![]() |
|
"கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: "கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்..... (/showthread.php?tid=1123) |
- shanmuhi - 02-16-2006 cannon Wrote:இத்தொடர் கண்டிப்பாக கிறிஸ்தவர்களையோ அல்லது கத்தோலிக்கர்களையோ பாதிக்கும் விதத்தில் எழுத முற்படவில்லை. இவ் "ஜெகோவா விற்னெஸ், பென்ரிகோஸ்" போன்றவற்றில் எம்மத்தியில் உள்ளோர் பெரும்பாலும் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்களே!! எனக்குத் தெரிந்த கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட சிவமாம் சோதியின் பெயரைக் கொண்ட ஒரு இளைஞர் ஒருவர் இலண்டனிலேயே மூன்று திருமணம் செய்து எல்லாவற்றையும் பிள்ளை குட்டிகளோடு கைவிட்டவர்!! இன்று இப்பித்தலாடிகளின் பிரபல "பாஸ்ரராம்(Paster)"!!!!! ÁüÈÅ÷ ÁÉõ ÒñÀ¼¡Áø ¸ñ¼Åü¨È §¸ð¼Åü¨È.Óý¨ÅÔí¸û. ŢƢôÒ½÷ ²üÀ¼ ÅÆ¢ÅÌìÌõ. - Selvamuthu - 02-16-2006 வணக்கம் இலண்டனிலே உள்ள அனைத்து இந்து மதத்தினருக்கும் இதுபோன்ற பல அனுபவங்கள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என்றே எண்ணுகிறேன். எமது வீட்டில்கூட பல முறை வந்து வாயில்மணியை அடித்து மேற்கூறியவர்கள்போல் கூறினார்கள். அண்மையில் ஒரு நடுத்தர வயதுடைய ஆணும், ஓர் இளம் பெண்ணும் வந்து மணியை அடித்தார்கள். என்னைக்கண்டதும் யேசுவைப்பற்றி ஆரம்பித்தார்கள். நான் எனக்கு இவைகளில் விருப்பம் இல்லை என்று கூறினேன். அவர்கள் விடுவதாக இல்லை. இறுதியில் போகும்போது இந்தப் புத்தகத்தை வாசித்துப்பாருங்கள் என்று கூறி ஒரு யேசுவின் புத்தகத்தை என் கைகளில் தர முயன்றார்கள். நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அவர்கள் திரும்பித்திரும்பி பார்த்தபடியே சென்றுவிட்டார்கள். கனாடாவில் இருக்கும் எனது ஒன்றுவிட்ட தம்பி சில காலமாக நல்ல வேலையில்லாமல் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு மனைவியும் நன்றாக வந்து அமையவில்லை. பணத்துன்பம், குடும்பச்சிக்கல், பிள்ளைகளின் தொல்லை என்று சங்கடப்பட்டுக்கொண்டிருந்தவர் திடீரென்று மதம்மாறி "பென்றிக்கோஸ்" இல் சேர்ந்துவிட்டார். அவர்கள் முதலில் இவருக்கு அவருடைய கடன்களையெல்லாம் அடைக்க பெரியதொரு தொகையை கடனாக எடுக்க உதவினார்கள். இதனால் அவர் தனது சிறிய கடன்களையெல்லாம் அடைத்துவிட்டார். அவர் தான் இப்போது சந்தோசமாக இருப்பதாக கூறுகிறார். எப்படி என்று கேட்டால், முன்னர் பல கடன்காரர்கள் இருந்தார்கள் ஆனால் அவருக்கு இப்போது ஒரேயொரு கடன்காரர்தான் இருக்கிறார் என்கிறார். ஆனால் திருப்பிக்கட்டுகின்ற தொகையோ முன்னரைவிடக் கூடியது. அவர் தான் இப்போது சந்தோசமாக இருப்பதாகக்கூறினாலும் அவருடைய முகத்தைப்பார்த்தால் அது பொய் என்பது தெரிகிறது. இனத்தவர் எவருடைய விழாக்களுக்கும் செல்வதில்லை. யாருடனும் முன்னர்போல் கலகலப்பாகக் கதைப்பதில்லை. பேயறைந்தவர்போல் முகம் இருக்கிறது. புதிதாக நுழைந்த இடத்தில் இருக்கவும் முடியாமல் அதனைவிட்டு வெளியே வரவும் முடியாமல் தத்தளிப்பதாகவே அவரைப் பார்ப்பவர்களுக்குத் தென்படுகிறார். அப்படித்தான் நாமும் எண்ணுகிறோம். அவரை அவர்கள் அச்சுறுத்தி வைத்திருப்பதாவும் கூறுகின்றார்கள். இதுபோன்ற பலரை நான் இங்கும், வேறு நாடுகளிலும் கண்டிருக்கிறேன். எனது அனுபவத்தையே ஒரு புத்தகமாக எழுதி வெளியிடலாம். விருப்பமில்லாத ஒருவரையும் வலிந்து மதம்மாற வைக்கக்கூடாது. நலிந்திருப்பவர்களை இவர்கள் நாடிச்சென்று, நாவினிக்கப்பேசி, நாசுக்காக மாற்றிவிடுகிறார்கள். இவை நிச்சயம் நிறுத்தப்படவேண்டும். - இவோன் - 02-16-2006 இன்னொரு மதத்தை இழித்து.. அந்த மதம் மீதான நம்பிக்கைகளை பழித்துரைத்து.. தன்னுடைய மதத்தினை பிரச்சாரப் படுத்துவது நல்லதல்ல.. ஆனாலும் ஆரம்ப காலங்களில் பெருந்தொகையானோர் சைவ சமயத்தை விட்டு மதம் மாறியதற்கு சைவத்தின் பேரால் நடந்தேறிய சாதிக் கொடுமைகளும், சமூக மறுப்புக்களும், பலமான காரணிகளாக இருந்தன. சரி.. மதத்திணிப்பின் மூலம் மாறுவது தவிர, ஒருவர் தன் சொந்த விருப்பில் மதம் மாறுவது குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? அது எந்த மதத்திற்காயினும்? குறிப்பாக காதல் விடயங்களில் இருவரும் வேறு மதத்தவராயினும் யாராவது ஒருவர் விரும்பி இன்னொரு மதத்தை தழுவுதல் குறித்து என்ன கருதுகிறீர்கள்..? சைவத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு அல்லது கிறிஸ்தவத்திலிருந்து சைவத்திற்கு - sinnakuddy - 02-16-2006 இந்த வீடு தட்டி மதம் மாற முயற்ச்சி செய்பவர்களை பார்த்தீர்களென்றால் அவர்கள் மரபு வழிவந்த கிறிஸ்த வதமான கத்தோலிக்கமோ புரட்டஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள்.. உந்த மல்ரி நசனல் கொம்பனிகளால் புதிசாக உருவாக்கப்பட்ட ஜெயகோவா,மோமோன்ஸ் என்ற மதபிரிவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.....இவர்களின் உண்மையான நோக்கம் மக்களிடம் யதார்த்தமான இயல்பான சிந்தனை வர விடாமால் குழப்பமானநிலையை வைத்திருக்கோவேணுமென்ற நோக்கமே ஜெர்மனியில் அண்மையில் நடந்த கணவன் மனைவி பிரிவுகள் தற்கொலை கொலை என்பன ஏற்படுவதற்க்கு இவர்களின் பங்கு முக்கிய பங்கு வகித்திருக்கின்றது என்று கேள்வி. - alla_ku_agbar - 02-16-2006 அல்லா கு அக்பர் - Selvamuthu - 02-16-2006 நடந்த ஓர் உண்மையைக் கூறினால் ஏன் அதனை ஏற்றுக்கொள்ள பலர் தயங்குகிறார்கள்? உங்களுக்கு நடந்த இப்படியான சம்பவங்களை இங்கே எழுதுங்கள் என்றால் அவை பல பக்கங்களை நிச்சயம் நிரப்பும். தாங்களாக விரும்பி மதம் மாறுபவர்களை நான் குறிப்பிடவில்லை. தாமாகத் தேடிச்சென்று இல்லாதவற்றையெல்லாம் கூறி மாற்றுபவர்களைத்தான் குறிப்பிட்டேன். அதுவும் மிக அண்மையில் எனது நெருங்கிய உறவினருக்கு நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை என் கண்களால் கண்டபின்னர்தான் குறிப்பிட்டிருந்தேன். எனது நெருங்கிய உறவுகளும், நண்பர்கள் பலரும் வேறு மதத்தினர். தாயகத்திலும், புலத்திலும் கல்வி கற்றபோதும் அப்படித்தான். நாங்கள் எல்லோரும் ஒன்றாகவே வாழ்கிறோம். அதிலே எதுவித தவறுகளும் இல்லை. - Sukumaran - 02-16-2006 ஹலலூயாவில் ஆரம்பித்து ஓம்சாயி அம்மா ஆங்சனேயா எல்லாம் சொல்லி முடித்துவிட்டீர்கள்போலும்.. அல்லா கு அக்பர் எப்படி சொல்வதென்ற திண்ணடாட்டம்.. இடையில பாவமன்னிப்பு அதற்கு தாங்களாக மதம்மாறுவதாக ஜேடனை வேறு.. ம்;.. ஒருவரின் கஸ்டத்தில் மற்றவர் குளிர்காய்ந்தது தொன்றுதொட்டு இருந்துவருகின்றது.. எட்டப்பன்காலத்திலிருந்து இதுதான் இந்தியாவில் நடந்தது.. அவர்களால் மதமாற்றத்தில் வெற்றிகொள்ள முடியவில்லை.. இலங்கையில் மதமாற்றம் போத்துக்கேயர் காலத்திலிலேயே தொடங்கியது.. அதனால்தான் இலங்கையில் புரட்டஸ்தாந்தரைவிட கத்தோலிக்கர்கள் அதிகம்.. தமது மத்ததை பரப்பும் நோக்கத்துடன் ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டார்கள்.. சிலர்; ஆசைகாட்டிய அவர்களின் மோசடிக்குப்பலியாகி காட்டிக்கொடுத்துவிட்டார்கள்.. ஆரம்ப தமிழர் கோரிக்கைக்கும் தற்போதய கோரிக்கைக்கும் எவ்வளவோ மாற்றங்கள்.. தற்போது கோரிக்கையைப்பற்றி முடிவெடுப்பது அவர்கள்.. மதமாற்றம் மொழிமாற்றம் அவர்களது மறைமுக குறிக்கோள்.. உள்ளிருந்து செய்ய முடியாதவற்றை வெளியிலிருந்து செய்வதற்கு பேச்சுவார்த்தை.. சமாதானம்.. சுயநிர்ணயம்.. உரிமை என்ற எத்தனையோ வார்த்தை ஜாலங்கள்.. தமது மதத்தை ஒருசாராருள் உட்புகுத்தி அதன்மூலம் வெளியிலிருந்து தமது உள்நோக்கத்தை நாசூக்காக செய்வது தற்போதும் தொடர்கின்றது.. இங்கு பதில் எழுதுபவர்களின் எழுத்திலேயே பலரும் தற்போது மும்மரமாக சேவகம்புரிவது தெரிகின்றது.. இடையிடையே தமிழின் பெருமை.. தங்கத்தமிழ்கூட வந்து போகின்றது.. அத்தனையையும் தீர்மானிப்பது அமெரிக்க ஜரோப்பிய ஸ்கன்டிநேவியர்கள் கைகளில்.. அத்தனைக்கு காரணம் என்னவென்று நான்சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.. மாற வழிஎன்ன? அடிமையான தமிழ் சமுதாயம் விழிப்புற வழிஎன்ன? - Sujeenthan - 02-16-2006 என்னை பொறுத்தவரையில் ஒருவன் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அல்லது எல்லா மதத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு சுயவிருப்பத்துடன் மாறுவது கூடாது கண்டிக்கத்தக்கது ஏனென்றால் அது அந்த மதத்தை சிறுமை படுத்துகின்றது. - sinnakuddy - 02-16-2006 http://www.yarl.com/forum/privmsg.php?fold...de=read&p=47889 அன்பின் கள உறவுகளுக்கு..... நாகரிகமின்றி தாக்கி எழுதியிருக்கும் இந்த தனிமடலை பாருங்கள் - வினித் - 02-16-2006 <!--QuoteBegin-sinnakuddy+-->QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->http://www.yarl.com/forum/privmsg.php?folder=inbox&mode=read&p=47889 அன்பின் கள உறவுகளுக்கு..... நாகரிகமின்றி தாக்கி எழுதியிருக்கும் இந்த தனிமடலை பாருங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்பு லிங் வேர எங்கயோ போகுது என்னால் பாக்க முடியவில்லை :roll: :roll: - Rasikai - 02-17-2006 <!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sinnakuddy+--><div class='quotetop'>QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->http://www.yarl.com/forum/privmsg.php?folder=inbox&mode=read&p=47889 அன்பின் கள உறவுகளுக்கு..... நாகரிகமின்றி தாக்கி எழுதியிருக்கும் இந்த தனிமடலை பாருங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்பு லிங் வேர எங்கயோ போகுது என்னால் பாக்க முடியவில்லை :roll: :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> எனக்கும் பார்க்க முடியலை :roll: - alla_ku_agbar - 02-17-2006 இன்ச அல்லா. - sinnakuddy - 02-17-2006 நன்றி வினித் ,ரசிகை ...அல்அகுஅக்பர் என்னும் புதிய கள உறுப்பினர் கடவுளால் படைக்கப்பட்ட ஈனப்பிறவி நீ எனப்பொருள் பட நாகரிகமின்றி தனிமடல் போட்டுள்ளார்...இந்த தலைப்பில் கருத்தோடு வாதட வக்கின்றி தனி மடல் போட்டுள்ளார்.. இந் நபரைபற்றி களஉறவுகளுக்கு இத்தால் தெரியபடுத்த விரும்புகிறேன் - Rasikai - 02-17-2006 <!--QuoteBegin-sinnakuddy+-->QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->நன்றி வினித் ,ரசிகை ...அல்அகுஅக்பர் என்னும் புதிய கள உறுப்பினர் கடவுளால் படைக்கப்பட்ட ஈனப்பிறவி நீ எனப்பொருள் பட நாகரிகமின்றி தனிமடல் போட்டுள்ளார்...இந்த தலைப்பில் கருத்தோடு வாதட வக்கின்றி தனி மடல் போட்டுள்ளார்.. இந் நபரைபற்றி களஉறவுகளுக்கு இத்தால் தெரியபடுத்த விரும்புகிறேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஓ ஓஓ இப்படியும் சிலர். :evil: - alla_ku_agbar - 02-17-2006 என்ன கொடுமை இது அல்லா... றகமத்துல்லா.............. என்ன சின்ன குட்டி என்ன செல்லுறீங்க நம்ம வாப்பாமேல ஆணை நீங்கள் கடவுளின் பெயரால் ஐரோப்பிய அமெரிக்க கனேடிய தெருக்களில் எல்லாம் பித்தலாட்டம் ஆடவில்லையோ? தூக்குகாவடி எடுக்கிறீங்க, தேர் ஓட்டுறீங்க, தெருத்தெருவா மேளம் கொட்டுறீங்க பார்த்தால் ஆபிரிக்கரின் ரேஞ்சில நிக்கிறீங்க. ஆளுக்கொரு கோயில் ஆளுக்கொரு உண்டியல் எல்லாம் கடவுளின் பெயரால் பித்தலாட்டங்கள் தான். - Selvamuthu - 02-17-2006 சின்னப்பு சொன்னதுபோல் எனக்கும் அல்லா கு அக்பர் அவர்களிடமிருந்து அதே தனிமடல் வந்திருந்தது. இதனை களத்தில் கூறி அவரின் நிலைக்கு என்னைத் தாழ்த்திக்கொள்ள விரும்பாத காரணத்தால் முன்னர் அதனை நான் கூறவில்லை. இப்போதும் அப்படித்தான் ஆனால் அதனை வெளிப்படையாகவே கூறவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. கடவுளின் பெயரை உச்சரித்துவிட்டு தயவுசெய்து அநாகரீகமான வார்த்தைகளைக் கூறி எந்த மதத்தினரையும் மனம் நோகப்பண்ணவேண்டாம் என்று அல்லா கு அக்பர் அவர்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் ஒரு தமிழர்தானே! - இவோன் - 02-17-2006 சரி.. காதலர்கள் இருவர் வெ வ்வேறு மதங்களிலிருந்தால் என்ன செய்வது? அவரவர் மதங்களில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லலாமா? அல்லது குடும்ப வாழ்வில் சிக்கல்கள் ஏற்படாதிருக்க யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறிவிடலாமா? ஏனெனில் இருவரும் அதங்கள் தங்கள் மதங்களை கடைப்பிடித்து வந்தாலும் குழந்தைகள் பிறக்கின்ற போது அவர்கள் எந்த மதம் என்ற பிரச்சனை வருமில்லையா..? உதாரணத்திற்கு காதலன் சைவம்! காதலி கிறிஸ்தவம்..! அவர்கள் என்ன செய்யலாம்? - iniyaval - 02-17-2006 இப்படி இரண்டு மதம் என்றால் நிறைய பிரப்பிளம் வரும் தான். ஒன்றில் அவர்கள் இரு மதத்தையும் கைவிட வேண்டும் அல்லது அவர்கள் ஒரு மதத்தை பின்பற்றுவதுதான் நல்லது. - I.V.Sasi - 02-17-2006 <!--QuoteBegin-Selvamuthu+-->QUOTE(Selvamuthu)<!--QuoteEBegin-->சின்னப்பு சொன்னதுபோல் எனக்கும் அல்லா கு அக்பர் அவர்களிடமிருந்து அதே தனிமடல் வந்திருந்தது. இதனை களத்தில் கூறி அவரின் நிலைக்கு என்னைத் தாழ்த்திக்கொள்ள விரும்பாத காரணத்தால் முன்னர் அதனை நான் கூறவில்லை. இப்போதும் அப்படித்தான் ஆனால் அதனை வெளிப்படையாகவே கூறவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. கடவுளின் பெயரை உச்சரித்துவிட்டு தயவுசெய்து அநாகரீகமான வார்த்தைகளைக் கூறி எந்த மதத்தினரையும் மனம் நோகப்பண்ணவேண்டாம் என்று அல்லா கு அக்பர் அவர்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் ஒரு தமிழர்தானே!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நாம் தான் அப்படி சொல்லிகொண்டு இருக்கிறோம் ஆனால் நான் ஒன்றும் புதிசா சொல்ல தேவை இல்லை <b>ஏன் எனில் என்னிடம் தொப்பியும் இல்லை </b> கண்ணால் கண்ட கொடுமை மாறப்பதுக்கு நான் இல்லை மனித உருவில் வந்த*********** ) அது யாழ்களத்தில் எழுதா கூடிய திருக்குறளும் இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 02-17-2006 alla_ku_agbar Wrote:என்ன கொடுமை இது அல்லா... றகமத்துல்லா.............. என்ன சின்ன குட்டி என்ன செல்லுறீங்க நம்ம வாப்பாமேல ஆணை நீங்கள் கடவுளின் பெயரால் ஐரோப்பிய அமெரிக்க கனேடிய தெருக்களில் எல்லாம் பித்தலாட்டம் ஆடவில்லையோ? தூக்குகாவடி எடுக்கிறீங்க, தேர் ஓட்டுறீங்க, தெருத்தெருவா மேளம் கொட்டுறீங்க பார்த்தால் ஆபிரிக்கரின் ரேஞ்சில நிக்கிறீங்க. ஆளுக்கொரு கோயில் ஆளுக்கொரு உண்டியல் எல்லாம் கடவுளின் பெயரால் பித்தலாட்டங்கள் தான். உண்மைகள் வெளிவரும் போது இப்படி தான் உளறுவிங்களா? ஏன் உங்கள் சொந்த பெயரில் வர விட்டாலும் ஏன் மற்ற மதத்தில் உள்ளவர்களின் பெயரில் வந்து இந்த வேலை ஒவரு ஞாயிரும் சாப்பாடு வடிவா கிடைக்க்கும் போது இங்கு வந்து ஊளை இடுவதால் உண்மை என்றும் பொயாகாது |