![]() |
|
இலங்கை தமிழ் ( அல்லது யாழ்ப்பாண தமிழ் ?) மட்டுமே தூய தமிழா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: இலங்கை தமிழ் ( அல்லது யாழ்ப்பாண தமிழ் ?) மட்டுமே தூய தமிழா? (/showthread.php?tid=7549) |
- adipadda_tamilan - 01-30-2004 :evil: எத்தனை படையெடுப்பு நடந்திருந்தாலும் இந்தியர்கள் கலந்து பவிப்பது ஆங்கிலம்தானே. ஏன் எமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர் ஆங்கிலத்துக்குப் பதிலா சுத்தத் தமிழா பேசினார்கள் எங்களுடன் அல்லது அவர்களின் தாய் மொழி தமிழா - அப்ப ஏன் நாம் நல்ல தமிழ் பேசுகிறோம் அவர்களைவிட?
- Paranee - 01-30-2004 இந்திய தமிழர்களிற்கு எமது தமிழை விளங்கிக்கொள்வார்கள். நாம் ஆறுதலாக கதைப்போமானால். நாம்தானே எல்லாவற்றிலும் அவசரப்படுபவர்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்கு புரிவதில்லை. நான் எத்தனையோ இந்திய தமிழர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேலை செய்துகொண்டிருக்கின்றேன். அவர்கள், நாம் ஒரு நிமிடத்தில் கதைத்து முடிப்பதை ஜந்து நிமிடம் எடுத்து கதைப்பார்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்பு புரிந்துகொள்வது குறைவாக இருக்கின்றதேயொழிய எமது தமிழிற்கும் அவர்களது தமிழிற்கும் வித்தியாசம் குறைவுதான் முக்கியமானது ஆங்கில கலப்பு நாம் ஆங்கிலம் கலந்து கதைப்பது குறைவு. தெரிந்தால்தானே கலப்பதற்கு. அவர்களிற்கு பாடசாலைகளிலும் வீடுகளிலும் ஆங்கிலம் கதைப்பது என்பது சர்வசாதாரணம் அதனால் அவர்கள் தமிழ் கதைக்கும்போது தினமும் உபயோகப்படுத்தும் சொற்களிற்கு ஆங்கில சொற்களையே பாவிக்கின்றார்கள். - Guest - 01-30-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> vasisutha Wrote:ஆம், இல்லை. :-) உங்கள் எண்ணங்களையும் கூறுங்கள் அறிந்து கொள்ள ஆவலாயிருக்கின்றோம். கருத்து சுதந்திரத்தை பயன்படுத்துங்கள். நன்றே அதுவும் இன்றே எழுதுவீர்கள் என நம்புகின்றேன். - Guest - 01-30-2004 யாழ்/yarl Wrote:எமது தமிழில் சில சங்ககாலத்து தமிழ் சொற்கள் இன்றைக்கும் வழக்கம் வழக்கமாக கலந்து இன்றளவும் காணாமல் போகாது நிலைத்து நிற்கிறது. உண்மை. உங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன். Mathivathanan Wrote:எங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அவங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அதுதான் வித்தியாசமேதவிர.. ஆனால் தாத்தா அது சங்ககால தமிழ் அல்ல சமஸ்கிரிதம் என்று சொல்கின்றார். இதற்கு உங்கள் கருத்து என்ன யாழ்? மற்றயவர்களும் சொல்லுங்கள். - Guest - 01-30-2004 anpagam Wrote:[quote=Mathivathanan]]எங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அவங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அதுதான் வித்தியாசமேதவிர.. எல்லாருக்கும் சமஸ்கிரிதம்தான் முதுமொழி.. அவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வந்தாங்கள்.. அதேமாதிரி இவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வரப்பார்க்கிறாங்கள்.. கண்ணுக்குத் தெரியிற சமஸ்கிரித எழுத்து உள்ளதுகள்தான் இவங்களுக்கு சமஸ்கிரிதம்.. தெரியாமல் இருக்கிறதெல்லாம் தமிழ் எண்ட நினைப்பு..நல்ல கருத்து சிந்திக்கவேண்டியது...... அன்பகம் அவர்களே, அப்படியானால் என்ற தாத்தாவின் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? - Guest - 01-30-2004 [quote=adipadda_tamilan]இந்தியர்கள் பேசுவது சரியான தமிழ் இல்லை என்பது உண்மை. ஆனால் அவர்கள் பேசும் சில சொற்கள் உண்மையில் தூய பழந் தமிழ். எமது தமிழ் கலப்பானது என்பதில் பிழையில்லை ஆனால் நாம் ஆங்கிலம் கலந்து பேசவில்லை - இதனாலும் எமது தமிழ் அவர்களைவிட நல்லது என்று சொல்லக்கூடியதாக உள்ளது. ஆனால் நாம் பேசும் தமிழ் யாவரிலும் உயர்ந்தது என்பதை பெருமையுடம் கூறுகின்றேன். ஆங்கில கலப்பு குறைவு என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் மற்ற மொழி கலப்பு இருக்கின்றது என்று சொல்கிறீர்கள். அப்படியானால் என் நமது மொழி உயர்ந்தது? ஆங்கில கலப்பு இருந்தால் தான் கூடாது. தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் மற்ற மொழி ஒரு பிரச்சனையே இல்லை. ஆகவே .... உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். - Mathan - 01-30-2004 [quote=adipadda_tamilan]இந்தியர்கள் பேசுவது சரியான தமிழ் இல்லை என்பது உண்மை. ஆனால் அவர்கள் பேசும் சில சொற்கள் உண்மையில் தூய பழந் தமிழ். எமது தமிழ் கலப்பானது என்பதில் பிழையில்லை ஆனால் நாம் ஆங்கிலம் கலந்து பேசவில்லை - இதனாலும் எமது தமிழ் அவர்களைவிட நல்லது என்று சொல்லக்கூடியதாக உள்ளது. ஏன் இந்தியத் தமிழர்கள் நாம் கதைப்பதை விளங்க முடியமல் இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஒரு கருத்துக்கு நிரைய சொற்கள் உண்டு அனால் இந்தியர்களுக்கு ஒரு கருத்துக்கு ஒரு சொல்தான் தெரிகிறது - இங்குதான் நாம் முன்னிற்கிறோம்(ஏனெனில் எமக்கு தமிழ் எப்படி கதைத்தாலும் விளங்கக்கூடியதாக உள்ளது). உதாரணத்திற்கு நான் மேல் எழுதியிருக்கும் கதைப்ப்துஇ விளங்குவது என்பதெல்லாம் அவர்களுக்கு ஏதோ ஏலியன் என்ன பொஸ் அவங்கள சொல்லீட்டு நீங்க இங்லிஸ் மிக்ஸ் பண்றீங்க? ஏலியன் எப்ப பொஸ் தமிழ் ஆச்சு? - Mathivathanan - 01-30-2004 [quote=adipadda_tamilan]ஆனால் நாம் பேசும் தமிழ் யாவரிலும் உயர்ந்தது என்பதை பெருமையுடம் கூறுகின்றேன்.கேக்கிறது ஓப்போடு.. மன்மதராசா.. பார்க்கிறது.. ஐஸ்வர்யா ராய்.. பிறகெங்கையிருந்து நல்ல தமிழ்வந்தது..? எழுதிற தமிழிலை எழுதினால் விளங்கயில்லையாம்.. பேசுறமாதிரி எழுதினால்த்தான் விளங்குதாம்.. தமிழ் இப்பிடிப்போகேக்கை இவர் மற்றவையைவிட நல்ல உயர்ந்த தமிழ் பேசுறாராம்.. அதாலை தனக்குப் பெருமையாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 01-30-2004 Mathivathanan Wrote:கேக்கிறது ஓப்போடு.. மன்மதராசா.. பார்க்கிறது.. ஐஸ்வர்யா ராய்.. பிறகெங்கையிருந்து நல்ல தமிழ்வந்தது..? நீங்க அவருக்கு தான் சொன்னீங்க தெரியும் தாத்தா ஆனா ஒரு டவுட். நல்ல டமிழ்னா என்ன கேக்கணும் பாக்கணும்? கேக்கிறது ஞான பழத்தை பிழிந்து. பாக்கிறது கே.பி.சுந்தராம்பாள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 01-30-2004 ஓப்போடு... மன்மதராசா... ஐஸ்வரியா...நாங்க பாக்கிறமோ இல்லையோ... சீ சீ இந்தப் பழம் புளிக்கும் எண்டு கொண்டு தாத்தா நல்லாச் சுவைக்கிறார் எண்டது புரியுது.....! எட பெடி உந்தத் தாத்தாவுக்கு பல்லுப் போனாலும் இன்னும் ஆசை போகல்லப்பாரு....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- Mathan - 01-30-2004 என்ன தாத்தா என்ற டவுட்டுக்கும் பதில இல்ல. குருவியும் ஏதோ சொல்றாரு. எங்க மிஸ்சாயிட்டீங்க? - Mathivathanan - 01-30-2004 kuruvikal Wrote:ஓப்போடு... மன்மதராசா... ஐஸ்வரியா...நாங்க பாக்கிறமோ இல்லையோ... சீ சீ இந்தப் பழம் புளிக்கும் எண்டு கொண்டு தாத்தா நல்லாச் சுவைக்கிறார் எண்டது புரியுது.....! எட பெடி உந்தத் தாத்தாவுக்கு பல்லுப் போனாலும் இன்னும் ஆசை போகல்லப்பாரு....???!ஓமடா ஓம்.. றேடியோவிலை நல்லபாட்டு கருத்துள்ள பாட்டு எண்டு போய் நான்தானே கேக்கிறன்.. விசர்க்கதை எழுதிக்கொண்டு.. அட சின்னனுகளுக்குத்தான் அறிவில்லையெண்டு பார்த்தால் பெரியவையும்.. குறிப்பா பொண்டுகளும் நால்ல கருத்துள்ள பாட்டு எண்டு கேக்கினம்.. எனக்கு இன்னுத்தான் ஓப்போடு வையும்.. மன்மதராசாவையும்லிட வேறை ஒண்டும் விளங்கேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 01-30-2004 BBC Wrote:என்ன தாத்தா என்ற டவுட்டுக்கும் பதில இல்ல. குருவியும் ஏதோ சொல்றாரு. எங்க மிஸ்சாயிட்டீங்க?தம்பி ராசா பிபிஸி.. நான் உங்களுக்குப் பதில் கருத்து எழுதலாம்.. பிரச்சனையில்லை.. ஆனால் இதுதான் எனது முழுநேர வேலையில்லை.. மோட்கேஜ்.. பில்லுகள் கட்ட வேலைக்குக் கட்டாயம் போகவேணும்.. அதாலை நேரம் கிடைக்கேக்கை ஏதாவது எழுத பதிலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் பொறுமை உங்களுக்குத் தேவை.. இருக்கிறதா :?: :?: :?: - anpagam - 01-31-2004 சிறுபிள்ளை வெள்ளாமை விளைந்தும் வீடுவந்து சேராது எண்டு சொல்லி சொல்லியே நம்மிட பெருசுகள் (பழசுகள்) இளசுகளை குளப்பி அடிச்சு நாட்டையும் குளப்பி கூத்துபாக்குதுகள் இந்த 90 களை நம்பவே கூடாது.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: அதுசரி... இலங்கையிலையே எத்தனை தமிழ்..... மட்டக்கிளப்பு,யாழ்பாணம்,கொழும்பு,தீவகம் இத்தமிழிலையே கனக்க வித்தியாசம் உள்ளதே... :?: :wink: - vasisutha - 01-31-2004 தமிழ் உருப்பட்ட மாதிரித்தான். நான் உந்த விளையாட்டுக்கு வரேல்லை. - Guest - 01-31-2004 [quote=anpagam]அதுசரி... இலங்கையிலையே எத்தனை தமிழ்..... மட்டக்கிளப்பு,யாழ்பாணம்,கொழும்பு,தீவகம் இத்தமிழிலையே கனக்க வித்தியாசம் உள்ளதே... ஆமாம் நம்மிடையே கூட நிறைய வட்டார பேச்சு நடைகள் உள்ளன. இத் இந்தியாவில் சென்னை தமிழ், மதுரை தமிழ் போல இலங்கையிலும் யாழ்ப்பாண தமிழ், மட்டக்கிழப்பு தமிழ், மலையக தமிழ், கொழும்புத் தமிழ். இவற்றில் சென்னை தமிழை கொழும்பு தமிழுக்கு ஒப்பிடலாம். - vasisutha - 01-31-2004 இந்தா கசுமாலம் இப்போ என்னாங்கீறே, வுூட்டில சொல்லிக்கினு வந்தியா பொறம்போக்கு :mrgreen: இந்த தமிழ்தானே சென்னைத்தமிழ்? :wink: - Guest - 01-31-2004 vasisutha Wrote:தமிழ் உருப்பட்ட மாதிரித்தான். இல்லை வசி நீங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். கருத்துக்கள்ம் என்றால் பல விதமான கருத்துக்கள் வரத்தான் செய்யும். - Guest - 01-31-2004 vasisutha Wrote:இந்தா கசுமாலம் இப்போ என்னாங்கீறே, வுூட்டில சொல்லிக்கினு வந்தியா பொறம்போக்கு :mrgreen: ஆமாம் என்று தான் நினைக்கிறேன். யாராவது இந்தியா சென்றவர்கள் தான் இது பற்றி சொல்லவேண்டும். திரைபடங்களில் பார்பதை வைத்து எடை போட முடியாது. இது அவர்கள் தெனாலி படத்தை வைத்து நமது தமிழை எடை போடுவது போன்றது. - vasisutha - 01-31-2004 ஏன்னென்றால் திரைப்படங்களில் கமல் இதை பேசி நடித்தபோது. பத்திரிகைளில் "கமல் மெடராஸ் பாஷையில் வெளுத்து வாங்கியிருக்கிறார்' என்று விமர்சனம் வந்தது படித்திருக்கிறேன். மெட்ராசும் சென்னையும் ஒன்றுதானே? :?: |