Yarl Forum
உண்மையா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: உண்மையா (/showthread.php?tid=7129)

Pages: 1 2


- sethu - 06-04-2004

யாழ் இனையத்தை யோசிக்க கவலையா கிடக்கு


- Eelavan - 06-04-2004

தன்னைச் சேர்ந்தவர்களையே கற்பழித்தவர்கள் அது பற்றி வெட்கப்படாமல் இணையத் தளமும் அமைத்து நடுநிலையான நாட்டுக்குத் தேவையான கருத்துகள் கூறி வரும் போது அது பற்றிக் கூற நான் எதற்கு வெட்கப்படவேண்டும்
இவர்களுக்கு கொடி குடை பிடிக்கும் நீங்களே வெட்கப்படவில்லை நான் எதற்கு வெட்கப்படவேண்டும்


- sethu - 06-04-2004

http://www.yarl.com/forum/viewtopic.php?p=28335#28335


- Mathivathanan - 06-04-2004

பொய்களை பரப்புவதற்காகவா.. எடுத்ததற்கெல்லாம் அவனது இணையத்தளம்.. இவனது இணையத்தளம் என்று சாட்டுச்சொல்லுகிறீர்கள்..? அவர்களது குரல்வளையை நசுக்கி உங்கள் பொய்யுரைகளை மாத்திரம் வரவிடுவது ஊடக தாமமல்ல..

பரிதாப வாக்குக்காக கறிபழிப்பு சோடனைசெய்து அக்கா தங்கைக்கு களங்கம் உண்டாக்குவதைவிடவா..
Idea Idea Idea


- Eelavan - 06-04-2004

அவர்கள் எல்லோரும் கூட்டுச் சேர்ந்து தமிழ்த் தேசியத்தையே கேலி செய்யும் போது நாம் பொய்களைப் பரப்புகிறோம் என்று சொல்கிறீர்களா இதே அவர்களிடம் போய்க் கேட்டுப்பாருங்கள் ஊடக தர்மம் பற்றி
ஏன் கொஞ்ச நாளுக்கு முன்னால் தினக்குரல் பத்திரிகையை எரித்தாரே உங்கள் குருணா அவரிடம் கேட்டுப் பாருங்கள்

ஊட்க தர்மமென்பது ஊளையிடுவதையெல்லாம் ஒலிபரப்புவது என்றல்ல

கொஞ்சம் குத்தும்தான் என்ன செய்வது உண்மை எப்போதும் அப்படித்தான்
அக்கா தங்கை சாட்சி சொல்லித்தான் இவர்களின் கற்பழிப்பை நிரூபிக்க வேண்டுமென்பதில்லை உங்களுக்கேன் சுடுவான் நீங்களும் அதையெல்லாம் செய்தீர்களோ?


- Mathivathanan - 06-04-2004

அதுதான் மட்டக்களப்பிலிருக்கும் ஆதரவிலிருந்து தெரிகின்றதே அன்று நடந்த ஊடக தர்மம்..
நீங்கள் செய்ததை மறைக்க மற்றவர்களை குற்றம்சாட்டுகிறீர்கள் போலும்.. நீங்கள் செய்ததை எனக்கு சொல்லிக்காட்டியுள்ளீhகள்.. அக்கா தங்கையை வைத்து வியாபாரம்செய்வது வெட்கம் வெட்கம்..
Idea Idea Idea


- Eelavan - 06-04-2004

நீங்கள் அக்கா தங்கையை அதற்கெல்லாம் உபயோகப்படுத்தும் போது வெட்கம் தெரிவதில்லை நாங்கள் சுட்டிக் காட்டினால் சுடுகிறதோ?

மட்டக்களப்பில் இன்னும் கருணாவின் ஆட்சிதான் என்று சொன்ன அரசியல் ஞானியல்லவா கொஞ்சம் குழம்பினால் அப்படித்தான்


- Mathivathanan - 06-04-2004

மேலே என்ன எழுதியிருக்கிறேன் என்பதை ஒருமுறை பாரும் புரியும்..

கருணா ஆட்சியில்லாமல்த்தான் காவலரன்கள் போடு என்று இராணுவத்தை கோருகிறார்களாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Eelavan - 06-04-2004

காவலரண் என்பது மட்டக்களப்பில் இருக்கும் இராணுவப் பகுதியிலிருந்து கருணாவின் பெயரில் காவாலிகள் வந்து சேட்டைவிடாமலிருக்க தடுப்பு காவலரண் போடுவதால் மட்டக்களப்பு கருணா வசம் என்று ஆகிவிடுமா?
யாழ்ப்பாணத்தில் இராணுவம் சந்திக்குச் சந்தி காவலரண் போட்டுள்ளதே யாழ்ப்பாணம் யார் ஆட்சி?


- Mathivathanan - 06-04-2004

விடையையும் நீங்களே கூறுங்கள்.. அடாவடத்தனம் அட்டூளியங்கள் காரணமாகத்தான் காவலரன்களே வந்தன.. காவலரன்hளே என்னவென்று தெரியாமல் வளர்ந்த எமக்கு காவலரன்கள் காட்டுகிறீர்கள்.. கொண்டுவந்து இருத்திவிட்டு குளிர்காய்கிறீர்கள்..
Idea Idea Idea


- Eelavan - 06-04-2004

இதெதான் மட்டக்களப்பு காவலரண் பற்றிய உங்கள் கேள்விக்கும் பதில் அடாவடித்தனம் அட்டூழியம் அதிகரிக்க மட்டக்களப்பில் காவலரண் தேவைப்பட்டது

நீங்கள் வளர்ந்த காலத்தில் காவலரன் இருக்கவில்லை ஆனால் அதை கொண்டு வந்து இருத்தியது நாங்களல்ல நீங்கள் கொண்டு வந்து இருத்திவிட்டு குளிர்காயும் நாட்டுக்கு ஓடிப்போனீர்கள் நாங்கள் வெந்து தணிந்திருக்கிறோம்.

நான் படிப்பு முடிந்தவுடன் திரும்பிப் போக வேண்டும் இன்னொரு முறை வெந்துதான் ஆகவேண்டும் என்று இனி வரவே மாட்டாத நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்


- Mathivathanan - 06-04-2004

கொண்டுவந்து இருத்தியது நீங்கள்.. உங்களால்தான் அவாகள் காவலரன்கள் அமைத்தார்கள்.. காவலரன்களே இல்லாமல் ஒரே சமூகமாக ஒன்றுபட்டுத்தானிருந்தோம்.. காவலரன்கள் அமைக்க கேட்கும் உங்களுக்கு அவர்கள் ஏன் காவலரன்கள் அமைத்தார்கள் என்பது இப்போதுகூட விளங்கவில்லையா..?
அழுகுரல் எதுவுமில்லாமல் தானிருந்தொம்.. கொலை.. கொள்ளை விபச்சாரம் இல்லாமல்த்தானிருந்தோம்.. எந்தவித பிரச்சனையுமிருக்கவில்லை.. இருந்ததோ கைவிட்டு எண்ணுமளவு சிங்களவர்.. தமிழன் தமிழில்தான் சிங்களவனுடன் பேசினான்.. தற்போத இருப்பதுபோல சிங்களத்தில் பேசவில்லை.. கொண்டுவந்து இருத்திவிட்டு குளிர்காய்கிறீர்கள்..அதுதான் உண்மை..
மூன்றில் ஒருபங்கு தமிழ் மக்கள் சிங்கள பிரதேசத்தில்தான் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.. அது சாட்சியம் சொல்கின்றது உலகத்துக்கு..
Idea Idea Idea


- Eelavan - 06-04-2004

தனிச்சிங்களம் சட்டம்கொண்டுவந்ததும் அதனை எதிர்த்து பலர் வேலையை விட்டு வந்ததும் பொய் என்கிறீர்கள் உங்களுக்கெப்படித் தெரியும் அதற்கு முன் தானே நாட்டை விட்டு ஓடிவிட்டீர்கள் என்று நான் சொல்லவில்லை நீங்களே சொன்னீர்கள்


- Mathivathanan - 06-04-2004

உதெல்லாம் போருக்கான போதனையில் வளர்ந்தவர்களுக்கு சரிப்படலாம்.. அப்படி பெரிதாக எதுவும் நடைபெறவில்லை.. அரசியல்வாதிகள் அக்காலகட்டத்தில் அகிம்சைப்போராட்டத்தை கையாண்டு உயிரிழப்புக்கள் எதுவுமின்றி இல்லாமல ;செய்துவிட்டார்களே.. அதை இனக் கலவரமாக போதனைசெய்து குளிர்காய்ந்த பலரும் சந்தர்ப்பவாதிகள்.. இருக்காத இராணுவத்தை கொண்டுவந்து இருத்திவிட்டு கதையளந்து சீவிப்பவர்கள்..
பதில் எழுத முடியவில்லை என்றவுடன் திரித்து எழுதுகிறீர்கள்..


- Eelavan - 06-04-2004

திரித்தே பழக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் கூறுவதும் திரிப்பாகத் தான் தெரியும்.நான் எப்பொழுதோ சொல்லியிருக்கிறேன் போர் நாங்கள் விரும்பி ஆரம்பித்ததல்ல எங்கள் மீது திணிக்கப்பட்டது.அதில் சில தான் தமிழாராய்ச்சிப்படுகொலை,நூலக எரிப்புப் போன்றவை இவையெல்லாம் ஊருலகம் அறிந்தவை இவையெல்லாம் நடக்கவில்லை தமிழன் சிங்களவனுடன் குலாவித்திரிந்தான் என்பது ஒரு சினிமாப் படம் எடுக்க உதவும் வரலாறாகாது.


- Mathivathanan - 06-04-2004

இங்குதான் ஆரம்பத் திரிப்பே இருக்கிறது.. தமிழாராச்சி மகாநாட்டுபிரச்சனைகூட.. கல்லெறிந்து ஆமியை வரவழைத்து அவாகள் உள்ளே வர.. கூட்டமாக கல்லெறிந்து ஆர்ப்பாட்டம் செய்து.. அவர்கள் மேல்நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்தபோது மின்கம்பி அறுந்து விழுந்து நடைபெற்றது.. நூலக எரிப்புக்கூட அப்படியானதொன்றுதான்..
நீங்கள் கண்டி.. கொழும்பு பிரதான நூலகங்களுக்கு போகவில்லையா.. அப்பர் எனக்கு சின்ன வயதாக இருக்கும்பொது கண்டி நூலகத்துக்கு கூட்டிச்சென்றார்.. முக்கியாக அவருக்குத் தேவையான ஒரு தமிழ் நூலை ஒருவாரம் இரவல் வேண்டத்தான் கூட்டிப்போனார்.. சிங்களப் பிரதேசத்தில் தமிழ் நூல்களை பாதுகாத்து பராமரிப்பவர்கள் தமிழ் பிரதேசத்தில் எரிக்க நிச்சயமாக புறக் காரணிகள் இருக்கும்.. இருக்கின்றன..
எல்லாம் கொலைக்கலாச்சாரம் கொண்டுவந்ததுதான்.. நீங்கள்தான் மாற்றுக்கருத்தை பரிசீலிப்பதே இல்லையே.. பின்பு எப்படி இவைகள் தெரியவரும்..?


- Eelavan - 06-04-2004

ஒரு சிறு திருத்தம் தமிழாராய்ச்சிப் படுகொலை இராணுவத்தால் நடத்தப்படவில்லை சிங்களவனுடன் கூடிகுலாவி நீங்கள் சொன்ன சிங்களவனுடன் தமிழில் கதைத்த எம்மினத்துப் புல்லுருவிகள் அடங்கலான காவல்துரையினரால் நடத்தப்பட்டது.

உங்கள் திரிப்பு கல்லெறிந்து வரவழைத்தார்கள் என்று.நான் அந்தவேளையில் பிறந்திருக்கவில்லையாயினும் நடந்த சம்பவங்களை வாசித்தறிந்திருக்கிறேன்.இரு பக்கத்துக் கருத்துகளுக்கும் செவி மடுத்திருக்கிறேன் ஐக்கியதேசியக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் வந்து தமிழாராய்ச்சி மாநாட்டிலில் கொல்லப்பட்டவர்களுக்கென வைக்கப்பட்ட நினைவுத் தூபியில் ,மலர்வளையம் சாத்தி நீங்கள் என்றும் எம்முடம் இருக்கிறீர்கள் என்று முதலைக் கண்ணீர் விட்டதையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.உங்களுக்கு என்னென்ன வரலாறு தெரியுமோ அதுதான் உண்மை ஆனால் நீங்கள் சொல்வது அவற்றின் திரிப்பு.

காவல்துரை மீது தாக்குதல் நடத்தியவர்கள் மாநாடு நடந்த இடத்துக்கே வரவில்லை அவர்கல் வேறுபக்கமாகச் சென்றுவிட வேண்டுமென்ரே கூட்டத்தில் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.துப்பாக்கியால்தான் சுட வேண்டுமென்றில்லை.தடி துப்பாக்கியின் பின் புரத்தால் அடித்தும் காயப்படுத்தலாம்,காயப்படுத்தினார்கள். சும்மா கண்டி நூலகத்தில் தமிழ் புத்தகம் இருப்பதாக
சப்பைக்கட்டுக் கட்டவேண்டாம் நூலக எரிப்புக்கு எந்தவிதமான புறக்காரணி அகக்காரணி இருப்பினும் மிலேச்சத்தனமான வெறித்தனமான செயல் உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதற்காக நீங்களும் சிங்களவனும் கொஞ்சிக் குலாவினீர்கள் என்பதற்காக எல்லாம் அப்படியே என்று நினைக்கிறீர்கள் போலுள்ளது


- Mathivathanan - 06-04-2004

கல்லெறிந்நு கலவரம் உண்டாக்கி வரவழைத்து தேடிவிட்டு கதையளக்கிறார்கள்.. அப்பாவிப் பொலீசாரை கொண்று மேலும் ரவுணுக்குள் வைத்து பொலீசாiருக்கு அடித்து கல்லெறிந்து ஆர்ப்பாட்டம் நடாத்தி வரவழைத்ததுதான் நூலக எரிப்பு..

கண்டிக்குப் போகிறோம் என்றால் எப்படி குதூகலமோ.. அப்படியே பசுமையாகப் பதிந்திருக்கின்றது அந்த நாள் நினைவு..

நீங்கள் தமிழர் சிங்களப்பகுதியில் வேலைசெய்ய விரும்புகிறார்கள் என்பதையே விரும்பாதவர்.. எப்படி கண்டியிலுள்ள நூலகத்தில் தமிழ் நூல்கள் இருக்கின்றன என்பதை நம்புவீர்கள்..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->