Yarl Forum
தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள் (/showthread.php?tid=1677)

Pages: 1 2 3 4 5


- வினித் - 01-09-2006

<b>09 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் </b>


[size=18]கப்டன் பண்டிதர்
<b>(சின்னத்துரை ரவிந்திரன்)
வல்வெட்டிதுறை
25.12.1959 - 09.01.1985</b>

முத்த உறுபினர் கப்டன் பாண்டிதர் தொய்வு நோயால் பீடிக்கப்பட்டிருந்த தந்து உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கடமை உணர்வுடன் செயற்பட்ட புரட்சிவீரன்.
ஆவராங்காலில் புலிகளின் முகாமொன்றை சிங்களப்படையினர் முற்றுகையிட்டுத் தாக்கியபோது

ரவி
சாமி
சிவா
தவம்
நேரு

ஆகிய வீரவேங்கைகளோடு வீரச்சாவடைந்தார்.

ஆனையிறவு,பரந்தன், வவுணதீவு சிறிலங்காப்படைகளுக்கு எதிரான தாக்குதல் (1997)


<b>மார்க்கோப் போலோ நினைவுநாள்
(1254 - 1324)</b>

<b>சேர். பொன் அருணாசலம் நினைவுநாள்
14.09.1853 - 09.01.1924)</b>

<b>தகவற் துளி</b>


'காய்கார்ப்' என்னும் மீனினம் 200 ஆண்டுகள் வாழக்கூடியது.


தமிழுக்கு அமிழ்தென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

-பாவேந்தர் பாரதிதாசன்-


- மேகநாதன் - 01-09-2006

தொடர்பு பட்ட "கேள்விப் பட்ட" சில மேலதிகச் செய்திகள்....

முதன் நிலைத் தளபதிகள் ஆன <b>லெப்.கேணல்கள் பாண்டியன் ,இம்ரான்</b> நினைவாக <b>"இம்ரான் -பாண்டியன்" படையணி</b> என்ற சிறப்புப் படையணி செயலாற்றி வருகிறது...புரிந்துணர்வு உடன்படிக்கைக்குக் காரணமான, வரலாற்றுச் சிறப்பு மிக்க தாக்குதலை<i><b>,"அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடு"</b></i> என்ற "சிந்தனையாகக் <b><i>"கருப்பு ஜுலை"</i></b>இல் செயலாற்றியதில் காத்திரமான பங்கு இவ் அணிக்கு உண்டு என்றும் "பேசக்" கேட்டு நினைவு...

<b>கப்டன் பண்டிதர்</b> அவர்கள் ஆயுதக் கையிருப்புப் பொறுப்பாளராக இருந்து, போராட்ட வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர்..இவர் நினைவாக <b>"பண்டிதர் சரணாலயம்" </b>கந்தர்மடத்தில் இருந்தது...இவரது வீரச்சாவுக்குப் பின்பாக கேணல் கிட்டு யாழ் மாவட்டத் தளபதியாக நியமிக்கப் பட்டதாகவும் படித்ததாக(?) நினைவு..


- வினித் - 01-10-2006

<b>10 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் </b>


¾Á¢Æ¡Ã¡ðº¢ Á¡¿¡ðÎ «Î¦¸¡¨Ä¢ý ¿¢¨É׺¢ýÉõ


1974-¬õ ¬ñΠ¡ú. ¿¸ரில் நடந்த 4வது தமிழாராட்சி
மாநாட்டைக் குழப்பிய சிங்களப் பொலிசார் 9 தமிழர்கள் சாவுக்குக் காரணமாக இருந்தார்கள்.
இந்தப் படுகொலையின் நினைவு சின்னம்யாழ். முற்றவெளியில் உள்ளது.
இந்த நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் பல முறை சிதைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது..............


<b>தகவற் துளி</b>

1787ம் ஆண்டில் முதன் முதலாக டொல்ர் நாணயம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப் பட்டது.


ஆரம்ப காலத்தில் கணிதத் தேவைக்கு பயன்பட்ட கருவி அபக்கஸ் ஆகும். இக் கருவியைப் பயன்படுத்தியவர்கள்
சீனர்கள் ஆகும்.....................

.....................

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

-குறள்-


- வினித் - 01-11-2006

<b>11 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் </b>

மேஜர் சோதியா
<b>(மைக்கல் அமல உற்பவ வசந்தி)
கரவெட்டி, யாழ்ப்பாணம்
26.09.1963 - 11.01.1990</b>

விடுதலைப் புலிகள் மகளிர் படையனியின் மூத்த போராளிகளுள் ஒருவரும் முதலாவது தளபதியுமான
மேஜர் சோதியா. உடற் பலவீனத்தையும் போருட்படுத்தாது
பணிசெய்தபோது மூளைக்காச்சல் நோயினால் பீடிக்கப்பட்டு
சாவை அணைத்துக்கொண்டார்............

<b>பதிவுகள்</b>

முதன்முதல் 1510ம் ஆண்டு ஆபிரிக்க மக்கள் அடிமைகளாக
கடல்வழியாக கரிபியன் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.


.......................

தற்கொடை எனும் உயர் முடிவு
இது எல்லோருக்கும் உரியதல்ல.

-குறள் விளக்கம்-


- வினித் - 01-12-2006

<b>12 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b>


சுவாமி விவேகானந்தர்
<b>12.01.1863 - 08.07.1902</b>

கல்கத்தா பல்கலைக்கழத்தின் இளம் பட்டதாரியான இவர்
இராமகிஷ்ணபரமஹம்சரின் தலைமை மாணவராக துறவிக்கோலம் பூண்டவர்.
1893 ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில், இந்து சமயத்தின் பெருமையை விளக்கி உரை நிகழ்த்தியதோடு, ஏழை மக்களுக்கு உதவிசெய்யும் அமைப்புக்களையும் நடாத்த வழி செய்தார்.

<b>தகவற் துளி</b>

உலகிலேயே ஒரு நாளைக்கு அதிக குழந்தைகள் பிறக்கின்ற நாடு சீனா. இங்கு ஒரு நாளைக்கு 58,700 குழந்தைகள் பிறக்கின்றன.


........................

நமது நாட்டுக்கு இப்போது வேண்டியன, இரும்பனைய தசைகளும், உருக்களைய நரம்புகளும் மற்ரும் எதனாலும் எதிர்க்கமுடியாத கடலின் அடிவரை செல்ல நேர்ந்தாலும் கருதியதை முடிக்கும் ஆற்றல் பெற்ற வலிமை மிக்க மனங்களே.

-விவேகானந்தர்-


- sri - 01-13-2006

நன்றி. முடிந்தவரையில் காலையில் இதை பதிவது நன்று.

பதிவதற்கு உதவுக்கரம் நீட்டுகிறேன்


- வினித் - 01-13-2006

<b>13 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b>

மாவீரன் அலெக்ஸாண்டர்
<b>(கி.மு. 356_ கி.மு. 325)</b>

<b>கிரேக்க தேச மன்னனான மகா அலெக்ஸாண்டர் உலகின் கணிசமான பகுதியை போரின் மூலம் வெற்றிகொண்டு அரசாண்ட ஒரு மன்னனாவார்.
தனது ஆளுகைக்குள் அடங்கிய பகுதிகளிலெல்லாம் கிரேக்க நாகரிகத்தை பரப்பினார். இவர் இறந்த பின் சரியான வாரிசு இல்லாமல் இவரது சாம்ராஜ்யம் சதரிப் போனது.</b>


<b>தகவற் துளி</b>

உலகின் மிகப்பெரிய பாலைவனம் வட ஆபிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனமாகும். இதன் பரப்பளவு 8,4000,000 சதுர கிலோ மீற்றர்களாகும்.(3,250,000 சதுர மைல்கள்)


நினைவிருக்கட்டும்! மகத்தான செயல் அனைத்தும் முதலில் முடியும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்டவைகளே.

-ஹிலிகல்-


- sri - 01-13-2006

உடன் செயற்படுத்தியமைக்கு நன்றி. தொடரவும்....


- வினித் - 01-14-2006

<b>14 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b>


<b>பதிவுகள்</b>

சந்திரிகா அரசுடனான 3ம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்ப நாள் (14.01.1995)

[size=18]தைப்பொங்கல்

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்

-ஒளவைப் பாட்டி-


தன்னிறைவான, தன்னில் தானே தங்கிநிற்க்கும் பொருளாதார
சமுகமாக எமது தேசம் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.

<b>-தமிழீழத் தேசியத் தலைவர்</b>
[b]மேதகு வே.பிரபாகரன்


- வினித் - 01-15-2006

<b>15 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் </b>


[b]லெப். கேணல் குட்டிசிறி
[b](இராசையா சிறிகணேசன்)
சுதுமலை வடக்கு, யாழ்.
23.08.1967 - 16.01.1993

விடுதலைப் புலிகளின் முதுநிலை உறுப்பினர்களில் ஒருவரான
குட்டிசிறி இயக்கத்தின் இராணுவ தொழில்நுட்பப் பிரிவில்
கடமையாற்றியவர். தளபதி கிட்டுவோடு இனைந்து உருவாக்கிய. மோட்டார் எறிக்ணை செலுத்தி வகையிற்கு
'குட்டிசிறி' என இவரது பெயரே சூட்டப்பட்டது.
இவரது பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும்
'குட்டிசிறி மோட்டார் படையணி' பல சம்ர்களில் பெரு வெற்றிகளைத் தேடித் தந்திருக்கிறது. இவர் தளபதி கிட்டுவோடு இந்தியச் சதிக்குப் பலியாகி வீரச்சாவடைந்தார்.

தகவற் துளி


அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கொல்ட் என்பவரால் முதன் முதல் 1830இல் பிஸ்டல் (றிவோல்வர் ரக துப்பாக்கி) கண்டிபிடிக்கப்பட்டது.




ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ -ஆயுதபலமோ அல்ல - அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும்,விடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்..



[b]-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்


- sinnappu - 01-15-2006

vasanthan Wrote:
MUGATHTHAR Wrote:
vasanthan Wrote:வினித் நாட்காட்டியில் வருகின்ற பொன் மொழிகளையும் போட்டால் நன்றாக இருக்குமே? :roll:
ஏன் கஷ்டப்படுவான் பேசாம கலண்டரையே போட்டுவிடச் சொல்லுமன்...........வீட்டிலை செலவு கொஞ்சம் மிஞ்சும்

யோவ் முகத்தார் :evil: :twisted: என்னிடம் தமிழ்த்தாய் நாட்காட்டி இருக்கு :!:
வெளிநாட்டில இருக்கிற உங்களுக்குத் தான் உபயோகமாயிருக்கும் அது தான் சொன்னேன். Idea

ஓய் ஏன் எங்களிட்டை இல்லையா ளொள்ளா
:twisted: :twisted: :twisted: :twisted:


- வினித் - 01-16-2006

<b>16 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b>


<b>கேணல் கிட்டு
[b](சதாசிவம் கிருஸ்ணகுமார்)
வல்வெட்டிதுறை, யாழ்
02.01.1961 - 16.01.1993</b>

<b>விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும், முதுபெரும் தளபதியுமான கேணல் கிட்டு அவர்கள்,
போராட்ட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு அத்தியாயம்.

யாழ். மக்களால் அன்புடன் நேசிக்கப்பட்ட இவர் சிங்களப் படைகளிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். வெளிநாட்டிலிருந்து 'குவேக்கர்ஸ்' இன் சமாதானச் செய்தியுடன் வந்துகொண்டிருந்தபோது இந்தியச் சதிக்குப் பலியாகி வீரச்சாவடைந்தார்.</b>


<b>பதிவுகள்</b>


கேணல் கிட்டு, லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 வேங்கைகள் இந்தியச் சதிக்குப் பலியாகி வங்கக் கடலில் காவியமான் நாள்.


<b>தகவற் துளி</b>


டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது பயணிகளைக் காப்பாற்றிய கப்பலின் பெயர் 'கார்பாத்தியா' என்பதாகும்.




கேணல் கிட்டு ஒரு தனி மனித சரித்திரம். ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு...................


<b>-தமிழீழத் தேசியத் தலைவர்</b>
[b]மேதகு வே.பிரபாகரன்


- வினித் - 01-17-2006

<b>17 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b>

முதுபெரும் தளபதி கேணல் கிட்டுவினதும் ஏனைய போராளிகளினதும் நினைவாக.


எங்கே? எங்கே? வேங்கைகள் எங்கே?
இந்திய அரசே பதில் கூறு. அந்த சந்தன.
மேனிகள் செந்தணலான சங்கதி தெரியும் பதில் கூறு.

கடலில் வெடித்த கப்பலில் இருந்து
கரும்புலி ஆயிரம் பாயும், உனைத்
தடவும் தென்றல் காற்றும் - இனிமேல்
அனலாய்தானே வீசும்.

<b>பதிவுகள்</b>

17.01.2001 அன்று யாழ். பல்கலைக்கழகத்தின் தலைமையில்
'பொங்கு தமிழ்' என்ற நிகழ்வு மூலம் யாழ்ப்பாணச் சமுகம் தனது அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தி தமிழரின் விடுதலைப் போராட்ட அரசியலுக்கு வலுச்சேர்த்தது.


<b>எம். ஜி. ராமச்சந்திரன் பிறந்தநாள்
17.01.1917 - 24.12.1987</b>

கோடிக்கணக்கான மக்கள் இறந்து அழிந்துகொண்டே இருப்பர்
ஆனால் சா முலம் பயன்மிகு பெரு வாழ்வைப் ப்ர்றும் தீரர் ஒரு சிலரே.................


- Luckyluke - 01-17-2006

செய்திகளுக்கு நன்றி வினித்.....

எம்ஜியார் கண்டியில் தான் இதே நாளில் 1917ஆம் ஆண்டு பிறந்தார்..... (அவர் 1907ல் பிறந்தவர் என்று கூறுவோரும் உண்டு)


- வினித் - 01-17-2006

இருக்கலாம் தமிழ்த்தாய் நாட்காட்டியில் இருந்ததைதான்
நான் பதிவு செய்து உள்ளேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Luckyluke - 01-17-2006

ஆமாம்.... அவர் சினிமா கதா நாயகன் என்பதால் அவர் 10 வயதை குறைத்து விட்டார் என்பார்கள்....

எனக்கு தெரிந்து அவர் மரணமடையும் வரை வாலிபர் தான்.....


- வினித் - 01-18-2006

<b>18 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் </b>

லெப்.கேணல் எரிமலை
<b>(தங்கராசா கிருபாகரன்)
யாழ். மாவட்டம்
12.01.1999</b>


லெப்.கேணல்ஒஸ்கார்/ஆதிமான
<b>(இமானுவேல் இமாறல்)
மன்னார் மாவட்டம்
12.01.19999 </b>


12.01.1999 அன்று குச்சவெளிக் கடற்பரப்பில் சிறிலங்காக்
கடற்படையினருடனான மோதலில் லெப். கேணல் எரிமலை லெப்.கேணல் ஒஸ்கார் ஆகியோரோடு 12 கடற்புலிகளும் வீர்ச்சாவடைந்துள்ளனர்..............



<b>தகவற் துளி</b>

முதன்முதல் அணுகுண்டுப் பரிசோதனை 1945ஆம் ஆண்டு நியூ மெக்சிக்கோவிலுள்ள அலமோகோர்டோவுக்குப் வடமேற்கில் உள்ள வைற் சாýட்சிø §Áü¦¸¡ûÇôÀð¼Ð.



<b>Á¡Å£Ã÷¸ÇÐ «üÒ¾Á¡É þÄðº¢Â Å¡ú쨸 - «Å÷¸ÇÐ
¾¢Â¡¸í¸û, «Å÷¸û «ÛÀÅ¢ò¾ ÐýÀ ÐÂÃí¸û,
²ì¸í¸û, «Å÷¸û ¸ñ¼ ¸É׸û - þ¨Å ±øÄ¡ÅüÈ¢ÉÐõ ´ðÎ ¦Á¡ò¾ ¦ÅÇ¢ôÀ¡¼¡¸§Å ±ÁÐ §À¡Ã¡ð¼ ÅÃÄ¡Ú Óý§ÉÈ¢î ¦ºø¸¢ýÈÐ................

[b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b>
[b]மேதகு வே.பிரபாகரன்


- வினித் - 01-19-2006

[b]19 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்


பிரசித்தி பெற்ற வானியல் விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி

76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால்நட்சத்திரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இறுதியாக இந்த ஹாலி வால்நட்சத்திரம் 1986-இல் தோன்றியது....................


பதிவுகள்


சிறீலங்கா அரசின் வாகனங்களில் சிங்கள சிறி பொறிக்கப்பட்டதற்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டம். (1957)



தகவற் துளி


வீடுகள் கட்டுவதற்காக அமேசன் காடுகளை அழிப்பதில் முன்னணியில் உள்ள நாடு பிரேசில்.
இங்கு ஒவ்வொரு வருடமும் 36,500 சதுரக் கிலோமீற்றர் காடுகள் அழிக்கப்படுகின்றன.



புதிய கருத்து ஒவ்வொன்றும், அதன் தொடக்க நிலையில் ஒருவரே ஆதரிக்கும் சிறுபான்மையாகத்தான் இருக்கும்.

-தாமஸ் கார்லைஸ்-


- Luckyluke - 01-19-2006

ஹாலி வால்நட்சத்திரம் இறுதியாக 1985ல் தோன்றியது என்பதாக திருத்தி வாசிக்கவும்..... இது பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு.....

பிரபல அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் 1835ல் பிறந்த அன்று வானில் இந்த வால் நட்சத்திரம் தோன்றியது.....

1910ல் சரியாக 75 ஆண்டுகள் கழித்து அவர் மரணமடைந்த அன்று இரவும் இதே நட்சத்திரம் வானில் தோன்றியது.....

மார்க் ட்வைன் தான் "அட்வென்சர்ஸ் ஆப் டாம் சாயர்" எனும் அழியா குழந்தை இலக்கியத்தை படைத்தவர்......


- மேகநாதன் - 01-19-2006

வினித் ,

நல்ல முயற்சி...தொடரட்டும் உங்கள் பணி....
தமிழ்தாய் நாட்காட்டி இல்லாத எம் போன்றவர்களுக்கு உங்கள் உதவி பெறுமதியானது...