Yarl Forum
இப்படியும் நடக்கிறது. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: இப்படியும் நடக்கிறது. (/showthread.php?tid=6007)

Pages: 1 2 3


kdpjk; - shiyam - 01-12-2005

நான் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்பு பக்கத்துவீட்டில் ஒரு பெண்மணி வசிக்கிறார் வயது 66 (பிரெஞ்சுகாரி) நான் வேலைமுடிந்து அதிகாலை 2 மணிக்குதான் வருவது வழக்கம்.வந்து உணவை சுடாக்கிகொண்டு சாப்பிடும்போதுதான் கொஞசநேரம் தொலைக்காட்சி பார்ப்பது வழக்கம் சிலநேரம் தமிழ் படம்பார்த்தால். படம்முடிய 4 மணி ஆகிவிடும். இதனால் எனக்கும் பக்கத்துவீட்டுகார பெண்மணிக்கும் சிலநேரங்களில் சண்டைவருவதுண்டு. காலையில் கதவை தட்டி இரவுநீ சத்தம்போட்டாய் எனக்கு தூக்கம் வரவில்லை என்பார் நான்.உனக்கு தூக்கம் லராவிட்டால் நான் ஒன்றும்செய்யமுடியாது.போ என்றுசொல்வதுண்டு.இதனால் சிலநேரங்களில் வெளியே போகும்போது எதிரேவந்தால் இருவரும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டே ஒப்பிற்கு ஒரு வணக்கம் மட்டும் செல்லிவிட்டுபோவதுண்டு.கடந்த 3 கிழமையாக அவரை காணவில்லை நானும் துன்பம்விட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நேற்று மாலை நான் வேலைக்கு படிவழியே இறங்கிகொண்டிருந்தபோது எதிரே அந்தபெண்மணி தனது நாயுடன் வந்துகொண்டிருந்தார்.என்னைகண்டதும் வணக்கம் புதுவருட வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு தான் புதுவருட கொண்டாட்டங்களிற்காக பிள்ளைகளிடம் போயிருந்ததாகவும்.அப்போ சுனாமி அனத்தத்தை தொலைகாட்சியில் பார்த்ததாகவும் உடனே என்னைதான் நினைத்ததாகவும் கூறி நாட்டில் எனது குடும்பம் நன்றாக இருக்கிறதா என விசாரித்தார்.நானும் எனது குடும்பத்திற்கு எதுவுமில்லை அவர்கள் வடபகுதியில கடற்கரையிலிருந்து தூரத்தில் இருக்கிறார்கள் ஆனால் எம்மவர் 15000பேர்வரை இழந்துவிட்டோம் எனதுநண்பர்கள் தங்கள் குடும்பததைஇழந்துவிட்டார்கள் என்றேன்.அவர்களிற்குஏதும் உதவினாயா? என்று கேட்டார் நானும் என்னால்முடிந்ததை எங்கள் தொண்டு நிறுவனம்ஒன்றினுடாக செய்திருக்கிறேன் என கூறிவிட்டு போய்விடடேன்.இனறுகாலை 9 மணிக்கு வீட்டின் அழைப்புமணி அடித்தது.நானும் யார்ரா காலங்காத்தாலை நித்திரையை குழப்பிறது எண்டு யோசித்தவாறே கதவு துவாரத்தால் பார்த்தேன் பக்கத்து வீட்டு பொண்மணி.போச்சுடா நான்இரவு சத்தம்போடவில்லையே பிறகு என்மனிசி வந்திருக்கு என்று நினைத்தவாறே எரிச்சலுடன் கதவை திறந்து என்னவோணும் என்றுகோட்டேன்.அவர்கையில்ஒரு உறையைதந்து இந்தா என்னாலான சிறு உதவி உங்கள் நாட்டிற்கு உங்கள் நிறுவனத்தினுடாக அனுப்பிவிடு. என்று செல்லிதந்து விட்டு தனது நாயுடன் கதை;தவாறே படிவழியே இறங்கி போய்கொண்டிருந்தார்.உறையை பிரித்துபார்த்தேன் 200 ஈரோக்கள் இருந்தது.அப்படியே வந்து கட்டிலில் விழுந்தேன் பின்னர் நித்திரை வரவில்லை இனிமேல் இரவில் தொலைகாட்சி சத்தமாய் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்தேன்


- thamizh.nila - 01-12-2005

வாசிக்கும் போது மனதில் ஏதோ ஒன்று ...மனதை உருக்கிவிட்டது


Re: kdpjk; - lakpora - 01-24-2005

shiyam Wrote:நான் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்பு பக்கத்துவீட்டில் ஒரு பெண்மணி வசிக்கிறார் வயது 66 (பிரெஞ்சுகாரி) நான் வேலைமுடிந்து அதிகாலை ............இனிமேல் இரவில் தொலைகாட்சி சத்தமாய் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்தேன்


<b><span style='font-size:25pt;line-height:100%'>ஐயா இதுலிருந்து புரியுது உமது பாத்திரம் என்னன்டு

இன்று புலத்துல துயரின தாங்குகின்றாய்

ஏன்

சுய ? நாட்டில ஏலாது [ அரட்டைக்கு நேரம் அதிகமாகவே கிடைக்கிறதாலோ ? ]</b></span>


- tsunami - 01-24-2005

என்ன லக்கொரா
உம்மை கண்டால் எனக்கு ஒரு காதல் வருகுது...
என்ன செய்ய?

நீராய் ஒதுங்குவது நல்லது.. பாருங்கோ..


- shiyam - 01-24-2005

பக்பொரா ஆரம்பத்திலை இருந்து சொல்லுறன் ஏதாவது விளங்கிற மாதிரி எழுது இல்லாட்டி ஓடி போயிடு :twisted: :twisted:


- Niththila - 01-24-2005

சியாம் அண்ணா

மனிதர்கள் எல்லாம் லக்பொர மாதிரியானவை இல்லை நல்லவையும் இருக்கினம் என்று இதிலிருந்து தெரியுது. லக்பொரக்கு பதில் எழுதி உங்கட நேரத்தை வீணாக்க வேண்டாம்


Re: kdpjk; - Mathan - 01-25-2005

shiyam Wrote:இனிமேல் இரவில் தொலைகாட்சி சத்தமாய் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்தேன்

நல்ல முடிவு


- ragavaa - 01-25-2005

Niththila Wrote:சியாம் அண்ணா

மனிதர்கள் எல்லாம் லக்பொர மாதிரியானவை இல்லை நல்லவையும் இருக்கினம் என்று இதிலிருந்து தெரியுது. லக்பொரக்கு பதில் எழுதி உங்கட நேரத்தை வீணாக்க வேண்டாம்

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tsunami - 01-25-2005

நல்ல முடிவு
கெட்டவனைக்கண்டால் தூர விலகு
நல்வனைக்கண்டால் சேர்த்துக்கொள்
ஆனால் நல்லதோ கெடடதோ என்று கொஞ்சம் கதைத்துப்பார்த்து தான் அறியவேண்டும்...
நல்ல முடிவு இனி கதைக்காமல் விடுவம்


- shiyam - 01-25-2005

:wink: :wink: நன்றிகள்


- tamilini - 01-25-2005

இப்படி ஏன் பக்கத்துவீட்டுக்காரருக்கு தொந்தரவு கொடுக்கிறனீங்கள் ஆ..?? :mrgreen:


- shiyam - 01-25-2005

tamilini Wrote:இப்படி ஏன் பக்கத்துவீட்டுக்காரருக்கு தொந்தரவு கொடுக்கிறனீங்கள் ஆ..?? :mrgreen:
பாத்தா தமிழினி மாதிரி இருந்தது அதுதான்


- Niththila - 01-25-2005

ஷியாம் அண்ணா தெரியாமல் செய்திருப்பார்.... அதுதான் இனி அப்படி நடக்க போறேல்லை எண்டிட்டாரே பாவம் அண்ணா விடுங்கோ அக்கா


- tamilini - 01-25-2005

அண்ணை நீங்க வேறை இந்தப்பிரச்சனை எங்களுக்கும் இருக்கு அதுதான்.. கேக்கிறன்.. :oops: :oops:


- MEERA - 01-25-2005

********


***நீக்கப்பட்டுள்ளது - இராவணன்[/color]


- வியாசன் - 01-25-2005

ஷியாம் உம்முடைய பக்கத்துவீட்டுக்கரியை நினைத்ததும். இதயம் நெகிழ்ந்துபோய்விட்டது. துன்பத்தில் ஓடிவந்து உதவவேண்டுமென்று செய்கையால் செய்த அந்த பெண்மணிக்கு என்னுடைய நன்றிகளை கூறும்.
********


***நீக்கப்பட்டுள்ளது - இராவணன்[/color]


- shiyam - 01-26-2005

tamilini Wrote:அண்ணை நீங்க வேறை இந்தப்பிரச்சனை எங்களுக்கும் இருக்கு அதுதான்.. கேக்கிறன்.. :oops: :oops:
நான் வேலை செய்வது ஒரு பிரபல இரவு விடுதியென்றிலை (டிஸ்கோ)அங்கை எங்கட சின்னப்பு மாதிரி கனபேர் தவிச்ச வாய்க்கு தண்ணியடிக்க வருவினம்அவைக்கு ஊத்தி ஊத்தி கொடுத்து வீடடை லர 3 4 மணியாகும்வந்து சாப்பிட வெளிக்கிட்டா நானே சமைத்ததை நானேசாப்பிட ஏலாது தானே எனவேதான் ஒருபடத்தை போட்டிட்டு சாப்பிட வெளிக்கிட்டா சத்தம் வரும் வயசு போனவைக்கு நித்திரை வராது சின்ன சத்தம் எண்டாலும் எழும்பி விடுவினம் அதுதான் பிரச்சனை இப்ப இல்லை


- thamizh.nila - 01-26-2005

நல்லதுக்கு காலம் இல்லை சியாம் அண்ணா...நீங்கள் நல்ல காரியம் தான் செய்திருக்கிறீர்கள். சத்தத்தை குறைத்து வைச்சு படம் பாருங்கோவேன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 01-26-2005

thamizh.nila Wrote:நல்லதுக்கு காலம் இல்லை சியாம் அண்ணா...நீங்கள் நல்ல காரியம் தான் செய்திருக்கிறீர்கள். சத்தத்தை குறைத்து வைச்சு படம் பாருங்கோவேன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன ஊமைபடமா பாக்கிறது.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 01-26-2005

shiyam Wrote:[quote=tamilini]அண்ணை நீங்க வேறை இந்தப்பிரச்சனை எங்களுக்கும் இருக்கு அதுதான்.. கேக்கிறன்.. :oops: :oops:
நான் வேலை செய்வது ஒரு பிரபல இரவு விடுதியென்றிலை (டிஸ்கோ)அங்கை எங்கட சின்னப்பு மாதிரி கனபேர் தவிச்ச வாய்க்கு தண்ணியடிக்க வருவினம்அவைக்கு ஊத்தி ஊத்தி கொடுத்து வீடடை லர 3 4 மணியாகும்வந்து சாப்பிட வெளிக்கிட்டா நானே சமைத்ததை நானேசாப்பிட ஏலாது தானே எனவேதான் ஒருபடத்தை போட்டிட்டு சாப்பிட வெளிக்கிட்டா

நீங்கள் சமைத்ததை உங்களாலேயே சாப்பிடமுடியல்லை. ஓகே. அதற்கும் நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் என்ன தொடர்பு. படம் பார்த்தால் நீங்கள் சமைத்ததை உங்களால் சாப்பிட முடியுமா? சின்ன சந்தேகம் அதுதான் :?: