Yarl Forum
தொடர் கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தொடர் கவிதை (/showthread.php?tid=627)

Pages: 1 2 3


- சுடர் - 03-05-2006

<b>குருதி ஆற்றில்
ஒரு குவளை மொண்டு
தாகம் தீர்க்க நினைப்பா?
தரித்திரம்</b>

தரித்திரம் தமிழனாம்
இலங்கைத் தீவினிற்கு
ஆதியிலே இத்தீவில்
சரிசமமாய் இரண்டு ஆட்சி

ஆங்கிலேயர் இணைத்திட்டார்
இரண்டினையும் ஒன்றாக
விலகிப்போகையிலே
அயலிருந்த நாடுதனை
இரண்டாகப் பிளந்திட்டார்
இரண்டாக இருந்ததனை
ஒன்றாக இணைத்திட்டார்

போரினிலே பெறமுடியா
தமிழர் நிலம் தனையே
சதியால் கைப்பற்ற
ஆடினார்கள் நாடகங்கள்
எம்மினத்தின் எட்டப்பர்
கொடுத்தார்கள் தம்
கரத்தினையே

தரித்திரங்கள்
எம்மினத்தின் தரித்திரங்கள்
செய்யத் தொடங்கினர்
எசமானார் சேவகங்கள்
சொந்த மண்ணினையே
அடகுவைத்தார் மாற்றானிடம்

அதைமீட்கும் வழியறிந்து
புறப்பட்ட நம்மிளைஞர்
வாசலிற்கு வந்து விட்டார்
விடுதலையின் வாசலிற்கு
விடுதலையின் வாசலிலே
தமிழீழம் வீறுடனே.


- Selvamuthu - 03-05-2006

தமிழீழம் வீறுடனே வென்றுவரும்
தமிழருக்கு ஓர்நாடு என்றுவரும்
சந்தேகமில்லை.

தொடர் கவிதை தொடக்கி வைத்த
தமிழ்ச்செல்வி சென்னதுபோல்
தாயகத்தை நினைவிருத்தி
தமிழ்க்கவிதை படைக்கின்றோம்.

தமிழ்வீரம் சொல்கையிலே
அதன் வளங்கள் பகர்வோமா?
நிலம் பெருமை குலம் சிறப்பு
நால் வகைகள் நுகர்வோமா?


- sankeeth - 03-05-2006

நால்வகை நிலங்களாய்
கடலோடு உறவாடும்
நெய்தலும்,
மலையோடு மணம் வீசும்
குறிஞ்சியும்,
வனத்தோடு வளம் சேர்க்கும்
முல்லையும்,
வயலோடு வறுமை போக்கும்
மருதமும்,
இயற்கையின் நன்கொடைகளாய்
தமிழ் வீரம்பகன்ற
சான்றுகள் அன்றோ!


- Selvamuthu - 03-06-2006

அன்று வாழ்ந்த வாழ்வை எண்ண
இன்று உள்ளம் கனக்கிறதே!

தலைவாழை இலையெடுத்து
தமிழர் திருநாளிலே
அன்னையோடும் தந்தையோடும்
அண்ணனோடும் அக்காளோடும்
அருகருகே உடன் அமர்ந்து
உண்ணாமல் உளம் மகிழ்ந்து
அன்னையவள் அள்ளிட்ட
அமுதமின்றும் எந்நாவில்
எந்நாளும் இனிப்பதுபோல்
ஓர் உணர்வு!


- Snegethy - 03-06-2006

ஓரு கவளம் சோறுண்ண
ஒரு கொப்பு பலா இலை ஒடிச்சு
மோர் மிளகாயும் சேர்த்து
சொந்தம் சுற்றம் கூடி
குலாவி குட்டிக்கதை பேசியது
எதுவும் மறக்காது.


- Selvamuthu - 03-06-2006

எதுவும் மறக்காது எழுதுகின்ற என்நினைவு

பனித்திருக்கும் பவளமென புல்லினமும் நெல்லினமும்
படருகின்ற பகலவனின் புதுக்காலைக் கதிர்பட்டு
தனித்திருந்த பறவையினம் இனித்தூங்க மனமின்றி
திரைதிரையாய் இனம்கூடி தொலைகூட்டும் திசைஎட்டு
இனித்திருக்கும் இளவேனில் இளங்காலை எழில் இன்றும்
மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு


- sOliyAn - 03-06-2006

மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு
தினந்தினமும் எழுகையிலே தாய்நாடு ஈர்க்கையிலே
இடைநழுவும் களிசாணும் கிட்டிபுள்ளு தடிகளுமாய்
குடைந்தசிறு குழிகளுமாய் புழுதியளைந்த பொழுதுகளும் போயினவே
எட்டுமாங்கொட்டையும் கிளித்தட்டும் ஓடிப்போய் கனமான சுமைசேர்க்க
எல்லாம் கனவாகி ஏதோஒரு காலமாகி மயங்குகின்ற ஓர்உணர்வு! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வர்ணன் - 03-06-2006

sOliyAn Wrote:மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு
தினந்தினமும் எழுகையிலே தாய்நாடு ஈர்க்கையிலே
இடைநழுவும் களிசாணும் கிட்டிபுள்ளு தடிகளுமாய்
குடைந்தசிறு குழிகளுமாய் புழுதியளைந்த பொழுதுகளும் போயினவே
எட்டுமாங்கொட்டையும் கிளித்தட்டும் ஓடிப்போய் கனமான சுமைசேர்க்க
<b>எல்லாம் கனவாகி ஏதோஒரு காலமாகி மயங்குகின்ற ஓர்உணர்வு! </b> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

எல்லாம் கனவாகி
ஏதோ ஒரு காலமாகி
போனது போனதுதான்
மயங்காதே என்கிறேன்
மனசிடம் - கேட்கிறதா?

அந்த ஓலை பாயில்
உறங்கிய நாட்களையுன்
பஞ்சு மெத்தை தூக்கம்
வென்றதா என கேட்டு
மீண்டும்... நெஞ்சில் அறைகிறதே! Arrow


- Snegethy - 03-06-2006

பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்
மாமரவடி மரக்கட்டிலுக்கு நன்றி


காப்புறிதி கட்டியே கடனாளியானேன்
நன்றி என் அன்புச் சைக்கிளே

ஒரு நாளைக்கு மூன்று திரைப்படம்
புனிதாக்கா உங்கட பசுக்கன்று எப்பிடியிருக்கு

நீலம் சில்க்ல மலிவு விற்பனையாம்
லோன்ரில சீருடை எடுக்கவேணும் வாடி நீயும்.

{நீலம் சில்க்-கனடாவில இருக்கிற ஒரு புடைவைக் கடை}


- sOliyAn - 03-06-2006

Snegethy Wrote:பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்
மாமரடி மரக்கட்டிலுக்கு நன்றி


காப்புறிதி கட்டியே கடனாளியானேன்
நன்றி என் அன்புச் சைக்கிளே

ஒரு நாளைக்கு மூன்று திரைப்படம்
புனிதாக்கா உங்கட பசுக்கன்று எப்பிடியிருக்கு

நீலம் சில்க்ல மலிவு விற்பனையாம்
சட்டை தைக்கக் குடுக்கப்போறன் வாடி நீயும்

{நீலம் சில்க்-கனடாவில இருக்கிற ஒரு புடைவைக் கடை}
எனக்கு தெரிந்த விளக்கம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பஞ்சு மெத்தையில் தழுவாதாம் தூக்கம்
ஊரோடு நின்று உக்கிய
மாமரத்தடி கட்டிலே எப்போ வருவாய்?

வாகனக் காப்புறுதி கட்டியே கடனாளியானேன்
கிடங்கு முடங்கெல்லாம் என்னை குலுக்கிச் சிரித்த
என் ஓட்டைச் சைக்கிளே நீ எங்கே?!

ஒருநாளைக்கு மூன்றுபடத்தில் மூச்சு வாங்கல்
பசுவை கன்றை நாயை பூனையை
விசாரிக்கும் உலாத்தலில் ஊரில் தேகாரோக்கியம்

நீலம் சில்க் மலிவு விற்பனையாம்
அலுமாரியில் குட்டிக்கடை ஆரம்பம்
'லோன்ரில சீருடை எடுக்கவேணும் வாடி நீயும்..'
சிக்கனத்தில் சிறந்த வாழ்வு.


- அருவி - 03-06-2006

சிக்கனத்தில் சிறந்த வாழ்வு
சிங்களத்தால் சிதைந்த வாழ்வு
இலங்கைத் தீவினிலே
சிங்கள வைப்பகத்தில்
அதிகம் சேமித்தவர்
தமிழர்தானாமே

இன்றும் புலத்தில்
அதிக சேமிப்புடன்
தாயக நினைவுகளை
விட்டெறியா பசுமையுடன்

பச்சை வயல் வெளியில்
பட்டம் விட்ட காலங்கள்
பட்டம் காசுக்காய்
விளம்பரங்களாய் பத்திரிகையில்
பள்ளி படிக்கையிலே
வெள்ளைச் சட்டையுடன்
கையில் புத்தகமும்
நையாண்டிப் பேச்சுகளும்
வெள்ளைக்காரனிற்கு தலையாட்ட
நையாண்டி சிரிப்புடனே
அடுத்தவரை அழைத்துவந்து
இவனிற்கு ஏவல்


- அனிதா - 03-06-2006

[size=13]'இவனிற்கு ஏவல்'
ஏவலிட்டது சிங்கள அரசு
துவட்டப்பட்டனர் தமிழர்
சிங்களக் குண்டர்களால்..!

இழந்து விட்டோம் உயிர்கள் பல
இடம்பெயர்ந்தோம் அகதிகளாய்
புலம்பெயர்ந்தோம் வெளிநாடு
கடன்பட்டோம் இந்நாட்டில்

புலம்பெயர்ந்து தான் விட்டோம்-ஆனாலும்
தாயக நினைவுகள் மட்டும்
புலம் பெயர மறுக்கின்றது...!


- சுடர் - 03-06-2006

<b>புலம்பெயர்ந்து தான் விட்டோம்-ஆனாலும்
தாயக நினைவுகள் மட்டும்
புலம் பெயர மறுக்கின்றது...!</b>

புலம்பெயர மறுக்கின்றது
புலம்பெயர்ந்த வாழ்வினிலும்
சாதிகளே பெரிதென எண்ணும்
எண்ணம் மட்டும்
போக மறுக்கிறது

சாதிகள் இல்லையடி
குலத் தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல்
பாவம் என்றுரைத்த
பாவலனின் கனவுதனை
எள்ளி நகையாடி
தொடர்கின்றனர் சாதிதனை

தொழிலிற்கோர் சாதியென
சாதித்து நின்றபின்னர்
வாழ்விற்காய் செய்கின்றார்
அத்தொழிலே தம் தொழிலாய்
சாதிமட்டும் அழியவில்லை


- sOliyAn - 03-06-2006

சாதிமட்டும் அழியவில்லை
'சாதி, சாதி' என்று ஆக்கங்கள் சொன்னாலும்
புகலிடத்தில் சாதித்த சாதனைகள் என்ன என்ன?!
தாயகத்தில் சாதித்த சரித்திரங்கள் கணக்கற்று
வீரம் தியாகமென வீரியமாய் நிமிர்ந்துநிற்க
புகலிடத்தில் சாதனைகள் தமிழினத்தை நிமிர்த்திடுமா?!


- Snegethy - 03-06-2006

நிமிருமா நாய்வால்
பேத வர்க்கமற்ற காதல்
சமூகப் புரட்சி
கதைக் கருவாக இன்னும்


- Rasikai - 03-06-2006

கதை கருக்கள் இன்னும்....
கழிப்பறையிலேயே தூங்குகின்றன ...
ஏதாவது சட்டம் யாரும் போட்டால் என்ன? ..
இனியாவது திருந்து தமிழா..
எத்தனை மாற்றம் கொண்டாலும் ...
ஏன் இன்னும் பழமை வாதம்
எம் முதுகிலிருந்து ..
இறங்கி போவதாய் இல்லை???


- சுடர் - 03-08-2006

இறங்கிப் போகமறுப்பதனை இறக்கி வைப்பதற்கு
இறைவன் கொடுத்த இனிய கொடை
இந்து சமுத்திரத்தில் புதிய நாடமைத்து
பழமைவாதமெனும் மடந்தைதனை மாற்றி வைத்திடவே
பரிதி போன்றவொரு தலைவன் கிடைத்திட்டான்

அடுப்பங் கரையிலே அடக்கிக் கிடந்தவளை
அந்நியப் படையை அடித்தழிக்கும் மகளாக்கி
தேசத்தை காத்திடும் தேசியப் பணிதனிலே
பங்கினை வளங்கிட வாரி அழைத்திட்டார்
தாயகப் பணிதனிலே பங்கினை வளங்கி நிற்கும்
மாதர் சொல்வார்தம் செயலான கதைக்கருவை


- வர்ணன் - 03-10-2006

வளையலவள் என்று
கதையும் சொல்லி
வட்ட நிலா என்று
கவியும் எழுதி
அழகுப் பொருளாய்
பெண்ணை அசிங்கப்படுத்தினரங்கே!

தொலைந்தது அக்காலம்!
தீ பந்தம் ஏந்திய
தேவதைகள் - ஒளியில்
தேசம் மெல்ல விடிகிறது! Arrow


- Thala - 03-12-2006

மொட்டைக் கறுப்பனுக்காய்
தட்டையாய் நிலம் பரவி
ஆழ நாற்று நட்டு
மூமாதம் காந்திருந்து
அறுக்கும் நாம் தமிழர்.

தேசப் பயிருக்காய்
நாற்று நட்டோம்
களை பறித்தோம்
காவல் போட்டோம்.
காத்திருப்போம்.
அதை அறுக்க உளம் வருமோ...???


- Birundan - 03-12-2006

அறுப்பவர் தலைகள் அறுபடும்
அறுப்பவர் உயிர்கள் விடை பெறும்.
மறுப்பவர் கைகள் உடைபடும்
காப்பவர் கைகள் உரம்பெறும்.
ஏய்ப்பவர் செயல்கள் பொடிபடும்
மேய்ப்பவன் செயல்கள் பலம் பெறும்.
புலிகளின் கனவுகள் நிஜம் பெறும்
தமிழ் இனம் விரைவில் தமிழீழம் பெறும்.