Yarl Forum
எந்த முருகன் பெரியவன்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: எந்த முருகன் பெரியவன்? (/showthread.php?tid=6579)

Pages: 1 2 3 4 5 6 7 8


- kuruvikal - 10-21-2004

Sriramanan Wrote:
Quote:சமயங்கள் காட்டும் ஆன்மீக வழியை... விஞ்ஞானத்தால் விளக்கமுடியாத பலவற்றை... ஆன்மீகம் மெய்யியல் கொண்டு அற்புதமாக விளக்கி உள்ளது... அதற்குச் சான்று தியானமும் யோகாசனமும்....இவை விஞ்ஞானம் தோன்ற முன் வந்தவை...ஆனால் இன்று அதன் தன்மைகளை உடற்தொழிலியல் கொண்டு விளக்க வெளிக்கிட்டால் விஞ்ஞானமே வியந்துதான் நிற்கும்... விஞ்ஞானம் தெரியாத காலத்தில் கிரிகைகளுக்காக கட்டிய பிரமிட்டுகள் இன்று நவீன விஞ்ஞானத்தால் வியந்து பார்க்கப்படும் அம்சம் தான்... இப்படிப்பல....!

குருவியரே...! தியானமும் யோகசனமும் ஒருவகை மருத்துவமேயன்றி இவை சமயம் சார்ந்தவையல்ல. இவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே இவைகளைச் சமயம் சார்ந்ததாக காட்டப்பட்டுள்ளது.

கீழத்தேய (இந்திய உபகண்ட மருத்துவம்) மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும்...அது இயற்கையில் உள்ள மூலிகைகள் கொண்டு தியானங்கள் அநுட்டானங்கள் என்று மத நெறி சார்ந்து எழுந்தவை.... ஏடுகள் மூலம் சந்ததிக்கு சந்ததி கடத்தப்பட்டவை... அந்த மருத்துவமுறைகளுக்கும் மத நெறிகளுக்கும் இடையே பகுக்க முடியாத ஒற்றுமை உண்டு தற்போதும் இருந்து வருகிறது...!

பல மேலைத்தேய மருத்துவ முறைகள் உடல் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணி ஆபத்தான பக்க விளைவுகளை உண்டு பண்ணுகின்றன...ஆனால் சித்த மருத்துவம் அப்படி அன்று....அது இயற்கையோடு ஒன்றிய ஒரு மருத்துவ முறை..நாம் உணவு உண்பது போன்று இயற்கையாக உள்ள மூலிகைகள் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறை...அதற்குள் நெறிகளும் தியான முறைகளும் புகுத்தப்பட்டு சிறப்பான பலன் பெறப்பட வழி செய்யப்பட்டுள்ளது...! அது இயற்கை மருத்துவ முறையாகையால் நோய் சுகமடைய நீண்ட காலம் எடுக்கும் மேற்குலக மருத்துவ முறை நோயை குறுகிய காலத்தில் மாற்றினாலும் உடல் இரசாயனச் சமநிலையை பெரிதும் பாதிக்கச் செய்கிறது....!

மத நெறிகளும் மருத்துவ நெறிகள் தான்...! நமஸ்காரம் கூட ஒரு உடற்பயிற்சி தான்..... ஜிம் என்று போய் முள்ளந்தண்டு என்பு விலகல்... முள்ளந்தண்டு என்பு இடைத்தட்டு விலகல்... நரம்புக் கோளாறுகள் என்று வருபவர்கள் அதிகம்...ஆனால் தினம்தோறும் வீட்டில் நமஸ்காரம் செய்தவர்கள் இப்படியாக வருவது கிடையாது.....!

தயவுசெய்து ஒன்றைக் குறை கூற முதல் இயன்றவரை அதைப் பற்றி ஆழமாக அறிய முயலுங்கள்... அதன் பின் குறை இருந்தால் சொல்லுங்கள்... திருத்த வசதி அளிக்கும்... வெறும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை சொல்லாதீர்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- kuruvikal - 10-21-2004

Sriramanan Wrote:குருவியரே நீங்கள் கூறியது சரிதான் அதேநேரத்தில் முருகனுக்கு மயில் வாகனமானது சூரனுடன் இடம்பெற்ற போரில்தான். சூரனின் உடல் அங்கம் ஒன்றை முருகன் வெட்டியெறிந்தபோது அதுவே மயிலாக மறியதாக சமயப் புத்தகத்தில் படித்த ஞாபகம். மாம்பழக் கதையில் வரும் சிறுவன் முருகன் அந்த மயில் வாகனத்திலேயே உலகை வலம் வருகிறான். ஆனால் இச் சிறுவன் முருகன் சூரனுடன் போர் புரிந்த இளைஞன் முருகனைவிட வயதில் மூத்தவன்.

சிறுவனாக உள்ளவனுக்கு இளைஞனாக உள்ளவனை விட வயது அதிகம்??!! இது தான் இந்து மதம்

முருகனைப் பாலனாகக் காட்டியதும் அவன் பெரிய அசுரனை அழிப்பதாகக் காட்டுவதும் உண்மை நிகழ்வில்லாமல் இருந்தாலும் கூட சொல்லும் தத்துவமே முக்கியம்... தர்மம் சிறிதாயினும் அது அதர்மத்தை அழிக்கும்... அழிவின் போதும் தர்மம் தன் பண்பை இழக்காது... அது மட்டுமன்றி ஆன்மா என்பது எல்லோருக்கும் சமன் உடல் தான் மாறுபடுகிறது அது கொண்ட மனம் தான் ஆணவத்தை வரவழைத்து அநியாயத்தை வளர்க்கிறது...தர்மம் அநியாயத்தைத்தான் அழிக்கும் அதற்குள் இருக்கும் தர்மத்தைக் கூட அழிக்காது என்பதுதான் விளக்கம்...! அதனால் தான் சூரனின் ஆன்மா சேவலும் மயிலுமாக உடல் பெற்றது...!

எனவே சிறுவன் ஆகினும் தர்மத்துக்காய் வாழ் எந்தப் பெரிய அதர்மத்தையும் நீ எதிர் கொள்ளும் திறன் பெறுவாய் என்பதுதான் வாழ்வியல் விளக்கமாக இருக்க முடியும்....! அதை விட்டுவிட்டு முருகன் சின்னனா பெரிசா என்பது விளங்கிக் கொள்ள முடியா வேடிக்கை....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Sriramanan - 10-21-2004

Quote:முருகனைப் பாலனாகக் காட்டியதும் அவன் பெரிய அசுரனை அழிப்பதாகக் காட்டுவதும் உண்மை நிகழ்வில்லாமல் இருந்தாலும் கூட சொல்லும் தத்துவமே முக்கியம்... தர்மம் சிறிதாயினும் அது அதர்மத்தை அழிக்கும்... அழிவின் போதும் தர்மம் தன் பண்பை இழக்காது... அது மட்டுமன்றி ஆன்மா என்பது எல்லோருக்கும் சமன் உடல் தான் மாறுபடுகிறது அது கொண்ட மனம் தான் ஆணவத்தை வரவழைத்து அநியாயத்தை வளர்க்கிறது...தர்மம் அநியாயத்தைத்தான் அழிக்கும் அதற்குள் இருக்கும் தர்மத்தைக் கூட அழிக்காது என்பதுதான் விளக்கம்...! அதனால் தான் சூரனின் ஆன்மா சேவலும் மயிலுமாக உடல் பெற்றது...!

குருவியரே எனது கேள்வி முருகன் பெரியவனா அல்லது சூரன் பெரியவனா என்பதில்லை.

நான் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான காரணம் இக் கதைகளை எழுதியோர் தங்கள் மனம் போன போக்கில் எழுதியுள்ளனர் என்பதையும் கதை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவுமே.


- Sriramanan - 10-21-2004

யார் இந்த முருகன்?

வேலன். வேல் கொண்டு பகையழித்த வீரத் தமிழ்ப் பெருந் தலைவன். தமிழர்களின் காவலன். அப்போதைய பிரபாகரன்.

இவனிற்கு முருகன், சண்முகன், பழனி (இன்னும் பல) என்ற பெயர்கள் கிடையாது. வள்ளி தெய்வானை ஆகிய மனைவிகள் கிடையாது. இவன் பிள்ளையார் என்ற யானையின் தம்பி இல்லை. சிவன் என்ற கற்பனைக் கடவுளின் நெற்றிக் கண்ணால் பிறந்தவன் இல்லை.(தமிழ்த் தாயொருத்தி 10 மாதங்கள் சுமந்தே இவனை ஈன்றெடுத்தாள்) ஆறு தலைகள் கிடையாது. பன்னிரண்டு கைகள் கிடையாது.

தமிழர்களின் உள்ளங்களில் கதாநாயகனாக வாழ்ந்த தலைவன் வேலனை வேறுவழியின்றி இந்துமதம் என்ற சாக்கடையைத் தமிழர்களிடம் திணித்த ஆரியர்களினால் தமிழர்களுக்கு மாத்திரம் கடவுளாக்கப்பட்டவன். தமிழ்க் கடவுள் என்பதற்காக இரு மனைவிகள் கொடுத்து அசிங்கப்படுத்தப்பட்டவன்.


- hari - 10-21-2004

ஒரே குழப்பமாக இருக்கிறது :roll: . கருத்து களம் சூடு பிடித்துள்ளது. சிறீரமணன், குருவிகள் இருவரும் அழகாக தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர். தொடரட்டும்......


- tamilini - 10-21-2004

Sriramanan Wrote:யார் இந்த முருகன்?

வேலன். வேல் கொண்டு பகையழித்த வீரத் தமிழ்ப் பெருந் தலைவன். தமிழர்களின் காவலன். அப்போதைய பிரபாகரன்.

இவனிற்கு முருகன், சண்முகன், பழனி (இன்னும் பல) என்ற பெயர்கள் கிடையாது. வள்ளி தெய்வானை ஆகிய மனைவிகள் கிடையாது. இவன் பிள்ளையார் என்ற யானையின் தம்பி இல்லை. சிவன் என்ற கற்பனைக் கடவுளின் நெற்றிக் கண்ணால் பிறந்தவன் இல்லை.(தமிழ்த் தாயொருத்தி 10 மாதங்கள் சுமந்தே இவனை ஈன்றெடுத்தாள்) ஆறு தலைகள் கிடையாது. பன்னிரண்டு கைகள் கிடையாது.

தமிழர்களின் உள்ளங்களில் கதாநாயகனாக வாழ்ந்த தலைவன் வேலனை வேறுவழியின்றி இந்துமதம் என்ற சாக்கடையைத் தமிழர்களிடம் திணித்த ஆரியர்களினால் தமிழர்களுக்கு மாத்திரம் கடவுளாக்கப்பட்டவன். தமிழ்க் கடவுள் என்பதற்காக இரு மனைவிகள் கொடுத்து அசிங்கப்படுத்தப்பட்டவன்.
இது என்ன புதுக்கதை.. ஆதாரத்தோடு சற்று விளக்குங்கள் சிறிறமணன்..! :roll: :roll:


- tamilini - 10-21-2004

[quote]நான் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான காரணம் இக் கதைகளை எழுதியோர் தங்கள் மனம் போன போக்கில் எழுதியுள்ளனர்
இவை எல்லாம் கதைகளா...?? அப்போ ஒரு கதைக்காக தான் கந்த சஸ்டி விரதமுமா...??


- Sriramanan - 10-21-2004

Quote:இவை எல்லாம் கதைகளா...?? அப்போ ஒரு கதைக்காக தான் கந்த சஸ்டி விரதமுமா...??
இவை கற்பனைக் கதைகள் என்பது உறுதி
ஆனால் விரதம் என்பது மருத்துவம் சார்ந்தது. விரதமிருப்பதால் எங்களுக்கு எந்தவித வரமும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் அதன் மூலம் எமது உடல் தூய்மையடைகிறது.

நாம் யாரும் எமது உடல் தூய்மையடைய வேண்டும் என்பதற்காக விரதம் இருப்பதில்லை. விரதம் இருந்தால் எமது உடல் தூய்மையடையும் என்று யாரும் சொன்னால் நாம் ஏற்கொண்டு அதைச் செய்ய மாட்டோம். அதற்காகவே இந்தச் சமயக் கதைகளோடு தொடர்பு படுத்தி மக்கள் இவற்றைச் பின்பற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டவை.

கந்த சஸ்டி விரதம் இருந்தவர்கள் அவ் விரதத்தை முடித்த பின்னர் அவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவகையான புத்துணர்ச்சி இருப்பதை உணருவார்கள். இதை முருகன் கொடுக்கவில்லை மாறாக அந்த விரதமே கொடுக்கிறது.


- Sabesh - 10-21-2004

Sriramanan Wrote:
Quote:இவை எல்லாம் கதைகளா...?? அப்போ ஒரு கதைக்காக தான் கந்த சஸ்டி விரதமுமா...??
இவை கற்பனைக் கதைகள் என்பது உறுதி
ஆனால் விரதம் என்பது மருத்துவம் சார்ந்தது. விரதமிருப்பதால் எங்களுக்கு எந்தவித வரமும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் அதன் மூலம் எமது உடல் தூய்மையடைகிறது.

நாம் யாரும் எமது உடல் தூய்மையடைய வேண்டும் என்பதற்காக விரதம் இருப்பதில்லை. விரதம் இருந்தால் எமது உடல் தூய்மையடையும் என்று யாரும் சொன்னால் நாம் ஏற்கொண்டு அதைச் செய்ய மாட்டோம். அதற்காகவே இந்தச் சமயக் கதைகளோடு தொடர்பு படுத்தி மக்கள் இவற்றைச் பின்பற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டவை.

கந்த சஸ்டி விரதம் இருந்தவர்கள் அவ் விரதத்தை முடித்த பின்னர் அவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவகையான புத்துணர்ச்சி இருப்பதை உணருவார்கள். இதை முருகன் கொடுக்கவில்லை மாறாக அந்த விரதமே கொடுக்கிறது.

நீங்கள் சொல்றது சரிதான். விரதம் மட்டுமல்ல, நாங்கள் மூடநம்பிக்கை என்று எம் மூதாதையர்களை மூடராக்கி நகைக்கும் விஷயமெல்லாத்திற்கும் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. இதில் சில இப்போதய வாழ்க்கைக்கு தேவைப்படுவதில்லை, அதனால் நாம் அவற்றை மூடநம்பிக்கை என்கிறோம். ஆனால் அவற்றிற்கான காரணங்களை சற்று சிந்திப்போமானால் பல விஷயங்கள் புரியும்.
உந்த செவ்வாய் தோஷம் இருக்கிறாக்கள் செவ்வாய் தோஷம் இல்லாதாக்களை திருமணம் செய்தால், கணவர் அல்லது மனைவி இறந்து விடுவார் எண்டு எங்கடை பெரியாக்கள் பயப்பிடுவினம். இதுக்கான விளக்கம் யாருக்கு தெரியும். பி.கு. உண்மையில் அப்படி இறப்பது பெண்கள் அதுவும் முதலாவது மகப்பேறுக்கு பின்னர் தான். (இதைக் கேட்பதன் காரணம் விஞ்ஞானத்தில் இப்போ கண்டு பிடிச்சதை எம்மவர்கள் எப்பவோ செவ்வாய், சனி எண்டு சொல்லிப்போட்டினம்)

இரண்டாவது விஷயம்:
நவராத்திரி - 9 இரவுகள்
விஜய தசமி - 'தச' - 10 வது
ஆனால் இந்த வருடம் 8வது நாள் நவராத்திரி முடியுதாம் - 9வது நாள் விஜய தசமியாம். இலக்சுமி;க்கு தானாம் ஒருநாள் கட். உப்பிடி போனால் 4 நாளில் நவராத்திரி முடிஞசிடும் போல இருக்கு. இதுக்கு யாருக்காவது விளக்கம் தெரியுமோ??? எனக்கும் ஒண்டுமா விளங்க இல்லை......


- Jude - 10-21-2004

Sabesh Wrote:உந்த செவ்வாய் தோஷம் இருக்கிறாக்கள் செவ்வாய் தோஷம் இல்லாதாக்களை திருமணம் செய்தால், கணவர் அல்லது மனைவி இறந்து விடுவார் எண்டு எங்கடை பெரியாக்கள் பயப்பிடுவினம். இதுக்கான விளக்கம் யாருக்கு தெரியும்.
செவ்வாய் தோஷம் என்று சொல்லி எத்தனையோ பேருக்கு மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை கிடைக்காமல் போய்விட்டது. சாகிறவ÷கள் எல்லாருக்கும் செவ்வாய் தோஷமும் இல்லை. செவ்வாய் தோஷம் இருப்பவ÷கள் எல்லாம் உடன் சாவதும் இல்லை.


Sabesh Wrote:உண்மையில் அப்படி இறப்பது பெண்கள் அதுவும் முதலாவது மகப்பேறுக்கு பின்னர் தான். (இதைக் கேட்பதன் காரணம் விஞ்ஞானத்தில் இப்போ கண்டு பிடிச்சதை எம்மவர்கள் எப்பவோ செவ்வாய், சனி எண்டு சொல்லிப்போட்டினம்)
இன்றைய மருத்துவ அறிவின் நிலையில் பெண்கள் மகப்பேறின் போது சாகக்சகூடாது. சாக சந்த÷ப்பம் இருக்க கூடாது. காரணம் மகப்பேறு ஒரு நோயல்ல. அது இயற்கையான ஒரு நிகழ்வு. அப்படி தாய் இறந்தால், மகப்பேற்றிற்கு பொறுப்பான வைத்திய÷ மேல் (இலங்கை உட்பட) பெரும்பாலான நாடுகள் பொலிஸ் விசாரணை நடத்துவது வழக்கம். காரணம் வைத்திய÷ வெறியில் இருந்தால், அல்லது கொலைகாரனாக இருந்தால்தான் இன்றைய காலநிலையில் தாய்க்கு மரணம் நிகழ வாய்ப்பு உண்டு.

அது சரி, எப்படி சாத்திரியா÷ சாதகத்தை பா÷த்து யோனிப்பொருத்தம் சொல்லுகிறா÷? யாருக்காவது தெரியும்?


- Sriramanan - 10-21-2004

Quote:உந்த செவ்வாய் தோஷம் இருக்கிறாக்கள் செவ்வாய் தோஷம் இல்லாதாக்களை திருமணம் செய்தால், கணவர் அல்லது மனைவி இறந்து விடுவார் எண்டு எங்கடை பெரியாக்கள் பயப்பிடுவினம். இதுக்கான விளக்கம் யாருக்கு தெரியும். பி.கு. உண்மையில் அப்படி இறப்பது பெண்கள் அதுவும் முதலாவது மகப்பேறுக்கு பின்னர் தான். (இதைக் கேட்பதன் காரணம் விஞ்ஞானத்தில் இப்போ கண்டு பிடிச்சதை எம்மவர்கள் எப்பவோ செவ்வாய், சனி எண்டு சொல்லிப்போட்டினம்)


சபேஸ் இது முற்று முழுதான முடநம்பிக்கை. இவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்காகச் சாத்திரிகளால் உருவாக்கப்பட்டவை. இந்த செவ்வாய் தோசம் எந்த வகையிலும் மக்களின் வாழ்க்கையில் இடயூறு விளைவிகப்போவதில்லை.


- Sabesh - 10-21-2004

சரி.... ஒரு காலத்தில் அமெரிக்காவில திருமணத்திற்கு முன்னர் ஆணும் பெண்ணும் இரத்த பரிசோதனை செய்து இருவரினது இரத்தமும் பொருந்துமா என பார்க்கும் வழக்கம் இருந்தது... ஏன், இப்பவும் சில மாநிலத்தில் அந்த வழக்கம் இருக்காம்... எந்த மாநிலம் எண்டு தெரியவில்லை..... அறிந்தால் தெரியப்படுத்துகின்றேன். அதற்கும் எங்கள் செவ்வாய் தோஷத்திற்க்கும் தொடர்பு உள்ளது.


- shanmuhi - 10-21-2004

Quote:சரி.... ஒரு காலத்தில் அமெரிக்காவில திருமணத்திற்கு முன்னர் ஆணும் பெண்ணும் இரத்த பரிசோதனை செய்து இருவரினது இரத்தமும் பொருந்துமா என பார்க்கும் வழக்கம் இருந்தது... ஏன், இப்பவும் சில மாநிலத்தில் அந்த வழக்கம் இருக்காம்... எந்த மாநிலம் எண்டு தெரியவில்லை..... அறிந்தால் தெரியப்படுத்துகின்றேன். அதற்கும் எங்கள் செவ்வாய் தோஷத்திற்க்கும் தொடர்பு உள்ளது
þô§À¡¦¾øÄ¡õ þÃò¾ À⧺¡¾¨É¢ø aids þரு츢Ⱦ¡... ±ýறு À¡÷òது ¾¢ருÁ½õ ¦ºöயுõ ÅÆì¸முõ þரு츢ýÈது.


- Sabesh - 10-21-2004

shanmuhi Wrote:þô§À¡¦¾øÄ¡õ þÃò¾ À⧺¡¾¨É¢ø aids þரு츢Ⱦ¡... ±ýறு À¡÷òது ¾¢ருÁ½õ ¦ºöயுõ ÅÆì¸முõ þரு츢ýÈது.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Jude - 10-21-2004

Shammuhi Wrote:
Quote:மேற்கோள்:
சரி.... ஒரு காலத்தில் அமெரிக்காவில திருமணத்திற்கு முன்னர் ஆணும் பெண்ணும் இரத்த பரிசோதனை செய்து இருவரினது இரத்தமும் பொருந்துமா என பார்க்கும் வழக்கம் இருந்தது... ஏன், இப்பவும் சில மாநிலத்தில் அந்த வழக்கம் இருக்காம்... எந்த மாநிலம் எண்டு தெரியவில்லை..... அறிந்தால் தெரியப்படுத்துகின்றேன். அதற்கும் எங்கள் செவ்வாய் தோஷத்திற்க்கும் தொடர்பு உள்ளது
.

þô§À¡¦¾øÄ¡õ þÃò¾ À⧺¡¾¨É¢ø aids þரு츢Ⱦ¡... ±ýறு À¡÷òது ¾¢ருÁ½õ ¦ºöயுõ ÅÆì¸முõ þரு츢ýÈது.
எயிட்ஸிலும் பா÷க்க Rh+/Rh- வித்தியாசங்களால் குழந்தை இறக்கவும் அல்லது நோய்வாய்ப்படவும், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது தாய் நோய்வாய்ப்படவும் இறக்கவும் சாத்தியம் இருக்கிறது. இதற்காகவும் கணவன் மனைவிக்கு ஒரே இரத்தப்பிரிவு உண்டா என்று பா÷த்து திருமணம் செய்வ÷. இன்றைய மருத்துவமுறைகள் இவற்றையும் தகுந்த முறையில் கையாளக்சகூடியவை.


- Thiyaham - 10-21-2004

செவ்வாயில் செய்கோள் இறங்கிய பின்னரும்
செவ்வாய் தோசம் நீங்க கோயில் ஏறுகின்றோம்


- Sabesh - 10-21-2004

Jude Wrote:
Shammuhi Wrote:þô§À¡¦¾øÄ¡õ þÃò¾ À⧺¡¾¨É¢ø aids þரு츢Ⱦ¡... ±ýறு À¡÷òது ¾¢ருÁ½õ ¦ºöயுõ ÅÆì¸முõ þரு츢ýÈது.
எயிட்ஸிலும் பா÷க்க Rh+/Rh- வித்தியாசங்களால் குழந்தை இறக்கவும் அல்லது நோய்வாய்ப்படவும், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது தாய் நோய்வாய்ப்படவும் இறக்கவும் சாத்தியம் இருக்கிறது. இதற்காகவும் கணவன் மனைவிக்கு ஒரே இரத்தப்பிரிவு உண்டா என்று பா÷த்து திருமணம் செய்வ÷. இன்றைய மருத்துவமுறைகள் இவற்றையும் தகுந்த முறையில் கையாளக்சகூடியவை.

நன்றிகள் யுூட்...
இதைத்தானாம் செவ்வாய் தோஷம் எண்டு பாக்கிறது....


- Sriramanan - 10-21-2004

Sabesh Wrote:
Jude Wrote:
Shammuhi Wrote:þô§À¡¦¾øÄ¡õ þÃò¾ À⧺¡¾¨É¢ø aids þரு츢Ⱦ¡... ±ýறு À¡÷òது ¾¢ருÁ½õ ¦ºöயுõ ÅÆì¸முõ þரு츢ýÈது.
எயிட்ஸிலும் பா÷க்க Rh+/Rh- வித்தியாசங்களால் குழந்தை இறக்கவும் அல்லது நோய்வாய்ப்படவும், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது தாய் நோய்வாய்ப்படவும் இறக்கவும் சாத்தியம் இருக்கிறது. இதற்காகவும் கணவன் மனைவிக்கு ஒரே இரத்தப்பிரிவு உண்டா என்று பா÷த்து திருமணம் செய்வ÷. இன்றைய மருத்துவமுறைகள் இவற்றையும் தகுந்த முறையில் கையாளக்சகூடியவை.

நன்றிகள் யூட்...
இதைத்தானாம் செவ்வாய் தோஷம் எண்டு பாக்கிறது....

Rh+/Rh- வித்தியாசத்திற்கும் செவ்வாய் தோசத்திற்கும் என்ன சம்பந்தம்?

முதலில் செவ்வாய் தோசம் என்டா என்னென்று யாராவது சரியா விளக்கம் சொல்லுங்கோ? செவ்வாய் தோசம் உள்ளவர்களுக்கு உள்ள குறைகளையும் விளக்கமாகத் தாங்கோ?


- kuruvikal - 10-22-2004

உதில ஆட்டுக்க மாட்டையும் மாட்டுக்க ஆட்டையும் கலந்து கதைக்கிறியள்... உங்களட்ட ஒரே ஒரு கேள்வி... நீங்கள் வாழும் இந்த உலகம் எப்படி உருவானது உங்களவில் விளக்குங்கோ பாப்பம்.... விஞ்ஞானம் கூட ஒரு ஊகத் தகவலைத்தான் (Hypothetical theory) தந்து கொண்டிருக்கிறது...இன்னும் நிரூபிக்கவில்லை...நீங்கள் உங்கட அறிவுகள் கொண்டு நிரூபியுங்கோ மிச்சம் பிறகு கதைப்பம்...விஞ்ஞானத்துக்குள்ளும் கட்டுக்கதைகள் இல்லை என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உண்டு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

எங்களுக்குத் தேவை கதை உண்மையா பொய்யா என்பதல்ல... கதை சொல்லும் சாரம் என்ன என்பதுதான்... அது முருகன் கொண்டு வந்தால் என்ன கர்ணன் சார்ந்து வந்தால் என்ன...அல்லது அனுமர் சார்ந்து.... இராவணன் சார்ந்து வந்தால் என்ன....! Idea

விஞ்ஞானம் விளங்க முடியாக் காலத்தில் செவ்வாய் தோஷம் எனும் ஊகத்தகவல் சிலவற்றை சொல்லி இருக்கும்....அது அன்று சரரியானதென்று உணரப்பட்டிருக்கும்... அதுவே இன்று விஞ்ஞானத்தால் வேறு வகையில் நிரூபிக்கப்பட்டதும்... வேடிக்கையாகத் தெரிகிறது...! அதேபோல் நேற்று விஞ்ஞானம் சரி என்பது கூட இன்று பிழை என்று நிரூபிக்கப்படுகிறது... மாற்றங்கள் வருகிறது.... எனவே பழிப்பதை விட்டு பழையதற்குள் உள்ள ஆராய வேண்டிய விடயங்களை ஆராய்து மாற்றங்களைப் புகுத்தி புதியதை உருவாக்க வேண்டியதும் அவற்றை ஒரு வழிகாட்டிகளாக பயன்படுத்த வேண்டியதுமே திறமைசாலிகளின் வேலை....!

Rh factor (Rh +/-) என்பதே குருதி மாற்றீட்டின் தேவை வந்த போதுதான் எதேட்சையாக கண்டுபிடிக்கப்ப்பட்டது... அதுவும் குரங்கில்....! பின்னர் அதுதான் குறிப்பிட்ட சில கர்ப்பிணித் தாய்மாரின் உயிரிழப்புக்கான காரணியாக இனங்காணப்பட்டது...! மேற்குலகைப் பார்த்தால் அதிகம் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கின்றனர்... காரணம் என்ன... கர்ப்ப காலத்தின் போது தாயாக இருக்கும் பெண் புகைப்பிடித்தல் மதுபானம் அருந்துதல் சிலவகை செயற்கை சுவையூட்டிகளை உணவோடு எடுத்தல் சிலவகை தவிர்கக் வேண்டிய உணவுகளை எடுத்தல் போன்றன முக்கிய இடம் வகிக்கின்றன... இவை கண்டுபிடிக்கப்பட்டவை... கண்டுபிடித்து விளக்கப்படாத காரணிகளுக்கு யார் விளக்கம் சொல்வது ஒருவேளை கீழத்தேய கிராமம் சொல்லி இருக்கும்... கவனிக்க மறந்திருப்போம்..அல்லது மூடநம்பிக்கை என்று ஒதுக்கி இருப்போம்....!

:twisted: Idea


- Jude - 10-22-2004

Sabesh Wrote:
Jude Wrote:
Shammuhi Wrote:þô§À¡¦¾øÄ¡õ þÃò¾ À⧺¡¾¨É¢ø aids þரு츢Ⱦ¡... ±ýறு À¡÷òது ¾¢ருÁ½õ ¦ºöயுõ ÅÆì¸முõ þரு츢ýÈது.
எயிட்ஸிலும் பா÷க்க Rh+/Rh- வித்தியாசங்களால் குழந்தை இறக்கவும் அல்லது நோய்வாய்ப்படவும், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது தாய் நோய்வாய்ப்படவும் இறக்கவும் சாத்தியம் இருக்கிறது. இதற்காகவும் கணவன் மனைவிக்கு ஒரே இரத்தப்பிரிவு உண்டா என்று பா÷த்து திருமணம் செய்வ÷. இன்றைய மருத்துவமுறைகள் இவற்றையும் தகுந்த முறையில் கையாளக்சகூடியவை.

நன்றிகள் யூட்...
இதைத்தானாம் செவ்வாய் தோஷம் எண்டு பாக்கிறது....
சபேஷ்,
இந்த Rh என்பது rhesus எனப்படும் புரோட்டீன். 85 வீதமானவ÷களுக்கு இது இரத்த சிவப்பு கலங்களில் இருக்கும். அவ÷களின் இரத்தத்தை Rh+ என்று குறியிடுவ÷. மீதி 15 வீதம் Rh-. இந்த இரண்டும் கணவன்-மனைவிக்கு மாறுபட்டிருந்தால் பிறக்கும் குழந்தைக்கு Rh+ இரத்தப்பிரிவாக இருக்கும். Rh- தாயுடைய பிரிவாக இருந்தால் இவருக்கு rhesus புரோட்டீன் இருக்காது. குழந்தைக்கு இதனால் rhesus பற்றாக்குறை உண்டாகி நோய் வரலாம். தாயின் இரத்தத்தில் rhesus கலந்தால் தாய் இறக்கவும் கூடும்.


பண்டைக்காலத்தில் இருந்த விஞ்ஞான, மருத்துவ அறிவு நிகழ்காலத்தில் பிழையானது, அல்லது போதிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படாது போகும் போது, அந்த அறிவையே சரியென்று பிடித்துக் கொள்ளுபவ÷கள் காரணமாக, அந்த அறிவை மையப்படுத்திய அமைப்பு ஒரு மதம் ஆகிறது. இது இந்து சமயக்கோட்பாடுகளுக்கும் சாத்திரங்களுக்கு மட்டுமல்ல, பெரும்பாலும் எல்லா மதங்களுமே இவ்வாறு தான் உருவாகின.


Sriramanan Wrote:Rh+/Rh- வித்தியாசத்திற்கும் செவ்வாய் தோசத்திற்கும் என்ன சம்பந்தம்?

முதலில் செவ்வாய் தோசம் என்டா என்னென்று யாராவது சரியா விளக்கம் சொல்லுங்கோ? செவ்வாய் தோசம் உள்ளவர்களுக்கு உள்ள குறைகளையும் விளக்கமாகத் தாங்கோ?
ஒரு காலத்தில் சில இளம் தாய்மா÷ இரண்டாவது பிரசவத்துடன் மரணமாவது, முதல் குழந்தையே நோயுடன் பிறப்பது அல்லது இறந்து பிறப்பதை அவதானித்தவ÷கள் அவற்கு காரணத்தை தேடியிருப்ப÷. காரணத்தை காணாத நிலையில், எட்டாத தொலைவில் உள்ள செவ்வாயில் அந்த குற்றத்தை சுமத்தியிருக்கலாம். உண்மையான காரணத்தை அறியும் அறிவு அவ÷களுக்கு அன்று இருக்கவில்லை. சாதகத்தை எழுதும் சாத்திரிக்கும் கலியாண பொருத்தம் பா÷க்கும் சாத்திரிக்கும் இந்த rhesus பற்றி அறியும் சந்த÷ப்பமும் கிடைப்பது குறைவு.

ஆகவே இனிமேலாவது கலியாணத்துக்கு சாதகப்பொருத்தம் பா÷க்க சாத்திரியிடம் போகாமல் வைத்தியரிடம் போய் இரத்தப் பொருத்தம் பாருங்கள்.