![]() |
|
கவியால் பேசலாம்..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவியால் பேசலாம்..! (/showthread.php?tid=4415) |
- thamilvanan - 04-23-2005 கண்மணியே கண்ணுறங்கு கண்மணியே நீயுறங்கு ஆரடித்து நீயழுதாய் கண்மணியே சொல்லியழு. தமிழினி அக்கா அடிச்சாளோ தட்டுமுட்டு கையnலே. ஹரியண்ணா அடிச்சானோ கம்பீரகையாலே மதுரண்ணா அடிச்சானோ மார்தட்டும் கையாலே குருவிகளும் அடிச்சாரோ குஞ்சரமே சொல்லியழு நிதர்சன் அண்ணா வந்தானே அடிச்சுப்போட்டு போட்டானோ சோழியனும் அடிச்சானோ சொக்கட்டான் காலாலே குறும்பன் அண்ணா அடிச்சானோ கொழுக்கட்டான் கையாலே மழலையும் வந்தாளே கிள்ளிப்போட்டு போனாளோ ஆரடித்தார் ஆரடித்தார் அஞ்சுகமே சொல்லனடா.. ஆரடித்துபோனாலும் SLMM விட்ட சொல்வோமடா.. - Nitharsan - 04-23-2005 sOliyAn Wrote:ஆராரோ ஆரிரரோ நெஞ்சிலே சரிந்ததால் நீ நெருடாலாய் சொல்கிறாயா? நினைவைக் கென்று வாழ இன்றே அணையிடுகிறாயோ! அடிங்கிவாழ மாட்டான் உன் பிளளை அதிகாரத்துக்கு... அன்புக்கு நானடிமை தாயே! அதற்க்கு அதிகாரம் ஏன்! அசைப்பட்டவள் தான் என் மனையாள் சீதனம் என்று சிறுமை பேசதே! கோடி விலைக்கு விற்கவா?- பால் கொடுத்து எனை வளர்க்கிறாய்? லட்சம் வாங்கவா லட்சனமாய் எனை வளக்கிறாய்.... - sathiri - 04-23-2005 ஆராரோ ஆரிவரோ தமிழினி அடித்தாரோ தலை சீவிடலாம் குருவி அடித்தாரோ குரல்வளையை கடித்திடலாம் குளகாட்டான் அடித்தாரோ குத்தியிழுத்திடலாம் மதன் அடித்தாரோ மண்டையிலைபோட்டிடலாம் தூயா அடித்தாரோ துரத்தி துரத்தியடிக்கலாம் நித்தலா அடித்தாரோ நித்திரையிலை நெரிக்கலாம் சின்னப்பு அடித்தாரோ சின்னாச்சிட்டை சொல்லிடலாம் குத்தியன் அடிச்சானோ குளறாமல் சொல்லு கண்ணே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 04-23-2005 Quote:நெஞ்சிலே சரிந்ததால் நீ எண்ணத்தால் எட்டடுக்கு மாளிகையைக் கட்டிவைத்தேன் உன்னையே நினைத்துநான் உயர்வடையக் கனவுகண்டேன் பால்கொடுத்த மார்பில்நீ காலெடுத்து உதைந்தாயோ தலைசரித்த தோளைநீ துள்ளிநின்று வதைத்தாயோ நாளையொரு தங்கைப்பாப்பா மண்காணும் வேளையிலே அவள்வாழப் பணத்துக்கு நம்பிக்கையே நீதாண்டா வெறுங்கையாய் உனக்கொருத்தி வீடுவந்து புகுந்திட்டால் - உன் தங்கைவிதி எப்படியோ கரம்பற்ற யார்வருவார்? இலாப நட்டம் பார்த்துவாழும் தமிழர்தம் வாழ்வினிலே ஏமாந்த சோணகிரி என்றபெயர் வேணுமாடா? மேடைப்பேச்சாளர் சொல்வார்கள் செய்யார்கள் - அவர் பேச்சினிலே வீணாகப் போதையேறிப் போகாதே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nitharsan - 04-23-2005 Quote:ஆராரோ ஆரிவரோ சாத்திரி வந்து சாஸ்த்திரம் சொன்னாரோ? சவுக்கெடுத்து அடித்திடலாம் ஜாதகம் ராசி யேன்று யாடை பேசினாரோ? யமலோகம் அனுப்பிடலாம்.. - Nitharsan - 04-23-2005 Quote:எண்ணத்தால் எட்டடுக்கு மாளிகையைக் கட்டிவைத்தேன் எட்டடுக்கு மாளிகை எதற்கம்மா ஏறி நின்று எகிறிக்குதிக்காவா? ஏனம்மா நீயிப்படி?-இப்போழுதும் நான் உயர்ந்த விட்டேன்-தன் மானத்தவன் என்பதால்... என்னை விற்று வாழ்வதிலும்-உன் மார்பினில் காலால் உதைப்பது மேல் என் தங்கையை வாழ வைப்பது - என் கடமை அதை என் மனைவி மீது சுமத்தவது.. சுயநல வாழ்வு.. எனைபோன்று பல தமிழர் எங்களுள் உள்ளனராம்மா.. ஏன் நீ கலங்கு கிறாய்... மேடைப் பேச்சாார் செய்யாரென்று நானுமறிவேன் தாயே!-அதனால் நானே செயல் வடிவம் கொடுப்பேன்..-மது போதை ஏறினால் மறக்கலாம்- பண போதை ஏறினால் மனிதம் மதிக்காது ஏனிதை நீ மற்தாய் தாயே!.... - Malalai - 04-23-2005 Quote:Malalai எழுதியது: நானே மழலை எனக்கு எப்படித் தெரியும் சும்மா கற்பனைல எழுதினது :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 04-23-2005 sOliyAn Wrote:ஆராரோ ஆரிரரோ சீதையம்மா உன்னை சீதனம் வதைக்கையில் உன் உடலோடு வதைப்பட்டவன் சீதனம் என்று சிறுமையில் விழுவேனோ...??! என்சினியரும் டாக்குத்தரும் பள்ளியில் படித்ததற்குப் பரிசு பரிசு காட்டி பவுசு தேட நானென்ன மதியால் ஏழையோ...! உன் கண்மணி நானம்மா வேண்டாத ஆசைகள் வளர்க்காதே நல்வழி மட்டும் காட்டிடு போகும் பாதை சீராய் அமைந்திட...! :wink: - kuruvikal - 04-23-2005 sOliyAn Wrote:Quote:நெஞ்சிலே சரிந்ததால் நீ வேண்டாத கற்பனை ஏனம்மா வேண்டாத பிள்ளையா நானம்மா வேண்டாதவர் கதை படித்துப் பாடமேனம்மா வேண்டாதவர் கூடிவிட்ட உலகிலே வேண்டுதல் சொல்லம்மா வேங்கை இவன் சாதிப்பான் வெற்றுக்கனவுகளாய் வேங்கையிதை ஊர் சுற்றும் பூனைக்குட்டி ஆக்காதே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 04-24-2005 வாறன் வாறன் வாய்நீளுது தாறன் தாறன் சுள்ளிக்கம்பால் ரண்டு மூளைச்சு மூண்டிலை விடமுந்தி முந்திரிக்கொட்டைகளாய் என்ன கதை?! கனக்கக் கதைச்சியெண்டா நீ பாலில்லை சொல்லிப்போட்டன் பழஞ்சோத்து தண்ணிதந்து வாய்க்கொழுப்பை அடக்குவன்நான் முழக்கிக் கதைச்சி யெண்டா - இப்ப மூரிமட்டை வரும், சொல்லிப்போட்டன் பெலத்துக் கதைச்சியெண்டா - இப்ப பனைநாரால் கட்டி வைப்பன் - கொப்பனைப்போல் விதண்டாவாதம் செய்தியெண்டா விளக்குமாறுதான் வரும் சொல்லிப்போட்டன்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 04-24-2005 sOliyAn Wrote:வாறன் வாறன் வாய்நீளுது மூன்று இலைக்கும் முளை தந்தவள் நீயம்மா முலை தர மறுத்தால் மூலைக்கடையில் புட்டிப்பால் வாங்கிக் குடிப்பேன்...! வீரக் காளை நானாக கனவு கண்டவள் நீயம்மா சுள்ளி காட்டி வீரம் கிள்ளினாய் "சுப்பர் மானாய்" மாறிடுவேன்...! தாய்க் கொழுப்புத் தானம்மா என் வாய்க் கொழுப்பாய் ஆச்சு எல்லாம் நீ தந்த சொத்தம்மா நானாய் எதுவும் வாங்கவில்லை..! பெலத்துக் கத்திறது தாய் நீ தந்த தமிழினத்தின் சொத்தாச்சே இனமானம் காக்க அதை நான் பத்திரப்படுத்தத் தவறுவனோ...! அப்பனையேன் இழுக்கிறாயம்மா அவன் தான் மெளனியாச்சே விதண்டாவாதம் சோழியன் மாமா சொல்லித்தந்தது கோள்மூட்டி மாமா கோவணத்தோட நிக்கப் போறார் வீரக் காளையிவன் வீர விளையாட்டு அறியவில்லைப் போலும் சொல்லி வை ஓசித் தேத்தண்ணிக்கு வீட்டுப் பக்கம் தலைகாட்டினால்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 04-26-2005 புட்டி பால் குடிக்க மூலைக்கடை நாடும் சிட்டு குருவியே சுட்டுக் குடித்தாலும் சூடன பாலாய் குடி கண்ணா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 04-27-2005 <img src='http://www.tamilcinema.com/cinenews/interview/srikanth/sri-sneha.jpg' border='0' alt='user posted image'> கருப்பொருள் இங்கு சிரிப்பழகி சிநேகாவும் சிறிகாந்தும் அல்ல தாலியெனும் பந்தம். ஏட்ப்படுத்திய சொந்தமே..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-27-2005 பாரத பூமியில்.. சிறீகாந்தும் சிநேகாவும் சோடி சேர்ந்தா விளம்பரம் நானும் நீயும் சோடி சேர்ந்தா களோபரம் காரணம் சாதி மாறிப் போச்சாம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-27-2005 களோபரம் இப்போ பிறர் நெஞ்சங்களில்.. நாளை உரியவர்களின் உள்ளும் தொற்றலாம். அதுவும் ஒரு நோய் தானே..?? குருவி குருவியுடன் சேர்ந்தால் ஏது சாதி மற்றம்..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-27-2005 மாற்றான் நெஞ்சம் கூடாது இஞ்ச குருவிக்கு மலரும் மலருக்கு குருவியும் அன்பின் உறவுகள்..! சாதி என்றும் மதம் என்றும் நிறமென்றும் அன்பின் இதயங்கள் அறுத்து இரத்தம் குடிக்க இவயென்ன மனிதக் காட்டேரிகளா..??! வஞ்சகமில்லா பஞ்சு போல் உள்ளம் கொண்ட இயற்கையின் புதல்வர்கள் பறவைகள்... மலர்கள்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-19-2005 <img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_pen1.jpg' border='0' alt='user posted image'> கவியால் பேசலாமே - kuruvikal - 05-19-2005 சேலை கட்டியதற்காய் சோலையே உன் மீது சேறா வீசுகிறார்...???! சே..அவர்கள் சேற்றில் மூழ்க விரும்பிவிட்டார் சேரார் எனித் தனிக்கரை...! சோழன் மகளே நீ கலங்காதே சேலை கட்டி செந்தமிழர் பண்பாடு செப்பியதற்காய் சோலை கொள் குருவியும் சோர்வில்லா வாழ்த்துத் தரும் சோலையே சோராதே துணிந்து செல் தொடர்ந்து செல் தனி வழியில்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 05-19-2005 முகத்தை ஏன் மூடுகின்றாய் முழுநிலவை ஏன் மறைக்கின்றாய் முன்னாலே நிற்பதாலா முத்தமொன்று கேட்டதாலா முழுமையாக தராவிட்டாலும் முத்து பல் காட்டிவிடேன் இதை கவிதை என்று சொல்ல வ்ரவில்லை. கவியால் பேசலாம் என்றார்கள் வார்த்தைகளை கோர்த்து போட்டிருக்கின்றேன் - வெண்ணிலா - 05-19-2005 நங்கையே ஏன் தலைகுனிகிறாய் உன்னவனின் நினைவுகள் ஆர்ப்பரிக்கும் போது முகத்தை மூடி மீட்டிப்பார்க்கிறியா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|