Yarl Forum
என் நாட்குறிப்பில்கிறுக்கியது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என் நாட்குறிப்பில்கிறுக்கியது (/showthread.php?tid=7839)

Pages: 1 2 3 4 5 6 7


- anpagam - 11-09-2003

அர்ரா அர்ரா <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--><img src='http://pommejade.free.fr/dance/s1.jpg' border='0' alt='user posted image'>


- Paranee - 11-09-2003

வணக்கம்
ஆதிபன் மனது என் கருத்தால் நொந்திருக்காது !
கவிதை அருமை. அதனுடன் பொருந்தும் படமும் அழகு !

என்ன ஓரே முகத்தை பார்த்து பார்த்து வெறுத்துவிட்டது. கொஞ்சம் வித்தியாசமாக போடட்டுமே என்றுதான் அப்படி எழுதினேன்.

AJeevan Wrote:
Karavai Paranee Wrote:அட்றா அட்றா
புதிதாய் ஒரு காதல் கவிஞனா !
வாழ்த்துக்கள் நண்பா!
வாருங்கள்
தாருங்கள் அத்தனையும் அமிர்தம்தான்..

குறிப்பு
எனக்கு பிடிக்காத ஒரு முகம் ஜோதிகா......அதைத்ததான் போடவேண்டுமா ?
படத்தை கையால் மூடிக் கொண்டு கவிதையை ரசித்தால் போச்சு.................
ஜோதிகா போல் ஒருவரை LightoN காதலியிருந்தால் வருத்தப்படுவார்?
மனசை நோகடிப்பதா..............
சோகங்களைக் கொட்டியாவது
வேதனை தீர்த்துக் கொள்ளட்டும்.
சிலவேளை
[Image: BIRDc_cardinal_2001.jpg]
புறா மூலம் துாதுவிட்டது போல
யாழ் களத்துாடாக துாதா ஆதித்யன்?



- Paranee - 11-09-2003

பெண் என்றாலே உடலிச்சைக்கும் ஓரிரு சுகத்திற்கும் என உள்மனதில் அடிப்படிந்த அழுக்குடன் கருத்தெழுதும் ஓர் சில நண்பர்களிற்காய்

இங்கு கவி எழுதும் ஆதிபன் வார்த்தைகளில் விரசம் உண்டோ ?

ஆண்டவரும் பெண்டிரை சரணடைந்தான்
ஆள்பவனும் பெண்டிர் தான் தன் வசம் என்றால்
ஆள நினைப்பவனும் பெண்டிரைத்தான் தேடுகின்றாள்
இச்சைக்காக இல்லை இல்லறத்திற்காய்
இயந்திரவாழ்வதில் ஓர் பாதிஇன்ப வாழ்க்கை காதல்
உடலிச்சை மடடுமே உள்ளமெல்லாம் நிரப்பிக்கொண்டு
காதல் புழுப்பிடித்த கத்தரிக்காய் என்றெண்ணி
தான் கண்ட சூத்தைகளை பரப்புவது நியாயமா ?
உள்ளத்தில் உள்ளதுதூன் வார்த்தைகள் வடித்துவைக்கும்
உள்சுகம் கண்டவன்தான் சூத்தைகள் அறிந்து நிற்பான்
பார்வைக்கு எம்மவர்க்கு எல்லாமே பளிங்குதான்
பழகியவர்க்குத்தான் சூத்தை எது நல்லதெது வேறுபாடு உணரமுடியும்

ஆதிபன் கவிதைகளில் அடித்துச்சொல்கின்றேன்
காமம் இல்லை காதல் உண்டு
உடல்மீது இல்லை உள்ளத்தின் மீது
தொட்டுக்கொள்ள இல்லை தோளோடு சேர்த்துக்கொள்ள
அது காதல்

கத்தரிக்காய் சூத்தைதான் காதல் என்றால்
ஆண் பெண் உறவென்று
நட்பென்று நாம் இருவர் என்று
ஒன்றாக இருப்பதன் அர்த்தம்தான் என்னவோ ?
கவர்ச்சிகளை அளக்கும் உள்ளம்
கரையறியா உள்ளங்களை வெறுப்பதுமேனோ ?
சாக்கடை வாசம் கண்ட கூழைக்கடா
பழை எது பால் எது பிரித்தறியுமோ ?


- Paranee - 11-09-2003

இடிப்பது கோவில்
படிப்பதோ தேவாரம்
எங்கேயோ கேட்டதுண்டு . .

kuruvikal Wrote:<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39156000/jpg/_39156294_queue_body203.jpg' border='0' alt='user posted image'>
SARS VICTIMS
<img src='http://www.eczematreatmentinfo.com/images/exima.gif' border='0' alt='user posted image'>
EXIMA

கத்தரிக்காய் முத்திவிட்டது...
பழுக்கமுதல் பறியுங்கள்
முத்தின கத்தரிக்காயே
கறிக்கும் உதவாது....!

காளையே
கன்னி என்று
மனதால் அலையாதே
காலம் பொன்னானது...!
கற்றுத்தேறு
ஆனால்
கவலை கொள்ளாதே...!
காதல் வசந்தமானால்
பின்
நனி குளிரும் காத்திருக்கு
இயற்கை சொல்லும் பாடம் படி
மனிதனாய் வாழ்வாய்....!
மனத்தால் திடமாவாய்...!
ஆண் பெண் காதல் என்பது
கத்தரிக்காய் போன்றது...!

உன் காதலிக்கு
'SARS' என்றால்
அவள் சுவாசம்
உன் உயிர் எடுக்கும்...!
உன் காதலிக்கு
'எக்சிமா' (Exima) என்றால்
அவள் அருகிருப்புக் கூட
அருவருப்பாகும்...!
பெண் எல்லாம்
ஜோதிகாவும் அல்ல
ஜோதிகாவும்
இலட்சியப் பெண்ணல்ல...!

கனவே வாழ்வானால்
பித்தலாட்டக் காதலும் வாழுமோ..?!
கனவில் வாழாதே மானுடா
மனிதம் அழைக்கிறது
மனிதத்திற்காய் சேவை செய்ய...!
விழி.. எழுந்திரு
உணர்வு கொள்...!
கணமேதும் நில்லாது
உயரிய இலட்சியத்திற்காய் பயணி...!
இளமையை தொலைத்து
முதுமையில் வாடாதே
முதுமையும் வாழ்வே....!
குழந்தையும்
முதுமையும் மகிழ்வாக
கன்னி துணை தேவையில்லை...!
மானுடம் போற்றும்
உன் உயரிய இலட்சியம் வென்றால்
ஜென்மம் என்ன
அகிலமே உன்னை அழிவுவரை
உச்சரிக்கும்....!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:



- kuruvikal - 11-09-2003

காதல் என்று
காமம் அளக்கும்
இளைஞர் கூட்டமல்ல நாம்...!
காதல்... புனிதம்... தூய்மை
வாயோடு... வார்த்தையோடு
எழுத்தோடு... உரையோடு....
வேண்டாம்
குப்பையில் போடு....!

போலியாய் பெண்ணைப் புகழ்வதும்-பின்
அவளின் கனவுகள் சிதைப்பதும்
காலம் காலமாய் காளையர் சிலரின் கூத்து....!
கூத்துக்கு குறுக்கே நின்று
உண்மை பகன்றால்
எம்மில் சூத்தை பிடிக்கின்றான்...!
நாமாக சூத்தை கண்டதும் இல்லை
சாக்கடை இறங்கியதும் இல்லை...!
கண்முன்னே நடப்பது
அக்கிரமம்
அதைச் சொல்ல
முகம் காணா எம்மில்
கறை பிடிக்கிறான்....!
சரி நாமும் கண்ணதாசன் வழியென்று
அனுபவத்தால் கருத்துரைத்தோம்- என்று
கருத்தை பார்ப்பீரோ
அன்றில்
'இவன் யார் காவாலி
எமக்குச் சொல்ல'-என்று
கூத்துத் தொடர்வீரோ.....?!

நடத்துங்கள் நாடகங்கள்
ரசிகர்கள் விழிக்கும் மட்டும்
உங்கள் காட்டில் மழைதான்....!

அன்று காளையர் மட்டும் செய்தது
இன்று கன்னியரும் கைகோத்து...
வயது பன்னிரண்டு
'பாய்' 'பிரண்டாம்'
உண்மைக் காதலின் தன்மையறியா
வயதில் காதலென்று....?????!
பள்ளிப் பாடத்தில்
மதிப்பெண்ணைக் காணோம்..ஆனால்
கருத்தடை மாத்திரைகளுக்கு
மதிப்பளிக்குது....!

சிறகடிக்கும் சிட்டுக்கூட
காதல் கொள்ளும்
காலத்தே அன்றி
கருவிலல்ல.....!

ஒன்று சொல்கின்றோம்
ஏமாறும் கன்னியருக்காய்
கணப்பொழுதில்
அழகு வார்த்தையால்
கள்ளமுரைக்க எமக்குத் தெரியும்
ஆனால்
நிஜம் உணரும் வேளை
நாம் தலைகுனியத் தயார் இல்லை....!
நாம் பெண்ணை
எதுவுமாய்க் கண்டதில்லை
ஆனால்
மனிதனாய்க் காண்கிறோம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- aathipan - 11-09-2003

<img src='http://homepage.tinet.ie/~cupiddating/Images/girlwithflowers.jpg' border='0' alt='user posted image'>

இத்தனை காலம் தேடினேன்
இதுவரை என் கண்ணில் படாமல்
எங்கிருந்தாய்....

புூவுக்குள் புூவாக
மறைந்து இருந்தாயா?
இல்லை
வானத்து நட்சத்திரமாக வாழ்ந்திருந்தாயா?


- aathipan - 11-09-2003

<img src='http://www.actualscientology.net/img/photo00.jpg' border='0' alt='user posted image'>

இன்று வருவாய் இன்று வருவாய்
என்று நான் தினமும் உன் நினைவோடு காத்திருக்கிறேன்

என்று வாருவாய் நீ........


- aathipan - 11-09-2003

<img src='http://shankarv.com/homepage/Kopuram.jpg' border='0' alt='user posted image'>

என் இதயத்திலே
கோவில் ஒன்று கட்டிவைத்தேன்

தெய்வமாக நீ வந்தாய்

தினமும் அங்கு திருவிழா

உன்பெயர் தான் நான் சொல்லும் மந்திரங்கள்


- aathipan - 11-09-2003

<img src='http://www.peersupport.com/Images/sad_girl.jpg' border='0' alt='user posted image'>

உன்னை ஒருநாள் பார்க்கவில்லை என்றால்
அன்று முழுவதும் நான்
சுவாசிக்கக் கஸ்டப்படுகிறேன்


- kuruvikal - 11-09-2003

Good lesson... keep it up....Consult with a doctor...symptoms appearing to be AIDS...Adults only
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- aathipan - 11-09-2003

<img src='http://www.millenniumgreen.usda.gov/images/garden.jpg' border='0' alt='user posted image'>

உன் நினைவுகள்
என்றும் வசந்தம்...


- shanthy - 11-09-2003

kuruvikal Wrote:காதல் என்று
காமம் அளக்கும்
இளைஞர் கூட்டமல்ல நாம்...!
காதல்... புனிதம்... தூய்மை
வாயோடு... வார்த்தையோடு
எழுத்தோடு... உரையோடு....
வேண்டாம்
குப்பையில் போடு....!

போலியாய் பெண்ணைப் புகழ்வதும்-பின்
அவளின் கனவுகள் சிதைப்பதும்
காலம் காலமாய் காளையர் சிலரின் கூத்து....!
கூத்துக்கு குறுக்கே நின்று
உண்மை பகன்றால்
எம்மில் சூத்தை பிடிக்கின்றான்...!
நாமாக சூத்தை கண்டதும் இல்லை
சாக்கடை இறங்கியதும் இல்லை...!
கண்முன்னே நடப்பது
அக்கிரமம்
அதைச் சொல்ல
முகம் காணா எம்மில்
கறை பிடிக்கிறான்....!
சரி நாமும் கண்ணதாசன் வழியென்று
அனுபவத்தால் கருத்துரைத்தோம்- என்று
கருத்தை பார்ப்பீரோ
அன்றில்
'இவன் யார் காவாலி
எமக்குச் சொல்ல'-என்று
கூத்துத் தொடர்வீரோ.....?!

நடத்துங்கள் நாடகங்கள்
ரசிகர்கள் விழிக்கும் மட்டும்
உங்கள் காட்டில் மழைதான்....!

அன்று காளையர் மட்டும் செய்தது
இன்று கன்னியரும் கைகோத்து...
வயது பன்னிரண்டு
'பாய்' 'பிரண்டாம்'
உண்மைக் காதலின் தன்மையறியா
வயதில் காதலென்று....?????!
பள்ளிப் பாடத்தில்
மதிப்பெண்ணைக் காணோம்..ஆனால்
கருத்தடை மாத்திரைகளுக்கு
மதிப்பளிக்குது....!

சிறகடிக்கும் சிட்டுக்கூட
காதல் கொள்ளும்
காலத்தே அன்றி
கருவிலல்ல.....!

ஒன்று சொல்கின்றோம்
ஏமாறும் கன்னியருக்காய்
கணப்பொழுதில்
அழகு வார்த்தையால்
கள்ளமுரைக்க எமக்குத் தெரியும்
ஆனால்
நிஜம் உணரும் வேளை
நாம் தலைகுனியத் தயார் இல்லை....!
நாம் பெண்ணை
எதுவுமாய்க் கண்டதில்லை
ஆனால்
மனிதனாய்க் காண்கிறோம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

பூவென்றெமைப் புழுகியதும்
சித்தம் கலங்கியதும்
புலமைக்கவி படித்ததும் - உம்
பாக்களையெல்லாம்
மென்மை , வெண்மை , அழகு
அது இதுவென்றெல்லாம்
பெண்ணைப் பாடியே
பொழுதழித்த புலவப்பெருந்தகைகள்
வம்சம் வந்த புலவரே !

அடபித்தர்களே !
இல்லாததையெல்லாம் இருப்பதாய்
மாயம்காட்டி ஏமாந்தது
உங்கள் குறை.

காதலின் பொருளுணராப் பித்தர்கள்
நாவழுக காதலே செத்துப்போ.
இக்காமுகர்கள் கண்களிலே
காணுவதிலும் நீ
சாவது மேலென்பேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Idea


- AJeevan - 11-09-2003

aathipan Wrote:<img src='http://homepage.tinet.ie/~cupiddating/Images/girlwithflowers.jpg' border='0' alt='user posted image'>

இத்தனை காலம் தேடினேன்
இதுவரை என் கண்ணில் படாமல்
எங்கிருந்தாய்....

புூவுக்குள் புூவாக
மறைந்து இருந்தாயா?
இல்லை
வானத்து நட்சத்திரமாக வாழ்ந்திருந்தாயா?
[Image: heart.jpg]
உனக்குள்ளே நானிருந்தேன்
உனக்குத்தான் தெரியவில்லை
உன் இதயமாய்


- AJeevan - 11-09-2003

aathipan Wrote:<img src='http://www.flowersdirectory.co.uk/products/srr.jpg' border='0' alt='user posted image'>

காதலில் தோற்றவனானாலும்
நீ வென்றவன் ஆகிறாய் வாழ்வில்

காதலே செய்யாது வென்றவனானாலும்
நீ தோற்றவன் ஆகிறாய் வாழ்வில்

அபாரம் ஆதீபன்,
காதல் குறள் கவிஞனே - உன்
கவிதையில் ஈரம் நிரம்பவே
இருக்கிறது.................
<img src='http://perso.club-internet.fr/jfmarche/Logo.gif' border='0' alt='user posted image'>
அதனால்தான் - பலர்
நனைகிறார்கள் - சிலர்
ஜலதோசத்தில்
தும்முகிறார்கள்..............

அஜீவன்


- sOliyAn - 11-10-2003

நனைந்தால்தானே தும்மலாம்? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- aathipan - 11-10-2003

<img src='http://www1.fctv.ne.jp/~masala/bindi7.jpg' border='0' alt='user posted image'>

என்
ஆயுள்
ஒருநாளில் முடிந்து போனாலும்
கவலையில்லை
உன் நெற்றியில்
ஒரே ஒரு நாள் பொட்டாக
ஒட்டிக்கொள்ள
அனுமதி தருவாயா?


- aathipan - 11-10-2003

<img src='http://www.state.il.us/agency/iac/Guidelines/Artstour01/Images/dance/Dpri.jpg' border='0' alt='user posted image'>

உன் கால் கொலுசிலிருந்து வீழ்ந்த
ஒரு வெள்ளி மணி
என்; பொக்கிசமான கதை
உனக்குத்தெரியுமா?


- aathipan - 11-10-2003

<img src='http://www.archanajoglekar.com/tai_pics/bansoori_small.gif' border='0' alt='user posted image'>

உன் கூந்தல்விட்டு உதிர்நத
புூக்கள் எல்லாம்

என் பாடப்புத்தகத்தில் பத்திரமாக....


- aathipan - 11-10-2003

<img src='http://www.thisisbradford.co.uk/escene/images/kajol.jpg' border='0' alt='user posted image'>

நீ இன்று எங்கிருக்கிறாயோ தெரியாது
ஆனாலும்
என் இதயத்தில்
இன்னும் இருக்கிறாய்

பள்ளி செல்லும் நாட்களில்
நீ பார்த்துவிட்டு பாராததுபோல்
செல்வாய்...

அப்போதே எனக்கு காதல் என்று சொல்லலாம்..

ஒரு நாள் பள்ளிவிட்டு வரும்போது
பாதி வழியில் துப்பாக்கிச்சத்தம்
அது உன்வீட்டுப்பக்கம் தான்..
பதறி அடித்து ஓடிவந்தேன்..
நல்ல காலம் யாருக்கும் எதுவும் இல்லை...
ஆனால்
கூலிப்படைகளிடம் நன்றாக வாங்கிக்கொண்டேன்..
இன்றும் நான் குனிந்து நிமிர வலிக்கிறது..
அந்த வலியுடன் உன்நினைவும் சேர்ந்திருக்கிறது..



இன்னும் வரும்


- aathipan - 11-10-2003

<img src='http://www.tamilstar.com/profile/actress/kajol/images/kajol.jpg' border='0' alt='user posted image'>

டீயுூசனில் நீ என்றும் முதல் வரிசையில்
நான் என்றும் இரண்டு வரிசை பின்னால்த்தான்..
பதில் தெரியாமல் நான் பரிதாபமாய்
எழுந்து நிற்பதை நீ பார்த்துவிடக்ககூடதே என்று..
ஆனாலும் நீ கெட்டிக்காரி
ஆசிரியர் என்னிடம் கேள்வி கேட்கவும்
சொல்லிவைத்தது போல் திரும்பிவிடுவாய்....
உன்முகம் பார்த்ததும் எல்லாமே மறந்துவிடும்
தலையைக்குனிந்து கொண்டு நான்நிற்பேன்..
ஆசிரியரின் வசைமட்டும் காதில் கேட்கும்

அதன்பிறகு கொஞ்சம் பிரிவு...