Yarl Forum
தமிழர் பிரதேச அரசியலில் பெண்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழர் பிரதேச அரசியலில் பெண்கள் (/showthread.php?tid=7449)

Pages: 1 2


Re: தமிழர் பிரதேச அரசியல - Mathan - 02-23-2004

Eelavan Wrote:[quote=BBC]<span style='font-size:25pt;line-height:100%'>இந்தமுறை தேர்தலில் தமிழர் பிரதேச அரசியலில் பெண்களுக்கு சரியான இடம் கிடைக்குமா? பெண் வேட்பாளர்கள் போதுமான அளவு தமிழர் பிரதேசங்களில் நிறுத்தப்படுவார்களா?</span>

இந்த விடயத்தில் நான் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்
வடக்கு கிழக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் பாராளுமன்ற பிரநித்தித்துவத்தில் பெண்களுக்கு சமபங்கு இல்லாவிட்டாலும் சரியான விகித்ததிலாவது கொடுக்க வேண்டும்
வடகிழக்கில் போராடும் பெண்கள் உள்ள அளவுக்கு அரசியலில் ஊறிய பெண்கள் இல்லை வேண்டுமானால் அன்னையர் முன்னனி,காணாமல் போனோர் பெற்றொர் சங்கத்திலிருந்து பெண்களை தெரிவு செய்யலாம்
எனக்கு தெரிந்தவரை யாழ் பல்கலைக்கழகத்தில் அப்படி அரசியல் அறிவு உள்ள பெண் இல்லை

நன்றி,


- kuruvikal - 02-23-2004

அரசியல் ஒன்றும் சலுகைகள் கொடுத்துப் பெறும் இடமல்ல....உலகில் ஜனநாயகம் பிறந்த இடத்திலேயே அரசியலில் பெண்களின் பங்களிப்புக் குறைவு....அதற்கு அவர்களிடம் உள்ள அரசியல் மீதான ஆர்வக் குறைவே காரணம்...அதை உயர்த்தி கொள்ள வேண்டியது பெண்களின் பொறுப்பு...!!! இப்படித்தான் சமூகத்தில் ஒதுங்கிக் கிடந்த பெண்களை விழிப்பூட்டி சமூகப்பொறுப்புகளை ஆண்களுடன் நிகர்த்து ஏற்றுக் கொள்ள அழைத்து இப்பவும் பழிச் சொல்லுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றான் ஆண்....!இந்த நிலை நாளை அரசியலிலும் தேவையா...??! அரசியல் கொஞ்சம் நிதானத்துடன் செய்ய வேண்டியது...எடுத்தேன் கவுத்தேன் என்று சந்திரிக்கா போன்று அரசியல் நடத்தினால் மக்கள் நட்டாற்றில் தான்....! அதற்காக திறமையான அரசியல்வாதிகளாக பெண்கள் வரமுடியாதென்பதல்ல....அவர்கள் தங்களை முதலில் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக் கொண்டு திறமைகளினூடு அதை அடைய வேண்டும்...சலுகைகள் எனி எவருக்கும் கிடையாது....! பின் கதவு உள் நுழைவு வேலைகள் களையப்படட்டும்....!

திறமைகளுக்கு முதன்மை அளித்தாலே எங்கும் புரட்சிகர மாற்றங்களை காண முடியும்....!
துரித அபிவிருத்தியையும் தொலை நோக்குச் செயற்பாடுகளையும் விருத்தி செய்து முன்னேற முடியும்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea


- Mathan - 02-23-2004

kuruvikal Wrote:அரசியல் ஒன்றும் சலுகைகள் கொடுத்துப் பெறும் இடமல்ல....உலகில் ஜனநாயகம் பிறந்த இடத்திலேயே அரசியலில் பெண்களின் பங்களிப்புக் குறைவு....அதற்கு அவர்களிடம் உள்ள அரசியல் மீதான ஆர்வக் குறைவே காரணம்...அதை உயர்த்தி கொள்ள வேண்டியது பெண்களின் பொறுப்பு...!!! இப்படித்தான் சமூகத்தில் ஒதுங்கிக் கிடந்த பெண்களை விழிப்பூட்டி சமூகப்பொறுப்புகளை ஆண்களுடன் நிகர்த்து ஏற்றுக் கொள்ள அழைத்து இப்பவும் பழிச் சொல்லுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றான் ஆண்....!இந்த நிலை நாளை அரசியலிலும் தேவையா...??! அரசியல் கொஞ்சம் நிதானத்துடன் செய்ய வேண்டியது...எடுத்தேன் கவுத்தேன் என்று சந்திரிக்கா போன்று அரசியல் நடத்தினால் மக்கள் நட்டாற்றில் தான்....! அதற்காக திறமையான அரசியல்வாதிகளாக பெண்கள் வரமுடியாதென்பதல்ல....அவர்கள் தங்களை முதலில் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக் கொண்டு திறமைகளினூடு அதை அடைய வேண்டும்...சலுகைகள் எனி எவருக்கும் கிடையாது....! பின் கதவு உள் நுழைவு வேலைகள் களையப்படட்டும்....!

திறமைகளுக்கு முதன்மை அளித்தாலே எங்கும் புரட்சிகர மாற்றங்களை காண முடியும்....!
துரித அபிவிருத்தியையும் தொலை நோக்குச் செயற்பாடுகளையும் விருத்தி செய்து முன்னேற முடியும்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea

பெண்களின் மோசமான அரசியலுக்கு சந்திரிகாவை சொன்னால் ஆண்களின் மோசமான் அரசியலுக்கு ஜே.ஆர், ஹிட்லர், இடி அமீன், சதாம் ....... சொல்லிக்கொண்டே போகலாம். அது இப்ப முக்கியமில்லை.

யாரும் பிறக்கும் போதே எல்லாம் தெரிந்துகொண்டு பிறப்பதில்ல. அதுபோல தான் பெண்களும் அவங்க காலாகாலமா வசதி வாய்ப்பு இல்லாததாலை அரசியல் பத்தி எதுவும் தெரியாமலிருக்கலாம்
அவங்களுக்கு ஒரு ஒதுக்கீட்டை குடுத்து அரவணைத்து வழிநடத்தினா அவங்களும் நல்ல தலைவர்களா உருவாகுவாங்க.


- kuruvikal - 02-23-2004

களத்துக்குப் போய்த்தான் பயிற்சி எடுக்க வேண்டும் என்றால் ஒரு போர் வீரனும் இன்று உயிருடன் இருக்க முடியாது...! பயிற்சி முடித்துத்தான் களம் காண முடியும்...அங்கு பெறும் அனுபவங்கள்...நுட்பங்களாகி பின் திறமைகளுனூடு செயலாகும்.....!

இட ஒதுக்கீடு என்பது தேவையில்லை...பெண்கள் அரசியல் திறமைகளை வளர்த்து... திறமைகளின் ஊடுதான் அரசியலில் நுழைய வேண்டும்...பெண் என்பதற்கு சலுகைகள் கூடாது வேண்டாம்....! வேண்டும் என்றால் திறமைகள் வளர்க்க அரசியல் பயிற்சி அளிக்கலாம்...களம் இறக்க முடியாது....!அப்படி திறமை அற்றவர்களை அரசியல் களம் இறக்குவது அது அரசியலை ஆபத்துக்குள்ளாக்கும்....!

சந்திரிக்காவும் சரி பல பெண் அரசியல்வாதிகளும் சரி திறமையால் வந்தவர்கள் அல்ல...குடும்ப செல்வாக்கினையும் கண்ணீரையும் பயன்படுத்தி அரசியல் வந்தவர்கள்...அதனால்தான் நாடும் ஊரும் சீரழிகிறது....! ஆயிரம் பேரில் ஒரு இடியமீன் வருவதற்கும் பத்துப் பேரில் ஒரு சந்திரிக்கா வருவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு.....!


உண்மையாக அரசியல் திறமை இருந்தும்
களமிறங்கத்தயங்கும் பெண்களை உற்சாகப்படுத்தி களம் இறக்கலாம்...ஆனால் இட ஒதுக்கீடு என்று சொல்லி திறமை அற்றவர்களை களமிறக்க முடியாது....திறமை இருந்தால் பெண்கள் 50% என்ன 100% தத்தையும் அரசியலில் பிடிக்கலாம்.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-23-2004

பெண் போராட்டத்துக்கு திறமை எல்லாம் வளர்த்துட்டா வந்தாங்க. சந்தர்ப்பம் குடுக்க அவங்க திறமையை நிரூபிச்சாங்க. அதேமாதிரி தான் அரசியலும். அவங்களுக்கு சந்தர்ப்பத்தை குடுத்து வழி நடத்துங்க அவங்க அசத்துவாங்க.

ஒருத்தருக்கு சந்தர்ப்பமே குடுக்காம திறமை இல்லை என்று சொல்ல முடியாது.


- kuruvikal - 02-23-2004

சந்தர்ப்பங்களை நாம் தான் நாடிச் செல்ல வேண்டும் அவையா தேடி வராது.....! உயர்தரத்தில் பரீட்சை எழுதலாம்....எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது...அரசியலுக்குள் யாரும் வரலாம்...பெண்களுக்கு என்ன தடையா போடப்பட்டுள்ளது... வரக்கூடாது என்று....நாலுதடவை பரீட்சை எழுதவிட்டு நாலாம் தடவையா அனுமதிக்குப் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுகின்றனர்...! பரீட்சை எழுதினாலும் குறிப்பிட்ட புள்ளி பெற்றால்தான் பல்கலைக்கழகம் போகலாம்...அதில் ஆணுக்கு ஒரு மாதிரியும் பெண்ணுக்கு ஒரு மாதிரியுமா இடமளிக்கின்றோம்...திறமையான மாணவனோ மாணவியோ அனுமதி பெற்றுச் செல்கிறார்...இன்று பெண்கள் தான் பலகலைக்கழகங்களில் அதிக சத வீதத்தில் இருக்கின்றனர்....! அப்படித்தான் அரசியலும் போராட்டமும் எதுவும்...பெண் என்பதற்காகவோ அல்லது ஆண் என்பதற்காகவோ சலுகைகள் மனிதனுக்கு மனிதன் காட்டுவது ஒருவர் மற்றவரின் உரிமையைப் பறிப்பது போன்றது.....!

சந்தர்ப்பம் எல்லோருக்குமே அளிக்கப்பட்டுள்ளது...இனம் கண்டு தமது திறமைகளைக் காட்ட வேண்டியது தனிமனித செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது...!

கேட்டுப்பெற்றால் சலுகை அது திறமை அற்றவனுக்கே உரித்தானது....!


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 02-25-2004

இம்முறை யாழ் தேர்தல் களத்தில் பத்மினி சிதம்பரப்பிள்ளை என்பவர் வேட்பாளராக கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்
ஆனாலும் இது போதாது தேர்தலில் இறங்கி தமது அரசியல் தகமையை பரீட்சித்துப் பார்ப்பது பொருந்தாது பெண்கள் சாதாரண அரசியல் விடயங்களிலும் தமது பங்களிப்பைக் காட்டவேண்டும்
இதை நான் சாதாரண மக்களுக்கு சொல்கிறேன்
புலிகளை பொறுத்தளவில் ஆண்களுக்கு எந்தவிதத்திலும் குறைவிலாத அரசியல் அறிவு கொண்டவர்கள் அங்கு உண்டு


- Mathan - 02-26-2004

கூட்டமைப்பு வடக்கு கிழக்குல எத்தனை தமிழ் பெண்களை நிறுத்தியிருக்காங்க?


- vasisutha - 02-26-2004

இதுக்கு பதில் தெரியவில்லை எனக்கு. வேறு யாருக்காவது தெரியுமா?


- thampu - 02-26-2004

kuruvikal Wrote:சந்தர்ப்பங்களை நாம் தான் நாடிச் செல்ல வேண்டும் அவையா தேடி வராது.....! உயர்தரத்தில் பரீட்சை எழுதலாம்....எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது...அரசியலுக்குள் யாரும் வரலாம்...பெண்களுக்கு என்ன தடையா போடப்பட்டுள்ளது... வரக்கூடாது என்று....நாலுதடவை பரீட்சை எழுதவிட்டு நாலாம் தடவையா அனுமதிக்குப் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுகின்றனர்...! பரீட்சை எழுதினாலும் குறிப்பிட்ட புள்ளி பெற்றால்தான் பல்கலைக்கழகம் போகலாம்...அதில் ஆணுக்கு ஒரு மாதிரியும் பெண்ணுக்கு ஒரு மாதிரியுமா இடமளிக்கின்றோம்...திறமையான மாணவனோ மாணவியோ அனுமதி பெற்றுச் செல்கிறார்...இன்று பெண்கள் தான் பலகலைக்கழகங்களில் அதிக சத வீதத்தில் இருக்கின்றனர்....! அப்படித்தான் அரசியலும் போராட்டமும் எதுவும்...பெண் என்பதற்காகவோ அல்லது ஆண் என்பதற்காகவோ சலுகைகள் மனிதனுக்கு மனிதன் காட்டுவது ஒருவர் மற்றவரின் உரிமையைப் பறிப்பது போன்றது.....!

சந்தர்ப்பம் எல்லோருக்குமே அளிக்கப்பட்டுள்ளது...இனம் கண்டு தமது திறமைகளைக் காட்ட வேண்டியது தனிமனித செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது...!

கேட்டுப்பெற்றால் சலுகை அது திறமை அற்றவனுக்கே உரித்தானது....!


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஐயா குருவிகாள்
பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பதில் 'உரிமை' 'சலுகை' என்ற சொற்சிலம்பத்திற்கு இங்கு இடமில்லை.
அரசியல் அமைப்பிலேயே அவர்களுக்கான 50 விழுக்காடு கட்டாயமாக்கப்பட்டால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 'சக்தி' இன்றி சுயமாக இயங்கமாட்டாத 'சிவம்' போல் தமது வேட்பு மனுவில் சரிபாதி கொடுப்பார்கள்.


- adipadda_tamilan - 02-27-2004

BBC Wrote:கூட்டமைப்பு வடக்கு கிழக்குல எத்தனை தமிழ் பெண்களை நிறுத்தியிருக்காங்க?

கீழுள்ள மூவரும் இம்முறை தேர்தலில் வேட்பாளராக பங்கு பற்றுகிறார்கள்.

திருமதி பத்மினி சிதம்பரனாதன் - யாழ்ப்பாணம்
செல்வி தங்கேஷ்வரி கதிர்காமன் - மட்டக்களப்பு
செல்வி யோகாம்பிகை சபாபதி - அம்பாரை


- Rajan - 02-27-2004

தமிழரசுக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரம் வவுனியாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது
1.புலம் பெயந்தோர் வாக்குபோடமறுப்பு2.மட்டகிழப்பில் எரியுன்ட நிலையில் பெண்ணின் சடலம் ஆனால் தமிழ் தலைவர்களி;ன் சுறாவளி தேர்தல் பிரச்சாரம் பாவம் அப்பாவி தமிழ்மக்கள்