![]() |
|
கொதிக்கிறது திருமலை... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கொதிக்கிறது திருமலை... (/showthread.php?tid=1634) |
- MUGATHTHAR - 01-04-2006 அதிலையும் பாருங்கோ செல்வன் இறந்தவர்களை புலிகள் என பெற்றோர் ஏற்றுக் கொண்டு கையொப்பம் இட்டத்தான் தரமுடியும் எண்டு சொல்லியிருக்கிறாங்கள் பொலிஸ்காரங்கள் அப்ப எப்பிடியான மனநிலையில் சிங்கள தேசம் தமிழரை நடத்துகிறது. . இது இலங்கை அரசுக்கு ஆக்கத்துக்குரிய நடவடிக்கையாக தெரியவில்லை அழிவின் தொடக்கம் எண்டுதான் எண்ணத் தோன்றுகிறது............... - iruvizhi - 01-04-2006 <b>ஐந்து மாணவர்களின் கொடூரக் கொலையால் திருமலை ஸ்தம்பிதம் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பீதி</b> திருகோணமலையில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டும், இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் தமிழர் தாயகத்தின் தலைநகரில் பெரும் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் திருகோணமலை முற்றாக ஸ்தம்பித்துள்ளது. அங்கு காலவரையறையற்ற ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பீதி அங்கு நிலவுகின்றது. நேற்றுமுன்தினம் இரவு 7.20 மணியள வில் திருகோணமலை பெரிய கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் உள்ள நீண்ட கட்டில் இளைஞர் குழுவொன்று வழமைபோல அமர்ந் திருந்து உரையாடிக் கொண்டிருந்தது. அப் போது ஓட்டோ ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டு கோட்டை வீதிப்பக்கமா கைக்குண்டு வெடித்ததில் திருமலை புனித ஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவரின் காலில் காயம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல சக மாணவர்கள் முயன்றபோது அச்சமயம் அப் பகுதியில் நின்ற கடற்படையினர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் கடற்கரையில் ஓய்வுக்காக வந்து அமர்ந்திருந்தோர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதற்கிடையில் காயமடைந்த மாணவர்க ளுக்கு அருகில் விரைந்த கடற்படையினர் அவர்களைத் தாக்கி நிலத்தில் வீழ்த்தி, குண்டு வீசியவர் யாரென்று விசாரித்துள்ளனர். இதுபற்றி எதுவும் தெரியாதென மாணவர்கள் கூறியபோது அதனை ஏற்காத கடற்படையி னர் கீழே விழுந்து கிடந்த மாணவர்களின் நெஞ்சை தமது சப்பாத்துக்கால்களினால் மிதித்தவாறு மாணவர்களின் காதுக்கருகில் துப்பாக்கி முனையை வைத்து சுடத் தொடங் கினர் என்று கூறப்படுகின்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சண்முகராஜா கஜேந்திரன் (மருத்துவ பீடத்திற்கு தெரி வானவர்), தங்கத்துரை சர்வானந்தா(மொரட் டுவைப் பல்கலைக்கழக மாணவன்), யோகராஜா ஹேமச்சந்திர, மனோகரன் ரஜீகரன், லோகிதராஜா ரொஹான் ஆகிய ஐவருமே கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களான பரராஜசிங்கம் கோகுலராஜ், யோகராஜா பூங்குழலோன் ஆகி யோர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். பூங்குழலோன் நேற்று மாலையளவில் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். அதேவேளை, கோகுல் ராஜ் அவசர விபத்துப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். கொல்லப்பட்ட மாணவர்கள் அனைவரின தும் தலையில் சூட்டுக்காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப் புக்குழுவின் திருமலைக் கிளையின் அதிகாரி கள் மாணவர்களின் சடலங்களைப் பார்வையிட்டு இதனை உறுதி செய்திருக்கின்றனர். பதற்றநிலை தமிழர் தாயகத்தின் தலைநகரில் இடம் பெற்ற இந்தச் சம்பவம் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி யிருக்கிறது. இந்தச் செய்தி நேற்றுக்காலை ஊடகங்கள் ஊடாக வெளிவந்ததையடுத்து திருமலை நகரமே ஸ்தம்பிதமடைந்தது. மக் களின் இயல்பு வாழ்வு முற்றுமுழுதாக முடங் கியது. அரச அலுவலகங்கள், வங்கிகள், நீதி மன்றங்கள் போன்றனவும் இயங்கவில்லை. இதற்கிடையில் கொல்லப்பட்ட மாணவர் களின் சடலங்களை பொறுப்பேற்பதாயின் அவர் கள் "பயங்கரவாதிகள்' என்று கையொப்ப மிட்டு ஏற்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோரை வலியுறுத்தினர் எனவும் ஒரு செய்தி தெரிவித் தது. ஐந்து மாணவர்களின் சடலங்களும் நேற் றுப் பிரேத பரிசோதனையின் பின் பெற்றோரி டம் ஒப்படைக்கப்பட்டன. துப்பாக்கி மற்றும் குண்டுவெடிப்புகளினால் ஏற்பட்ட மரணங் களை பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டதாகத் தெரிகிறது. மாணவர்களின் இறுதிக்கிரியைகள் பெரும்பாலும் நாளை வியாழக்கிழமை திரு மலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது. அதற்கு முன்னதாக அச்சடலங்கள் திருகோணமலையிலுள்ள பிலபலமான கல் லூரிகளுக்கு அஞ்சலி நிகழ்வுகளுக்காக எடுத் துச் செல்லப்படுமென எதிர்பார்க்கப்படு கிறது. (க3) <b>தகவல்: உதயன் நாளிதள்</b> - Birundan - 01-04-2006 <b>திருகோணமலையில் சுடப்பட்டவரில் ஒருவர்.</b> <img src='http://img318.imageshack.us/img318/355/fr4us.jpg' border='0' alt='user posted image'> நன்றி>எண்ணத் தெளிவு - Eelathirumagan - 01-04-2006 படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களே... உங்களுக்கு கண்ணீரஞ்சலிகள்.... - வர்ணன் - 01-05-2006 சிறீலங்கா இராணுவம் இப்பிடி செய்துபோட்டுதே எண்டு எனக்கு ஒரு கவலையும் இல்லை. அவர்கள் யார் ? நாங்கள் யார்? நாம் நம்பின யாரும் தப்பு செய்தால்தானே.. கோவமும் கவலையும் வரும்! எங்களை பொறுத்தவரையில் அந்நிய நாட்டு ராணுவம் செய்த ஒரு அநியாயம். வீட்டுக்குள் புகுந்த பாம்பை அடிச்சு கொன்று நெருப்பில போட்டு எரிக்க ஏதும் வழி இருக்கா எண்டு இனி பாப்பம். அந்நியபடையின் கொலைவெறியில் பலியாகிபோன மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- மேகநாதன் - 01-05-2006 திருமலையில் மாணவர்கள் படுகொலை சம்பவ துயரத்தில் கவலைமிகுந்து நண்பி ஒருவர் எழுதி மின்னஞ்சல் ஊடாக அனுப்பிய கவிதையைக் கள உறவுகளோடு பகிர்கிறேன் <i><b>உங்கள் குருதியில் திலகமிட்டு......</b></i> <i>இடியென வந்தது உங்கள் உயிர் உறைந்த செய்தி.... மங்கிய ஒரு மாலையில் நீவிர் மறைந்தே போனீர்களா?.... நிச்சயமாக இல்லை நீங்கள் மறைக்கப்பட்டுப் போனீர்கள்.... வேர் விடும் முன்னே விதைகளை கிள்ளி இனமதை சுத்திகரிக்க யார் இட்டார் கட்டளை?... மனிதத்தை கொன்ற கொடூர தேசத்திற்கு இனி என்ன மன்னிப்பு?.... உயிர் பெறுமதி அறியா கோழை இனவெறியர்களே… பலமிருந்நால் வேங்கைகளுடன் மோதுங்கள்..... பாவப்பட்ட அப்பாவிகளுக்கா உங்கள் தோட்டா?.... வாழும் உரிமை கூட யாப்பில் இல்லா அரச பயங்கரவாதமே.... தழிழ் தாய் சாட்சியாக உனக்கடிக்கின்றோம் சாவு மணி... அடுத்த துளி தழிழ் இரத்தம் சிந்தப்பட முன்பு.... ஜனநாயக போர்வைக்குள் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட முன்பு...... மாணவர்களே.... எழுவோம் நாம் நிஜமான வேங்கைகளாய்.... உங்கள் குருதியில் திலகமிட்டு சொல்கின்றோம்... “எம்மால் நாளை பிறக்கும் நம் தேசம்”</i> <i><b>கவியாக்கம்- மாது</b></i> - அருவி - 01-05-2006 கயவர்களின் கருவிக்குத் தம்முயிர்களை இழந்திட்ட மாணவர்கள் ஐவருக்கும் கண்ணீர் வணக்கங்கள்.
- iruvizhi - 01-05-2006 திருமலையில் பூரண கதவடைப்பு நிர்வாகம் முழுமையாக முடக்கம் படுகொலையுண்ட மாணவர்களுக்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று புதன்கிழமையும் திருகோணமலை நகரில் பூரண கதவடைப்பு இடம்பெற்றது. பாடசாலைகள் இயங்கவில்லை. அரச, மாகாண சபை ஆகியவற்றின் திணைக்களங்கள் செயற்படவில்லை. திருமலை நகரசபை இயங்கவில்லை. வங்கிகள் செயற்படவில்லை. கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் தொடர்ந்தும் ஸ்தம்பித நிலையில் காணப்பட்டன. செல்வநாயகபுரம் பகுதியில் பறக்கவிடப்பட்ட கறுப்புக் கொடிகளை படையினர் சிலர் பலாத்காரமாக அகற்றியதாகக் கூறப்பட்டது. திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் உடனடியாக திருகோணமலை மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயவர்தனவுடன் தொடர்புகொண்டு, இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதேவேளை, திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களான எஸ். சஜேந்திரன், யோ.ஹேமச்சந்திரன், ம.ரஜீகர், த.சிவானந்தா, லோ.றொகாந்த் ஆகியோரின் பூதவுடல்கள் அவரவர் வாசஸ்தலங்களில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. மக்கள் பெரும் எண்ணிக்கையில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொது அமைப்புகள், பாடசாலைகள் சார்பில் மலர் வளையங்கள் சாத்தப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை பகல் திருகோணமலை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளன. அதற்கு முன்பாக பூதவுடல்கள் அவரவர் வீடுகளிலிருந்து திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளன. அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர் ஐந்து பூதவுடல்களும் ஊர்வலமாக இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். <b>தகவல்: தினக்குரல்</b> - iruvizhi - 01-05-2006 <img src='http://img218.imageshack.us/img218/884/200601050010jo.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img218.imageshack.us/img218/7281/200601050023ze.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img218.imageshack.us/img218/858/200601050039sy.jpg' border='0' alt='user posted image'> திருகோணமலையில் சிங்கள இராணுவத்தால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் இறுதி ஊர்வலம் இன்று வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் பங்கேற்று அரச பயங்கரவாதத்துக்குப் பலியான தங்களது மாணவச் செல்வங்களுக்கு இறுதி வணக்கத்தை கண்ணீருடன் செலுத்தினர். மாணவர்களின் உடல்கள் இன்று காலை அவர்களது வீடுகளிலிருந்து மதச் சடங்குகள் முடிவடைந்த பின்னர் சிறீ கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்துக்குக் கொண்டுவரப்பட்டன. கல்லூரி மைதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மேடையில் மாணவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி அதிபர் எம்.இராஜரட்ணம் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மும்மதப் பிரதிநிதிகள் மாணவர்களின் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்தனை நடத்தினர். அதன் பின்னர் கறுப்புக் கொடிகள், கண்டன பதாகைகள் கட்டப்பட்ட திறந்த லொறியில் மாணவர்கள் உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. மடத்தடி சந்தியிலிருந்து திருகோணமலை இந்து சுடுகாட்டு மைதானம் வரை முக்கிய வீதிகளுடாக இந்த ஊர்வலம் சென்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் பங்கேற்று கண்ணீர் வணக்கம் செலுத்தினர். கல்லூரி மைதானத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது 1 கிலோ மீற்றர் நீளத்துக்கு மக்கள் அணிவகுத்து நின்றிருந்தனர். மயான மையத்துக்கு ஊர்வலம் வந்தடையை ஒரு மணிநேரத்துக்கும் மேலானது. ஊர்வலப் பாதையில் குவிக்கப்பட்டிருந்த அனைத்து சிறிலங்கா படையினரும் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தனர். தகவல்: புதினம் - iruvizhi - 01-05-2006 <b>சோகமயமாக திருகோணமலை காட்சி மாணவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று படுகொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரு குழுக்கள் நியமனம் (நமது திருகோணமலை, ஈச்சிலம்பற்று நிருபர்கள்) </b> திருகோணமலை பெரிய கடை கடற் கரைப் பகுதியில் கடந்த திங்களன்று இரவு ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும், நேற்று திருகோணமலை நகரில் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மக்கள் அனைவரும் சோகமே உருவாகக் காணப்படுகின்றனர். மாணவர்கள் எவரும் பாடசாலைக்குச் செல்லவில்லை. அரச அலுவலகங்களும் செயலிழந்து காணப்பட்டன. அதேவேளை, வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுக் கிடந்ததுடன் வாகனப் போக்குவரத்தும் ஸ்தம்பித்திருந்தது. இந்தப் படுகொலைகளை கண்டித்து திருகோணமலையின் புற நகர்ப் பகுதிகளான தம்பலகாமம், மூதூர் கிழக்கு, மூதூர் தெற்கு ஆகிய இடங்களிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களான லோகிதாசன் றொஹான், சண்முகராஜா கஜேந்திரன், தங்கத்துரை சிவானந்தா, யோகராஜா ஹேமச்சந்திரன், மனோகரன் ரஜீஹர், ஆகியோரின் பூதவுடல்கள் நேற்று அவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தபோது பெருந்தொகையான மக்கள் அங்கு சென்று தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினார்கள். இந்தப் பூதவுடல்களை இன்று காலை இவர்கள் கல்வி பயின்ற திருகோணமலை இந்துக் கல்லூரியில் பொது மக்களின் அஞ்சலிக்கென வைப்பதற்கான ஏற்பாடுகள் அமைப்புக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவத்தில் காயங்களுக்கு இலக்கான இரு மாணவர்களும் தொடர்ந்தும் திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான மாணவர்களின் பூதவுடல்கள் இன்று தகனம் செய்ய இருப்பதனால் இன்றைய தினம் கடை அடைப்பு போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு இயல்பு நிலையினை உருவாக்கி கறுப்புக் கொடிகளை பறக்க விட்டு மாணவர்கள், பொது மக்கள், மற்றும் அனைவரும் இவர்களுக்கான அஞ்சலியினை செலுத்துமாறு இறுதி அஞ்சலிக்கான அமைப்புக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் கடமைக்கு சென்ற பின்னர் இறுதிக் கிரியை நடைபெறும் இடத்திற்கு வருமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். <b> தகவல்: வீரகேசரி</b> - iruvizhi - 01-05-2006 திருமலையில் திங்கள் இரவு சிறிலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் புகழுடலுக்கு நேற்று ஆயிரக் கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று திருமலை கோணேஸ்வர இந்துக்கல்லு}ரி விளையாட்டு மைதானத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அஞ்சலிக் கூட்டமும் இரங்கலுரைகளையும் தொடர்ந்து கடற்படை தளவீதி, பிரதானவீதி, புகையிரத வீதி போன்றவற்றினுடாக புகழுடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு இன்று பிற்பகல் திருமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதேவேளை இப்படுகொலையைக் கண்டித்து திருமலையில் பல பொது அமைப்புக்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனால் சிறிலங்காப் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதோடு வீதியால் செல்லும் மக்கள் மீது சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டும் வருகின்றனர். <b>தகவல்: ஈழநாதம்</b> - iruvizhi - 01-05-2006 மாணவர்கள் கொலையை அடுத்து திருமலையில் இயல்புநிலை பாதிப்பு! திருகோணமலை கடற்கரை வீதியில் நேற்றுமுன்தின மிரவு 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று திருகோணமலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன், பாடசாலைக ளுக்கு மாணவர்களும், அலுவலகங்களுக்கு ஊழியர்க ளும் செல்லாததால், அவையனைத்தும் இயங்கவில்லை. இந்தப் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து எந்த வொரு அமைப்பும் அழைப்பு விடுக்காதபோதிலும், மக் களால் இந்தக் கதவடைப்பு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து இன்று பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையும், பொங்குதமிழ் சமூகமும் விடுத்துள்ளன. இந்த ஐந்து மாணவர்களது மரணங்களும் - குண்டுவெடிப்பி னாலும், துப்பாக்கிப் பிரயோகத் தினாலுமே இடம்பெற்ற தாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. தம்மைப் பிடித்த கடற்படையினர் தம்மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதிலேயே ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதாக காயமடைந்த மாணவன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது - சம்பவம் இடம்பெற்ற கடற்கரை வீதிக்கு நாம் செல்வது வழக்கமாகும். நேற்று முன்தினமும் அவ்வாறு அங்கு சென்றவேளை அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் எம்மை பிடித்துச் சென்றனர். இவ்வாறு எம்மைப் பிடித்துச் சென்ற கடற்படையினர் எம்மீது 20 நிமிடங்கள் விசாரணை நடத்திய பின்னர் - தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதெனத் தெரிவித்து எம்மீது சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதனால் எனது சகமாணவர்கள் ஐவர் உயிரிழந்ததுடன் நாம் இருவரும் காயமடைந்தோம் எனத் தெரிவித்தார். இதேவேளை, உயிரிழந்த மாணவர்களின் சடலங்களை வைத்திய பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என உறவினர்கள் கையயாப்பமிட்டாலே சடலங்கள் தரப்படுமெனத் தெரிவித்தபொலிஸார் - பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பை அடுத்து சடலங்களை உறவினர்களிடம் கையளித்தனர். இதன்பின்னர் வைத்தியசாலையிலிருந்து ஐந்து மாணவர்களின் சடலங்களும் உறவினர்களால் அவர்களின் இல்லங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இவர்களது சடலங்கள் நாளை வியாழக்கிழமை திருகோணமலை இந்துக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் தியாகிகள் அரங்கில் வைக் கப்பட்டு, இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று இறுதி நிகழ்வுகளுக்காக ஒன்றாக எடுத்துச் செல்லப்படவுள்ளன. மாணவர்களின் இறுதி நிகழ்வுகளின் பின்னர் திருகோணமலையிலிருந்து இராணுவத்தினர் முற்றுமுழுதாக வெளியேறும் வரை தொடர்ச்சியான கதவடைப்புக்கு திருமலை தமிழ் மக்கள் பேரவை, பொங்கியயழும் மக்கள் சமூகம் ஆகியன அழைப்பு விடுத்துள்ளன. இதேவேளை, மாணவர்களின் படுகொலையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மாணவர் சமூகம் உட்பட பல்வேறு அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன. <b>பதிப்புத்திகதி 04 ம் நாள் சனவரி 2006 தகவல்: நமது ஈழநாடு</b> - iruvizhi - 01-05-2006 <b>திருமலையிலும் பொங்கியெழும் மக்கள் படை துண்டுப்பிரசுரம்! இராணுவத்தினர் பெரும் பீதி!! றுசவைவநn டில சுயயஎயயெn வுhரசளனயலஇ 05 துயரெயசல 2006 </b> இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து தமிழ் இளைஞர்களின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்ற இன்றை நாளில் திருமலையிலும் பொங்கியெழும் மக்கள் படையினரின் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் இராணுவத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல பொது மக்களிடமும் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என இராணுவத்தினர் விசாரித்துள்ளனர். இன்று திருகோணமலையில் வெளியடப்பட்டுள்ள பொங்கியெழும் மக்கள் படையினரின் துண்டுப்பிரசுரத்தில், எமது தமிழ் மாணவர்கள் மிகக்கொரூரமான முறையில் சிறீ லங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளனர். இந்த வெறித்தனமான குரோத செயலானது தமிழ் மக்களை பெரும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு ஈடாக பெரும் தொகையான சிங்களக்காடையர்களும், சிறீ லங்கா இராணுவத்தினரதும் உயிர்கள் வெகுவிரைவில் எம்மால் பறிக்கப்படும். எமது தமிழீழ, தமிழ் மக்கள் மாலை நேரங்களில் இனி நடமாடுவதைத்தவிர்க்கவும். அத்தோடு தமிழீழ இளைஞர் யுவதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த எமது மக்கள் படையுடன் இணைந்துகொள்ளுங்கள். என இந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. <b>தகவல்: சங்கதி</b> - iruvizhi - 01-05-2006 <img src='http://img497.imageshack.us/img497/9880/5students1funeral33zt.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img231.imageshack.us/img231/8590/5students1funeral50av.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img497.imageshack.us/img497/3646/5students1funeral99gx.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img497.imageshack.us/img497/9642/5students1funeral106am.jpg' border='0' alt='user posted image'> - Eelathirumagan - 01-05-2006 மனதை உருக்கும் காட்சிகள்... - Danklas - 01-05-2006 மனதை உருக்கும் காட்சிகள்,,,,,,,, திருமலையில் பொங்கி எழும் மக்கள் படை துண்டுபிரசுரத்தை வெளியிட்டுள்ளது, அதில் இந்த அட்டூழியத்தை செய்த படைகள் பழிக்கு பழி வாங்கப்படுவார்கள் அதனால் மக்கள் மாலை வேளைகளில் வீதிகளில் தவிர்க்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்,,,, இந்த அப்பாவி மாணவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்குகாக அந்த கொலையை செய்த சிங்கள காட்டுமிராண்டிகளின் உடல்கள் சிதறி இந்த பெற்றோர்கள் அழுவதைப்போன்று அந்த சிங்கள் நா***ளின் பெற்றோர்கள் கதறி அழவேண்டும்,,,,,,,,, :evil: :evil: :evil: :evil: :evil: - iruvizhi - 01-05-2006 <b>திருமலை மாணவர் படுகொலையை கண்டித்து வவுனியாவில் இன்று ஹர்த்தால்; துக்கதினம் </b> திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வவுனியாவில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் துக்கதின ஏற்பாடுகளுக்கு அனைத்துத்தரப்பினரும் பூரணஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ் இன அழிப்பு சிந்தனையில் வன் போக்கு கொண்ட ஸ்ரீலங்காவின் புதிய இராணுவ உயர் பீடம் பதவி ஏற்ற பின் தமிழீழமெங்கும் இந்தப் படுகொலைகள் கோலோச்சுகின்றன. சமாதானம் பேசவந்த ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியால் கூட இத்தகைய வன் செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் போனமை கண்டு தமிழ் மக்கள் மனவேதனையும் கொதிப்பும் அடைந்துள்ளனர். தமிழ் மாணவர் சமூகம் தம்மையும் தமது மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக மௌனமுறை தழுவிய போராட்டங்களில் இருந்து விடுபட்டு ஆயுத ரீதியான போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியத்தை இச் செயல்கள் வலியுறுத்துகின்றனவா? அண்மையில் தமிழ்ப் பிரதேசம் எங்கும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களையே கடுமையாக விமர்சிக்கும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவும் சர்வதேச சமூகமும் இப் படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகின்றன என்பதை தமிழ் மக்கள் சமூகம் உன்னிப்பாக எதிர்பார்த்தபடியே உள்ளது. ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாத இராணுவமும் அதனோடு சேர்ந்து இயங்கும் பரா இராணுவ குழுக்களும் தொடர்ந்தும் இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தமிழ் மாணவர் சமூகம் வன்மையாக கண்டிக்கின்றது. திருமலை படுகொலையை கண்டித்தும் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் ஆத்ம சாந்திக்காக அஞ்சலி செலுத்தும் பொருட்டு, வவுனியா மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை முழுநாளும் பூரண கதவடைப்பும் ஹர்த்தாலில் ஈடுபட்டும் இல்லங்கள், திணைக்களங்கள், வியாபார நிறுவனங்கள் தோறும் கறுப்புக் கொடிகள் பறக்க விட்டும் துக்கதினம் அனுஷ்டிக்கும் படியும் ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்கள் சார்பாக வவுனியா மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது. <b>தகவல்: தினக்குரல்</b> - Niththila - 01-05-2006 இறந்த மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
- நர்மதா - 01-05-2006 திருமலையில் 5 காவலரண்கள் மாணவர்களால் அடித்துடைத்து எரியூட்டப்பட்டன. திருமலையில் இன்று 5 காவலரண்கள் மாணவர்களால் எரியூட்டப்பட்டன. உட்துறைமுகவீதிஇ உட்கரைவீதிஇ கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவத்தினரது காவலரண்களே மாணவர்களால் எரியூட்டப்பட்டுள்ளன. சிறீலங்கா காவலரண்களுக்குச் சென்ற மாணவர் குழுவினர் காவலரண்களை அடித்துடைத்து பின்னர் தீ மூட்டி எரித்துள்ளனர். காவலரண் ஒன்றுடன் இருந்து அரச மரத்தையும் தறித்துள்ளனர். இதனை அடுத்து படையினர் குவிக்கப்பட்டு புத்தர் சிலைகளுக்கு அருகில் உள்ள அரசமரங்களையும் பாதுகாத்து வருகின்றனர் என திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. பதிவு - sanjee05 - 01-06-2006 இறந்த மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|