Yarl Forum
மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை..! (/showthread.php?tid=1712)

Pages: 1 2 3


- SUNDHAL - 12-30-2005

நிச்சயமாக தமிழ்நாட்டு அரசியலை பொருத்த வரை நிரந்தர பகையும் இல்லை நிரந்தர நட்ப்பும் இல்லை..ஆனால் வைகோ ஜெ கூட்டனியில் சேருகின்ற வாய்ப்பு மிக குறைவு..தொகுதி பங்கிடும் போது தெரிய வரும் அத வரை பொருமை plzz


- SUNDHAL - 12-30-2005

வணக்கம் மதராசி றொம்ப நாளா காணம் நல்லா இருக்கிங்கலா?


- matharasi - 12-30-2005

SUNDHAL Wrote:வணக்கம் மதராசி றொம்ப நாளா காணம் நல்லா இருக்கிங்கலா?
வணக்கம் சுண்டல்...தாங்ஸ்ங்க.....என்னங்க ...ஏங்க இப்ப சுட்டு போடுறதை ரெம்ப குறைச்சிட்டீங்க..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- SUNDHAL - 12-30-2005

சுட்டு பொட்டாலும் திட்டுறாங்கப்பா சொந்தமா போடதெரியாதானு எதுக்க வம்பு.. Cry Cry


- தூயவன் - 12-30-2005

Danklas Wrote:அட்டட்டட்டடா அரசியல்லாம் இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா,,,, :evil: :evil: :evil: :evil: எண்ட கறவை மாட்டை ஆப்பு இழுத்தவர் எத்தனை நாள் குத்தகை எடுத்து வைச்சிருந்தவர் தெரியுமோ? முழு டிரையில்சையும் சொன்னால் அந்த பிஞ்சு மனசிண்ட மனம் நொருங்கிடும்,,,, Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> (அட நான் பிஞ்சு உள்ளம் எண்டு சொன்னது நம்ம சங்குவை)

சொல்லன்டா? இப்பயான கதை கேட்கின்றதே தனி அலாதிதான் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 12-30-2005

SUNDHAL Wrote:சுட்டு பொட்டாலும் திட்டுறாங்கப்பா சொந்தமா போடதெரியாதானு எதுக்க வம்பு.. Cry Cry

சுண்டல்..இதுக்காக எல்லாம் வருத்தப்படலாமா.. சுடுங்க போடுங்க..அதுதான் சுண்டல்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathuran - 12-30-2005

அப்பாடா இப்பத்தான் வேலயால வந்தனான். வந்த உடனையும் யாழை மீட்டு(மீட்டி) பார்ப்பம் எண்டு ஓடோடி வந்தால். இனிப்பான செய்தியொன்றோடு குருவிகள் பறப்பத கண்டு எந்தன் மனம் ஆர்பரிக்குதல்லோ. அதுதான் விசயம் தமிழ்நாட்டில் தங்களின் உறவுகளிற்காய் ஆர்ப்பரித்த அன்பு உள்ளங்கள் பற்றிய செய்தியை படித்து. ம்ம்ம்ம் இப்படி தமிழன் ஒற்றுமையாய் எப்போதும் எதிலும் இருந்தால் ஏன் எந்த ஓனாயாவது ஊளையிடப்போகுது, இல்லை கடித்து குதறப்போகுது. கண்கள் கலங்கி கண்ணீர் வருகுது. அன்பினைக் கொட்டுகின்றோம் இப்படியாவது எங்களைப்பற்றி எங்கள் உறவுகள் அன்புகாட்டுதற்கு தமிழ்நாட்டில் இடம் கிடைத்ததற்காய்.


- iruvizhi - 12-30-2005

<img src='http://img500.imageshack.us/img500/5263/113qv.jpg' border='0' alt='user posted image'>

<b>காலம் பல கடந்தும்
எம்துயர் இன்னும் முடியவில்லை
நாளை ஒரு விடியலுக்காய்
நடை நடயாய் நடக்கின்றோம்.

நாங்கள் படும் துயரம்
நாய் கூட படுவதில்லை.
நாதியற்றார் என்றொம்மை
அழத்தவர்க்கு பதில் சொல்ல
நீதி கேட்கும் புலிகள் வந்தார்.

வாழ்ந்த வீட்டை விட்டு
விரட்டியடிக்கபொட்டோமையா.
என் கணகள் கலங்க சொல்லுகின்றேன்
என் தாய் காலடி மண்ணெடுத்து
நாம் கட்டிவைத்த வீட்டை பாராது
கடசி வரைக்கும் இந்த கட்டை வேகாது.
தமிழீழம் எங்கள் கைவந்து சேரும் வரை
எங்கள் விழிகள் இரண்டும் சோராது.

எமக்காய் துடிக்கின்ற தமிழ் உறவுகளே
தமிழ் கூறும் நல் பெரியோரே.
நீங்கள் ஒன்று சேர்ந்த சேதி கேட்டு
மனம் மகிழ்ந்தோம்.
எங்களுக்காய் நீதிகேட்கும்
உன்னத உறவுகள் நீங்களன்றோ.
என் உள்ளத்து உணர்வை வலிமையாக்கி
சொல்லுகின்றோம்.
உங்கள் இலட்சியங்கள் வெல்லட்டும்.
வெல்லவேண்டும் வெல்லும்.

உங்கள் கரம் பற்றி ஈழத்து செய் ஒருத்தி/ஒருவன்</b>

<img src='http://img506.imageshack.us/img506/3396/153qd.jpg' border='0' alt='user posted image'>


- iruvizhi - 12-31-2005

iruvizhi Wrote:<img src='http://img500.imageshack.us/img500/5263/113qv.jpg' border='0' alt='user posted image'>

<b>காலம் பல கடந்தும்
எம்துயர் இன்னும் முடியவில்லை
நாளை ஒரு விடியலுக்காய்
நடை நடயாய் நடக்கின்றோம்.

நாங்கள் படும் துயரம்
நாய் கூட படுவதில்லை.
நாதியற்றார் என்றொம்மை
அழத்தவர்க்கு பதில் சொல்ல
நீதி கேட்கும் புலிகள் வந்தார்.

வாழ்ந்த வீட்டை விட்டு
விரட்டியடிக்கபொட்டோமையா.
என் கணகள் கலங்க சொல்லுகின்றேன்
என் தாய் காலடி மண்ணெடுத்து
நாம் கட்டிவைத்த வீட்டை பாராது
கடசி வரைக்கும் இந்த கட்டை வேகாது.
தமிழீழம் எங்கள் கைவந்து சேரும் வரை
எங்கள் விழிகள் இரண்டும் சோராது.

எமக்காய் துடிக்கின்ற தமிழ் உறவுகளே
தமிழ் கூறும் நல் பெரியோரே.
நீங்கள் ஒன்று சேர்ந்த சேதி கேட்டு
மனம் மகிழ்ந்தோம்.
எங்களுக்காய் நீதிகேட்கும்
உன்னத உறவுகள் நீங்களன்றோ.
என் உள்ளத்து உணர்வை வலிமையாக்கி
சொல்லுகின்றோம்.
உங்கள் இலட்சியங்கள் வெல்லட்டும்.
வெல்லவேண்டும் வெல்லும்.

உங்கள் கரம் பற்றி ஈழத்து செய் ஒருத்தி/ஒருவன்</b>

<img src='http://img506.imageshack.us/img506/3396/153qd.jpg' border='0' alt='user posted image'>

படங்கள்: தென்சைற்

நன்றி


- தூயவன் - 01-29-2006

<b>தேசிய விடுதலையை விளங்கிக்கொள்ளவேண்டும்! அதனை அமெரிக்கா ஒரு சந்தைப் பொருளாகப் பார்க்கக்கூடாது - கவிஞர் இன்குலாப் </b>

தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தினை அமெரிக்கா ஒரு சந்தைப் பொருளாகவே பார்க்கின்றது என மக்கள் கவிஞர் இன்குலாப் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அண்மையில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ள கருத்துக்களைக் கண்டித்து நேற்று தமிழகத்தில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை அதன் ஆழத்தையும். தாற்பரியகங்களையும் அறியாமல் அமெரிக்கா ஒரு சந்தைப் பொருளாக நினைக்கின்றது.
தேசிய இனவிடுதலை விழுமியங்களை அமெரிக்கா விழுங்கப்பார்க்கின்றது.
அமெரிக்காவின் பாதத்தின் கீழ் இருந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் கிளர்ந்தெழுந்துள்ளன.

அத்தோடு; உலகம் முழுவதும் விடுதலை விரும்பும் இனங்கள் ஒன்று திரண்டு நிற்கின்றன.
இதே வேளை உலகம் முழுவதும் விடுதலைப் போராட்டங்களை இடது சாரிகள் ஆதரிக்கின்றனர். இதனால் எமது தமிழர்களது போராட்டத்தினையும் இடது சாரிகள் ஆதரிக்கவேண்டும். இந்திய இடது சாரிகள் இங்கும் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, சிங்கள ரத்னா விருது பெற்ற இந்து ராமின் வழிமுறைகளைப் பின்பற்றக்கூடாது.

உண்மையில் ஒரு நாட்டில் குறைவாக வாழும் மக்கள் மீது தான் அமெரிக்கா போன்றோரின் அக்கறை காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க தூதுவரின் அச்சுறுத்தும் உரைக்கு அதீத கண்டனம் தெரிவித்தும் அதேவேளை ஈழப்போராட்டத்திற்கு நாம் எப்போதும் ஆதரவாக பின்புலத்தில் இருப்போம் என்றும் அங்கு வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

சர்வதேச இடது சாரி சக்திகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் நேசக்கரம் என்ற தலைப்பில் புலிகளின் குரலில் அரசியல் ஆய்வரங்கத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்துவடிவமும், கியுூபாவும் தமிழீழமும் என்ற தலைப்பில் தமிழகத்தில் கியுூபா ஆதரவு மாநாட்டினை நடத்தும் இடது சாரி கட்சிகள், கியுூபாவுக்கு நேசக்கரம் நீட்டும் தமிழீழம் குறித்து அக்கறை காட்டவேண்டும் என்று துண்டுப்பிரசுரமும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் இந்தக் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டன.

இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட இயங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழீழ விடுதலைக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாகவும், அதே நேரம் ஈழத்தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றிய சிறீ சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், தஞ்சையில் தமிழ்த்தேச பொதுவுடமைக்கட்சியின் பொதுச்செயலாளர். பே.மணியரசன் தலைமையிலும், மதுரையஙில் தமிழர் தேசிய இணக்க பொதுச்செயலாளர் பரந்தாமன் தலைமையிலும், கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை. கு, இராமகிஸ்ணன் தலைமையிலும் நடைபெற்றன.
எதிர்வரும் 30 ஆம் நாள் அன்று சேலத்தில் தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரின் உரையினைக்கண்டித்து கண்டன அர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.


- MUGATHTHAR - 01-29-2006

<i><b>புலிகளை அச்சுறுத்தும் விதத்தில் அமெரிக்க தூதர் உரையாற்றியதை கண்டித்து தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம்</b>

எவர் அச்சுறுத்தினாலும் வாலை நறுக்கும் ஆற்றல் தமிழ் இனத்துக்கு இருப்பதாக முழக்கம்

விடுதலைப் புலிகளை அச்சுறுத்தும் வகையில் கொழும்பில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து தமிழகத்தில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் <b>சென்னை மதுரை தஞ்சை கோவை </b>ஆகிய நகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான [i]ஆனூர் ஜெகதீசன் </i>பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச்செயலாளர் <i>தொல்.திருமாவளவன் </i>மார்க்சிய பெரியார் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் <i>வே.ஆனைமுத்து </i>தமிழ் தமிழர் இயக்கப் பொதுச் செயலாளர் <i>தியாகு</i> மக்கள் கவிஞர் இன்குலாப் புரட்சிகர இளைஞர் முன்னணியின் நிர்வாகி <i>தமிழ்மணி</i> தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சியின் <i>கி.வெங்கட்ராமன் </i>தமிழ்த் தேசிய மார்க்சிய கட்சியின் <i>இராசேந்திர சோழன் ஓவியர் புகழேந்தி</i> உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட இயக்கத்தின் நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர்.

அமெரிக்கத் தூதுவரின் அச்சுறுத்தும் உரை மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான அமெரிக்க இந்திய உதவிகள் ஆகியவற்றைக் கண்டித்து கூட்டத்தில் உரையாற்றியவர்கள் பேசினர்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகள் எதனையுமே குறிப்பாக ஆயுதக் குழுக்கள் களைவுஅதிக உயர் பாதுகாப்பு வலயம் அகற்றல் மீன்பிடித் தடை உள்ளிட்ட தமிழர் தொழில் செயற்பாடுகளுக்கான சுதந்திரம் ஆகியவற்றை 4 ஆண்டு காலமாகியும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்பதால் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து நிற்கின்றனர் என்று தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடுகளில் சோசலிச அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் விடுதலைப் புலிகளும் அந்த அரசாங்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதையும் விடுதலை க. இராசேந்திரன் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகள் அச்சுறுத்தினாலும் அதன் வாலை ஒட்ட நறுக்கும் ஆற்றல் விடுதலைப் புலிகளுக்கும் தமிழினத்துக்கும் உண்டு என்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கீழ் உள்ள தென் அமெரிக்க நாடுகளில் பொலிவியா உள்ளிட்ட தேசங்களில் சோசலிச அரசுகள் கோலோச்சுகின்ற போது ஈழத் தமிழர்களை அமெரிக்கா எதிர்க்கிறது எனில் தமிழீழத்தையும் சோசலிச நாடுகளின் அணியில் தான் அமெரிக்கா கருதுகிறது என்று தமிழ் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு தெரிவித்தார்.

இந்திய அரசாங்கம் கடந்த ஓராண்டாக இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளித்து வருகிறது என்றும் இன்று கூட சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையத்தில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்து குற்றம்சாட்டினார்.

தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒரு சந்தைப் பொருளாக அமெரிக்கா பார்க்கிறது. தேசிய இன விடுதலை விழுமியத்தை அமெரிக்கா விழுங்கப் பார்க்கிறது. அமெரிக்காவின் பாதத்துக்குக் கீழ் இலத்தீன் அமெரிக்க நாடுகள் கிளர்ந்து எழுந்துள்ளன. உலகம் முழுவதும் விடுதலை விரும்பும் நாடுகள் ஒன்றுபட்டு நிற்கின்றன.

உலகம் முழுவதும் விடுதலைப் போராட்டத்தை இடதுசாரிகள் ஆதரிக்கின்றன. ஆனால்இ ஈழத்தையும் இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும். தமிழக இடதுசாரிகள் சிங்கள ரத்னா விருது பெற்ற இந்து'ராமின் அணுகு முறையைப் பின்பற்றக் கூடாது. இந்த நாட்டில் குறைவான எண்ணிக்கையில் இருப்போருக்கான நலன் தான் அவரது அணுகு முறைதான் என்றார் மக்கள் கவிஞர் இன்குலாப்.

அமெரிக்க தூதுவரின் அச்சுறுத்தும் உரையைக் கண்டித்தும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என்பதையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

"சர்வதேச இடதுசாரி சக்திகளுக்கு விடுதலைப் புலிகள் நேசக்கரம்" என்ற தலைப்பில் புலிகளின் குரல் அரசியல் ஆய்வரங்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமாக புதினம்' இணயத்தளத்தில் வெளியிடப்பட்டதையும் கியூபாவும் தமிழீழமும் என்ற தலைப்பில் தமிழகத்தில் கியூபா ஆதரவு மாநாட்டை நடத்துகிற இடதுசாரி சக்திகள் கியூபாவுக்கு நேசக்கரம் நீட்டும் தமிழீழம் குறித்து அக்கறை கொள்ள வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் இந்த கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டன.

2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட இயக்கங்களின் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தமிழீழ விடுதலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாகவும் ஈழத் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றிய அமெரிக்க தூதுவரைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை உரத்த குரலில் எழுப்பினர்.

இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமையிலும்இ மதுரையில் தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் பரந்தாமன். தலைமையிலும் கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையிலும் நடைபெற்றன.

நாளை 30 ஆம் திகதி சேலத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது
thinakkural
http://www.thinakkural.com/New%20web%20sit...Important-4.htm


- மேகநாதன் - 01-31-2006

<b>அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து சேலத்தில் இன்று எழுச்சிமிக்க பேரணி- கண்டன ஆர்ப்பாட்டம்!! </b>
[<i><b>திங்கட்கிழமை, 30 சனவரி 2006</b></i>, 19:46 ஈழம்] [புதினம் நிருபர்]
ஈழத் தமிழரை மிரட்டும் வகையில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து தமிழகத்தின் சேலம் நகரில் இன்று திங்கட்கிழமை எழுச்சிமிக்க பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.


தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமை வகித்தார்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு "ஈழத் தமிழரை மிரட்டும் அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து" பேரணி தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளுடாகச் சென்ற பேரணி சேலம் போஸ் மைதானத்தை வந்தடைந்தது.


அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து இந்தப் பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரின் மிரட்டல் உரையை தமிழக மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் தமிழக நாளிதழ்களில் வெளியான அமெரிக்கத் தூதுவரின் உரையையும்

லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாகி வரும் சோசலிச அரசுகளுடன் விடுதலைப் புலிகள் நேசக்கரம் நீட்டுவதை விளக்கி இந்திய இடதுசாரிகளும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் பேரணியூடாக வீதிகள் தோறும் வழங்கப்பட்டு வந்தன.

சர்வதேச சமூகம் கூறிவருகிற "பயங்கரவாதம்" என்பதற்கான வரையறைகள் என்ன? என்று கடந்த மாவீரர் நாள் உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியதையும் துண்டுப் பிரசுரமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வழங்கினர்

சேலம் நகர முக்கிய வீதிகளுடாக நகர்ந்த இந்தப் பேரணி 2 மணித்தியாலங்கள் கழித்து போஸ் மைதானத்தை வந்தடைந்தது.

போஸ் மைதானத்தில் பெருந்திரளாகக் கூடியிருந்த தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், அமெரிக்கத் தூதுவரின் அச்சுறுத்தும் உரைக்குக் கண்டனம் தெரிவித்தும், தமிழீழ விடுதலைக்கு தமிழகத் தமிழர்களின் ஆதரவை வெளிப்படுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:

<b>எங்கள் இரத்தம் எங்கள் இரத்தம்
ஈழத் தமிழர் எங்கள் இரத்தம்!

வாழ்க வாழ்க வாழியவே!
எங்கள் தலைவர் பிரபாகரன் வாழியவே!

வெல்லட்டும் வெல்லட்டும்
விடுதலைப் புலிப் படை வெல்லட்டும்!

புலியே! புலியே! விளையாடு
சிங்களவன் தலையை பந்தாடு!!

மலரட்டும் மலரட்டும்
தமிழீழம் மலரட்டும்!

இந்திய தேசியம் பேசும் அண்ணாச்சியே!
பாலஸ்தீனம் இனிக்குது
வங்கதேசம் இனிக்குது
ஈழம் மட்டும் கசக்குதா?

அமெரிக்க அரசே! அமெரிக்க அரசே!
ஈழச் சிக்கலில் தலையிடாதே!!

இந்திய அரசே! இந்திய அரசே!
பயிற்சி கொடு பயிற்சி கொடு
தமிழக மீனவர்களுக்கு
ஆயுதப் பயிற்சி கொடு!</b>

ஆகிய முழக்கங்களை பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் உரத்த குரலில் முழக்கம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் 1 மணித்தியாலம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழின உணர்வாளர் புதுக்கோட்டை பாவாணன், ராஜீவ் வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளவனின் தாயார் அற்புதம் குயில்தான் அம்மையார், தமிழின உணர்வாளர் மு.அந்தாலனார், விடுதலைச் சிறுத்தைகளின் சேலம் மாவட்டச் செயலாளர் தமிழன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்டத் தலைவர் முல்லைவேந்தன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் ஆனையப்பன், தமிழ்ச் சான்றோர் பேரவையின் பாவலர் எழுஞாயிறு, தமிழ் தமிழர் இயக்கத்தின் ஆறுமுகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகளும் தமிழின உணர்வாளர்களும் போஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி பேசியதாவது:

இலங்கை யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகள் எதனையுமே சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இப்போது பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தைக்குப் போகிற சிறிலங்கா அரசாங்கம், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தித்தான் ஆக வேண்டும். அப்படி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்தா நிலை ஏற்பட்டால் சர்வதேசத்துக்கு ஒரு உண்மையும் தெரிய வரும். சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் சிறிலங்கா இராணுவம் இருக்கிறதா? அல்லது சிங்களப் பேரினவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்கிற அந்த உண்மை வரத்தான் போகிறது.

தமிழகத்திலிருந்து ஈழத் தமிழர்களுக்காக ஆதரவாகக் குரல் கொத்துக் கொண்டிருப்பதில் எதுவித பொருளும் இல்லை. தமிழகத்திலும் உரிமை பெற்ற தமிழர்களுக்கான தனியரசு அமைகின்ற போதுதான் ஈழத் தமிழர்களுக்கான நமது குரல் அர்த்தமுடையதாக இருக்கும் என்றார் கொளத்தூர் தா.செ. மணி.

puthinam.com

எழுச்சி நிகழ்வுப் படங்களைப் பார்க்க http://www.eelampage.com/?cn=23847


- கந்தப்பு - 01-31-2006

தமிழ் நாட்டில் எமக்காகக் வெயிலும் ஊர்வலமாக சென்று குரல் கொடுக்கும் இந்தியத்தமிழர்களுக்கு நன்றி. ஆனால் ஒஸ்ரேலியாவில் உள்ள ஈழத்தில் பிறந்த சில கேடு கெட்ட ஜென்மங்கள் ஈழப்போராட்டத்தினைக் கேவலப்படுத்துவதை நினைக்க வேதனையாக இருக்கிறது.


- வர்ணன் - 01-31-2006

நன்றி - இருவரதும் இணைப்புக்கு-! 8)


- Luckyluke - 01-31-2006

இந்தியத் தமிழர்கள் என்ன தான் உங்களுக்காக குரல் கொடுத்தாலும், நீங்கள் உங்கள் அநியாய இந்திய எதிர்ப்பு கருத்துக்களை நிறுத்தப் போவதில்லை.....

இன்னா செய்தாரை........


- தூயவன் - 01-31-2006

பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் எமக்குத் தெரியும்!
யார்யார் நமக்கு ஆதரவானவர்கள் என்று தெரியும்.
ஆகவே பொத்........... :evil: :evil:


- கந்தப்பு - 01-31-2006

லக்கிலுக்கு, இப்பகுதியில் நான் ஒஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் சிலரைப்பற்றியே குறைகூறினேன். இந்தியாத்தமிழர்களுக்கு நன்றி செலுத்தினேன். இந்தியாவில் உள்ள சிலரைத்தான் இங்குள்ளவர்கள் எதிர்க்கிறார்கள். எல்லோரயும் அல்ல. அது போல ஈழத்தில் உள்ள துரோகிகளையும் எதிர்க்கிறோம். தேவையில்லாமல் பிரச்சனைகள் படமால் நட்புடன் பழகுவோம்.


- sathurangan - 01-31-2006

தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும். போரட்டம் வெல்ல வாழ்த்துவோம்.
சதுரங்கன்


- sinnappu - 01-31-2006

தூயவன் Wrote:பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் எமக்குத் தெரியும்!
யார்யார் நமக்கு ஆதரவானவர்கள் என்று தெரியும்.
ஆகவே பொத்........... :evil: :evil:

அதாவது இழுத்துச்சாத்தும் எண்டுறீர் ம் ம் சொல்லுறதில நியாயமிருக்கு
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img91.imageshack.us/img91/6571/coolcatonmotorcyclesmnwm5ir.gif' border='0' alt='user posted image'>


- sanjee05 - 01-31-2006

sinnappu Wrote:
தூயவன் Wrote:பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் எமக்குத் தெரியும்!
யார்யார் நமக்கு ஆதரவானவர்கள் என்று தெரியும்.
ஆகவே பொத்........... :evil: :evil:

அதாவது இழுத்துச்சாத்தும் எண்டுறீர் ம் ம் சொல்லுறதில நியாயமிருக்கு
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img91.imageshack.us/img91/6571/coolcatonmotorcyclesmnwm5ir.gif' border='0' alt='user posted image'>
அதாவது அமுக்கிவாசிக்கோணும் என்று சொல்றார்