Yarl Forum
ஜே.என்.தீட்சித் மரணம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜே.என்.தீட்சித் மரணம் (/showthread.php?tid=5964)

Pages: 1 2 3


- KULAKADDAN - 01-04-2005

tamilini Wrote:மிதிப்பவர்களை
மதித்துப்பார் உன் மகிமை
அவனுக்கு தெரியும்
நீயும் மிதித்தால் ஏது
வித்தியாசம் இருவருக்கம் - ஆனால்
மீண்டும் மிதிபட நினையாதே

அடக்கியவனை ஆள நினை
அதில் என்ன தவறு -- வீரம்
செறிந்தவன் தான் தமிழன் - ஆனால்
செத்தவன் வீட்டில் சிரிப்பா..??
சிரித்திடும் அளவிற்கு
மனிதாபிமானம் அற்றவனா
தமிழன்..??
அவன் மனிசனே இல்லை..

மனிசனுக்கு
மனிதாபிமானம் காட்டு
மண்டியிடாதே என்பது எம் கருத்து
மண்டியிட்டு பிழைப்பதில்
மாண்டு விடுவதே மேல்


எல்லாவற்றிற்கும் மேல்
மனிசனாய் இரு
நல்ல தமிழனாய் இரு
தமிழனுக்கும் அது தான் அழகு......!
Idea

þ¾üÌ ¸Å¢¨¾ Ó츢Âõ..........
:evil:


- KULAKADDAN - 01-04-2005

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இவர் தூதராக இருந்த நேரத்தில் அவரது செயற்பாடுகள் ஒரு புறத்தில் பாராட்டுக்களையும் மறுபுறம் விமர்சனங்களையும் எதிர்கொண்டுவந்தன.


ஜே என் தீட்சித்

பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உருவானபோது அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முக்கிய வெளியுறவு
ஆலோசகராக இருந்தவர் தீட்சித்தான்.

வங்கதே¾¢üÌ þó¾¢Â àÐÅ÷.....

BBC tamil

±ôÀ×õ ¿îÍ ...Å¢¨¾.......


- sOliyAn - 01-04-2005

ம்.. இப்ப தீட்சித்துக்கு அனுதாபப்படுங்கோ.. துக்ளக் சோ, சுப்ரமணியசுவாமி, பேந்து ஜெயா.. டக்லஸ்.. இப்பிடி எல்லாருக்கும் அனுதாபப்பட்டு.. மரணத்திலயாவது சனம் தம்மை நினைக்குமென்ற தைரியத்தில் மேலும் மேலும் தமிழின ஆக்கிரமிப்பாளர்களும் துரோகிகளும் சந்தோசத்தோடு உதயமாக உபகாரம் செய்யுங்கள்!

ஒருவரைப்பற்றி வடிவாத் தெரியாமல் அளந்தும் விடலாம். பாவம் வைகுந்த வாசன்.. ஈழத்தின் அவசியம்பற்றி பேசுவதற்காக ஐ.நா.விற்குள் புக எவ்வளவு பாடுபட்டிருப்பார்.. அது சட்டமீறலாக இருந்தாலுங்கூட.
எதற்கும்.. வாழ்க தமிழ்ப் பண்பாடு!!


- thamizh.nila - 01-04-2005

விதுரன்,

அழகிய் கவிதை.....ஆனால் ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை. மனிதம் உள்ளவன் தானெ மனிதன். அப்படி இருக்க எட்டி உதைப்பவன்,காறிஉமுழபவன்,.....இவர்கள் எல்லாம் மனிதர்களா?? மனிதனைத்தானே நாம் மதிக்க வேண்டும்.?


- kuruvikal - 01-04-2005

மரணத்தின் பின்னும் ஒரு தனிமனிதனைத் தூற்றுதல் மனிதருக்கு அழகல்ல...! வாழும் போது செய்யும் தவறுக்கு மரணம் தண்டனை என்றால் மரணித்த பின்னும் ஏன் தண்டனை...????!

வாழும் போது உங்கள் எதிர்ப்பைக் காட்டி அதன் மூலம் தவறுக்குரியவனின் தவறைச் சுட்டிக்காட்டி விழித்துக் கொள்ளச் செய்வது பலன்....ஆனால் மரணத்தின் பின் ஒருவரின் தவறுக்காக அவரைத் தூற்றி என்ன பயன்...???! மற்றவர்களிடம் வெறுப்பை வளர்ப்பதுதான் மிகும்...! :!: Idea


- Mathuran - 01-04-2005

தமிழினி அக்காவிற்கு நான் பலமுறை இவற்றை புரிய வைதிட முயன்றேன் முடியவில்லை. தமிழி அக்கா சொல்வது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மிதித்தவனை மதித்துபார் உன் மகிமை அவனுக்கு தெரியும் என்கின்றார். பின்பு இப்படியும் கூறுகின்றார் அடக்கியவனை ஆள நினை. அதன் பின் சொல்கின்றார் குட்ட குட்ட குனியாதே.

அக்கா இன்றய உலகத்த நல்லா புரிஞ்சுகொள்ளுங்க. நல்ல உள்ளங்கள் இறந்தால் எங்களை அறியாமலே கண்களால் கண்ணீர் ஓடும். அங்கேதான் இருக்கின்றது மனிதம் கடவுள் அனைத்தும். அதை விடுத்து சும்மா கவலையில் இருப்பவர் போல நடிப்பதுதான் மனிதத்திற்கு அப்பால் பட்டது. குஜராத் பூகம்பத்தின் போது எங்கள் கண்களிலும் கண்ணீர் வந்தது. காரணம் அப்பாவி மனிதர்கள். அவர்களில் பலர் ஏழைகள் அப்பாவி குழந்தைகள். இதுதான் மனிதம்.

எதிரிக்கும் கருணை காட்டுதல் என்பது பேச்சிற்கு நன்றாக இருக்கலாம். எங்கள் குழந்தைகள் மேல் குண்டுகள் போட்டவன் அப்படி எண்ணவில்லையே. இருந்தும் விடுதலைப்புலிகள் பல இராணுவத்தை காப்பாற்றி எதிரியிடம் கொடுத்து இருகின்றார்கள். விடுதலைப்புலிகளை போல எனக்கு பெரிய மனது இல்லை. இருந்தபொளுதும் சிங்கள இராணுவம் இன்றும் தமிழர்களை துன்புறுத்தி கொன்ற வண்ணமே உள்ளனர்.


- Mathuran - 01-04-2005

தமிழ் நிலாஅக்கா அக் கவிதையினை நான் புனயவில்லை. அது அண்ணன் காசிஆனந்தன் அவர்கள் வடித்த கவிதை. நான் அதனை இங்கே தேவை கருதி புகுத்தினேன்.


- tamilini - 01-04-2005

அவர் எங்களுக்கு கொடுமை செய்திருக்கலாம் இல்லை என்று சொல்லவில்லைங்க... ஆனால் அவர் செத்ததை எண்ணி சரிக்கிறீங்க மிக்க நல்லது என்கிறீங்க இதுகள் தான தேவையற்றது என்கிறோம்... இது எங்கள் பார்வை... சரி இப்ப பாருங்க.. சுனாமியால் தமிழ் மக்களுக்கு அழிவு என்றவுடன் இந்த ஜேவீபி சந்தோசப்பட்டாங்க அப்படி என்று இந்தக்களத்தில எத்தனை பேர் அவங்களை பேசினம்.. எங்கள் அழிவில அவங்க சந்தோசப்படுறாங்க.. அப்படி சொல்லீட்டாங்க என்று.... இப்ப இவர் இறந்த போது.. நாங்கள் அனுதாபம் தெரிவிக்க வேண்டாம். அஞ்சலி செய்ய வேண்டாம் சந்தோசப்படுறம் என்று எனினும் சொல்லாமல் இருக்கலாம் இல்லையா..?? அப்படி செய்தால்.. எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க.. அவர்களை எப்படி நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்கிறோமோ..?? எப்படி தான் எங்களையும் சொல்லுவார்கள்.. இரண்டுக்கம் இடையில வித்தியாசம் ஏதுங்க...???


- tamilini - 01-04-2005

இப்ப விதுரன்.. உங்கள் மேலை குண்டு போட்டவனை ஏன் தாக்கிறீங்க... அவங்கள் அழியனும் என்றா...?? உங்கள் காப்பத்த தானே...?? இல்லையா..?? எங்களை மிதிக்கிறாங்க.. இனி மிதிபடக்கு}டாது.. என்று தானே.. சண்டைபிடிக்கிறாங்க.. அவங்களை திருப்பி மிதிக்கனும்.. என்றா..?? அப்படி என்றால் அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்... திலீபன் அண்ணா இறக்கும் போது அவங்க சந்தோசப்பட்டாங்க.. அப்போ அவங்க இறக்கும் போது நாம் கண்ணீர் விடனுமா என்று நீங்க கேக்கிறது நியாயம் தான்... ஆனால் கண்ணீர் விடத்தேவையில்லை.. அவன் இறந்ததை எண்ணி சந்தோசப்படுறம் என்று சொல்லாமல் ஆவது இருக்கலாம் இல்லையா..?? இது போலி இல்லைங்க.. இது நமது கருத்து மட்டும் தாங்க... இதே கருத்து மற்றவங்களுக்கம் இருக்க வேணும் என்றில்லை.. மனிசனுக்கு அழகே.. இன்னொருவன் துயரில பங்கு கொள்வது தான்... அனால் அதுக்காக அவர் இறந்ததிற்காக நாங்கள் வருந்திறம் என்று சொல்லவில்லை.. குறைந்த பட்சம் சந்தோசப்படுறம் என்றாவது.. சொல்லாமல் இருப்பம் என்று சொல்லுறம்....


- Mathuran - 01-04-2005

தமிழினி அக்கா சிலவேளை உங்கள் கூற்றிலும் ஞாயம் இருக்கலாம். துயரத்தில் இருக்கும் என்னை போன்றவர்களின் கண்களுக்கு அவை புலப்படாது இருக்கலாம். ஜே.வி.பி போன்றவர்களின் கூச்சலும் கும்மாளமும் பாசிச ஏகாதிபத்திய சிங்கள அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையின் வெளிப்பாடு. அனால் நாம் இப்போது இங்கே பகிர்கின்ற விடயம் ஒரு பயங்கரத்தில் இருந்து மீட்சிபெற்றவர்களின் வெளிப்பாடு. வேண்டுமானால் இப்படி சொல்லிக் கொள்ளலாம். எங்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று.


- tamilini - 01-04-2005

சரி தம்பி அது உங்கள் பார்வை.. நமக்கு இப்படி தோன்றிச்சு தற்சோல் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathuran - 01-04-2005

சரி அக்கா நல்லது. அடுத்த களத்தில் சந்திப்போமா. என்மேல் கோபம் இல்லைத்தானே. மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்
விதுரன்


- tamilini - 01-04-2005

என்ன விதுரன் தம்பி இதுக்கெல்லாம் கோவமா..?? சரி அடுத்த களத்தில சந்திக்களாம்..!


- sOliyAn - 01-05-2005

துட்டனைக் கண்டால் துார விலகு.. இது முதுமொழி! துட்டர்கள் இறந்தால் என்ன? வாழ்ந்தால் என்ன?! கெட்டவன் செத்தால் செய்தி. நல்லவன் செத்தால் சரித்திரம். இது என் வழிங்க!


- anpagam - 01-05-2005

sOliyAn Wrote:துட்டனைக் கண்டால் துார விலகு.. இது முதுமொழி! துட்டர்கள் இறந்தால் என்ன? வாழ்ந்தால் என்ன?! கெட்டவன் செத்தால் செய்தி. நல்லவன் செத்தால் சரித்திரம். இது என் வழிங்க!
:| Idea


- paandiyan - 01-05-2005

kuruvikal Wrote:
tamilini Wrote:திரு வைகுண்ட வாசன் இறந்ததாக சொல்கிறார்களே உண்மையா..??

அது யாருங்க...திரு வைகுண்ட வாசன்..கேள்விப் படாத பெயரா இருக்கு...! : :?:

வைகுந்தவாசனைப் பற்றி கீழுள்ள லிங்கில் பார்க்கலாம்.

http://www.nitharsanam.com/?art=7929


- தமிழரசன் - 01-05-2005

மனிதத்தனமைஇல்லாத மனிதர்களளுக்எற்குகண்ணீர்அஞ்சலி


- கறுணா - 01-05-2005

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

அன்னார் டிக் சிற் செத்ததற்கு எனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- aathipan - 01-05-2005

எமது மக்கள் மேல் இந்திய இராணுவம் அடக்கு முறையைத்திணித்தபோதெல்லாம் மௌனாமாக இருந்து
எமது வீரவேங்கைகள் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தற்கொலைசெய்தபோது பாராமுகமாக இருந்து
காந்திய வழியில் உண்ணாவிரதமிருந்த எமது ஒரு சகோதரனை அநியாயமாக சாகடித்து எமது வெறுப்புக்கு ஆழான ஜே.என். தீட்சித்து க்கு எமது அனுதாபங்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- sinnappu - 01-05-2005

Quote:Vituran



இணைந்தது: 14 மார்கழி 2004
கருத்துக்கள்: 37
வதிவிடம்: Norway
எழுதப்பட்டது: செவ்வாய் தை 04, 2005 12:47 am Post subject:



எமக்காக ஒரு தடவை குரல்கொடுத்த அந்த நன்றி உள்ள நாய் இறந்திருந்தால். அதற்காக கண்ணீர் விட்டு கதறி அழுதிட தயங்காது எங்களின் இந்த மனிதம். ஆனால் பல மனிதபிணங்களை கொத்தி தின்ற களுகுகளிற்காக கண்ணீர் வடிக்கும் கூட்டத்தை சேர்த தமிழன் அல்ல நான். சாவு நம்மை நெருங்கும் வேளையிலும் மனிதத்தை விற்று பிளைக்க மாட்டோம். அமைதி படை என்று வந்து எத்தனை உயிர்களை மனிதம் என்னும் போர்வையில் அழித்தார்கள்.
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன்,
நேற்றய தவறிற்காக,
நாளைய நேர்மைக்காக

மனிதன்
அப்படி போடு நன்றியப்பு ராசா விளங்காதவங்களுக்கு விளங்கப்படுத்தி யிருக்கிறாய்

நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன்,
நேற்றய தவறிற்காக,
நாளைய நேர்மைக்காக

சின்னப்பு..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->