Yarl Forum
Breaking News - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: Breaking News (/showthread.php?tid=7412)



- vasisutha - 03-10-2004

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- nalayiny - 03-10-2004

thampu Wrote:
BBC Wrote:
இராவணன் Wrote:குறிப்பிட்ட ஒரு தளம் என்ன காரணத்திற்காக இங்கு நீக்கப்பட்டதோ அதை இங்கு செய்திகளின் மறு பிரசுரமாக செய்ய வேண்டாம்.

மோகன், இராவணன் மற்றும் தணிக்கை அதிகாரிகள்,

செய்திகள் தணிக்கை செய்வதை பொறுத்தவரை எனக்கு ஆட்சேபணை கிடையாது. ஏன் அவை எனது சொந்த கருத்துக்கள் அல்ல. அவற்றிற்கு வெளியிட்ட செய்தி நிறுவனங்கள் தான் பொறுப்பு. பிரபல்யமான செய்திநிறுவனங்களின் செய்திகளை தான் இங்கு போடுகின்றேன். இது உங்கள் சொந்த இணையத்தளம் என்பதால் அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளாத போது அவற்றை தணிக்கை செய்து கொள்ளலாம். நீங்கள் தடை செய்த இணையதளதில் இருந்து எந்த செய்தியையும் நான் இங்கே போடவில்லை. அங்க செய்தி BBC (பிரிட்டிஷ் செய்தி நிறுவனம்) வெளியிட்டது.

இக்களமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தணிக்கை பற்றி என் தாழ்வான கருத்து.....

தணிக்கை என்பது தரம் பற்றிய வினாவுதல்!!!!!!!!!!!!!!!
ஒருவகையில் தியாக வினை அது!!!!!!!!!!!!!!
ஆம் பயனற்றதை வடித்து எடுத்துவிடும் வேள்வி அது!!!!!!!!!!
ஆக, தணிக்கை என்பது பன்னாடையின் பணி...........

ஆயிரம் களநோக்கர்களுக்காக ஐந்து ஜீவன்கள் ஏன் இந்த பாவச்சுமையை தணிக்கை சிலுவையில் ஏந்தி யாழ் களத்தில் மரிக்கவேண்டும்.

ஒரு வகையில் இது....
80க்கு முன் குடாநாட்டில் வீட்டைச்சுற்றி எழுப்பிய ஏழு அடி உயர கிடுகு வேலிகள் உலகத்திலிருந்து தம்மை தனித்துவப்படுத்தும் என எண்ணி தனிமைப்பட்டுப்போன சந்ததியின் மிச்சசொச்சங்கள்தான் இன்னும்.......இங்கும்........ இணையத்திலும்............

வர வர யாழ் களபிரக்கிராசி மாற்றை (மட்டுறுத்தனர்) அராஐகம் தாங்க முடியேலை. :evil:


- Mathivathanan - 03-10-2004

vasisutha Wrote:அட படங்களையெல்லாம் பாக்க ஒரு அஞ்சு ஆறு பேர் தான் அம்மானோட இருக்கினம் போல
அம்மான் தனிமணிதர் எண்டுதானே சொன்னாங்கள்.. ஒருவேளை கிறாபிக்ஸாலை விளையாடியிருப்பாங்களே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- nalayiny - 03-10-2004

nalayiny Wrote:[quote=nalayiny]சரி பிரதேச வாதம் பிரதேச வாதம் எண்டிறியள் ஆர் அதை வளற்தது? என ஆராய்து சொல்லுங்கோ பாப்பம் .


[size=18]
சரி கதையோடை கதையாய் இதை விட்டிடாதேங்கோ. நான் கேட்ட கேள்விக்கு பதில் தாங்கோ ஆரும்.


- vasisutha - 03-10-2004

<b>புலனாய்வுப்பிரிவு கம்பன் மாஸ்ரர் கருணா குழுவால் தாக்கப்பட்டுள்ளார்</b>

நேற்று மீனகம் வளாகத்தில் நடைபெற்ற போராளிகளுக்கான பொதுக்கூட்டத்தில் தளபதி றாபட்அவர்களை கருணா என்ற முரளீதரன் மிகவும் இம்சைப்படுத்தியுள்ளார். மீனகம் வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கூடலில் றாபட்டிடம் தலைவரின் படத்தைக்கொடுத்துக் கிழித்தெறியும்படி உத்தரவிட்டுள்ளார். தளபதி றாபட் தலைவரின் படத்தைக் கிழிக்க மறுத்து கண்ணீர் சிந்தி நிற்க அந்தக்கூடலில் உரையாற்றுமாறு பணித்துள்ளார். அதையும் மறுத்த றாபட் கருணாவினால் மிகவும் இம்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். மீனகத்தில் தற்போது நிலமைகள் நிமிடத்துக்கு நிமிடம் பதட்டமடைந்து கொண்டு இருக்கிறது.

கருணாவினால் ஜீவேந்திரன் தலைமையில் மீனகத்திலிருந்த போராளிகளை உள்ளடக்கிய படையணியொன்றினை கொக்கட்டிச்சோலை பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப்பகுதிக்குள் நுளைகின்ற விடுதலைப்புலிகளைத் தாக்குமாறு கட்டளையும் பிறப்பிக்கப்பட்டு ஜீவேந்திரன் தலைமையிலான படையணி கொக்கட்டிச்சோலையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாகரைப்பக்கத்துக்கு தாத்தா தலைமையிலான படையணியொன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருணாவின் விசுவாசியாகக் கருதப்பட்ட புலனாய்வுப் பிரிவுப்போராளி கம்பன்மாஸ்ரர் உட்பட சிலதொகையான போராளிகள் மீனகத்தை விட்டுத் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது கம்பன் மாஸ்ரருடன் புறப்பட்ட போராளிகள் தப்பிச் சென்றுள்ளார்கள். ஆனால் கம்பன்மாஸ்ரர் கருணா குழுவினரால் பிடிக்கப்பட்டு கால் கை அடித்து முறிக்கப்பட்டுச் சிறையிடப்பட்டுள்ளார். கம்பன் மாஸ்ரரைத் திருமணம் முடிக்கவிருந்தவர் பெண்போராளி காயா ஆவார். தற்போது கம்பன் மாஸ்ரருக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தை பார்த்த காயாவும் இந்தச்சுூழ்நிலைக்குள்ளிருந்து தப்பிக்க முடியாது சந்தர்ப்பவசத்தால் அடைபட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காயா தற்போது சுூழ்நிலைக்கைதியாகியிருக்கிறார்.

வந்தாறுமூலை பல்கலைக்கழக பிறமாவட்டத்து மாணவர்களை வெளியேற்றத்துக்கு முன்னணியாக கருணாவால் நியமிக்கப்பட்ட ஏகாந்தன் கல்விக்கழகப்பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் இன்று அங்கிருந்து தப்பித்துப் பிறமாவட்டங்களுக்குச் சென்றுவிட்டார்கள். நிலமைகளின் மோசத்தைப் புரிந்து கொண்டு இவர்கள் தப்பித்துள்ளார்கள்.

இன்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் மத்தியானச்செய்தியில் தளபதி பதுமன் கொலைசெய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று பதுமன் தனது குரலில் தான் தலைவரைச் சந்திக்க வளமைபோல் வருவதாகவே வன்னி வந்திருப்பதாகத் தெரிவித்ததை பீபீசி தமிழோசை ஊடாக யாவரும் கேட்டோம் என்பது உண்மை. பதுமன் கொல்லப்படவில்லை என்பதும் உண்மை. இதில் விந்தை என்னவெனில் பீபீசி தமிழோசை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும் இலங்கையில் ஒலிபரப்பரப்பாவதை மறந்து இப்படியானதொரு பொய்யான தகவலை இன்று வெளியிட்டுள்ளது. இதிலிருந்து கருணாவின் துரோகத்தனத்துக்கு எவ்வாறு மூன்றாந்தரப்பு ஊடுருவல் இல்லையென்று நம்மால் நம்ப முடியும் ?


மட்டக்களப்பு ஆஞ்சநேயா காட்வெய கடையும் புூட்டப்பட்டுள்ளது. தனது தமிழ்அலையில் பத்திரிகையில் கருணா குறிப்பிட்டுள்ளார் தான் பிறமாவட்டத்தார் யாரையும் வெளியேற்றவில்லையென்று. ஆனால் இக்கடை புூட்டப்பட்டிருப்பதை நாம் கண்ணு}டு கண்டுள்ளோம்.

ஆஞ்சநேயா காட்வெய உரிமையாளர் கடந்த இரண்டு வருடத்துக்குள் அதாவது யுத்தநிறுத்தம் நிலவிய காலப்பகுதிக்குள் கருணாவின் நிதிப்பிரிவுக்கு 10கோடிரூபா கொடுத்திருப்பதாகவும் அறியப்படுகிறது. இத்தகைய பெரும் கடைகளை , கடையுரிமையாளர்களை வெளியேற்றும்படி முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பின் வேட்பாளருமான இராஜன் சத்தியமூர்த்தியை வைத்தே கருணா இத்தகைய வெளியேற்றங்களைச் செய்யுமாறு பணித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் செய்திகள் தொடரும்....
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -

tamilwebradio.com [/b]


- Mathivathanan - 03-10-2004

vasisutha Wrote:<b>இன்னும் செய்திகள் தொடரும்....
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -

tamilwebradio.com </b>
இந்த மட்டக்களப்பு பிளவு செய்தி வந்தபோது இரண்டுநாட்கள் அப்படி ஒன்றுமில்லை.. என மறுப்புத்தெரிவித்தவையளிலை இந்த தமிழ்வெப்றேடியோவும் ஒண்டல்லோ.. அப்ப இந்த புளியந்தீவு முகுந்தன் எங்கைபோயிருந்தவர்..?
:!: :?: Idea


- vasisutha - 03-10-2004

அதெல்லாம் விடுங்கோ தாத்ஸ். வானொலி பெயர் மாற்றம் பற்றி உங்கள் கருத்து?


- Mathan - 03-10-2004

மட்டு-அம்பாறை பிரச்சனைகளுக்குள் முஸ்லிம் சமூகத்தை இழுப்பதற்கு முயற்சி: முஸ்லிம் காங்கிரஸ்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தற்போது தோன்றியிருக்கும் சில பிரச்சினைகளுக்குள் முஸ்லிம் சமூகத்தையும் இழுப்பதற்கு சில முகவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக, முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குள் முஸ்லிம்களையும் சம்பந்தப்படுத்தி, நிலைமையை மேலும் மோசமாக்க இந்த முகவர்கள் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரசின் சூரர் கவுன்சில் தலைவர், இத்தகைய சதிக்குள் தாம் சிக்கிக்கொள்ளப் போவதில்லை எனவும், முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களுடன் இணைந்து, உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கே விருப்பம் கொண்டுள்ளனர் என்றும் தெரவித்துள்ளார்;.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர்களுள் ஒருவரான பஷீர் சேகுதாவூத் தலைமையில் நேற்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே சூரர் கவுன்சில் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம்களது பாதுகாப்பையும், உரிமைகளையும் ஐனாதிபதியோ, பிரதமரோ உறுதிப்படுத்திவிட முடியாது என்றும் அங்கு குறிப்பிட்ட அவர், சிங்களப் பேரினவாதத்தைக் கக்கும் Nஐ.வி.பி.யுடனும், அதற்குத் தலைமையேற்றுள்ள ஐனாதிபதியுடனும் கூட்டமைத்துள்ள முஸ்லிம் தலைவரகள் முஸ்லிம்களது உரிமைகளைப் பெற்றுத்தரப் போவதாகக் கூறுவது கேலிக்கூத்தாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்


- Mathan - 03-10-2004

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்கு இணக்கம்


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன.

இதன்படி, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக, முகமாலை சிறீலங்காப் படைச் சோதனைச் சாவடியை 500 மீற்றர் பின்னகர்த்துவதற்கு குடாநாட்டுப் படைத்தளபதி மேஐர் ஜெனரல் சுசில் சந்திரபால இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், யுத்த சூனியப் பிரதேசத்தின் அளவு அதிகரிப்பதால், இப்பகுதிக்குள் வாக்களிப்பு நிலையத்தை அமைப்பதன் மூலம், மக்கள் அதிக சிரமங்கள் இன்றி வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தேர்தலில் வாக்களிக்க வரும் பொதுமக்களை தாமதிக்கச் செய்யும் வகையில், படையினர் சோதனை நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளமாட்டார்கள் எனவும், குடாநாட்டுப் படைத்தளதி உறுதியளித்துள்ளார்.

யாழ் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலருடன் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடலொன்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மோனகுருசாமி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு நிலையங்களை யுத்த சூனியப் பிரதேசத்தில் அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்ட போதிலும், அதற்கு ஈ.பி.டி.பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டால், தேர்தல் மோசடிகள் இடம்பெறலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர்கள் இந்தச் சந்திப்பில் தெரிவித்தனர்.

எனினும், இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பி.கிருஷ்ணானந்தலிங்கம், இந்த விவகாரம், மட்டக்களப்பு மாவட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கலல்ல என்றும், மொத்தமாக நான்கு தேர்தல் மாவட்டங்களில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படவேண்டியிருப்பதால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையாளரே உரிய முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

நன்றி - புதினம்


- nalayiny - 03-10-2004

Mathivathanan Wrote:
vasisutha Wrote:<b>இன்னும் செய்திகள் தொடரும்....
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -

tamilwebradio.com </b>
இந்த மட்டக்களப்பு பிளவு செய்தி வந்தபோது இரண்டுநாட்கள் அப்படி ஒன்றுமில்லை.. என மறுப்புத்தெரிவித்தவையளிலை இந்த தமிழ்வெப்றேடியோவும் ஒண்டல்லோ.. அப்ப இந்த புளியந்தீவு முகுந்தன் எங்கைபோயிருந்தவர்..?
:!: :?: Idea

ஆரும் கடத்திக் கொண்டு போய் வைச்சிருந்திருப்பினம் தாத்தா. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathan - 03-10-2004

nalayiny Wrote:[quote=nalayiny][quote=nalayiny]சரி பிரதேச வாதம் பிரதேச வாதம் எண்டிறியள் ஆர் அதை வளற்தது? என ஆராய்து சொல்லுங்கோ பாப்பம் .



<span style='color:red'>சரி கதையோடை கதையாய் இதை விட்டிடாதேங்கோ. நான் கேட்ட கேள்விக்கு பதில் தாங்கோ ஆரும்.

[size=14]இது என்னோட தனிப்பட்ட கருத்து. மக்களில் ஒரு பகுதியை குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தோட இணைத்து அவர்களை ஒரு தனிக் குழுவா காட்ட முயற்சி செய்வது பிரதேசவாதம். அந்த தனிக்குழுவுக்கு தனியான மொழி, பேச்சு நடை (மொழியை பேசும் விதம்), கலாச்சாரம், மதம், பழக்கவழக்கம் இதில் ஏதாவதோ இல்லை அனைத்துமோ இருக்கலாம். உதாரணத்துக்கு யாழ்ப்பாண தமிழன், வன்னி தமிழன், கொழும்பு தமிழன், மலையக தமிழன், இலங்கை தமிழன், இந்தியத் தமிழன், தீவான், வடமராச்சியான், வலிகாமத்தான், கண்டி சிங்களவன் இன்னும் நிறைய இருக்கின்றது இவை எல்லாமே பிரதேசவாதம் தான். ஒரு பொது பிரைச்சனை என்று வரும்போது அதனோட தன்மையை பொறுத்து மக்கள் எல்லோஒருமே வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவார்கள். அந்த பிரச்சனை தீர்ந்தவுடன் இல்லை அது ஓய்ந்திருக்கும் போது அவர்களுடைய தனி தன்மைகள்கள் அல்லது வேறுபாடுகள் தலை தூக்கும், இது இயல்பானதுதான். இப்போது தமிழர் சிங்களவர் சண்டை என்று நடக்கும்போது இரண்டு பக்கமும் மொழிவாரியா ஒன்றுபடுவாங்க. அவங்களுக்கு இடையிலே உள்ள வேறுபாடுகள், பிரைச்சனைகள், தனிதன்மைகள் வெளியே தெரியாது. அவர்கள் பொது எதிரிக்கு எதிரா ஒன்றுபடுவார்கள். ஆனால் அந்த பிரைச்சனை ஓயும்போது மற்ற வேறுபாடுகள் இரண்டுபக்கமும் தலைகாட்டும்.

உதாரணமாக இந்தியாவில் எத்தனையோ பிளவுகள்/பிரிவுகள் இருக்கின்றது. ஆனால் கார்கில் சண்டை வந்தபோது அவர்கள் அதை மறந்து எல்லோரும் ஒன்றாக பொது எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரா போரடினார்கள். அப்போது பிளவுகள் இல்லாமல் போகவில்லை. அது அப்படியே தான் இருந்தது. ஆனா அந்த வேறுபாடுகள் எல்லாம் கார்கில் பிரைச்சனையோட ஒப்பிடும்போது முக்கியமில்லாததாக இருந்ததால மக்கள் அதை ஒதுக்கியிருந்தார்கள். கார்கில் யுத்தம் முடிந்ததும் அவை எல்லாம் மீண்டும் தலை தூக்கிவிட்டது. இதை நாம் உலகத்தில எங்கேயும் பாக்கலாம். இந்த அளவிற்கு மோதிக்கொள்கின்ற பாகிஸ்தானும் இந்தியாவும் நாளைக்கே உலகத்து இன்னொரு கிரகத்தில இருந்து ஒரு பொது எதிரியால சண்டை வந்தால் சேர்ந்துதான் போராடுவார்கள்.

இந்த வேறுபாடுகள் எல்லாம் அதன் முக்கியத்துவத்தை பொறுத்து வெளியில் வரும். மற்றப்படி இல்லாமல் இல்லாமல் மனிதர்கள் இல்லை. எல்லோரும் சக மனிதர்கள் நமக்கு இருக்கின்ற உரிமை மற்றவர்களுக்கும் இருக்ககின்றது என்று நினைத்து சக மனிதனா நடத்தினால் இந்த பிரைச்சனை தீரும் அல்லது குறையும். அது ஆண்கள்/பெண்கள் அல்லது தமிழன்/சிங்களவன் எந்த பிரைச்சனையாக இருந்தாலும் சரி.

என்னை பொறுத்தவரை நாம் எல்லோரும் மனிதர்கள். அவர்கள் எந்த்வகையிலும் பிளவுபடுவதை நான் விரும்பவில்லை. ஆனா மற்றவர்களை சக மனிதனாக நடத்தாதபோது அடக்குமுறைக்கு உள்ளாக்கும்போது பிரிவினை ஆரம்பமாகின்றது. அதற்கு பின்பு என்ன நடக்கும் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். வேறுபாடுகள் தீவிரமாகிவிட்டால் பிரிந்துவாழ்வது தவிர்கமுடியாமல் போய்விடும். சேர்வதோ பிரிவதோ அவரவர் விருப்பம்.

கூடி வாழந்தால் கோடி நன்மை
</span>


- vasisutha - 03-10-2004

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்கு இணக்கம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன.

இதன்படி, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக, முகமாலை சிறீலங்காப் படைச் சோதனைச் சாவடியை 500 மீற்றர் பின்னகர்த்துவதற்கு குடாநாட்டுப் படைத்தளபதி மேஐர் ஜெனரல் சுசில் சந்திரபால இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், யுத்த சூனியப் பிரதேசத்தின் அளவு அதிகரிப்பதால், இப்பகுதிக்குள் வாக்களிப்பு நிலையத்தை அமைப்பதன் மூலம், மக்கள் அதிக சிரமங்கள் இன்றி வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தேர்தலில் வாக்களிக்க வரும் பொதுமக்களை தாமதிக்கச் செய்யும் வகையில், படையினர் சோதனை நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளமாட்டார்கள் எனவும், குடாநாட்டுப் படைத்தளதி உறுதியளித்துள்ளார்.

யாழ் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலருடன் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடலொன்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மோனகுருசாமி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு நிலையங்களை யுத்த சூனியப் பிரதேசத்தில் அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்ட போதிலும், அதற்கு ஈ.பி.டி.பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டால், தேர்தல் மோசடிகள் இடம்பெறலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர்கள் இந்தச் சந்திப்பில் தெரிவித்தனர்.

எனினும், இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பி.கிருஷ்ணானந்தலிங்கம், இந்த விவகாரம், மட்டக்களப்பு மாவட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கலல்ல என்றும், மொத்தமாக நான்கு தேர்தல் மாவட்டங்களில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படவேண்டியிருப்பதால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையாளரே உரிய முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.



- Paranee - 03-10-2004

ம் வசி ஏனப்பா இந்த வேலை


- shanthy - 03-10-2004

nalayiny Wrote:
Mathivathanan Wrote:
vasisutha Wrote:<b>இன்னும் செய்திகள் தொடரும்....
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -

tamilwebradio.com </b>
இந்த மட்டக்களப்பு பிளவு செய்தி வந்தபோது இரண்டுநாட்கள் அப்படி ஒன்றுமில்லை.. என மறுப்புத்தெரிவித்தவையளிலை இந்த தமிழ்வெப்றேடியோவும் ஒண்டல்லோ.. அப்ப இந்த புளியந்தீவு முகுந்தன் எங்கைபோயிருந்தவர்..?
:!: :?: Idea

ஆரும் கடத்திக் கொண்டு போய் வைச்சிருந்திருப்பினம் தாத்தா. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: Arrow


- anpagam - 03-10-2004

Quote:80க்கு முன் குடாநாட்டில் வீட்டைச்சுற்றி எழுப்பிய ஏழு அடி உயர கிடுகு வேலிகள் உலகத்திலிருந்து தம்மை தனித்துவப்படுத்தும் என எண்ணி தனிமைப்பட்டுப்போன சந்ததியின் மிச்சசொச்சங்கள்தான் இன்னும்.......இங்கும்........ இணையத்திலும்............
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :mrgreen: Idea


- kuruvikal - 03-10-2004

கருணாவின் ஆயுதபலமும் போராளிகள் பலமும்...!

2000 பெண் போராளிகளும் 3000 ஆண் போராளிகளும்...!

[scroll:0f2ab5718e]<img src='http://news.bbc.co.uk/media/images/39937000/jpg/_39937843_leader.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39937000/jpg/_39937833_troops.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39937000/jpg/_39937847_training.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39938000/jpg/_39938035_guns.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39937000/jpg/_39937831_drink.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39937000/jpg/_39937845_talk.jpg' border='0' alt='user posted image'>...BBC.com[/scroll:0f2ab5718e]


- kuruvikal - 03-10-2004

கருணா பற்றி ஈழநாதத்தின் பார்வை....!

கருணா தமிழீழத் தேசியத் தலைவருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். நம்பிக்கைக்கும் பாத்திரமாகவும் இருந்தவர். அதுமட்டுமல்ல தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் இருந்து ஏனைய தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோரைவிட அதிகபட்ச அதிகாரங்களையும் பெற்றுக் கொண்டிருந்தவர். இவ்வாறாக தலைமையுடன் நெருக்கமான உறவையும், தொடர்பையும் கொண்டிருந்த கருணா கிழக்கிற்கு அதிக பிரதிநிதித்துவத்தை ஏன் தலைவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவில்லை.

அதுமட்டுமல்ல, அவ்வாறு பேசித்தீர்வு காணமுடியாது என்ற முடிவிற்கு கருணா வருவதற்கு இத்தகைய கோரிக்கைகள் எதுவும் இதற்கு முன்னர் கருணாவினால் முன்வைக்கப்பட்டு தலைவரினால் நிராகரிக்கப்ட்டதுண்டா? அன்றி வேறு யாராவது இத்தகைய கோரிக்கையை முன்வைத்த போது அது தேசியத் தலைவரினால் நிராகரிக்கப்பட்டதாகவோ அன்றி கருத்திற் கொள்ளப்படாமலோ விடப்பட்டது என கருணாவிற்கு ஏதாவது தகவல் தான் கிடைத்ததுண்டா?

சரி தலைவருடன் நேரடியாக தனது இக்கோரிக்கைகளை முன்வைக்க விரும்பவில்லையென எண்ணியிருப்பின் ஏனைய தளபதிகளையாவது அனுப்பி தலைவரிடம் இக்கோரிக்கையை முன்வைத்திருக்கலாமல்லவா? தற்பொழுது மட்டு-அம்பாறை மக்களின் உணர்வுகளையே தாம் பிரதிபலிப்பதாகத் கூறும் கருணா, மக்களின் உணர்வுகள் இவ்வாறிருக்கின்றன அதற்குத் தீர்வு காணப்படுதல் வேண்டும் என தனது தளபதிகளிடம் விடயத்ததைக் கூறியாவது தலைவரிடம் அனுப்பி வைத்திருக்கலாமல்லவா?

செய்தி ஊடகங்கள் மூலம் தனித்துச் செயற்படப் போவதாக அறிவிப்புச் செய்துவிட்டு, தனது துரோகத்தனமான செயற்பாட்டிற்கு பிரதேச வாதத்தைக் கிளப்புவதும், மக்களை பகடைக் காய்களாவும் போராளிகளையும் பலிக்கடாக்கள் ஆக்கும் எந்த வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதும் எப்படி ஏற்புடையதாக இருக்க முடியும்? இது கருணா விடுதலைப் புலிகளுக்கு செய்த துரோகமாக மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகமாகக் கொள்ளாது வேறு எவ்வாறு கொள்ள முடியும்?

இது ஒருபுறம் இருக்க அண்மைக் காலத்தில் தலைவர் பிரபாகரனால் அழைக்கப்பட்டும் வன்னிக்குச் செல்ல கருணா தயாராக இருக்கவில்லை. இதனை அவரே ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். தான் வன்னிக்குச் சென்றிருப்பின் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்புகின்றார். இதில் உள்ள முக்கியமான வினா என்னவெனில் அவர் அத்தகைய முடிவிற்கோ சந்தேகம் கொள்வதற்கோ காரணம் என்ன?

அதாவது தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தனக்கு ஏற்கனவே முரண்பாடு இருந்ததாக அவரே கூறவில்லை. தலைவர் பிரபாகரன் இவரின் செயற்பாடுகள் எவற்றிக்கும் முட்டுக்கட்டை போடவும் இல்லை. அவரை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிப்புக்கள் எதையும் விடுக்கவுமில்லை. அவரின் பொறுப்புக்கள், பதவிகள் எதையும் பறிக்கவும் இல்லை. அதுமட்டுமல்ல பேச்சுவார்த்தைகளில் அவர் தொடர்ச்சியாக கலந்துகொள்ள தடையும் விதிக்கவில்லை.

அவ்வாறிருந்தும் கருணா ஏன் தலைவர் பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று வன்னி செல்லவில்லை? வன்னி சென்றால் தாம் தடுத்து வைக்கப்படுவோம் என்ற சந்தேகம் ஏன்வந்தது? அதாவது முரண்பாடோ அன்றிக் குற்றங்களோ அற்றவராக இருப்பின் அவர் ஏன் இத்தகைய சந்தேகம் கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது?

மாறாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினால் கருணா அமைப்பிலிருந்து நீக்கப்படும் வரை அவர் மீது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டோ அன்றி தனிப்பட்ட நடத்தைகள் தொடர்பான குற்றச்சாட்டோ சுமத்தப்படவில்லை. அவர் தமிழீழ தேசியத் தலைவருக்கும், மக்களுக்கும் துரோகம் இழைத்தாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கருணா பிரிந்து செல்வது தொடர்பான செயற்பாட்டின் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது கருணா மீதான நடவடிக்கை அண்மைய அவரின் செயற்பாட்டின் விளைவு மட்டுமே.

ஆகையினால், கருணா மடியில் கனமில்லை எனின் தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்திருக்க முடியும். தனது கோரிக்கையை முன்வைத்திருக்க முடியும். தமது மக்களின் அபிலாசைகள் இவை என கூறியிருக்க முடியும்.

ஆனால், கருணா அவ்வாறு நடந்து கொள்ளாது இயக்க விதிகளுக்கும், ஒழுங்குகளுக்கும் மாறுபட்ட விதத்தில் நடந்து கொண்டுள்ளார். அர்த்தமற்றதும், உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதோடு பொய்யான தகவல்களையும் வெளியிடுபவராக உள்ளார். தனது தனிப்பட்ட ரீதியிலான தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு மக்களைச் சாட்டாக்கிக் கொள்ள முனைகிறார்.

கருணாவின் இச்செயலானது தமிழ் மக்களுக்குப் பெரும் வேதனையையும், துயரத்தையும் அளிப்பதாகியுள்ளது. சிங்களப் பேரினவாத சக்திகள் ஒன்றுதிரண்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என முனைப்புடன் தேர்தலில் இறங்கியுள்ள நிலையில், கருணாவின் நடவடிக்கையானது தமிழ் மக்கள் இடையில் பிளவுகளையும் அவநம்பிக்கைகளையும், தோற்றிவிப்பதாகவும் மாறியுள்ளது.

தமிழ் மக்கள் தமது தேசியம் பற்றிய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பினும்கூட, கருணாவின் நடவடிக்கை தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கும் ஒன்றே ஆகும்.



நன்றி தமிழ்நாதம்...!


- Paranee - 03-10-2004

மடியில் கனமிருந்தமையால்தானே மடியைப்பிடிச்சுக்கொண்டே இருக்கின்றார்


- Mathan - 03-10-2004

Sangaree Says LTTE Students Attacked His Vehicle
Bandula Jayasekara in Colombo, SLT 11.20 A.M

Wednesday 11 March. TULF leader V. Anandasangaree says that student group of the LTTE had carried out the attack on a vehicle being used in the election campaign by him yesterday. Anandasangaree who is contesting as an independent candidate in Jaffna said the vehicle was forcefully stopped and Propaganda leaflets and posters found inside were destroyed by a group of people near the Pameshwaran junction in Jaffna. He said " The attack was carried out by unscrupulous university students who belongs to a students group of the LTTE. The TULF leader alleged that the students had also assaulted two of his party members.
Anandasangaree also said that the LTTE had a free hand in the North and were engaged in a campaign of intimidation and violence to manipulate election results in the area. According to him the LTTE had procured 48 motor cycles and 2 jeeps all of which were umarked. He pointed out that the LTTE is using them to harass candidates other than the TNA. The TULF leader added that though complaints had been made to the Jaffna police there was little action the police could take to stop the LTTE from harassing the candidates.

Thanx: The Academic


- Mathan - 03-10-2004

Sri Lanka peace monitors halt patrols in areas held by breakaway rebel

Monitors of a ceasefire between Sri Lankan government forces and Tamil Tiger rebels have halted their patrols in areas held by a renegade rebel faction.

The Norwegian-led Sri Lanka Monitoring Mission says it has stopped routine patrols in the east of the island where the renegade Tamil Tiger leader, V Muralitharan, better known as Karuna, holds sway.

However, a spokeswoman says they are keeping lines open to all LTTE (Liberation Tigers of Tamil Eelam) offices in all the districts of the northeast.

The AFP news agency says Karuna broke away from the LTTE last week over plans by its leadership to plunge Sri Lanka back into civil war.

Karuna has refused to recognise the monitoring mission, but has vowed to abide by the ceasefire arranged by Norway between the main Tiger group and the Colombo government in February 2002.

Requests from Karuna to the Sri Lankan government for a fresh truce accord with him have been turned down.

Government forces have been placed on alert in the eastern regions amid fears of factional war, but Karuna says he has no intention of sparking such a conflict.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) are fighting for self-rule for Sri Lanka's Tamil minority.

The conflict has claimed more than 60,000 lives since 1972.

Thanx: RADIO AUSTRALIA NEWS