![]() |
|
"கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: "கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்..... (/showthread.php?tid=1123) |
- Raguvaran - 02-17-2006 Quote:மதமாற்றம் மொழிமாற்றம் அவர்களது மறைமுக குறிக்கோள்.. உள்ளிருந்து செய்ய முடியாதவற்றை வெளியிலிருந்து செய்வதற்கு பேச்சுவார்த்தை.. சமாதானம்.. சுயநிர்ணயம்.. உரிமை என்ற எத்தனையோ வார்த்தை ஜாலங்கள்.. நீர் உமக்கு தருகின்ற கூலிக்கு எதையும் செய்வீர் என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறீர். உமக்கு எந்த பிரச்சினையும் எமது விடுதலைப்போராட்டத்திற்குள் செருக வேண்டும் என்றும் முடிவெடுத்துவிட்டீர். அதற்கு எதையும் காரணம் காட்டுவீர். முதலில் நீர் என்ன செய்கிறீர் என்பதை நினைத்துப்பாரும். நீர் எதையும் நினைத்து பார்க்க மாட்டீர். ஏனென்றால் நீர் ஒரு நன்றியுள்ள விலங்கு. நாய் என்ற சொல்லி நாயை தாழ்மைப்படுத்த விரும்பவில்லை. நீர் தமிழ் சமுதாயத்தை பற்றி கவலைபடவேண்டாம். முதலில் அடுத்தவன் செய்யிறது சரியோ பிழையோ என்று எவருக்கும் கூற வேண்டாம். உமக்கு டன் முன்பு ஒருமுறை சொன்ன கதை நன்றாக பொருந்தும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Sukumaran - 02-17-2006 நான் பதிந்தது கீழே உள்ளதண்ணா.. முழுவதையும் வாசித்தால்தானே எனது கருத்தின் தன்மை புரியும்.. Sukumaran Wrote:ஹலலூயாவில் ஆரம்பித்து ஓம்சாயி அம்மா ஆங்சனேயா எல்லாம் சொல்லி முடித்துவிட்டீர்கள்போலும்.. அல்லா கு அக்பர் எப்படி சொல்வதென்ற திண்ணடாட்டம்.. இடையில பாவமன்னிப்பு அதற்கு தாங்களாக மதம்மாறுவதாக ஜேடனை வேறு.. Raguvaran Wrote:Quote:மதமாற்றம் மொழிமாற்றம் அவர்களது மறைமுக குறிக்கோள்.. உள்ளிருந்து செய்ய முடியாதவற்றை வெளியிலிருந்து செய்வதற்கு பேச்சுவார்த்தை.. சமாதானம்.. சுயநிர்ணயம்.. உரிமை என்ற எத்தனையோ வார்த்தை ஜாலங்கள்.. - Rasikai - 02-17-2006 இவோன் Wrote:சரி.. காதலர்கள் இருவர் வெ வ்வேறு மதங்களிலிருந்தால் என்ன செய்வது? அவரவர் மதங்களில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லலாமா? அல்லது குடும்ப வாழ்வில் சிக்கல்கள் ஏற்படாதிருக்க யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறிவிடலாமா? ஏனெனில் இருவரும் அதங்கள் தங்கள் மதங்களை கடைப்பிடித்து வந்தாலும் குழந்தைகள் பிறக்கின்ற போது அவர்கள் எந்த மதம் என்ற பிரச்சனை வருமில்லையா..? மதம் என்பது நாங்களா உருவாக்கினதுதானே. சோ அவர்கள் இருவரும் கட்டாயம் மதத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லைத்தானே. ஆகவே அவர்கள் இரு மதத்தையும் தவிர்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன். அல்லது அவர்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் அதே மதத்தை அவர்கள் குழந்தைகளும் பின்பற்றலாம் சோ இது அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்களை தடுக்க ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன். அல்லது இன்னும் ஒரு வழி சப்போஸ் ஒருவர் இந்து மற்றவர் கிறிஸ்டியன் என்றால் அவருக்கு பிறக்கும் பிள்ளை முஸ்லீம் மதத்தை பின்பற்றினால் எப்படி இருக்கும்( வாவ் வட்ட மல்ரிகல்ச்சர் பமிலி) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: சரி உங்கள் கருத்து என்ன இவோன்
- alla_ku_agbar - 02-17-2006 இன்சா அல்லா ரசிகை ஹிண்டுவுக்கும் கிறிஸ்டியனுக்கும் பிறந்தது அல்லாவை தொடர்வதா? பேஷ் பேஷ் - RaMa - 02-17-2006 Rasikai Wrote:இவோன் Wrote:சரி.. காதலர்கள் இருவர் வெ வ்வேறு மதங்களிலிருந்தால் என்ன செய்வது? அவரவர் மதங்களில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லலாமா? அல்லது குடும்ப வாழ்வில் சிக்கல்கள் ஏற்படாதிருக்க யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறிவிடலாமா? ஏனெனில் இருவரும் அதங்கள் தங்கள் மதங்களை கடைப்பிடித்து வந்தாலும் குழந்தைகள் பிறக்கின்ற போது அவர்கள் எந்த மதம் என்ற பிரச்சனை வருமில்லையா..? ரசிகை சொல்வது ஒரளவு சரி என்றாலும் அந்த இருவரும் திருமணத்திற்கு முன்பே முடிவை உறுதியானதகாவும் இறுதியானதாகவும் எடுக்க வேண்டும். எந்த மதத்தை பின்பற்றணும் எந்த மதத்தில் பிள்ளைகள் வளரவேண்டும் என்று. அப்போது தான் அது பிள்ளைகளை பாதிக்காது. சில குடும்பங்களில் மாறி திருமணம் செய்து விட்டு தங்களும் குழம்பி பிள்ளைகளையும் குழப்பி கொண்டு இருப்பார்கள். 1 வருடம் கோயில் பின்பு சேர்ச் என்று மாறி மாறி போய் கொண்டிருப்பார்கள். இதனால் பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மாறி தவறான பாதையில் போகவும் வழி வகுக்கும். பிள்ளைகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லமால் போய்விடும் என்பது எனது கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? - Rasikai - 02-17-2006 alla_ku_agbar Wrote:இன்சா அல்லா ரசிகை ஹிண்டுவுக்கும் கிறிஸ்டியனுக்கும் பிறந்தது அல்லாவை தொடர்வதா? பேஷ் பேஷ் தொடர்ந்தால் என்ன? :roll: :roll: :roll: :oops: - ஊமை - 02-18-2006 என்னையா இதுக்கு போய் அடிபடிகிறீர்களே. மதம் / கடவுள் என்பது ஒவ்வொருவரின் மன நம்பிக்கையே. இதைப்போல இன்னும் எத்தனை திருவிளையாடல்கள் உலகில் இருக்கின்றன. மதங்கள் என்பவை ஒருவனை நல்வழிப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் எம்மதமும் சம்மதமே - இவோன் - 02-18-2006 Quote:அல்லது அவர்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் அதே மதத்தை அவர்கள் குழந்தைகளும் பின்பற்றலாம்அப்படியானால் யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாற வேண்டும்! அப்படி மாறினால் சில மதக் காவலர்கள் குய்யொ முய்யோ. தகுமோ முறையோ என்று கத்தகிறார்கள். அவர்களின் கருத்துக்களை என்ன செய்ய வேண்டும்..? புறக்கணிக்கலாமா? - Vasampu - 02-18-2006 மதங்களைப் பின்வற்றுவோரும் மதம் பரப்புவோரும் செய்யும் சில திருகுதாளங்களுக்காக மதங்களை குறை சொல்ல முடியாது. மதம் என்பது ஒவ்வொருவரின் நம்பிக்கையின் அடிப்படை. எந்த மதமும் தவறான வழிகளைச் சொல்லவில்லை. எனவே எவரினதும் மனம் நோகாமல் எமது கருத்துக்கள் அமைந்திருக்க வேண்டியது அவசியம். - Raguvaran - 02-18-2006 Sukumaran Wrote:நான் பதிந்தது கீழே உள்ளதண்ணா.. முழுவதையும் வாசித்தால்தானே எனது கருத்தின் தன்மை புரியும்.. முழுவதையும் வாசித்து நீர் என்ன சொல்கிறீர்கள் என்று தெளிவு பெற்றுள்ளேன். உங்களைப்போல நல்ல சிந்தனையாளர்கள் தமிழர்கள் மத்தியில் குறைவு. யாழ் களத்தில் நல்லதொரு சிந்தனையாளர் இணைந்ததையிட்டு நாம் பெருமையாக கருதுகிறோம். உங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள். நன்றி. நன்றி. - அருவி - 02-18-2006 தூயவன் Wrote:இது சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனை. இது கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டியவை. சொல்லப் போனால் கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்டவர்பளாக இனம் காணப்படவில்லை. அவர்கள் தவிர்ந்த புதுப்புதுப் பிரிவுகள் தான் இப்படிக் கூட்டம் சேர்க்கினம். இந்து மதமும் முன்பு மதமாற்றத்தை மேற்கொண்ட ஒரு மதம் தான். ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்து இருப்பது என்பது அவரவர் விருப்பம். அதனை யாரும் தம் கையில் எடுக்கமுடியாது. ஒரு குழந்தை பிறக்கும் போது அது எந்தவொரு மதத்தையும் சாருவதில்லை. அக்குழந்தை பிறந்து குறிப்பிட்ட காலம் வளர்ந்த பின்னரே அக்குழந்தையை ஒரு மதத்திற்குள் திணிக்கிறார்கள். நீங்கள் கூறலாம் இந்து மதத்திலே அவ்வாறில்லை என்று. இந்து மதம் தன் கட்டுப்பாடுகளை பெரிதாக இறுக்காததே காரணம். மற்றும் படி இதிலும் இவ்வாறான ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. அதையாரும் பின்பற்றுவது குறைவு. சமணம் பலம்பெற்று இருந்த காலத்தில் சைவசமயம் ஒரு இறுகிய கட்டுப்பாட்டுடன் இருந்தது. காலப்போக்கில் அதன் இறுக்கத்தை தளர்த்தியுள்ளது. - jsrbavaan - 02-18-2006 காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கே இது தெரியுமடா... - வினித் - 02-18-2006 jsrbavaan Wrote:காசே தான் கடவுளடா உண்டியலுக்க காசு போட்ட எனக்கு கஷ்டம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Maruthankerny - 02-19-2006 ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம்......... சிவமே அன்பாகும்! நாத்திகம் பேசும் நல்லவருக்கோ...... அன்பே சிவமாகும்! நபிகள்... புத்தன்... கிருஸ்ணா....ஜேசு பிறந்தது புூமியில் எதற்காக????? அன்பே சிவமாகும் என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்...... யார்தான் கேட்டார்கள்??? பிறையையும் புூவையும் சிலுவையையும் வைத்து பித்தலாட்டாம் காட்டி வாழ்கிறது ஒரு கூட்டம்........ அவர்கள் பாதமே மண்ணில் பட விடோம் என பணி செய்து வாழ்கிறது ஒரு கூட்டம். பாவம் வயிற்று பசிக்காக தன் உடலையே வில்லாய் வளைப்பவரிடம் ஒரு ஐம்பது பைசா கூடாது இக் கூட்டம்! கவிஞ்ஞர் காசி ஆனந்தனின் நொறுக்கொன்றுதான் ஞாபகம் வருகிறது. ஒரு நாள் ஆயுள் கொண்ட புூவையே பாதியில் பறித்து புூஜை செய்கிறான் தான் நூறாண்டு வாழ வேண்டி! |