![]() |
|
பிரித்தானியாவில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: பிரித்தானியாவில் (/showthread.php?tid=5346) Pages:
1
2
|
- Kurumpan - 04-10-2005 அட..... விஷயத்துக்கு வாங்கப்பா...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->B.P ஏறிட்டே போகுது.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sri - 04-10-2005 இனி என்ன புலம்பகுதியில் ஒரு மட்டுறுத்தினரை நிறுத்திவைக்கவேண்டியதுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - மகேசன் - 04-10-2005 Kurumpan Wrote:அட..... விஷயத்துக்கு வாங்கப்பா...... <!--emo&உண்மைதான் (B P) பிரிட்டிஸ் பெற்றோலியத்தின் விலை ஏறிட்டே போகுது. - kirubans - 04-10-2005 Kurumpan Wrote:அட..... விஷயத்துக்கு வாங்கப்பா...... இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். புதிதாக ஒன்றும் வராது. கடந்த சித்திரை மட்டும் தூங்கிக் கொண்டிருந்த பல மாற்றுக் கருத்தாளர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டிருந்த பலர் தற்போது புலி எதிர்ப்பு ஒன்றை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிகிறார்கள். அவர்களுக்கு சிறு பிரச்சினைகளையும் பெரிதாக ஊதி தமிழ் மக்களைக் குழப்புவதுதான் குறிக்கோள். இந்த விடயத்தில் ஈழத்துச் சிவனும் அகப்பட்டுவிட்டார். அவ்வளவுதான். - Siriththiran - 04-11-2005 cannon Wrote:இராவணனுக்கு! கனன் நீர் புனைபெயரில் ஒழிந்து இருந்து கதை அளக்கிறதை நிப்பாட்டுறது உமக்கும் நல்லம் யாழ் களத்துக்கும் நல்லம். ஒருவரது சொந்த பெயரை களத்துக்கு கொண்டுவந்து விமர்சிக்கும் முதலில் தனது சொந்த பெயரை சொல்ல துணிவு இருக்க வேண்டும். ******************************************************************************** தணிக்கை -- யாழினி - stalin - 04-11-2005 உந்த பிரச்சனையைப்பற்றி சில ஊடகங்களில் வந்தது ஒருதருக்கும் பிரச்சனை முழுமையாக தெரியாது கனன் என்ன சொல்ல வாறர் என எல்லாரும் அறிவோமே - Danklas - 04-11-2005 Siriththiran Wrote:கனன் நீர் புனைபெயரில் ஒழிந்து இருந்து கதை அளக்கிறதை நிப்பாட்டுறது உமக்கும் நல்லம் யாழ் களத்துக்கும் நல்லம். ±ýÉôÒ ¦Ä¡ûÇ¡?? ´ÕÅ÷ ¾ýÛ¨¼Â Å¢Á÷ºÉò¨¾ ¦º¡øÖžüìÌ ²ý ¦º¡ó¾ ¦À¨à ÌÈ¢ôÀ¢¼§ÅñΧÁ¡?? Å¢ð¼¡ø À¡Š§À¡ð§¼¡ ±ÎòÐ ¦Ã¡Ä¢§À¡ý Å£ðÎŢġºò¨¾§À¡ðÎðÎ ¸ÕòÐì¸¨Ç ±Ø¾î¦º¡øÖÅ£÷§À¡Ä :twisted: :evil: :oops: - kirubans - 04-11-2005 இங்கு எல்லோரும் தங்கள் சொந்தப் பெயரில் வந்து கருத்துக்கூற வேண்டும் சட்டங்கள் இல்லை. மேலும், ஈழபதிஸ்வரர் விடயத்தை சகல தமிழ் தேசிய ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்து வருகின்றன. யாழ் களத்திலும் இது காணப்படுகின்றது. ஏன் இந்த சுயதணிக்கை? இதன் மூலம் லாபமடைவது தமிழ் விரோத சக்திகள்தான். அவர்களின் தளங்களிலும் வானொலிகளிலும் ஈழபதீஸ்வர நிர்வாகிகளை அதியுத்தமர்கள் போல எழுதுகின்றனர். அவர்களின் திருகுதாளங்களை புலத்தில் வாழும் எம்மவர் அறிய ஒருவரும் இடங்கொடுக்காததால், தமிழ்விரோத தளங்களில் செய்திகளைப் பார்ப்போர் (நம்மில் இணைய வசதி உள்ள அநேகர் பார்க்கின்றனர் என்பது உண்மை) தவறான கருத்துக்களை உள்வாங்குகின்றனர். அடுத்ததாக, பத்திரிகையில் அல்லது இணையத் தளங்களில் பொதுவாழ்வில் ஈடுபடும் ஒருவரைப் பற்றிச் செய்தி வந்தால், அவரின் பெயரை யாரும் பாவித்துக் கருத்தெழுத உரிமை உள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ யாழ் களத்தில் இதுவும் மறுக்கப்பட்டுள்ளது. - Mathan - 04-11-2005 kirubans Wrote:இங்கு எல்லோரும் தங்கள் சொந்தப் பெயரில் வந்து கருத்துக்கூற வேண்டும் சட்டங்கள் இல்லை. என்ன பெயரில் கருத்து கூறுவது என்பது எழுதுபவர்களின் உரிமை. சிலர் சொந்த பெயரை உபயோகிப்பார்கள் வேறு சிலருக்கு புனை பெயர் பிடிக்கும். அவரவர் விருப்பம் kirubans Wrote:மேலும், ஈழபதிஸ்வரர் விடயத்தை சகல தமிழ் தேசிய ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்து வருகின்றன. யாழ் களத்திலும் இது காணப்படுகின்றது. ஏன் இந்த சுயதணிக்கை? பிபிசி இணைய தளத்தில் வந்த செய்தியை நான் இணைத்திருந்தேன். யாழ் களத்தில் இருட்டடிப்பு ஏதும் இல்லை, நம்பகமான தள செய்திகளை நீங்கள் இணைக்கலாம் kirubans Wrote:இதன் மூலம் லாபமடைவது தமிழ் விரோத சக்திகள்தான். அவர்களின் தளங்களிலும் வானொலிகளிலும் ஈழபதீஸ்வர நிர்வாகிகளை அதியுத்தமர்கள் போல எழுதுகின்றனர். அவர்களின் திருகுதாளங்களை புலத்தில் வாழும் எம்மவர் அறிய ஒருவரும் இடங்கொடுக்காததால், தமிழ்விரோத தளங்களில் செய்திகளைப் பார்ப்போர் (நம்மில் இணைய வசதி உள்ள அநேகர் பார்க்கின்றனர் என்பது உண்மை) தவறான கருத்துக்களை உள்வாங்குகின்றனர். தனிப்பட்ட ஒருவரை குறித்து ஆதாரமில்லாமல் களத்தில் எழுதினால் அது களத்தை நடாத்துபவரையே பாதிக்கும். கருத்தெழுதுபவர்கள் சொந்த பெயரிலே புனை பெயரிலோ எழுதினாலும் பாதிக்கப்படும் தனிப்பட்ட நபர் கள நிர்வாகியையே பொறுப்பேற்குமாறு கோருவார். - cannon - 04-11-2005 வணக்கம் மதன், நீர் குறிப்பிட்ட BBC செய்தியில் உண்மையுள்ளது என்று யார் சொன்னது? ஈழபதீஸ்வரர் கோவில் சம்பந்தமான பல விடயங்கள் இங்கு அரசியல் பின்னனிகளைப் பாவித்து ஊடகங்கங்களில் வெளிவருவது தவிர்க்கப்பட்டுள்ளது! மாறாக கோவிலைக் கொண்டு கொள்ளையடித்துப் கையும் களவுமாக பிடிபட்டு, உரியவர்களிடம் உண்மைகளை ஒப்புக் கொண்ட ஒரு கை விரல் விட்டு எண்ணக் கூடிய கூட்டம் இன்று புலத்தில் உள்ள ஓரிரு துரோகிகளின் ஊடகங்கள் மூலம் உண்மைகள் மறைக்கப்பட்டு, கதைகள் சோடிக்கப்பட்டு கதாநாயகர்களாகப் பட்டிருக்கிறார்கள். பி.கு: இது சம்பந்தமாக சிலரிடம் சில தகவல்கலைப் பெற்று வருகின்றேன். வெகு விரைவில் உண்மைகளை களத்தில் "மோகனின்" சம்மதத்தோடு களத்தில் பிரசுரிப்பேன். சிலருக்கு சில உண்மைகளை பிரசுரிக்கும்போது நோகச் செய்யும்தான்! பொறுத்துக் கொள்ளுங்கள். - aswini2005 - 04-11-2005 Kurumpan Wrote:அட..... விஷயத்துக்கு வாங்கப்பா...... <!--emo& அவசரமருத்துவப் பிரிவுக்கு செய்தியனுப்பியிருக்கு குறும்பண்ணா கொஞ்சம் பொறுங்கோ. இதோ அம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கு.
- kirubans - 04-12-2005 Mathan Wrote:தனிப்பட்ட ஒருவரை குறித்து ஆதாரமில்லாமல் களத்தில் எழுதினால் அது களத்தை நடாத்துபவரையே பாதிக்கும். கருத்தெழுதுபவர்கள் சொந்த பெயரிலே புனை பெயரிலோ எழுதினாலும் பாதிக்கப்படும் தனிப்பட்ட நபர் கள நிர்வாகியையே பொறுப்பேற்குமாறு கோருவார். அப்படியா. இது எல்லா இடங்களிலும் பொருந்துவதாகத் தெரியவில்லையே. இங்கு பலர் தமிழ் விரோத சக்திகளை விமர்சிக்கின்றனர். அவ்விரோதிகள் களத்துக்கு எதிராக வழக்குத் தொடரலாம் என்று நீங்கள் எண்ணவில்லையா? செய்திகளின் ஆதாரத்துக்கு தமிழ்விரோத இணையங்களைக் குறிப்பிட்டால் ஏற்றுக் கொள்வீர்களா? சில காரணங்களுக்காக புலத்தில் ஈழபதீஸ்வரர் விடயம் ஒரு விலக்கப்பட்ட விடயமாக (taboo) உள்ளது. தனிநபர் தாக்குதல் தேவையில்லைத்தான். என்றாலும் பிழையான கருத்துக்கள் பரவுதலை தடுத்து நிறுத்த தமிழ்தேசிய ஊடகங்கள் பின்னிற்பதேன்? - Mathan - 04-19-2005 இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திரு.சொ.கருணைலிங்கம் தினக்குரல் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திரு.சொ.கருணைலிங்கம் அவர்கள்ää நிதியத்தின் 'ஈழத்திற்கான செயற்றிட்டம்" தொடங்கி 5 ஆவது நிறைவையொட்டி தினக்குரல் வார வெளியிட்டுக்காக விசேட செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார். புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள ஆலங்களுக்கு முன்னோடியாக இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் நம்பிக்கை நிதியம் தனது கோயில் வருமானத்தில் 1ஃ3 பகுதியை ஈழத்தில் தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் உதவியுடன் பல்வேறு சமூக அபிவிருத்தி சார் திட்டங்களை வடக்குääகிழக்கு மலையகம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றது. 2000ம் ஆண்டில் இருந்து இன்றுவரை இவர்கள் £675இ000 பவுன்ஸ் (12 கோடி) ஜ ஈழத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் வேலைத் திட்டங்களுக்குட்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர். தாய் தந்தையரை யுத்தத்தின் கோர அழிவால் இழந்த சிறார்களை பராமரிக்கும் சிறுவர் இல்லங்கள் முதற்கொண்டுää அரச இயந்திரத்தின் அடக்குமுறைகளால் கணினி அறிவை பெற முடியாமல் தவிக்கும் பல கிராமப்புற மாணவர்களுக்கு வுஐவுயு உடன் இணைந்து இலவச கிராமிய பயிற்சி நிலையங்களை நிறுவிää நிதி உதவி செய்து வருகின்றனர். இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன்; நிதியத்தின் கடந்த கால செயற்பாடுகள் எதிர்கால திட்டங்கள் பற்றி திரு.கருணைலிங்கம் உடனான செவ்வி வருமாறுää கேள்வி:- புலம்பெயர் நாடுகளில் ஆலயங்கள் இன்று நிதி கொழிக்கும் ஒரு முயற்சியாகவும்ää அதிகாரப் போட்டியின் மையமாகவும் அதேநேரம் தாயகத்தில் துயருற்று உதவி கோரும் உறவுகளுக்கு நம்பிக்கையின் சின்னமாகவும் இருக்கின்றது. இந்தப் பின்னணியில் கனக துர்க்கை அம்மன் ஆலய தோற்றம்ää இன்றைய நிலைமை தொடர்பாக கூற முடியுமா? பதில்:- இலங்கையில் இருக்கும் கோயில்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதை நான் அண்மையில் இலங்கை வருகை தந்த போது அறிய முடிந்தது. இன அழிவுக்குட்பட்டு புலம் பெயர்ந்து உள்ள எம்மக்கள் மத்தியில் இவ்வாறான அதிகாரப் போட்டிகள்ää கோயில் நிர்வாகத்தை குடும்ப உறவினர்களிடையே மட்டுப்படுத்துவது வேதனைக்குரியது. ஆனால் இப்போது புலம்பெயர் நாடுகளில் இந்நிலை படிப்படியாக மாறி முன்னேற்றம் அடைந்து வருகின்றது. முன்பு கோயில்கள்ää ஆலய நிர்வாகத்திற்கு அடுத்து தமது முக்கிய குறிக்கோளாக கோயிலை சுற்றி சொத்துக்களை வாங்கி குவிப்பதை கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் தாயகத்தி;ல் தம் உறவுகளுக்கு நேரடியாக உதவிகளை செய்து வரும் நற்செயலை காணமுடிகிறது. இது புலம்பெயர் வாழ் இளம் சிறார்களிடம் இந்து மதம் பற்றி உயரிய கருத்தையும்ää மதம் சமூக மேம்பாட்டிற்கான ஒரு ஊக்கி என்ற கருத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கனக துர்க்கை அம்மன் நிதியம் ஆரம்பத்தில் தாயகத்திற்கு பணம் அனுப்ப முயன்ற வேளையில் பலத்த எதிர்ப்பை 25-30 வருடங்கட்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறியவர்களிடம் இருந்து பெற்றது. இது அவர்கள் தாயகத்தில் அனர்த்தங்களை நேரடியாக பார்க்காததால் ஏற்பட்ட ஒரு விளைவே. இவர்களுக்கு விளக்கமளித்துää பெரும்பான்மையான பக்தர்களின் ஆதரவுடன் தாயகத்திற்கு பணம் அனுப்பக் கூடிய வகையில் கோயில் நிர்வாக சட்ட அமைப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினோம். தாயகத்தில் மக்களோடு மக்களாக சிறப்பாக செயற்றிட்டங்களை நிறைவேற்றி வந்த அமைப்புகளான ளுறுழுஇ வுஐவுயுஇ வுசுழு போன்ற அமைப்புக்களை பிரதான ~களமுனை நிறைவேற்று நிறுவனங்களாக" தெரிவு செய்தோம். இவற்றினூடும் இன்னும் பல சமூக சேவை நிறுவனங்களுடனும் இணைந்து எமது சமூக அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றி வருகின்றோம். கேள்வி:- தாங்கள் தலைவராக பதவியேற்ற பின் செய்யப்பட்ட முக்கிய செயற்றிட்டங்கள் பற்றி கூறமுடியுமா? பதில்:- கோயில்கள் வழிபாட்டுக்கு மட்டும் உரிய ஒரு அமைப்பாக இன்றி தான் சார்ந்த ஒரு சமூகத்தின் சமூக அபிவிருத்தி அமைப்பாக இருக்க வேண்டும் என நான் உறுதியாக விரும்பினேன். கடந்த காலங்களில் முக்கிய நிகழ்வாக கோயில் கும்பாபிஷேகம்ää தாயகத்திற்கு பணம் அனுப்பக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் இலங்கையில் கனக துர்க்கை அம்மன் இல்லங்கள்ää வெண்புறாவுக்கு 2 கோடி (கூ110இ000) நிதியுதவிää இலண்டனில் இலவச சமயபாட வகுப்புக்கள் மற்றும் வுஐவுயு உடனான 10 இலவச கணினி பயிற்சி நிலையங்கள் என்பனவற்றை கூறலாம். கேள்வி:- தாங்கள் கூறிய கனக துர்க்கை அம்மன் சிறுவர் இல்லங்கள் எங்கெங்கே இருக்கின்றன அதை எவ்வாறு பராமரித்து வருகின்றீர்கள்? பதில்:- கனக துர்க்கை அம்மன் இல்லங்களை மட்டக்களப்புää அம்பாறைää மலையகம்ää திருகோணமலைää புத்தளம்ää வவுனியாää மற்றும் மன்னார் மாவட்டங்களில் அந்தந்தப் பகுதியில் உள்ள பதிவு செய்யப்பட்ட சமூக நிறுவனங்களின் உதவியுடன் நடாத்தி வருகின்றோம். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்;க ஊhயபெநவுhநசைடுகைந.ழசப என்ற இணையத்தளத்தை பராமரித்து வருகின்றோம். கேள்வி:- வுஐவுயு அமைப்பினரின் 100 கிராமிய திட்டத்தில் கனக துர்க்கை அம்மன் பங்காளியாக அமைத்துவரும் 'இலவச கணினி பயிற்சி நிலையங்கள் பற்றி? பதில்:- இது ஒரு சிறப்பான செயற்திட்டம். ஆறிவியல் ரீதியாகவும் எம் தாயகம் முதல் நிலையை அடைய வேண்டும் என்பது தேசியத்தலைவரின் அவா. வடக்கு கிழக்கு மலையக வறிய சிறார்கட்கு கணினி ஒரு மறுக்கப்பட்ட உரிமை. இந்த வகையில் எம்மாலான பங்களிப்பாக வடக்குääகிழக்கு மலையகத்தில் 10 இலவச கணினி பயிற்சி நிலையங்கட்கு நிதியுதவி செய்து வருகின்றோம். ஆங்கில அறிவும் இன்றும் இன்று ஒரு முக்கிய தேவையாக உள்ளது. இதன் தேவையை அறிந்து யாழ்ப்பாணத்தில் அண்மையில் இலவச ஆங்கில நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இல் வேலைத்திட்டங்களில் வுஐவுயு வின் பணி பாராட்டுக்குரியது. கேள்வி:- ஆழிப்பேரலை எம் தாயகத்தை சிதைத்த போது தங்கள் ஆலயம் உடனடி நிவாரண உதவிகள் மற்றும் இரண்டாம் கட்ட மீள்நிர்மான உதவிகளை வழங்கியதாக அறிய முடிகிறது. இது பற்றி? பதில்:- எமது பக்தர்கள் உடனடியாக இந்த உதவிகளை வழங்கி இருந்தனர். முக்கியமாக இவற்றில் வுசுழு ஊடாக குறிப்பிடத்தக்க தொகையையும் வுஐவுயு ஊடாக 60இ2000 லீற்றர் கொள்ளளவு உடைய தண்ணீர் தாங்கிகள் கிழக்கிற்கு அனுப்பியது. 50 இலட்சம் ரூபா செலவில் இலவச படகு இயந்திர திருத்த நிலையம் வுஐவுயு ஊடாக முல்லை மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வருகின்றது. கேள்வி:- மிக குறுகிய காலத்தில் பல பயனுள்ள வேலைத்திட்டங்களை நிறைவேற்றியமை பற்றி அறியும் போது மகிழ்வாக உள்ளது. தாங்கள் இப்பணிகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என ஏற்பட்டது? உங்களைப் பற்றி? கனக துர்க்கை அம்மன் நம்பிக்கை நிதியத்தில் உள்ள உறுப்பினர்கள் அவர்களின் பங்களிப்பு பற்றி? பதில்:- மொத்தத்தில் இது ஒரு குழு முயற்சி. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை உணர்ந்தோம். ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள்ää நம்பிக்கை நிதிய உறுப்பினர்கள். இளைஞர் பேரவை உறுப்பினர்கள்ää முத்தோர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக ஒன்று கூடி இதில் ஈடுபட்டோம். கேள்வி:- கனக துர்க்கை அம்மன் எவ்வாறு அருள் தருப் தெய்வமாக இந்துக்களால் போற்றப்படுகின்றதோ அவ்வாறே இன்று கனக துர்க்கை அம்மன் இலவச கணினி பயிற்சி நிலையங்கள்ää இல்லங்கள் தேடல் அவா உள்ள கிராமப்புற மாணவர் சமுதாயத்தால்ää தன் வாழ்வின் விடிவிளக்காக நோக்கப்படுகின்றது. இனி வருகின்ற இரண்டு வருடங்களில் இவ் வேலைத்திட்டங்களை எவ்வாறு மெருகூட்ட உள்ளீர்கள்? பதில்:- கிராமப்புறங்களில் அறிவுசார்ää தொழில்துறைசார் திறமைகளை மேம்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். நவீன முகாமைத்துவத்தில் “Pயசவiஉipயவiஎந ஆயயெபநஅநவெ” எனப்படும் எண்ணக்கரு வலுப்பெற்று வருகின்றது. உதவி செய்பவர்கள் தாம் உதவும் சமூக நல வேலைத்திட்டத்தில் நேரடியாக பங்குபெற விரும்புகின்றனர். ஒருவர் நிதிஉதவி செய்தால் அது இறுதியில் எங்கு சென்றதுää அது சரியான முறையில் செலவிடப்பட்டதா போன்ற விடயங்களை அறிவதில் ஆர்வமுடையதாக உள்ளனர். இது ஓர் யதார்த்தம். இந்த உண்மையை சிலர்; விளங்கிக்கொள்ள முயல்வதில்லை. வுpளங்கினாலும் விளங்கியது போன்று காட்டுவதில்லை. உதாரணத்திற்கு ளுpழளெழச ய ஊhடைன என்ற திட்டம் மூலம்; உதவி செய்பவர்களுக்கும் சிறாருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துகின்றோம். ஒரு கிராமத்தில் இலவச கணினி பயிற்சி நிலையம் திறக்கும் போது அக்கிராமத்தை சேர்ந்த பக்கதர்களை ஈடுபடுத்துகின்றோம். இது நீண்டகாலப் போக்கில் செயற்திட்டங்களின் நிலையான தன்மையை உறுதிப்படுத்தும் என உறுதியாக நம்புகின்றோம். கேள்வி:- சாதாரணமாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மலையகத் தமிழர்களிடையே தமது சமூக நல வேலைத்திட்டங்களை செய்வது குறைவு என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. கனக துர்க்கை அம்மன் நிதியம் எவ்வாறு? பதில்:- உண்மையில் கனக துர்க்கை அம்மன் நிதியம் தான் முதலில் மலையகத்தில் இரு சிறுவர் இல்லங்கள்ää இரு கணினி பயிற்சி நிலையங்களை ஒரு தையல் பயிற்சி நிலையம் அமைத்தது. மலையகத்தில் மேலும் பல செயத்திட்டங்களை மலையகத்தில் முன்னெடுக்க உள்ளோம். கேள்வி:- இறுதியாக எமது தினக்குரல் வாசகர்களுக்கு கூற விரும்புவது.? பதில்:- புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆலயங்களிடையே நாம் முன்னூதாரணமாக உள்ளோம் என நம்புகின்றோம். எமது கோயில் கணக்கறிக்கைகள்ää வேலைத்திட்ட விபரங்கள் அறிவித்தல் பலகைää இணையத்தளம் மூலம் ஒவ்வொரு மாதமும் வெளிப்படுத்தப்படுகிறது. இது சமூகத்தில் ஓர் வெளிப்படையாக இயங்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். மற்ற ஆலயங்களும் இந்த நடைமுறையை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும். ஆலயங்கள் நாம் இறைவனை அமைதியாக வழிபடää நாம் சார்ந்த சமூகத்தின் அபிவிருத்தியில் உதவும் நிலையங்களாக இருக்க வேண்டும். செவ்வி கண்டவர் - உலகப்பிரகாசம் ஜெயதீபன் நன்றி: தினக்குரல் (17.04.05) |