![]() |
|
கொதிக்கிறது திருமலை... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கொதிக்கிறது திருமலை... (/showthread.php?tid=1634) |
- Mathuran - 01-06-2006 இறந்த மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.
- sabi - 01-06-2006 எழுதிட வார்த்தையில்லை நெஞ்சு கொதிக்கிறது கொல்லப்பட்ட மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
- kuruvikal - 01-06-2006 யார்தான் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது..??! :?: சிறுவர்களைப் பாதுகாக்கப் புறப்பட மேற்குலக ரட்சகர்கள் இன்னும் ஒரு அறிக்கை கூட எவரையும் கண்டித்துவிடவில்லையே..! அரசுகள் படுகொலை செய்தால் அவை நியாயம்..அந்த உயிர்களுக்கு ஐநா சபையில் யுனிசெப்பில் உயிரெடுக்க அனுமதி அளிச்சிருக்கோ..???! hock: :roll: hock:
- கந்தப்பு - 01-06-2006 ஐயோ, ஐயோ தாங்கமுடியவில்லை. அவர்களின் பெற்றோர்கள், பிள்ளைகள் படித்து முன்னுக்கு வந்ததினை எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பினம். இப்பொழுது, எனக்கே தாங்கமுடியவில்லை என்றால் அவர்களுக்கு எப்படியிருக்கும்?. தமிழ் தேசத்துரோகிகளே இப்ப எங்கே போய் விட்டிர்கள்?. உங்களுக்கு மனச்சாட்சி இல்லையா?. இன்னும் நீங்கள் எலும்புத்துண்டுக்காக இனவெறியர்களுடன் கைகுழுக்கப்போறிர்களா? - MUGATHTHAR - 01-09-2006 <b>பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுப் படியே திருமலையில் ஐந்து மாணவர்களும் படுகொலை செய்யப்பட்டனர் - சண்டே ரைம்ஸ் திடுக்கிடும் தகவல் </b> பாதுகாப்பு அமைச்சின் அலோசகரும், முன்னாள் காவற்துறை மா அதிபருமான ஒருவரின் உத்தரவின் பெயரில் திருமலைக்கு அனுப்பப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரே கடந்த திங்கட்கிழமை ஐந்து தமிழ் மாணவர்களை சுட்டுப் படுகொலை செய்ததாக 'சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.சண்டே ரைம்ஸின் நேற்றைய பதிப்பில் 'பாதுகாப்பு நிலவரம்" பகுதியிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸவுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இந்தியாவுககு பயணம் மேற்கொண்டிருந்த வேளை இந்த குழுவை இந்த குறிப்பிட்ட அதிகாரி திருகோணமலைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற மர்மம் தொடர்கின்றது. இராணுவமும் பாதுகாப்பு தரப்பும் தெரிவித்திருக்கும் விடயங்களுக்கும் ஏனைய சகல தரப்பினர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றது. எனினும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது என்பதில் எந்தவித ஐயமும் இல்லாமல் நிரூபிக்கப்பட்டள்ளது. இதை விட தற்போது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலையில் உள்ள உயர் இராணுவ அதிகாரிகளுக்டகும் தெரியாமல் அங்கு 24 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படை கொண்ட குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இந்த குழுவிற்கு முதன்மை காவற்துறை அதிகாரி தலைமை வகிக்கின்றார். பாதுகாப்பு அமைச்சின் ஆலோகரும், முன்னாள் காவற்துறை மா அதிபருமான ஒருவரே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத சக்திகளை கடுமையான முறையில் கையாளுமாறு இவர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ அரசு தலைவருடன் இந்தியாவுக்கச் சென்றிருந்தவேளை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என எச்சரிந்திருந்தார். குறிப்பிட்ட இந்த அதிகாரியை அவரின் செயற்பாடுகள் குறித்து தெரிந்து ஆலோசனை வழங்குவதோடு அவர் பணிகளை நிறுத்திக் கொள்ளுமாறும் அவர் எச்சரித்துள்ளதாக தெரியவருகின்றது. கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும்;, அந்த முன்னாள் காவல்துறை அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட அலோசகர் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் சர்ச்சைககுரிய விதத்தில் பேட்டிகள் அளித்துவருவதும், கவனத்தில் எடுக்கப்பட்டது. இந்த பேட்டிகளின் போது இவரால் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமாகவும், அதே நேரம் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளை பெறாத முறையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளனஎனவும் சண்டே ரைம்ஸின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டள்ளது. http://www.sankathi.net/ பாதுகாப்பு அமைச்சின் உத்தரவில் கொல்லப்பட்ட மாணவர்கள் - வியாசன் - 01-09-2006 இச்செய்தி மேலே ஒருவரால் இணைக்கப்பட்டுள்ளது.. எனவே இதனை நீக்கியுள்ளேன். - Thala - 01-09-2006 குற்றச்சாட்டை ஒரு அதிகாரி மேல் போட்டு அரசாங்கம் தப்பிப்பதாகதான் தெரிகிறது... நல்லா தலையைப் போட்டு உடைச்சு இப்பதான் கதைகண்டுபிடிச்சிருகாங்களப்பா.. - மேகநாதன் - 01-12-2006 <b>திருமலை மாணவர்கள் படுகொலை: விசாரணை தொடக்கம் </b> சிறிலங்கா இராணுவத்தினரால் திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருகோணமலை நீதிபதி வி.இராமகமலன் முன்னிலையில்ல் இந்த விசாரணை நடைபெற்றது. சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட றஜீகரின் தந்தை மருத்துவர் கே. மனோகரன் அரை மணி நேரம் சாட்சியமளித்தார். மாணவர் சிவானந்தாவின் தாயார் தங்கதுரை, அவரது சகோதரி சுபாஜினி சித்ரவேலு இருவரும் கண்ணீர்விட்டு கதறியழுதபடியே சாட்சியமளித்தனர். இதையடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை மற்ற மாணவர்களின் பெற்றோர், உறவினர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. தமிழ் மாணவர்கள் படுகொலை தொடர்பிலான தகவல் அறிந்தோர் தகவல்களை கையளிக்கலாம் என்றும் திருமலை நீதிபதி அறிவித்துள்ளார். முன்னதாக இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்து திருகோணமலை அரச மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 2 மாணவர்களிடமும் திருமலை நீதிபதி சாட்சியங்களைப் பதிவு செய்தார். <b><i> தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b> - மேகநாதன் - 01-12-2006 <b>திருகோணமலையில் மேலும் 600 ஊர்க்காவல் படையினர் சேர்ப்பு </b> திருகோணமலையில் மேலும் 600 ஊர்க்காவல் படையின சேர்க்கப்பட உள்ளதாக கிழக்குப் பிராந்திய காவல்துறை பிரதி மா அதிபர் றோகான் அபயவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: ஊர்க்காவல் படைக்கு 300 பேர் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர். <i>அவர்கள் அனைத்து வீதித் தடைகளிலும் பயன்படுத்தப்படுவர். இந்தப் பகுதியிலிருந்து ஊர்க்காவல் படைக்கான இளைஞர்கள் தெரிவு செய்யப்படுவதால் பிரச்சனைகளை அவர்கள் நன்கு அறிவார்கள்</i> என்றார் அவர். இதனிடையே உப்புவெளியில் செவ்வாய்க்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறை சோதனைச் சாவடி தாக்குதலுக்குள்ளானதாகவும் ஒரு காவல்துறை சார்ஜண்ட் காயமடைந்து திருகோணமலை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. <b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b> - மேகநாதன் - 01-12-2006 <b>படையினர் அச்சுறுத்தலால் மூதூர் பிரதேச மக்கள் இடம்பெயர்வு </b> மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து மக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர். பள்ளிக்குடியிருப்பு, கலைமகள் இந்துக் கல்லூரி, கிளிவெட்டி மகா வித்தியாலயம் தங்கபுரம் அ.த.க பாடசாலை போன்ற பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் சுமார் 350ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அகதிகளாக தங்கியுள்ளனர். பாரதிபுரம், மேன்காமம் 58 மைல்கல் எல்.வி-03 போன்ற பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களே இவ்வாறு தங்கியுள்ளனர் <b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b> - மேகநாதன் - 01-12-2006 <b>மூதூரில் வயலுக்குச் சென்ற குடும்பஸ்தர் சிறிலங்கா பொலிசாரால் அடித்தக் கொலை! </b> மூதூர் மூன்றாம் கொலனி என்னும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு வேளாண்மை வயலுக்குக் காவலுக்குச் சென்ற தனபாலன் என்ற குடும்பஸ்த்தர் சிறிலங்காப் பொலிசாரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபரை உறவினர்கள் தேடிச் சென்ற போது சடலம் அடி காயங்களுடன் வீதியில் கிடந்தது இச்சம்பவம் தொடர்பாக தெயிவத்தப் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்வதற்காக சென்ற போது இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை இது தொடர்பாக எங்களுக்கு எதுவித தொடர்புமில்லையெனப் பொலிசார் கைவிரித்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தெயிவத்தை பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள இடத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனபாலனின் படுகொலைக்கு நீங்களே காரணம். இதற்கு நீதியான விசாரணை வழங்க வேண்டும். இல்லையேல் இப்பிரதேச்தை விட்டு வெளியே வேண்டும் என கோசங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கந்தளாய்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. <b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b> - மேகநாதன் - 01-13-2006 <span style='font-size:25pt;line-height:100%'><b>விசாரணைக்கு செல்லமுடியாமல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் படுகொலையுண்ட மாணவரின் பெற்றோர் </b> திருகோணமலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களதும் பெற்றோர், நீதிமன்ற விசாரணைகளுக்கு செல்ல முடியாதளவுக்கு கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வழக்கை வாபஸ் பெறுமாறும் இல்லையேல் குடும்பத்துடன் அழித்து விடுவோமெனத் தினமும் பல தொலைபேசி அழைப்புகள் வருவதாக, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மிரட்டல் காரணமாக ஏற்கனவே, இரு மாணவர்களது பெற்றோர் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான விசாரணைகளுக்குச் செல்லவில்லை. இனியும் தாங்கள் செல்லப் போவதில்லையெனவும் அவர்கள் கூறியுள்ளனர். கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதால் மட்டுமல்லாது இந்த நீதி விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை எதுவுமில்லையென்றும் ஏற்கனவே நடைபெற்ற பல படுகொலைகளின் போது நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளைத் தாங்கள் அறிவோமெனவும் கூறியுள்ளனர். இதேநேரம் முதல் நாள் விசாரணைக்காக திருகோணமலை நீதிமன்றத்திற்குச் சென்றவர்களுக்கு, தினமும் பத்திற்கும் மேற்பட்ட தடவை சிங்களத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அச்சுறுத்தல் காரணமாக தாங்கள் தொடர்ந்தும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதாகவும் வெளியே எங்கும் செல்வதில்லையெனவும், கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்திற்கு விசாரணைக்காக கூடச் செல்ல முடியாத நிலையில் தாங்களிருப்பதாகவும் பெற்றோர் கூறினர். இதேநேரம், இந்தப் படுகொலை விசாரணையை தொடர்வதற்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராயிருப்பதாகவும் அச்சமின்றி இவர்கள் விசாரணைகளுக்கு சென்று படையினரின் இந்த அட்டூழியத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன. </span> www.nitharsanam.com - மேகநாதன் - 01-13-2006 <span style='font-size:25pt;line-height:100%'><b>மல்லிகைத் தீவில் பலியான 2 தமிழரின் சடலங்களை ஐ.சி.ஆர்.சி. ஊடாக ஒப்படைக்க நீதிவான் பணிப்பு </b> மூதூர்-மல்லிகைத் தீவில் நடந்த படையினருடனான மோதல் சம்பவம் ஒன்றில் பலியான இரு தமிழர்களின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் ஊடாக, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி மூதூர் பொலிஸாருக்கு மூதூர் நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டார். இவ்விரு சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க மூதூர் பிரதிநிதிகளால் அடையாளங் காணப்பட்டன. கடந்த புதன்கிழமை மூதூர் பொலிஸார் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையிலே மூதூர் நீதிவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்ததுடன் இது தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்துக்கு உடனடியாகச் சமர்ப்பிக்கும்படியும் மூதூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். கொல்லப்பட்ட இரு தமிழர்களும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்றும் படையினர் தெரிவித்திருந்தனர்.</span> www.nitharsanam.com - kurukaalapoovan - 01-13-2006 உதுகளுக்கு எல்லாம் ஆதாரம் இல்லை. BBC CNN போட்டவங்களோ? இல்லாட்டி கண்காணிப்பு குழு அறிக்கை விட்டதோ? விசாரணை ஆணைக்குழு வைத்திருக்கு அரசாங்கம். அவர்கள் அறிக்கைவிடமுதல் வெறும் ஊகத்திலை செய்தி எழுதி மக்களை குளப்பி குளிர்காய நிக்கினம். - மேகநாதன் - 01-13-2006 <span style='font-size:25pt;line-height:100%'><b>திருமலையில் தமிழர்களின் வீடுகள் மீது சிங்களக் காடையர்கள் கல்வீச்சு </b> திருமலையில் சிங்கநகர் சந்தியிலிருந்து தமிழர் வாழும் பிரதேசங்களிற்கு முகங்களை கறுப்புத் துணிகளால் கட்டியவாறு கைகளில் தடிகள், பொல்லுகளுடன் வந்த சிங்களக் காடையர் குழுவொன்று வந்து தமிழர்களின் வீடுகள் மீது சரமாரியாக கல்வீச்சை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து உடனடியாக தமிழ் மக்கள் ஸ்ரீ லங்கா காவற்துறையினருக்கு அறிவித்திருந்த போதிலும் உடனடியாக அவ்விடத்திற்கு காவற்துறையினர் வரவில்லை. அதன் பின்னர் சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் அவ்விடத்திற்கு காவற்துறையினர் வந்திருந்தபோதும் காடையர் குழு அவ்விடத்திலேயே தரித்து நின்றுள்ளது. எனினும் இது தொடர்பாக காவற்துறையினர் அவர்களை விலகிச்செலலுமாறு கோரவோ, விசாரணைகளை நடத்தவோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மக்கள் எவரும் வீதிகளுக்கு இறங்க முடியாத நிலையிலேயே இருந்துள்ளனர். தமிழ் மக்களின் போக்குவரத்தினை கட்டுப்படுததும் ஒரு உள்நோக்குடனே யே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தமிழ்மக்கள் கருதுகின்றனர்.</span> www.sankathi.com - மேகநாதன் - 01-16-2006 <b>பொங்கல் பொருட்கள் வாங்கச் சென்றவர்கள் படையினரால் கைது </b> திருமலை மாவட்டம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து பொங்கலுக்காக பொருட்கள் வாங்கச் சென்ற மூன்று பேர் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசரெத்தினம் குணராஜா (31) கடங்கரைச்சேனை, சந்திரசேகரம் ஈஸ்வரன் (34), கடற்கரைச்சேனை கதிர்காமத்தம்பி ஆனந்தன் (27) களைமுந்தல் ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி நபர்கள் தைப்பொங்கலுக்கு பொருட்கள் வாங்கச் சென்ற போது இவர்களை படையினர் கைது செய்துள்ளனர். www.battieezhanatham.com - மேகநாதன் - 01-16-2006 <span style='color:red'><b>திருமலை மாநகர சபை விடுதி மீது கைக்குண்டு வீச்சு நால்வர் காயம் </b> திருமலையில் நேற்றுப் பிற்பகல் வீடொன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமலை நகரிலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள காந்தி நகரிலுள்ள மாநகர சபை விடுதி கட்டிடம் மீதே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. திருமலையில் சிங்கள மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட ஹர்த்தால் விலக்கப்பட்டுள்ளதாக அரச படையினர் அறிவித்து சில மணித்தியாலங்களில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நேற்று பொங்கல் தினம் என்பதால் வீட்டிலிருந்து பொங்கல் கொண்டாடிவிட்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போதே மேற்படி குடும்பத்தாரின் இருப்பிடத்தில் இந்த கைக்குண்டு விழுந்து வெடித்துள்ளது. இச்சம்பவத்தினால், வீரசிங்கம் ராஜேந்திரகுமார் (35) என்ற உத்தியோகஸ்தர், அவரது மனைவி, ராஜேந்திரகுமார் ராஜேஸ்வரி (35), இவர்களின் பிள்ளைகளான ராஜேந்திரகுமார் வித்தியாகரன் (04), ராஜேந்திரகுமார் சாஜிவித்தியா (06) ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி இடத்திற்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் பார்வையிடுவதற்கு வந்தபோது அவ்விடத்தில் நின்ற ஸ்ரீலங்கா விமானப் படையினரும், ஸ்ரீலங்கா இராணுவத்தினரும், அவர்களை விசாரணைகளை செய்யவிடாது தடுத்துள்ளனர். பின்னர் உப்புவெளி ஸ்ரீலங்கா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</span> www.battieezhanatham.com - மேகநாதன் - 01-16-2006 [size=18]<b>[color=red]திருமலை அன்புவழிபுர கைக்குண்டு வீச்சில் 4 பேர் காயம்.</b> திருகோணமலை அன்புவழிபுரத்தில் விமானப்படையினர் மீது இனம்தெரியாதோரால் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இதன்போது விமானப்படை வீரர் ஒருவர் படுகாயமடைந்ததோடு சம்பவத்தில் மூன்று பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.10 மணியளவில் இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.பலத்த காயங்களுக்கு இலக்கான விமானப்படையினர் மற்றும் பொதுமக்கள் திருகோணமலை அரசினர் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புவெளி பொலிசார் இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்]size <b><i>தகவல் மூலம்-பதிவு</i></b> - மேகநாதன் - 01-16-2006 <b><span style='color:brown'>திருமலையில் கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் திருகோணமலை பொங்குதமிழ் சமூகம் நடாத்திவந்த பணிபுறக்கணிப்புப் போராட்டம் நேற்றுமுதல் கைவிடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு மகாணத்திற்கான விசேட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் பொங்கு தமிழ் சமூகம் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டமையை அடுத்தே இப்பணிப் புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. 1. இராணுவத்தினர் காவல் நடவடிக்கை, ரோந்து நடவடிக்கை, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடும் போது முகத்தை கறுப்புத் துணியால் மறைத்துக் கொண்டுசெயல்படுதல் தவிர்க்கப்படவேண்டும். 2. தொழில்நுட்பக் கல்லூரியில் தங்கியிருக்கும் படையினரும், ஆலயங்களில், பாடசாலைகள், மற்றும் மதநிறுவனங்கள் என்பனவற்றில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் விலக் கப்பட வேண்டும். 3. வீதித்தடைகள் என்பனவற்றில் பணிக்கு அமர்த்தப்படுகின்ற படையினருடன் பொலிசாரும் சேவையில் ஈடுபடுத்தப்படவேண்டும். பொலிசாரின் எண்ணிக்கை படையினரதும் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகமாக இருத்தல்வேண்டும். 4. ஊர்காவல் படையினர் சீருடையுடன் மாத்திரம் பொலிசாருடன் இணைந்து பணியில் ஈடுபடுதல் வேண்டும்@ பொலிசார் இன்றி இவர்கள் தனித்து செயற்படமுடியது. 5. தேடுதல் நடவடிக்கை மற்றும் கைதுகளின்போது கைது செய்யப்படுவதற்கான காரணம், கைது செய்யப்படும் நபர், கைது செய்து கொண்டு செல்லப்படும் இடம் என்பன உறவினர்களுக்கு எழுத்து மூலம் கொடுக்கவேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய கோரிக்கைகளை தாம் அமுல்படுத்துவதாகவும் போராட்டத்தினை கைவிடுமாறும் வேண்டினார். நேற்றுக்காலை 11 மணி தொடக்கம் 1 மணி வரை பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் இந்து குருமார்கள், கத்தோலிக்க மதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சமூகநலன் விரும்பிகள், பொங்கு தமிழ்சமூகம், தமிழ் மக்கள் பேரவை என 42 பேர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். அதனை அடுத்து பொங்கு தமிழ் சமூகம் கலந்துரையாடல் நடாத்தி அவர்களது தீர்மானத்திற்கு அமைய இன்று முதல் கர்த்தால் நடை பெறமாட்டாது என தெரிவித்தன</span> [b]<i>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b> - மேகநாதன் - 01-17-2006 <b><span style='color:red'>கடற்படையினரின் வாகனம் மீது குண்டுத் தாக்குதல்: திருப்பித் தாக்கியதில் இரண்டு பொதுமக்கள் பலி! </b> திருகோணமலை நிலாவெளியில் சிறிலங்கா கடற்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை அடுத்து படையினர் மேற்கொண்ட கண்முடித்தனமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மக்களில் நால்வர் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுத்தாக்குதலின் போது வாகனத்தில் பயணம் செய்த 13 படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் திருகோணமலை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை துறைமுக படைத்தளத்துக்கு படையினரை ஏற்றிச்சென்ற வாகனத்தை இலக்கு வைத்து திருகோணமலை டிப்போவுக்கு அருகில்- மூன்றாவது மைல் கல்லுக்கு அருகில் - சைக்கிள் ஒன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தததை அடுத்தே கண்மூடித்தனமான இந்தத்தாக்குதல் இடம்பெற்றது. இந்த சைக்கிள் குண்டு தொலைவிலிருந்து ரிமோட் கொண்ட்ரோலர் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் இலக்கு தவறிவிட்டது என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருகோணமலை படைத்தளத்திற்கு வந்த விசேட உலங்குவானூர்தி மூலம் காயமடைந்த படையினரில் சிலரை கொழும்புக்கு ஏற்றிச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படையினரின் தாக்குதலில் ஒரு பொதுமகனுக்கு தலையில் சூடு பட்டுள்ளதாகவும் அவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.</span> <b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b> |