![]() |
|
தமிழ்க்கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிடத் தீர்மான - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழ்க்கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிடத் தீர்மான (/showthread.php?tid=1961) Pages:
1
2
|
- Sukumaran - 12-18-2005 <span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. என்னை குழப்பத்திற்குள்ளாக்காதீர்கள்.. நீங்கள்தான பறக்குமா பறக்காதா என எழுதவேண்டும்.. உங்களுக்கு தற்போது போடப்பட்ட மற்றுமொரு தொடுப்பையும் தருகிறேன்.. சென்று பாருங்களேன்.. செய்தியின்பொருட்டு பறக்க வாய்ப்புள்ளது..</span> http://www.eelampage.com/?cn=22618 kurukaalapoovan Wrote:Sukumaran Wrote:[size=18]அண்ணா.. நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள்.. பண்டிகள் நல்லாய் றெக்கை அடிச்சு பறப்பது படித்திருக்கிறீர்கள்.. நான் அதை படிக்கவில்லை.. கேள்விஞானத்தில் எத்தனை எத்தனையோ பயனுள்ள விடயங்களை அறிய முடிகிறது.. - iruvizhi - 12-18-2005 தமிழ்க்கட்சிகள் ஒரணியில் நிற்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். தமிழனுக்கு என்ன நடந்தாலும் தமிழன்தான் தட்டிக்கேட்பான் கேட்பான். - sri - 12-20-2005 தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்க 4 பேர் கொண்ட குழு அமைப்பு இலங்கைத் தீவில் செயற்படும் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் துணைத் தலைவர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று திங்கட்கிழமை இரவு சந்தித்துப் பேசினர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடையே இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் முடிவில் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்க 4 பேர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று காலை ஆறுமுகம் தொண்டமானைச் சந்தித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன், தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான தனது ஆதரவினைத் தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளிடையேயான சந்திப்புகளை முன்னெடுப்பது தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கான யோசனைகளை இந்த 4 பேர் கொண்ட குழு அளிக்கும் என்றும் இது தொடக்க நிலைதான் என்றும் ஆர். யோகராஜன் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். புதினம் |