Yarl Forum
புகலிடத் தமிழர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புகலிடத் தமிழர் (/showthread.php?tid=7326)

Pages: 1 2 3 4 5 6


- nalayiny - 03-15-2004

Mathivathanan Wrote:
nalayiny Wrote:கடைசிபோனாலும் இல்லை உந்த வானொலியள் பிரிபட்ட மாதிரித்தான் அங்கினை இரண்டொருத்தர் உதவலாம் எல்லாரும் தாமுண்டு தம் வேலை உண்டு என இருந்திடுவர். அது தான் உண்மை.( அடிபர்றனீங்கள் அடிபட்டு குத்துபர்றனீங்கள் குத்துப்பட்டு சாகிறனீங்கள் சாகுங்கோ என மதிதாத்தா பிளானிலை பிறகு எல்லாரும் கதைக்க வெளிக்கிட்டுவிடுவார்கள் அது தான் உண்மை. உந்த தசை எலும்பு எல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது. உதையே சொல்லி சொல்லி எத்தனைநாளைக்கு பேக்காட்டிறது??? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அப்ப சதை செல்லுபடியாகாதோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தசையிலை சீனுவா வொந்தியுூ செய்து சாப்பிடலாம். எப்பவாவது சாப்பிட்டிருக்கிறியளே. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathan - 03-15-2004

ஆஆஆஆ என்ன???


- sOliyAn - 03-15-2004

அதை சமையல் பகுதில போட்டுடுங்க! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- nalayiny - 03-15-2004

sOliyAn Wrote:புலம்பெயர் தமிழரும் ஆராலும் செத்தால் கத்திக் குளறித்தானே ஒப்பாரி வைக்கினம்?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஒப்பாரி இருக்குமட்டும் எல்லாம் இருக்கும்.

என்ன செத்தவீட்டை ஞாபகப்படுத்திறியள் பயமாய் இருக்கு வீட்டிலை எல்லாரும் நித்திரை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> . குட் நைற்.


- nalayiny - 03-15-2004

BBC Wrote:ஆஆஆஆ என்ன???
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ( இலையான் உள் நுழையப்போகுது வாயை மூடுங்கள் பிபிசீ. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sOliyAn - 03-15-2004

nalayiny Wrote:
sOliyAn Wrote:புலம்பெயர் தமிழரும் ஆராலும் செத்தால் கத்திக் குளறித்தானே ஒப்பாரி வைக்கினம்?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஒப்பாரி இருக்குமட்டும் எல்லாம் இருக்கும்.

என்ன செத்தவீட்டை ஞாபகப்படுத்திறியள் பயமாய் இருக்கு வீட்டிலை எல்லாரும் நித்திரை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> . குட் நைற்.
ஆகாகாகா............. அம்பிட்டுக்கொண்டாவே.. பயந்தாங்கொள்ளிதானா?! நான் என்னவோ ஆண்களுடன் 'பெண் விடுதலை'க்காக போராடும் வீராங்கனை என்றல்லவா நினைத்தேன்?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Mathivathanan - 03-15-2004

sOliyAn Wrote:
nalayiny Wrote:
sOliyAn Wrote:புலம்பெயர் தமிழரும் ஆராலும் செத்தால் கத்திக் குளறித்தானே ஒப்பாரி வைக்கினம்?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஒப்பாரி இருக்குமட்டும் எல்லாம் இருக்கும்.

என்ன செத்தவீட்டை ஞாபகப்படுத்திறியள் பயமாய் இருக்கு வீட்டிலை எல்லாரும் நித்திரை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> . குட் நைற்.
ஆகாகாகா............. அம்பிட்டுக்கொண்டாவே.. பயந்தாங்கொள்ளிதானா?! நான் என்னவோ ஆண்களுடன் 'பெண் விடுதலை'க்காக போராடும் வீராங்கனை என்றல்லவா நினைத்தேன்?!
அதுதவிர பெரியார் வழிநடத்தலிலை வளர்ந்த பிள்ளை பயப்பிடலாமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathan - 03-15-2004

பெரியார் வழிநடத்தல்ல? தமிழகத்தில இருந்து?


- Mathan - 03-15-2004

sOliyAn Wrote:புலத்தில் பங்களிக்காதவன் பெரும்பாலும் பங்களிக்காமல்தான் இருக்கிறான்.. அதோடு தான் புலத்தின் பிரஜை... தனக்கும் தாயகத்துக்கும் என்ன தொடர்பு என்ற ரீதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
இரண்டாவதாக, பங்களிப்போர்... மேலும் மேலும் 'அவசரகால நிதி' அப்படி இப்படி என்று தமது இயலுதலுக்கு மேலாக சுமை தூக்க நெருக்கப்படும்போது முணுமுணுப்போடாவது இயலுமானளவில் பங்களிக்கிறார்கள் என்பது உண்மை.
மூன்றாவதாக, பங்களிப்போமா வேண்டாமா என்று தமக்கேற்பட்ட கசப்பான அனுபவங்களினால் தடுமாறுபவர்கள்... தாயகத்தில் தாக்கமான பாதிப்புகள் ஏற்படுங் காலத்தில் பங்களிப்பில் இணைந்துகொண்டவர்கள்... உதாரணமாக, யாழ் இடப்பெயாவுகஇகுப் பின்னால் இப்படியானவர்கள் பலர் பங்களிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
சிலவேளை.. இனி பிரதேசவாதம் கிளம்பினால்.. அதற்காகப் பங்களிக்கவும் புதிதாகப் பலர் இணையக்கூடும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

புலத்தில் இருந்து பணத்தை குடுத்தாலும் உயிரை விடுவது சொத்துகளை இழப்பவர்களும் இடம்பெயர்ந்து திரிபவர்களும் வடக்கு கிழக்கில் இருப்பவர்கள் தானே? புலத்தில் இருப்பவர்களுக்கு இது பத்தி பேச தார்மீக உரிமை இருக்கின்றதா? உங்க கருத்து?


- sOliyAn - 03-15-2004

நிச்சயமாக இருக்கிறது.. அதைத்தானே தாயகத்திலிருந்து அவர்களுக்கு வரும் தபால்கள் உரிமையுடன் சுட்டிக்காட்டுகின்றன!! ஏற்கெனவே.. புகலிடத் தமிழனை இழித்த தாயகக் கவிகள்கூட தமது தவறை பகிரங்கமாகத் திருத்திக் கொள்வதாக (சொல்லளவிலானாலும்...) அறிவித்தார்களே! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tharma - 03-15-2004

BBC Wrote:
tharma Wrote:தாத்தாவுக்கு அறளை பேந்துட்டுது, அவரின் அலட்டலை கருத்திலை எடுக்காதையுங்கோ

இந்த "அறளை பேந்துட்டுது" அப்பிடிங்கிறதை நிறையவாட்டி கேள்விபட்டிருக்கன். அதோட உண்மையான அர்த்தம் என்ன? மத்தவது வெளிநாட்டுல இருக்கின்ற தமிழங்க பத்தி நான் கேட்டதுக்கு உங்க கருத்து என்ன?



- anpagam - 03-15-2004

Quote:சிலவேளை.. இனி பிரதேசவாதம் கிளம்பினால்.. அதற்காகப் பங்களிக்கவும் புதிதாகப் பலர் இணையக்கூடும்.


இதல்லாம் நடக்கிறாரியம் எண்டுறயளா இனியும்...
வாழ நாடுதேடுறமப்பா.....
போறபோக்க பார்க....
:roll: :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Mathivathanan - 03-15-2004

anpagam Wrote:
Quote:சிலவேளை.. இனி பிரதேசவாதம் கிளம்பினால்.. அதற்காகப் பங்களிக்கவும் புதிதாகப் பலர் இணையக்கூடும்.


இதல்லாம் நடக்கிறாரியம் எண்டுறயளா இனியும்...
வாழ நாடுதேடுறமப்பா.....
போறபோக்க பார்க....
போற போக்கைப்பார்க்க என்னவாத் தெரியிது..?
:?:

பட்டம் குடுத்தாச்சுத்தானே.. இனிஎன்ன 10-15 வருஷத்துக்கு பிழைப்பு இருக்கு.. ஒரு 20 வருஷமாவது இழுக்கலாம்.. இல்லையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- anpagam - 03-15-2004

<b>கருணாவின் பிரதேசவாத பிரசாரத்துக்கு கிழக்கு மக்கள் முழுமையாக ஆப்பு.</b>

முற்றாக அலட்சியப்படுத்தியது சர்வதேச சமூகம்

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட கருணாவின் 'கலகம்" இடம்பெற்று சுமார் இரு வாரங்களை எட்டி விட்ட நிலையில், அவரின் பிரதேசவாதப் பிரசாரமும், வன்னியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளும் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதி மக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்டுவதற்கான கருணாவின் முயற்சி தோல்வியையே தழுவியுள்ள அறிகுறி தென்படுவதாக இந்தியாவிலிருந்து வெளியாகும் இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

'கலகம் பிசுபிசுத்து விடும்" என்று செங்கலடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதே கருத்தை மட்டக்களப்பைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுரு ஒருவரும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள குறிப்பிட்ட சில வர்த்தக, பல்கலைக்கழக சமூகங்களின் நலன்களுக்காக அவர்களின் கருவியாக கருணா பயன்படுத்தப்படுகிறார் என்று விடுதலைப் புலிகளின் அமைப்புக்குச் சார்பற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த பிரதேச சபையின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

உள்@ர், சர்வதேச தமிழ் ஊடகங்கள் கருணாவை முற்றாகப் புறக்கணித்துள்ளன. சர்வதேச ஊடகங்கள் மட்டுமே கருணாவிடமிருந்து செய்திகளைப் பெற்று வெளியிடுகின்றன. ஆனால், இது உள்நாட்டைப் பொறுத்தவரை எந்தவிதமான பிரயோசனத்தையும் பெறவில்லை.

கருணாவிற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்திலேயே ஊடகங்கள் முழுமையான கவனத்தையும் திருப்பியுள்ளன.

கருணாவின் சொந்த இடத்திலேயே அவர் குறிப்பிட்ட சில வெளிநாட்டு, இலங்கைச் சக்திகளின் அடிவருடியாக செயற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழரின் ஐக்கியத்தைக் குலைக்கும் நடவடிக்கையாக மக்கள் இதனைப் பார்க்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பாரிய தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட இயக்கத்தைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக மக்கள் இதனைக் கருதுகிறார்கள். புலிகள் அமைப்பால் இவர் வெளியேற்றப்பட்ட பின் துரோகி என்ற பட்டமும் அவருக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கு மட்டும் கருணா துரோகியல்ல. தமிழரின் ஒருமைப்பாட்டிற்கும், குறிக்கோளுக்கும் துரோகம் இழைத்தவராகவே கருதப்படுகிறார் என்று மட்டக்களப்பிலுள்ள சில வட்டாரங்கள் இந்துஸ்தான் ரைம்ஸிற்குக் கூறியுள்ளன.

கருணா மீது அன்பு செலுத்துகின்ற தரப்பினர் கூட தமிழர் பிரச்சினை தொடர்பாக அவர் பாரிய துரோகத்தைச் செய்துவிட்டார் என்று கூறுகின்றனர்.

முன்னுக்குப் பின் முரணான நிலை

கருணா கடந்த 6 ஆம் திகதி மட்டக்களப்பில் தெரிவித்திருந்த கருத்துக்கும், பின்னர் அவர் தெரிவித்து வரும் கருத்துகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பிரபாகரனைக் கடவுளாக மக்கள் கருதுவதாகவும், ஆனால், அவர்கள் மீது அவர் சேறு பூசி விட்டார் என்றும் முதலில் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் புலிகளை வெல்ல முடியாது என்பது ஒரு மாயை என்று அவர் கூறியிருந்தார். அத்துடன், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள் அல்ல என்று ராய்ட்டருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஆனால், பின்னர் தமிழீழ இராணுவம் தமிழீழத்தை உருவாக்குவதற்குப் பாடுபட வேண்டுமென்று கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இது இவ்வாறிருக்க, கருணாவின் கட்டுப்பாட்டிpருந்து ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகள் விலகிச் சென்றிருப்பதாக தகவலறிந்த உள்@ர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருகோணமலைக்கும், வன்னிக்கும் அவர்கள் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகளவு எண்ணிக்கையான போராளிகளைப் பராமரிக்க முடியாத நிலையாலும், அதிகளவு பணம் தேவைப்படுவதனாலும் அவர்களைச் செல்வதற்கு கருணா அனுமதித்திருக்கலாம் என்று புலிகளின் இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

உண்மையில், கருணாவைப் பொறுத்தவரை, நிதிப் பற்றாக்குறை பாரிய விடயமென அவர் தெரிவித்தார். குறுகிய காலத்திற்கு அல்லாவிடினும், நீண்ட காலத்தைப் பொறுத்தவரை நிதி விடயம் பாரிய பிரச்சினையாகும். மாதாந்தம் 5 இலட்சம் அமெரிக்க டொலர் அவருக்குத் தேவைப்படும் என்று அந்த ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

[u]வெளிநாடுகளில் உள்ள தமிழரிடமிருந்து தான் நிதியுதவியைப் பெறுவார் என்று கருணா கூறியிருந்தார். ஆனால், இதனை முக்கியமான விடயமாகக் கவனத்தில் எடுக்க முடியாது. ஏனெனில், வெளிநாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை, அவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தையும், வட பகுதியையும் சேர்ந்தவர்கள்.

பிரதேசவாதத்தைக் கருணா எழுப்பிய படியால், வெளிநாடுகளிலுள்ள தமிழரிடமிருந்து உதவி பெறுவதென்பது சிறிதளவும் சாத்தியமற்ற விடயம்..
தோல்வியைத் தழுவிய பிரதேசவாதம்

கலகத்தை ஆரம்பித்த வேளை கருணா எழுப்பிய பிரதேசவாதம், கிழக்கிலுள்ள மக்கள் மத்தியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சிங்கள, தமிழ் மோதல்களுக்கு முன்னரும், சுதந்திரத்திற்கு முன்னரும் பிரதேசவாதம் இருந்தது. ஆனால், 20 வருட யுத்தத்திற்குப் பின்னர் தமிழர்கள் சாதியம், பிரதேசவாதம், மத வேறுபாடுகள் என்பவற்றை நிராகரித்து ஒன்றுபட்டுள்ளனர். மக்களின் சிந்தனையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கிழக்கிலுள்ள கத்தோலிக்க மதகுரு ஒருவர் தெரிவித்தார்.

பிரதேசவாத உணர்வுகளை எழுப்புதல் துரோகத்தனமானது என கிழக்கிலுள்ள தமிழர்கள் உட்பட தமிழ் மக்கள் யாவருமே கருதுகிறார்கள். சிங்கள ஊடகங்கள் இதனால் ஆனந்தப் படுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

இலங்கை அரசியல் சக்திகள் தமிழர்களை வடக்கு, கிழக்கு எனப் பிரித்து தமிழர்களின் ஐக்கியத்தைப் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

தமிழ் ஊடகங்கள் முற்றாக புறக்கணிப்பு

தமிழ் ஊடகங்கள் கருணாவின் கருத்துகளை முற்றாகப் புறக்கணித்துள்ள நிலை காணப்படுகின்றது. தமிழ் சாராத ஏனைய ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களுமே அவரின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தமிழ்த் தேசியவாத உணர்வில் அநேகமான தமிழ் ஊடகங்கள் திளைத்திருப்பதால் இந்நிலை காணப்படலாம் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் கூறுகிறது.

'தமிழ் ஊடகம் என்றால் தமிழ் ஊடகம் தான்" என்று மட்டக்களப்பைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பெருமையாகக் கூறினார்.

சர்வதேச சமூகத்தின் ஆதரவற்ற நிலை

சர்வதேச சமூகம் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் அமைப்பின் பக்கமே முழுமையாக நிற்கிறது. பிரதேசவாதங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தால் வட, கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியம் என்பதை உணர்ந்து அவை செயற்படுகின்றன. ஒரு பலமான சக்தியுடனேயே அவை விடயங்களைக் கையாள விரும்புகின்றன.

பிரிட்டிர்;, நோர்வேஜிய சமாதான மத்தியஸ்தர்கள் செயற்பட்ட விதம் இதனையே வெளிப்படுத்துகிறது. பிரதான ஐரோப்பிய சக்திகள் பிரபாகரனுக்கே ஆதரவாக உள்ளன. அவர்களின் தூதுவர்கள் வன்னியில் தமிழ்ச்செல்வனைச் சென்று சந்தித்தார்களே தவிர, கருணாவை அல்ல.

கருணா பலவீனமடையும் சாத்தியமே இருப்பதாக கிழக்கிலுள்ள அநேகமான மக்கள் கருதுகின்றனர். அவர் தன்னை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தும் தன்மை காணப்படவில்லை. அவருடைய அரசியல் இயந்திரம் பலவீனமாகவும், செயற்பட முடியாமலும் உள்ளது. அவர் அரசியல் ரீதியாக கூர்மதி உடையவரோ, பொது அறிவுடையவரோ அல்ல. அவரிடம் யுத்தப் பிரிவைத் தவிர வேறெந்த அமைப்பும் கிடையாது

நன்றி:தினக்குரல் (10.03.04)


- sOliyAn - 03-15-2004

உண்மை.. உண்மை!!


- Mathan - 03-16-2004

sOliyAn Wrote:நிச்சயமாக இருக்கிறது.. அதைத்தானே தாயகத்திலிருந்து அவர்களுக்கு வரும் தபால்கள் உரிமையுடன் சுட்டிக்காட்டுகின்றன!! ஏற்கெனவே.. புகலிடத் தமிழனை இழித்த தாயகக் கவிகள்கூட தமது தவறை பகிரங்கமாகத் திருத்திக் கொள்வதாக (சொல்லளவிலானாலும்...) அறிவித்தார்களே! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்படியே யார் அறிவித்தார்கள்?


- sOliyAn - 03-16-2004

பலர் ஐரோப்பாவுக்கு வந்து போகிறார்கள்.. அவர்களுள் இவர்களும் அடக்கம்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 03-16-2004

அவர்கள் எழுதிய கருத்துதானே பேரையும் கவிதையையும் சொல்லுங்கள் அதை படித்து பார்க்கலாம் என்ன தான் சொல்லியிருக்கின்றார்கள் என்று.


- sOliyAn - 03-16-2004

இவை ஊடகங்களில் அபபோது வந்த பேட்டிகள்! ஆரம்பத்தில் தாயகத்திலிருந்து வரும் பல படைப்புகள் புலம்பெயர் தமிழனை கேலியோ கிண்டலோ செய்தன... காலப்போக்கில் புலம்பெயர்ந்த தமிழினத்தின் பங்களிப்புப் பலத்தை அல்லது அரவணைப்பின் அவசியத்தைப் புரிந்துகொண்டதால் தங்களை மாற்றிக்கொண்டார்கள். ஆகவே, யார் என்று பெயரைச் சொல்லி காய்ந்த புண்ணை மீண்டும் கீறிப் பார்ப்பது நல்லதில்லை என நினைக்கிறேன்.


- Mathan - 03-16-2004

sOliyAn Wrote:இவை ஊடகங்களில் அபபோது வந்த பேட்டிகள்! ஆரம்பத்தில் தாயகத்திலிருந்து வரும் பல படைப்புகள் புலம்பெயர் தமிழனை கேலியோ கிண்டலோ செய்தன... காலப்போக்கில் புலம்பெயர்ந்த தமிழினத்தின் பங்களிப்புப் பலத்தை அல்லது அரவணைப்பின் அவசியத்தைப் புரிந்துகொண்டதால் தங்களை மாற்றிக்கொண்டார்கள். ஆகவே, யார் என்று பெயரைச் சொல்லி காய்ந்த புண்ணை மீண்டும் கீறிப் பார்ப்பது நல்லதில்லை என நினைக்கிறேன்.

சரி யார் என்பதையும் அந்த கவிதையும் விட்டுவிடலாம். ஆனால் நாட்டை விட்டு ஓடிவந்துவிட்டு பணத்தை குடுத்தால் போதுமா என்று கேட்கின்றார்கள் தானே?