![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- Mathan - 04-04-2004 BBC Wrote:தமிழர் கூட்டமைப்பின் 5 எம்பிக்கள் சந்திரிகா கூட்டணியை ஆதரிக்க கூடும் என்று ஒரு வதந்தி உலாவுகின்றது. இது இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கின்றது. Kalai Wrote:தமிழ்க் கூட்டமைப்பின் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிகா கூட்டணியை ஆதரிப்பார்கள் என்பது சாத்தியப்படாத ஒரு விடயம். அவர்கள் அப்படி ஆதரவு கொடுக்க முயற்சி செய்வார்கள் எனில் கட்சி அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து எம்பி பதவியிலிருந்து நீக்க முடியும். இந்த மட்டக்கிளப்பு-அம்பாறை பகுதியின் 5 எம்பிக்கள் தனித்து இயங்குவது தொடர்பாக தினக்குரல் பத்திரிகையிலும் ஒரு செய்தி வந்திருக்கின்றது. அதை Breaking News பகுதியில் போட்டுள்ளேன். ஒற்றுமையாக செயல்படுவார்களா அல்லது தனித்து இயங்குவார்களா தெரியவில்லை. அப்படி தனித்து இயங்கி சந்திரிகாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தால் அவர்களில் சட்ட ரீதியான நிலை என்ன என்று நிச்சயமாக தெரியவில்லை. - Mathivathanan - 04-04-2004 BBC Wrote:சட்ட நடவடிக்கை எடுத்து வெல்லுவது மிகவும் கடினம் எண்டு ரவிராஜ் சொல்லிக்கேட்டன்..BBC Wrote:தமிழர் கூட்டமைப்பின் 5 எம்பிக்கள் சந்திரிகா கூட்டணியை ஆதரிக்க கூடும் என்று ஒரு வதந்தி உலாவுகின்றது. இது இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கின்றது. அதுக்கு முதல் துரொகிப்பட்டம் கட்டி வேறையேதாவது செய்யப் பார்ப்பாங்கள்.. அப்பிடித்தான் நினைக்கிறன்.. :!:
- yarlmohan - 04-04-2004 Mathivathanan Wrote:BBC Wrote:சட்ட நடவடிக்கை எடுத்து வெல்லுவது மிகவும் கடினம் எண்டு ரவிராஜ் சொல்லிக்கேட்டன்..BBC Wrote:தமிழர் கூட்டமைப்பின் 5 எம்பிக்கள் சந்திரிகா கூட்டணியை ஆதரிக்க கூடும் என்று ஒரு வதந்தி உலாவுகின்றது. இது இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கின்றது. **** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Kalai - 04-04-2004 Mathivathanan Wrote:சட்ட நடவடிக்கை எடுத்து வெல்லுவது மிகவும் கடினம் எண்டு ரவிராஜ் சொல்லிக்கேட்டன்..எந்தத் தமிழனாவது தனது சுகபோகத்துக்காக தமிழ்த் தேசியத்தை விலைபேச நினைக்கிறானோ அவன் எல்லாம் துரோகியே. இப்படியானவர்களுக்கு வக்காளத்து வாங்குபவர்களைப் பற்றி என்ன நினைக்க. - Mathan - 04-04-2004 தற்போதைய நிலவரப்படி ஜாதிக ஹெல உறுமய கட்சிதான் அரசை தீர்மானிப்பவர்களாக (கிங் மேக்கர்) வருவார்கள் போல இருக்கின்றது. இது ஒருவகையில் நல்லது கூட, ஏன் என்றால் தமிழர் தரப்பு பிளவுபடுவதை தவிர்க்கும். - Mathan - 04-04-2004 இறுதி தேர்தல் முடிவுகள் சந்திரிகாவின் கூட்டணி 105 ரணிலின் கூட்டணி 82 தமிழர் கூட்டமைப்பு 22 ஜாதிக ஹெல உறுமய 9 முஸ்லீம் காங்கிரஸ் 5 ஈபிடிபி 1 மலையக மக்கள் முன்ணணி 1 - Mathan - 04-04-2004 தேர்தல் முடிவுகளின் பின் கட்சி தலைவர்களின் முகம் இப்படி இருக்குமா? <b>சந்திரிகா</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40000000/jpg/_40000599_chand203_ap.jpg' border='0' alt='user posted image'> <b>ரணில்</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40000000/jpg/_40000917_two203_ap.jpg' border='0' alt='user posted image'> படங்கள் - http://news.bbc.co.uk - AJeevan - 04-04-2004 :?: மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் வேட்பாளரின் புதைக்கப்பட்ட உடலை யாரோ தோண்டியெடுத்து எரித்திருப்தாக சில தகவல்கள் வருகிறது. விபரம் தெரிந்தவர்கள் கூறுவீர்களா? - shanthy - 04-04-2004 AJeevan Wrote::?: மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் வேட்பாளரின் புதைக்கப்பட்ட உடலை யாரோ தோண்டியெடுத்து எரித்திருப்தாக சில தகவல்கள் வருகிறது. விபரம் தெரிந்தவர்கள் கூறுவீர்களா? :?:
- vasisutha - 04-04-2004 அன்னை புூபதியின் இடத்திற்குபக்கத்திலேயே அவரின் உடலும் புதைக்கப்பட்டது. நேற்று இரவு யாரோ சிலர் அதை மீண்டும் வெளியே எடுத்து எரித்துவிட்டு போயிருக்கிறார்கள். புதைச்ச இடத்திற்;கு கொஞ்சம் தள்ளித்தான் எரித்திருக்கிறார்கள். :?: :!: - vasisutha - 04-04-2004 இருவரின் உடல்களையும் எரித்திருக்கிறார்கள். (ராஜன்சத்தியமூர்த்தி, அவரின் மைத்துனர்) - Mathan - 04-04-2004 AJeevan Wrote::?: மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் வேட்பாளரின் புதைக்கப்பட்ட உடலை யாரோ தோண்டியெடுத்து எரித்திருப்தாக சில தகவல்கள் வருகிறது. விபரம் தெரிந்தவர்கள் கூறுவீர்களா? நானும் இந்த செய்தியை வானொலி இணைய ஒலிபரப்பில் கேட்டேன். ஆனால் இணையத்தின் இதுபற்றிய செய்திகளை பார்க்க முடியவில்லை. - vasisutha - 04-04-2004 இன்று ரிரிஎன் செய்தியில் காட்டினார்கள். தோண்டி எடுக்கப்பட்ட குழி எரிக்கப்பட்ட இடம் எல்லாம் காட்டினார்கள். - Mathan - 04-04-2004 <b>தமிழர் அடுத்த பிரதமர்?</b> அடுத்த பிரதமராக லக்ஸ்மன் கதிர்காமர் வரலாம் என்று செய்திகள் கூறுகின்றன. - AJeevan - 04-04-2004 பௌத்த சிங்களவர் ஒருவரே வரவிருக்கிறார். - Mathan - 04-04-2004 யார் மகிந்த ராஜபக்ஷவா? - AJeevan - 04-04-2004 BBC Wrote:யார் மகிந்த ராஜபக்ஷவா? இன்னும் முடிவாகவில்லை. ஆனால் சந்திரிகா நேற்றிலிருந்து மகிந்த ராஜபக்ஷவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அது என்னவென்று அடுத்தவர்களுக்கே தெரியவில்லை. சிலவேளை அவரை சமாதானப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம். எது இருப்பினும் JVP இன்றைய வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது. இவர்களையும் தவிர்த்து, சிங்கள மக்கள், ஒரு சிங்கள கத்தோலிக்கரோ அல்லது கிறிஸ்தவரோ கூட அதிபராகவோ அல்லது பிரதமராகவோ வரக்கூடாது என்ற எண்ணத்துடன் வாழும் போது ஒரு தமிழர் இவர்களால் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு, வாக்கு வேட்டைக்கான ஒரு விளம்பர தந்தரமாகவே கருதலாம். அப்படியான ஒரு முடிவு வருமானால் அடுத்த தேர்தல் உடனடியாக வருவதற்கு அதுவே வாய்ப்பை உருவாக்கும். அல்லது 2 வருடத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் அதிபர் நிலையிலுள்ள சந்திரிகா, அதிபர் பதவியையே கூண்டோடு அழித்து விட்டு வருவதற்கு முன், ஒரு முத்திரை(Stamp)யாக கதிர்காமரை தற்போதைக்கு பயன்படுத்தலாம்?????????????? <span style='font-size:25pt;line-height:100%'> இதுவும் அரசியல்தான் சாமி</span> - adipadda_tamilan - 04-05-2004 BBC Wrote:தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டது. தேர்தல் முடிவை வைத்து சில விடயங்களை பேசுவோமா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.===================================================== பிபிசி உங்களது...ஜோசப் பரராஐசிங்கத்தின் தோல்விக்கான பதில் கீழ் உள்ளது... மட்டு/அம்பாறை - தேர்தலில் நடந்thaதென்ன...(உண்மையோ உண்மை, உண்மையோ உண்மை) நீங்கள் நினைப்பது மாதிரி பரராசசிங்கம் தோக்கயில்ல, அவரை திட்டமிட்டு தோக்கடித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர் மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தில் நின்ட சந்திர நேரு என்பவரும் இப்படித்தான் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் தமிழ்த்தேசியத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்டு சொன்னதாலதான் அவ்ர்கள் சதிவேலையினால் ஏமாற்ற்ப்பட்டிரிக்கிறார்கள். அதாவது இவர்களுக்கு வாக்களிக்க சென்ற மக்களைக்கூட தடுத்து அடித்து மிரட்டி விரட்டியிருக்கிறார்கள். கச்சேரியில காசு குடுத்து முடிவையே மாத்தியிருக்கிறார்கள். இதை அங்குள்ள மக்க்ள் சொல்லிச் சொல்லி அழுகிறார்கள். இந்த இரு முன்னைனாள் எம்பிக்களுக்கும்தான் நிறைய சனங்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. வன்னிக்கு இவர்கள் இருவரும் சப்போர்ட்டானவர்கள் என்ட காரணத்தால் இவர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை... - Kalai - 04-05-2004 BBC Wrote:<b>தமிழர் அடுத்த பிரதமர்?</b> யார் சொன்னது கதிர்காமர் தமிழர் என்று? - adipadda_tamilan - 04-05-2004 Kalai Wrote:BBC Wrote:<b>தமிழர் அடுத்த பிரதமர்?</b> ================================================== சரியாச் சொன்னியள், கதிர்காமனுக்கெல்லாம் தமிழன் என்ட ஒரு நாமம். இதை நாமே கொடுத்து தமிழ் இனத்தையே தலைகுனிய வைக்க வேண்டாம். |