Yarl Forum
ரிஷியின் சர்வதேச புலனாய்வு அரசியல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: ரிஷியின் சர்வதேச புலனாய்வு அரசியல் (/showthread.php?tid=3609)

Pages: 1 2 3 4


- kuruvikal - 08-21-2005

உங்கட கதையைப் பார்த்தால் இந்தியா இலங்கையின் இராஜதந்திரத்துக்கு அதுவும் இந்தியச் செல்லப்பிள்ளை கதிர்காமரின் இராஜதந்திரத்துக்கு பயந்தது என்பது போலவும் அமெரிக்காவின் நகர்வுகள் குறித்து இந்தியாவுக்கு பெரும் அச்சம் இருந்தது என்றும் நீங்கள் கொள்வீர்கள் என்றால் உங்களுக்கு பிராந்திய அரசியல் இராணுவ நிலை புரியவில்லை என்பதுதான் அர்த்தம்...! அண்டை நாடான பாகிஸ்தானில் அமெரிக்கத் துருப்பினர் நிலை கொண்டிருக்க.... அமெரிக்க உதவிகள் குவிந்து கிடக்க அதைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு அமெரிக்காவின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று தெரியாத விடயமல்ல...அதை இலங்கை எப்படிப் பாவிக்கும் என்பதும் புரியாத விடயமல்ல...ஏற்கனவே இந்தியா பிரேமதாச அரசிடம் இது குறித்து நல்ல பாடம் கற்றுக் கொண்டுதான் இருந்தது...! எனவே கதிர்காமர் என்ன இலங்கை அரசின் அத்தனை இராஜதந்திர வியூகங்களுக்கும் இந்தியாவுக்கு பதில் தெரிந்தே இருக்கும்...! இலங்கையில் சிங்கள அரசை இந்தியா முழுமையாக நம்பி எப்போதும் காரியத்தில் இறங்கியதில்லை...இறங்கப் போவதும் இல்லை...!

அமெரிக்க B52 ரக உளவுத் தாக்குதல் விமானம்..( இதன் பொருள்...அந்த விமானம் தானே உளவும் பார்த்து தாக்குதலும் நடத்தும் திறன் கொண்டது என்பதாகும்..!) யாழ் குடாநாட்டின் மீது பறந்தது பற்றி குடாநாட்டுச் செய்தித் தாள்களும் செய்தி பிரசுரித்திருந்தன...என்பது குறிப்பிடத்தக்க விடயம்...! இப்போ அது எந்த விமானம் பறந்தது என்பதற்கு சரியான ஆதாரம் எடுக்க முடியவில்லை...இருந்தாலும் எந்த விமானமாகினும் அமெரிக்க உளவு விமானம்...இலங்கை வான் பரப்பில் இந்தியாவுக்கு அணித்தாகப் பறக்க இந்தியா பார்த்திட்டு சும்மா இருந்தது என்றால்...???! அதன் பின்னணி என்ன...! இதற்கு முன்னர் சென்னையை ஒட்டிப் பறந்த அமெரிக்க விமானம் ஒன்று குறித்து இந்தியா சர்ச்சை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


Be wise - Maruthankerny - 08-28-2005

ரிஸி ஒரு போதும் இதுதான் நடந்நது என்று சொல்வதில்லை. இப்படியும் இருக்கலாம்மென்றுதான் சொல்லுகிறார் ஆதலால் அதை பற்றி முடிவு எடுப்பது என்பது உங்கள் அறிவை பொறுத்தது.........ஒரு வேளை நீங்கள் அவரிலும் விட புலானாய்வு செய்திகளை பின் தொடர்பவராயிருப்பின்.... ரிஸி இப்படி கூறினார் ஆனால் ...இது தானே நடந்நது என்று ஆதாரத்துடன் நிருபிக்கலாம். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் கடவுள் இல்லை என்று சொல்ல அதிக அறிவு தேவையில்லை இருக்கிறார் என்று சொல்லத்தான் அறிவு தேவை

.....................மருதன்கேணி!!!!!


- Vasampu - 08-28-2005

மருதங்கேணி !

நீங்கள் சொல்வது போல் பார்த்தால் ரிஷிக்கும் அறிவு தேவையில்லை.. அவரும் இருக்கு என்று ஆதாரத்துடன் எழுதாமல் இருக்கலாம் என்றுதானே எழுதுகின்றார். என்னைப் பொறுத்தவரை ரிஷி ஏனைய ஊடகங்களின் செய்திகளோடு தனது கற்பனை வளத்தையும் சேர்த்து செய்திகளை பரபரப்பாக எழுதுகின்றார். அவ்வளவுதான். இது போகப் போக எல்லோரும் புரிந்து கொள்வீர்கள்.


- Netfriend - 08-28-2005

இந்தப் பக்கம் நல்லாக சூடாக நண்ணா வளரும் போல் உள்ளதே சீனியர் குருவிகள் துவக்கியுள்ளதால் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Vasampu - 08-28-2005

சீ சீ வேண்டுமென்றால் நீங்கள் கணணிக்கு நெருப்பு வைச்சிட்டும் பாருங்கள் சூடாகத்தான் வரும்

:roll: :roll:


- Netfriend - 08-29-2005

26 இல்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


vannapu - Maruthankerny - 08-29-2005

வணப்பு!!!! கருமேகம் திரண்டு இருண்டால்.........ரிஸி மழை வரலாம் என்கிறார்.... சில வேளை மழை வராமலும் போகலாம் அதற்காக தொடர்ந்தும் மழையில் நனைந்து நனைந்தே நலிந்த இனம் சற்று கவனமாக இருந்தால் யாருக்கு லாபம்????? இல்லை என்று சொல்லாமல் ரிஸி ஆதரங்களையாவது தேடுகிறார் அதை ஏன் ஏற்கமறுக்கிறீர்கள்???????


- Netfriend - 08-30-2005

எது எப்படியோ இந்த இணையகாலத்திலும் இணயத்திலும் பத்திரிகைகளிலும் மீடியாக்களில் குறுகிய காலத்தில் ரிஷிபோல் (அவர்கள் குழுக்கள்) முன்னேற எவராலும் இனி தமிழில் இருக்கா அவர்கள் வழியில் இனியாரும் குருவிகள் சொல்லும் அத்தாட்சியுடன் வந்து முயற்சிக்கலாம்... அனால் அவர்கள் தமிழுக்கு ஒருவிதஅதிநவீன செய்திசொல்லும் தமிழ் ஈழத்தவர்கள். தமிழர்கள் முன்னேறவேண்டும் விழிக்கவேண்டும் அது எல்லாவழியிலும் இவைபோல் வெளிநாடுவந்து இங்கத்தைய கலாச்சாரம் மாறி பொருள் அறிவுபடைத்தால்மட்டும்போதா தமிழருக்காக நேரம் செலவளிக்கிறாரோ... யாரோ.. நான் ரிஷி உறவாளன் இல்லை. Idea


Thank you - Maruthankerny - 08-30-2005

நன்றி நெற்ப்ரண்ட் !!!!!!!!! உங்கள் கருத்தை நானும் எழுத நினைத்தேன் நீங்கள் எழுதி விட்டீர்கள். குருவியும் இன்னும் சிலரும் கூறுகிறார்ள்........ரிஸி பிற இணையத்தளங்களில் இருப்பவையை தனது கற்பனையையும் சேர்த்து எழுதுகிறார் என்று..........பத்திரிகை தொழிலே அதுதானே ஒன்றில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்து தமது கருத்துடன் ஒன்றிணைப்பது, அல்லது படித்தவை அறிந்தவைகளை காலத்தக்கு ஏற்றால் போல் புரிய எழுதுவது. வாசிக்கும் எமக்கு எவ்வளவு நேரம் மிச்சம் எல்லா இணைய தளங்களையும் வாசிக்க தேவையில்லையே...... எல்லா புூவிலும் தேடி தேடி மகரந்தம் சேர்த்து தேன் செய்வது மனிதனுக்கு கடினம் என்று நினைத்ததால்தான் கடவுள் சுறு சுறுப்பான தேனியை படைத்தானோ???????


- Nitharsan - 08-30-2005

Mathan Wrote:
kuruvikal Wrote:அமெரிக்க உளவாளியாமே என்று தான் கேட்டிருந்தம்...உளவாளி என்று சொல்லவில்லை...செவிக்கு வந்த சில தகவல்களின் படி ஒரு சந்தேகம் கேட்டுக் கொண்டோம்...அவ்வளவும் தான்...! ஆதாரம் இருந்தால் உளவாளி என்றே கூறி இருப்போம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

ம் அரசியல் கட்டுரை குறித்த மற்றய கருத்துக்களில் உடன்பாடுதான், ரிஷி அமெரிக்க உளவாளியா என்று நீங்க கேட்க தான் உளவுபடை வச்சிருக்கீங்களா ஆதாரம் இருக்கா என்ற சந்தேகம் உங்களை போல் எனக்கும் வந்துவிட்டது, செவிக்கு வந்த தகவல்களை வைத்து நீங்கள் கேட்டது போல் அவர் அரசியல் கட்டுரைகளை எழுதுறாரோ தெரியலை எது எப்படியோ ... எந்த அரசியல் கட்டுரைகள் செய்தியாக இருந்தாலும் படிக்கலாம் ஆனால் அவற்றை அலசி ஆராயாமல் முற்று முழுதாக நம்பக்கூடாது. அனைந்து பத்திரிகைகளையும் சேர்ந்துதான் சொல்கின்றேன்.

குருவி மதன் உங்கள் சந்தேகக் கண் வழமையாக தமிழர்கள் வைத்திருக்கும் ஒரே பார்வையில் நீங்களும் பார்க்கிறீர்கள்...
ரிஷி அவர்களின் கட்டுரையில் சில புனைவுகள் இருந்தாலும் அதில் 4ஃ3 வீதம் உண்மை. அவரிடம் உளவுப்படையில்லை ஆனால் உலகரிதியில் நட்பு வலையமைப்பு உள்ளது எனலாம். அவர் ஏயர் கனடா நிறுவனத்தில் கடந்த பல வருடங்களாக வேலை செய்து வருகின்றார். அதை விட அவரின் பல அரசியல் கட்டுரைகள் நிஜங்களானதும் உண்மை.. குறிப்பிட்டு சொல்ல போனால்..பரபரப்பில் புலனாய்வு அதிகாாரி முத்தாலிப் கொலைக்கு முன்னரான கட்டுரை மற்றும்... இன்னோரு அரசியல் கட்டுரை (சர்வதேச அரசியல்)...அவற்றை முடிந்தால் இணையத்தில் ஏற்றுகிறேன். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணுடன் நாம் பார்க்க ஆரம்பித்தால் அனைவருமே சந்தேகத்துக்கிடமானவர்களாகி விடுவர். இந்திய மத்திய அமைச்சருடன் கதிர் காமர் கதைத்தது எப்படி என்ற கேள்விக்கு விடை காண்பது மிக இலகு...ரிஷியின் நண்பர்களின் யாராவது இந்திய அரசியல் களத்தில் இருந்திருக்கலாம். அல்லது ஒரு ஆய்வாளன் என்ற முறையில் சில இராணுவ புலனாய்வு அதிகாரிகளுடன் அவருக்கு தொடர்புகள் இருக்கலாம்.. ரிஷி அவர்களின் ஆய்வு பெரும்பாலும் அடுத்து என்ன நடக்கும் என்ற வகையில் தான் இருக்கிறது...


- Nitharsan - 08-30-2005

Vasampu Wrote:மருதங்கேணி !

நீங்கள் சொல்வது போல் பார்த்தால் ரிஷிக்கும் அறிவு தேவையில்லை.. அவரும் இருக்கு என்று ஆதாரத்துடன் எழுதாமல் இருக்கலாம் என்றுதானே எழுதுகின்றார். என்னைப் பொறுத்தவரை ரிஷி ஏனைய ஊடகங்களின் செய்திகளோடு தனது கற்பனை வளத்தையும் சேர்த்து செய்திகளை பரபரப்பாக எழுதுகின்றார். அவ்வளவுதான். இது போகப் போக எல்லோரும் புரிந்து கொள்வீர்கள்.

வியாசன் நான் இது வரை அறிந்தவரை ரிஷியின் ஆய்வுகளை பிரதி செய்தவர்களை தான் அறிந்திருக்கிறேன். குறிப்பாக தினக்குரல் பத்திரிகை பரபரப்பின் அனுமதியோடும் வீரகேசரிப்பத்திரிகை அவர்களின் அனுமதியின்றியும் அவரின் கட்டுரைகளை பிரதி செய்து வெளியிடுகின்றன. ரிஷியின் ஆய்வுகளில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் தமிழ் மக்களால் பெரிதும் அறியப்படாத விடையம். அவர் மேற்குலக ஊடகங்களின் ஊடாகவும் வேறு வழிகளிலும் கிடைக்கும் தகவல்களை தமிழ் மக்கள் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் வெளியிடுகின்றார்.


- sayanthan - 08-30-2005

தவிர ரிஷியின் சர்வதேச புலனாய்வு நிகழ்ச்சி புலிகளின் குரல் வானொலியிலும் அவரது குரலிலேயே ஒலிபரப்பாகிறது. புலிகளின் குரலில் ஒலிபரப்பாகும் நேயர் கடிதம் பகுதில் பலதடவைகள் அந்நிகழ்ச்சி நேயர்களால் பாராட்டப்பட்டிருக்கிறது.


- மின்னல் - 08-30-2005

Quote:அவர் ஏயர் கனடா நிறுவனத்தில் கடந்த பல வருடங்களாக வேலை செய்து வருகின்றார்.

அப்ப எயா கனடாவில் வேலை செய்தா எல்லாரும் புலனாய்வுக் கட்டுரை எழுதலாம் அவையின்ர கட்டுரை கட்டாயம் உண்மையாக இருக்கு எண்டு சொல்லுறீங்களா நிதர்சன்.:?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 08-30-2005

யாழ்களத்தில வந்த பரப்பரப்பின் பிரதிகளைப்பார்த்தோ என்னமோ ரிஷி இப்படி போட்டுவிட்டர்... :?

<img src='http://img400.imageshack.us/img400/6333/paraparpu2ar.jpg' border='0' alt='user posted image'>

பறவாயில்லை நம்ம புலனாய்வு இருக்கும் வரை என்ன கவலை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- மின்னல் - 08-30-2005

sinnakuddy Wrote:உலக புலனாய்வு விசயங்களை இலகு படுத்தி எனனைப்போன்ற ஆங்கிலம் தெரியாத பாமரனுக்கு தெரியவைத்தவர் என்பது கருத்து.
என்ன சின்னக்குட்டி பரபரப்புப் பேப்பர் பார்த்ததோ அல்லது ரிசியின் புலநாய்வு அரசியலைக் கேட்டதோ இல்லைப் போல. ஈழத்தமிழர்களினால் வெளியிடப்படும் பத்திரிகைகளில் ஆங்கிலத்தையும் கலந்து எழுதும் ஒரேஒரு பத்திரிகை பரபரப்பு மட்டுமே. இதிலை உங்களிற்கு சந்தேகம் எண்டா இந்த பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் பரபரப்பு பத்திரிகையின் பக்கங்களைப் பாருங்கோ எத்தினை இடத்திலை ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று.


- sathiri - 08-30-2005

Quote:அப்ப எயா கனடாவில் வேலை செய்தா எல்லாரும் புலனாய்வுக் கட்டுரை எழுதலாம் அவையின்ர கட்டுரை கட்டாயம் உண்மையாக இருக்கு எண்டு சொல்லுறீங்களா நிதர்சன்.:?:
எயா கனடாவிலை வேலை செய்ததாலை புலனாய்விலை இறங்கேல்லைஎன்ரை ஊர் காரணெண்ட படியா புலனாயவெளிக்கிட்டிருப்பார் மானிப்பாய்தான் அவரும் பரபரப்பெண்டா அவருக்கு பிடிக்கும் அதாலைதான் பத்திரிகைக்கும் அப்பிடி பெயர் வைத்தவர்


- Danklas - 08-30-2005

ஓ அப்ப ரிஷியும் ஏமாந்தவர்கள் இருக்கும் இடத்தில இருந்துதான் வந்தவரோ??? சரி சரி நடக்கட்டும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Nitharsan - 08-30-2005

மின்னல் Wrote:
Quote:அவர் ஏயர் கனடா நிறுவனத்தில் கடந்த பல வருடங்களாக வேலை செய்து வருகின்றார்.

அப்ப எயா கனடாவில் வேலை செய்தா எல்லாரும் புலனாய்வுக் கட்டுரை எழுதலாம் அவையின்ர கட்டுரை கட்டாயம் உண்மையாக இருக்கு எண்டு சொல்லுறீங்களா நிதர்சன்.:?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இல்லை மின்னல்...அப்படி நீங்கள் நினைக்கும் பட்சத்தில் நான் எதுகும் செய்யமுடியாது அல்லவா? நான் சொன்னது அவர் அந்நிறுவனத்தில் வேலை செய்வதால் பல வெளி நாட்டு நண்பர்களுடன் பழக சந்தர்ப்பம் அதிகமாகிறது. அதன் மூலம் அவரின் ஆய்வுகள் தமிழர்களுக்கு அப்பால் மற்றவர்களின் எண்ணங்களையும் சோர்த்து இடம் பெறுகின்றது....


- Vasampu - 08-31-2005

சரி சரி ரிஷியை இன்று போற்றுவோர் நாளை துரோகி என்று து}ற்றாமல் இருந்தால் சரி.
:roll: :wink:


- ஜெயதேவன் - 08-31-2005

ம்ம்ம்ம்ம்ம்.....

உந்த ரிசி, கனடாவில் இருந்ததனால், ஆள் தப்பிவிட்டார்! லண்டனாகவிருக்க வேண்டும் .... நாலு மொட்டைக்கடிதங்கள் போட்டு ஆளை மாட்டி விட்டிருப்பன்!!!