Yarl Forum
நடப்பு அரசியல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41


- PAAMARAN - 04-26-2004

தாத்தா யு ஹாவ் டண் அ லோங் ஸ்பீச்.
வெல் டண். கீப் இற் அப்


- Mathivathanan - 04-26-2004

<!--QuoteBegin-PAAMARAN+-->QUOTE(PAAMARAN)<!--QuoteEBegin-->தாத்தா யு ஹாவ் டண் அ லோங் ஸ்பீச்.  
வெல் டண். கீப் இற் அப்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->தங்யூ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathivathanan - 04-27-2004

அடடே.. டிலீற் கீ வேலைசெய்யேல்லைப்போலை.. இன்னும் கிடக்குது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Eelavan - 04-27-2004

பொய்யை எத்தனை தரம் சொன்னாலும் உண்மையாகிவிடாது அதுபோன்று உண்மையை எவ்வளவு பிரயத்தனப்பட்டும் மூடி வைத்துவிட முடியாது

உதயகுமார் பதவி விலகவில்லை விலக்கப்பட்டுள்ளார் அதுவும் புலிகளின் செயல் என்று பிதற்றுவதன் மூலம் B.B.C நிறுவனமே புலிகளுக்கு விலை போய்விட்டது என்று சொல்லவருகிறீர்களா

உதயகுமார் கொடுத்த செய்தி உண்மையாக இருந்தால் உலகளாவிய ஒரு நிறுவனம் தனது செய்தியாளரை பணிநீக்கம் செய்வதற்குக் கொடுக்கப்பட்ட காரணம் பொய்

மட்டக்களப்பு அபிவிருத்திக்கும் யாழ் மக்களை வெளியேற்றுவதற்கும் என்ன சம்பந்தம்?
தேர்தல் வெற்றி பற்றி ஏற்கனவே சொல்லியாகிவிட்டது அது கருணாவுக்கோ போட்டியிட்டவர்களுக்கோ கிடைத்த வெற்றி அல்ல த்மிழ்த் தேசியத்துக்கு கிடைத்த வெற்றி அது உங்களுக்குப் புரியாது ஏனென்றால் நீங்கள்.....

கருணா மட்டக்களப்பை அபிவிருத்தி செய்வதாக சொன்னது தனக்கு ஆதாயம் தேடவே ஒழிய உண்மை இல்லை
என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது

10 ம் திகதி பலியான சிறார்கள் கருணாவின் துரோகத்தால் பலியானவர்கள் இதுதான் அவர் சொல்லும் அபிவிருத்தி

கருணாவால் மட்டக்களப்பு நிர்வாகத்தை நன்கு கொண்டு நடத்தமுடியுமென்றால் கோழை பொல நம்பியவர்களைக் கூட கைவிட்டு பேடி போல ஓடியது ஏன் ராஜதத்ந்திரமென்ற வார்த்தைஅயைச் சொல்லி அவரையே கேவலப்படுத்தவேண்டாம்

புலிகளையே எதிர்த்து நிற்கமுடியாதவர் நாளை இராணுவம் படையெடுத்தால் எப்படி மட்டக்களப்பு மக்களைக் காப்பாற்றுவார் பலகல்லவின் காலில் விழுந்தா
ஊனமுற்ற புலிகளைக் கொள்வதால் கருணாவுக்கு என்ன இலாபமா நீலனையும் சகபோராளிகளையும் எதற்காகக் கொன்றானோ அதே இலாபம் தான்
இனியாரும் இயக்கத்தில் சேராதிருக்க விடப்பட்ட பயமுறுத்தல்

உதயகுமாரின் உண்மைச்செய்திகளும் அவர் சக பத்திரிகையாளர்களுக்கு விடுத்த பயமுறுத்தலும் இதெ களத்தில் போடப்பட்டது பார்த்திருக்கமாட்டீர்கள் ஏனென்றால் நீங்கள் நாங்கள் மக்சிக்கன் சாப்பிட பினாலிருந்து>...........................கொண்டிருந்தீர்கள்


- Mathivathanan - 04-27-2004

நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- Eelavan - 04-27-2004

பக்தனே கவலைப்படாதே
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கின்றது அது நன்றாகவே நடக்கின்றது
அது போலவே எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

எதை நீ கொண்டுவந்தாய் இழப்பதற்கு
என் அழுகின்றாய் இல்லாததை இழந்ததற்கு

உமது வேண்டுகோள் பரிசீலனையில் இருக்கின்றது
இப்படிக்கு
கடவுள்


- Shan - 04-27-2004

நடப்பு அரசியலை நன்கே புரியமால் வெறுமனே கருத்தெழுதுவது மக்களை வெறுமைக்குள்ளாக்கும் ஒர செயற்பாடே. ஒரு விசியம். தயவு செய்து நல்லா கவனியுங்கோ. தமிழ் இனம் இப்ப மிகவும் ஒரு ஆபத்தான ஒரு கால கட்டத்திலை இருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற பின் தமிழ் பேசும் இனத்தின் விடிவிற்கான தீர்வுகளை நிறைவேற்ற தடையாக இருந்ததன் முக்கிய காரணிகள் சிங்கள பௌத்த பேரின வாதம். இதன் முக்கிய காரணி இனவாத பௌத்த பிக்குகள். இவர்கள் தமிழ் மக்களின் விடிற்காக வைக்கப்பட்ட ஒவ்வரு தீர்வுக்கும் தடைக்கல்லாக இருந்தவரகள. ஆனால் அன்று அவர்கள் ஒர கட்சியாக இல்லாது அரசியலில் தமது மறைமுக செல்வாக்கையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று நிலைமை!!
தமக்கென ஒரு கடசி அதில் பாராளுமன்றத்தில் 9 ஆசனங்கள். ஆட்சியமைக்கும் அரசின் முடிவுகளில் நேரடியான தலையீடை செய்யக் கூடிய அதிகாரம். இது மிகவும் மோசமான ஒரு விடயம். ஒரு நாட்டு அரசியலில் மதம் தலையிட்டால் விழைவு என்ன என்பதை நம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். இன்றைய கால கட்டம் ஒரு மோசமான மிகவும் ஆபத்தான் கால கட்டம். இலங்கையின் இனப்பிரச்சனை மிகவும் மோசமான சிக்கலுக்ககுள் நிலைப்பட்டுள்ளது. தெற்கே சிங்க பேரினவாதத்திறகு ஆதரவு! வட கிழக்கில் தமிழ் தேசியத்திற்கு ஆதரவு! ஒரு ஸ்திரமாற்ற அரசு ஆட்சியல்!யுத்த காலத்தைவிட மிக மோசமான நிலையில் இன்றைய நிலை! இந்த நேரத்தில் நாம் பழைய குப்பைகளை கிண்டி நாத்தம் எடுப்பதா அல்லது வீறு கொண்டு எழும் சிங்கள பௌத்த பேரின வாதத்தை எதிர் கொள்வதா? நமது முக்கிய பிரச்சனையை நாம் இன்று தீரப்போம். நமது பிரச்சனைகளை நாம் பின்னர் பேசித் தீர்ப்போம். ஒன்று பட்டு தமிழ் தேசியத்தை வளர்க்க இன்று புலம் பெயரந்த ஒவ்வரு தமிழனும் கடைமைப்பட்டுள்ளான் என்பதை நாம் மறக்க கூடாது.


- anpagam - 04-27-2004

<img src='http://www.thinakural.com/2004/April/27/moorthy27.gif' border='0' alt='user posted image'>
tnx:thinakkural


- Mathan - 04-28-2004

<img src='http://www.thinakkural.com/2004/April/28/moorthy.gif' border='0' alt='user posted image'>

தினக்குரல்


- Mathan - 04-28-2004

டக்ளஸ் தேவானந்தா வட பிரதேச நலன்கள் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக்கப்பட்டுள்ளதையிட்டுத் தமிழரசுக் கட்சி (தமிழர் தேசிய முன்னணி?) சார்பாகக் கடுமையான, விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா வடபிரதேச மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்பதால் அவரைத் தமிழ் மக்களது நலன் சார்ந்த விடயங்களுக்கு அமைச்சராக்கியது அரசாங்கத்தின் நல்லெண்ணம் பற்றிய ஐயங்களை எழுப்பியுள்ளது என்பது அவர்களது வாதம். மக்களால் என்றுமே தெரியப்படாதவரும். <b>நிச்சயமாகத் தமிழ் மக்களால் என்றென்றைக்குமே நிராகரிக்கப்படக்கூடி ய வருமான லடீ;மன் கதிர்காமர் அயல் விவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டது தமிழ் மக்களின் நலன்கட்கு மேலும் கெடுதலாயிருந்திராதா?</b>

அமைச்சர் கதிர்காமரது கனவு நனவாகி அவர் முதலமைச்சராகியிருந்தால் அது பற்றித் தமிழ்த் தலைவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? <b>டக்ளஸ் தேவானந்த பற்றிய கவலைக்குக் காரணம், அவரால் அமைதி குலையும் என்பதோ தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் நலிவடையும் என்பதோ அல்ல. அவர் தனது பதவியைப் பாவித்து வடக்கில் ஒரு வாக்கு வங்கியைக் கட்டியெழுப்பி அடுத்த தேர்தலில் சற்று அதிகளவில் பாராளுமன்ற ஆசனங்களைப் பிடி க்க இயலுமாயிருக்கும் என்பதே வன்மையான காரணம் என்று நினைக்கிறேன்.</b>

மக்களால் தெரிவு செய்யப்படாமல் பழைய பாராளுமன்ற அமைப்பின் மூதவை உறுப்பினராக நியமனம் பெற்று, 1960 முதல் 1964 வரை }மாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்து நாட்டைப் பாலித்தார். அவர், ஒரு வேளை அல்ல, நிச்சயமாகவே தேர்தலில் நின்று வென்றிருக்கலாம். எனினும், அவர் அதைச் செய்யவில்லை. இம்மாதிரி விடயங்கள் இப்போது இங்கும் இன்னும் பல நாடுகளிலும் வழமையாகிவிட்டன. <b>அவை கண்டி க்கப்பட வேண்டும் என்பது உண்மையில் நியாயமானதே. ஆனாலும் கண்டிக்கிறவர்களுக்கு ஒரு யோக்கியம் வேண்டாமா?</b>

<b>இம்முறை மக்களால் நிராகரிக்கப்பட்ட இரு வேட்பாளர்கள் தேசியப் பட்டி யலில் இடம்பெறுவதற்கு வசதி செய்த ஒரு கூட்டமைப்பால் மக்களால் முற்றாக நிராகரிக்கப்படாத ஒருவர் அமைச்சரானதை நேர்மையாக விமர்சிக்க முடி யுமா?</b> வட்டுக்கோட்டைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு 1978 இல் எதிர்பாராதவிதமாக இறந்த பின்பு, அத் தொகுதியுடனோ யாழ்ப்பாண மக்களுடனோ எது விதமான உறவும் இல்லாத நீலன் திருச்செல்வம் நியமிக்கப்பட்டதற்கு என்ன ஜனநாயக அடிப்படை உண்டு என்று தெரியவில்லை. தமிழ் மக்களின் தலைமையின் அரசியல், ஒரு நூற்றாண்டு காலமாகவே தரகு வேலை அரசியலாகவே இருந்து வந்துள்ளது. மக்கள் தலைவர்களை நம்புகிறார்கள். தலைவர்கள் தரகர்களாக இல்லாதபோது தரகர்களை நியமித்து வேலைகளைச் செய்ய முயல்கிறார்கள்.

1965 ஆம் ஆண்டு ய10.என்.பி. யுடன் கூட்டாட்சி அமைக்கிறதற்கு மக்கள் ஆணையைப் பெறாமலே அமைச்சரவையில் இடம் பெற்ற தமிழரசுக் கட்சித்தலைமை மக்களின் ஆணை இல்லாமையையே ஒரு வசதியாக்கி மக்களால், தெரிவு செய்யப்படாத ஒருவரான மு.திருச்செல்வத்தை அமைச்சராக்கியது. இதன் மூ லம் எதையுமே தமிழ் மக்களுக்காக வென்றெடுக்க இயலாது போன அக்கட்சி 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கணிசமான சரிவைச் சந்தித்தது. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரான அ.அமிர்தலிங்கம் இளைஞர்களது விரக்தியைப் பயன்படுத்தித் தன்னையே தலைவராக்குமளவுக்கு உயர்த்திக் கொண்டது இன்னொரு கதை.

மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரான செ.இராசதுரையை ஓரங்கட்டுவதற்காக காசி ஆனந்தனை மாற்று வேட்பாளராக நிறுத்தி அவருக்கு ஆதரவாக அமிர்தலிங்கம் தலைமை செயற்பட்டதற்கு, அண்மையில் 'கருணா அம்மான்" யாழ்.மட்டக்களப்பு முரண்பாட்டை விளக்கமாக முன்வைத்தார். உண்மை அதுவல்ல. ராஜதுரை யாழ்ப்பாணத்தில் அரசியலில் இருந்திருந்தாலும் அவருக்கு அதுவே நடந்திருக்கும். சந்திரகாசனும், குமார் பொன்னம்பலமும் ஓரங்கட்டப்பட்ட காரணம் அதிகம் வேறுபட்டதல்ல.

<b>தமிழ் மக்களைப் பொறுத்தவரை எந்தவொரு தமிழ் அமைச்சரும் தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதற்காக நியமிக்கப்பட்டதில்லை. இது பிற சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்பாகவும் உண்மையே.</b> எனினும், சிலர் தமது அரசியல் தளங்களைக் கட்டியெழுப்புவதற்காகத் தங்கள் அதிகாரத்தைப் பாவிக்கும் போது மக்களுக்கும் சிறிது நன்மை கிட்டுகிறது. ஆனால், இது மக்களுக்கு உரிய பங்கினும் குறைவானது என்பது போக எந்தத் தனிமனிரதும் தயவினால் கிடைப்பதல்ல. மக்களிடமிருந்து கவரப்பட்டதைத் தங்களது வல்லமைக்குச்சான்றாக வாரி வழங்குவது தான் அரசாங்க அமைச்சர்கள் ஆடும் நாடகம்.

கடந்த அரை நூற்றாண்டுக் கால அரசியலில் கண் முன்னாலேயே காடைத்தனமும் ஊழலும் பச்சையான மிரட்டலும் சில சமயங்களில் படுகொலைகளும் எப்போதும் வன்முறையுமாக இந்த நாட்டி ன் ஒவ்வொரு மூலையிலும் அரசியல் உருமாறியிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல்களுக்காகிற செலவு எவ்வளவு? ஒவ்வொரு அரசியல்வாதியும் செலவிடும் பல இலட்சங்களையும் கோடி களையும் யார் தருகிறார்கள்? இதைப் பற்றி மக்கள் அறியாமலில்லை. ஆனாலும், யாராலும் தட்டிக் கேட்க இயலாதளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிலைமை தென்னிலங்கையினதினும் சிறிது வேறுபட்டது. தாங்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை என்று தமிழ்ப் பாராளுமன்றத் தலைவர்கள் பெருமை பேசலாம். எனினும், இதுவரை துரையப்பாவின் கொலை, முதலாகப் பல்வேறு அரசியல் கொலைகளைக் கண்டி க்க மறுத்து வந்த ஒரு அரசியல் தலைமை, வசதியான போது தனது தலைவர்களது கொலைகளைப் பற்றிக் கண்ணீர் வடிக்கிறது. 'சிங்கள இரத்தம் குடி ப்பேன்" என்று சூளுரைத்து மேடையில் முழங்கி தமிழ்த் துரோகிகளுக்கு இயற்கையான சாவு நிகழக்கூ டாது என்று பிரகடனம் செய்த ஒரு பாரம்பரியம், அதே துரோகிப் பட்டமும் இயற்கை சாராத சாவும் தனக்கு நிகழக் கண்டது.

நாளை, அரசாங்கத்தில் பதவி ஏற்கலாம் என்று ஆணை கிடைத்தால் நமது இருபத்திரண்டு பாராளுமன்ற நாற்காலிக்காரர்களும் ஆளை ஆள் முந்தித் தமக்குள் மோதிக் கொள்வார்கள் என்பது என் நியாயமான ஊகம்.

<b>தன் முதுகு தனக்குத் தெரியாது என்பார்கள். அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை தங்கள் உள்ளங் கைகளே அவர்களுக்குத் தெரியாது.</b>

ஜனாதிபதியின் எந்த நடவடிக்கையும் பற்றி நாம் ஐயத்துடனேயே நோக்க வேண்டி யுள்ளது. ஆனால், யாரை எதற்கு அமைச்சராக்குவது என்பது அவரதும், அவரது அணியினதும் உள் விவகாரம். இன்னாரை நியமிக்கலாம், இன்னாரை நியமிக்கலாகாது என்று ஆலோசனையோ ஆணையோ பிறப்பிக்கும் அதிகாரம் மாற்றுக் கட்சி எதற்குமே இல்லை. மகேஸ்வரன் அமைச்சரான போது வாய் மூடி யிருந்தவர்கள், ஏன் டக்ளஸ் தேவானந்த பற்றி அலறவேண்டும்?

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, யார் அமைச்சராவதாலும் அவர்களது நிலைமை மாறப் போவதில்லை. அதை யாராலும் அவர்களுக்காக மாற்றவும் இயலாது. பெரும்பான்மையின் பேரிலான சண்டியர்களின் சர்வாதிகாரத்துக்கு ஜனநாயகம் என்று பேர் சூ ட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுபடாமல் எவருக்கும் விடுதலையோ, விமோசனமோ இல்லை.

தினக்குரல்


- Mathan - 05-02-2004

<img src='http://www.thinakkural.com/2004/May/01/moorthy.gif' border='0' alt='user posted image'>

தினக்குரல்


- Mathan - 05-02-2004

புலிகள் தமிழ் மக்களின் முக்கிய பிரதிநிதிகள் அல்லது ஏக பிரதிநிதிகள் என்பதை கதிர்காமர் ஏற்றுக்கொண்டுள்ளதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்மீது உங்கள் கருத்துக்கள் என்ன?


- Mathan - 05-02-2004

இது தொடர்பாக தினக்குரலில் வந்த கட்டுரை ஒன்றூ. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ,,,,,

மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ.........

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று இலங்கை ஒலிபரப்புக் கூýட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் 'விடிýயும் வேளை" நிகழ்ச்சியில் அளித்த பேட்டிýயொன்றை நான் கேட்டேன்.

அமைச்சரை தொலைபேசி மூýலமாக பேட்டிý கண்டவரும் அடிýக்கடிý 'அமைச்சரவையில் உள்ள ஒரே தமிழர் என்ற வகையில்" என்று தான் அடிýக்கடிý அவரிடம் கேள்விகள் கேட்டதையும் அந்த 'ஒரே தமிழர்" என்பதை ஏற்றுக் கொள்வதைப் போன்றே அவரும் பதில்களை அளித்ததையும் அவதானித்தேன்.

கதிர்காமர் என்று ஒருவர் அமைச்சரவையில் முக்கியமான பொறுப்பில் இருப்பதை தேவானந்தா தற்செயலாக அந்த விடிýயும் வேளையில் மறந்துவிட்டாரா அல்லது கதிர்காமரை தமிழர் என்று ஏற்றுக் கொள்ளவில்லையா என்று என் மனதுக்குள் ஒரு கேள்வி.

தேர்தல் முடிýவுகள் வெளியான பிறகு பத்திரிகையொன்றுக்கு பேட்டிýயளித்திருந்த கதிர்காமர், தேவானந்தாவுக்கு ஜனாதிபதி அமைச்சர் பதவி கொடுக்கும் சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்ததை இன்னமும் மனதில் வைத்துக் கொண்டு தேவானந்தா வன்மத்தைச் சாதித்தாரோ என்றும் எனக்கு ஒரு சந்தேகம்.

ஆனால், பின்னர் தான் பேட்டிý கொடுத்த பத்திரிகையாளரைக் கண்ட கதிர்காமர், நான் 'ஓப் த ரெக்கோட்" ஆகச் சொன்னதை நீங்கள் பிரசுரித்துவிட்டPர்களே என்று மனவருத்தப்பட்டதாகவும் அறிய வந்தது.

எது எப்படிýயோ, இலங்கையில்தான் கதிர்காமரால் இதயங்களை வெல்ல முடிýயாமல் இருக்கிறதே தவிர, இந்தியாவில் உள்ளவர்களின் இதயங்களை அவர் கொள்ளையேயடிýத்துவிட்டார் போங்கள்.

நேற்று முன்தினம் டிýல்லிக்குச் சென்றிருந்த கதிர்காமருக்கு என்ன வரவேற்பு, கட்டிýயணைப்பென்ன, கொஞ்சிக் குலாவலென்ன அசத்திவிட்டார். எங்கள் நாட்டான் அண்மைக் கால வெளியுறவு அமைச்சர்களில் டிýல்லிக்காரர்களின் அமோக அன்பைச் சம்பாதித்தவர் என்றால் அது கதிர்காமர் தான் என்பேன்.

இதைவிட, கதிர்காமர் டிýல்லியில் கூýறிய சில கருத்துக்களும் முன்னர் அவரிடம் இருந்த நிலைப்பாடுகளில் பலத்த மாற்றம் ஏற்பட்டிýருப்பதைப் புலப்படுத்துகின்றன.

விடுதலைப்புலிகளை கதிர்காமர் ஏகப் பிரதிநிதிகள் என்று ஒருபோதும் ஏற்றுக் கொண்டவரல்ல. ஆனால், இப்போது அவர் டிýல்லியில் வெளியிட்ட கருத்துக்கள் விடுதலைப்புலிகளை தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று அவர் கருதுவதற்குத் தயாராகிவிட்டார் என்று உய்த்துணரக் கூýடிýயதாக இருக்கின்றன.

டிýல்லியில் கதிர்காமரைச் சந்தித்த பிரபல பத்திரிகையாளர் வெங்கட் நாராயண், 'உங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வருவதானால் தங்களையே தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று முன்நிபந்தனை விதித்திருக்கிறார்களே" என்று கேட்டார். 'முன்னைய அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது, பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்த இரு பிரதான தரப்பினர் அரசாங்கமும் விடுதலைப்புலிகளுமே. இரு வருடங்களுக்கு முன்னர் என்ன விதமாக சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டனவோ அதே மாதிரி எமது அரசாங்கமும் ஆரம்பிக்கும். நாம் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கும்போது மேசையில் அமரும் இரு பிரதான தரப்பினர் அரசும் புலிகளுமே. எமது அரசு கூýட விடுதலைப்புலிகளை தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக் கொள்கிறது என்பது தானே இதன் அர்த்தம்" என்று கதிர்காமர் பதில் அளித்திருக்கிறார்.

அது மாத்திரமல்ல, கடந்த அக்டோபரில் புலிகள் முன்வைத்த இடைக்கால நிருவாக சபை யோசனைகள் நிச்சயமாக பேச்சுவார்த்தைகளில் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்றும் கதிர்காமர் கூýறியிருக்கிறார்.

கடந்த வருடம் புலிகளின் இந்த யோசனைகளை கடுமையாக எதிர்த்து அம்மையார் தரப்பின் கருத்துக்களை உலகுக்கு எடுத்தியம்பிய கதிர்காமரா இன்று இப்படிýயெல்லாம் பேசுகிறார் என்று நம்ப முடிýயாமல் இருக்கிறதா? என்ன செய்வது நம்ப வேண்டிýயதுதான் நம் விதி.

எனக்கு ஆச்சரியமாக இருப்பதென்னவென்றால், விடிýயும் வேளையில் அமைச்சரவையில் இருக்கும் ஒரே தமிழர் என்ற பாணியில் கருத்துக்களைச் சொன்ன அமைச்சர் தேவானந்தா கூýட இப்படிýப் பேசுவாரோ என்பதுதான் என்ன இருந்தாலும் கதிர்காமர் அசத்திவிட்டார் போங்கள்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நலன்கள் தான் இருக்கின்றன என்று ஹென்றி கீஸிங்கர் எங்கோ பேசியதாக முன்னர் ஒரு தடவை வாசித்த ஞாபகம்.

உண்மையிலேயே, நிரந்தர நலன்களைப் பேனுவதற்காகத் தான் கதிர்காமர் மனதில் மாற்றங்களைச் செய்திருக்கிறாரோ? தவிர்க்க முடிýயாமல் எழுகிறது இக் கேள்வி. அமைச்சர் தேவானந்தாவும் இதைச் சற்றுக் கவனிப்பது நல்லது.

அது போகட்டும், கதிர்காமரின் மனமாற்றம் ஒரு சினிமாப் பாடலை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

மாறியது நெஞ்சம்..... மாற்றியவர் யாரோ..... காரிகையின் உள்ளம் காண வருவாரோ.......


- Mathan - 05-03-2004

நன்றி -வீரகேசரி


- Mathan - 05-03-2004

நன்றி -வீரகேசரி


- Mathan - 05-05-2004

<img src='http://www.thinakkural.com/2004/May/05/moorthy.gif' border='0' alt='user posted image'>

தினக்குரல்


- Mathan - 05-05-2004

<img src='http://www.thinakkural.com/2004/May/05/sanakiyan.gif' border='0' alt='user posted image'>

தினக்குரல்


- Mathan - 05-14-2004

<img src='http://www.thinakkural.com/2004/May/13/moorthy.gif' border='0' alt='user posted image'>

நன்றி - தினக்குரல்


- Mathan - 05-14-2004

<img src='http://www.thinakkural.com/2004/May/14/moorthy.gif' border='0' alt='user posted image'>

தினக்குரல்


- Mathan - 05-17-2004

<img src='http://www.thinakkural.com/2004/May/17/moorthy.gif' border='0' alt='user posted image'>

தினக்குரல்