![]() |
|
மோகன்லாலின் மொழி வெறி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மோகன்லாலின் மொழி வெறி (/showthread.php?tid=3271) Pages:
1
2
|
- RaMa - 10-16-2005 thuyawan Wrote:தமிழன் எப்போது படத்துறையிலும், அரசியலிலும் பெரும் பங்கை வகிக்கின்றானோ, அன்றுதான் தமிழ்நாடு உருப்படும். யார் சொன்னது - aathipan - 10-16-2005 கேரளாவில் வேலைவாய்ப்பு மிகக் குறைவு. எப்போதும் கொமுனி ஸ்;ட் அரசியலால் அங்கு வெளியாட்கள் பெரிதாகா தொழில் தொடங்க விரும்புவதில்லை. அதனால் அவர்கள் வேலைதேடி உலகம் எங்கும் சென்று வாழ்கின்றனர். வந்தாரை வாழவைக்குமு; தமிழகத்தில் மலையாளிகள் அதிகம். தமிழகத்தில் வாலட்ட மாட்டார்கள். அடக்கமாகத்தான் இருப்பார்கள். கேரளாவில் உள்ள மலையாளிகள் தமிழர்களை பெரிதாக மதிக்காததற்கு காரணம் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச்சேர்ந்த வறிய தமிழர்கள் அங்கு துப்பரவுப்பணியில் ஈடுபடுகிறார்கள். ஐயப்பன் சீசனில் துப்பரவுப்பணிக்காக ஏராளமான பணியாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்வது வழக்கம். அதனால் தமிழர்கள் என்றால் இழக்காரமாக போயிருக்கலாம் மோகன்லாலுக்கு. ஆனால் மோகன்லால் மட்டுமல்ல மற்ற மலையாள ஸ்டார்களுக்கும் வீடு சென்னையில்தான் இருக்கும். மோகன் லால் சிறந்த நடிகர் இதில் சந்தேகம் கிடையாது. இப்போது எங்க விஜயகாந்போல குண்டு அவரை ஏற்றுக்கொள் மக்கள் தயங்குகிறார்கள். தமிழ் சினிமாவில் கேரள சேச்சியை வைத்து அல்லது நாயரைவைத்து பல நகைச்சுவை ராக்குகள் எழுதப்பட்டுள்ளது. இதை சீரியஸாக எடுக்கத்தேவையில்லை. சினிமாவில் இது சகஜம். - தூயவன் - 10-16-2005 RaMa Wrote:thuyawan Wrote:தமிழன் எப்போது படத்துறையிலும், அரசியலிலும் பெரும் பங்கை வகிக்கின்றானோ, அன்றுதான் தமிழ்நாடு உருப்படும். இது என் அடுத்து பட டயலொக். யாரிடமும் சொல்லிடாதீங்க - vasisutha - 10-16-2005 aathipan Wrote:கேரளாவில் வேலைவாய்ப்பு மிகக் குறைவு. எப்போதும் கொமுனி உண்மைதான் ஆதி.. சரியாக சொன்னீர்கள்.. மலையாளிகள் ஷகிலா போன்றோரை வைத்து மட்டமான படங்களை எடுப்பது எதில் சேர்த்தி? மோகன்லால் மட்டுமல்ல மம்முட்டி ஜெயராம் போன்ற பலரும் தமிழ்நாட்டில்தான் வீடு வாசல் வைத்திருக்கிறார்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சமீபத்தில் கூட பத்திரிகைகளில் வந்தது தமிழ்நாட்டு பதிவுடைய வாகனங்களை கேரளாவில் தாக்குவது அடிக்கடி நடக்கிறதாம்.. கன்னடதேசத்திலும் இப்படி நடப்பது காலம்காலமாய் உள்ள கதை? ஏன் இப்படி தாக்குகிறார்கள்? இதன் மூலகாரணம் என்ன? யாராவது விளங்கப்படுத்துங்கள்.. :roll: - aathipan - 10-16-2005 இலங்கையில் உள்ளது போலவே இந்தியாவிலும் ஒரு இனப்பிரச்சனை உள்ளது. அங்கு மாநிலங்கள் ஒவ்வொன்றும் மொழியின் அடிப்படையில் தான் பிரிக்கப்பட்டுள்ளது என்பது நீங்கள் அறிந்ததே. மாநிலங்களுக்கிடையில் எல்லைப்பிரச்சனை மற்றும் ஆற்று நீரைப்பகிர்ந்துகொள்வதில் தகராறு போன்றவை ஒரு மாநிலத்தவர்களுக்கும் மற்ற மாநிலத்தவர்களுக்கும் பிரச்சனையைத்தோற்றுவிக்கிறது. இதைத்தூண்டிவிடுவது வழக்கம்போல்; அரசியல் வாதிகள்தான். |