![]() |
|
102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு (/showthread.php?tid=1672) |
- vasisutha - 01-02-2006 Vaanampaadi Wrote:vasisutha Wrote:[quote=Vaanampaadi]சென்றடைந்து என்ன சாதிக்கபோகிறார்கள்..... யோவ் வசிசுதா உமக்குமா விளங்கவில்லை?. இப்படி போய் என்னய்யா சாதிக்கபோகிறார்கள்? அதாவது அதனால் தமிழருக்கு என்ன நன்மை உண்டு? வானம்ஸ்... மக்கள் இடம் பெயர்ந்து செல்வது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு... - iruvizhi - 01-02-2006 Vaanampaadi Wrote:அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா? அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா??/ :roll: :? :twisted: 70 களில் என்னையா நடந்தது? கொஞ்சம் தெளிவாக கூறலாமே..... - Vaanampaadi - 01-02-2006 vasisutha Wrote:Vaanampaadi Wrote:vasisutha Wrote:[quote=Vaanampaadi]சென்றடைந்து என்ன சாதிக்கபோகிறார்கள்..... சரியப்பா நான் வேணாங்கல... இதனால் என்ன முடிவு கிடைக்கும் என்றே கேட்கின்றேன்..../. - Vaanampaadi - 01-02-2006 iruvizhi Wrote:Vaanampaadi Wrote:அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா? அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா??/ :roll: :? :twisted: இலங்கை முழுவதும் மிக அமைதியான வாழ்க்கை - நர்மதா - 01-02-2006 அப்பாவி மக்கள் இழப்புக்கள் இன்றி தமிழிழம் மலரும் - vasisutha - 01-02-2006 Quote:யோவ் வசிசுதா <i>கடந்த 28.12.2005 அன்று கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை வெளியே இழுத்துவந்து பெற்றோர் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்றுவிட்டனர்.</i> இப்படி எல்லோரையும் சாகச் சொல்றீங்களா? உங்கள் உயிர்தான் உங்களுக்கு வெல்லக்கட்டியா? மற்றவர்களுக்கு தங்கள் உயிரின் மீது ஆசையிருக்காதா? ஓடாமல் அங்கேயே இருந்து அடிபட்டு சாகச்சொல்கிறீங்களா? - Vaanampaadi - 01-02-2006 நர்மதா Wrote:அப்பாவி மக்கள் இழப்புக்கள் இன்றி தமிழிழம் மலரும் முடியாது ..... முடியவேமுடியாது இதுவரை எத்தனை ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து விட்டீர்கள்..... உங்களைப்பொறுத்தவரையில் அவர்கள் போராளிகளாக இருக்கலாம்.... ஆனால் என்னை பொறுத்தவரையில் அவர்களும் அப்பாவி பொதுமக்களே.... பாவம்...பாவம்... எனிமேலும் இப்படியான உயிர்பலி வேண்டவே வேண்டாம்..... தயவுசெய்து மாற்று வழி பாருங்கள்..... - vasisutha - 01-02-2006 Vaanampaadi Wrote:நர்மதா Wrote:அப்பாவி மக்கள் இழப்புக்கள் இன்றி தமிழிழம் மலரும் :roll: :roll: :roll: - iruvizhi - 01-02-2006 அது எவ்வாறு சாத்தியம்??? ஈழத்தில் இராணுவம் இருக்கும் வரை. ஈழத்தைவிட்டு இராணுவம் வெளியேறினாலே தமிழருக்கு நின்மதியான வாழ்வு பிறக்கும். தமிழீழத்தில் தமிழர்கள் தம்மைதாமே ஆழும் நிலைதான் வெகுவிரைவில் வரும். - vasisutha - 01-02-2006 <b>இளைஞர்களே!பாதுகாப்பான பகுதிக்கு நகருங்கள் - <i>பொங்கியெழும் மக்கள் படை அறிவிப்பு </i></b> தமிழ் இளைஞர்கள் தமக்குப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அதாவது விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சுூழல் எழுந்துள்ளது. சிங்களப் படைகளால் கேவலமாக குதறப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து தப்பிக்க பாதுகாப்பை நோக்கிச் செல்வது என்பது இயல்பான, சரியான செயற்பாடாகும். இவ்வாறு யாழ்ப்பாண பொங்கியெழும் மக்கள் படை தெரிவித்துள்ளது. <b>யாழ். பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை:</b> கடந்த பல நாட்களாக சிறிலங்கா இனவெறிப் படைகள் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது படுகொலைகளையும், காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்களையும் மேற்கொண்டுவருகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் படை உயர்பீடத்தின் வழிகாட்டுதலுக்கமைவாக இத்தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அதாவது எம்மை அச்சுறுத்திப் பணிய வைத்துவிடலாம் என்ற உத்தியுடன் செயற்படுகிறார்கள். அத்துடன் சந்திக்குச் சந்தி வீதி ஓரங்களில் குவிக்கப்பட்டுள்ள படைகள் தெருவில் செல்கின்றன இளைஞர்களை குறிவைத்தே தமது தாக்குதல்களை நடத்துகின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் மறித்து இளைஞர்களைக் கொல்வதும், அவர்களைக் கைது செய்து இழுத்துப் போவதுவும், அடித்து நொறுக்கி குருதி வழிந்தோட அவர்களைத் தெருவோரங்களில் காட்சிக்காகக் குந்த வைப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. கடந்த 28.12.2005 அன்று கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை வெளியே இழுத்துவந்து பெற்றோர் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்றுவிட்டனர். சிங்கள இனவெறி ஓநாய்கள் வெறிகொண்டு அலையத் தொடங்கிவிட்டன. இவை தொடரவே போகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நிலைமையைத் தணிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்தோம். ஆனால் சிங்களப்படைகளோ அப்பாவிகள் மீதான தாக்குதல்களை, படுகொலைகளை, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை நிறுத்துவதாக இல்லை. இன அழிப்புப் போரொன்றினை தமிழர்கள் மீது திணிப்பதற்கு சிங்கள அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கிறது. சமாதானம் என்ற கோசம் சிங்கள அரசாங்கத்திக்ற்கு யுத்தத்திற்கான ஒரு வழிமுறையேதான். எனவேதான் தமிழ் இளைஞர்கள் தமக்குப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அதாவது விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சுூழல் எழுந்துள்ளது. சிங்களப் படைகளால் கேவலமாக குதறப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து தப்பிக்க பாதுகாப்பை நோக்கிச் செல்வது என்பது இயல்பான, சரியான செயற்பாடாகும். பொங்கியெழும் மக்கள் படையினராகிய நாம் சிங்களப் படைவெறியர்களது தமிழின அழிப்புகளை தடுத்தேயாகவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் செயற்பட்டு வருகிறோம். நாம் ஓயப்போவதும் இல்லை, தளரப்போவதும் இல்லை. தமிழினத்தினது சுதந்திரத்தையும், கௌரவத்தையும், பாதுகாப்பினையும் உறுதிசெய்வதற்காக நாம் அனைவருமே ஒன்றிணைந்து போராடுவோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. http://www.eelatamil.net/sankathi/index.ph...=1073&Itemid=26 - நர்மதா - 01-02-2006 இது எங்கள் தனியரசு (தமிழிழ) பிரச்சனை ஒடுக்கப்படுகின்ற மக்கள் அதற்கு எதிராக பேராடுகின்றனர் அது மக்கள் பிரச்சனை அதை விடுங்கள் முதலில் உங்கள் நாட்டில் சாதிச்சண்டையால் எத்தனை ஆயிரம் மக்கள் பலியாகின்றனர் அதை நிறுத்த வழியை பாருங்கள் பின்பு மற்றையவை பற்றி அலசலாம் " இது புலம் பெயர்ந்தவர்கள் காணுகின்ற களமாகும். இது பலத்தின் களம். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத் தேவையில்லை!. நாம் நியாயத்தின் பால்இ நீதியின் பால் நிற்பவர்கள். எம்முடைய ஒற்றுமையையும்இ மனவலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் முயன்றாலும் நாம் அவற்றை எதிர்கொள்வோம!' . வெற்றியும் காணுவோம்." - kurukaalapoovan - 01-02-2006 உந்த உயிர்பலி வேண்டாம் மாற்று வழிபற்றிய பெருந்தன்மையான அறிவுரை சுனாமி மீளகட்டமைப்புக்கு உருவாக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பை அரசாங்கம் நீதிமன்றத்தின் பெயரால் செயலிழக்கச் செய்தபோது அரசாங்கத்துக்கு குடுத்திருக்காலாமே? சுனாமியில் அனர்த்தத்தில் அவதிப்படும் மட்டக்களப்பு மக்களின் நிவாரப்பணிகளை முன்னின்று நடத்திய கொளசல்யன் அண்ணாவை கொலை செய்த போது குறைந்தபட்சம் ஒரு கண்டன அறிக்கையாக ஆவது விட்டிருக்கலாமே? இப்ப நடக்கிற கொலைகள்தான் உயிர்பலியாக தெரியுதா? நாட்டுப்பற்றாளர் நடேசன், மாமனிதர் சந்திரநேரு, சிவராம் எல்லாம் உயிர்கள் இல்லையா? ஆடு நனையுது என்று ஓநாய் அழுததாம் - Thala - 01-02-2006 Vaanampaadi Wrote:உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான் அப்ப வானம்பாடி உண்மையான இந்தியன் இல்லையா...??? இந்தியாவை விட்டு ஜேர்மனியில் வசிக்கிறீர்... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vaanampaadi - 01-02-2006 vasisutha Wrote:Quote:யோவ் வசிசுதா யோவ் வசிசுதா உங்களின் ஆதங்கம் எனக்கு வடிவாக தெளிவாக விளங்குகின்றது..... கோபமடையாதீர்கள்..... எங்களின் உயிர்தான் எங்களுக்கு வெல்ல்க்கட்டியென்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது... அப்படி சொல்லவும்மாட்டேன்.............. உங்கள் எல்லோரையும் சாகும்படி எப்பவும்,எந்த இடத்திலும் சொல்லவில்லை.......... நீங்கள் என்னை சிக்கலில் மாட்டிவிட்டுவீர்கள் போல் உள்ளது...... சரி பறவாYஇல்லை...... நான் சொன்னேன் இந்த சிறிய நாட்டிற்குள் எப்படி எவ்வளவு மைல் வேகத்தில் சுற்றிசுற்றி ஓடப்போகிறீர்கள்.. ஒருசிலர் பாதுகாப்பு தேடி புலிகளின் பகுதிக்கு சென்றால் மற்றவர்களின் நிலமை என்னவாகும்......அதனை யோசித்தீர்களா......நீங்கள் எல்லோரும் ஒரேஇடத்தில் ஒற்றுமையாக இருக்கும் போது உங்களை எவனும் எளிதில் நெருங்கமுடியாது..... - Danklas - 01-02-2006 மச்சி வானம்பாடி நான் எந்த நாட்டிலும் தற்பொழுது சுகமாக வாழ்கிறேன் என்றது உண்மைதான்,, ஆனால் யாழ்குடா நாடு இடப்பெயர்வில அவதிப்பட்ட 5 லட்சம் மக்களில நானும் ஒருத்தன்,, அதன் அனுபவம் உம்மைவிட எனக்கு நல்லா தெரியும்,, ஏன் ஓடினம் எண்டு தெரியுமா? செல் அருகில் விழ விழ ஓடினம்,,, யாழ்ப்பாணத்தை சிங்களவன் பிடிக்கும்பொழுது நீ யாழ்ப்பாணத்தில நிண்டு இருந்தால் புரிஞ்சு இருக்கும் ஏன் வன்னிக்கு எல்லோரும் ஒடுறாங்க எண்டு,, 5 லட்சம் சனமும் அன்று வன்னிபோனதாலதான் உயிர் காப்பாற்றப்பட்டது,, எத்தனை கரும்புலி கடற்புலிகள் மக்களை காப்பாதற்காக கிளாலி கடல்ல வெடிச்சு இருக்கிறாங்க என்றது உனக்கு தெரியுமா? அன்று பெரிய பலத்துடன் புலிகள் இல்லாத பொழுது, பல லட்சம் மக்களை காப்பாற்றிய பெருமை அந்த இயக்கத்தைத்தான் சாரும்,, இப்பொழுது எவனாவது வன்னிக்குள் வாலை ஆட்டுவான் எண்டு எதிர்ப்பார்க்கிறீரா??? இவ்வளவு மக்களையும் போராளிகளை இழந்து விடுதலையின் வாசலில் வந்து நிற்கும் மக்களைப்பார்த்து எனி மாற்று வழியைப்பாருங்கள் எண்டு சிம்பிளா சொல்லுறியே உன்னையெல்லாம்,,,,,,, இதுதானய்யா உங்களைப்போல உள்ள ஆக்களில உள்ள மைன்ஸ் பொயின்ற்,,, உங்களால அப்ப மோதமுடியாது எண்டுதானே விளகி போனியள்? இப்ப எங்கிருந்து வந்தது உந்த வாய்வீராப்பு?? அதைவிடுங்க,,1970 ஆண்டு அமைதி நிலையா? அமா அமா அது உண்மைதான்,, ஆனால் அன்றே சிங்களவன் தமிழரை உள்ளால சுறண்ட வெளிக்கிட்டான் தெரியுமா? உண்ட வீட்டுக்க ஒருத்தன் அத்து மீறி புகுந்து தண்ட ஆட்களை இருத்திப்போட்டு, உண்ட சொந்த வீட்டுக்கு தண்ட முகவரியை போட்டு, உண்ட பிள்ளைகள் இதுதான் படிக்கனும் இதைத்தான் வணங்கனும் எண்டு சொல்லிகொண்டு இருக்க இருக்க,, கேனையன் மாதிரி அமைதியா கேட்டுக்கொண்டு அமைதியா வாழச்சொல்லுறியே நியேல்லாம் தன்மானம் உள்ள மானம் ரோசம் சூடு சுறனை உள்ள மனிதனா?? :evil: :evil: - Thala - 01-02-2006 iruvizhi Wrote:Vaanampaadi Wrote:அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா? அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா??/ :roll: :? :twisted: பாக்கிஸ்தானோட சண்டைபோட்டு ஒரு எதிரியை விலை கொடுத்து வாங்கினவை.... அதாவது வேலில போன ஓணானை வேட்டிக்கை எடுத்து விட்டவை - kurukaalapoovan - 01-02-2006 Thala Wrote:Vaanampaadi Wrote:உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான் இப்ப வானம்பாடி சொல்லுவார் இந்தியாவிலை யுத்தம் நடந்து தான் உயிருக்கு பயந்து ஓடிவரவில்லை. தாய் நாடு என்று உரிமை கோரிறனீங்கள் அங்கை நிண்டு பிரச்சனை எண்டு வரும் போது சண்டை பிடிக்காமல் ஒடிவரக் கூடது என்று. இது உமக்கு தேவையோ? :oops: - Thala - 01-02-2006 Vaanampaadi Wrote:சரியப்பா நான் வேணாங்கல... இதனால் என்ன முடிவு கிடைக்கும் என்றே கேட்கின்றேன்..../. இராணுவத்தின் அடாவடியால் ஆத்திரப்பட்டு புலிகளில் இணையும் இளைஞர் தொகையைக் குறைக்கலாம்... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> யார்ரா இவன் ஒருத்தன் சும்மா நொட்டு நொசுக்கு எண்டு கொண்டு... :x :x - Thala - 01-02-2006 [quote=Vaanampaadi] இலங்கை முழுவதும் மிக அமைதியான வாழ்க்கை அப்ப 1957 இனக்கலவரம் 1977 ல கலவரம்.. எல்லாம் அமைதியாத்தான் நடந்ததா..???? ஒய் சரியா தெரிஞ்சு கதையுமோய்... :evil: :evil: :evil: - Danklas - 01-02-2006 தல,, வானம்பாடி கேக்கிறதால பல நன்மைகள் எங்களுக்கும் இருக்கு.. எத்தனை உண்மைகள் வெளிவரும் பாருங்க,, அதேவேளை வானம்பாடியின் மாற்றுக்கருத்தாளன் எண்ட இரட்டை முகமூடி மீண்டும் மீண்டும் கிழிபட்டுக்கொண்டு இருக்கு,, பாவம் அவரால் பல உண்மைகளை யாழ்கள உறுப்பினர்கள் அறிந்து கொண்டு இருக்கிறார்கள்,,
|