![]() |
|
பெண்மையின் மெளனபாசை...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பெண்மையின் மெளனபாசை...! (/showthread.php?tid=4824) |
- வியாசன் - 03-10-2005 என்ன தமிழ் நீங்கள் மகளிர்ட்கு இன்னமும் விடிவு கிடைக்கவில்லை யென்கறீர்கள். எத்தனை ஆண்கள் தவழ்ந்துபோய் வணங்குகின்றார்கள் இது ஒரு பெரியமாற்றம். - hari - 03-10-2005 viyasan Wrote:என்ன தமிழ் நீங்கள் மகளிர்ட்கு இன்னமும் விடிவு கிடைக்கவில்லை யென்கறீர்கள். எத்தனை ஆண்கள் தவழ்ந்துபோய் வணங்குகின்றார்கள் இது ஒரு பெரியமாற்றம்.என்ன தவழ்கினமோ விட்டால் அப்படி படுத்துவிடுவினம் போல தெரிகிறது! - tamilini - 03-10-2005 Quote:எத்தனை ஆண்கள் தவழ்ந்துபோய் வணங்குகின்றார்கள் இது ஒரு பெரியமாற்றம்.காலிலே விழுந்தால் விடிவுகிடைச்சிட்டுது என்று அர்த்தமா என்ன..?? காலில விழத்தேவையே இல்லை.. :wink: - Mathuran - 03-10-2005 viyasan Wrote:என்ன தமிழ் இதைப்பார்த்தபிறகும் உங்களுக்கு எப்படி இந் கவதை எழுத மனம் வந்தது? வியாசன் அண்ணா இந்த படங்கள் விடயத்தில் நான் உங்கள் பக்கம். ஆண் பெண்ணை அடிமைப் படுத்தினாலும் தவறு பெண் ஆணை அடிமைப்படுத்தினாலும் தவறு. ஆனால் தமிழினி அக்கா ஏழைப்பெண்களை பற்றியே தனது கவிதனை புனைந்திருப்பார் என எண்ணுகின்றேன். பணத்திமிர் பிடித்த இந்த படத்தில் காணப்படும் சில திமிர் பிடித்த பெண்களும் இவ்வுலகில் உண்டு என்பதனை இப் படத்தினை பார்த்த பின்னர்தான் உணர்ந்தேன். இப்படியான பெண்களோ ஆண்களோ மானிடர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்பதை புரிவீர்களாக. தமிழினி அக்காவின் கவி மிக நன்று. - kuruvikal - 03-10-2005 tamilini Wrote:Quote:சட்டமும் நீதியும் இன்னும் பெண்ணுக்கு சலுகைகள் வழங்கும் நிலை ஏனோ....பெண் இன்னும் சலுகைகளில்தான் வாழ்கிறாளோ...???! மனதால் ஆணும் பெண்ணும் ஒருமைப்படும் போது மட்டுமே பெண் தன் நிலை ஆண் தன் நிலையை அணுகியவளாவாள்...அதுவரை பெண்களே பெண்களுக்கு சாபம் இட்டபடி சமூகத்தை ஏசிய படி வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான்...!பெண்களிற்கு சட்டம் எங்கும்.. சலுகைவழங்குவாய் நாங்க காணவில்லை.. அதைவிட பெண்கள் சலுகை நாடி நின்றது இல்லை. தமிழினி பெண்களுக்குப் பல சட்ட சலுகைகள் இருக்கு...இப்ப திருமணமான பெண் விவாகரத்தானால் கணவனிடம் இருந்து அவனின் சொத்துப் பறிக்க வழி இருக்கு...பிள்ளைப் பராமரிப்புக்கு என்று விசேட சலுகைகள் இருக்கு....அதுபோல..இந்தியாவில் ஆண்கள் ரீசிங்குக்கு தடை பெண்கள் செய்யும் ரீசிங்குக்கு தடையில்லை...இப்படிப் பலதைக் காட்டலாம்...! தமிழினி...இவை பெண்களுக்கான பிரச்சனையல்ல....சமூகப்பிரச்சனை...வெறுமே பெண்கள் மட்டும் இதைத் தீர்க்கமுடியாது...சமூகத்தில ஏற்படும் மாற்றங்களே இவற்றத் தீர்க்க முடியும்....இப்படிப் பிரச்சனைகளை ஆண்களும் தான் சந்திக்கிறார்கள்...வேற வேற கோணங்களில்...! :wink:
- Nilavan - 03-10-2005 வாழ்த்துக்கள் கவிதையை கவிதையாய் பார்தால் அருமை யதார்த்தை பர்த்தால் .......... நிலவன் - tamilini - 03-10-2005 Quote:தமிழினி பெண்களுக்குப் பல சட்ட சலுகைகள் இருக்கு...இப்ப திருமணமான பெண் விவாகரத்தானால் கணவனிடம் இருந்து அவனின் சொத்துப் பறிக்க வழி இருக்கு...பிள்ளைப் பராமரிப்புக்கு என்று விசேட சலுகைகள் இருக்கு....அதுபோல..இந்தியாவில் ஆண்கள் ரீசிங்குக்கு தடை பெண்கள் செய்யும் ரீசிங்குக்கு தடையில்லை...இப்படிப் பலதைக் காட்டலாம்...! இதற்கு காரணம் என்னவாய் இருக்கும். நீங்களே சொல்லுங்கள் பிள்ளைக்கு இருவரும் பெற்றோர் தானே பிள்ளைகளின் வளர்ப்பு தேவைகளை கொடுப்பது பெற்றோரின் கடமை தானே.. இந்த ஜீவனாம்சம் ஒன்றை ஆணில் தங்கியிருக்கிற பெண்கள் தான் வாங்கினம். இதை ஒன்றை வைத்து சட்டம் பெண்களிற்கு சலுகை வழங்கிறது என்றால் என்ன ஆகிறது. பெண்கள் ரீசிங்கை எதிர்த்து எத்தனை போராட்டம் நடத்தி இந்த சட்டத்தை கொண்டுவந்தார்களோ..?? ஆண்களும் தேவைப்பட்டால் இறங்கி போராடுறது யார் வேண்டாம் என்கிறது. அப்ப தான் சமநிலை பேணப்படும் இல்லையா..?? :wink: - tamilini - 03-10-2005 Quote:யதார்த்தை பர்த்தால் ..........முடிஞ்சவரை யதார்த்தம் தான் இந்த கவிதையில் இருக்கு கற்பனைக்கு இடமே இல்லை..வேறை எதனை யதார்த்தம் என்கிறீங்க..?? எனிவே உங்கள் கருத்துக்கு நன்றிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 03-10-2005 tamilini Wrote:Quote:யதார்த்தை பர்த்தால் ..........முடிஞ்சவரை யதார்த்தம் தான் இந்த கவிதையில் இருக்கு கற்பனைக்கு இடமே இல்லை..வேறை எதனை யதார்த்தம் என்கிறீங்க..?? எனிவே உங்கள் கருத்துக்கு நன்றிகள். <!--emo& எனிவே யா? அல்லது எனவே யா? எனிவே என்றால் அங்கிலச் சொல். அனவே என்றால் தமிழ் சொல். - tamilini - 03-10-2005 எனிவே என்று.. ஆங்கில வார்த்தை வந்திட்டுது.. மன்னிச்சுக்கோங்க..
- Mathuran - 03-10-2005 இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, சீ சீ. தவறுதலாகத்தானே நிகள்ந்தது விட்டுடுங்க. - Thaya Jibbrahn - 03-11-2005 உங்கள் படைப்புகளில் உள்ள கருத்துகள் யதார்த்தம். இதற்கு மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். அதனை உரியவர்கள் முன்வைக்கலாம். இது அவர்கள் படைப்பு. நீங்கள் உங்கள் கருத்தை முன்வைத்து படைப்பினூடே சொல்லி விட்டீர்கள். பிறகெதற்கு படைப்பு பற்றிய பொழிப்புரைகள். யாழ் களம் தந்திருக்கும் கருத்து சுதந்திரம் மூலம் படைப்பாளியின் சுதந்திரத்தில் எவரும் தலையிட முடியாது என்பது என் கருத்து. தமிழினி உங்கள் படைப்புகளை முன் வையுங்கள். - Malalai - 03-11-2005 ஆகா ஆகா அக்காக்கு சப்போட்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Vasampu - 03-11-2005 ஒரு படைப்பாளியின் படைப்பிற்கு எவ்வளவு சுதந்திரமுண்டோ அவ்வளவு சுதந்திரம் அப்படைப்பைப்பற்றி விமர்சிப்பவருக்கும் உண்டு. விமர்சனமென்பது தனிப்பட்ட தாக்குதலாக அல்லாமல் படைப்பின் குறை நிறைகளை சுட்டிக்காட்டுவதே. இதன் மூலம் தான் ஒரு படைப்பாளி தன் பலம் பலவீனங்களை அறிந்து தன் படைப்புக்களில் மெருகேற்ற முடியும். ஒரு படைப்பின் நிறைகளை மட்டுமே சுட்டிக்காட்டினால் அது வெறும் ஜால்ராவாகவே அமையும். ஆனால் நல்லவேனை இங்கு படைப்பாளி வெறும் ஜால்ராவிற்கு மயங்கவில்லை. விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு பதிலளிக்கின்றார். ஆனால் சிலர் அடிக்கடி மூக்கை நுழைத்து ஏன் தான் திரும்பத் திரும்ப ஜால்ரா போடுகிறார்களோ புரியவில்லை ????????????? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-12-2005 உங்கள் கருத்துக்களிற்கு மிகவும் நன்றிகள். மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்பம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 03-13-2005 வாழ்த்துக்கள் தமிழினி சரியான வேலைகள் நேரம் கிடைக்காதால் பிந்திய வாழ்த்துக்கள் எங்கை தொடக்கிபோட்டு ஒடி ஒழிச்சிட்டான் என நினைக்கவேண்டாம் விரைவில் வருவேன் :mrgreen: - tamilini - 03-13-2005 ம் ஆளைக்காணவில்லை அண்ணியுடன் பிசியோ என்று பார்த்தன்.. ம் நடத்துங்க பாப்பம். :wink: - tamilini - 10-28-2005 <img src='http://www.azeriressam.com/images/theme/hind_qizi.jpg' border='0' alt='user posted image'> <b>அறிந்தும் நீ அமைதியாய் அறியாமலும் நீ அமைதியாய் அடக்கம் என்று பெயர் கொண்டு அடங்கியே விட்டாய்...! உண்மை தெரிந்தும் -நீ உரைக்க மறுத்து ஊமையானதால் ஊமையாகவே ஆக்கிவிட்டார்.! பொன்னாய் பொருளாய் பொக்கிசமாய் பெண் நீ பொத்தி வளர்க்கப்பட்டாய். பொத்தி வைக்கப்பட்டாய் பாதுகாக்கப்பட்டாய். பொன்னல்ல நான் பொருளல்ல பெண் நான் என வீரப்பெண்ணாய் என்று நீ வாய்திறப்பாய் ? பாதுகாப்புக்கோராது உன்னை நீயே தற்காப்பது எப்போது?? சீதனச்சந்தையில் சிறுமையாய்ப் பெண்ணை பெருமை கூறி விற்றிடும் நம் தேசத்தில் சிம்மாசனம் ஏறி சனாதிபதியாய் பிரதமராய் போராளியுமாய் புதுமைப்பெண்கள் புறப்பட்ட பின்னரும். அச்சம், மடம் நாணம் என்று அடிபணிந்து எத்தனை நாள் ஏமாந்து போவாய்?! எண்ணிப்பார்ப்போம் சோதரியே ஏக்கங்கள் உனக்குள்ளும் எக்கச்சக்கமாய் தேக்கி ஏன் வைக்கிறாய் ? துணிந்து வா பெண்மையே..! தூய்மையாய் ஓர் உலகம் துரிதமாய் அமைப்போம். ஆக்கமும் அழிவும் துணிந்த எங்கள் கையிலே..! ஆக்குவோம் நல்லவற்றை அழிப்போம் அராஜகத்தை அடிமை விலங்கிற்கு விலங்கிட்டு புரட்சி செய்வோம். பெண்மை மென்மை என்ற இயலாமையை நீக்கி பெண்மை வல்லமை என்று அர்த்தம் செய்வோம். வெண்மையாய் மிளிரவும். கருமையாய் எரிக்கவும் கற்றுக்கொள்வோம். பேதையாய் ஒரு வாழ்வு பேச்சிற்கும் வேண்டாம். வாராய் சோதரி வல்லமையோடு வாழ்வோம் வாழவைப்போம் வாழ்ந்து காட்டுவோம்..!</b> பாசை தொடரும்..! http://tamilini.blogspot.com/ - kuruvikal - 10-28-2005 மிக நீண்ட காலத்தின் பின் களத்தில் தவழுது கவிதை.. ஆச்சரியமாகவும் இருக்கு...மகிழ்ச்சியாகவும் இருக்கு..! நல்ல கவிதையும் கூட..கவியின் பொருள்..பல காலப் பழமை... இன்னும் விழிக்காதவர்களுக்காய் போலும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Rasikai - 10-28-2005 தமிழினி கவி அழகாக இருக்கிறது.ஆனால் உங்கள் கவியின் கரு இந்தக்காலத்திலும் இருக்கா??. வாழ்த்துக்கள். தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் |