாக்கள் உரிமை கோராகினமோ....????!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 03-23-2004

லண்டனின் லட்சணம்

சாராமாரியாக பறக்கின்றன
சத்தத்துடன் வாகனங்கள்

முற்று முழுதாய் தம்மை உடைகளினால்
மூடிய மனிதர்கள்
முழுதாய் விடிவைக் காணாமலே
மூச்சிறைக்க ஓடும்
"முதல் உலக" மாந்தர்கள்

தேடியும் கிடைக்கா சூரிய ஒளியை
தேடிப் பூங்காக்களில் தவமிருக்கும்
தேர்ந்த மக்கள்

அவசரமான வாழ்வை
அவசரமாய் வாழ்ந்து
அவசரமாய் முடித்து
அடங்கியே விடுவர்

பனிக்கட்டிகள் தலைமேல் விழுந்தும்
பக்கெட்டில் வாங்குவார் கட்டி ஜஸை

மழை பெய்தால் நகரெங்கும்
மடைதிறந்த வெள்ளம்

பனிப்பெய்தால் சாலையெங்கும்
பழுதடைந்து நிற்கும் வாகனங்கள்

காற்றடித்தால் தெருவெங்கும்
கட்டையாய் சரிந்திடும் மரங்கள்

இலையுதிர் காலமென்றால்
இயங்கமறுக்கும் புகையிரதம்

இல்லையா இங்கே இனிமையான உணர்வுகள் ?

இரவிரவாய் மதுவருந்தி , இல்லம்
இருந்து இரா நிலயில் அவர்க்கு ஓர் மகிழ்ச்சி

கோடைகாலத்திலே
கோலங்களைப் பார்க்கணுமே
உடலை மூடும் உடையெல்லாம்
உண்மையாக ஒரு முழமே
அதுவும் ஓர் மகிழ்ச்சி அவ்ர்களுக்கு

வெப்பம் கூடினால் ஓடிடுவார்
வெண்மணற் கடற்கரைக்கே

ஆசிய மக்கள் எமக்கெல்லாம்
அடிமனதில்
அடங்காத எண்ணமொன்று

நிறத்தாலே எமைப் பிரித்து
நிச்சயமாய்
நீங்காத வேற்றுமை அளித்திடுவார்
நினைவெல்லாம் இதுவேதான்

என்னவென்று சொல்லுவேன் ?

திறமை உண்டென்றால் தடையின்றி
திறக்கும் வழி எமக்கு இவ்வூரில்
கல்வி கற்பதற்கு உள்ள வழிமுறைகள்
கடைசிவரை கைகொடுக்கும்

உழைத்துவாழ இங்கு
உண்டாமே பலவழிகள்
உண்மை மனிதர் பலருண்டு
உள்ளம் ஒன்றே அவர் சொத்தென்று

நிறங்கள் பிரிவினை
நிறைந்ததிங்கென்றால்
நிறைவாய் வாழும் பல தமிழர்
நிறைவதன் மர்மமென்ன?

ஒன்று சொல்வேன் கேளீர் !

லண்டன் என்னும் நகர்
லட்சங்கள் பலவற்றை
லட்சியத்தோடு வாழும்
லட்சண மனிதருக்கு அளித்ததுண்டு

காலநிலை
கவலைதான்
நிறப்பிரிவும் நிஜம்தான்

ஆனாலும் தோழனே

தாயகத்திற்கடுத்து எமை
தாலாட்டி வளர்த்த
தரமான லண்டன்
தப்பாமல் லட்சணம்தான்.

நன்றி - சத்தி சக்திதாசன்


- sOliyAn - 03-23-2004

அட இதுதானா லண்டன்?! ஏதோ எனஇறு நினைச்சன்!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kaattu - 03-23-2004

kuruvikal Wrote:தேடவும் பஞ்சியானதுகள் எங்க சிந்திக்கப் போகுதுகள்...நீங்க போடுங்கோ BBC சுட்டதென்ன சுயமே இல்லாததுகள் நிறைந்து போச்சு.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>தேடப் பஞ்சியெண்டால் சிந்திக்கத் தெரியாதெண்டு ஆர் சொன்னது: விட்டால்
தியரி எழுதி சமன்பாடும் போட்டுடுவியள் போலை இருக்கு.
</b>


- nalayiny - 03-23-2004

sOliyAn Wrote:வீட்டை கழுவுறதுக்குக்கூட அந்தக் காலத்தில இருந்து இந்தக்காலம் வரை விளக்குமாறுதான்.. இவங்கள் ஒவ்வொரு சின்ன வேலைகளைக்கூட சுலபமாக செய்ய.. எவ்வளவு கருவிகளை சாதாரணமா செய்யுறாங்கள்.. அதுக்குக்கூட அங்கை ஒருத்தருக்கும் ஆர்வமில்லை.. ஏன்.. இந்த புட்டுக்கும் இடியப்பத்துக்கும்மேலை சாப்பாட்டிலகூட புதுசா கண்டுபிடிக்க வழியைக் காணேல்லை.. அதுக்கை பிளேனும் ரொக்கெற்றும்தான் கேக்குதோ?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஏன் நீங்கள் கண்டு பிடிக்க வேண்டியது தானே. இப்பிடியே சுற்றத்தாரை பற்றி ஏளனமா கதைச்சு கதைச்சே செத்து முடிக்க போறியள். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- nalayiny - 03-23-2004

sOliyAn Wrote:அவர் தேடித் தேடி எரிச்சலடைஞ்சுட்டார்போல...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஓ இப்படிக் கூட ஒரு விசயமிருக்கா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-23-2004

அப்ப கதைவிடாமல் நீங்களே உங்கட தியறிகளை எழுதி சமன்பாடு போட்டுக் காட்டலாமே...ஏன் மற்றவர் வாயைப் பாத்துக் கொண்டு நிக்கிறியள்...!

அவன் இவன் அவள் இவள் என்ன செய்யுறாள் எண்டு பாக்காம உங்களால முடிஞ்சத எழுதலாமே செய்யலாமே...ஏதோ நாலு நல்ல வார்த்தையாவது பேசலாமே இயன்றவரை....மோகன் அண்ணா டொலராக் கொட்டிக் களம் நடத்த நாங்கள் கழிவறை ஆக்கிறதெண்டு நிக்கிறம்...கழிவுகள் போட வேற இடமிருக்கு...அதுசரி...ஊரில முத்தத்தில இருந்ததுகள்.....??????! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சீமையில என்ன திருந்தவா போகுதுகள்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 03-23-2004

B.B.C நான் அப்போதே சொன்னேன் சுட்ட கவிதை சுடுகிறது என்று பாருங்கள் களம் வெந்து தணிந்திருக்கிறது??????


- nalayiny - 03-23-2004

sOliyAn Wrote:
Quote:எத்தனை விசயம் மற்றவர்கள் கண்டுபிடித்தை பாவிக்கிறோம், அவனவன் ஏரோப்பிளேன் கண்டு பிடித்துதான் பறந்து போகலாம் அப்பிடின்னா ஒருத்தரும் இலங்கையை விட்டு போயிருக்க முடியாது.
இரண்டு ஒல்லித் தேங்காயைக் கட்டிக்கொண்டு கடலிலை குதிச்சா...?!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சிறுவனாக இருக்கும் போது கோவில் கேணியுள் அல்லது தோட்ட கிணத்துள் நன்றாகவே நீந்த பழகி இருக்கிறியள் எண்டு தெரியுது. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கடலுக்கை குதிக்கிறதெண்டா ரயர் கொண்டு போய்த்தான் கீரிமலையுள் குதிக்கலாம். ஒல்லி தேங்காயை கட்டிப்கொண்டு போனா அலை கொண்டு போய்விடும். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- sOliyAn - 03-23-2004

மாரிகாலத்தில சுழிபுரம் பறாளாய் முருகன் பிள்ளையார் ஆலய கேணிகள்.. பிறகு திருவடிநிலைல கடல்தான் குளிக்கிறது.. கொஞ்சம் மீசை முளைக்கேக்கை.. சைக்கிள்ல கீரிமலைதான்.. கத்திக் குழறி கீரிமலை பனைகளை பாத்துக்கொண்டு.. அப்பிடியேபோய் கேணிக்கை விழுந்துட்டு.. வரேக்கை பண்டத்தரிப்பில கொத்துரொட்டி சாப்பிட்டு வரும்போது... ம்.. இப்ப படீல ஏறவே மூச்சடைக்குது.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- vallai - 03-23-2004

அப்ப தம்பி சுழிபுரமே
நாங்களும் முந்தி வசு இருந்தாலும் பம்பல் எண்டு சைக்கிள்ளை தான் வெளிக்கிடுறது அப்படியே உச்சி வெய்யில் சுடுமளவுக்கும் தண்ணிலை(கடல் தண்ணி)நிண்டிட்டு மடத்திலை சாப்பிட்டிட்டு வெளிக்கிட்டம் எண்டால் கூவில்லை தான் போய் நிற்பம்

அந்தத் தண்ணியிலை வந்த அலுப்பு இந்தத் தண்ணியிலை போடும் சாமம் படத் தான் வீட்டை வாறது இப்பத்தைப் பொடி பெட்டையளுக்கு எப்பிடித் தெரியப்போகுது உதெல்லாம்
எல்லாம் தொண்டைமானாத்தோடை சரி


- Mathan - 03-23-2004

Eelavan Wrote:B.B.C நான் அப்போதே சொன்னேன் சுட்ட கவிதை சுடுகிறது என்று பாருங்கள் களம் வெந்து தணிந்திருக்கிறது??????

இங்கே எந்த பக்கம் சுடாமல் இருக்கு? தண்ணீர் கவிதை என்று பெயர் வைத்தால் தளம் குளிர்மையாக இருக்குமா இல்லை தண்ணீர் மாதிரி ஓடுமா?


- Mathan - 03-23-2004

vallai Wrote:அப்ப தம்பி சுழிபுரமே
நாங்களும் முந்தி வசு இருந்தாலும் பம்பல் எண்டு சைக்கிள்ளை தான் வெளிக்கிடுறது அப்படியே உச்சி வெய்யில் சுடுமளவுக்கும் தண்ணிலை(கடல் தண்ணி)நிண்டிட்டு மடத்திலை சாப்பிட்டிட்டு வெளிக்கிட்டம் எண்டால் கூவில்லை தான் போய் நிற்பம்

அந்தத் தண்ணியிலை வந்த அலுப்பு இந்தத் தண்ணியிலை போடும் சாமம் படத் தான் வீட்டை வாறது இப்பத்தைப் பொடி பெட்டையளுக்கு எப்பிடித் தெரியப்போகுது உதெல்லாம்
எல்லாம் தொண்டைமானாத்தோடை சரி

நாட்டு நடப்பு அப்படி என்ன செய்ய? நீங்கள் சொன்ன தொண்டைமானாத்து கூட பாத்தது கிடையாது.


- Eelavan - 03-23-2004

ம்ம் சுட்ட கவிதை சுடும் கவிதையாகி விட்டதோ என்று நினைத்தேன் பெயர் வைத்த உங்களில் தப்பில்லை அதனைச் சுடவைத்தவர்களைத் தான் கேட்கவேண்டும்

ஷ்ஷ்ஷ்......................

தண்ணிப் பிரியர் களத்தில் தான் நிற்கிறார் உங்கள் பாட்டுக்கு தண்ணீர் அது இதுவென்று சொன்னால் தண்ணி என நினைத்து தானும் இறங்கிவிடப் போகிறார்


- vallai - 03-23-2004

ஏண்டாப்பா என்னை என்ன தண்ணிச்சாமி எண்டு நினைச்சியளோ இப்பிடியும் அப்பிடியும் ஒருக்கா விழாமல் நடந்து காட்டவே?

அப்பு பீ.பீ.சி நீர் வல்லையையே பாத்ததில்லை எப்பிடி தொண்டைமானாறு தெரியும்
அதுதான் அப்பு அந்தச் சன்னிதி கோவில் இரூக்கிற இடம் அதுசரி சன்னதி கோவில் தெரியுமே ?அங்கை தான் கோட் முருகா இஸ் லிவிங்


- Mathan - 03-23-2004

vallai Wrote:ஏண்டாப்பா என்னை என்ன தண்ணிச்சாமி எண்டு நினைச்சியளோ இப்பிடியும் அப்பிடியும் ஒருக்கா விழாமல் நடந்து காட்டவே?

அப்பு பீ.பீ.சி நீர் வல்லையையே பாத்ததில்லை எப்பிடி தொண்டைமானாறு தெரியும்
அதுதான் அப்பு அந்தச் சன்னிதி கோவில் இரூக்கிற இடம் அதுசரி சன்னதி கோவில் தெரியுமே ?அங்கை தான் கோட் முருகா இஸ் லிவிங்

கோட் முருகா வோஸ் லிவிங் அப்பிடின்னு நினைச்சேன். பரவாயில்லையே ...... அங்கையே இருந்து அருள் குடுக்கிறார்.


- Mathan - 03-23-2004

முகம் கிழித்து இன்னொன்று


புரட்சி
விடியல்
தேடல்
வர்க்கம்
சாதி
நான் அதிகம் பாவித்த வார்த்தைகள்
நண்பர்கள் அதிகம் கூடினால்
வாக்குவாதம்
இது சம்பந்தமாகவே இருக்கும்

முற்போக்குவாதி
சிந்தனையாளன்
வாசிப்பவன்
ஆராய்ந்து பேசுபவன்
இதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றி
சொன்ன வா£¢த்தைகள்

மேதாவி என்ற போர்வைக்குள்
ஒளிந்துகொள்ள யாருக்குப்
பிடிக்காது ?

பின்னிரா வேளையில்
எவளோ ஒரு இளம் பெண்
நடந்து செல்ல
அவள் "அதுவாகத்தானிருக்கும்"
எனக்குள்ளிருக்கும் நான் சொல்லிக்கொண்டது

முகமூடி கிழிந்து முகம் தொ¤ய
உனக்காக
பொய்முகத்தோடு
கவிதை
புனைபெயர்
கூட்டத்தில் கத்தல்
எதுவுமே இனி சாத்தியமில்லை
எனக்கு

நன்றி - நிர்வாணி


- kuruvikal - 03-23-2004

[b]<span style='font-size:25pt;line-height:100%'>'நாலு நாளே பழகியிருந்தாலும் நல்லவன் நல்லதைச் செய்வான்! நாற்பது வருடம் பழகியிருந்தாலும் கெட்டவன் கெட்டதையே செய்வான்!\" </span>


- Mathan - 03-23-2004

[quote=kuruvikal][b]<span style='font-size:25pt;line-height:100%'>'நாலு நாளே பழகியிருந்தாலும் நல்லவன் நல்லதைச் செய்வான்! நாற்பது வருடம் பழகியிருந்தாலும் கெட்டவன் கெட்டதையே செய்வான்!\" </span>

கவிதைக்கு இது பதிலா? என்ன சொல்ல வருகின்றீர்கள்? புரியவில்லையே குருவி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.