Yarl Forum
அச்சுறுத்தும் முரளிதரன் பந்துவீச்சு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: அச்சுறுத்தும் முரளிதரன் பந்துவீச்சு (/showthread.php?tid=3805)

Pages: 1 2


- vasisutha - 08-21-2005

Quote:இந்தியா - வெங்கட்ராகவன் . கபில்தேவ்
பாகிஸ்தான் - இம்ரான்கான் . வக்கா யுனீஸ்
தென்ஆபிரிகா - பொலக்
மேற்கிந்திய தீவுகள் - பிசப் . அம்புரோஸ்
சிம்பாவே - ஸ்ரிக்



இவர்கள் துடுப்பாட்டத்திலும் சிறந்தவர்கள் தானே?


- Thala - 08-21-2005

ஆகா.... முகத்தாருக்கும் "டண்"னுக்கும் சண்டை "என்ஜாய்"
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

(ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்)


- MUGATHTHAR - 08-21-2005

Quote:இவர்கள் துடுப்பாட்டத்திலும் சிறந்தவர்கள் தானே
<b>மேற்கிந்திய தீவுகள் - பிசப் . அம்புரோஸ் </b>
இவர்கள் எங்கடை முரளியைவிடவே மொசமான துடுப்பாட்க்காரர்கள்
இதிலை என்ன சொல்வதென்றால் அனுபவமிக்வர்கள் எண்டு பார்த்துக் குடுத்தால் என்ன இலங்கையணியில்
ஜெயசூரியா
முரளி
அதபத்து
மகல
வாஸ்
சங்கக்காரா

இந்த வரிசையில்தான் அனுபவபெற்றவர்கள் இருக்கிறார்கள் இதில் ஜெயசூரியா ஏற்கனவே தலைமை ஏற்றவர் ஆனால் அந்தப் பொறப்பால் தன்னால் சரியாக துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தமுடியவில்லை எண்டு தானாகவே பதவியை துறந்தவர் அப்போ 2வது நிலையில் இருக்கும் முரளிக்கு குறைந்தது உப தலைவர் பதவி ஏன் குடுபடவில்லை என்பதுதான் ??
ஆசியா டீமுக்கு இன்சாம் கப்டன் ஆக அறிவித்தது ஆனால் அவருக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் தலைமைப் பதவியை ஏற்க முடியவில்லை உடனே பதில் தலைவihக யாரைப் போடலாம் என யோசித்து முரளியை சொல்லியிருக்கிறார் எண்டால் வெளியிருப்பவர்களுக்கு முரளியில இருக்கும்; நம்பிக்கை ஏன் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரியவில்லை இங்கையும் அரசியல் புகுந்துள்ளது தான் வேதனைக்குரியது


- vasisutha - 08-21-2005

அவர் தமிழர் என்பதை மறந்து விட்டீர்களே? :roll:


- MUGATHTHAR - 08-21-2005

உங்களுககுத் தெரியுமா ஆரம்பகாலங்களில் முரளியை டீமிலிருந்து தட்டுவதற்கு எவ்வளவு முயற்சிகள் எடுக்கப்பட்டது அப்போதிருந்ந இலங்கை அணி கப்டன் அருச'சுணாதான் மிக போராட்டங்கள் மத்தியில் முரளியை தொடர்ந்து வைத்திருந்தார் இதை முரளிகூட ஒருசமயம் தெரிவித்தார் தான் இந்த நிலைக்கு வருவதற்கு அர்ச்சுணாவும் அரவிந்தாவும்தான் காரணம் எண்டு அரசியல் வேறை விளையாட்டு வேறை இதற்கு அருச்சுணா ஒரு சு.கட்சி ஆள் ஒருவேளை முரளி கதிர்காமர் மாதிரி மாறினால் இந்தப் பதவிகள் கிடைக்கக் கூடும்


- MUGATHTHAR - 02-06-2006

<span style='font-size:25pt;line-height:100%'>அவுஸ்திரேலியாவில் விளையாட விரும்பவில்லை -முரளி</span>

<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2006/February/06/sp2.jpg' border='0' alt='user posted image'>

ரசிகர்களின் தொல்லையால் முரளி விரக்தி அவுஸ்திரேலியாவில் இனிமேல் விளையாட விரும்பவில்லையென இலங்கையின் முரளிதரன் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா பங்கு பெறும் முத்தரப்புத் தொடர் அவுஸ்திரேலியாவில் நடக்கிறது. இத்தொடரில் ரசிகர்கள் முரளிதரனை நோக்கி <b>"நோபோல்' </b>என பல போட்டிகளில் கூச்சலிட்டனர். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனது பந்து வீச்சில் எந்தத் தவறும் இல்லை என சர்வதேச கிரிக்கெட் சபை முன்னால் நான் நிரூபித்துள்ளேன். விதிகளுக்கு புறம்பாக நான் பந்து வீசவில்லை. எனது பந்து வீச்சு போட்டிகள் மற்றும் பரிசோதனைக் கூடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகப் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் நான் பந்து வீசும் போது ரசிகர்கள் "நோபோல்' என கூச்சலிடுகின்றனர். நான் பவுண்டரியில் களத்தடுப்பு செய்யும்போதும் அதேபோல் கோஷங்கள் எழுப்புகின்றனர்.

மற்ற பந்து வீச்சாளர்கள் போல் தான் நானும். இனி வரும் காலங்களில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய விரும்பவில்லை. ஆனால் இது தீர்க்கமான முடிவு அல்ல என்றும் முரளிதரன் தெரிவித்தார். இதேநேரம் முரளிதரனின் பந்து வீச்சில் எதுவித தவறுமில்லையென அவுஸ்திரேலிய நிபுணர்கள் மீண்டும் தெரிவித்துள்ளனர். முரளியின் பந்து வீச்சுகள் யாவும் குறிப்பிட்ட 15பாகைக்குள்ளேயே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

thinakkural