Yarl Forum
மீண்டும் ஓரு ? ? ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மீண்டும் ஓரு ? ? ? (/showthread.php?tid=7023)

Pages: 1 2 3 4 5 6 7


- Mathivathanan - 07-17-2004

ஆயுதத்தை கீழைபோட்டு ஒரு விசாரனைக் கமிஷன் உருவாக்கினால்த்தெரியும் யார் யார் என்ன என்ன எப்படிச் செய்தது எண்டு தெரியவர.. சிங்களவன் செய்தது தமிழன் தமிழனுக்குச் சொய்ததிலை பத்திவொன்றுகூட தேறது.. அந்தளவு கொடுமை தமிழன் தமிழனுக்குச் செய்தான்.. செய்துகொண்டிருக்கிறான்..
எல்லாம் ஈழத்தமிழனின் தலைவிதி..


- Eelavan - 07-17-2004

இதனைத் தான் சொல்லுறது முதலைக்கண்ணீர் என்று.சிங்களவன் தான் ஆரம்பித்து வைத்தது வரலாறு உங்களுக்கு கோளாறு என்பது எங்களுக்குத் தெரியும்.


- Mathivathanan - 07-17-2004

உங்கள் முதலைக் கண்ணீரை தமிழாராச்சி மகாநாட்டிலிருந்து தொடங்குங்கள்..

யாரும் எவரையும் அனுப்பவில்லை.. யாரும் எவரையும் சுட்டுக் கொல்லவில்லை.. சுட்டுக் கொல்லப்படவுமில்லை.
Idea


- Eelavan - 07-17-2004

ஏன் ஐம்பதுகளில் நடந்த கலவரத்தில் நீங்கள் பிறந்திருக்கவில்லையோ?
அல்லது 1920களில் விடுதலைப்போராட்டாம் யாரால் அடிகோலப்பட்டது என்பது போன்ற தகவல்கள் எங்களுக்குத் தெரிந்திருக்காது என்ற நப்பாசையோ?

முதலைக்கண்ணீர் எது தெரியுமா?சிங்களவர் தமிழர் பிரச்சனையில் குளிர்காய்ந்துவிட்டு இன்று ஐயோ நாடு அழிகிறதே என்று ஓலமிடுவது
காதிலை பூ கந்தசாமி வேலைகள்


- kirubans - 07-17-2004

Mathivathanan Wrote:உங்கள் முதலைக் கண்ணீரை தமிழாராச்சி மகாநாட்டிலிருந்து தொடங்குங்கள்..

யாரும் எவரையும் அனுப்பவில்லை.. யாரும் எவரையும் சுட்டுக் கொல்லவில்லை.. சுட்டுக் கொல்லப்படவுமில்லை.
Idea

இதிலிருந்தே தெரிகிறது உங்கள் வரலாற்றறிவின் இலட்சணம். நீங்கள் எந்த தளத்தில் இயங்குகிறீர்கள் என்று புரிகிறது.


- Mathivathanan - 07-17-2004

சரி கிருபன்ஸ்.. நீங்களே சொல்லுங்கோ. என்ன காரணத்தால் தமிழாராச்சி மகாநாட்டிலை சனம் செத்ததெண்டு..
கிருபன் எந்த தளத்தில் இருக்கிறார் என்பது இப்பொது கண்கூடு.. இந்த இலச்சனத்தில் அவரது வரலாறு என்ன என்பது தெரிகிறது..

மற்றவர் அதைவிட ஒரு படி மேலை 1920 க்கு போட்டார்..
இவ்வளவு காலமும் சொன்னது பொய்யெண்டு சொல்லுறாரோ.. என்னவோ..?


- kirubans - 07-17-2004

1921 இல்தான் அருணாச்சலம் இலங்கை தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்தவர். அதற்குக் காரணம் தேசிய காங்கிரஸ் சிங்கள நலனைப் பற்றி மட்டும் சிந்திக்க வெளிக்கிட்டதாகும். இதுதான் தமிழருக்கும் சிங்களவருக்கும் இனரீதியான முரண்பாடு தொடங்கின முதல் நிகழ்வு.

பிறகு 56ஆம் ஆண்டு சிங்களச் சட்டமும், இனமோதலும் வந்தது. அதுதான் இல்லையென்று நீங்கள் சாதிக்கிறீர்களே.

1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டில் 9 தமிழர்களை எதுவித காரணமுமின்றி பொலிசார் கொன்றார்கள். அறுத்துப் போட்ட மின்சாரக்கம்பிகளில் அகப்பட்டுத்தான் அவர்கள் செத்தார்கள். பொலிஸ்தான் அறுத்தது என்று நீங்கள் ஒத்துக் கொள்ளமாட்டீர்கள்.

வரலாறு தெரிந்துதான், நாங்கள் தமிழர்களாக இருந்து எமது சந்ததியையும் தமிழர்களாக வளர்க்க வேண்டுமென்றுதான் தமிழ் தேசியத்தில் பற்றுள்ளவர்களாக இருக்கிறோம்.

அந்நிய அடிமை வழ்வில் மோகம் கொண்டிருந்தால் இந்தக் கருத்துக்களத்திற்கே வந்திருக்க மாட்டேன்.


- Mathivathanan - 07-17-2004

Quote: 1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டில் 9 தமிழர்களை எதுவித காரணமுமின்றி பொலிசார் கொன்றார்கள்.

அறுத்துப் போட்ட மின்சாரக்கம்பிகளில் அகப்பட்டுத்தான் அவர்கள் செத்தார்கள். பொலிஸ்தான் அறுத்தது என்று நீங்கள் ஒத்துக் கொள்ளமாட்டீர்கள்.
ஓமோம் அந்த சனத்துக்குள்ளை பொலீஸ் மின்கம்பத்திலை ஏறி அறுத்தி விழுத்துமட்டும் பொலீஸ் க்கு கரண்டு அடிக்காமல் அறுத்து விழுத்தினாப்புறம்தான் தமிழருக்க கரண்டு அடிச்சது.. ஓமொம்.. நீங்கள் சொல்லுறது சரியாத்தானிருக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பகிடியை விட்டு உண்மைக்கு வருவம்.. 1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டில் சுட்டுச் சாக்கொண்டது இல்லையே.. [b]<span style='color:green'>அப்ப மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மட்டும் உண்மை.. சரி சரி.. இதுவே முதற்படியாக அமையட்டும்..
மிச்சத்துக்கு கல்லெறிஞ்சு பொலீசை கூட்டிவந்தது அதுகளையும் சொல்லுங்கோ.. பிறகு நான் தெடருறன்.. </span>


- kirubans - 07-18-2004

அப்ப தமிழீழப் போராட்டம் என்பது சும்மா சாப்பிட்டுவிட்டு வேலையேதுமற்ற வெட்டிகளால் உருவாக்கப்பட்டது என்கிறீர்கள்.
இப்படி ஏதும் நடக்காவிட்டால் தமிழர்கள் எல்லாம் நிம்மதியாக இருந்திருக்கலாம் என்கிறீர்கள்.

அதாவது, கிழக்கு சிங்கள மாகாணமாகப் போயிருக்கும்; வெலி ஓயா என்று வன்னியும் முல்லைத்தீவும் போயிருக்கும். காங்கேசனிலும் சிங்களவர் குடியிருந்திருப்பர். தமிழரெல்லாம் சிங்களம் படித்து சிங்கள ஊரில் கோலோச்சியிருப்பார்கள். கொழும்பிலும் தமிழர்கள் கொடிகட்டிப் பறந்திருப்பார்கள். யாழ்ப்பாணத்தார் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு வெள்ளைக் கொலர் உத்தியோகதிலுள்ள மாப்பிள்ளைகளைத் தேடியிருப்பார்கள். சிலர் நயினார் என்றும் நாச்சியார் என்றும் பெரிய பவிசுடன் இருந்திருப்பார்கள். இவைதான் நடந்திருக்க வேண்டும் என்பது உங்கள் ஏக்கம். ஆனால் உங்களைப் போல இல்லாது பலர் தூர நோக்கோடு வெளிக்கிட்டதால்தான் தமிழ் இனம் இப்போதும் மிஞ்சியுள்ளது.

உங்கள் கதைகளைக் கேட்டால் எனக்கு அம்புலிமாமா படித்த காலம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.


- Mathivathanan - 07-18-2004

அதிலென்ன சந்தேகம்.. இருந்த 35 இலச்சத்தில் 10 இலச்சம்தான் மீதியுள்ளது..
கிழக்குச் சிங்களப் பூச்சாண்டி வடக்குத்தமிழன் பதவிக்குவரச் சொன்னது.. கடைசிவரை கிழக்குத்தமிழன் சிங்களவனுடன் கூட்டுவைத்துத்தான் செயற்பட்டான்..
பதவிக்கு வராதவன் வருவதற்காக தேர்தலுக்கு முன்னம் கத்துவானே தவிர மிகுதியெல்லாம் வெறும் மாயை..
கைவிட்டு குடாநாட்டில் எண்ணக்கூடிய அளவிலிருந்த சிங்களவர்..
தமிழருடன் தமிழில்கதைத்த சிங்களவர்..

தற்பொது தமிழா சிங்களத்தில் உரையாடவேண்டிய நிலைக்கு வந்தும் உங்களக்கு புத்தி வரவில்லையென்றால் என்ன செய்யவது..

சிங்களவர் விகிதாச்சாரம் கூடியுள்ளது.. குடியேற்றத்தால் அல்ல.. வெளிநாடுகளுக்கும் சிங்களப் பிரதேசங்களுக்கும் தமிழா இடம்பெயர்ந்ததால்..

இவாகளின் தூர நோக்கு இருந்த மக்களில் மூன்றிலிரண்டு பங்கு தமிழ்மக்கள் இல்லை.. இதில் 5 வீதமாவது திரும்புமாவென்றது கேள்விக்குறியே..

எப்போதும் தமிழ்ப்பகுதிகளில் ஓலம்.. இதுதானா தூரநோக்கு..?


- kirubans - 07-18-2004

Mathivathanan Wrote:[size=14]
கிழக்குச் சிங்களப் பூச்சாண்டி வடக்குத்தமிழன் பதவிக்குவரச் சொன்னது.. கடைசிவரை கிழக்குத்தமிழன் சிங்களவனுடன் கூட்டுவைத்துத்தான் செயற்பட்டான்..
பதவிக்கு வராதவன் வருவதற்காக தேர்தலுக்கு முன்னம் கத்துவானே தவிர மிகுதியெல்லாம் வெறும் மாயை..
size]
கிழக்குத் தமிழர்களோடு பழகுபவர்கள் உங்கள் பொய்யான கருத்துடன் உடன்படார். இது முஸ்லிம்களையே எப்போதும் பார்த்திராத யாழ்ப்பாணத் தமிழர் அவர்களைத் தொப்பி பிரட்டிகள் என்று சொல்வதைப் போன்றது.

பி.கு. உங்கள் கருத்துக்களை வாசிக்கும்போதெல்லாம் சுப்பிரமணிய சுவாமியின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. 8) 8) 8) 8)


- Mathivathanan - 07-18-2004

உங்களை விடவா அவங்கள் தொப்பி பிரட்டியள்..? இப்ப மட்டக்களப்பு பிரச்சளையை ஒரு தனிமனித பிரச்சனையை தீர்க்க முடியாமல் அவலப்படுறது உங்கள் தொப்பி பிரட்டலாலன்றி அவர்களதாலல்ல..


- Eelavan - 07-18-2004

அரைவேக்காட்டு வரலாறு அரசியல் அறிவை வைத்துக்கொண்டு பேய்க்காட்டுறார்.

தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு கல்லெறிந்து வரவழைத்ததாகவே வைத்துக்கொள்வோம் கூடியிருந்தவர்களுக்கு குழந்தைகள் பெண்கள் என்றும் பார்க்காமல் அடிப்பது எவ்வகை நியாயம் போதாக்குறைக்கு காவல்துறை சுட்டதில் தான் மின் கம்பிகள் அறுந்துவிழுந்தன காவல்துறை அடித்ததால் காயமடைந்தோர் பலர்.

நக்கும் புத்தியை சிலர் கைவிடும்வரை விடிவு இல்லை.தாத்த நல்லா நக்குங்கோ எப்பவாவது இலங்கை வந்தால் சிங்களவன் குடை பிடிப்பான் அதுக்காக நக்குங்கோ


- tamilini - 07-18-2004

வரலாறு வரலாறு...... என்று இடைக்கிடை தொட்டு செல்கிறீர்கள்......... இங்கு முழுதாக வரலாறு தெரிந்தவர்கள் இருந்தால்..... உண்மையான வரலாற்றை எழுதுங்களேன்.... எமக்கு தெரியாதததை தெரிந்து கொள்வோம்.......!


- Kanani - 07-18-2004

சிறிலங்காவிற்கு இந்தியா 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்
[ ராகினி ] [ ஞாயிற்றுக்கிழமை, 18 யுூலை 2004, 14:23 ஈழம் ]

சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்திய அரசு 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியுள்ளது.

சிறிலங்காவின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கடன் உதவி மூலம், சிறிலங்கா அரசு இந்தியாவின் இருந்து எரிபொருள் இறக்குமதியை மேற்கொள்ளும் என தெரியவந்துள்ளது.

குறைந்த வட்டி வீதத்தில் ஏழு வருட காலத்தில் மீள அளிப்பதற்கு ஏதுவாகவே இந்த கடன் உதவி இந்திய அரசினால் வழஙக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்


இந்த நேரத்தில் கடன் வழங்குவது.....இந்தியாவின் நோக்கத்தை தெட்டத்தெளிவாகக் காட்டுகிறது...


- Mathivathanan - 07-18-2004

நாகரீகமற்று இருப்பதால் நீக்கப்படுகின்றது - மோகன்


- Mathivathanan - 07-18-2004

பெண்கள் குழந்தைகள்.. ஓமோம்.. கலியானவீடுதானே நடந்தது..

Eelavan Wrote:நக்கும் புத்தியை சிலர் கைவிடும்வரை விடிவு இல்லை.தாத்த நல்லா நக்குங்கோ எப்பவாவது இலங்கை வந்தால் சிங்களவன் குடை பிடிப்பான் அதுக்காக நக்குங்கோ
இந்தியாட்டை நக்கின அரைகுறையிலை பிறேமதாசாவிட்டை நக்கி இந்தியாவுக்கு துப்பினதாலைதான் இவ்வளவும் புரிஞ்சுதோ..

மின்சாரம் தாக்கியதால்தான் இறந்தார்கள் என்று ஒப்புக்கொண்டீர்களே அதற்கு நன்றி..

கல்லெறிஞ்சு பொலீசை கூட்டிவந்தவர்கள்தான் எல்லாத்துக்கும் பொறுப்பு ஏற்கவேணும்..


- Eelavan - 07-18-2004

அதைத்தான் முதலியே சொன்னேனே கல்லால் எறிந்து அழைத்த காவல்துறை பொதுமக்களைத் தாக்குமளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளது கேட்டால் அவன் பொறுப்பு ஏற்கவேண்டும் இவன் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று சடைகிறீர்கள்.உங்களுக்கென்ன நக்குகிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்று தமிழிலே பழமொழி கூட உண்டு தாத்தா


- Mathivathanan - 07-18-2004

தாய்மாரும் குழந்தைகளும் தாக்கப்படவில்லையா சரி சரி.. அதற்கு மறறுமொரு நன்றி..
கல்லெறிந்த கூட்டம்.. அங்கு வரவழைத்து யாரைத் தாக்கியது..? எப்படித் தாக்கிது அதற்கான பதிலைத்தாருங்கள்..
எதிர்க்கருத்து சொன்னால் நடு றோட்டில் துரோகிப்பட்டம் கட்டி சுடுவார்களே சுட்டு சாக்கொல்லுவார்களே.. அப்படி செய்திருந்தால்த்தான் குற்றம்..
நக்குகிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்று தமிழிலே பழமொழி உண்டு நீங்கள் கூறியதுதான்..


- kuruvikal - 07-18-2004

Kanani Wrote:சிறிலங்காவிற்கு இந்தியா 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்
[ ராகினி ] [ ஞாயிற்றுக்கிழமை, 18 யுூலை 2004, 14:23 ஈழம் ]

சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்திய அரசு 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியுள்ளது.

சிறிலங்காவின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கடன் உதவி மூலம், சிறிலங்கா அரசு இந்தியாவின் இருந்து எரிபொருள் இறக்குமதியை மேற்கொள்ளும் என தெரியவந்துள்ளது.

குறைந்த வட்டி வீதத்தில் ஏழு வருட காலத்தில் மீள அளிப்பதற்கு ஏதுவாகவே இந்த கடன் உதவி இந்திய அரசினால் வழஙக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்

இந்த நேரத்தில் கடன் வழங்குவது.....இந்தியாவின் நோக்கத்தை தெட்டத்தெளிவாகக் காட்டுகிறது...

என்னத்தைக் காட்டுது தெட்டத்தெளிவா... உதை விபரமாச் சொன்னாத்தான் சில பேருக்குப் புரியும்... இல்ல இந்தியா அன்பில இறைக்கிறமாதிரி எல்லே கதையால காட்டிப்போடுவினம்...!