![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- Mathan - 03-10-2004 மீண்டும் போருக்கு தயாராகின்றார்கள் என்ற கருணாவின் குற்றச்சாட்டை புலிகள் மறுத்துள்ளார்கள். நன்றி - RADIO AUSTRALIA NEWS முழு செய்தியையும் இங்கே படிக்கலாம். http://www.abc.net.au/ra/newstories/RANews...ies_1063316.htm - Mathan - 03-10-2004 <img src='http://www.virakesari.lk/20040311/PICS/santhi.jpg' border='0' alt='user posted image'> பதவி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த கணமே கருணா அம்மான் செய்த முதல் வேலை என்ன? வன்னித் தலைமையால் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதிகள் கடல்மார்க்கமாக கிழக்கு கரையோரம் வந்து இறங்குவதை தடுப்பதற்காக, மாங்கேணிக்கு வடக்கே உள்ள பனிச்சங்கேணிக்கு போராளிகள் படையொன்றை அனுப்பி வைத்ததுதான் முதல் வேலையாம். பறுவதம் பாட்டி: உனக்கு யார் இதை சொன்னது? சலீம் நானா: நேற்றைய ஆங்கில பத்திரிகையொன்று கிழக்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் பிரபாகரன் வெற்றி பெறுவாரா? என்று தலைப்பிட்டு, கட்டுரையொன்றை பிரசுரித்திருந்தது. அந்தக் கட்டுரையாளரே இதனைத் தெரிவித்திருக்கிறார். பண்டா ஐயா: அதுமட்டுமல்ல கிழக்கு மாவட்டத்தில் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்வருமாறு இலங்கை இராணுவத்துக்கு கருணா பலதடவைகள் அழைப்பு விடுத்திருந்தார் என்றும் அதற்கு இலங்கை ராணுவம் மறுத்துவிட்டதாகவும் அந்தகட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலிடத்தின் யோசனைக்கிணங்கவே, அங்குவர இராணுவத்தினர் மறுத்து விட்டனராம். கந்தர் அம்மான்: கேட்பதற்கு திகிலாக இருக்கிறது. அதிலுள்ளதை வடிவாக சொல்லுங்கோ. சலீம் நானா: வெருகலுக்கு வட புலத்திலுள்ள மாவடிச்சேனை என்ற இடத்தில் பிரபாகரனின் விசுவாசியான தளபதி சொர்ணம் தலைமையில் ஒரு படை அணியும், தென் தமிழ் ஈழத்தின் தலைவர் கருணாவின் சகோதரன் ரெஜியின் தலைமையிலான படை அணியும் போர் முரசு கொட்டுகின்றன. ரெஜி அணியினரின் கடும் எதிர்ப்புக்கு சொர்ணம் படை அணியினர் முகம் கொடுத்து வருகிறார்கள். கருணாவுக்கும் பிரபாகரனுக்குமிடையே நல்லுறவை உள்வாங்கும் முகமாக சமாதானப் பயணம் ஒன்றை மேற்கொண்டே நாம் வந்து கொண்டிருக்கிறோம் என்று சொர்ணம்,வானொலி மூலம் ரெஜிக்கு செய்தி அனுப்பினார். பல தடவைகள் படித்துப் படித்துச் சொன்னார். ஆயினும் வாகரையை நோக்கிய அவர்களது நகர்வு தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது. பறுவதம் பாட்டி: கருணாவின் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு வன்னித் தலைமை கையாளும் ஒரு தந்திரம். ஒரு யுக்தி என்று கருணாவின் ஆட்கள் நினைத்திருப்பார்கள். சலீம் நானா: அப்படித்தான் நடந்திருக்கிறது. சொர்ணம் வருவதை ஞாயிறன்று அறிந்ததும் உடனடியாகவே கருணா தனது தம்பி ரெஜிக்கு சொர்ணத்தையும் அவரது ஆட்களையும் சுட்டுத்தள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறார். ஆனாலும் சொர்ணம் நிலைமைகளை அறிந்து தனது படையினரை அழைத்துக் கொண்டு சில கிலோமீற்றர் தூரம் பின்னோக்கிச் சென்றுவிட்டார். பண்டா ஐயா: படித்ததில் ஒரு பகுதியை நான் சொல்லுகிறேன். மீண்டும் திங்கட்கிழமை, சொர்ணம் தோற்றினார். இந்த தடவை கருணாவின் விசுவாசியான சுதாகர், தங்கள் பயணம் பற்றிக் கருணாவுக்கு தகவல் சொன்னார். அவசரப்பட வேண்டாம். சற்றே பொறுத்திருங்கோ என்ற பதில்தான் கருணா தரப்பிலிருந்து கிடைத்தது. பறுவதம் பாட்டி: கண்டமிச்சம் காத்திருப்பது தானாக்கும் பண்டா ஐயா: கட்டுரையாளரும் அப்படித்தான் எழுதியிருக்கிறார். ஞாயிறு இரவு, கருணாவின் கரடியனாறு தளத்திலிருந்து சுமார் 200 புலிப் போராளிகள் ட்ராக்டர்கள் மூலம் வாகரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிழக்குக்குள் ஊடுருவியுள்ள பிரபாவுக்கு விசுவாசமான போராளிகளுக்கும் கருணாவின் விசுவாசிகளுக்குமிடையே மறு நாள் யுத்தம் வெடிக்கப் போகிறது என்றுதான் பலரும் நினைத்தனர். சலீம் நானா: இதேவேளை, இலங்கை ராணுவத்துக்கு ஒரு தகவல் கிடைத்தது. பண்டா ஐயா: வடக்கு போராளிகள், பல்வேறு மூலை முடுக்குகளாலும் கிழக்குக்குள் பெருமளவு ஊடுருவல் செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி பரவலாக பரவ ஆரம்பித்து விட்டது. அதனை அறிந்து கருணா தனது முகாமை, அதிக பாதுகாப்பு உள்ள தொப்பிக்கலவுக்கு மாற்றிவிட்டார் என்பதே ராணுவத்துக்கு கிடைத்த தகவலாகும். பறுவதம் பாட்டி: இந்த கட்டுரையாளரின்படி கருணா இப்பொழுது தொப்பிக்கல பகுதியில் நிலை கொண்டு தனது எதிர்கால யுத்திகளை வகுத்து வருகிறார். கந்தர் அம்மான்: நேரில் கண்டமாதிரி இந்த கட்டுரையாளர் எழுதியிருக்கிறார். யார் இந்த தகவல்களை இவருக்கு கொடுத்திருப்பார்கள்? பறுவதம் பாட்டி: [b]இலங்கை பேப்பர் பசங்கள் செய்திகளை ஜோடிப்பதில் கில்லாடிகள். இதோ பாருங்கோ திருகோணமலை மாவட்ட தளபதி பதுமன் கிளிநொச்சியிலிருந்து கொண்டு லண்டனிலுள்ள பிபிசி ரேடியோவுக்கு டெலிபோனில் முதல்நாள் இரவு பேட்டி கொடுக்கிறார். ஆனால் மறுநாள் அரச ரேடியோ ஒன்று பதுமன் கொல்லப்பட்டு விட்டதாக ராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி ஒலிப்பரப்புகிறது. இதனை கேட்டுவிட்டு சில பேப்பர்கள் பதுமன் கொல்லப்பட்டுவிட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? என்று தலையங்கம் இட்டு செய்திகளை பிரசுரித்திருக்கின்றன. பதுமன் பல போராளிகளுடன் நின்று எடுத்த புகைப்படங்களையும் பிரசுரித்து பரபரப்பாக்கியிருக்கின்றன. வெவ்வேறு கு×ப்பை சேர்ந்த சிங்கள ஆங்கில பத்திரிகைகள், ஒரே மாதிரியான படங்களையும் செய்திகளையும் பதுமனை முன்வைத்து செய்திகளையும் பிரசுரித்துள்ளனர் பறுவதம் பாட்டி: [b]ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல தமிழ் ஈழம் கேட்டுப் போராடியவர்கள் இரண்டு பட்டால் தென்னிலங்கையாட்களுக்கு குஷிதானே! நன்றி - வீரகேசரி - Mathan - 03-10-2004 "கிழக்கில் புலிகள் படுகொலை என பல்வேறு கட்டுக்கதைகள்' எந்த சடலத்தையும் காணவில்லை என்கிறார் கடற்படை பேச்சாளர் ""மட்டக்களப்பு கதிரவெளி பகுதியில் புலிகளின் படகு ஒன்று குண்டு தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தில் 20 கடற்புலிகள் பலியானதாக சில சிங்களப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் <span style='color:#ff003f'>இவ்வாறான தகவல்கள் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கின்றன என்று எமக்குத் தெரியாது. எமது அவதானிப்புக்களின்படி இவ்வாறான சம்பவமொன்று நடைபெற்றமைக்கான எந்தவித ஆதாரமும் இல்லை' இவையாவும் கட்டுக் கதைகளாகும்'' கடற்படை பேச்சாளர் கொமடோர் பெரேரா "கேசரி'க்குத் தெரிவித்தார். பத்திரிகைச் செய்தியை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டனர். எனினும் ஒரு சடலம் கூட கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். கிழக்கு சம்பவங்கள் தொடர்பாக முன்பின் முரணாக சில ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தொடர்பாக கடற்படை கொமடோர் பெரேராவிடம்வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில்; கிழக்கில் புலிகளுக்கிடையிலான மோதலில் பெரும் எண்ணிக்கையானோர் பலியானதாக பத்திரிகைகள் சில அடுத்தடுத்து பிரசுரித்து வரும் செய்திகள் தொடர்பாக தாங்கள் இராணுவதரப்பினருடன் ஆராய்ந்ததாகவும் ஆனால் அதற்கான சான்றுகளையோ, சாத்தியக் கூறுகளையோ தங்களால் காண முடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் கிழக்கு நிலைமைகள் குறித்து யுத்த நிறுத்தக்கண்காணிப்புக்குழுவினருடன் தாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்ற போதிலும் அவர்களும் இது குறித்து ஊர்ஜிதம் செய்யவில்லை என்றும் கொமடோர் பெரேரா கூறினார். புலிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவை அடுத்து கிழக்கில் ஒருவித இனம்புரியாத அமைதி நிலையை அவதானிக்க முடிகின்றது என்று கூறிய அவர் ஒரு சில ஊடகங்கள் கூறும் அளவுக்கு நிலைமை மோசமடையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே புலிகள் இயக்கத்துள் தோன்றியுள்ள நெருக்கடி சற்று தணிந்துவரும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாக கிழக்கிலிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. அதேவேளை புலிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவை சாதகமாகப் பயன்படுத்த அரசாங்கம் தவறிவருவதாக தென்பகுதி இனவாத அமைப்புக்கள் பகிரங்கமாக அறிக்கை விட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இவற்றுக்கு மத்தியில் சில சிங்கள, ஆங்கில ஊடகங்கள் சிறு சம்பவங்களைக் கூட பெரிதுபடுத்தியும், திரிபுபடுத்தியும் செய்திகளாக பிரசுரித்து கிழக்கில் பெரும் யுத்தம் நடப்பது போன்ற ஒரு மாயையை சர்வதேசமட்டத்தில் ஏற்படுத்த முனைவதாக தமிழ் மக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.</span> நன்றி - வீரகேசரி - Mathan - 03-10-2004 தேர்தலின்பின் போரை தொடங்கும் நோக்கம் புலிகளுக்கு இல்லை கரிகாலன் பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் போரை தொடங்கும் நோக்கம் விடுதலைப் புலிகளிடம் இல்லை. கருணா என்ற தனிநபரின் பொய்ப் பிரசாரங்களை நம்பி மக்கள் குழப்பமடையவேண்டிய அவசியம் இல்லை என விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான சி.கரிகாலன் தொலைபேசி மூலம் நேற்று கேசரிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். கருணா மன்னிப்பு கோரிவந்தால் அவரது வாழ்க்கைக்கான உத்தரவாதம் வழங்கி அவரை வெளிநாடொன்றில் தஞ்சமடைய வைப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய தலைவர் பிரபாகரன் மேற்கொள்வார் எனவும் அவர் கூறினார். கேசரிக்கு வழங்கிய அந்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்ததாவது; கேள்வி: தேர்தல் முடிந்த பின்னர் போருக்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்ததாகவும் அதனாலேயேதான் பிரிந்து சென்றதாகவும் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருணா கூறியுள்ளாரே ? பதில்: அப்பட்டமான பொய்.போராளிகளையும் மக்களையும் திசை திருப்புவதற்காகவே கருணா அவ்வாறு கூறியிருக்கவேண்டும். அத்துடன் தனது தவறுகளை மூடி மறைப்பதற்காக கருணா அவ்வப்போது பொய்களை கூறிவருகின்றார். கிழக்கில் இருக்கின்ற போராளிகளும் மக்களும் அதனை நம்ப வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.தேர்தல் முடிவடைந்த பின்னர் போரைத் தொடங்கும் நோக்கம் எதுவும் புலிகளுக்கு இல்லை. சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நோர்வேயுடன் பேசிக்கொண்டிருக்கின்றோம். கேள்வி: மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதிகளிலிருந்து கண்காணிப்புக்குழு வெளியேறிவருவதற்கு நீங்கள் தான் காரணமா ? பதில்: இல்லை. நோர்வே தலைமையிலான போர் நிறுத்த கண்காணிப்பு குழு எமது தேசிய தலைவர் பிரபாகரனின் வேண்டுதலினால் அமைக்கப்பட்டது. ஆகவே அதனை வெளியேற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை. அங்கிருந்து ஏன் வெளியேறினார்கள் என்பது பற்றி எமக்கு தெரியாது. சிலவேளைகளில் கருணாவின் அச்சுறுத்தலினால் அவர்கள் வெளியேறியிருக்கக்கூடும். கேள்வி: நீங்கள் கிழக்கு மாகாணத்திற்கு எப்போது செல்வீர்கள் ? பதில்: எமது போராளிகள் அங்கிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் கட்டமைப்பும் அங்கு பலப்படுத்தப்படுகின்றது. தற்போது எழுந்துள்ள குழப்பநிலை விரைவில் முடிவிற்குவரும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன. கேள்வி: கிழக்கிலிருந்து பல போராளிகள் உங்கள் பக்கம் வந்திருக்கிறார்களா ? பதில்: ஆம் வந்துகொண்டே இருக்கின்றார்கள். கருணா தற்போது தனிமனிதனாகவே செயற்படுகின்றார். வெளிநாட்டு சக்தி ஒன்றின் துணையோடு அவர் இயங்குகின்றார். விடுதலைப் புலிப் போராளிகள் ஒவ்வொருவரும் தமிழ்த்தேசியத்தையும், தமிழ்த்தேசிய தலைமையையும் நேசித்தவர்கள். கேள்வி: கருணா திரும்பிவந்தால் மன்னிப்பதற்கும் வாழ்க்கைக்கான உத்தரவாதம் வழங்கவும் தயாராக இருக்கிறீர்களா ? பதில்: ஆம். தனது தவறை உணர்ந்து எமது தலைவரிடம் கருணாவந்தால் அவரது உயிருக்கு உத்தரவாதம் வழங்கி அவர் விரும்பிய வெளிநாடொன்றில் தஞ்சமடையவைப்பதற்கு தேசியத் தலைவர் தயாராகவே இருக்கின்றார். கருணா சார்பாக எம்முடன் பேசவருவோருக்கு நாங்கள் அதனை தெளிவுபடுத்தவுள்ளோம். நன்றி - வீரகேசரி - Mathan - 03-10-2004 ஊடகங்கள் பொறுப்பான தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் - வடகிழக்கு கல்விமான்கள் அமைப்பு சிறீலங்கா அரச ஊடகங்களும் ஏனைய ஊடகங்களும் பொறுப்பான முறையில் நடந்து கொள்வதோடு, தற்போது நின்று போயுள்ள சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கு ஏதுவாக பொறுப்பான வகையில் நடந்து கொள்ள வேண்டுமென வடகிழக்கு கல்விமான்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக, சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; திருகோணமலை மாவட்டம் தொடர்பாக வெளியிட்ட பொய்யான செய்திகள் அமைதியான சு10ழ்நிலையில் இருக்கும் இனங்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியே எனவும் மேற்படி வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேணல் பதுமன் கொல்லப்பட்டதாக நேற்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதே போன்று இன்று திருகோணமலையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. மேற்படி இரு செய்திகளுமே பொய்யானவை எனச் சுட்டிக்காட்டிய கல்விமான்கள் அமைப்பு சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திருக்கோணமலை மாவட்டத்தில் பதட்டத்தையும், வன்முறையையும் தோற்றுவிக்கவே இவ்வாறான பொய்ச் செய்திகளை வெளியிடுகிறது எனவும் தெரிவித்துள்ளது. [b]<span style='color:#ff0012'>இதேவேளை, புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் 900,000 மேற்பட்ட தமிழர்களின் ஆதரவிலேயே புலிகள் இயக்கம் இயங்குகிறது எனவும், அந்த ஆதரவை இல்லாது செய்யும் தேவையே தற்போதுள்ளது எனவும் சிங்கள ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் பிரதேசவாதக் பிரிவினை ஏற்படும் பட்சத்தில் இவ்வாறான நிலை சாத்தியமாகும் என அது ஹேஸ்யம் தெரிவித்திருக்கிறது. எனினும் சிறீலங்கா அரசு இவ்வாறான முயற்சிகளில் புலம்பெயர்ந்த நாடுகளில் ஈடுபட முயற்சிக்கும் என கொழும்புப் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழர்களின் ஊடகங்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருப்பது இன்றியமையாததொன்று என்று அவர் மேலும் அவர் தெரிவித்தார். </span> நன்றி - புதினம் - Mathan - 03-10-2004 <img src='http://www.dailymirror.lk/2004/03/11/imgs/cartoonl.jpg' border='0' alt='user posted image'> Thanx: Daily Mirror - Mathan - 03-10-2004 புலிகள் இயக்கதில் ஏற்பட்ட பிரிவுக்கு பின்னால் இந்திய உளவு அமைப்பு இருப்பதாக இலங்கையின் உள்ளூர் பத்திரிகைகை செய்தி வெளியிட்டிருந்தன, இதை கருணா தரப்பு மறுத்துள்ளது. வெளியார் யாரும் இதில் சம்மந்தப்படவில்லை என்று கருணாவின் பேச்சாளர் AFP செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். நன்றி - Khaleej Times முழு செய்தியையும் இங்கே படிக்கலாம். http://www.khaleejtimes.com/DisplayArticle...on=subcontinent - kuruvikal - 03-10-2004 கள்ளம் செய்தவன் யார்த்தான் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான்...அப்படி ஒப்புக்கொண்டால் ஏந்தான் சிறையும் நீதிமன்றமும் இருக்கு....! இல்ல உந்தக் கருணாவின்ர செய்தி எங்கை இருந்தெல்லாம் இங்க வருகுது...உது ஆற்ர தளமோ ஆரறிவார்....மலேசியாவிலதானே சொந்த வீடு வாக்கி இருக்காராம் தளபதி....ஏன் கொக்கட்டிச்சோலையில பெரிய பங்களா கட்டி இருக்கலாமே....அபிவிருத்தியாவது செய்த மாதிரி இருந்திருக்கும்...! கிழக்குப் பல்கலைக்கழக மாணவ சங்கம் எல்லாத்தையும் அவிட்டு விட்டிருக்காங்கள்...எத்தின நாளைக்குத்தான் வெருட்டிப் பாக்கிறது.....! --------------------------------- <b><span style='font-size:25pt;line-height:100%'>கருணாவின் சுயநலத்திற்கு மட்டு-அம்பாறை மக்கள் பலிக்கடா ஆவதா?</span> 03-10-2004 - கிழக்குபல்கலைக்கழக மாணவசமூகம். [size=16][b]அன்பார்ந்த மக்களே! கருணாவினுடைய சுயரூபம் தலமைக்கு வெளிப்பட்டநிலையில், அதனை எங்களிற்கு மறைப்பதற்காகவும், தன்னுயிரை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், எங்களது போராளிகளையும், எங்களையும் பகடைக்காயாக பயன்படுத்த தற்றுணிவு கொண்டிருக்கிறார். இந்நிலையினை காலம் கடத்தாது முறியடித்து போராளிகளையும,; தமிழ் மக்களையும், தமிழ்தேசியத்தையும் காப்பாற்றவேண்டிய தார்மீக பொறுப்பு எங்களுக்குண்டு. இந்நிலையில் கருணாவின் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளில் சிலவற்றை நோக்குவோம். 1. கோடிக் கணக்கான பணத்தினை தனது சுயதேவைக்காக பயன்படுத்தியமை. 2. உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக ஏற்கனவே மனைவியை தலமைக்கு தெரியாமல் வெளிநாடு அனுப்பி அங்கு சொந்தப் பெயரில் வீடு ஒன்றும் வாங்கியுள்ளார், தற்போது அமெரிக்கா அனுப்ப திட்டமிட்டுள்ளார் ஆனால் எங்களுக்கும் போராளிகளிற்கும் வன்னியில் படிப்பதற்காக இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார். 3. தனது சொந்தப் பெயரில் பணத்தினை வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச்செய்துள்ளார். 4. தனது தந்திரோபாயத்திற்கு சிலரை பயன்படுத்துவதற்காக அவர்களிற்கு சலுகைகள் செய்துகொடுத்திருக்கிறார் இதில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு சிலரும் அடங்குவர். 5. வர்த்தகர்களிடம் தமிழீழ போராட்டத்தினை காரணம் காட்டி கோடிக்கணக்கான நிதியினை கடனாகவும், வலுக்கட்டாயமாகவும் தலமைக்கு தெரியாமல் பெற்றிருக்கின்றார். 6. இவ்விடயங்கள் அனைத்தையும் அறிந்த போராளியான றஞ்சன் என்பவரை பெப்சி சோடாவில் சயனைட் கொடுத்து கொலை செய்துவிட்டு (04.02.2004) அவர் மாரடைப்பால் இறந்ததாக தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் அறிவித்திருக்கிறார். 7. தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்புக்கு ஒவ்வாத ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டுள்ளார். 8. தன்னுடைய பதவியை ஸ்திரப்படுத்துவதற்கும் தனது பிழையான செயற்பாடுகள் தலைவருக்கு சென்றடையாமல் இருப்பதற்கும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி முயற்சிகள். 9. சில உயர்படிப்பு மேற்கொண்டு வந்த எமது மட்டு அம்பாறை போராளிகளை எமது பிரதேசத்திற்கு அழைத்துவந்து தனக்கு கீழ் வைத்திருக்கின்றார். 10. தலைவரோடு உயர்மட்ட வேலைகளை செய்துகொண்டிருந்;த எமது போராளிகளை திட்டமிட்டு மட்டு அம்பாறைக்கு அழைத்து வந்திருக்கிறார். 11. மேலும் தன்னைவிட எந்தவொரு மட்டு-அம்பாறை போரளியும் மிஞ்சிவிடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு சதி செய்திருக்கிறார். 12. கடந்த இரண்டு வருடகாலமாக தன்னுடைய குரோதமான செயற்பாடுகள் தலமைக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வெளிமாவட்டத்தை சேர்ந்த எந்தவொரு போராளியையும் எங்களுக்காக பணியாற்ற ஏற்றுக்கொள்ளாமை. 13. அத்துடன் எங்களது போராளிகளினாலும் மக்களாலும் தலைவருக்கும் தலமைப்பீடத்திற்கும் அனுப்பப்படுகின்ற கடிதங்கள் தன்னூடாகவே அனுப்பவேண்டும் என குறிப்பிட்டிருக்கின்றார். 14. கடந்த இரண்டு வருடங்களாக தன்கீழிருந்த தளபதிகளையோ, போராளிகளையோ தலைவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. 15. இருபது வருட போராட்ட அனுபவமுள்ள கருணா அவர்கள் இன்று தன்னுடைய சுயநலத்திற்காக தனியாக பிரிய துணிந்துள்ளார். இதன்பின்னணியில் விடுதலைப்புலி அமைப்பின் பலத்தை உடைக்க ஏதோவொரு அந்நிய சக்தியின் தலையீட்டுக்குள் கருணாஅவர்கள் சிக்கியுள்ளது நமக்கு தெளிவாகிறது அல்லவா. 16. கருணா அவர்கள் BBC வானொலிக்கு வழங்கிய பேட்டியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான நிதிப்பொறுப்பாளர் திரு. தமிழேந்தி, தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் திரு. பொட்டு அம்மான் ஆகியவர்களை விலகச்சொல்ல என்ன உரிமை உண்டு? இன்று கருணா அவர்கள் பிரிந்து நிற்பதாக எங்களுக்கு கூறப்படும் காரணத்திற்கும் அவர் விடுதலைப்புலிகளுடன் மீண்டும் இணைவதற்காக குறிப்பிடப்பட்டுள்ள இவ் தலைவர்களின் பதவி நீக்கத்திற்கும் தொடர்பு இல்லை அல்லவா?. பதவிகளிலேயே உயர்பதவியாக தலைவரின் பிரதிநிதியாக கருணா அவர்களை பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பியுள்ளார். அத்தோடு எமது மக்களின் நன்மைக்ககாக கருணா அவர்களையே எமது பிரதேசம் தொடர்பான சகல தீர்மானங்களையும் எடுப்பதற்கு பூரண சுதந்திரம் வழங்கியிருந்தார். இருந்தும் தன்னுடைய சுயலாபத்திற்காக எங்களையும் எங்களது போராளிகளையும் இன்று பணயமாக வைத்திருக்கிறார். எனவே அன்பார்ந்த மக்களே! கருணா அவர்களின் வலைக்குள் சிக்கிவிடாது நாம் எமது தேசியத்திற்காகவும், எமது மாவீரர்களின் கனவுகளை நனவாக்கவும் விழிப்போடிருந்து கருணாவின் சதியை முறியடிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி கிழக்குபல்கலைக்கழக மாணவசமூகம்.</b> - anpagam - 03-11-2004 அடபாவி இவரை இவ்வளவுகாலம் உளவறியாமல் என்னதான் செய்தீர்கள் எந்தகாரணம் கொண்டும் இவருக்கு பொதுமன்னிப்பு கிடைக்காது எனதெரிந்து கொண்டார். இவருக்கு மேலேசொன்னது உண்மை என்றால் மன்னிப்பே கொடுக்க கூடாது காரணங்கள் பல..... :twisted: <img src='http://eelamweb.com/images/front/karuna_dis.jpg' border='0' alt='user posted image'><img src='http://eelamweb.com/images/front/karuna_dis.jpg' border='0' alt='user posted image'><img src='http://eelamweb.com/images/front/karuna_dis.jpg' border='0' alt='user posted image'><img src='http://eelamweb.com/images/front/karuna_dis.jpg' border='0' alt='user posted image'><img src='http://eelamweb.com/images/front/karuna_dis.jpg' border='0' alt='user posted image'> - Mathivathanan - 03-11-2004 7 ஆம் திகதி போட்ட ஈமெயிலுக்கு அதுகும் slow மெயிலிலை 10 ஆம் திகதிதான் பதில் வந்திருக்குது.. அதுக்கு என்ன பதிலோ..? பொறுத்திருந்துதான் பார்க்கவேணும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 03-11-2004 மட்டு-அம்பாறையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்துடன் கருணா முரண்பட்டுள்ளதன் காரணமாக, இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுத்துவரும் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. மட்டக்களப்பு பகுதியில் கடமையாற்றி வந்த பிரதம கண்காணிப்பு அதிகாரி பேர் ரொஸன்டல் இது குறித்துக் கருத்துக் கூறுகையில், தாம் கருனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில், கண்காணிப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும், தம்மோடு புலிகள் தரப்பிலிருந்தும், அரச தரப்பில் இருந்தும், தலா இருவரைக் கொண்ட சர்வதேச கண்காணிப்பு அதிகாரியின் கீழான 5 உறுப்பினர்களைக் கொண்ட உள்ளுர் கண்காணிப்பு குழுவினரும் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மட்டக்களப்பு அம்பாறை தவிர்ந்த ஏனைய பகுதிகளில், தமது கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவித்த மேற்படி அதிகாரி, அண்மையில் கிழக்குப் பகுதியில் புலிகளிற்கிடையே போர் மூண்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி, வவுணதீவில், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் அடங்கிய குழுவினர், போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அதிகாரிகளின் முன்னிலையில், கருனாவை, சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டபோதும், கருணா அச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. - yarl - 03-11-2004 கிழக்கு பல்கலைக்கழக சமுhகம் என்ற பெயரில் அது தாங்களில்லை என இன்னொரு அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! - Mathivathanan - 03-11-2004 யாழ்/yarl Wrote:கிழக்கு பல்கலைக்கழக சமுhகம் என்ற பெயரில் அது தாங்களில்லை என இன்னொரு அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!நேரடியாக பதிலளிக்க முடியாதவர்கள்தான் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் அறிக்கை விடுவார்கள்.. அது சார்பாக இருந்தாலென்ன எதிராக இருந்தாலென்ன..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 03-11-2004 குடிச்சவனிற்குத்தானே ருசி தெரியும் Mathivathanan Wrote:யாழ்/yarl Wrote:கிழக்கு பல்கலைக்கழக சமுhகம் என்ற பெயரில் அது தாங்களில்லை என இன்னொரு அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!நேரடியாக பதிலளிக்க முடியாதவர்கள்தான் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் அறிக்கை விடுவார்கள்.. அது சார்பாக இருந்தாலென்ன எதிராக இருந்தாலென்ன..? - Mathan - 03-11-2004 புலிகளின் உட் பிரச்சனையைப் பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேட முயலக் கூடாது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையைப் பயன்படுத்தி, தென்னிலங்கை அரசியலாளர்கள் குறுகிய அரசியல் ஆதாயம் தேட முயலக்கூடாது என ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போது, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் ஐp.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயகத்தில் தோன்றியிருக்கும் தற்போதைய பிரச்சினை, அவர்களது உள்முரண்பாடு எனவும், அதனை அவர்களே தீர்த்துக்கொள்வர் என்றும் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் இதனைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனையக்கூடாது எனவும் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் தற்போது தோன்றியுள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி, அவர்களை அழித்துவிட வேண்டும் என்று Nஐ.வி.பி.யின் தலைவர் சோமவன்ச தெரிவித்துள்ளதை இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டிய அமைச்சர் பீரிஸ், ஆனாலும், அதேநேரம் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்தப்போவதாக ஐனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளமையானது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நிலவும் குழப்பமான நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்தார். ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா, இப்போது ஒரு நாட்டின் தலைவி என்ற வகையிலல்லாமல், கட்சித் தலைவியாகவே செயற்பட்டுவருகிறார் எனவும் இந்த மாநாட்டில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மேலும் தெரிவித்தார். நன்றி - புதினம் - Mathan - 03-11-2004 <img src='http://www.thinakural.com/2004/March/11/sanakeyan.jpg' border='0' alt='user posted image'> நன்றி - தினக்குரல் - Mathan - 03-11-2004 'வட, கிழக்கு மாநில ஒருமைப்பாடு" ஒருபோதும் சிதையக்கூýடாது! வன்முறைக் கலாசாரத்திலிருந்து நாட்டை விடுவிக்க முடிýயும் என்ற நம்பிக்கை, படுபயங்கரமாகச் சிதறடிýக்கப்படுகின்றது. நாட்டை சமாதானப் பாதையிலும், அபிவிருத்திப் பாதையிலும் செலுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவுமே தேங்கிப் போயுள்ளன. பாராளுமன்றத்திலே அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டிýயில் இறங்கியுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளும், தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைக் காணும் முயற்சியில் இறங்கி 'கவிண்டு கொட்டிýண்டு போயுள்ள நிலைமையிலே" பேரினவாத அரசியல் கூýச்சல்கள் தாறுமாறாக வெளிப்படுகின்றன! ஜனநாயக ரீதியாக இலங்கையில், இதுவரைகாலமாகத் தொடர்ந்த பெரும்பான்மைக் கட்சியாட்சி, பெரும்பான்மையின ஆட்சியாகவே இருந்து வந்துள்ளது. ஏறத்தாழ, இலங்கையில் அரை நூற்றாண்டு காலமாக நடந்தேறிய ஆட்சியில், சிறுபான்மையினங்களின் அடிýப்படை உரிமைகள் முதல் மனித உரிமைகள் யாவற்றுக்கும் மேலாக வாழும் உரிமைகளையே கொள்ளையடிýத்த கதை இன்னும் முடிýயவில்லை. ஆயுதப் போராட்டம் யுத்தமாகித் தொடர்ந்த அழிவுப் பாதையில் இருந்து நாட்டை மீட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், சமாதானம், பேச்சுவார்த்தைகள் என்ற படிý உருவாக்கிய சர்வதேச வலைப்பின்னல் இப்பொழுது அப்படிýயே 'பிறந்த மேனியோடு" பெருமூýச்சு விட்டபடிý கிடக்கின்றது. இரண்டு வருடங்களாக ஆரவாரங்களுடன் அரங்கேற்றப்பட்ட சகல சமாதான முயற்சிகளும், இனிமேல் எந்தப் பாதையில் காலடிý எடுத்து வைக்கப் போகின்றன? விடுதலைப் புலிகளுடன் சர்வதேச மட்டத்திலே ஓடிýயோடிý நடத்திய சமாதானப் பேச்சுகள், இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புத் தேடல் வரைதான் நகர்ந்தாலும், யுத்த நிறுத்தம் என்ற ஒன்றைத்தான் உருப்படிýயாக வெளிப்படுத்தின. புரிந்துணர்வு உடன்படிýக்கை, வெறும் 'கடதாசியளவிலான ஒரு ஆவணமாகத் தான்" உள்ளது. ஜனாதிபதியும், எதிரணியினர், இனவாதச் சக்திகளின் ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகளின் மத்தியில் வெளிப்படுத்திய, எதிர்ப்பலைகள் ஒன்று திரண்டு உருவாகியுள்ள பொதுத் தேர்தல், தேசிய அரசியல் வன்முறைக் கலாசாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கின்றது. முரண்பாடுகள் சகல கோணங்களிலும் ஆழமாகிக் கொண்டிýருக்கின்றமை தேர்தல் பிரசாரங்கள் மூýலமாக மட்டுமல்ல, வன்முறைகளைத் தூண்டிýவிடும் சுயநல அரசியல் சக்திகளின் நடைமுறைகள் மூýலமாகவும்தான் வெளிப்படுகின்றது. சாதாரண மக்களைப் பொறுத்த வரையிலும், நாட்டிýன் எதிர்காலத்தைப் பொறுத்தவரையிலும் நாடு எந்தத் திசையில் செல்லப் போகின்றது என்பதை எவருமே அனுமானிக்க முடிýயாதுள்ளது. எத்தனை கட்சிகளும், சுயேச்சைகள் என்ற தற்குறிகளும் இந்தத் தேர்தலில் குதித்திருந்தாலும், இரு பிரதான கட்சிகளின் கூýட்டமைப்புத்தான் ஆட்சியை அமைக்கப் போகின்றது. இப்பொழுது மக்களின் முன்னால் ஒரு பாரிய பொறுப்பு விரிந்துள்ளது. விரும்பியோ, விரும்பாமலோ மக்கள் இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் வாக்காளிக்காவிட்டாலும் கூýட, இந்தக் கட்சிகளுக்குத் துணைபோகும் கட்சிகளிற்கு வாக்களிப்பது நடைபெறப் போகின்றது. சிறிய கட்சிகளுக்கோ, சுயேச்சை என்ற தற்குறிகளுக்கோ, புதிய கட்சிகளுக்கோ வாக்களிப்பது வாக்குகளை விரயம் செய்யும் விடயமாகத் தான் போய் முடிýயும். ஒன்றுபட்ட வட, கிழக்குத் தமிழ் மாநிலத்தை உறுதிப்படுத்தும் இலக்குகளுடன் தான் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் பேசும் மக்களின் தேசிய அபிலாiர்களாக இதுவரை வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை எல்லாம் ஜீரணிக்க முடிýயாத தென்னிலங்கைக் கட்சிகள், இந்தக் கூýட்டமைப்பையே சிதைப்பதற்கு எதையுமே செய்யத் தயங்காத நிலைமைதான் இப்பொழுது வெளிப்படுகின்றது. சுருங்கக் கூýறின், இப்பொழுது யதார்த்தமாகியுள்ள வட, கிழக்கு இணைப்பு என்ற ஒருமைப்பாடு, கடந்த கால ஆயுதப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்டதுதான் என்பதை எவரும் மறுக்க முடிýயாது. பேரினவாத சக்திகள் முதல் குறுகின இனவாத சிந்தனைகளை வளர்க்கும் தற்குறிகள் வரை யாவருமே தீர்க்கதரிசனமில்லாது தமிழ் பேசும் மக்களின் பலத்தைக் குறைப்பதற்கான வட, கிழக்கு ஒருமைப்பாட்டையே சிதைக்க முற்படும் பாதையில் இறங்க முற்படுவது துரதிர்ர்;டவசமானது. சுயநலத்திற்காக அரசியல் கட்சிகள், அமைப்புகள் மட்டத்தில் பிளவுபட்ட சிலரும் பேரினவாத சக்திகளுக்கு 'ஒத்தூதுவது" சில்லறைத்தனமான அரசியலாகவே வெளிப்படுகின்றது. மொத்தத்திலே வட, கிழக்கு மாநிலத்தின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கவிடாத வகையிலே, அப்பிரதேசத்தை தாயகமாகக் கொண்ட தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதேசவாதம் என்ற குறுகிய நிலைப்பாட்டிýலிருந்து விடுபட்டு பரந்த நோக்குடன் ஒன்றுபட்டு, எதிர்வரும் தேர்தலில் வாக்குப் பலத்தை நிலைநாட்டுவதுதான் மிக மிக அவசியமானது. நன்றி - தினக்குரல் - Mathan - 03-11-2004 <img src='http://www.thinakural.com/2004/March/11/moorthy.gif' border='0' alt='user posted image'> நன்றி - தினக்குரல் - Mathan - 03-11-2004 மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மந்தநிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் சூழலில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இம்முறை போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் மந்த நிலையை அடைந்துள்ளன. தலைமை வேட்பாளரும், முன்னைனாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் சிரேர்;ட உபதலைவருமான ஜோசப் பரராஜசிங்கம், தேர்தல் பிரசாரப் பணிகளை இடைநிறுத்திவிட்டு கொழும்பு சென்றுள்ளார். ஏனைய வேட்பாளர்கள் தமது வழக்கமான பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுவந்தபோதிலும், பொதுமக்கள் முன்னரைவிட உற்சாகம் குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றனர். இதனால், வேட்பாளர்களும் கூட உற்சாகம் இழந்தே காணப்படுகின்றனர். அதேநேரம், மாற்றுத் தமிழ்க் கட்சிகளான ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி), புளொட் ஆகியவை புதிய உற்சாகத்துடன் தேர்தல் பிரசாரப் பணியில் ஈடுபட்டுள்ளமையைக் காண முடிகின்றது. சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த இவர்கள், தற்போது வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளமையையும் காணமுடிகின்றது. நன்றி - தினக்குரல் - Mathan - 03-11-2004 Rupavahini blamed for falsifying report [TamilNet, March 11, 2004 11:24 GMT] Amparai district former Tamil National Alliance (TNA)parliamentarian Mr. A.Chandra Nehru Thursday issued a statement denying a report carried by State controlled Sri Lanka Rupavahini Corporation (SLRC) saying that he participated in a demonstration burning the effigy of LTTE leader Mr.Pirapaharan, sources in Amparai said. "I carried a placard stating that our National Leader Mr.Pirapaharan and Area Commander Karuna should join hands. But the SLRC in its news bulletin showed a video clip that I was present in the procession that burned the effigy. No such thing took place in Thirukovil on that day in my presence. The irresponsible action of the SLRC has caused pain of mind and tarnished my image in the public," said Mr. Chandra Nehru in his statement. People of Batticaloa and Amparai district have been reeling because of a crisis. Under this circumstances the State controlled media organizations, under the control of Sri Lanka's President, are attempting to exploit the situation with false reports, the statement said. "The LTTE leader and Karuna Amman should join hands to foil the attempt by the State media organizations to create divisions within the Tamil community. This is my wish," said Mr.Chandra Nehru in his statement. |