![]() |
|
உன் கண்கள் ஏன் இன்னும் கதை பேசுகிறது..?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உன் கண்கள் ஏன் இன்னும் கதை பேசுகிறது..?? (/showthread.php?tid=4785) |
- tamilini - 03-13-2005 என்ன எல்லாரும் முழிக்கிறியள்.. இதுவே தான் நமக்குமு்.. குருவி என்ன சொல்லுது என்று புரியல.. அதிகமாய் தேன் குடிச்சிட்டுபபோல :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-13-2005 tamilini Wrote:கனடாக்காரனும் வரவில்லை அன்பன் என்று ஆர்பரித்தவளே அடுத்த நிமிடமே அற்பன் என்பதும் நீதான்..! கனகாலம் காணாக் கண்களை கனவிற் கண்டு கதைவிடுவதும் நீதான்...! காதல் கொண்டவள் கனத்த பழிவரினும் கண்ணியமாய் தன் பழி தான் சுமப்பாள் தன்னவன் மீதோர் பழி வந்தால் வருந்தி அதையும் சுமப்பாள் மெளனமாய்...! நீயோ... குற்றம் செய்து குறையும் பிடிக்கிறாய் பக்கத்தில் அவளிருக்க என் கண்கள் உன்னோடு பேசுவதாய்...! இதை அவள் கேட்டால் என் வாயில் வார்த்தை இல்லையடி அசடுதான் வழியும்...! விதி வழி பழியில்லை வார்த்தைகள் மெளனமாக்கி காதலை மொட்டிலே கருக்கியவள் நீயடி..! அன்றே... கண்ணோடல்ல என்னோடு அன்பிருந்திருந்தால் ஒரு வார்த்தை உதிர்ந்திருப்பாய் உனக்காய் வாழ்வதாய்...! இன்று.... என் கண்கள் கதை பேசுவதாய் கதைவிட்டுக் கண்ணியம் தேடுறாய் கண்கெட்ட உலகம் அதைக் கண்டு உனக்காய் கண்ணீர் விடாதோ என்ன...??! இதுதானடி கன்னியர் நீவீர் படைத்துவரும் புதிய உலகத் தத்துவம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-13-2005 tamilini Wrote:என்ன எல்லாரும் முழிக்கிறியள்.. இதுவே தான் நமக்குமு்.. குருவி என்ன சொல்லுது என்று புரியல.. அதிகமாய் தேன் குடிச்சிட்டுபபோல :wink: <!--emo& உங்களுக்குத்தான் என்ன நடந்தது... ஏன் எல்லாரும் முழிக்கிறீங்க...தமிழினியின் கற்பனைக் கவிதையில அவர் வைத்த கற்பனைப் பாத்திரப் பையன் இருக்கானே...அவனின்ர நிலையைக் கொஞ்சம் வித்தியாசமாப் பாத்தம்...அதுதான்...! இதுவும் சாத்தியம் என்றில்லாமல் இல்ல....! பெண்கள் காதல் என்று எதையும் சொல்ல... செய்யக் கூடியவர்கள்..தானே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-13-2005 அன்பிலே அன்பன் என்பதும் கோவத்தில் அற்பன் என்பது காதலில் இனியமொழி லூசு இதைக்கூடப்புரிந்து கொள்ளாத நீ.. என்னை காதலிக்கவேணும் என்று நான் எதிர்பார்த்தது தப்பு தான். பொய்யாய் பழிவரின் அதை ஏற்று நடக்க நான் ஒன்றும் தலை குனிந்து வாய் பொத்தி ஏய்ப்பிற்கு நடைபோடும் பெண்ணல்ல எனது நிலையை ஆணித்தரமாய் எடுத்தியம்பும் உரிமையும் தில்லும் கொண்டவள் காதலன் நீ பழி போட அதை சுமந்திட நான் என்ன..???? என்னவனில் பழி வந்தால் பழிக்கு அவன் காரணம் என்றால்.. அவனை தண்டிக்கும் முதல் ஆள் நான் தான் என்னவன் மீது பொய்ப்பழி வீழ்ந்தால் பழிசொன்னோர் வாயை கிழிக்கும் முதல் ஆளும் நான் தான்.. எனக்குள் என்றும் என்னவன் நீ உனக்குள் நான் இல்லை என்பது எனக்கு பெரிதல்ல.. என்னவன் நீ என்பதால் உன்மேல் அன்பாய் பழிபோடுவதும் உன்னைத்திட்டுவதும் என் சின்னச்சின்ன சந்தோசங்கள் மண்டையிலை ஒன்றும் இல்லா உனக்கு எங்க இது புரிய புரிந்திருந்தால் தான் நீ இன்னொருத்தான் கணவன் ஆகியிருக்க மாட்டாயே காதல் வந்த வயதில் காதல் நான் சொன்னாள் பிஞ்சிலே பழுத்ததென்பாய் அட காத்திருந்தேன் காலம் கனிவதற்காய். காலம் கனந்ததென்று காதல் சொல்ல நான் வர துணையுடன் நீ வந்தாய். என்ன தான் நான் செய்ய..?? உன் கண்கள் அன்று காதல் மொழிபேசியதை ரசித்தேன் அதே கண்கள் இன்றும் பேசுவதாய் உணர்கிறேன். அதனால் தான் கவியில் சொன்னேன் உன் நிலையில் உன் மொழியை நான் ரசித்தால் பாவம் ஒரு பெண்ணிற்கு வில்லியாய் நான் எல்லோ வந்துடுவேன் ம... பயலே மன்றாடி உன்னிடம் காதல் பிச்சை கேட்கவில்லை. என்னோடு நான் பேசுகிறேன். உன்னவளிற்கு அது புரியாது. உனக்கு மட்டும் புரிந்தது காரணம் எனக்குள் நீ அல்லவா..?? உன் குடும்பக்கூட்டை பிரித்திட நான் விரும்பவில்லை.. அதனால் மெளனமாகிறேன். இது தானடி நவீன மகளீர் படைத்துவரும் புதிய உலகு என்று.. கதையை முடிக்காதே.. என் காதல் நெஞ்சம் என்ன செய்தாலும் உனக்கு தான் புரியும் பாவம் மற்றப்பெண்கள் விட்டுவிடு பன்மை போட்டு கண்ணன் ஆகாது உனக்குரியவர்களை பற்றி மட்டும் கதை.. :wink: - kuruvikal - 03-13-2005 காலத்தின் கோலத்தால் பிரிவுகள் எமைத் தாக்கப் பிரிந்திட்டோம் காதற் சுமை தாங்கிகளாய்...! புரிந்துணர்வுகள் பிந்தித்தான் வந்தாலும் பரிவுக்குரியவளாய் நீ என்றும் என்னவள்...! இது கள்ளமல்ல என் அருகிருப்பவளும் அறியும் உண்மைதான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathuran - 03-13-2005 ஆகா..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-13-2005 Quote:நீ என்றும் விதிவசத்தால் பிரிஞ்சம் சரி பிரிஞ்சது பிரிஞ்சது தான் இனி நான் உன்னவள் என்ற கதை வேண்டாம் அன்பனே உன்னவளின் அன்பில் பங்கு போட நான் பாவியல்ல பாசம் எல்லாத்தையும் ஒன்றாக்கி.. உன்னவளிற்கே கொடுத்துவிடு அது தான் அவளிற்கும் நல்லது உனக்கும் நல்லது. வாழ்க வாழ்க.. சம்பதி சமேதரராய். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 03-13-2005 ஆமா நல்லயிருக்கே........ - kuruvikal - 03-13-2005 tamilini Wrote:Quote:நீ என்றும் காதல் வீழ்ந்ததாய்... பெண்ணொருத்தி வருந்தி நொந்ததாய் சரித்திரம் வேண்டாம் என்று உன்னை என் பரிவுக்குரியவளாய் என்னவளாய்க் கொண்டேன்...! என் அன்பைப் பறிப்பவளாய் வில்லியாய் அன்றி ஒரு சக மனிதனாய் காண்கிறேன்....! என் அருகிருப்பவள் கூட உன்னைத் தோழியாய் அரவணைக்கிறாள் உன் சோகங்கள் தீர்ந்து உள்ளம் மகிழ்ந்து உனக்காய் நீ வாழ்ந்திட...! இப்போ உணர்ந்து கொள் அவளும் உன் தோழியாய் புதிய உலகுக்காய் உழைக்கும் உள்ளம் தான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-13-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எத்தனை அருமையானவள் உன்னவள்.. ம் ம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-13-2005 tamilini Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கற்பனையில இருக்கு...நிஜத்தில இப்படி எல்லாம் பெண்களக் காணவா முடியும்...அதுவும் தமிழ் பெண்களை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 03-13-2005 Quote:காலத்தின் கோலத்தால்காதலைக் கோட்டை விட்டுவிட்டு காலத்தின் கோலம் என காதலின் வலிமையை காலத்தின் காலடியில் போட்ட காதலனே - இன்று துனைவியார் துணையிருக்க மனம் கொள்ளை கொண்டவளை உன்னவள் ஆக்க ஆசைப்படுகிறாயே கள்ளம் இல்லாவிடினும் காதலியும் கட்டியவளும் சிந்து பைரவியாக வாழவா? (குருவி அண்ணா சும்மா சொன்னது இது அப்புறம் தங்கையை அடிச்சுப் போடாதிங்க....) - tamilini - 03-13-2005 Quote:கற்பனையில இருக்கு...நிஜத்தில இப்படி எல்லாம் பெண்களக் காணவா முடியும்...அதுவும் தமிழ் பெண்களை...!ம் இதை உங்க வாயால வரவேணும் என்று தான் பாத்தம்.. முன்னால் மனம் கவர்ந்தவரை கலியாணம் ஆனபின்னும் என்னவள் என்பியல்.. அவங்களும் ஓம் சரிங்க.. என்று சொல்லுவாங்களா..?? இதென்ன காவிய நாயகியரா.. கணவனை கூடையில சுமந்து.. கொண்டு போக.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-13-2005 tamilini Wrote:Quote:கற்பனையில இருக்கு...நிஜத்தில இப்படி எல்லாம் பெண்களக் காணவா முடியும்...அதுவும் தமிழ் பெண்களை...!ம் இதை உங்க வாயால வரவேணும் என்று தான் பாத்தம்.. முன்னால் மனம் கவர்ந்தவரை கலியாணம் ஆனபின்னும் என்னவள் என்பியல்.. அவங்களும் ஓம் சரிங்க.. என்று சொல்லுவாங்களா..?? இதென்ன காவிய நாயகியரா.. கணவனை கூடையில சுமந்து.. கொண்டு போக.. :wink: <!--emo& மனிதாபிமானமுள்ள எந்தப் பெண்ணும் அல்லது ஆணும் ஒருவருக்கு துன்பம் வந்தால் மற்றவருக்கு உதவுதல் என்பது மனிதனுக்கான இயல்பு...அது காவியம் தொடக்கம் கலிகாலம் வரை அவசியம்...! இல்ல... மனிதாபிமானம் உள்ள மனிதன் என்ற அந்த நிலையை இழந்து விலங்கிலும் கேடான ஒரு நிலையை அடைய வேண்டியதுதான்...! அண்மையில் ஒரு இடத்தில ஒரு சோடிப் புறாக்கள் பாத்தம்...ஒன்றிற்கு ஒரு கால் பாதத்தோட இல்ல...அவை உணவருந்தி விட்டு இறகு உலர்ந்திக் கொண்டிருக்க...காலுள்ள சோடிப் புறா மற்றதுக்கு அதன் தலை இறகுகள் உலர்த்தி விடுவதைப் பார்த்தம்...கண்ணால கண்டம்...மனிதரிடம் கூட அருகிவிட்ட அல்லது இல்லாத அந்தப் பண்பபை...புறாக்களிடம் கண்டது வியக்க வைத்தது....! சீன நண்பர் ஒருவர் அதைப் படம் பிடித்தும் கொண்டார்...! அதுகள் என்ன கலிகாலம் என்று புரட்சி என்று கண்மூடித்தனமாக தங்கள் உதவி செய்யும் குணத்தை கூட கூடை இறக்கியா வைத்துவிட்டன.....இல்லவே இல்லை...! அதுபோலத்தான் ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ மனத்தால் காயப்பட்டு வருந்தும் போது அவரைத் தேற்ற வேண்டியது மனித இயல்பு....அதை நாம் செய்வோம்...உண்மையில் இப்படி ஒரு சூழ்நிலை எமக்கு வந்தால் கூட...ஆனால் அப்படி ஒரு நிலை வரக்கூடாது யாருக்கும் என்பதாகவே எங்கள் செயற்பாடு முன்னிலைப்படுத்தப்படும்...வருமுன் காத்தல்...! மனிதாபிமானத்தின் முன் கணவன் மனைவி...பிள்ளை குட்டி என்பதற்கு மேல் மனிதன் என்ற சிந்தனையே அவசியம்...அங்கு வீர வசனம் பேச வெளிக்கிட்டால்...அது அவர்கள் தங்களைத் தாங்களே குணத்தால் தாழ்த்துவதாகத்தான் முடியும்...! இதுதான் எங்கள் கவிதை சொல்ல வந்த சாரமும் கூட...! :wink:
- tamilini - 03-13-2005 சரிங்க நிங்க சொல்லுறது.. பழைய காதலிலையை கலியாணம் செய்த பின்னும் என்னவள் நீ என்றால்.. எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். இல்லை ஒரு பெண் தான் பழைய காதலனை கலியாணம் முடிஞ்ச உடன் என்னவன் நீ என்பானா..?? இதெல்லாம் கற்பனைக்கு வேண்டும் ஆனால் சரியாய் இருக்கலாம். எந்த ஒரு தனி நபரும் தன்னவன் தன்னவள் தனக்கு மட்டுமே முழு சொந்தமாய் இருக்கனும் என்று எதிர்பார்ப்பார்கள் அதில் தவறும் கிடையாது. அது தாங்க வாழ்க்கை.. பழைய காதலிக்கு ஒரு சரியான வழியை ஏற்படுத்தி கொடுக்கனுமே தவிர அவளை மீண்டும் என்னவள் தான் நீ என்பது. இப்பொழுது வந்து விட்ட உங்களவளிற்கு. துரோகம் செய்வதாய் தான் அமையும். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-13-2005 Malalai Wrote:Quote:காலத்தின் கோலத்தால்காதலைக் கோட்டை விட்டுவிட்டு சிந்துவும் பைரவியும் தென்னிந்திய சினிமாவின் எச்சம் இவனும் அவளும் மனிதாபிமானத்தின் மிச்சம்...! கண் பேசக் காதல் கொண்டவள் கண்ணெதிரே அன்புக்காய் ஏங்கி வாழ வழி மாறிப் போயினும் அன்புக்காய் வந்தவள் கூட இருக்க.... மாசில்லா மனித அன்பால் அவள் உள்ளம் தேற்றி அவளுக்கும் ஓர் வாழ்வு உலகில் உதயமாக வழி காட்டுதல் தப்பா...???! அதுவும்... தெரிந்து செய்த தப்புக்காய் அன்றி தெரியாமல் நடந்த விபத்துக்காய்...! வழி தேடுவதும் காட்டுவதும் அவள் உறவுக்காய் அல்ல அவள் மேல் காட்டும் பரிவுக்காய்...! மனிதாபிமானம் எனும் மாசில்லா நிலை மனித வாழ்வுக்காய் தந்த உத்தரவுக்காய்...! இந்த நிலை வளர வேண்டும் மனமெங்கும் பெருக வேண்டும் தப்புகள் பெருக்கவல்ல விபத்துக்கள் தடுப்பதற்கு...! அகிலத்தில் காதலையும் கடந்த மனித அன்பு பெருகி நிற்க...! கடவுளாய் வந்தவன் மனிதனுக்குக் காட்டியது என்ன சிந்துவும் பைரவியும் கண்ட காமமா...??! சிந்துவும் பைரவியும் மனம் கொண்ட வெறியின் விளைவு...! கடவுள் தூதனாய் தந்தது அன்பின் விளைவு....! மனிதாபிமானத்தின் உச்சம்...! - kuruvikal - 03-13-2005 tamilini Wrote:சரிங்க நிங்க சொல்லுறது.. பழைய காதலிலையை கலியாணம் செய்த பின்னும் என்னவள் நீ என்றால்.. எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். இல்லை ஒரு பெண் தான் பழைய காதலனை கலியாணம் முடிஞ்ச உடன் என்னவன் நீ என்பானா..?? இதெல்லாம் கற்பனைக்கு வேண்டும் ஆனால் சரியாய் இருக்கலாம். எந்த ஒரு தனி நபரும் தன்னவன் தன்னவள் தனக்கு மட்டுமே முழு சொந்தமாய் இருக்கனும் என்று எதிர்பார்ப்பார்கள் அதில் தவறும் கிடையாது. அது தாங்க வாழ்க்கை.. பழைய காதலிக்கு ஒரு சரியான வழியை ஏற்படுத்தி கொடுக்கனுமே தவிர அவளை மீண்டும் என்னவள் தான் நீ என்பது. இப்பொழுது வந்து விட்ட உங்களவளிற்கு. துரோகம் செய்வதாய் தான் அமையும். :wink: <!--emo& நிச்சயமாகத் தமிழினி...இப்ப சொன்னீங்களே அது மிகவும் நியாயமான பார்வையால் வந்த கருத்தாக உள்ளது...! அதுதான் நாமும் சொல்கிறோமே...காதல் என்பது ஒருத்தியோட ஒருவனுக்கு அல்லது ஒருவனுக்கு ஒருத்தி மேல உண்மையா ஒரு தடவைதான் அன்பால் எழ முடியும்...! அந்தக் காதலை வாழ வைக்க வேண்டுமே தவிர வாழ்வில தவறுகளோ விபத்துக்களோ நிகழ இடமளிக்கக் கூடாது....அது பின்னர் ஒட்டு மொத்த வாழ்வையும் வேதனைக்கு உள்ளாக்கலாம்...! அதற்காக இந்த நிலை காவிய நிலை என்பதும் கண்டதும் காலமும் காதல் வரும் போகும் என்பதும் தவறாகவே எங்களுக்குத் தெரிகிறது....! இதையும் கடந்து அறியாமல் நிகழும் விபத்துக்களுக்கு வேதனையும் கண்ணீரும் வாழ்வை அழிப்பதுமல்ல தீர்வு... அங்கு மனிதாபிமானம் என்பது தன் பங்களிப்பால் தீர்வு தேட வேண்டும்...! அதற்காக தவறுகள் செய்யச் சொல்லவில்லை...செய்த தவறுக்காக அவர்களைக் கழட்டி விடாமல் உதவி செய்யுங்கள்...! காதலின் பெயரால் எவ்வளவு சாத்தியமோ...அந்தளவுக்கு இந்த நிலை தோன்றாமல் பாருங்கள் என்பதே எங்க கருத்து.... இப்படிச் செய்வதைத் தவிற்பதால் இப்படியான சிக்கல் நிறைந்த சூழல்கள் உருவாவதைத் தடுத்து மனித வாழ்வில் நாம் தேடும் மன நிம்மதியை விரைந்து அடையலாம்...! :wink:
- Malalai - 03-13-2005 காதலியைக் கைவிட்டு கன்னியொருத்தியின் கைபிடித்த போது மனிதாபிமானம் போன இடம் எங்கோ? காதலி மனம் கதற காதலன் நீ மணவறையில் காத்திருந்தாயே மணப்பெண்ணுக்காக அப்போது மனிதாபிமானம் எங்கு சென்றது? உன் மனமொத்த துனைவியுடன் துன்பமின்றி நீ வாழ்ந்திடவே துன்பமதில் வாழ்க்கையை ஓட்டிய காதலிக்கு துனை தேடுகிறேயே மனிதாபிமானம் தான் எங்கே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-13-2005 சரி சரி.. பாவம் அந்த காதலி.. கற்பனையில உருவான விட்டிடுங்க.. மழலை அந்த காதலன் பாவம். அவரும் கற்பனை தானே.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 03-13-2005 மொத்தத்தில் வாழ்வில் முதல் காதலும் முதல் முத்தமும் மறக்க முடியாதவை :? 8) :? 8) |