![]() |
|
துளிகள்.....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728) |
- tamilini - 12-10-2004 <img src='http://thumb3.webshots.com/s/thumb3/0/63/63/62906363uXGAPd_th.jpg' border='0' alt='user posted image'> நேற்று வரை என்னுடன் இருந்தாய்.. நீண்ட இரவுகளில் துணையாய் வந்தாய்.. கனவினிலே நாயகன் ஆனாய்.. ரகசியமான நண்பன் ஆனாய்.. என் உள்ளத்தில் சிம்மாசத்தில்அமர்ந்தாய்... அடிக்கடி என்னை அழவைப்பாய்.. அப்படியே சிலவேளை கோவமூட்டுவாய்.. இடைக்கிடை என்னிடம் அடிவாங்குவாய்.. இம்சைகள் பல செய்து.. என்னை உன்னை ரசிக்க வைத்தாய்.. பொய்கள் பல சொல்லி.. என்னிடம் பாராட்டு வாங்குவாய். பிழைகள் நான் செய்தால்... அதனையும் பொறுப்பாய்... புதுமை நான் செய்திட எனக்காய் குதிப்பாய்.. பசியுடன் நான் இருக்கையில்.. எனக்கென நீ உண்பாய்.. அடிகள் அதற்கு நான் கொடுக்க.. அதனையும் ஏற்பாய்.. இப்படி எத்தனை எத்தனை.. எனக்காய்.. நீ செய்தாய.. இன்று எங்கே போய்விட்டாய் .. தொலை தூரம் சென்றாயா..?? இல்லை தொலைந்தே போனாயா...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->எப்படி எண்ண.. எப்போ வருவாய்.....! காத்திருக்கேன்...!
- KULAKADDAN - 12-10-2004 அக்காவின் கவிக்கு நன்றியும் வாழ்த்துகளும் - kavithan - 12-11-2004 நன்று.. நன்று காத்திருங்கள்.. துளிகள் துளிப்பதையிட்டு மகிழ்ச்சி - kuruvikal - 12-11-2004 [quote=tamilini]<img src='http://thumb3.webshots.com/s/thumb3/0/63/63/62906363uXGAPd_th.jpg' border='0' alt='user posted image'> நேற்று வரை என்னுடன் இருந்தாய்.. நீண்ட இரவுகளில் துணையாய் வந்தாய்.. கனவினிலே நாயகன் ஆனாய்.. ரகசியமான நண்பன் ஆனாய்.. என் உள்ளத்தில் சிம்மாசத்தில்அமர்ந்தாய்... அடிக்கடி என்னை அழவைப்பாய்.. அப்படியே சிலவேளை கோவமு}ட்டுவாய்.. இடைக்கிடை என்னிடம் அடிவாங்குவாய்.. இம்சைகள் பல செய்து.. என்னை உன்னை ரசிக்க வைத்தாய்.. பொய்கள் பல சொல்லி.. என்னிடம் பாராட்டு வாங்குவாய். பிழைகள் நான் செய்தால்... அதனையும் பொறுப்பாய்... புதுமை நான் செய்திட எனக்காய் குதிப்பாய்.. பசியுடன் நான் இருக்கையில்.. எனக்கென நீ உண்பாய்.. அடிகள் அதற்கு நான் கொடுக்க.. அதனையும் ஏற்பாய்.. இப்படி எத்தனை எத்தனை.. எனக்காய்.. நீ செய்தாய.. இன்று எங்கே போய்விட்டாய் .. தொலை து}ரம் சென்றாயா..?? இல்லை தொலைந்தே போனாயா...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->எப்படி என்ன.. எப்போ வருவாய்.....! காத்திருக்கேன்...! மீண்டும் கவித்துளிகள் துளிப்பது கண்டு மகிழ்ச்சி....! நன்றிகளும் கூட...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><b>கவித்துளி கண்ணீர்த்துளியாக கனவுகள் தந்து போனவன் கன்னியிவள் கரங்கள் மீள கனிவாக வேண்டி.... கன்னியுன் கண்ணீரெனும் ஜீவநதி காத்திரமாய் ஒரு இன்ப காவியம் படைக்கும் காலம் தூரமில்லை...! அதுவரை கவலைகள் துறந்து சிறகடிக்கும் சுதந்திரச் சிட்டாய் சிங்காரியாய் நீ வாழ வாழ்த்துக்கள்....!</b> - tamilini - 12-11-2004 நம்ம துளிகள் கண்ட.. உங்கள் அனைவருக்கும் நன்றிகள.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-12-2004 எனி எப்ப கவித்துளிகள் தூறும்..??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?
- tamilini - 12-12-2004 அடிக்கடி தூறும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
என் முன் வருவாயா...?? - tamilini - 12-12-2004 ஓசை இன்றி ஒடுங்கிப்போன.. ஒரு காதல் கதை இது காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா..? கவிஞன் ஒருவன் பாடிவைக்க.. அதைப்பழித்தவள் நான் கண்ணீர் கொண்ட கண்களுடன் தூக்கமின்றி இன்று யாரும் அறியாது.... இரு மனங்கள் மட்டும்.. அறிய மலர்ந்த காதல்.. ரகசியமாய் தொலைந்தா போனது உன்னிடம்...?? மனங்கள் மையலில் சங்கமித்த வேளைகள்... சலனம் இன்றி இன்னும் நினைவில்..! ஓராயிரம் விழிகள் உறங்கிட எங்கோ ஒரு மூலையில்.. கற்பனையில் மிதந்திடும்.. ஆயிரம் காதல் விழிகளில்.. எம் விழிகளும் அடக்கம்.. உறங்கமின்றி தவித்த உள்ளங்களில் எம் உள்ளங்களும் அடக்கமல்லாவா..? அன்று காதலில் மூழ்கிய என் உள்ளம் இன்று கண்ணீரில் மூழ்கிய படி இதை நீ அறிவாயா..?? உயிரைப்பிழிந்து ஊற்றாய் வந்த காதல் வெள்ளம்... உன் பிரிவெனும் அணையில் அடங்க மறுத்து தவிப்பதை அறிவாயா...?? வார்த்தைகளால் வாட்டுவது... உன் குணம் எனினும்... அதையும் இந்த காதல் உள்ளம் ரசித்ததை அறிவாயா...?? ரகசியமாய் உதித்த காதலிற்கு.. சாட்சிகள் இல்லை என்று.. யாவும் மறந்தாயா...??? உறக்கமின்றி நான் தவிக்கும்.. ஒவ்வொரு இரவுகளும்.. நம் காதலிற்கு சாட்சி அதை நீயும் அறிவாயா...??? நிலவுகள் பிடிப்பதும்.. கவிதைகள் வருவதும் சாதாரன காதலுக்கு... உள்ளம் உருகியதும். மெளனம் பேசியதும்.. நம் காதலிற்கு அறிவாயா...?? காரணமே இன்றி நீ பிரிந்து சென்று.. நாட்கள் பல சென்றபின்னும்.. நினைவுடன் இருக்கிறேன் நான் அதை நீ அறிவாயா..?? மீண்டும் வருவாய் என எண்ணியுள்ளேன் என் முன் வருவாயா...?? - kuruvikal - 12-12-2004 ஆகா... காதலில் கன்னி மனம் கனவென்ன கானமே இசைக்குது காவியம் பாடத்துடிக்குது...! கடைக்கண் காட்டிவிட்ட மாயக் கண்ணனே ராதை அழைக்கிறாள் கண்ணீரில் மிதக்கிறாள் நீ எங்கேயோ....???! ஓடோடிவா கண்ணா...! வேண்டாம் எனியும் உன் விளையாட்டு... பாவம் அவள் மனம் கொண்ட காதல் கண்ணீரே பரிசளித்ததாய் சரித்திரம் வேண்டாம்...! அருமையான கவிதை... அற்புதமான வரிநடை... கன்னியின் காதல் மனதை அப்படியே படம்பிடித்துக்காட்டுதோ.... வாழ்த்துக்கள் தமிழினி...! நீங்கள் தேடும் மாயக் கண்ணன் மனதைத் தொடும் உங்கள் கவி... கண்ணீர் உங்கள் காதலுக்கு கருவூலம் அமைக்கும்....!காத்திருங்கள் காலம் கண்ணனின் பதில் சொல்லும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 12-12-2004 Quote:நீங்கள் தேடும் மாயக் கண்ணன் மனதைத் தொடும் உங்கள் கவி... கண்ணீர் உங்கள் காதலுக்கு கருவூலம் அமைக்கும்....!காத்திருங்கள் காலம் கண்ணனின் பதில் சொல்லும்...! இது ஒரு கற்பனைக்கவிதை.. நன்றிகள் உங்கள் கருத்துக்கு குருவிகளே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-13-2004 சரி சரி... கனவே கற்பனையோ கவிதை அருமையா இருக்கிறதாப் பட்டிச்சு.. பட்டதைச் சொல்லிச்சுதுகள் குருவிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kavithan - 12-14-2004 ஆகா கவிதை அருமையுங்கோ... தூதுவிட்டிட்டியள் எல்லோ யாழிலை.... அப்ப அவர் வந்திடுவார்.. ராதை Wrote:கண்ணா உன்னை தேடுகிறேன் வா... - வெண்ணிலா - 12-14-2004 ராதை Wrote:கண்ணா உன்னை தேடுகிறேன் வா... கண்ணீர்குயில் பாடுகிறேன் வா.... மீண்டும் துளிகள் துளிர்ப்பதையிட்டு மகிழ்ச்சி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-14-2004 என்ன தம்பியும் தங்கையும் இப்படி கிண்டல் பண்ணுறியள்.. ஒரு கற்பனையில இப்படி ஒரு கவிதை எழுதலாம் இப்படி பண்ணுறியள்.. ஒரு கண்ணாவும் வரவேண்டாம் கத்திரிக்காயும் வரவேண்டாம் ஆமா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-14-2004 tamilini Wrote:என்ன தம்பியும் தங்கையும் இப்படி கிண்டல் பண்ணுறியள்.. ஒரு கற்பனையில இப்படி ஒரு கவிதை எழுதலாம் இப்படி பண்ணுறியள்.. ஒரு கண்ணாவும் வரவேண்டாம் கத்திரிக்காயும் வரவேண்டாம் ஆமா...! <!--emo& அக்கா என்னக்கா இதுக்கெல்லாம் இப்படி முகத்தை வைத்தால்...சரி சரி அக்கா மன்னித்துடுங்க. - tamilini - 12-14-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 12-14-2004 பாவம் வந்ததும் வராததுமாய் அந்தத் தங்கையை மன்னிப்புக் கேட்க வைத்துச் சிரிக்கிறதப் பார்... கோமாளி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-14-2004 Quote:பாவம் வந்ததும் வராததுமாய் அந்தத் தங்கையை மன்னிப்புக் கேட்க வைத்துச் சிரிக்கிறதப் பார்... கோமாளி...!அவவில குருவிகளுக்கு பாசம் அதிகம் தான்.. ஆனால் நாங்க என்ன பண்ண.. அவ கவலைப்படக்கூடாது என்று தான் சிரித்தம்.. மன்னிப்பு கேக்க சொல்லலி நாங்க சொல்லல.. இப்ப வெண்ணிலாவுக்காக குருவிகள் குரல் கொடுக்குதுகள்.. இதுக்கு என்ன பண்ண அழவா.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-14-2004 என்னங்க பாசத்தில ஏற்ற இறக்கம் எல்லாம் பறையிறீங்க... பாசத்துக்கு முன்னால எல்லோரும் சமன் சரியாங்க..குருவிகள் உங்களச் சொல்லேல்ல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இந்த சிரிக்கிற கோமாளியச் சொன்னம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 12-14-2004 tamilini Wrote:Quote:பாவம் வந்ததும் வராததுமாய் அந்தத் தங்கையை மன்னிப்புக் கேட்க வைத்துச் சிரிக்கிறதப் பார்... கோமாளி...!அவவில குருவிகளுக்கு பாசம் அதிகம் தான்.. ஆனால் நாங்க என்ன பண்ண.. அவ கவலைப்படக்கூடாது என்று தான் சிரித்தம்.. மன்னிப்பு கேக்க சொல்லலி நாங்க சொல்லல.. இப்ப வெண்ணிலாவுக்காக குருவிகள் குரல் கொடுக்குதுகள்.. இதுக்கு என்ன பண்ண அழவா.] :wink: <!--emo& ஒரு அண்ணா தங்கைக்காக குரல் கொடுத்தாலும் சமூகம் ஏற்காதோ. இந்த சமூகமோ ஒரு பொல்லாதது. ஒரு ஆணும் பெண்ணும் கொஞ்சிக்குழவி கதைத்திட்டு இருந்தால் சமூகத்துக்கு கண்ணே தெரியாது. ஆனால் சாதாரண நண்பி நண்பன் என்று யாரும் கதைத்தால் அவ்வளவுதான். பாழாய்ப்போன சமூகம்பா :evil: |